Friday 30 September 2011

'தெஹல்கா லீக்ஸ்'... அடப்பாவிகளா...!


'தெஹல்கா லீக்ஸ்'... அடப்பாவிகளா...!

உச்சநீதிமன்றம் நியமித்த Special Investigation Team (SIT), உச்சநீதிமன்றத்திடம்  சமர்ப்பித்த அறிக்கையை நைசாக 'சுட்டு' தெஹல்கா நேற்று முன்தினம் வெளியிட்டுவிட்டது..! குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு தெளிவான பங்கிருப்பதாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) கண்டறிந்துள்ளது.

2002-ல் குஜராத்தில் நிகழ்ந்த இனப்படுகொலையை உலகம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. 3000 முஸ்லிம்கள் துடிக்கத்துடிக்க சங்பரிவார பயங்கரவாதிகளால் கண்டந்துண்டமாக வெட்டியும், பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டும், குழந்தைகள் கூட நெருப்பிலிடப்பட்டும் கொல்லப்பட்டனர்.

கோத்ராவில் நிகழ்ந்த ரயில் தீ விபத்தை ஒரு சதியாக மாற்றி முஸ்லிம்களின் மீது பழிபோட்டு சமூக விரோதிகள் இந்தக்காரியத்தை செய்து முடித்தனர் என்றும்  கோத்ரா விபத்தை முஸ்லிம்களின் சதி என நிரூபிக்க முடியாமல் கெடுமதி படைத்த சங்பரிவார் “சபர்மதி எக்ஸ்பிரசை எரிக்க நான் தான் பெட்ரோல் சப்ளை செய்தேன்” என ஒரு முஸ்லிம் இளைஞரை மிரட்டி வாக்குமூலம் கொடுக்க வைத்தது, உள்ளிட்ட படுபயங்கர சதித்திட்டங்களை இரு ஆண்டுகளுக்கு முன் தெஹல்கா ஏடு அம்பலப்படுத்தியது.

அத்தோடு தீவிர ஹிந்துத்துவாதிகள் போல் வேடமிட்டு சட்டைபட்டன் அளவே உள்ள துல்லிய கேமராவோடு குஜராத் இனப்படுகொலையாளர்களை ரகசியமாக படம்பிடித்த தெஹல்கா ஆஜ்தக் ஹெட்லைன்ஸ் டுடே இணைந்து நடத்திய investigative journalism மூலம் கொலைகாரர்களின் வாக்குமூலங்களைவெளியிட்ட தெஹல்கா செய்தியாளர்களது குஜராத் இனப்படுகொலை குறித்த செய்திகள் உலகையே உலுக்கியது.

கோத்ரா ரயில் விபத்து, விபத்தாகவே அறியப்பட்ட சில மணி நேரத்தில் மோடி வந்து பார்வையிட்டபின் அது திட்டமிட்ட சதியாக மாற்றப்பட்டதும், 'உங்களுக்கு மூன்று நாள் மட்டும் தருகிறேன் இதற்குள் நினைத்ததை சாதித்துக் கொள்ளுங்கள்' என மோடியே வன்முறையாளர்களுக்கு முழு ஆதரவை வழங்கியதும் விரட்டி விரட்டி வேட்டையாடிய மனித மிருகங்கள் அந்த கொடூரச்செயல் குறித்து சிறிதும் மன உறுத்தலின்றி வெறித்தனமாக நேரடி வாக்குமூலமாகவே தெஹல்காவின் வீடியோவில் கூறியதையும் இந்த உலகம் மறக்க முடியாதது.

முஸ்லிம் பெண்கள் பழங்கள் போல் இருந்தார்கள் அவர்களை நாங்கள் சளைக்காமல் ருசித்துப் பார்த்தோம், பிறகு எரித்தோம் என்றான் ஒரு வெறிநாய். 

பள்ளிவாசல்களை பெட்ரோல் டாங்கர்களால் தரை மட்டமாக்கி னோம் என்றான் ஒரு மதவெறி மிருகம்.

நாங்கள் இங்கே ஆயுதத் தொழிற்சாலையே உருவாக்கி வைத்திருக்கிறோம் என்றான் ஒரு மனிதப்பதர்.

குறிப்பிட்ட நாளில் பயன்படுத் துவதற்காக பஞ்சாப்பிலிருந்து இரண்டு லாரிகள் நிறைய வாள்களை வரவழைத்தோம் என்றான் கோழை ரத்தம் ஓடும் ஓர் ஈனநாய்.

கடுமையாக தாக்கி படுகாயமடைந்ததோடு உயிருக்கு போராடிய அப்பாவிகளை உயிரோடு சாக்கடையில் போட்டு மூடிய கொடூரமும்.

கை கூப்பி என்னை கொன்று விடாதீர்கள் என கதறிய இளைஞர் அன்சாரியின் கோலமும் யார்தான் மறக்க முடியும்.

தங்களின் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இஹ்சான் ஜாஃப்ரியின் வீட்டுக்குள் தஞ்சமடைந்த ஏழை மக்கள் உள்ளிட்ட 72 பேரையும் இரக்கமின்றி காவல்துறை உதவியுடன் கொன்று குவித்தனர் பயங்கரவாதிகள்.

உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தன் வீட்டில் அடைக்கலம் தேடி வந்த அப்பாவிகளைக் காப்பாற்ற முதியவர் இஹ்சன் ஜாஃப்ரி தம் கட்சி தலைவர்கள் ஒவ்வொருவரிடம் தொலை பேசியில் கெஞ்சினார்.

காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள், ஏன் பிற கட்சி அரசியல் தலைவர்களைக் கூட தொலை பேசியில் தொடர்பு கொண்டு ஜாஃப்ரி உதவி கோரினார், கெஞ்சினார், கதறினார். முதலமைச்சர் மோடியை (!?!?!?!?!) கூட தொடர்பு கொண்டு ஜாஃப்ரி உயிர்களை காப்பாற்றக்கோரி கெஞ்சியதாகவும் தற்போதைய செய்திகள் வெளிவந்துள்ளன.

எத்தனைக்கெஞ்சியும், கதறியும் ஒரு நன்மையும் விளையவில்லை. இஹ்சன் ஜாஃப்ரி உள்பட 72 பேர் துள்ளத்துடிக்க கொல்லப்பட்டனர். முதியவர் ஜாஃப்ரி துண்டு துண்டாகக் வெட்டிக்கொல்லப்பட்டார். அவரது ஆணுறுப்பையும் வெட்டிச்சிதைத்து நெருப்பிலிட்டு கொளுத்தினர். இஹ்சான் ஜாஃப்ரி வாழ்ந்த குல்பர்க் சொஸைட்டி பங்களா மயான அமைதி குடிகொண்ட சாம்பல்மேடாக மாறிவிட்டது.

குஜராத் இனப்படுகொலைகளில் குறிப்பாக இஹ்சான் ஜாஃப்ரி கொல்லப்பட்ட குல்பர்க் படுகொலைகளில் மோடியின் நேரடிசதி இருப்பதாகவும் மோடியின் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் இஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்திய தண்டனைச்சட்டம் 120B 114r/w 302 IPC மற்றும் தவறாக தகவல் களை உருவாக்கி வழங்குதல் (177IPC) தவறான அறிக்கைகள், தவறான ஆதாரங்கள் கொடுத்தல் (199 IPC) குற்றம் இழைத்தவர்கள் குறித்த தவறான தகவல்களை வழங்குதல் (203 IPC), வழிபாட்டுத் தலங்களை சிதைத்தது தொடர்பான குற்றச் செயல் (295 IPC) உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் மோடி உள்ளிட்ட 62 பேர் மீதும் சுமத்தப்பட்டன.

2002 பிப்ரவரி 27 ஆம் தேதி தலைநகரில் மோடி தலைமையில் கூடிய உயர்மட்ட அதிகாரிகள் மட்டும் அமைச்சரவைக் கூட்டத்தில் படுகொலைகளுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக உத்தரவிடப் பட்டதை முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார் 2005 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி தனது பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்டார். இந்த பிரமாண வாக்குமூலம் உள் ளிட்ட முக்கிய ஆவணங்களின் அடிப்படையில் ஜாகியா ஜாஃப்ரி தனது 100 பக்க குற்றச்சாட்டுக்களை சமர்ப்பித்துள்ளார்.

அந்த குற்றச்சாட்டுப்பட்டியலில் ஜாகியா ஜாஃப்ரி விடுத்திருக்கும் வினாக்கள் அனைத்தும் எரிமலை ரகத்தைச் சேர்ந்தவை.

கோத்ரா ரெயில் விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்பது உண்மை. அது மட்டுமின்றி பலியானவர்களின் சிலரின் உடல்கள் அடையாளம் காணப்படாத நிலையில் இருந்தும் எல்லா பிணங்களையும் வைத்து அகமதாபாத்தில் வெறியூட்டும் ஊர்வலம் நடத்தியது ஏன்? --உள்ளிட்ட முக்கிய வினாக்களை ஜாக்கியா ஜாஃப்ரி தனது குற்றச்சாட்டு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

2006 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் மோடி மீதான குற்றச்சாட்டுக்களை மோடியின் வீட்டுக்கு அருகில் உள்ள காவல்நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஜாகியா ஜாஃப்ரி கோரினார். ஆனால் மோடியின் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கையை கூட பதிவு செய்ய மறுத்தது. மோடி, மீதான காவல்துறையின் புறக்கணிப்பைக் கண்டு சற்றும் அஞ்சாமல் ஜாகியா ஜாஃப்ரி உச்சநீதிமன்றம் சென்றார். தனது குற்றச்சாட்டுக்களை பதிவு செய்தார்.

உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள், அரிஜித் பசாயத் மற்றும் ஏ.கே.கங்குலி இருவர் கொண்ட பெஞ்ச் ஜாகியாவின் கோரிக்கைகள் குறித்து விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வுக்குழுவை ---Special Investigation Team (SIT)---  நியமித்தது. இக்குழு மூன்று மாதத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு (SIT) தனது விசாரணையின் முக்கியப் பகுதியாக குஜராத் முதல்வர் மோடியை விசாரிக்க அழைப்பாணை (சம்மன்) அனுப்பிது. 

ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு கொடுத்திருக்கும் அழைப்பாணையை ஏற்று மோடி சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையின் முன்பு நேர் நிற்பாரா (!?!) என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது.

குஜராத் இனப்படுகொலையின் சூத்ரதாரியே மோடி தான் என மனித உரிமை ஆர்வலர்கள் பல்வேறு மட்டங்களிலும் போராட்டக்குரல் எழுப்பியபடி இருப்பினும் மோடி நல்லவர்போல் வேடமிட்டு தருக்குடன் நடமாடினார்.

மோடி ரொம்ப நல்லவர் என ஊடகங்கள் பல (தமிழ் நாட்டின் சில பத்திரிக்கைகள் உள்பட) வலிந்து பொய்ப்பிரச்சாரத்தை பரப்பின. இருப்பினும் மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கையினை ஏற்று அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மோடியை தங்கள் நாட்டின் உள்ளே நுழைய அனுமதி மறுத்தன.

இந்தியா விடுதலைப் பெற்று 62 ஆண்டுகளாகியும் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவு ஒரு முதலமைச்சருக்கு இனப்படுகொலைக் குற்றஞ்சாட்டி சம்மன் அனுப்பப்பட்ட நிகழ்வு அதுவே முதல் முறை. 

2010 மார்ச்சில் ஒன்பது மணிநேரங்கள் நடந்த அந்த விசாரணையில் பல கேள்விகளுக்கும் விடையளித்த மோடியின் பதில்கள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை உச்ச நீதி மன்றத்தில் கடந்த வருடம் மே மாதம் சீலிடப்பட்ட உரையில் தரப்பட அன்றே பிரபல பத்திரிகைகளில் மோடி குற்றமற்றவர் என்றும் அதவானி தன் வலைத்தளத்தில் 'தர்மம் வென்றது' என்று என்னன்னவோ எழுதி மோடியை புகழ்ந்து ஆனந்தக்கூத்தாடினார்.

ஆனால், இவை அத்தனையையும் மவுனமாய் வேடிக்கை பார்த்தது SIT..!?!

ஆனால், அந்த அறிக்கை இப்போது தெஹல்காவால் 'சுடப்பட்டு' ( TEHELKA has scooped the sensational 600-page inquiry report into Modi’s alleged role in the 2002 massacre.) இப்போது வெட்டவெளிச்சமாக்கப்பட்டு விட்டது..! 
இப்போதும், இவை அத்தனையையும் மவுனமாய் வேடிக்கை பார்க்கிறது SIT..!?!

பாரபட்சமாக நடந்துக் கொண்டும், நடவடிக்கைகள் மேற்கொள்ளாமலும், பாதிக்கப்பட்டவர்களை புறக்கணித்தும் கலவரத்திற்கு உதவியதாக மோடி மீது குற்றஞ்சாட்டி எஸ்.ஐ.டி தனது அறிக்கையில் கூறியுள்ளது. இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதிலும், வகுப்புவெறியை தூண்டிவிட்ட பத்திரிகைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதிலும் மோடி தோல்வியடைந்தார் என அவ்வறிக்கை கூறுகிறது. மேலும் கலவரத்தை தூண்டும் விதமாக அவர் பேசினார் என்றும் குற்றம் சாட்டுகிறது.

இங்கே தொடர்ந்து அதைப்படித்துப்பார்த்தால் அதிர்ச்சியோ அதிர்ச்சி..! 

REACTIONS ON TEHELKA’S REPORT : (இதைப்பற்றி சில பிரபலங்களின் கருத்துக்கள்)

மோடி குற்றவாளிதான் என்று தெளிவாக மோடியின்  வண்டவாளம் அனைத்தும் தண்டவாளத்தில்...! புட்டு புட்டு வைத்து இருக்கிறது SIT. 

(என்னால் முடிந்தவரை தெஹல்கா வெளியாக்கிய SIT அறிக்கையை தெஹல்காவிலிருந்து தமிழாக்கப்படுத்தி, கீழே  பின்னூட்டங்களாக 6 TO 20 & 26-ல் கொடுத்திருக்கிறேன்)

எனக்குப்புரியவில்லை...! எனக்குப்புரியவில்லை...!

இந்த அறிக்கையை வைத்துக்கொண்டு இத்தனைக்காலம் உச்சநீதி மன்றம் சும்மா உட்கார்ந்திருந்தது ஏன் என்றே புரியவில்லை..!

தேஹல்காவில் வெளியான அறிக்கையை நீதிமன்றமோ, புலனாய்வு குழுவோ பிஜெபியோ மோடியோ பொய் என மறுக்காதது ஏன் என்றே புரியவில்லை..!

இந்த  அறிக்கை தேஹல்காவால் வெளியிடப்பட்டு இரண்டு நாட்களாகியும் எந்த ஊடகத்திலும் (பத்திரிக்கை / வெகுஜன தொலைகாட்சி) அதுபற்றியசெய்தி வரவில்லை என்பது ஏன் என்றே புரியவில்லை..!

எதிர்க்கட்சியின் மீது நடவடிக்கை எடுக்க அருமையான வாய்ப்பு கிடைத்தும் காங்கிரசின் ஆகில இந்திய தலைவர் முதல்... காங்கிரசின் கிராம வார்டு கவுன்சிலர் வரை வாயை மூடிக்கொண்டு இருப்பது ஏன் என்றே புரியவில்லை..!

நாட்டை ஆள்வது காங்கிரசா அல்லது பிஜேபியா என்றே புரியவில்லை..!

பாராளுமன்றத்தை பலநாட்கள் தொடர்ந்து அல்லோலகல்லோல படுத்தி ராசாவை ராஜினாமா செய்யவைத்து மிகப்பெரிய ஊழல் அவமானக்கரையை திமுக மீது  ஏற்படுத்திவிட்ட பாஜகவை பழிவாங்க நல்ல வாய்ப்பு கிடைத்தும் திமுகவின் முதல்வர் முதல் முக்குச்சந்து தொண்டர் வரை மோடிபற்றி வாயை திறக்காமல் இருப்பது ஏன் என்றே புரியவில்லை..!
 
தமிழத்தை ஆள்வது மஞ்சள்துண்டா அல்லது காவித்துண்டா தெரியவில்லை..!

முந்தைய தெஹல்காவின் விடியோ ஆதாரங்களே 'தனியார்' என்பதால் தூங்கிக்கொண்டு இருக்க, இப்போது அரசே நியமித்த உச்சநீதிமன்றம் அமைத்த புலனாய்வுக்குழு அறிக்கையும் தூங்குமானால்... என்னதான் நடக்குது...?

ச்சே...! மூவாயிரம் அப்பாவி மக்களின் உயிருக்கு இவ்வளவுதானா மதிப்பு...?

ஆனால் தமிழக முஸ்லிம்கள் விடப்போவதில்லை....

குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்கு தொடர்பு உண்டு என்று உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட ”எஸ் ஐ டி” சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளதால் மோடி அரசை உடனே டிஸ்மிஸ் செய்து மோடியை கைது செய்

US ன் CRS ரிப்போர்ட்டில் மோடியை பற்றி சொல்லப்பட்டதும்.. ஊடகங்களின் புருடாக்களும்..


சலாம், 

செப்ட் 1st வெளியிடப்பட்ட அமெரிக்காவின் இந்தியாவைப்பற்றிய CRS ரிப்ப்போர்ட்டில் மோடியை பற்றி புகழோ புகழ் என்று புகழ்ந்திருப்பதாவகும் , அடுத்த பிரதமர் மோடிதான் வர வேண்டும் என்று அமெரிக்காவே விரும்புவதாகவும் சில பொறுப்பற்ற, பாசிச வெறிபிடித்த, பணத்திற்கக்காகவும், அப்பாவியான புதிய இளம் தலைமுறையின் 'Hits ' and 'TRS ' களுக்காகவும் இது போன்ற பொய்யான ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயன்ற ஊடகங்களின் முகத்தை தோலுரித்து காட்டியிருக்கிறார் இந்த சகோதரர்.  தவறாமல் படிக்கவும். படிக்கச் சொல்லவும். 


'பயங்கரவாத குண்டுவெடிப்புகளில் ' BJP-க்கு தொடர்பு:-அமெரிக்க CRS அறிக்கை.!

Congressional Research Service(CRS) : இது அமெரிக்க அரசால் நியமிக்கப்பட்ட வெளிநாடுகளில் உளவு பார்த்து அறிக்கை தரும் ஓர் அமைப்பு எனலாம். சுமார் 900 ஊழியர்கள் பணியாற்றும் இந்த அமைப்பு ஆண்டுதோறும் பத்து கோடி ரூபாய்க்கும் அதிகமாக பட்ஜெட்டில் விழுங்கித்தான் இந்த வேலையை பார்க்கிறது. இதன் அறிக்கை ரகசியமாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிடம் மட்டுமே தரப்படும். இது அமெரிக்க அரசு தன் அயலுறவு கொள்கையை முடிவு செய்யும்போது இதனையும் ஒரு பொருட்டாக பார்க்குமாம். அதில் முக்கியத்துவம் இருக்குமாயின் அறிக்கை இரகசியமாக வைக்கப்படும். இல்லையேல், உறுப்பினர்களால் மக்களுக்கு அவ்வப்போது இவ்வறிக்கைகள் 'லீக்' செய்யப்படுவதும் உண்டு. காரணம், 'இது போன்ற அதிரடி வேலைகளை எல்லாம் அமெரிக்கா செய்கிறது' என்று பிறரிடம் பறைசாற்றிக் கொள்ளவும், செலவு கணக்கு காட்டவும்தான். 

முதலில், "நம்மைப்பற்றி இது போன்ற அறிக்கைகளை இங்கே வந்து ஆய்வு செய்து சமர்ப்பிக்க இவர்கள் யார்" என்று தம்மை 'தேசபக்தர்கள்' என கூறிக்கொள்ளும் போலிகள் எவருமே இப்போது வாயை திறந்து கேட்க காணோம். வேண்டுமானால், இதேபோல இந்தியா அமெரிக்காவில் வேவு பார்த்து ஒரு அறிக்கையை இந்திய பாராளுமன்றத்துக்கு பகிரங்கமாக சமர்ப்பிக்கட்டுமே, பார்க்கலாம்..! விடுவார்களா..? இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த அறிக்கை பற்றி 'ஆஹா ஓஹோ' என்று நியூஸ் போடுபவர்கள் எல்லாருமே இரண்டு விஷயத்தில் ஒத்துப்போகின்றனர்.ஒன்று அமெரிக்க ஆதரவு. மற்றொன்று ஹிந்துத்துவா ஆதரவு.

இந்த  CRS அறிக்கையில், 'ஏதோ மோடியை பற்றியும் குஜராத் பற்றியும்  புகழ்மாலை சூட்டினார்கள்' என்றுதானே ஊடகங்கள் கூத்தாடுகின்றன..? அப்படியொரு 'செய்தி' என்ற பெயரில் 'காதுக்கு பூ' விற்றவர்கள் எவருமே ரொம்ம்ம்ப ஜாக்கிரதையாக இந்த அறிக்கையை காண சுட்டியை மட்டும் கொடுக்கவே இல்லை..! ஏன்..? காரணம், 'ஆங்கிலம் படிக்கத்தெரிந்த மக்கள் இதனை படித்து உண்மையை அறிந்து கொண்டால்...?' என்ற பயமா..?

ஆனால், சமீபத்தில் 'லீக்' ஆக்கப்பட்ட இந்த 'அறிக்கை'  தற்போது இந்த தளத்தின்-இந்த பக்கத்தில் தரவேற்றம் செய்யப்பட்டு எவர் வேண்டுமானாலும் இப்போது தரவிறக்கம் செய்துகொள்ளும் படியும் ஆன்லைனில் படிக்கவும் வெட்டவெளிச்சமாக உள்ளது. (இதனை எனக்கு அறியத்தந்த சகோ.முஹம்மத் ரஃபீக் பாபுக்கு மிக்க நன்றி..!)


இந்த அறிக்கை மோடி பற்றியதா..? இல்லை..!
குஜராத் பற்றியதா..? இல்லை..!
அப்புறம் அது எதைப்பற்றியது..?

அந்த அறிக்கை...  இந்திய உள்நாட்டு பிரச்சினைகள், மைய அரசின் தந்திர இயங்குவியல், அமெரிக்காவுடனான நல்லுறவு ஆகிய இவற்றை பற்றியது..! 

இந்தியாவை பற்றி 'ஆராய்ச்சி செய்து' அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட இம்மாதம் அனுப்பப்பட்டஇந்த CRS அறிக்கை மொத்தம் 98 பக்கம் கொண்டது.   


அதில் "மோடி" என்ற பெயர் 5 பக்கங்களில் வந்துள்ளது. அவை அனைத்தும் சேர்த்து மொத்தமாக 13 தடவை மோடி பெயர் வந்துள்ளது.  

தனை தயாரித்தவர்கள் விபரம் :-

CRS Report for Congress  
Prepared for Members and Committees of Congress 

India: Domestic Issues, Strategic Dynamics and U.S. Relations 

K. Alan Kronstadt, Coordinator Specialist in South Asian Affairs 
Paul K. Kerr Analyst in Nonproliferation 
Michael F. Martin Specialist in Asian Affairs 
Bruce Vaughn Specialist in Asian Affairs

இவர்கள் மோடி பற்றி என்ன சொல்லி இருக்கிறார்கள்..?

முதலில் மோடி பெயர் அடிபடும் பக்கம் 41. அதில், பாஜக கட்சி பற்றி ஒரு அறிக்கை. இதில் காமடி என்னவென்றால், இந்த அறிக்கையை திரட்டியது எங்கிருந்து என்றால்... www.bjp.org எனும் அவர்கள் கட்சி தளத்தில்..! அங்கே மோடி பற்றி சொல்லப்பட்டிருக்கும் கருத்தை எடுத்து.....
.
// Gujarat Chief Minister Narendra 1-Modi, who has overseen impressive development successes in his state // 

---என்று இப்படி போட்டுவிட்டு, தங்கள் கருத்தை அடைப்புக்குறிக்குள் அதனை தொடர்ந்து... 

// but who is also dogged by controversy over his alleged complicity in lethal anti-Muslim rioting there in 2002 (2-Modi has in the past been denied a U.S. visa under an American law barring entry for foreign government officials found to be complicit in severe violations of religious freedom) // 

----என்றும் சொன்னதை ஏனோ காவி ஊடகங்கள் நம்மிடமிருந்து ஒளித்து விட்டன. மேலும்.... அவ்வறிக்கையில்...

//Despite his clear political and economic successes in Gujarat—in his ten years as Chief Minister the state has led thecountry on many development indicators—3-Modi continues to be haunted by the 2002 Ahmadabad riots, a topic he hasnever fully addressed in public. Although he is a safe bet to win a third term in 2012 state elections, his aspirations to be the BJP’s prime ministerial candidate face significant obstacles, not least the likelihood that Muslims and liberal-minded Hindus would represent an anti-4-Modi bloc at the national level, and the BJP’s key ally in Bihar, Nitish Kumar’s Janata Dal (United), could be expected to abandon the alliance in protest (Geeta Anand, “Give Us Your Account, Mr.5-Modi” (op-ed), Wall Street Journal, February 23, 2011; Karan Shah,” Narendra 6-Modi, Prime Minister?” (op-ed),Outlook (Delhi), April 5, 2011) // 

---என்று 'அவுட்லுக்' பத்திரிக்கையின் காரசாரமான கட்டுரையைத்தான் பக்கம் 42-இல் இணைத்துள்ளனர்..! நம் காவி ஊடகங்கள் இதில் முதல் வரிக்கு மேல் படிக்க விரும்பவில்லை.

அடுத்து...  பக்கம் 47 இல் "Notable State-Level Developments" என்ற தலைப்பின் கீழே பல மாநிலங்களை பற்றி அறிக்கை கொடுத்துள்ளனர். ஆனால், குஜராத் பற்றி அமெரிக்காவின் Wall Street Journal கட்டுரையை எடுத்து போட்டு இருக்கிறார்கள்.
.
// Perhaps India’s best example of effective governance and impressive development is found in Gujarat (pop. 60 million), where controversial Chief Minister Narendra 7-Modi has streamlined economic processes, removing red tape and curtailing corruption in ways that have made the state a key driver of national economic growth. Seeking to overcome the taint of his alleged complicity in deadly 2002 anti-Muslim riots, 8-Modi has overseen heavy investment in modern roads and power infrastructure, and annual growth of more than 11% in recent years. The state has attracted major international investors such as General Motors and Mitsubishi and, with only 5% of the country’s population, Gujarat now accounts for more than one-fifth of India’s exports. //

---இது மோடி அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு எப்படி நம் நாட்டு வளங்களை வாரி வழங்குகிறார் என்று பறை சாற்றும். 'எதனால்... அந்த அமெரிக்க பங்கு மார்க்கெட் பத்திரிகையில் மோடியை இப்படி புகழ்கிறார்கள்' என்று கடைசி வரி கட்டியம் கூறுகிறது..! இந்த வரியை ரொம்ப லாவகமாக நம் காவி ஊடகங்கள் மறைத்து விட்டன. 'இப்படியெல்லாம் அமெரிக்க பன்னாட்டு நிருவனங்களுக்கு  அடிமையாக சேவகம் செய்தால் அமெரிக்கா தன் மீதான விசா தடையை நீக்கி விடும்' என்று அலைகிறார் போலும் இந்த கேடி... ஸாரி... மோடி..!

இந்த செய்தி உண்மையா..? "India’s best example" என்று சொல்வது உண்மையா..? குஜராத்தான் மெய்யாலுமே முதலில் இருக்கிறதா..?

இது பொய்..! இங்கே சென்று அட்டவணையில் உண்மை விபரம் அறிந்து கொள்ளுங்கள்..!

மோடி ஒரு ஊழலற்ற சிறந்த ஆட்சியாளரா..? இல்லை..! மோடியின் ஊழல் பற்றியும் அவரின் ஆட்சியின் சீர்கேடு பற்றியும் அவருடைய 'கூட்டாளி' அண்ணா ஹாசரேவே புட்டு புட்டு வைத்திருப்பதை இங்கே சென்று படியுங்கள்..!

அடுத்து பக்கம் 48. இது “Highway in India Offers New Solution to Land Fights,”  New York Times , February 22, 2011. -இல் வந்த ஒரு பத்திரிக்கை செய்தியாளரின் கிளிப்பிங்..! 

// The examples set in by Chief Ministers 9-Modi and Kumar may have inspired the popular leader of India’s most populous state, Uttar Pradesh (pop. 200 million). Chief Minister Mayawati, ... ... focus much more toward infrastructure projects such as road-building and improving the state’s poor energy grid.// 

(இதெல்லாம்... 'ரோடு போடும் காண்ராக்டையும்... மின்சார கிரிட் டவர் கட்டும் காண்ட்ராக்டையும் உ.பி.யில் நழுவ விடாதீர்கள்' என்ற அறிவுரையே அன்றி வேறென்ன..?)

ஆனால், மோடி பெயரை பார்த்தவுடன் பூத்துக்குளுங்கிய ஊடக மனம்... நிதிஷ் குமார் பற்றியும் மாயாவதியை பற்றியும் கூறப்பட்டிருக்கிறதே..? ஏன் மவுனம் காக்கின்றன இந்த காவி ஊடகங்கள்..? 

கடைசியாக... பக்கம் 70-இல் தான் மோடிக்கு இறங்குகிறது அதிரடி ஆப்பு..! அடுத்து வரக்கூடிய வரிகள் ஒவ்வொன்றும் பயங்கரவாதி மோடியின் மண்டையில் விழும் சம்மட்டி அடி என்றால் மிகை அல்ல..!

The U.S. State Department and human rights groups have been critical of New Delhi’s largely ineffectual efforts to bring those responsible for the post-Godhra rioting and murders to justice; some of these criticisms were echoed by the Indian Supreme Court in 2003. 

In 2005, the State Department made a controversial decision to deny a U.S. visa to Gujarat Chief Minster Narendra 10-Modi under a U.S. law barring entry for foreign government officials found to be complicit in-severe violations of religious freedom. The decision was strongly criticized in India. 

In 2008, a Gujarat state government commission exonerated 11-Modi, claiming to have found “absolutely no evidence” that he or his ministers had acted improperly. More than nine years after the Gujarat riots, international human rights groups express concerns about obstacles faced by victims seeking justice, the continuing internal displacement of thousands of families who lack basic necessities, and large numbers of un investigated related criminal cases (despite the IndianSupreme Court’s 2004 order to reopen nearly 1,600 such cases). 

Human Rights Watch called on the Indian government to launch an investigation of 12-Modi after he made statements apparently endorsing the extrajudicial execution of a terrorism suspect by police. 

In 2008, 27 Members of the U.S. Congress joined the U.S. Commission on International Religious Freedom in urging the State Department to reaffirm its past decision to block 13-Modi’s entry to the United States ( “India: Gujarat Chief Minister Endorses Unlawful Killings,”  Human Rights Watch release, December 7, 2007).

இதெல்லாம் உங்கள் கண்ணில் அகப்படாமல் எங்கே போச்சு ஊடகமே..? எதற்கு இந்த மாய்மாலம்..? எதற்கு இந்த செய்தியியல் ஊழல்..? 

இதெல்லாம் விட பெரிய ஆப்பு ஒன்று இருக்கிறது..!
.
அது... அடுத்த 71-ம் பக்கத்தில்...!!   "உள்நாட்டு ந்து பயங்கரவாதம்"...!!!  

Maoist Rebellion, Other Insurgencies, and Communalism என்ற பகுதியில்... "Indigenous Hindu Terrorism" --- என்று ஒரு உள் தலைப்பு இட்டு இதை தனியே கூறுகிறது CRS அறிக்கை..!  
பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் பலருடன் பயங்கரவாதி பிரக்யா சிங் சாத்வீ
கார்கிலுக்கு அனுப்ப சொல்லி கொடுத்தால்... மாலேகானுக்கு RDX வெடிகுண்டு சப்ளை செய்தாராம் இந்த இந்திய ராணுவ லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீக்காந்த் ப்ரசாத் ப்ரோஹித்


Indigenous Hindu Terrorism.

Even more recent are overt signs that India is home to militant Hindu nationalist groups intent on launching domesticterrorist attacks.
.
In September 2008, seven people were killed by two bomb blasts in the Maharashtran city of Malegaon, a hotbed of Hindu-Muslim communal strife. By year’s end, police had arrested nine members of a “Hindu terrorist cell” in connection with the bombing, including an active army lieutenant colonel and a Hindu nun with links to the main opposition BJP.

Thus did “Hindu terrorism” become a new and highly controversial phrase in India’s national dialogue. Never before in the country’s history had the phrase been so widely used, and the development had major and continuing effects on India’s national psyche. Many Indian observers warned of the danger of a “militant majoritarianism”among Hindu nationalists that threatens to rend the secular fabric of the nation.

 In late 2010, Hindutva extremist Swami Aseemanand confessed to involvement in a number of terrorist attacks previously blamed on Islamist militants, including the 2006 bombing of a Muslim cemetery in Malegaon that killed 37 people and the 2007 bombing of the trans-border Samjhauta Express, a train linking Delhi and Lahore, Pakistan, that killed 68 people, most of them Pakistani civilians. 

Aseemanand confessions were an embarrassment for law enforcement agencies that had arrested Muslim suspects, and gave credibility to analysts who identify Hindu militancy as a threat to India’s security.

மேற்படி செய்திகளும் CRS-ன் சொந்த சரக்கு அல்ல. அப்புறம் எங்கிருந்து காபி & பேஸ்ட் பண்ணப்பட்டனவாம்..?

“Indian Muslims Blamed for ‘Saffron Terror’ Want Justice,” BBC News , January 27, 2011; 
“Swami’s Confession,”  Frontline (Chennai), February 11, 2011.
“‘Hindu Terrorism’ Debate Grips India,”  BBC News, November 21, 2008; 
Praful Bidwai, “Saffron Terror” (op-ed),  Frontline (Chennai), November 21, 2008; 
“The True Face of the BJP” (op-ed), Outlook  (Delhi), October 29, 2008. 
“The Rise of Hindutva Terrorism,” Outlook India (Delhi) May 11, 2010.
“India Police Say They Hold 9 From Hindu Terrorist Cell,” New York Times, November 12, 2008.

மோடி பற்றி COPY & PASTE பண்ணப்பட்ட சில வரிகளை... அவை 'பொய் என்றாலும்பரவாயில்லை' என பெருமையாய் பீற்றிக்கொண்டோர் யாருமே பாஜகவின் பயங்கரவாத குண்டுவெடிப்புகள் தொடர்பு பற்றியான இவ்விஷயத்தை உண்மை என்றாலும் ஏன் வெளியே சொல்லவில்லை..?  
.
அதனாலென்ன..! நாம் சொல்லுவோம் என்றுதான் இந்த பதிவு..!

ஆக... இந்த நான்கு அமெரிக்கர்களும் நன்றாக சம்பளம் வாங்கிக்கொண்டு இந்தியாவில் ஏதோ ஒரு நட்சத்திர ஹோட்டலில் ரூம் போட்டுக்கொண்டு ஜாலியாக சாப்பிட்டு என்ஜாய் பண்ணிக்கொண்டே அவ்வப்போது... கூகுள் உதவியுடன் 'பொட்டிதட்டி' பல பத்திரிக்கை கட்டுரைகளை தேடித்தேடி கட் & பேஸ்ட் பண்ணி உள்ளனர் என்றுதான் எனக்கு எண்ணத்தோன்றுகிறது. புதிய தகவல்கள் ஒன்றும் இல்லை..! ஹூம்...! இதெல்லாம் ஒரு அறிக்கை..! இதெல்லாம் ஒரு உழைப்பு..! இதுக்கெல்லாம் முக்கியத்துவம்... ஒரு மதிப்பு... மரியாதை..! ச்சே..!

இதைவிட சிறப்பான ஆதாரங்களுடன் INVESTIGATIVE JOURNALISM REPORTS மற்றும் தரமான சிந்திக்க வைக்கும் ஆய்வுக்கட்டுரைகளை நம் பதிவுலக சகோஸ் ஏராளமாகவே தருகின்றனர்..!

இந்த CRS அறிக்கையில் பல விஷயங்கள் விஷமத்தனமானவை..! எதிர்க்கப்பட வேண்டியவை. ஆனால்... ஓர் எதிர்ப்பையும் காணோம்..!

சில கார்ப்பரேட் ஊடகங்கள்தாம் மோடியை பிரதமராக்குவதற்கான 'பொறுப்பை' ஏற்றுக்கொண்டுள்ளன என்பதை தேசிய பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளை பார்த்தாலே நமக்கு புரியும். அவைகள்தாம் அமெரிக்காவின் CRS அறிக்கையில் மோடிக்குறித்த கட் & பேஸ்ட் பொய்யான வரிகளுக்கு முக்கியத்துவம் தருகின்றன.  

இந்தியாவில்  காணப்படும் பல குறைகளை சுட்டிக்காட்டி நேர்மையாக விமர்சித்து இருந்தாலும்... பல உள்குத்துகள் இருக்கின்றன.

மொத்தமாக படித்துவிட்டு நிமிர்ந்தால்... இந்தியா அமெரிக்காவின் காலணியாதிக்கத்திற்கு மறைமுகமாக அடிபணிந்து விட்டது என்பதைத்தான் உண்மையில் CRS-ஸின் அறிக்கை நமக்கு சொல்கிறது. பிராந்தியத்தில் சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு எதிரான உறுதியான அமெரிக்க அடியாளாக இந்தியா வளர்ச்சியடைந்துள்ளதன் விபரங்கள் CRS-ஸின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. 

உலகிலேயே அதிகமாக ஆயுதம் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா மாறியதிலும், ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் பகுதிகளில் அமெரிக்க ராணுவத்தின் நிரந்தரமான இருப்பிற்கு இந்தியாவின் மவுன ஒத்துழைப்பதற்கும் மகிழ்ச்சியை தெரிவிக்கிறது இவ்வறிக்கை. 

"அணிசேரா கொள்கை"யிலிருந்து அமெரிக்க சேவை நாடாக இந்தியா மாறிவிட்டது என்பதற்கும், இந்தியாவை ஆட்சி புரிவது காங்கிரஸாக இருந்தாலும், பா.ஜ.க-வாக இருந்தாலும் அமெரிக்காவின் விருப்பங்கள் பாதுகாக்கப்படும் என்பதற்கும் உறுதியான ஆவணம்தான் CRS அறிக்கை.  

ஆனால், இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் இரண்டு வரிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் மோடியைக் குறித்த கட் & பேஸ்ட் வருடல்களை மட்டும் உயர்த்திப்பிடிக்கும் தேசிய ஊடகங்கள் "யாருக்காகவோ" தங்களை பிரதிநிதிகளாக மாற்றி வருகின்றார்கள் என்பதை மட்டுமல்ல இந்திய தேசத்தை அமெரிக்க ஆக்டோபஸ்களின் கரங்களில் ஒப்படைக்க தயாராகி வருகிறார்கள் என்பதை சாதாரண அறிவுடையவர்களும் நன்கு விளங்கிக்கொள்ளலாம்.

இந்த 'கட்&பேஸ்ட் அறிக்கையை(?)' தூக்கி ஓரமாய் வைத்து விட்டு, இங்கே... என்னுடைய  முக்கியமான கேள்வி ஒன்று என்னவென்றால்... 

இந்த அறிக்கையில் மோடி பற்றிய சார்பு செய்திகளை மட்டும் எடுத்துக்கொண்டு, அதை தலைப்புச்செய்தியாக்கி ஆட்டம் போட்டு குதூகளித்தீர்களே... ஓ... காவி ஊடகங்களே..! மரணஅடி கொடுத்து ஆப்பு வைத்த மற்ற செய்திகளை எல்லாம் ஏனய்யா... ஒதுக்கி மறைத்தீர்கள்..? இதுதான் நீங்கள் ஊடகவியலில் கற்ற நேர்மையா..? இதுதான் ஊடக தர்மமா..? இதுதான் நீங்கள் எங்களுக்கு செய்தி சொல்லும் லட்சணமா..?

ஒன்று சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள்..! எப்போது ஊடகங்களில் செய்தி சொல்வதில் ஊழலும், சார்பும், பொய்யும், ஆதாயமும், சமூக அக்கறையின்மையும் வந்துவிட்டதோ... அப்போதே ஒட்டுமொத்த சமூகமும் அதே பாதையில்தான் பயணிக்கும்..! விதிப்படி நம் நாடு செத்து அழிவதும்... உயிர் பிழைப்பதும்.. அரசியல்வாதிகளிடமோ, நீதிபதிகளிடமோ, சினிமாவிடமோ, கிரிக்கேட்டிடமோ அல்ல..; ஊடகத்துறையின் சிறப்பான செயல்பாட்டில்தான் உள்ளது... என அறியலாம்..!

Tuesday 27 September 2011

இந்தியாவிற்கு வந்த சோதனை


இந்தியாவில் மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளை மதிப்பீடுச்செய்து அமெரிக்க காங்கிரசினால் ரிசர்ச் சர்வீஸ்(சி.ஆர்.எஸ்) தயாராக்கிய அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில விமர்சனங்களை ஊடகங்கள் விவாதத்திற்கு இடமாக்கியுள்ளன.
அமெரிக்க காங்கிரஸின் சுதந்திர ஆய்வு பிரிவான சி.ஆர்.எஸ் அமெரிக்க கொள்கை உருவாக்கம் தொடர்பாக பல்வேறு நாடுகளின் நிலைமைகளை குறித்த ஆய்வறிக்கைகளை ஒவ்வொரு மாதமும் சமர்ப்பித்து வருகிறது. அமெரிக்காவின் தூதரக கேபிள்கள்களுக்கு சமமான இவ்வறிக்கை அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கைகளை உருவாக்குவதிலும், பல்வேறு நாடுகளுக்கிடையேயான உறவுகளை நிர்ணயிப்பதிலும் முக்கிய பங்கை ஆற்றிவருகிறது.
கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட 98 பக்கங்களைக் கொண்ட அறிக்கை தற்பொழுது விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த அறிக்கையில்தான் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியைக் குறித்த விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2002-ஆம் ஆண்டு இந்திய வரலாற்றிலேயே மிகக்கொடூரமாக நிறைவேற்றப்பட்ட முஸ்லிம் இனப்படுகொலையின் சூத்திரதாரியான நரேந்திர மோடிக்கு அமெரிக்கா இதுநாள் வரை விசா அளிக்க மறுத்துவருகிறது. மதச் சுதந்திரத்திற்கு எதிரான கொடூரமான அத்துமீறலுக்கு எதிராகத்தான் இத்தடையை அமெரிக்கா மோடிக்கு விதித்துள்ளது. அமெரிக்காவின் இத்தகைய தீண்டாமை பட்டியலிருந்து மோடியின் பெயர் விரைவில் நீக்கப்படும் என்பதன் முதல் அறிகுறியாக சி.ஆர்.எஸ்ஸின் அறிக்கையை தேசிய ஊடகங்கள் கோலாகலப்படுத்தி வருகின்றன.
2014-ஆம் ஆண்டு இந்திய மக்களவை தேர்தலில் முக்கிய போட்டி ராகுல்-மோடிக்கு இடையே நடைபெறும் என சி.ஆர்.எஸ் முன்னறிவிப்புச் செய்துள்ளதாக ஊடகங்களை பறையடிக்கின்றன.
குஜராத் இனப்படுகொலை தொடர்பான வழக்கில் இந்தியாவின் உச்சநீதிமன்ற அண்மையில் அளித்துள்ள தீர்ப்பை தங்களுக்கு அனுகூலமாக மாற்றி மோடியும், பா.ஜ.கவும் பரப்புரைச் செய்துக் கொண்டிருக்கும் வேளையில்தான் அமெரிக்காவின் அறிக்கை விவாதமாக்கப்பட்டு வருகிறது என்பது கவனிக்கத்தக்கதாகும்.
முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃபிரியின் மனைவி ஸாக்கியா ஜாப்ஃரி தொடர்ந்த வழக்கில் மோடியை வழக்கில் சேர்ப்பதும், விசாரணை நடத்துவதும் விசாரணை நீதிமன்றத்தின் வரம்பிற்குள் வரும் காரியம் என்பதால் அவர்கள்தாம் தீர்மானிக்கவேண்டும் எனவும், அதில் ஏதேனும் தடை ஏற்பட்டால் உச்சநீதிமன்றம் தலையிடும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இத்தீர்ப்பை தனக்கு வழங்கப்பட்ட ‘பரிசுத்தர்’ பட்டம்போல கொண்டாடிய மோடி தனது ‘பரிசுத்தத்தை(?)’ மேலும் நிரூபிப்பதற்காக 3 நாட்கள் உண்ணாவிரதம்(?) இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதற்கிடையேதான் ஊடகங்கள் அமெரிக்காவின் சி.ஆர்.எஸ் அறிக்கையை உயர்த்திப் பிடிக்கின்றன.
கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி ஃபெடரேசன் ஆஃப் அமெரிக்கன் சயின்டிஸ்ட் வெளியிட்டுள்ள இந்த ஆவணம் இவ்வளவு நாட்களாக விவாதத்திற்கு காரணாமாகாமல் தற்பொழுது மோடி ‘உண்ணாவிரதம்(?)’ இருக்கும் முகூர்த்தத்தில் எவ்வாறு வெளியே குதித்தது என்பது மர்மமாகவே உள்ளது.
குஜராத்தில் முஸ்லிம்களை கொடூரமாக படுகொலைச் செய்ததன் மூலம் சர்வதேச அளவில் இமேஜை இழந்து நிற்கும் மோடியை தேசிய அரசியலின் நடுத்தளத்திற்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை தேசிய ஊடகங்கள் துவங்கி பல நாட்கள் ஆகிவிட்டன.
கடந்த தேர்தலில் வளர்ச்சியின்  முடிசூடா மன்னனாக மோடியை உயர்த்திப்பிடித்த தேசிய ஊடகங்கள் அவரது சொந்த தொகுதியான மணிநகரை நோக்கி திரும்பிக்கூட பார்க்கவில்லை என்று அன்றே குற்றச்சாட்டு எழுந்தது. பாரம்பரிய தொழில் வளர்ச்சியில் மேலும் தனியார், வெளிநாட்டு முதலீடுகளை இழுத்து வருவது மட்டும் ஒரு மாநிலத்தின் வளர்ச்சியின் நிபந்தனையாக மாறிவிடாது. அனைத்து பிரிவு குடிமக்களின் பாதுகாப்பும், சட்டம்-ஒழுங்கும் அதில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
நாட்டு நலனின் தற்கால அளவுகோலிலும் முதல் முன்னுரிமை இவற்றுக்குத்தான் அளிக்கப்படும். ஆகையால்தான் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ஹிந்து மதத்தைச் சார்ந்த சில பிரிவினர் பாதுகாப்பற்று வாழும் குஜராத்தில் அதன் முதல்வரான மோடி அமெரிக்காவின் தீண்டாமை பட்டியலில் இடம்பிடித்தார். சர்வதேச அளவில் பரிசுத்தவானாக மாறுவதற்கான சான்றிதழை அமெரிக்காவிடம் பெறவேண்டும் என்பதால் அந்நாட்டின் தீண்டாமை பட்டியலில் தான் இடம்பிடித்தது மோடியின் நிம்மதியை இழக்கச் செய்தது. இவ்வாறு ‘முஸ்லிம் இனப்படுகொலையின்’ அசுத்தத்தை களைய மோடி ‘வளர்ச்சியின் நாயகன்(?)’ வேடத்தை புனைந்தார். அதன் ஒரு பாகமாகத்தான் மோடியின் ‘வளர்ச்சி கொள்கை(?)’ என அமெரிக்காவின் சி.ஆர்.எஸ் அறிக்கையும் கூறுகிறது.
’மோடியை பிரதமராக்கியே தீருவோம்’ என்பதுதான் சில முதலாளித்துவ குத்தகை முதலாளிகள் மற்றும் கார்ப்பரேட் ஊடகங்களின் பிடிவாதமாகும். துவேச அரசியலுக்கு குஜராத்திற்கு வெளியே மார்க்கெட் இல்லை என்பதால் கடந்த தேர்தலில் மோடியின் செல்வாக்கு எடுபடாமல் போனது.
மோடியை மேற்கு இந்தியாவின் ஸ்டாராக பிரச்சாரம் செய்தபிறகும் அருகிலுள்ள மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் கூட பா.ஜ.கவுக்கு ஆதாயம் கிடைக்கவில்லை.மராட்டிய மண்ணில் நாங்கள் இருக்கும் வேளையில் மோடி எதற்கு? என பால்தாக்கரேயை தலைவராக கொண்ட சிவசேனா வாதத்தை எழுப்பியது.
தற்பொழுது டெல்லி இந்திரபுரியில் மோடியை பிரதமர் பதவிக்கான ஸ்டாராக மாற்றுவதிலும் அத்வானி, ஜெட்லி, சுஷ்மா போன்ற உள்கட்சி ரோதனைகளின் எதிர்ப்பு கிளம்பவும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் மோடியை பிரதமராக்குவதற்கான ‘மிஷனை(?)’ ஏற்றுக்கொண்டுள்ளது சில கார்ப்பரேட் ஊடகங்கள்தாம் என்பதை தேசிய பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களை பார்த்தாலே நமக்கு புரியும். அவைகள்தாம் அமெரிக்காவின் சி.ஆர்.எஸ் அறிக்கையில் மோடிக்குறித்த விமர்சனங்களுக்கு மெருகூட்டி வருகின்றனர்.
இந்தியா அமெரிக்காவின் காலனியாதிக்க கொள்கைக்கு அடிபணிந்துவிட்டதன் நிதர்சனம்தான் உண்மையில் சி.ஆர்.எஸ்ஸின் அறிக்கை.
2004-ஆம் ஆண்டு தீவிரமடைந்த இந்தியா-அமெரிக்க உறவு, அணுசக்தி ஒப்பந்தம்,பத்துவருட பாதுகாப்பு ஒப்பந்தம், விரிவான ராணுவ-வர்த்தக ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான நிகழ்ச்சிகளின் வாயிலாக பிராந்தியத்தில் சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு எதிரான உறுதியான உறவாக வளர்ச்சியடைந்துள்ளதன் விபரங்கள் சி.ஆர்.எஸ்ஸின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
உலகிலேயே அதிகமாக ஆயுதம் இறக்குமதிச் செய்யும் நாடாக இந்தியா மாறியதிலும், ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் பகுதிகளில் அமெரிக்க ராணுவத்தின் நிரந்தரமான இருப்பிற்கு இந்தியா ஒத்துழைப்பதற்கும் மகிழ்ச்சியை தெரிவிக்கிறது இவ்வறிக்கை.
ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் அரங்கேற்றத்தையும், இடதுசாரிகளின் வீழ்ச்சி குறித்தும் இவ்வறிக்கை விவரிக்கிறது. அணுசக்தி ஒப்பந்தம், ஈரான் எரிவாயு ஒப்பந்தம் ஆகிய விவகாரங்களில் இந்தியா அமெரிக்காவிற்கு அடிபணிந்துவிட்டது என விமர்சித்தவர்களின் கூற்றை உறுதிச்செய்கிறது சி.ஆர்.எஸ் அறிக்கை. அணிசேரா கொள்கையிலிருந்து அமெரிக்காவின் சார்பு நாடாக இந்தியா மாறிவிட்டது என்பதற்கும், இந்தியாவை ஆட்சி புரிவது காங்கிரஸாக இருந்தாலும், பா.ஜ.கவாக இருந்தாலும் அமெரிக்காவின் விருப்பங்கள் பாதுகாக்கப்படும் என்பதற்கும் உறுதியான ஆவணம்தான் சி.ஆர்.எஸ் அறிக்கை.
ஆனால் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் இரண்டு வரிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் மோடியைக் குறித்த விமர்சனங்களை மட்டும் உயர்த்திப்பிடிக்கும் தேசிய ஊடகங்கள் யாருக்காகவோ தங்களை பிரதிநிதிகளாக மாற்றி வருகின்றார்கள் என்பதை மட்டுமல்ல இந்திய தேசத்தை ஆக்டோபஸ்களின் கரங்களில் ஒப்படைக்க தயாராகி வருகிறார்கள் என்பதை சாதாரண அறிவுடையவர்களும் விளங்கிக்கொள்ளலாம்.

சமைய‌ல் ரு‌சி‌க்க ‌சில கு‌றி‌ப்புக‌ள்


சமைய‌ல் ரு‌சி‌க்க ‌சில கு‌றி‌ப்புக‌ள்


வெங்காய சூப்பில் சிறிதளவு சீஸை சேர்த்தால் ருசி நன்றாக இருக்கும்.

சப்பாத்திகள் மென்மையாக இருக்க அதன் மாவை வென்னீரில் பிசையவும். இறைச்சி மிருதுவாக இருக்க அதனை வினீகரில் சிறிது நேரம் வைத்தால் போதுமானது.

சாம்பார் பொடியை மொத்தமாக அரைத்து வைத்துக் கொண்டு விட்டால் சில நாட்கள் ஆன உடனேயே குணமும் மணமும் குறைந்து விடும். அதனால் கொஞ்சமாக அரைத்து வைத்து ஒரு பாலிதீன் கவரில் போட்டு வைத்து ஒரு டப்பாவில் போட்டு வைக்கவேண்டும். இதனால் சாம்பார் பொடி எப்போதுமே ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

கொத்த மல்லி இலைகளை நன்றாக ஆய்ந்து சுத்தமாக அலம்பி காய வைத்து காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.

மீன்களை எண்ணெயில் பொறிக்கும்போது


Image


மீன்களை எண்ணெயில் பொறிக்கும்போது அதன் வாசனை அடுத்தடுத்த வீடுகளுக்கும் செல்லும். அடுத்த வீட்டுக்காரர்கள் சைவம் என்றால் அவர்கள் மிகவும் சங்கடப்படுவார்கள். இதைத் தவிர்க்க மீன்களைப் பொறிக்கும் பொழுது அடுப்பின் அருகில் ஒரு பெரிய மெழுகுவர்த்தியைப் பொருத்தி வைத்துக் கொள்ளலாம்.


காய்கறிகளின் சத்துக்களைப் பாதுகாக்க

Image

மென்மையான காய்கறிகளை தோலுடன் சமைக்கவும். காய்கறியை நெய்யில் வறுக்க வேண்டுமென்றால் காரம் அதிகமாக சேர்க்க வேண்டாம். போதுமான அளவுக்கு வறுத்தால் நலம். ஏனெனில் சத்துகள் வற்றாமல் இருக்கும்.

கா‌ய்க‌றிகளை நறு‌க்‌கிய‌ப் ‌பிறகு த‌ண்‌ணீ‌ரி‌ல் போ‌ட்டு கழுவ வே‌ண்டா‌ம். நறு‌க்குவத‌ற்கு மு‌ன்பே கழு‌வி ‌விடுவது ச‌த்து‌க்களை பாதுகா‌க்க உதவு‌ம்.

பொதுவாக கா‌‌ய்க‌றிகளை ஆ‌வி‌யி‌ல் அதாவது த‌ட்டு‌ப் போ‌ட்டு மூடி வை‌த்து வேக வை‌ப்பது ந‌ல்லது.

அரை வே‌க்காடாக கா‌ய்‌க‌றிகளை வேக வை‌த்து சா‌ப்‌பிடுவது‌ம் ‌சிற‌ந்தது. க‌த்‌தி‌ரி‌க்கா‌ய் போ‌ன்றவ‌ற்றை முழுமையாக வேக வை‌த்து சா‌ப்‌பிடவு‌ம்.

மு‌ந்தைய நா‌ள் இரவே கா‌ய்க‌றிகளை நறு‌க்‌கி வை‌த்து‌க் கொ‌ள்வது ச‌த்து‌க்களை வெ‌ளியே‌ற்‌றி‌விடு‌ம். அ‌ப்படி நறு‌க்குவதாக இரு‌ந்தா‌ல் பா‌லி‌தீ‌ன் கவ‌ரி‌ல் இறு‌க்கமாக மூடி வை‌க்கவு‌ம்


1. IMEI  தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
 
2. விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு

3. பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூரின் ஜாமின் மனு
 

IMEI  தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
 
ஒரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள ( 15 இலக்க) எண்ணைத் (International Mobile Equipment Identity)தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம்.  உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களாமொபைல் போனை ஆப் செய்வது நல்லது. இல்லையேல் பேட்டரி பவர் வீணாகும். 
 
 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு
 
 மேஜை மன் நாற்காலியில் அமர்ந்து நாள் முழுவதும் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் சிகரெட் அல்லது வெற்றிலை பாக்கு புகையிலை உபயோகிப்பதுண்டு அவை புற்றுநோய்க்குப் பாதை போடுவதாக ஆராய்ச்சிகள் தெரிவித்தன. தற்போதைய ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பு என்னவெனில் நாள்முழுவதும் மேஜைகள் நாள்காலில் அமர்ந்து வேலை செய்தாலே நாளடைவில் புற்றுநோய் வந்துவிடுமாம். விஞ்ஞானிகள்தான் இந்த அபாய அறிவிப்பைக் கொடுக்கின்றார்கள்...!
எதை விடுவதுசிகரெட்டை விடுவதாஅல்லது டெஸ்டாப் வேலைகளை விடுவதாஸ்டேட்ச்யூட்டரி வார்னிங் படங்களை எதன்மேல் போடுவது?டொபாக்கோப் பாக்கெட்டுகள் மேல் போடுவதாடெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் மேல் போடுவதாவிஞ்ஞானிகளுடன் சேர்ந்து நாமும் கவலைப்படுகிற ஒரு காலகட்டத்தில் அனைவரும் இருக்கின்றோம்.
                    

அதிலும் இந்தக் கவலை மகா அபாயமான கவலையாக இருக்கின்றது. அதுவும் வயிற்றிலே கையை வைக்கும் கவலை .. ஆம்குடல் கேன்ஸர் வருகிறதே இந்த டெஸ்க்டாப் வேலைகளில் மணிக்கணக்கில் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு குடல் கேன்ஸர் வருகிறதாம். விஞ்ஞான ஆய்வாளர்கள் இது குறித்த வழங்கும் ஆலோசனைகளைப்--பார்ப்போம்!

stock photo : Happy young man in t-shirt sitting on sofa at home, working on laptop computer, smiling.
பத்து வருடங்களுக்கு அதிகமான காலம் கம்ப்யூட்டர் டெர்மினலில் வேலை செய்கின்றவர்களுக்குக் குடல் கேன்ஸர் வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாம். புகை பிடிப்பவர்களை விட! மேலும் கம்ப்யூட்டர்த் திரைகளைப் பார்த்துக் பார்த்துக் கொண்டு பொழுதுபோக்கும் நேரத்திற்கும்இருதய நலத்திற்கும் நேரடித் தொடர்பும் உள்ளது என்பது ஓர் ஆய்வின் முடிவு. எழுந்து நிற்காமல் நெடுநேரத்திற்கு அப்படியே டெஸ்க்கில் உட்கார்ந்திருப்பது இடுப்பு சுற்றளவைக் கூட்டும். கெட்ட கொலஸ்ட்ராலின் அளவையும் தேகத்தில் அதிகரிக்கும். ஒரு நிமிடத்திற்கொரு தடவை எழுந்து மாறுதல் வழக்கங்கைளை வேலைகளுக்கு இடையில் மேற்கொள்ளலாம். இப்படி செய்வது மேலே கூறி உடல் நலத்திற்கு ஏற்படும் அபாயத்தைக் தணிக்கும்'' என்பது குயின்லேண்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜீனிவீவே ஹீலி என்பவரின் கருதது. 
Souce - Times of India (Love Desk job) know the Risk"  
 
 

பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூரின் 
ஜாமின் மனுவைசுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது

மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளபெண் சாமியார் பிரக்யா சிங் தாகூரின் ஜாமின் மனுவைசுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில், 2008ல் குண்டு வெடித்தது. இதில்ஏழு பேர் உயிரிழந்தனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாகபெண் சாமியார் பிரக்யா சிங் தாகூரைமகாராஷ்டிரா மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் கைது செய்தனர். இந்த வழக்கில்ஜாமின் அளிக்கக் கோரிசுப்ரீம் கோர்ட்டில் பிரக்யா சார்பில்மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுசுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பன்சால்கோகலே ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன்நேற்று விசாரணைக்கு வந்தது. பிரக்யா சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,""பயங்கரவாத எதிர்ப்புப் படையின் காவலில் இருந்தபோதுபிரக்யா சிங்உடல் ரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளானார். மோசமான வார்த்தைகளாலும் அவரைத் திட்டினர். அவருக்கு ஜாமின் அளிக்க வேண்டும்'' என்றார்.இதையடுத்து,நீதிபதிகள்,"இந்த மனு விசாரணைக்கு ஏற்றது அல்லஎனக் கூறிதள்ளுபடி செய்தனர்.
 
 

Thursday 22 September 2011

'என் மகள்களின் மூன்று கேள்விகள்'



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

இஸ்லாமை ஏற்றபோது நான் பெற்ற மனஅமைதி இன்னும் என்னைவிட்டு விலகவில்லை. இன்ஷா அல்லாஹ், இனியும் விலகாது.
லாரன் பூத் (Lauren Booth) - அரசியல் விமர்சகர், ஊடகவியலாளர், பாலஸ்தீன மக்களுக்காக போராடியவர்/போராடிக்கொண்டிருப்பவர்.

இவற்றிற்கெல்லாம் மேலாக, பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் நெருங்கிய உறவினர் என்ற அடையாளம். சென்ற ஆண்டு இவரது பெயரை உலகின் மூளைமுடுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்த்தன ஊடகங்கள்.

அதற்கு காரணம், நம்மில் பெரும்பாலானோர் அறிந்ததுதான். ஆம், அவர் இஸ்லாமை தழுவிய அந்த நிகழ்வுதான் காரணம்.

தற்போதைய காலக்கட்டத்தில், இஸ்லாமை தழுவும் பலரும், குர்ஆனை முழுமையாக படித்து, பலவித ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர்தான் தழுவுகின்றனர்.

ஆனால் லாரன் பூத் அவர்களின் அனுபவம் வேறுவிதமானது. 

இவர் இஸ்லாமை தழுவுவதற்கு ஊன்றுகோலாய் இருந்தது முஸ்லிம்களின் வாழ்க்கைமுறைதான். பாலஸ்தீன முஸ்லிம்களின் அழகான வாழ்வை பார்த்து, தானும் முஸ்லிமாக வேண்டுமென்று ஆசைக்கொண்டவர் இவர். பின்னர்தான் குர்ஆனை படிக்க ஆரம்பித்திருக்கின்றார்.

இவருடைய இஸ்லாம் நோக்கிய பயணம் மற்றும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு இவருக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் போன்றவற்றை படம்பிடிக்க முயற்சிப்பதே இந்த பதிவு...இன்ஷா அல்லாஹ்.   

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சகோதரி லாரன் பூத். பெற்றோரிடமிருந்து சரியான அரவணைப்பு இருந்ததில்லை. சிறு வயதில் இறைவனிடம் வேண்டிக்கொள்வாராம்,
Please God, என் அம்மாவையும், அப்பாவையும் நாளைக்காவது என்னிடம் அன்பாக இருக்க வை.
டீனேஜ் பருவத்தின்போது பிரார்த்திப்பதை நிறுத்திவிட்டார். தன்னுடைய இருபதுகளில் மதமே வேண்டாமென்ற முடிவுக்கு வந்துவிட்டார்,
வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருந்தேன். இனியும் எனக்கு மதங்கள் தேவையில்லை. Nietzsche சொன்னதை நம்பினேன். அவர் கூறினார், 'கடவுள் இறந்து விட்டார். நாம்தான் அவரை கொன்றோம்' என்று
சகோதரி லாரன் பயின்ற பள்ளியில் மொத்தம் மூன்றே மூன்று முஸ்லிம் மாணவிகளாம். அந்த மாணவிகளிடம் இரண்டு விசயங்களை கவனித்திருக்கின்றார்.
ஒன்று, அவர்கள் கணக்கிலும் அறிவியலிலும் சிறந்து விளங்கினார்கள். இரண்டாவது, அவர்கள் ஆண்களுடன் டேடிங் (Dating) போனதில்லை.  
9/11-க்கு பிறகு முஸ்லிம்கள் குறித்த எதிர்மறையான எண்ணங்கள் அவருக்குள் வளர ஆரம்பித்தன. முஸ்லிமல்லாதவர்களை கொல்வதே முஸ்லிம்களின் தலையாயப் பணி என்பதில் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தார். ஊடங்கங்கள் என்ன கூறினவோ அவற்றை அப்படியே நம்பினார்.

பிறகு, சில ஆண்டுகளில் பாலஸ்தீன பிரச்சனையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்தார். 2005-ஆம் ஆண்டு, மஹ்மூத் அப்பாசை பேட்டி காண்பதற்காக முதல்முறையாக மேற்குகரைக்கு சென்றார்.
டெல் அவிவ்விற்கு விமானம் ஏறியபோதே மிகவும் பதற்றமடைந்தேன். அரேபியர்களை நினைத்து மிகவும் அஞ்சினேன். பேட்டி எடுக்கவிடாமல் என்னை திருப்பி அனுப்பிவிட மாட்டார்களா இஸ்ரேலியர்கள் என்று கூட தனிமையில் எண்ணிருக்கின்றேன்.   
சுமார் ஐந்து நாட்கள் மேற்குகரையில் தங்கியிருந்தார். இந்த ஐந்து நாட்களில் பாலஸ்தீனியர்கள் இவர் மீது காட்டிய அன்பில் இஸ்லாம் குறித்த அவரது தவறான எண்ணங்கள் பறந்தோட ஆரம்பித்தன.
என் வாழ்நாளில் அப்படியொரு உபசரிப்பை நான் கண்டதில்லை. எப்படி தங்கள் பார்வைக்கு அந்நியமான ஒரு பெண்ணை பார்த்தவுடன் ஏற்றுக்கொண்டார்கள்?. என்னிடம் பரிவோடு கூறினார்கள் 'இங்கே உங்கள் மீது தாக்குதல் நடக்குமானால் உங்களை பாதுகாக்க நாங்கள் இருக்கின்றோம்'. இஸ்லாம் குறித்த என்னுடைய அச்சம் விலக ஆரம்பித்தது. 
இஸ்லாம் குறித்த எதிர்மறையான எண்ணங்கள் விலக ஆரம்பித்ததே தவிர, இஸ்லாமை ஆராய வேண்டுமென்ற வட்டத்திற்குள் இன்னும் லாரன் பூத் வரவில்லை. மது, பார்ட்டிகள் என வழக்கம்போல வாழ்க்கை செல்ல ஆரம்பித்தது.

2008-ல் மறுபடியும் பாலஸ்தீன் பயணம். இந்த முறை பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுக்க சென்றார். காசாவை இஸ்ரேல் விடுவிக்க வேண்டுமென்ற கோரிக்கையோடு சென்றார். இந்த பயணத்தின்போது தனக்குள் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார்.

சில நாட்கள் மட்டுமே பயணத்தை திட்டமிட்டிருந்த அவரது குழுவினருக்கு, இஸ்ரேல் மற்றும் எகிப்து ராணுவத்தின் கெடுபிடிகளால் ஒரு மாதம் வரை காசாவில் அடைந்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

தன் குழந்தைகளின் பிரிவால் பரிதவித்து போனார் லாரன். ஒருநாள், இந்த வேதனை தாங்க முடியாமல் அழுதுக்கொண்டிருக்க, அவருக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்தார் ஒரு பாலஸ்தீனிய பெண்மணி.

"மன்னிக்கவும்" என்று கூறி தொடர்ந்த அவர் "உங்கள் குழந்தைகளை பிரிந்து எந்த அளவு துயரப்படுகின்றீர்கள் என்று எனக்கு புரிகின்றது" என்று கூறி லாரனை சமாதானப்படுத்த தொடங்கினார்.

பின்னர் தன்னுடைய கதையை லாரனிடம் சொல்ல ஆரம்பித்தார் அந்த பாலஸ்தீனிய பெண்மணி. அவர் மேற்குகரையைச் சார்ந்தவராம். தனிப்பட்ட காரணத்திற்காக ஒருநாள் பயணமாக காசாவிற்கு வரவேண்டிய நிர்பந்தம். அவரை அனுமதித்தனர் இஸ்ரேலியர்கள்.

ஆனால், திரும்ப மேற்குகரைக்கு செல்ல முயற்சித்தபோது, இவரது ஆவணங்களை கிழித்தெறிந்து, இவரை ஒரு வேனில் அடைத்து வைத்து கொடூரமாக நடந்துக் கொண்டார்கள் இஸ்ரேல் இராணுவத்தினர். அன்றிலிருந்து காசாவில் தவித்துக் கொண்டிருக்கின்றார் இந்த பெண்மணி.

இதனை கேட்ட லாரனுக்கு என்ன சொல்லுவதென்றே புரியவில்லை.
கடந்த நான்கு வருடங்களாக தன்னுடைய கணவரையும், இரண்டு குழந்தைகளையும் பார்க்கவில்லை இந்த சகோதரி. ஆனால், இங்கே என்னுடன் அமர்ந்து கொண்டு, என்னுடன் அழுதுக்கொண்டு, என்னை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருக்கின்றார். அடுத்தவர் உணர்வறிந்து செயல்படும் இது போன்ற பண்பை எப்படி விளக்குவது என்று ஆரம்பிக்க கூட எனக்கு தெரியவில்லை. 
பாலஸ்தீனியர்களின் அன்பும், அடுத்தவர் உணர்வுகளை புரிந்து கொள்ளும் மனப்பக்குவமும், இவ்வளவு கொடுமைகளுக்கு மத்தியிலும் தங்களது மார்க்கத்தின் மீதான அவர்களின் பற்றும் தன்னை மிகவும் பாதித்ததாக குறிப்பிடும் லாரன்,
இப்போது அரேபியர்களை மிகவும் விரும்ப ஆரம்பித்தேன். இருப்பினும் இன்னும் இஸ்லாத்தின் மேல் ஆர்வம் வரவில்லை. 
ரமலான் மாதம் வந்தது. அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஒரு குடும்பம் சகோதரி லாரனை இப்தாருக்கு அழைத்திருந்தார்கள்.

பதினாறு உறுப்பினர்களை கொண்ட அந்த குடும்பம் சகோதரி லாரனை இன்முகத்தோடு வரவேற்றார்கள். ஆனால் லாரனுக்கோ கடுங்கோபம். யார் மீது தெரியுமா?...முஸ்லிம்களின் கடவுள் மீது....ஏன்?
இவர்களுக்கே சிறிதளவுதான் உணவு கிடைக்கின்றது. இந்த சூழ்நிலையில் இவர்களை நோன்பு நோற்க சொல்வது நியாயமா? நிச்சயமாக இவர்களது கடவுள் இரக்கமற்றவர்தான்.  
ஆனால், அந்த குடும்பத்தினரோ பொறுமையுடன் விளக்கினார்கள். இவ்வுலகில் உள்ள எதையும்விட தாங்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நேசிப்பதாகவும், அதனால், இறைவனின் கட்டளைக்கு இணங்கி நோன்பு நோற்று அவனுக்கு நன்றி செலுத்துவதாகவும் கூறினர்.

அவ்வளவுதான்.....

அவர்களின் அன்பும், இஸ்லாம் சொல்லியப்படி வாழ்ந்துவரும் தன்மையும் லாரனுடைய உள்ளுணர்வுகளை கிளறிவிட அந்த வார்த்தைகள் அவரது வாயிலிருந்து வந்து விழுந்தன.
'இதுதான் இஸ்லாம் என்றால்', எனக்குள் சொல்லிக்கொண்டேன், "இது எனக்கு வேண்டும்". முழுமனதோடு என்னை இந்த மார்க்கத்தில் ஐக்கியப்படுத்திக் கொள்ள நான் தயார்.
இது போன்ற வார்த்தைகள் தன்னிடமிருந்து வருமென்று சில ஆண்டுகளுக்கு முன்புவரை கற்பனைக்கூட செய்திருக்கமாட்டார் லாரன்.

பாலஸ்தீன மக்களுடன் தொடர்பு ஏற்பட்ட அதே காலக்கட்டத்தில் மேற்குலகின் பொருள் சார்ந்த வாழ்க்கை மீது அதிருப்தி கொள்ள ஆரம்பித்தார் லாரன். போர்களில் மேற்குலகம் ஈடுபடுவதே, தம் மக்களின் உள்ளங்களில் உள்ள வெற்றிடத்தை திசைதிருப்பத்தான் என்ற எண்ணத்தை கொண்டிருந்தார்.


மேற்சொன்ன நிகழ்வுகளில் இருந்து தொடங்கிய அவரது இஸ்லாம் நோக்கிய பயணம் சென்ற ஆண்டு நிறைவடைந்தது. இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார் லாரன் பூத்.

இஸ்லாம் ஒருவருடைய வாழ்வில் கொண்டுவரும் மாற்றங்கள் அற்புதமானவை. அதற்கு சகோதரி லாரனும் விதிவிலக்கல்ல. தன்னுடைய தவறான பழக்கவழக்கங்களை விட்டொழித்துவிட்டார் சகோதரி லாரன் பூத்.

"எனக்கு புரியத்தொடங்கியது. இனி நான் இஸ்லாமிற்கு அந்நியமானவள் அல்ல. உலகளாவிய முஸ்லிம் சமூகத்தில் நானும் ஒரு பகுதி.

இஸ்லாமை ஏற்றுக்கொள்ள நான் தயாரா? என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என்ன சொல்வார்கள்? என்னுடைய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள நான் தயாரா? - இப்படி பல கேள்விகள் என்னுள் எழுந்தன.

ஆனால் காலப்போக்கில் இவற்றிலிருந்து விடுபட்டுவிட்டேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்வது எளிதாகவே இருந்தது.

ஆம், இஸ்லாம் குறித்து நான் இன்னும் நிறைய படிக்க வேண்டும். பலரும் என்னிடம் கேட்கின்றார்கள் "நீங்கள் குர்ஆனை எவ்வளவு படித்திருக்கின்றீர்கள்?" என்று. நான் கூறுவேன், சுமார் நூறு பக்கங்கள் என்று.

இதனை கேட்பவர்களில் சிலர் என்னை ஏளனம் செய்வதற்கு முன்னர் அவர்களுக்கு நான் ஒன்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன். குர்ஆன் என்னும் புத்தகம் என் வாழ்நாளுக்குரியது. இதில் அவசரப்பட நான் விரும்பவில்லை. படித்தவரை ஆழ்ந்து படிக்க முயற்சித்திருக்கின்றேன். படித்தவற்றை நினைவில் நிறுத்த பாடுபடுகின்றேன். இது வாரப்பத்திரிகை அல்ல.

அரபி மொழி கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு சற்று நேரம் ஆகுமென்று நினைக்கின்றேன். 

By the way, நான் ஷியா வழியை பின்பற்றுகின்றேனா? அல்லது சன்னி வழியை பின்பற்றுகின்றேனா? என்ற கேள்விக்கு என்னால் பதில் கூற முடியாது. என்னை பொருத்தவரை, ஒரே இறைவன்...ஒரே இஸ்லாம்தான். 

இஸ்லாமிய முறையில் உடையணிவதும் எளிதாகவே இருந்தது. இனி சிகையலங்காரத்திற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை பாருங்கள்.

முகத்தை மூடும்விதமாக உடையணிவது எனக்கான ஒன்றாக தோன்றவில்லை. அப்படி உடையணியும் சகோதரிகளை நான் பெரிதும் மதிக்கின்றேன். ஆனால், இஸ்லாம் அதனை வலியுறுத்தவில்லை என்பது என்னுடைய புரிதல்.

என் மனமாற்றத்தை பூதாகரமாக்கின சில ஊடகங்கள். அவர்களுடைய கோபம் என் மீதானது அல்ல. அது இஸ்லாம் மீதானது. இவற்றை நான் பெரிதாக எடுத்து கொள்வதில்லை.

என் வாழ்க்கை முழுவதும் அரசியல் சார்ந்தே இருந்திருக்கின்றேன். பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்திருக்கின்றேன். இனியும் அப்படியே இருப்பேன். 

இஸ்லாமை ஏற்றுக்கொண்ட பிறகும் என் நட்பு வட்டாரம் வலிமையாகவே இருக்கின்றது. அந்தவிதத்தில் நான் அதிர்ஷ்டசாலிதான். என் முஸ்லிமல்லாத நண்பர்கள் ஆர்வமுடன் என்னிடம் கேட்பார்கள்.
  • இஸ்லாம் உன்னை மாற்றிவிடுமா?
  • நாங்கள் இன்னும் உன் நண்பர்களாக தொடரலாமா?
  • நாம் மது அருந்த வெளியே செல்லலாமா?

முதல் இரண்டு கேள்விகளுக்கு என்னுடைய பதில் 'ஆம்' என்பது. கடைசி கேள்விக்கான பதில், ஒரு பெரிய 'NO'. 

என் அம்மாவை பொருத்தவரை, என்னுடைய மகிழ்ச்சிதான் அவருக்கு முக்கியம். நான் இஸ்லாமை ஏற்றுக்கொண்டதை அவரிடம் கூறியபோது, 'அந்த மார்க்கத்திற்கா மாறினாய்?, நீ புத்தமதத்திற்கு மாறியிருப்பாய் என்றல்லவா நினைத்தேன்' என்று கூறினார். இப்போது புரிந்துக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றார். என்னுடைய மாற்றத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்.

மதுவை விட்டொழித்தது புது உற்சாகத்தை தந்திருக்கின்றது. உண்மையை சொல்லவேண்டுமென்றால், நான் இஸ்லாமை தழுவியதிலிருந்து மதுவை நினைத்துக்கூட பார்க்கவில்லை. I simply don’t want to.

மறுமணம் குறித்து சிந்திக்கும் மனநிலையில் இப்போது நான் இல்லை. என்னுடைய முந்தைய திருமணமுறிவிலிருந்து தற்போது மீண்டுக்கொண்டிருக்கின்றேன். விவாகரத்து நடந்துக்கொண்டிருக்கின்றது.

நேரம் வரும்போது நிச்சயம் மறுமணம் குறித்து யோசிப்பேன். நான் ஏற்றுக்கொண்ட மார்க்கதிற்கேற்ப, என்னுடைய கணவர் நிச்சயம் முஸ்லிமாகத்தான் இருக்கவேண்டும்.

என்னிடம் பலரும் கேட்கின்றார்கள், 'உங்கள் மகள்களும் முஸ்லிமாவார்களா?' என்று.

எனக்கு தெரியவில்லை. அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். ஒருவருடைய உள்ளத்தை நாம் மாற்ற முடியாது.

ஆனால், என்னுடைய மனமாற்றத்தை அவர்கள் எதிர்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், நான் இஸ்லாமை தேர்ந்தெடுத்ததை அவர்களிடம் சொன்னபோது அவர்கள் காட்டிய அணுகுமுறை என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

சமையலறையில் அமர்ந்துக் கொண்டு அவர்களை அழைத்தேன், 'Girls, உங்களிடம் ஒரு செய்தியை சொல்லவேண்டும்'.

சொல்ல ஆரம்பித்தேன். 'நான் இப்போது முஸ்லிம்'. 

இதனை கேட்டவுடன் ஒன்றாக கூடிக்கொண்டு அவர்களுக்குள்ளாக ஏதோ கிசுகிசுத்து கொண்டார்கள். சில நொடிகளுக்கு பிறகு, என் மகள்களில் மூத்தவளான அலெக்ஸ், 'நாங்கள் சில கேள்விகளை கேட்க விரும்புகின்றோம். இன்னும் சிறிது நேரத்தில் வருகின்றோம்'.  

ஒரு லிஸ்டை தயாரித்துக் கொண்டு திரும்பினார்கள். அலெக்ஸ் ஆரம்பித்தாள், 'இனியும் நீங்கள் மது அருந்துவீர்களா?'

என்னுடைய பதில்: 'இல்லை'. 

'இனியும் புகைபிடிப்பீர்களா?' 

புகைபிடிப்பது ஹராம் இல்லை (??). எனினும் அது உடம்புக்கு நல்லதல்ல. அதனால் என்னுடைய பதில், 'இல்லை'.   

அவர்களுடைய கடைசிக் கேள்வி என்னை பின்னுக்கு தள்ளியது. 

'தற்போது முஸ்லிமாகிவிட்டதாக கூறுகின்றீர்கள், இனியும் உடலின் மறைவான பாகங்கள் வெளியே தெரியுமாறு மேலாடை அணிவீர்களா?'

என்ன???????

இப்போதுதான் புரிய ஆரம்பித்தது. நான் உடையணியும்விதம் அவர்களை எந்த அளவிற்கு சங்கடத்தில் ஆழ்த்திருக்கின்றது என்று.  

'இப்போது நான் முஸ்லிம்' , தொடர்ந்தேன், 'இனியும் அப்படி உடையணிய மாட்டேன்'. 

'நாங்கள் இஸ்லாமை விரும்புகின்றோம்' என்று கூறி ஆரவாரம் செய்துவிட்டு விளையாட சென்றுவிட்டார்கள். 

நானும் சொல்லிக்கொண்டேன், 'நானும் இஸ்லாமை விரும்புகின்றேன்'."

சகோதரி லாரன் போன்றவர்களை தொடர்ந்து நம் சமூகத்திற்கு கொடுத்து, இஸ்லாம் குறித்த தவறான எண்ணங்களை களைய அல்லாஹ் போதுமானவன்.

டோனி பிளேர், தான் குர்ஆனை தினமும் படித்து வருவதாகவும், தான் இறைநம்பிக்கையில் நீடிக்க குர்ஆன் உதவுவதாகவும் கூறியுள்ளார். அவர் கூடிய விரைவில் நேர்வழி பெற இறைவன் உதவுவானாக...ஆமீன்.  

Please Note:
இந்த பதிவில் உள்ள மொழிபெயர்ப்பு முழுமையானதல்ல. முழுமையாக படிக்க கீழே உள்ள சுட்டிகளை பயன்படுத்தவும்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

Sr. Lauren Brown's Official Website:
1. http://www.laurenbooth.co.uk. link

References:
1. Lauren Booth explains why she feel in love with Islam - news.com.au. link
2. Lauren Booth’s Spiritual Journey to Islam - The American Muslim. link