Sunday 10 June 2012

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-19


 
 
* பன்னீர்ப் பூ இரவில் மலரும்.

* கார்த்திகைப் பூ என்றழைக்கப்படுவது காந்தள் மலர்.

* இரு குரங்கின் கை எனப்படுவது முசுமுசுக்கை.

* உலகின் மிகப் பழைய மரம் தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம். இதன் வயது 4,130 ஆண்டுகள்.

* உலகின் மிகப் பெரிய மரம் கலிபோர்னியாவில் ùஸகோயா பூங்காவில் உள்ள ஷெர்மன் மரம்.

*உலகிலேயே மிகப் பெரிய பள்ளிக் கூடம் நம் இந்தியாவில் தான் இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌவில் உள்ள சிட்டி மாண்டிசேரி பள்ளிதான் உலகிலேயே மிகப் பெரிய பள்ளி என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதில், சுமார் 22,612 மாணவர்கள் பயில்கின்றனர்.

*ஒட்டகத்துக்கு மூன்று இரைப்பைகள் உள்ளன.

* பெயர்கள் பற்றிய படிப்புக்கு ஓனோமாஸ்டிக் என்று பெயர்.

* இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் ராஜாஜி.

* தங்கம் அதிகளவில் வெட்டி எடுக்கப்படும் நாடு தென்னாப்ரிக்கா.

* உலகின் மிகப் பெரிய பாலைவனம் சகாரா பாலைவனம். 90 லட்சம் சதுர பரப்பளவு கொண்டது இந்தப் பாலைவனம்.

* சாதாரணமாக ஒரு பல்ப்பின் ஆயுள்காலம் 3,000 மணி நேரம் ஆகும்.

* சிலந்திப் பூச்சிகளில் குண்டு வீசும் வண்டு என்ற ஒரு வகை வண்டு உண்டு. இவ்வண்டுகளின் வயிற்று அடிப்பாகத்தில் சிறிய சுரப்பி உண்டு. இந்தச் சுரப்பியில் உள்ள ஒரு வகை திரவமும் வெடிக்கம் தன்மை கொண்டது. அதனால் இதற்கு இப்பெயர் வந்தது.

* டென்னிஸ் மட்டைகள் மகாகனி, சிக்மோர், பீச் ஆகிய மூன்றுவித மரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

* நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கணினி மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா ஆகும்.

* ஆஸ்ட்ரிச் என்னும் பறவை கல்லை தின்னும் தன்மை உடையது.

* உராங் உடான் என்ற குரங்கினத்தை "கானகத்தில் கிழவன்' என்று மலேசிய மக்கள் அழைக்கின்றனர்.

* ஒரே கவிஞர் இரு நாடுகளுக்குத் தேசிய கீதம் எழுதிய பெருமையைப் பெற்றவர் ரவீந்தரநாத் தாகூர். இவர் இந்தியா மற்றும் வங்கதேசத் தேசிய கீதங்களை எழுதியுள்ளார்.

* பத்திரிகைகளில் மலர், இதழ் என்று போடுகிறார்கள் எதற்கு தெரியுமா? மலர் என்றால் ஆண்டு என்றும், இதழ் என்றால் அந்த ஆண்டில் அது எத்தனையாவது இதழ் என்ற தகவலையும் தரும்.

* ரோஜா மலரின் வாசனை இதயத்துக்கு பலம் சேர்க்கும்.

* பாரி, ஆய் அண்டிரான், எழினி, நள்ளி, மலயன், பேகன், ஓரி ஆகியோர் கடையேழு வள்ளல்கள் ஆவர்.

* தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழாமல் இருப்பது போலவே, திருக்கோட்டியூர் மாதவன் கோயில் கோபுரத்தின் நிழலும் கீழே விழுவதில்லை.

* கவிச் சக்கரவர்த்தி கம்பரின் சமாதி இராமநாதபுரத்திலுள்ள நாட்டரசன் கோட்டையில் உள்ளது.

* சீதையின் தந்தை பெயர் ஜனகர். தாயின் பெயர் சுநயனீ.

* துப்பாக்கியை ஏமப்பூட்டு, துமிக்கி என்றும், பீரங்கியை குண்டு குழாய் என்றும், ரிவால்வரை சுழலி என்றும் அழகிய தமிழ்ப் பெயர்கள் சூட்டி அழைத்தவர் தேவநேயப் பாவாணர்.
Posted Image

மாமிசம் உண்ணும் தாவரம் இந்த பிட்சர் தாவரம். சிறு பூச்சிகளைப் பிடித்து தின்னும். இந்தத் தாவரம் ஆசியாவில் உள்ளது. பிட்சர் தாவரத்தின் இலைகள் ஜாடி போல் வளைந்து காணப்படும். இது மிகவும் இனிப்பான சாறு ஒன்றை சுரக்கும். இந்தச் சுவை மிகுந்த சாறை குடிக்கச் செல்லும் பூச்சிகள், இந்த ஜாடிக்குள் மாட்டிக் கொள்ளும். ஜாடியின் அடியில் ஜீரணம் செய்யும் அமிலங்கள் சுரக்கும். அங்கே அப்படியே இந்தப் பூவினால் விழுங்கப்பட்டு விடும் பூச்சிகள். அய்யோ பாவம்!

சுய தொழில்கள்-32 அட்டைப் பெட்டிகள் தொழில்

அட்டைப் பெட்டிகள் தொழில்

டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மருந்துப் பொருட்கள், ஜவுளிகள், கண்ணாடிப் பொருட்கள், பிஸ்கெட், சோப் என பல வகையான பொருட்களை பேக்கிங் செய்து பத்திரமாக எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படுபவை அட்டைப் பெட்டிகள். அட்டைப் பெட்டிகளை நமக்குத் தேவையான அளவில் உருவாக்கிக் கொள்வதோடு, அதை மறுசுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம் என்பதால் இதற்கிருக்கும் வர்த்தகப் பயன்பாடு மிக அதிகம்.

சந்தை வாய்ப்பு!

அட்டைப் பெட்டியின் பயன்பாடு ஆண்டுக்கு 10% வளர்ச்சி கண்டு வருகிறது. அதனால், புது யூனிட்கள் தொடங்குவதன் மூலம் இந்தத் தொழிலில் இருக்கும் தேவையை நன்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். மற்ற தொழிலில் இல்லாத ஒரு வசதி இதில் இருக்கிறது. அட்டைப் பெட்டிகளைத் தயாரித்து அதை நல்ல விலைக்கு விற்பது ஒருபுறமிருக்க, தயாரிப்பின் போது பெட்டிகள் கிழிந்து போனாலோ டேமேஜ் ஆனாலோகூட பதறாமல் அவற்றையும் விற்றுவிடமுடியும். இவற்றை வாங்குவதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள். அதற்கான டிமாண்டும் இருக்கிறது.

சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத இந்தத் தொழிலுக்கு இருக்கும் மரியாதை அதிகம்தான்.

உற்பத்தித் திறன்!

நாம் இங்கே பார்க்க இருப்பது ஆண்டுக்கு 400 டன் உற்பத்தித் திறனுக்கானது.

நிலம் மற்றும் கட்டடம்!

மொத்தமாக இந்த உற்பத்தித் திறனுக்கு 2,000 சதுர அடி இடம் தேவைப்படும். இதில் 1,500 சதுர அடியில் கட்டடம் இருக்க வேண்டும்.

மின்சாரம் மற்றும் தண்ணீர்!

நாள் ஒன்றுக்கு 500 லிட்டர் தண்ணீர் மற்றும் 50 ஹெச்.பி. மின்சாரம் தேவைப்படும்.

மூலப் பொருட்கள்!

அட்டைப் பெட்டி தயாரிக்க முக்கிய மூலப் பொருள் கிராப்ட் பேப்பர் எனப்படும் பேப்பர் ரோல். பேப்பர் ரோலின் அடர்த்திக்கு ஏற்றவாறு அட்டையின் தன்மை மாறும். 100 எம்.எம். முதல் 200 எம்.எம். வரையிலான பேப்பர் ரோல்கள் உள்ளன. இந்த அடர்த்தியைப் பொறுத்தே அட்டைப் பெட்டியின் கனமும், உழைப்பும் இருக்கும். இதன் விலை கிலோவுக்கு 22 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது.

இயந்திரம்!

மூலப் பொருட்கள் தொடங்கி, கடைசியாக அட்டைப் பெட்டி உருவாகும்வரை மொத்தம் ஆறு இயந்திரங்கள் தேவை. இவற்றின் விலை எட்டு லட்சம் ரூபாய் வரை ஆகும். இந்த ஆறு இயந்திரங்களும்

பஞ்சாப் மாநிலத்தில் கிடைக்கிறது. பிற மாநிலங்களில் தயாராகும் இயந்திரங்கள் தரத்தில் சிறந்ததாக இருப்பதில்லை. ஜப்பானில் இருந்து இறக்குமதி ஆகும் ஒரே ஒரு ஆட்டோமேட்டிக் இயந்திரம், இந்த ஆறு இயந்திரங்களின் வேலையைச் செய்துவிடும். ஆனால், இதன் விலை ஒரு கோடி ரூபாய். அதிகளவில் உற்பத்தி செய்ய வேண்டுமெனில், இந்த இயந்திரத்தை வாங்கலாம்.

தயாரிப்பு முறை!

1. கார்கேஷன்: இந்த மெஷினில்தான் அட்டைப் பெட்டி செய்வதற்கான முதல் படி தொடங்கு கிறது. பேப்பர் வடிவிலான ஷீட் இந்த கார்கேஷன் மெஷினைக் கொண்டு ஸ்பிரிங் வடிவில் மடிக்கப் படுகிறது. இந்த வேலையைச் செய்ய குறைந்தது இரண்டு ஆட்கள் தேவை.

2. பேப்பர் கட்டிங் மெஷின்: இந்த மெஷின் மூலம் பெட்டியின் அளவுக்கு ஏற்ப பேப்பரை வெட்டிக் கொள்ளலாம். இந்த வேலையைச் செய்ய குறைந்தது இரண்டு ஆட்கள் தேவை.

3. பேஸ்ட் மெஷின்: இந்த மெஷினில் ஸ்பிரிங் போன்ற வடிவிலான பேப்பரை நடுவில் வைத்து, அதன் இரு பக்கங்களிலும் பேஸ்ட் தடவி பேப்பர் ஒட்டப்படுகிறது. இப்படி செய்யப்படும் அட்டையானது மூன்று அடுக்குகளைக் கொண்டி ருக்கும். இந்த அடுக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அட்டைப் பெட்டியின் தரம் கூடும். இப்படி ஒன்பது அடுக்கு வரை போடப்படுகிறது. இந்த வேலையைச் செய்ய குறைந்தது இரண்டிலிருந்து மூன்று ஆட்கள் வரை தேவை.

4. ரோட்டரி மெஷின்: தயாராகும் அட்டையை பெட்டிக்கேற்ப கட் செய்வது மற்றும் பெட்டி செய்ய ஏதுவாக ஓரங்களை மடக்க பயன்படும் மடிப்புகளைச் செய்து தருவது ஆகியவை இந்த மெஷினின் வேலை. இந்த வேலையைச் செய்ய குறைந்தது இரண்டு ஆட்கள் தேவை.

5. ஸ்லாட்டிங் மெஷின்: மடிக்கப்பட்ட அட்டைகளில் பின் அடிப்பதற்கு தகுந்தவாறு ஆக்குவது. இந்த வேலையைச் செய்ய குறைந்தது ஒரு ஆள் போதும்.

6. டிச்சிங் மெஷின்: இந்த மெஷினின் வேலை, தயாரித்த பெட்டியின் நான்கு பக்கத்தினையும் மடக்கி பின் அடிப்பது. இந்த வேலையைச் செய்ய இரண்டு ஆட்கள் தேவை.

இந்த அட்டைப் பெட்டி தயாரிக்க ஒருநாளில் சுமார் 12 பேர்கள் தேவைப்படுவார்கள். ஒரு ஷிப்ட்டில் பெரிய பெட்டி எனில் ஐந்நூறும் சின்ன பெட்டி என்றால் ஆயிரமும் தயார் செய்யலாம்.

பிளஸ்

அதிக பயன்பாடு இருக்கும் தொழில் என்பதால், தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைகிறது.

மைனஸ்

மூலப் பொருளான பேப்பர் ரோலின் விலை ஏற்ற இறக்கம் காண்பது.

பேக்கிங் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த அட்டைப் பெட்டி தயாரிப்பு தொழிலுக்கு எக்காலத்திலும் டிமாண்ட் இருக்கும் என்பதால் புதிதாக தொழில் துவங்க விரும்புபவர்கள் தாராளமாக இதில் இறங்கலாம்.

நான் இந்தத் தொழிலைத் தொடங்கி 12 வருஷம் ஆகிறது. இந்தத் தொழிலை பொறுத்தவரை, முதலீடுதான் முக்கியம். நான் இந்தத் தொழிலுக்கு வந்தபோது என்னிடம் குறைந்த அளவு முதலீடே இருந்தது. அப்புறம் வங்கியில் கடன் வாங்கித்தான் தொழில் தொடங்கினேன். இப்போது நன்றாகத் தொழில் வளர்ந்திருக்கிறது. பலரும் இந்தத் தொழிலுக்கு வந்திருப்பதால் பலமான போட்டி இருக்கவே செய்கிறது. இந்தத் தொழிலைப் பொறுத்தவரை பெட்டியின் தரம்தான் வாடிக்கையாளர்கள் சாய்ஸ். வாடிக்கையாளர்கள் என்ன அளவு மற்றும் தடிமனில் பெட்டி செய்து தரச் சொல்கிறார்களோ, அதனை சரியாகச் செய்து தர வேண்டும். தற்போது விற்பனையில் 20 சதவிகிதம் லாபம் கிடைக்கிறது. பெட்டியின் தரம் உயர்ந்து, விலை சற்று குறைவாக இருந்தால் உங்களைவிட்டு வாடிக்கையாளர்கள் எங்கும் போக மாட்டார்கள்.
Thnxs:Company Name: PREMIUM INTERNATIONAL
Street Address: 65, PAVALIAN STREET
City: SIVAKASI
Province/State: Tamil Nadu  
Country/Region: India  
Zip: 626123
Telephone: 91-4562-277375
Mobile Phone: 09842927732
Fax: 91-4562-277357
 

கால்சியம் கார்பைடும் பழவியாபாரமும்



ருமை நண்பர்களே !!!
கால்ஷியம் கார்பைடு கற்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?,!!!அது ஏற்படுத்தும் சுகாதார சீர்கேட்டை,நோய்களைப் பற்றி அறிவீர்களா?!!! இன்றைய சமூகத்தில் பேராசை பிடித்த வியாபாரிகளின் பணம் சம்பாதிக்கும் வெறிக்கு அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருவது கண்கூடாயிருக்கிறது, நம் நாட்டில் தான் படிக்காதவர்கள் கூட கேடுவிளைவிக்கும் ரசாயனங்களையும், கனிமங்களையும் கையாள்வது வாடிக்கையாகியுள்ளது. நம் நாட்டில் தான் மனித உயிர்களுக்கு மதிப்பே இல்லாத நிலை நிலவிவருகிறது. இது அவசர யுகம், எல்லாவற்றிற்குமே அவசரம் தான்,விதைப்பதற்கும் அவசரம், விளைச்சலுக்கும் அவசரம், அறுவடைக்கும் அவசரம், அதை பழுக்க வைப்பதற்கும் அவசரம், இதன் பின்னால் இருப்பது அருவருக்கத்தக்க பணம் சம்பாதிக்கும் வெறியன்றி வேறில்லை.இன்றைய ஏனைய பழ வியாபாரிகள் ஈசி மனி செய்ய நாடுவது கால்சியம் கார்பைட் கற்களைத்தான்.

ழவியாபாரிகளது மண்டிகள் அல்லது கிடங்குகளில் வாழை, பலா,பப்பாளி, கொய்யா,சீதாப்பழம்,மாங்காய்களை குவியல் குவியலாக கொட்டி வைத்து , அந்த குவியலுக்குள்ளே சின்னத் துளையிட்ட பாலித்தீன் பைகளில் இந்த கால்சியம் கார்பைடு கற்களைப் போட்டு வைத்து விடுவார்கள் . கால்சியம் கார்பைடில் ஆர்சனிக் , பாஸ்பரஸ் இரண்டும் கலந்திருக்கும் . இது மிகவும் நச்சுத் தன்மை உடையது . இதிலிருந்து வெளிவருகிற அசெட்டிலின் வாயு காய்களின் மீது பரவி , பழுத்தது போன்ற தோற்றத்தை உண்டாக்கும் . ஆனால் , உண்மையில் உள்ளூக்குள் பழுத்திருக்காது . நூறு கிலோ காய்களைப் பழுக்க வைக்க நாற்பது கிராம் கால்சியம் கார்பைடு கல்லே போதுமானது என்றால் எவ்வளவு பெரிய கொடிய நச்சுவை நாம் இது வரை உட்கொண்டிருக்கிறோம் என விளங்கும். . In the ripening of fruit, calcium carbide is used as source of acetylene gas, which is a ripening agent. (similar to ethylene which has the IUPAC name of ethene and the chemical formula of C2H4)[ஆதாரம்-விக்கிபீடியா]

செயற்கையாக பழுக்க வைத்த பழங்களை ஒருவர் பார்த்தவுடன் கண்டறிய முடியாது என்பதால், அதை வாங்கும் பொதுமக்களாகிய நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு ருசித்து பார்த்து பழுத்ததற்கேற்ற இனிப்பு இருந்தால் மட்டுமே வீட்டு உபயோகத்துக்கு வாங்கலாம், அல்லது வீட்டில் நேரடியாக விளைவதை வாங்கி சாப்பிடலாம். தமிழகம் முழுக்கவே சில வருடங்களாக கால்சியம் கார்பைட் கற்களை பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைத்த வாழைப்பழம், மாம்பழங்களையும் கொய்யா,பப்பாளி திராட்சைகளையும் கூட பரவலாக விறபனை செய்து வருவது கண்கூடு, திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது!!!,அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது!!!.ஆனால் நடவடிக்கைகள் தான் கடுமையாக இல்லை என்பேன், வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்கத்தக்கது,இதில் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.ஏழைகளின் பழம் என்றும் சொல்லுவர்,ஆனால் இதைக்கூட சதிகாரர்கள் கார்பைட் கற்கள் கொண்டே பழுக்க வைக்கின்றனர்.

ப்பழத்தை உண்போருக்கு வயிற்றுப்போக்கு, பேதி, கேன்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இயற்கையானவற்றை விட "மினுமினுப்பு' கூடி, நன்கு பழுத்த பழம் போல, மக்களை கவரும் இந்த பழங்கள் மிக விஷமானவை. பழங்களின் தோலில் சுருக்கம் இருந்தால் அது இயற்கையான பழம் என வாடிக்கையாளர்கள் நினைக்கின்றனர். அது முழுவதும் சரியானதல்ல. இயற்கையான மாம்பழம் தோல் சுருக்கம் இல்லாமலும் உள்ளன. அதேபோல செயற்கையான மாம்பழங்களின் தோலில் கறுப்பு புள்ளிகள் இருக்கும் என கூறப்படுகிறது. அதுவும் தவறானதே. ஏனெனில் நோய் தாக்குதலாலோ, மாங்காய்களின் பால் படுவதாலோ கூட கறுப்பு புள்ளிகள் தோன்ற வாய்ப்புள்ளன. எனவே செயற்கையாக பழுத்த பழங்களை கண்டு பிடிப்பது கடினமான காரியம்.

கால்சியம் கார்பைடு வெளியிடும் அசெட்டிலின் வாயுவை சுவாசித்தாலே உடல் நலம் பாதிக்கும் . இதனால் முதுமைத் தோற்றம் , இதய நோய் , புற்று நோய் கூட வரலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் . வெல்டிங் செய்ய உபயோகிக்கும் கால்சியம் கார்பைடு , தடை செய்யப்பட்ட ரசாயனம் .ஆனாலும் மனசாட்சியே இல்லாத சில ரசாயன வியாபாரிகள் கள்ளச்சந்தையில் இது போன்ற பழவியாபாரிகளுக்கு கால்சியம் கார்பைடை சப்ளை செய்கின்றனர்.இவர்களை ஜாமீனில் வெளிவரமுடியாத கடுமையான சட்டங்களில் சிறையினால் தள்ளினாலே ஒழிய ,இது தொடந்து கொண்டுதான் இருக்கும்,இது போல சில பணத்தாசை பிடித்த வியாபாரிகளால் சமூகத்தில் இருக்கும் சில நல்ல வியாபாரிகளுக்கும் கெட்ட பெயர்.நீங்கள் எந்த பழ வியாபாரியிடமாவது இதுபோல கார்பைட் கற்களால் பழுக்கச்செய்யப்பட்ட பழங்கள் வாங்கி ஏமாந்திருந்தால் உடனே சுகாதாரத்துறை ஆய்வாளருக்கு 1913 என்னும் எண்ணில் புகார் தெரிவிக்கவும். சுட்டியை அழுத்தி மேல்விபரங்கள் பெறலாம்
கால்சியம் கார்பைட் கற்களின் படம்[விக்கீபீடியா]
கால்சியம் கார்பைடின் ரசாயன குணங்கள்:-
Hazards
NFPA 704
NFPA 704.svg
3
3
2
W
Health (Blue)
3 Short exposure could cause serious temporary or moderate residual injury (e.g., chlorine gas)
Flammability (Red)
3 Liquids and solids that can be ignited under almost all ambient temperature conditions (e.g., gasoline). Liquids having a Flash point below 23°C (73°F) and having a Boiling point at or above 38°C (100°F) or having a Flash point between 23°C (73°F) and 38°C (100°F)
Instability/Reactivity (Yellow)
Undergoes violent chemical change at elevated temperatures and pressures, reacts violently with water, or may form explosive mixtures with water (e.g., phosphorus, potassium, sodium)
Special (White)
W Reacts with water in an unusual or dangerous manner (e.g., cesium, sodium, sulfuric acid)
நன்றி விக்கீபீடியா.

சுய தொழில்கள்-31 சீட் கவர் தயாரிப்பு

 
கலக்கல் லாபம் தரும் இரு சக்கர வாகன சீட் கவர் தயாரிப்பு


ஜெ.மாதவி : வாகனங்களின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகனங்களின் சீட் கவர் தயாரித்து நேரடியாகவோ கடைகளுக்கோ விற்றால் லாபம் சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை டவுன்ஹாலை சேர்ந்த அப்துல் ரசாக். அவர் கூறியதாவது : வாகனங்களின் சீட் கவர் தயாரிக்கும் கடையில் 15 ஆண்டாக வேலை பார்த்தேன். சம்பளம் குடும்ப தேவைக்கு போதவில்லை. கடந்த 5 ஆண்டுக்கு முன்பு சொந்தமாக சீட் கவர் தயாரிக்கும் கடை துவங்கினேன். இத்தொழிலில் பலர் இருந்தாலும் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை பெருகி வருவதால், வாகனங்களில் சீட் கவர் மாற்றும் தேவை நிரந்தரமாக உள்ளது. இதனால் தொடங்கியது முதலே தொழில் சீராக நடந்து கொண்டிருக்கிறது. இருசக்கர வாகனங்கள் பிராண்ட்களுக்கேற்ப சீட்கள் ஒன்றுக்கொன்று சிறிய அளவில் மாற்றம் இருக்கும். பல்வேறு இரு சக்கர வாகன சீட்களின் மாதிரிகளை நாம் வைத்திருந்தால் உடனடியாக தயாரித்துவிடலாம்.

சீட் கவரில் வாடிக்கையாளர்கள் டிசைன்கள், எழுத்துகளை வடிவமைக்க விரும்புகின்றனர். டிசைன் வேலைப்பாட்டுக்கேற்ப கூலி கிடைக்கும். குறிப்பாக கல்லூரி மாணவர்கள் சீட் கவரில் டிசைன்களை விரும்புகிறார்கள். பெண்கள் டிசைன் இல்லாத சீட் கவர்களை விரும்புகின்றனர். சீட் கவர் தயாரிக்க பெரிய அளவில் பயிற்சிகள் தேவை இல்லை. ஓரளவு தையல் தெரிந்தவர்களாக இருந்தால் போதும். இருசக்கர வாகன சீட் கவர் தயாரிப்பில் போதிய அனுபவம் இருந்தால் 4 சக்கர வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களுக்கு சீட் கவர் செய்து கொடுக்கலாம். நல்ல வருவாய் கிடைக்கும்.
இத்தொழிலை பெண்கள் வீட்டிலேயே செய்ய முடியும். மொத்த சீட் விற்பனை கடைகளில் ஆர்டர் எடுத்து செய்யலாம் அல்லது வெட்டி கொடுக்கும் பாகங்களை கொண்டு தைத்து கொடுக்கலாம். மழை, வெயிலில் நிறுத்தப்படுவதால், சீட் கவர்கள் அடிக்கடி கிழிந்து விடுகிறது. ஒரு சீட் கவர் 9 மாதம் வரை உழைக்கும். இதனால் நிரந்தர வேலை வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அப்துல் ரசாக் கூறினார்.

தயாரிக்கும் முறை

இரு சக்கர வாகனத்துக்குரிய சீட்டின் மாதிரி வடிவத்தை வைத்து, சீட்டின் மேல், இடது மற்றும் வலது புற பாகங்களை ரோசிலின் சீட்டில் வெட்டி எடுத்து கொள்ள வேண்டும். அவற்றை பார்டர் டேப் அல்லது பீடிங் வயரால் இணைத்து தைக்க வேண் டும். அதை ஸ்பாஞ்ச் மீது வைத்து இடது, வலது புறங்கள் வழியாக கீழ் புறம் வரை கவரை இறுக்க மாக கொண்டு வர வேண் டும். இப்போது ரோசிலின் சீட்டை ஸ்பாஞ்ச் மீது கன் சூட்டரால் அமுக்கினால் சீட் கவர் தயார்.

டிசைன் சீட் கவர் தயாரிக்க, டிசைன் இடம்பெறும் பகுதிகளுக்கு புள்ளி ரெக்சின் சீட் அல்லது சிம்பொனி சீட்டை தேவையான வண்ணங்களில், டை மூலம் வெட்டி கொள்ள வேண்டும். அதற்கு வடிவமைப்பு இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும். வெட்டிய டிசைன்களை ஏற்கனவே தயாரித்த சீட்டில் இணைத்து தைக்க வேண்டும். (சீட் கவர் பொருத்துவதற்கு முன்பு, இரு சக்கர வாகனத்தில் இருந்து பழைய சீட்டை டூல் கிட் மூலம் கழற்ற வேண்டும். அதில் ஸ்பாஞ்சின் மீதுள்ள கவரை அகற்ற வேண்டும்.)


முதலீடு: டிசைன் வடிவமைப்பு இயந்திரம் ரூ.1.25 லட்சம், மின் தையல் இயந்திரம் ரூ.13 ஆயிரம், கம்ப்ரசருடன் இணைந்த கன் சூட்டர் ரூ.16 ஆயிரம், டூல் கிட் ரூ.2 ஆயிரம், பல்வேறு டிசைன் டை ரூ.15 ஆயிரம், சீட் கவர் மாதிரிகள் ரூ.4 ஆயிரம், கத்திரி 2 ரூ.1000, 10க்கு 16 அடி அளவுள்ள அறை அட்வான்ஸ் ரூ.15 ஆயிரம், ஒரு டேபிள் ரூ.4 ஆயிரம், ரேக் ரூ.4 ஆயிரம் என ரூ.2 லட்சம் தேவை.

உற்பத்தி பொருட்கள்: ரோசிலின் சீட், புள்ளி ரெக்சின் சீட், சிம்பொனி சீட், ஸ்பாஞ்ச், பீடிங் வயர், கருப்பு நிற நூல், பின்.

கிடைக்கும் இடங்கள்: டிசைன் வடிவமைப்பு இயந்திரம், கன்சூட்டர் ஆகியவை சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் கிடைக்கிறது. மற்ற முதலீட்டு பொருள்கள் ஹார்டுவேர்ஸ் கடைகளில் கிடைக்கும். உற்பத்தி பொருட்கள் பிரத்யேக ரெக்சின் கடைகளில் கிடைக்கிறது.

உற்பத்தி செலவு (மாதத்துக்கு): ஒரு நாளில் 8 மணி நேரத்தில் 5 சீட் கவர்கள் வீதம் மாதம் 25 நாளில் 125 சீட் கவர் தயாரிக்கலாம். இதற்கு உற்பத்தி செலவு ரூ.14 ஆயிரம், கடை வாடகை ரூ.2 ஆயிரம், மின் கட்டணம் ரூ.400, உழைப்பு கூலி ரூ.6 ஆயிரம், இதர செலவுகள் ரூ.2 ஆயிரம் என ரூ.22,400 செலவாகும். ஒரு சீட் சராசரி உற்பத்தி செலவு ரூ.180 ஆகிறது.

லாபம் (மாதத்துக்கு): ஒரு சாதாரண சீட் கவர் ரூ.250, டிசைன் சீட் கவர் ரூ.350க்கு விற்கப்படுகிறது. 75 சாதாரண சீட் கவர் விற்பதன் மூலம் ரூ.18,750, 50 டிசைன் கவர் விற்பதன் மூலம் ரூ.17,500 என மொத்த வருவாய் ரூ.36,250. இதில் செலவு போக லாபம் ரூ.13,850.

சந்தை வாய்ப்பு

இரு சக்கர வாகன விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில வாகன விற்பனை நிலையங்களில் மட்டுமே சீட் தயாரித்து விற்கின்றனர். அதிலும் பிளெய்னாக உள்ள சீட்கள் மட்டும் கிடைக்கிறது. தாங்கள் விரும்பும் நிறம் மற்றும் டிசைன் உள்ள சீட் கவரை பெற வெளியில் உள்ள கடைகளையே நாடுவதால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கிறார்கள். சீட் கவர்கள் சேதமடைந்தால் அவற்றை மாற்றவும் பழைய வாடிக்கையாளர்கள் வருகின்றனர். இரு சக்கர வாகன விற்பனை நிலையங்கள் மற்றும் சீட் கவர் மொத்த விற்பனை நிலையங்களுக்கும் ரெடிமேடு சீட் கவர்களை சப்ளை செய்யலாம். நல்ல கிராக்கி உள்ளது

Remedies for minor ailments-part 5



Mouth Ulcers
• Mix some coconut milk with honey and massage the gums 3 to 4 times a day.
• Gargle with (or apply) freshly extracted coconut milk from a ripe coconut frequently.
• Mix the pulp of a ripe bel fruit with jaggery (gur) and eat once a day.
• Mix 1 tea cup bel pulp with 1 teaspoon sugar and eat early morning on an empty stomach for 3 days.
• Coriander (dhania) decoction prepared by boiling 1 teaspoon coriander seeds (saboot dhania) in 1 cup water, gargled when lukewarm, frequently.
• Chew one or two tender leaves of fig (anjeer) and leaf buds frequently and wash the mouth with warm water.

• Soak 1 tablespoon crushed liquorice (mulathi) root in 2 cups water for 2 to 3 hours and use it for gargling frequently.
• Boil 2 tablespoon fenugreek (methi) leaves along with ½ cup green gram (moong dal) and 10 small onions. Eat regularly.
• Fenugreek seeds (methi dana) fried and powdered should be added to drinking water. Drink 2-3 times daily for a few days.
• An infusion of fenugreek (methi) leaves gargled 5-6 times daily for a couple of days.
Morning Sickness
• Mix 1 teaspoon each fresh juice of mint (pudina) and lime along with 1 tablespoon honey. Take 3 times a day.
• Mix juice of 15-20 tender curry leaves (curry patta) with 2 teaspoon lime juice and 1 teaspoon sugar. Take in the morning.
• Mix 1/8 teaspoon nutmeg (jaiphal) powder with 1 tablespoon freshly extracted amla juice. Take 3 times a day.
• ½ teaspoon ginger (adrak) juice with 1 teaspoon each fresh lime and mint (pudina) juice mixed with a tablespoon of honey, taken frequently proves very effective.
Menstrual Pains

• Boil 1 teaspoon saffron (kesar) in ½ cup water. Let it reduce to become 1 tablespoon. Divide this decoction into three portions and take with equal quantities of water, thrice daily for a couple of days.
• Take ½ teaspoon finely ground cinnamon (dalchini) every night along with 1 cup milk.
• Powder 1 teaspoon dried mint (pudina) leaves and take with 1 teaspoon honey, thrice daily.
• Make a mixture of 6 to 8 almonds, crushed and mixed in 1 cup milk along with 1 egg yolk (white), ½ teaspoon sesame powder (til) and 1 teaspoon honey. Take this once or twice a day.
• Menstruation, excessive bleeding

• Grind some bel leaves into a fine paste. Take 1 teaspoon with warm water and drink some cold water as well.
• Grind 10 fresh lead buds of figs (anjeer) and apply on the lower abdomen below the navel for a few hours. Repeat this frequently.
• Boil 1 teaspoon coriander (dhania) seeds in 2 cups water till it is reduced to 1 cup. Add sugar to taste and drink when lukewarm. Repeat twice or thrice a day.

Menstruation, painful and irregular
• A piece of fresh ginger (adrak), ground and boiled in a cup of water. The infusion should be taken thrice daily after meals along with sugar.
Warning: The reader of this article should exercise all precautionary measures while following instructions on the home remedies from this article. Avoid using any of these products if you are allergic to it. The responsibility lies with the reader and not with the site or the writer.This information is solely for informational purposes. IT IS NOT INTENDED TO PROVIDE MEDICAL ADVICE and should not be treated as a substitute for the medical advice of your own doctor.
Web sources

15 Interesting Facts About The Internet


agroni112 is offline  
 

நாசா விஞ்ஞானிகளை வியக்க வைத்த ஜெயஸ்ரீ



 
நிலவின் மீது அப்படியொரு காதல், ஜெயஸ்ரீ ஸ்ரீதருக்கு. நிலவில் தண்ணீர் இருக்கிறது என்று, சந்திரயான் கண்டுபிடித்தது, மிக முக் கியமான கண்டுபிடிப்பு. நிலவில் குடியேறும் மனிதனின்
 
கனவுக் கும், லட்சியத்துக்கும் இது ஊக்கமளிக்கும் விஷயம். “கவலைப் படாதீங்க, இன்னு ம் ஒரு நாற் பது வருசத்தில நாம, “ஜாம் ஜாம் ‘ன்னு நில வில வசிப்போம்…’ என்று சிரிக்கிறார், ஜெயஸ்ரீ.
சென்னை இந்துஸ்தான் தொ ழில்நுட்ப கல்லூரியில், விண் வெளிப் பொறியியல் (ஏரோ ஸ்பேஸ் என்ஜினியரிங்) இர ண்டாமாண்டு பயிலும் ஜெயஸ்ரீ, நில வு, விண்வெளி பற்றி, பல திட்டப்பணிகளை மேற்கொண்டவர். அமெரிக்காவின், “நாசா’ விஞ்ஞானிகளையே வியக்க வைத்தவர்.
இந்தியாவில், இத்துறையில் ஆர்வம் காட்டும் முதல் பெண் என்று ஜெயஸ்ரீயை சொல்லலாம். “இந்திய மூன் சொசைட்டி’யின் இளம் வயது தலைவராக இருக்கிறார். ஆனால், அடுத்த  வீட்டுப் பெண் ணைப் போல, அலட்டல் இல்லாத தோ ற்றம் காட்டும் ஜெயஸ்ரீ, வெகு இயல்பா கப் பேசுகிறார்.
விண்வெளியை நோக்கிய இவரது பய ணம் தொடங்கியது எப்போது? அவரே சொல்கிறார்: சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில், 7-ம் வகுப்பு படித்தபோது. பள்ளியில் நடைபெற்ற, கிரகங்களின் அமைப்பு குறித்த முகா மில், என், “அசைன்மென் டு’க்கு முதல் பரிசு கிடைத்தது. அதுதான் விண்வெளி குறித்து, எனக்குள் ஆர்வத்தை விதைத் தது. தொடர்ந்து, விண்வெளி தொடர் பான ஞானத்தை வளர்த்துக் கொண்டதால், சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும், பல பரிசுகளைப் பெற்றேன்; நாசா விஞ்ஞானி களின் பாராட்டையும் பெற்றேன்.
இதுவரை, நாசாவுக்கு மூன்று முறை சென்றிருக்கிறேன். “நாசா’ வின் “லூனார் அண்ட் பிளானட்ரி இன்ஸ்டிட்யூட்’, சர்வதேச ஆய்வு க் கட்டுரை ப் போட்டி ஒன்றை நடத்தியது. அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டபோது, நான் 12-ம் வகுப்பு மாணவி. ஒருவித துணிச்சலில் நான் அனுப்பிய கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டு, உதவித் தொகையுடன், அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டேன். இந்தி
யா வில் இருந்து சென்ற ஒரே நபர், மிக இளவயது நபர் நான் தான். நான்காவது முறையாக விரைவில், “நாசா’ செல்லவி ருக்கிறேன்.
“ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங்’ படிப்பு முடிந்ததும், அதிலேயே முதுநிலைப் படிப்பைப் படிக்க வும், ஆராய்ச்சி மேற்கொள்ள வும் அமெரிக்கா போகலாம் என்று திட்டம். நிலவில் மனிதர்கள் வாழ் வதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவது, அங்குள்ள பொருட்களைக் கொண்டே இருப்பிடங் களை அமைப்பது, மின்சார உற்பத்தி செய்வது, நிலவுக்கும், பூமிக் கும் இடையில் தெளிவான, “கம்யூனி கேஷன்
 
அமைப்பை’ உரு வாக்குவது போன்றவை, என் ஆய்வின் அம்சங்கள். என் ஆய்வுக் குத் தேவையான அடிப்படை வசதிகளும், நிபுணத்துவ உதவி களும், “நாசா’வில் கிடைக்கும்.
“நாசா’வில், விண்வெளி வீராங் கனை கல்பனா சாவ்லாவை உ ரு வாக்கிய விஞ்ஞானி, டாக்டர் ஏஞ்சல் அபுட் மாட்ரிட், “நீ தான் அடுத்த கல்பனா சாவ்லா’ என்று கூறி, பாராட்டி, கல்பனா பயன் படுத்திய, “பேட்ஜை’ எனக்கு பரி சாகக் கொடுத்தார்.
விண்வெளி தவிர்த்த என்னுடைய பிற ஆர்வங்கள் என்றவென்றா ல், இசை, நடனம், டென்னிஸ், க்விஸ் என்று பல ஆர்வங்கள் உண் டு. ஆனால், அதற்கெல்லாம் ஒதுக்குவதற்குத் தற்போது, நேரம்தா ன் இல்லை! என்று சந்தோஷமாய் அலுத்துக் கொண்டார் ஜெயஸ்ரீ.
நிலவு போன்ற மாதிரி அமைப்பை இந்தியாவில் நிறுவி, அது தொடர்பான ஆய்வுக்கு உதவ வேண்டும் என்பது ஜெயஸ்ரீயின் எண்ணம். தன் ஆய்வுப் பணிகளுடன், அதற்கான முனைப்பான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார், இந்த விண்வெளி ராணி!

காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க



சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காளான், பேல் பூரி, பானி பூரி விற்கும் தள்ளுவண்டிக் கடைகள் சாலையோரங்களில் ஆயிரக்கணக்கில் முளைத்திருக்கின்றன. ஒரு பிளேட் ரூ. 10 என்பதால் மாலை நேரத்தில் இக்கடைகளில் வாடிக்கையாளர் கூட்டம் மொய்க்கிறது. மாணவர்கள், தொழிலாளர்கள் என பல தரப்பினரும் தினமும் விரும்பி காளான் உட்கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

சிலர், மனைவி, குழந்தைகளுடன் கூட கடைகளின் முன் நின்று ருசிக்கின்றனர். அவற்றை உண்பதால் ஆரோக்கியத்துக்கு கேடு ஏற்படும் என்பதை பற்றி, பலரும் அறியாதவர்களாகவே உள்ளனர். பெரும்பாலான கடைகளில் ‘காளான்’ என்ற பெயரில் விற்கப்படும் ‘அயிட்டம்‘ காளான் இல்லை என்பதே உண்மை. முட்டைக்கோஸ், மைதாமாவுடன் உப்பு சேர்த்து பிசைந்து எண்ணையில் வடை போல பொறித்து வைத்துக்கொள்கின்றனர்.

பின்னர் சிவப்பு நிறமேற்றுவதற்காக ஜிலேபிபவுடர், காரத்துக்கு மிளகாய்த் தூளை தண்ணீரில் கரைத்து, வாணலியில் ஊற்றி, அவற்றுடன் ஏற்கனவே பொறித்த முட்டைக்கோஸ் மைதாமாவு கலவை ‘வடை‘களை போட்டு வேக வைத்து வாடிக்கையாளருக்கு பிளேட்டில் பரிமாறுகின்றனர். இவற்றில் காரமும், உப்பும் அதிகம் சேர்த்திருப்பதால் சுவை கூடி நாவை சுண்டியிழுக்கிறது; இதுவே, காளான் என்ற பெயரில் விற்கப்படுகிறது.

இதையறியாத பலரும் ‘காளான்‘ சுவையை மனதில் நினைத்தபடி, போலி காளான் ‘அயிட்டத்தை‘ விரும்பி சுவைக்கின்றனர். இவ்வகையான காரம், ஜிலேபி பவுடர், அதிக உப்பு கலந்த முட்டைக்கோஸ், மைதாமாவு கலவை தீனியை தொடர்ச்சியாக தினமும் வாங்கி உட்கொள்வது, உடல் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும் என்கின்றனர் சுகாதாரத் துறையினர்.

மேலும், ஒருமுறை உணவை வேகவைக்க பயன்படுத்திய எண்ணையை மீண்டும், மீண்டும் பயன்படுத்துவதால் அவற்றில் நச்சுதன்மை கலந்து, ஆரோக்கியத்துக்கு ஆபத்தை விளைவிக்கிறது. எனினும், வாடிக்கையாளர் மத்தியில் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால், தள்ளு வண்டிக்காரர்களின் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.

உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் இதுபோன்ற போலி ‘காளான்‘ விற்பனை தள்ளுவண்டிக் கடைகள் மற்றும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட இட்லி, தோசை விற்கும் தள்ளுவண்டி கடைகள், சிறு ஒட்டல்களை சுகாதாரத்துறையினர் கண்டுகொள்வதில்லை. இந்த துறையின் அலட்சிய போக்கு, மக்களின் ஆரோக்கியம் மற்றும் பொதுசுகாதாரத்தின் மீது அக்கறை காட்டாததையே காட்டுகிறது.

மாரடைப்பு ஆபத்து

அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது : சுகாதாரமற்ற, அதிக காரத்தன்மையுள்ள உணவுப்பண்டங்களை தவிர்ப்பது நல்லது. வயிற்று வலி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிறு, குடல் சம்பந்தப்பட்ட உபாதைகளுக்காக சிகிச்சை பெற வருவோரிடம், அவர்களது அன்றாட உணவு முறைகள் குறித்து விசாரிப்பது வழக்கம். அப்போது, பலரும் சாலையோரத்தில் விற்கப்படும் அதிக காரத்தன்மையுடைய ‘காளான்’ ‘பானிபூரி’ ‘பேல் பூரி’யை தினமும் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.

இது போன்ற, உடல்நலத்துக்கு எதிரான உணவு வகைகளை தவிர்த்தால், ஆரோக்கியம் மேம்பாடும். இல்லாவிடில் அல்சர், ஜீரணக்கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படும். மாசலா, ஜிலேபி பவுடர் போன்றவற்றை அதிகம் பயன்படுத்தி சமைக்கப்படும் உணவை தொடர்ச்சியாக உட்கொள்வோருக்கு, ‘கேன்சர்‘ பாதிக்கக்கூடிய வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.

ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை மீண்டும், மீண்டும் கொதிநிலைக்கு கொண்டு சென்று அதில் உணவுப்பொருட்களை வேக வைக்கும் போது, ‘ஹைட்ரோ கார்பன்‘ அளவு அதிகமாகிறது. இதில், சமைக்கப்படும் உணவை தொடர்ச்சியாக உட்கொள்வோருக்கு கொழுப்புச் சத்து கூடி ரத்தக்குழாய் அடைப்பு, மாரடைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இவ்வாறு எச்சரிக்கின்றனர்

 நன்றி: தினகரன்

Amazing Medical Facts of the Body


361. The wax present inside the ear is made up of oil and sweat.
362. The female body is capable of giving birth to 35 children in one lifetime.
363. The spinal cord, which controls over 10 billion nerve cells, is less than two feet in length and its diameter is same as that of the index finger.
364. In the middle of the day, our eyesight will be sharper.
365. A newborn baby has more than 26 billion cells.
366. Sneezing clears dirt from the nose.
367. Inner ear is the main organ of balance.
368. Yawning brings more oxygen to the lungs.
369. Coughing clears mucous secretion from the throat.
370. Human speech is produced by the interaction of 72 muscles.
371. A New born baby loses about half of its nerve cells before it is born.
372. A neglected child brain can be substantially smaller than that of a healthy child.
373. On an average, the number of connections in the brain increases from 50 trillion to 1 quadrillion in a newborn during his first month of life.
374. On an average it takes about 13 days for a grey hair to grow.
375. Healthy human hair emits sound.
376. The human brain stores memories of fear.
377. The nerve cells present in the nose, allows us to smell and regenerates through out ones life.
378. Reading aloud to children helps to stimulate brain development.
379. A hair grows by 0.3 to 0.5 mm per day, 1 to 1.5 cm per month and 12 to 15 cm per year.
380. Children lose an average of 90 hairs per day, which increases to 120 by old age.

Thursday 7 June 2012

சுய தொழில்கள்-30 கிரிஸ்டல் நகை தயாரிப்பு




கிரிஸ்டல் நகை தயாரிப்பு


‘சமீப காலமாக செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், தங்க நகை அணிந்து செல்லவே பெண்கள் அஞ்சுகின்றனர். மேலும் ஜெட் வேகத்தில் தங்கம் விலை உயர்வதால் நடுத்தர குடும்பத்து பெண்கள் தங்க நகைகளை நினைத்து கூட பார்க்க முடிவதில்லை. கிரிஸ்டல் நகைகள் விலை குறைவு. அதேவேளையில் பார்ப்பதற்கு ஆடம்பரமாக காட்சியளிக்கும். பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் கிரிஸ்டல் நகைகளை அணியவே விரும்புகின்றனர். பெண்கள் வீட்டில் இருந்தபடி செய்ய ஏற்ற தொழில் கிரிஸ்டல் நகை தயாரிப்பு. இதில் நல்ல லாபமும் சம்பாதிக்கலாம்’ என்கிறார்கள் கோவை மாவட்டம் சோமனூரை சேர்ந்த செல்வி, ரம்யஜோதி. அவர்கள் கூறியதாவது: தையல் பயிற்சி நிலையத்தில் எங்களுக்கு ஒருவர் கிரிஸ்டல் நகை தயாரிப்பு குறித்து இவருடன் சேர்ந்து பயிற்சி அளித்தார். பின்னர் இருவரும் சேர்ந்து கிரிஸ்டல் நகை தயாரிப்பை ரூ.5 ஆயிரம் முதலீட்டில் துவக்கினோம். கோவைக்கு வாரம் ஒருநாள் சென்று, உற்பத்தி பொருட்களை வாங்குவோம். வீட்டு வேலை இல்லாத நேரங்களில் இருவரும் சேர்ந்தோ, தனியாகவோ நகைகளை கோர்ப்போம். இதனால் உற்பத்தி அதிகரித்தது.

ஆரம்பத்தில் பொழுதுபோக்குக்காக செய்யத் தொடங்கிய நாங்கள், தயாரித்த நகைகளை அக்கம்பக்கத்தில் உள்ள பெண்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு விற்றோம். இதில் நல்ல லாபம் கிடைத்தது. வீட்டில் உள்ளவர்கள் ஊக்குவித்தனர். அதிகளவில் உற்பத்தி செய்து அருகில் உள்ள கல்லூரி மாணவிகளுக்கு விற்று விற்பனையை அதிகப்படுத்தினோம். பள்ளி மாணவிகளையும் எங்கள் கிரிஸ்டல் நகை கவர்ந்தது. விலை மிகவும் குறைவாக இருப்பதோடு விரும்பிய மாடலில் கிடைப்பதால், பல பெண்கள் ஆர்வத்தோடு வாங்குகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவிகள் அவரவர் உடைக்கேற்ப மேட்சிங்காக அணிய, பல்வேறு வண்ணங்களில் கிரிஸ்டல் நகைகளுக்கு ஆர்டர் கொடுக்கின்றனர். நாங்கள் கலைநயத்தோடு செய்கிறோம். எங்கள் நகைகளை பார்ப்பவர்கள் உடனே தொடர்பு கொண்டு ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர். அதன் மூலம் உற்பத்தி படிப்படியாக உயர்ந்து வருகிறது. விலை குறைவோடு தரமாகவும் தயாரிப்பதால், எதிர்பார்த்ததை விட வரவேற்பு அதிகமாக உள்ளது. ஒளியை பிரதிபலித்து மின்னுவதால் லைட் கலர் கிரிஸ்டல் நகைகளை இளம்பெண்கள் விரும்பி வாங்குகின்றனர். பெரியவர்கள் அடர் வண்ண கிரிஸ்டல் நகைகளை விரும்புகின்றனர். பொறுமையும், அழகுணர்ச்சியும் உள்ளவர்கள் புதுப்புது டிசைன்களில் கிரிஸ்டல் நகையை உருவாக்கலாம். இதன் மூலம் எளிதில் வாடிக்கையாளர்களை பெருக்க முடியும். பெண்கள் வீட்டில் இருந்தபடியே செய்ய ஏற்ற தொழில் இது. பெரியளவில் பயிற்சி எதுவும் தேவையில்லை.


உற்பத்தி செலவு (ஒரு நாளைக்கு): ஒரு நபர் ஒரு நாளில் 8 மணி நேரத்தில் சிறிய அளவு கிரிஸ்டல் நகை 50 தயாரிக்கலாம். நடுத்தர அளவு என்றால் 15, பெரிய அளவு என்றால் 20 தயாரிக்க முடியும். சிறிய அளவு நகைக்கு ரூ.90 முதல் ரூ.110 வரை செலவாகும். நடுத்த அளவுக்கு ரூ.150 முதல் ரூ.160 வரையும், பெரிய அளவுக்கு ரூ.200ம் செலவாகும். சிறிய அளவிலான 50 கிரிஸ்டல் நகை கள் தயாரிக்க உற்பத்தி செலவு ரூ.5,500. நடுத்தர அளவு 15 நகை தயாரிக்க ரூ.2,600, பெரிய அளவு 20 நகை தயாரிக்க ரூ.4,000 தேவைப்படும். அனை த்து வகைகளையும் கலந்து தயாரிக்க சராசரியாக ரூ.5 ஆயிரம் போதும்.

வருவாய் (ஒரு நாளைக்கு): ஒரு நாள் உற்பத்தியாகும் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான கிரிஸ்டல் நகைகளை குறைந்தபட்சம் 30 சதவீதம் கூடுதல் விலை வைத்து விற்க முடியும். இதன் மூலம் ஒரு நாள் வருவாய் ரூ.6,500 இதில் லாபம் ரூ.1,500. இதை உழைப்பு கூலியாகவும் எடுத்து கொள்ளலாம். கூட்டாக சேர்ந்து தயாரித்தால் லாபம் இரு மடங்காக அதிகரிக்கும். ஒரு நாள் தயாரித்ததை விற்ற பின், அதில் கிடைக்கும் வருவாயை கொண்டு அடுத்த உற்பத்தியை தொடங்கலாம். இது வீட்டில் இருந்தவாறு தொழில் செய்பவர்களுக்கு பொருந்தும். விற்பனை அளவுக்குகேற்ப உற்பத்தியை அதிகரித்தால், வருவாய் கூடும்.

சந்தை வாய்ப்பு: சேலை மட்டுமல்லாமல் சுடிதார், சல்வார் உள்ளிட்ட நவீன ஆடைகளுக்கு ஏற்றபடி அணிய கிரிஸ்டல் நகைகள் தயாரிக்கலாம். இவற்றை இளம்பெண்கள் விரும்பி வாங்குவார்கள். குறைந்தபட்சம் ரூ.150 முதல் அதிகபட்சம் ரூ.300க்குள் கிடைக்கிறது. நீண்ட நாட்களுக்கு பொலிவு குன்றாமல் காட்சியளிக்கும். கலைநயத்தோடு இருப்பதால் வயதானவர்களும் விரும்பி வாங்குவார்கள். தோழிகளுக்கு பரிசளிக்கவும் பெண்கள் இவற்றை விரும்பி வாங்குகின்றனர். கிரிஸ்டல் செயின் மட்டுமல்லாமல், கிரிஸ்டல் தோடு, கிரிஸ்டல் கொலுசு ஆகியவற்றையும் எளிதில் தயாரிக்கலாம். தனிப்பட்ட முறையில் விற்பது மட்டுமல்லாமல் பேன்சி ஸ்டோர்கள், கவரிங் கடைகளுக்கும் சப்ளை செய்யலாம்.


தயாரிப்பது எப்படி?

கிரிஸ்டல் நகை தயாரிப்பு என்பது தங்க, வெள்ளி நகைகளை போல் உருக்கி, தட்டி செய்வதல்ல. ரெடிமேடாக உள்ள பல வண்ண கிரிஸ்டல் மற்றும் இணைப்பு பொருட்களான சக்கரியா, பால் ஆகியவற்றை சேர்த்து கோர்ப்பதுதான். சிறுமிகள், இளம்பெண்கள், வயதானவர்கள் அணிவதற்கேற்ப குறைந்த நீளம் (ஒரு அடி), நடுத்தர நீளம் (ஒன்றரை அடி), அதிக நீளம் (2 அடி) ஆகிய அளவுகளில் கிரிஸ்டல் நகைகள் தயாரிக்கப்படுகின்றன. முதலில் கிரிஸ்டல் வயர் கம்பியை கட் டரை கொண்டு தேவையான அளவுகளில் வெட்டி கொள்ள வேண்டும். 2 பேர் கூட்டாக செய்தால், முதலில் டாலரை கோர்த்து நடுவில் தொங்கவிட்டு, இரு முனைகளில் ஒரு பால், ஒரு சக்கரியா, ஒரு கிரிஸ்டல் கல் ஆகியவற்றை வரிசைப்படி கோர்க்க வேண்டும். அதே பாணியில் தொடர்ந்து கோர்த்து வர வேண்டும். இவ்வாறு இருபுறமும் கோர்த்து முடிக்கும் இடத்தில் கியர் லாக்கை கோர்த்து கட்டிங் பிளேயர் மூலம் முடிச்சு போட வேண்டும். இங்கு ஊக்கு, காந்தம் அல்லது ஸ்க்ரூ பொருத்தினால் கிரிஸ்டல் நகை ரெடி.

தேவையான பொருட்கள்: இளம் மற்றும் அடர்த்தியான பல வண்ண கிரிஸ்டல் சிறியது முதல் பெரியது வரையில் 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 ஆகிய எண்களில் கிடைக்கும். எண் 2 கிரிஸ்டல் 90 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் ரூ.65. எண் 4 ரூ.75, எண் 6 ரூ.95, எண் 8 முதல் 18 வரை ரூ.100. சக்கரியா 100 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் ரூ.52, கோல்டு பால் 100 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் ரூ.19. கியர் வயர், கோல்டு மற்றும் சில்வர் வண்ணங்களில் கிடைக்கும். 100 மீட்டர் கொண்ட ஒரு ரோல் ரூ.65. கியர் லாக் 100 எண்ணிக்கையுள்ள ஒரு பாக்கெட் ரூ.52. ஊக்கு ஒரு செட் ரூ.7, காந்த ஊக்கு ஒன்று ரூ.10, ஸ்க்ரூ செட் ரூ.7 முதல் ரூ.10. கட்டர், பிளேயர் ஆகியவை தலா ரூ.100. நகரங்களில் உள்ள பேன்சி ஸ்டோர்களில் இந்த பொருட்கள் கிடைக்கின்றன.

கிரிஸ்டல் கொலுசு..
தரமான வெள்ளிக்கொலுசு வாங்க குறைந்தது ரூ.2 ஆயிரம் தேவைப்படுகிறது. மார்டன் பெண்களுக்கு பாரம்பரிய வெள்ளி கொலுசுகளில் மனம் அவ்வளவாய் லயிப்பதில்லை. குறைந்த விலையில், புதுப்புது டிசைன்களில், கலர்கலராய் கொலுசுகள் கிடைத்தால் சும்மா விடுவார்களா? வாங்கி குவித்து விடுவார்கள். விலை குறைவாக, அதே நேரத்தில் டிரஸ்சுக்கு மேட்ச்சாக கலர்கலராய் கிடைப்பதால் கிரிஸ்டல் கொலுசுகளுக்கு இளம்பெண்கள் மத்தியில் நல்ல கிராக்கி இருக்கிறது.

கிரிஸ்டல் கற்களால் அலங்கரித்து, ரூ.400 விலையில் வெள்ளிக்கொலுசு தயாரித்து அசத்துகிறார், திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த சாந்தி. பிருந்தா ஜுவல் ஒர்க்ஸ் மற்றும் மெருகுக்கடை நடத்தி வரும் அவர் கூறியதாவது:

நகைத்தொழில் செய்து வரும் பாரம்பரிய நடுத்தர குடும்பம் எங்களுடையது. பெரிய நிறுவன நகைக்கடைகளால், குடிசைத் தொழிலாக இருந்து வந்த நகைத்தொழில் நலிந்ததால் எங்கள் குடும்பத்தில் வறுமை தலை தூக்கியது. இதனால் கணவர் நகைக்கடை வேலைக்கு சென்றார். நான் நகைகளுக்கு பாலிஷ் போடுவது, கொலுசு தயாரிப்பது போன்றவற்றை கற்றுக்கொண்டேன். அதுதான் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
வெள்ளி விலை உயர்ந்து கொண்டே செல்வதால், கொலுசு எடை, தரத்தை குறைக்காமல் குறைந்த விலையில் கொலுசு விற்றால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று நினைத்தேன்.

கொலுசு விலையைக் குறைக்க அதில் சேர்க்கப்படும் வெள்ளியைக் குறைக்க வேண்டும். சராசரியாக 20 கிராமுக்கு குறையாமல் வெள்ளிக் கொலுசு தயாரிக்கும் நிலையில் அதை 2 கிராம், 3 கிராம் வெள்ளியில் சரம், சரமாக பல வண்ணங்களில் டிசைன்களில் கிரிஸ்டல் கற்களை இணைத்து தயாரித்தேன். நான் தயாரித்த கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசுகளை பள்ளி, கல்லூரி மாணவிகள் விரும்பி வாங்கினர். ¢400க்கு கிடைப்பதால் பலரும் வாங்கிச் செல்கிறார்கள். இதன் மூலம் கிடைத்த லாபத்தில் எனது குடும்பமே தலைநிமிர்ந்து நிற்கிறது.

தொழிலை விரிவுபடுத்த சில ஆண்டுகளுக்கு முன்பு நேசக்கரங்கள் தன்னார்வ நிறுவன வழிகாட்டுதலின் பேரில் பிருந்தாவனம் மகளிர் சுய உதவிக்குழுவை உருவாக்கி தலைவியானேன். இத்தொழிலே தெரியாத பெண்களுக்கு கிரிஸ்டல் கொலுசு தயாரிப்பதை ஒரு வாரத்தில் கற்றுக் கொடுத்தேன். இன்று குழுவாக சேர்ந்து கிரிஸ்டல் கொலுசு தயாரித்து லாபம் பார்க்கிறோம்.


முதலீடும் லாபமும்

ஒரு கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசு தயாரிக்க 3 கிராம் வெள்ளி ரூ.150, 20 கிரிஸ்டல் கற்களுக்கு ரூ.100, உருக்க, கம்பியாக்க, கப் செய்ய கூலி ரூ.20, செய்கூலி ரூ.50 என அதிகபட்சமாக ரூ.320 ஆகும். இதை கிரிஸ்டல் கற்களின் விலைக்கேற்ப ரூ.300க்குள்ளும் தயாரிக்க முடியும். ரூ.400க்கு குறையாமல் விலை போகும். ஒரு கொலுசுக்கு லாபமாக ரூ.100 நிச்சயம். ஒருவர் ஒரு நாளைக்கு 5 கொலுசுக்கு குறையாமல் தயாரிக்க முடியும். மாதம் ரூ.15 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். உறவினர்கள், நண்பர்கள், சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள், பள்ளி, கல்லூரி பெண்களை நேரடி வாடிக்கையாளர்களாகக் கொண்டால் குழுவாகச் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பெண்கள் படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசுகளை கண்காட்சியாக வைத்து வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினால் வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். இது தவிர குறைந்த லாபத்தில் நகைக் கடைகளில் மொத்தமாக விற்கலாம்.

கற்றுக் கொள்வது எப்படி ?

மாவட்ட நிர்வாகத்தின் மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழிகாட்டும் தொண்டு நிறுவனங்கள், இத்தொழிலை மேற்கொண்டுள்ள குழுக்கள், குடிசைத்தொழிலாக செய்து வரும் நகைத்தொழிலாளர்களை அணுகினால், ஒரு வாரத்தில் கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசு தயாரிப்பதை கற்றுக் கொள்ளலாம்.

தங்க முலாம் பூச்சு


வீட்டில் 5க்கு 5 அடி இடம் இருந்தால் போதும். சின்ன நகைப்பட்டறை போல் வீட்டளவில் ஒரு மண் தொட்டி, அதில் உமி, கரித்துண்டுகள் போட்டு, நெருப்பு ஊதி, சின்ன மண் செப்புகளில் தங்கத்தை வெள்ளியை உருக்க வேண்டும். பேசினில் 3 டம்ளர் தண்ணீரில் பொட்டாசியம் சயனைடு, அவல் அரக்கு, ரோசனம் ஆகியவற்றை தலா 5 கிராம் கலந்து, அதில் உருக்கிய தங்கம் அல்லது வெள்ளியை ஊற்றி, அதில் முலாம் பூச வேண்டிய ஆபரணத்திற்கு தங்கம், வெள்ளி கோட்டிங் அளவை சேர்க்க, ரேடியேட்டர் மீட்டர் மூலம் இணைத்து பழைய கவரிங், தங்க, வெள்ளி நகைகளுக்கு முலாம் பூசலாம். ஒரு மக்கில் வைக்கப்பட்டுள்ள காஸ்டிக் சோடாவில் ஆபரணத்தை முக்கி எடுத்தால் புதிது போல ஆகிவிடும். ஒரு பேசின், குட்டி கம்ப்ரசர் மோட்டார் வைத்து சுழலும் பிரஷ்சில் நகையைக் கழுவினாலும் புதுசாகும். இதை பாலிஷ் போடுவது, மெருகு போடுவது என்பார்கள். தங்க முலாம் பூசுவது, மெருகு போடுவது கூடுதல் வருமானம் தரும்.


தயாரிக்கும் முறை

வெள்ளியை வாங்கி, அதன் திடத்தன்மைக்கு செம்பு சேர்த்து உருக்க வேண்டும். உருக்கி கொடுக்கவும், அதை மெல்லிய கம்பியாக்கவும், கிரிஸ்டலில் பொருத்தக்கூடிய சின்ன கப்களை தயாரிக்கவும் ஜாப் ஒர்க் கடைகள் உள்ளன. அங்கு செய்து வாங்கிக் கொள்ளலாம். நூலில் பாசி கோர்ப்பதுபோல், வெள்ளிக் கம்பியில் கிரிஸ்டல் கற்கள் கோர்ப்பதுதான் கிரிஸ்டல் வெள்ளிக்கொலுசின் பார்முலா. கிரிஸ்டல் கற்களை துளை போட்டு, அதன் வழியாக வெள்ளிக் கம்பியை நுழைத்து, கிரிஸ்டல் கற்களின் இருபுறமும் குடையைப் போன்ற சிறு கப்களை ஒட்டவைத்து, குடை வழியாக வெளிவரும் கம்பியை வளையமாக்கி, அந்த வளையத்துக்குள் மற்றொரு வளையத்தைப் பொருத்த வேண்டும். கப், கிரிஸ்டல் என்று தொடர்ந்து சரமாக்குவது தான் கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசு. இதைச் செய்ய நகைத்தொழில் தெரிய வேண்டியதில்லை. சிறிய ‘சவனம்Õ (கட்டிங் பிளேயர்), இருந்தால் போதும். கைவேலையில் கொலுசு தயாராகி விடும். நகைக்கடைகளில் அன்றைய விலை நிலவரப்படி வெள்ளியை வாங்கலாம். கிரிஸ்டல் கற்கள் நகைத் தொழிலுக்குரிய பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும்.

டிரஸ்சுக்கு மேட்ச்சா கொலுசு

கிரிஸ்டல் கொலுசுகள் கலர்கலராய் கிடைப்பதால், உடுத்தும் சுடிதார், சேலையின் நிறத்திற்கு மேட்சிங்காக அணிய முடியும். கருக்காத வெள்ளியில் பளீரென மின்னும் வண்ண கிரிஸ்டல் கற்கள் கொலுசுக்கு அழகையும், காலுக்கு கவர்ச்சியையும் கொடுக்கிறது. விலையும் குறைவு. பேஷனாக உள்ளதால் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. சில பெண்கள் இதை கையில் பிரேஸ்லெட்டாக கட்டி புது பேஷனை உருவாக்கி வருகிறார்கள்.
இணையத்திலிருந்து...



சுய தொழில்கள்-29
பிழைப்புக்கு வழி சொன்ன பிளாஸ்டிக் பூக்கள்!













காலேஜ் படிப்பு படிச்சவங்களே வேலைக்கு அலையற இந்தக் காலத்துல, பத்தாவது படிச்ச நமக்கெல்லாம் என்ன பொழப்பு கிடைக்கப் போகுதுனு திக்குத் தெரியாம இருந்தவதான் நானும். இப்போ... இந்த பிளாஸ்டிக் பூ மாலை பிஸினஸால மாசம் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கற வெற்றிகரமான தொழில் முனைவோர் ஆகியிருக்கேன்ங்கிறது, ஆச்சர்யம்... ஆனாலும், உண்மை!

கண்களைப் பறிக்கும் அழகழகான வண்ண பிளாஸ்டிக் பூ மாலைகளைக் கோத்தபடியே நம்மிடம் பேசும் சென்னை, பழவந்தாங்கல், சங்கீதாவுக்கு முகமெல்லாம் பெருமிதம்! பொதுவிதிப்படி, கஷ்டங்கள்தான் சங்கீதாவின் தொழில் முயற்சிகளுக்கும் தூண்டுகோல்.
''எங்கப்பா ஆட்டோ டிரைவர். ரெண்டு பொண்ணு, ஒரு பையன்னு மூணு புள்ளைங்க எங்க வீட்டுல. நான் சின்ன வயசுல நல்லா படிப்பேன், துறுதுறுனு இருப்பேன். ஆனா, குடும்ப வறுமைக்கு நடுவுல என் திறமை எல்லாம் புதைஞ்சு போச்சு. பத்தாவதோட படிப்பும் நின்னு போச்சு. திடீர்னு அப்பா இறந்துட, நாங்க அநாதரவாயிட்டோம். துக்கத்துக்கு வந்திருந்தவங்க எல்லாம், 'மூணு புள்ளைங்கள எப்படிக் கரையேத்தப் போறே?’னு அம்மாவை கேட்க... அவங்க பயந்தே போனாங்க. ஆனாலும், தைரியத்தை இழக்காம... கூலிவேலை செய்து குடும்பத்தைக் காப்பாத்தின அம்மா, மூத்த பொண்ணான எனக்கு 18 வயசுலயே கல்யாணத்தை முடிச்சு... ஒரு கடமையை நிறைவேத்திட்ட நிம்மதியை அடைஞ்சாங்க.
என் கணவர், பெயின்ட்டிங் கான்ட்ராக்டரா இருந்தாரு. ஒரு பொண்ணு, ஒரு பையன்னு ரெண்டு குழந்தைகள் பிறந்தாங்க. வறுமையும் வாழ்க்கையுமா நாட்கள் ஓடிட்டு இருந்துச்சு. 'பிறந்த வீடு, புகுந்த வீடுனு கஷ்டங்களோட போராடியே வாழ்றது பழகிடுச்சு நமக்கு. ஆனா, நம்ம குழந்தைகளும் அந்தப் போராட்டத்தைத் தொடரணுமா?'னு எனக்கு ரொம்ப வேதனையா இருக்கும். 'நாலு பேரை போல நல்லா வந்துட மாட்டோமா?'னு மனசு கெடந்து தவிக்கும். அப்படி வழி தெரியாம உழன்றுட்டு இருந்தப்போதான் என் அம்மாவே எனக்கு திசைகாட்டி ஆனாங்க!''
- தன் வாழ்க்கையில் நிகழ்ந்த அந்த திருப்பத்தைத் தொடர்ந்தார் சங்கீதா...
''எங்கம்மா உறுப்பினரா இருந்த மகளிர் சுயஉதவிக் குழுவுல பிளாஸ்டிக் பூ மாலை செய்றதுக்கான ஒரு நாள் பயிற்சி கொடுத்தாங்களாம். அதைக் கத்துக்கிட்டு வந்த அம்மா, 'எனக்கு இதைத் தொழிலா செய்ற வயசும், ஆர்வமும் இல்லை. ஆனா, உனக்குதான் கை வேலைப் பாடுகள்ல எல்லாம் ஆர்வம் அதிகமாச்சே! நீ இந்த பிளாஸ்டிக் பூமாலையைச் செய்யக் கத்துக்கிட்டா... நிச்சயமா கையில நாலு காசு பார்க்கலாம்’னு அதைச் சொல்லிக் கொடுத்தாங்க. ரெண்டு நாள்லயே லாகவமா கத்துக்கிட்டதோட, அதுல என்னோட கற்பனைத் திறனையும் கலந்து, விதவிதமான மாலைகள் செய்ய ஆரம்பிச்சேன்'' என்ற சங்கீதா, இந்தத் தொழிலின் அடிப்படைகளைப் பகிர்ந்தார்.

''மாலை செய்றதுக்கான பிளாஸ்டிக் பூக்களை... ஃபேன்ஸி ஸ்டோர், பிளாஸ்டிக் பொருட்களுக்கான ஹோல்சேல் கடைகள்னு பல இடத்துலயும் வாங்கலாம். ஒரு கிலோ பிளாஸ்டிக் பூவை, அதன் தரம் மற்றும் டிசைனைப் பொறுத்து, 60 ரூபாயிலிருந்து 350 ரூபாய் வரையிலான விலையில் வாங்கலாம். அதுல 25 சின்ன மாலைகள் அல்லது 10 பெரிய மாலைகள் செஞ்சுடலாம். ஒரு மாலை செய்ய குறைந்தபட்சம் அரை மணி நேரம் ஆகும். சின்ன மாலை ஒண்ணு 100 ரூபாயில இருந்து 500 ரூபாய் வரைக்கும் விலை போகும். அதுவே நிலைக் கதவு, வரவேற்பறைனு தொங்க விடுற பெரிய மாலைனா 2,000 - 2,500 ரூபாய் வரைக்கும் விற்கலாம். இப்போ... லாபத்தை உங்களால கணக்குப் போட முடியுதா?
இதுக்கான மார்க்கெட்டிங்கும் சுலபமானதுதான். தெரு முக்கு ஃபேன்ஸி ஸ்டோர்கள்ல இருந்து... பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் வரை ஆர்டர் வாங்கலாம். ஹோட்டல்கள், ஆபீஸ்கள், திருமண மண்டபங்கள்னு பெரிய கட்டடங்கள் திறப்பு விழாவில் இருந்து கிரகப்பிரவேசங்கள் வரை களத்துல இறங்கியும் ஆர்டர் வாங்கலாம். நவராத்திரி, தீபாவளி, பொங்கல்னு விசேஷ தினங்களுக்கு முக்கியமான இடங்கள்ல நாமளே நேரடியா ஸ்டால் போடலாம். வாடிக்கையாளர்கள் வட்டம் விரிஞ்சதும்... சொந்தமா கடையேகூட திறக்கலாம்'' என்ற சங்கீதா, இதில் தன் அனுபவத்தைத் தொடர்ந்தார்.
''இந்தத் தொழிலை ஆரம்பிச் சப்போ என் குழந்தைக்கு எட்டு மாசம். பச்சைப் புள்ளையப் பார்த்துக் கிற சிரமங்களோடயும் இந்தத் தொழில்ல முதல் மாசமே 5,000 ரூபாய் லாபம் பார்த்தேன். அடுத் தடுத்த மாதங்கள்லேயும் தொழிலை உற்சாகத் தோடும், உத்வேகத்தோடும் தொடர்ந்தேன். என் பேச்சுத் திறமையால வாடிக்கையாளர்கள் வட்டம் சீக்கிரமே விரிஞ்சது. தொழிலை ஆரம்பிச்ச நாலு வருஷத்துல இப்போ மாசம் 20 ஆயிரம் ரூபாய் லாபம் பார்க்கிற இந்தத் தொழிலுக்கு முதலாளி ஆகியிருக்கேன். என் மாமியார் இந்தத் தொழில்ல எனக்கு உதவியா இருக்காங்க. வீட்டுக்கு வாடகைகூட கொடுக்க முடியாம எத்தனையோ முறை புழுங்கித் தவிச்ச நான், இன்னிக்கு சொந்த வீட்டுக்கு வந்தாச்சு. என் கணவர் இப்போ ரியல் எஸ்டேட் பிஸினஸ் பார்த்துட்டு இருக்கார். என் குழந்தைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையைக் கொடுத்திருக்கேன். ஒரு துயரமான நிலையில இருந்து வந்த நானே வாழ்க்கையில ஜெயிச்சுருக்கும்போது, மத்த எல்லாருக்கும் இது சாதாரணம்தானே?!''

இந்தியாவின் பெருமை' ஜாதவ் பயேங் !!




Inline image 1
யார் இந்த மாமனிதர் ?!

'இந்தியாவின் பெருமை' ஜாதவ் பயேங் !!

உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!!

கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...!

யார் இவர் ?

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்...ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார் .
1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை...!

மண்ணை வளப்படுத்த புது யுக்தி - எறும்பு

200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்...ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து 'சிவப்பு எறும்பு'களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். இந்த எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் மனம் தளராமல் இருந்துள்ளார். இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை என்கிறார்...வெகு விரையில் மண் பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்...இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள் !!
இப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.
2008 ஆம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என் வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இது வென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.
குடும்பம்
மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்க்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்து கொள்கிறார்.
டீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். "இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் " என்கிறார் இந்த தன்னலமற்ற மாமனிதர் !!
இவரது தன்னலமற்ற பணி இப்படி இருக்க தற்போது காட்டை பற்றி அறிந்த அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் உரிமை கொண்டாடவும், பாதுகாக்க பட்ட இயற்கை பகுதியாக அறிவிக்கவும் வரிசையில் காத்து இருக்கிறார்கள்.
மரங்கள் மட்டும் அல்ல

தேக்கு , அகில், சந்தனம், கருங்காலி,ஆச்சா போன்ற மரங்களும், 300௦௦ ஹெக்டேர் பரப்பளவில் மூங்கில் காடுகளும் இருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன...!! 100 யானைகளுக்கு மேற்பட்டவை 6 மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கின்றன. பறவைகள் விலங்குகளின் சொர்க்கபுரி தான் இந்த 'முலாய் காடுகள்' !!
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருக்கிறது...இரு ஆண்டுகளுக்கு முன் மிக 'பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட்' இந்த காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச் சென்றுள்ளார். 'ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அதிசயம்' என வியந்திருக்கிறார்.
இப்படி பட்ட ஒரு மனிதர் வெளிநாடுகளில் இருந்தால் இதற்குள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தங்கள் நாட்டின் பெருமை என ஒரு பட்டமே கொடுத்து கௌரவித்து இருப்பார்கள்...ஆனால் இங்கோ பத்திரிகைகளில் கூட அவ்வளவாக செய்தி வெளியிட படவில்லை...இவரது புகைப்படத்தை மிகுந்த தேடுதலுக்கு பின் தற்போதுதான் கூகுளில் பார்க்கவே முடிந்தது.

மரம் நடுவதையே ஒரு விழா அளவுக்கு பெரிது படுத்தி புகைபடத்திற்கு முகத்தை காட்டி பெருமைப்பட்டு கொள்ளும் சராசரி மனிதர் போல் அல்ல முலாய். எதையும் எதிர்பார்க்காமல் இந்த மண்ணிற்கு தான் செய்யும் கடமை என சாதாரணமாக கூறும் அவரை அறிந்துகொண்ட பிறகாவது நம் கடமை தனை உணர்ந்து நாம் வாழும் சமூகத்திற்கு நமது சிறிய பங்களிப்பை கொடுப்போம்.

உலக வெப்பமயமாதல் என அச்சப்பட்டு கொண்டு மட்டும் இருக்காமல் செயலிலும் இறங்க வேண்டிய தருணம் இது. ஒரு தனிமனிதரால் ஒரு காட்டையே உருவாக முடிகிறது என்றால் நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு ஒரு மரமாவது ஏன் நட்டு வளர்க்க கூடாது. நகரங்களில் இருப்பவர்கள் இயன்றவரை மொட்டை மாடியில் தோட்டம் போட்டும், தொட்டிகளில் செடிகளை வளர்த்தும் குளிர்ச்சியாக வைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொள்ளலாம்...சிறிது முயன்றுதான் பாருங்களேன்...!!
'மனிதருள் மாணிக்கம்' இவர்...! இவரது செயல் பலருக்கும் தெரியவேண்டும். மத்திய மாநில அரசுகள் இவருக்கு விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும்...என்பதே இங்கே எனது வேண்டுகோள்.

இவரை அறிவதன் மூலம் எல்லோருக்கும் சுற்றுச்சூழலின் மீதான ஒரு கவனமும், மரங்களை வளர்ப்பதன் மேல் ஒரு ஆர்வமும் வரக்கூடும்...நண்பர்கள் விரும்பினால் தங்கள் தளங்களில் இவரை பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்...

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-15




*முதன் முதலில் மின்சாரம் தாக்கி இறந்தவர் யார் தெரியுமா?... அமெரிக்காவின் டபிள்யூ. ரிச்மேன் ஆவார். பெஞ்சமின் பிராங்கிளின் 1749-ம் ஆண்டு மின்னலுக்கு மின்சக்தி உண்டு என்ற உண்மையை உலகிற்கு கண்டறிந்து சொன்ன போது அதை உண் மையா, பொய்யா என நிரூபிக்கிறேன் என தைரியமாகக் கூறிய ரிச்மேன் பரிசோதனையில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி உயிரை இழந்தார்.

***

*தென் அமெரிக்க கண்டத்தில் கான்டோர் என்னும் ராட்சத பருந்து காணப்படுகிறது. இதை தென் அமெரிக்க நாடுகளில் வசிக்கும் ஸ்பானிஷ்காரர்கள் தெய்வமாகக் கருதுகிறார்கள். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜுலைமாதம் 29-ந்தேதி கான்டோர் தினம் என்னும் நாளையும் கடைப் பிடிக்கிறார்கள். அன்று இந்த பருந்தை எருதின் முதுகில் கட்டி விடுவார்கள். பருந்து தன்னை விடுவித்துக் கொள்ள எருதைக் குத்திக் குத்திக் காயமாக்கும். முடிவில் எருது இறந்து போகும். எருது சொர்க்கத்திற்குப் போகும் என எண்ணி விழாவை நடத்துவோர் மகிழ்ச்சி அடைவார்கள்.

இப்படி எருதைக் கொல்வதற்கு மிருகவதை சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்ததையொட்டி இப்போது இந்தப் போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

***

*அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள அல்டமெண்ட் கணவாய் பகுதியில் நூற்றுக்கணக்கான காற் றாலைகள் உள்ளன. இதன் மூலம் உற்பத்தியாகும் மின் சாரத்தின் மூலம் கலிபோர்னியா மாகாணத்தின் தேவையில் 10 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டு விடுகிறது.

இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் உலக காற்று சக்தி மின்சாரத்தில் 85 சதவீதத்தை கலிபோர்னியா மாகாணம் பயன்படுத்திக் கொள்கிறது.

***

*மிக வேகமாக ஓடக் கூடிய குதிரையையும் மிஞ்சி சாதனை படைத்து உலக சாதனை புத்தகமான கின்னசிலும் இடம் பிடித்திருக்கிறார், ஆப்பிரிக்கா கண்டத்தைச் சேர்ந்த ஐப்பால் லூம் என்னும் ஓட்டப் பந்தய வீரர்.

குதிரையுடனான 10 ஆயிரம் மீட்டர் தூரப் போட்டியில் அவர் கலந்து கொண்டார். இந்த பந்தயத்தில் அவர் குதிரையை விட 20 செகண்டுகள் முன்னதாக ஓடி வந்து வெற்றிக் கம்பத்தைத் தொட்டு வெற்றி பெற்று சாதனை நிகழ்த்தினார்.

***

*ஒலிம்பிக்கில் ஒரே விளையாட்டில் தொடர்ந்து நான்கு தடவை தனி ஒருவரே தங்கப்பதக்கத்தை வென்றவர் என்ற பெருமை ஒரே ஒரு வருக்கு மட்டுமே உண்டு. அவர் அமெரிக்காவின் ஆல்பிரட் அடால்ப் ஆர்ட்டர். 1956-ம் ஆண்டு முதல் 1968- ம் ஆண்டு வரை நடந்த நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் வட்டு எறியும் போட்டியில் தொடர்ந்து தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

*****
"ஹான்ஃபில்" என்பது அமேசான் காடுகளில் காணப்படும் ஒருவகை சிலந்தி. இவற்றின் முக்கிய உணவு என்ன
தெரியுமா? மீன்கள்தான். இந்த சிலந்திகள், மீன்களைப் பிடித்துத் தின்பதற்காகக் குளம், குட்டைகளில் மூழ்கும். நீரிலும் வாழக்கூடிய தன்மை கொண்டிருந்தாலும் இவ்வகை சிலந்திகள் இரைக்காக மட்டுமே தண்ணீருக்குள் செல்லும். எப்படி தெரியுமா?
கனமான பொருள் ஒன்றைக் கவ்விக் கொண்டு நீரில் மூழ்கும். தண்ணீருக்குள் இரை தின்றதும், கவ்விய கனப்பொருளை விட்டு விடும். உடல் கனம் குறைவதால் தானாக நீரின் மேற்பரப்புக்கு வந்து சேர்ந்து விடுமாம்.
****

*வெனிஸ் நகரில் கோமாளி கல்லூரி அமைந்துள்ளது. கோமாளிகளுக்குப் பயிற்சியளிக்கும் இக்கல்லூரியில் 50 மாணவர்களுக்கு மட்டுமே இடமுண்டு. எட்டு வாரப் பயிற்சியில் கழைக் கூத்தாடுதல், பொய்க்கால் கட்டி ஆடுதல் போன்ற பல வித்தைகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

* எறும்புகள் பூமிக்கு அடியில் கூடுகள் கட்டிக் கொள்கின்றன. சில வகை எறும்புகள் மட்டும் உயர்ந்த மரங்களில் கூடுகளை உருவாக்கிக் கொள்கின்றன.

* எறும்பு, பூச்சி வகைகளில் ஹைமனாப்டிரா என்ற வகையைச் சேர்ந்தது.

* ஹனி ஆன்ட்ஸ் என்ற அழைக்கப்படும் தேன் எறும்புகள் தங்கள் வயிற்றிலேயே தேன் போன்ற பொருள்களைச் சேகரித்து வைக்கின்றன. இதனால், இவற்றின் வயிறு பருத்து உருண்டு தேன் குடமாகக் காட்சியளிக்கும். தேன் கிடைக்காத காலங்களில் வாய் வழியே தேனைத் துப்பி மற்ற எறும்புகளுக்குக் கொடுக்கின்றன.

* எறும்புகளுக்கு பார்வை தெரியாது. தன்னுடைய உணர்வுத் திறனால் மோப்பம் பிடித்து வழியை அறிந்துக் கொள்கின்றன.
*தொடரும்...

பேரழிவை நினைவுகூரும் தமிழ்-பாலஸ்தீன சகோதரர்கள்






ஈழத் தமிழரும், பாலஸ்தீனர்களும், மே மாத நடுப் பகுதியை, தமது இனத்திற்கு பேரழிவு ஏற்பட்ட மாதமாக நினைவுகூருகின்றனர். தமிழ் இன உணர்வாளர்கள், மே 18 ம் தேதியை நினைவுகூரும் தினமாக அறிவித்துள்ளனர். கடந்த 64 வருடங்களாக, மே 15 ம் தேதியை, “நக்பா (Al Nakba) தினம்” என்று பாலஸ்தீனர்கள் அறிவித்துள்ளனர். யூதர்கள் அதனை இஸ்ரேலிய சுதந்திர தினமாக கொண்டாடுகின்றனர். அதே போன்று, 1967 யுத்தத்தின் வெற்றியையும் யூதர்கள் கொண்டாடினார்கள். இவ்விரண்டு சம்பவங்களின் பின்னணியில், பாலஸ்தீன அரேபிய மக்களை இனப்படுகொலை செய்து, இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட கொடுமைகள் மூடி மறைக்கப் படுகின்றன. 2009 ம் ஆண்டு, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர், யூதர்களைப் போன்று தென்னிலங்கை சிங்களவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடிய நிகழ்வு இங்கே ஒப்பிடத் தக்கது.


1948 ம் ஆண்டு, பிரிட்டிஷ் பாதுகாப்புக்குட்பட்ட பாலஸ்தீன நாடு, யூதர்களிடம் கையளிக்கப் பட்டது. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில், பிரிட்டிஷ் காலனியான இலங்கை, சிங்களவர்களிடம் கையளிக்கப் பட்டது இவ்விடத்தே நினைவு கூறத் தக்கது. சிங்கள ஆட்சியாளர்கள், இஸ்ரேலிய யூத ஆட்சியாளர்களை பின்பற்றி நடந்து வருவதும் குறிப்பிடத் தக்கது. இஸ்ரேலிய யூத அரசின் இன ஒடுக்குமுறை கொள்கை பன்மடங்கு வீச்சைக் கொண்டது. 1948 ம் ஆண்டு, யூதர்களின் மரபு வழி இராணுவம் என்ற ஒன்று இருக்கவில்லை. தனித் தனியான ஆயுதக் குழுக்களாக இயங்கிக் கொண்டிருந்தன. மே 15 , அன்று தாக்குதலை தொடங்கிய யூத ஆயுதக்குழுக்கள் , சுமார் 600 பாலஸ்தீன கிராமங்களை இனச் சுத்திகரிப்பு செய்தனர். வெளியேறிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் காலனிய அரசு வழங்கிய ஆயுத தளபாடங்களும், யூத ஆயுதக் குழுக்களுக்கு பெரிதும் உதவியிருந்தன.

மே 18 நினைவுகூரலை, இலங்கை நாட்டு எல்லைக்குள் எங்கேயும் நடத்த முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அதே போன்று, மே 15 நினைவுகூரலை, இஸ்ரேலிய நாட்டு எல்லைக்குள் எங்கேயும் நடத்த முடியாது. அரபு மொழியில் பேரழிவு என்ற அர்த்தம் தரும், “அல் நக்பா” என்ற சொல், மே 15 நினைவுகூரல் தினத்திற்கு பெயராக வைக்கப் பட்டுள்ளது. ஜனவரி மாதம், இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஒன்று, அல் நக்பா நினைவுகூரலை தடை செய்துள்ளது. எந்தவொரு நிறுவனமாகிலும், இது போன்ற நினைவுகூரலை அனுமதிக்குமானால், அரச நிதியை இழக்க வேண்டியிருக்கும். இத்தகைய தடைகளையும் மீறி, இந்த வருடம் பாலஸ்தீனர்கள் அல் நக்பா தினத்தை நினைவுகூர்ந்துள்ளனர். டெல் அவிவ் நகர பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் பாலஸ்தீன மாணவர்கள், வளாகத்தினுள் சிறிய ஒன்றுகூடலை ஒழுங்கு படுத்தினர். அதில், இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பாலஸ்தீன கிராமங்களின் பெயர்களை வாசித்தார்கள். அதே நேரம், பாலஸ்தீன அதிகார சபைக்குட்பட்ட பிரதேசத்தில், பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

இஸ்ரேலிய பாட நூல்களிலும், சரித்திர நூல்களிலும், 1948 க்கு முன்னர் பாலஸ்தீனர்கள் வாழ்ந்ததாக, எங்கேயும் குறிப்பிடப் படவில்லை. ரோமர் காலத்தில் இருந்து, யூதர்கள் மட்டுமே பாலஸ்தீனப் பிரதேசத்தில் வாழ்ந்து வந்ததாக எழுதப் பட்டுள்ளது. சிங்கள-பௌத்த பேரினவாதிகள், இலங்கை முழுவதும் தமது என்று உரிமை கோருவது, இவ்விடத்தே குறிப்பிடத் தக்கது. இஸ்ரேலிய அரசு பாலஸ்தீனத்திற்கு உரிமை கோருவது மட்டுமல்ல, அப்படி ஒரு நாடு சரித்திரத்தில் இருந்ததை மறுத்து வருகின்றது. சரித்திர சான்றுகளை மறுப்பதற்கு வசதியாக, புதிய காடுகள் உருவாக்கப் படுகின்றன. 1948 ல் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பாலஸ்தீன கிராமங்களில், ஐரோப்பாவில் இருந்து புலம்பெயர்ந்த யூதர்கள் குடியேற்றப் பட்டனர். அந்தக் கிராமங்களின் அரபுப் பெயர்களை அழித்து விட்டு, ஹீபுரு பெயர்களை சூட்டினார்கள். கிழக்கிலங்கையிலும், வவுனியாவிலும், தமிழ்க் கிராமங்களில் வாழ்ந்த தமிழர்களை வெளியேற்றி விட்டு, அங்கெல்லாம் சிங்களவர்களை குடியேற்றியது குறிப்பிடத் தக்கது. இஸ்ரேலில் நடந்ததைப் போன்று, அந்தக் கிராமங்களுக்கு சிங்களப் பெயர்கள் சூட்டப் பட்டன.

இன்று பாலஸ்தீன பிரதேசமாக கருதப்படும் காஸா வில் வாழும் என்பது வீதமானோர், இஸ்ரேலியப் பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்த அகதிகளாவர். 1948 ம் ஆண்டு, காஸாப் பிரதேசம் எகிப்தின் பகுதியாக இருந்தமை, இங்கே குறிப்பிடத் தக்கது. அதே போன்று, அதே காலகட்டத்தில் ஜோர்டானின் கட்டுப்பாட்டில் இருந்த, மேற்குக் கரை பிரதேசத்தில் வாழும் நாற்பது சதவீதமான பாலஸ்தீனர்களின் பூர்வீகமும் இஸ்ரேல் ஆகும். பிற்காலத்தில், காஸா, மேற்குக்கரை மீது போர் தொடுத்த இஸ்ரேலிய படைகள், அந்தப் பிரதேசங்களை ஆக்கிரமித்தன. இன்று வரை, 1948 ம் ஆண்டு, இஸ்ரேலிய தேசத்திற்குள் அகப்பட்ட சில நூறு பாலஸ்தீன குடும்பங்களுக்கு மட்டுமே பிரஜாவுரிமை உள்ளது. காஸா, மேற்குக்கரை பிரதேசங்களில் வாழும் பாலஸ்தீனர்களுக்கு எந்த நாட்டு பிரஜாவுரிமையும் கிடையாது. அதாவது, “நாடற்றவர்கள்”.

இன்று இஸ்ரேல் என்று அறியப்பட்ட தேசத்தில் உள்ள, 418 பாலஸ்தீன கிராமங்கள் பாழடைந்து போயுள்ளன. ஏனென்றால், அங்கே குடியேறுவதற்கு போதுமான அளவு யூதர்கள் கிடைக்கவில்லை. ஆகவே, பாழடைந்த பாலஸ்தீன கிராமங்களை காடுகளாக மாற்றும் திட்டம் ஒன்று நடைமுறைப் படுத்தப் பட்டு வருகின்றது. சைப்ரஸ் மரம் போன்று, வறண்ட பிரதேசத்தில் விரைவாக வளரும் மரச் செடிகள் கொண்டு வந்து நடப் படுகின்றன. சில வருடங்களில் அவை 2 , 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட காடுகளாக மாறி விடும். அந்தக் காடுகளுக்கு இஸ்ரேலிய தலைவர்களின் நாமங்கள் சூட்டப் படுகின்றன. காடு வளர்க்கும் திட்டத்திற்கு, மேற்கத்திய நாடுகளும் உதவி வருவதால், சில காடுகளுக்கு மேற்குலக இஸ்ரேலிய நண்பர்களின் பெயர்களும் சூட்டப் படுகின்றன.

டெல் அவிவிலிருந்து ஜெருசலேம் செல்லும் வழியில், சாரிஸ்(Saris), பெய்த் துல் (Beit Thul) என்ற கிராமங்களில், பெல்ஜிய யூதர்களால் காடுகள் வளர்க்கப்பட்டுள்ளன. அன்றைய கார்டினல் டானியல், காடுகளில் விவிலிய வாசகங்களை பொறித்துள்ளார். நாசரேத் நகருக்கு அருகில், மலூல் (Malul), முஜெய்டில் (Mujeidil) என்ற கிராமங்களும் காடுகளாக மாறியுள்ளன. இதிலே குறிப்பிடத் தக்க விடயம் என்னவென்றால், இவ்விரண்டு கிராமங்களிலும் கிறிஸ்தவ பாலஸ்தீனர்கள் வாழ்ந்து வந்தனர். அங்கே இப்பொழுதும், பாலஸ்தீன கிறிஸ்தவர்களின் தேவாலயங்கள் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றன. அறுபதுகளில் அந்தக் கிராமங்களுக்கு சென்ற, கிறிஸ்தவ மதப் பற்றாளர்களான பெல்ஜிய அரசனும், அரசியும், அங்கே முப்பதாயிரம் மரச் செடிகளை நாட்டினார்கள். மேலேயுள்ள படத்தில், அழிவடைந்த நிலையில் உள்ள பாலஸ்தீன கிறிஸ்தவ தேவாலயமும், அருகில் காடும் இருப்பதை பார்க்கலாம்.

தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடும் புத்திஜீவிகள், தமிழ் மக்களுக்கு பாரிய துரோகம் இழைக்கின்றனர். தமிழ் தேசியம் பேசுவோரில் கணிசமான அளவு கிறிஸ்தவர்கள் உள்ளனர். அவர்கள் பாலஸ்தீன கிறிஸ்தவர்களுடன், தோழமை உணர்வை காண்பிக்க வேண்டும். இஸ்ரேலின் சுதந்திர தினம், பாலஸ்தீனர்களால் அல் நக்பா தினமாக நினைவுகூரப் படும் தகவலை தமிழ் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். பாலஸ்தீன கிறிஸ்தவர்கள், யூத ஆயுதக் குழுக்களால் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட உண்மைகள் தெரிந்தாலும், மேலைத்தேய கிறிஸ்தவ மேட்டுக்குடி இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பது எதற்காக? அவர்களைப் பொறுத்த வரையில், “ஐரோப்பிய வெள்ளை இனத்தவர் மட்டுமே கிறிஸ்தவராக இருக்க முடியும்”, என்ற இனவாத சிந்தனை கொண்டவர்கள். பாலஸ்தீன கிறிஸ்தவ சகோதரர்களுடன், தமிழ் கிறிஸ்தவர்கள் கொண்டுள்ள உணர்வுத் தோழமை, வெள்ளையின மேலாதிக்கத்திற்கு சாவுமணி அடிக்க வேண்டும்.

வெள்ளி கிரகம் எவ்வாறு பூமிக்கும் சூரியனுக்கும் இடையே வருகிறது ? எவ்வாறு நிகழ்கிறது இந்த வெள்ளி கிரகணம் ?







சூரிய கிரகணம் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஏதாவது ஓர் அமாவாசையன்று பூமிக்கும் சூரியனுக்கும் நேர் குறுக்கே சந்திரன் வந்து நிற்கும் போது சூரியன் முற்றிலுமாக அல்லது அரைகுறையாக் மறைக்கப்படுகிறது. இதையே சூரிய கிரகணம் என்கிறோம். பூமிக்கும் சூரியனுக்கும் நேர் குறுக்கே வெள்ளி கிரகமும் வந்து நிற்கலாம். வெள்ளி கிரகம் அப்படி குறுக்கே வந்து நின்றால் சூரியனின் ஒளித் தட்டு மறைக்கப்படுவதில்லை.






 மாறாக சூரியனின் ஒளித்தட்டில் சிறிய கருப்புப் பொட்டு தெரியும். அதுவே வெள்ளி கிரகம். நாளை (ஜூன் 6) காலையில் சூரியன் உதிக்கும்போதே இப்படியான கருப்புப் பொட்டுடன் காணப்படும். தொடர்ந்து சூரியனைக் கவனித்துக் கொண்டிருந்தால் இந்தக் கருப்புப் பொட்டு இடது புறத்திலிருந்து வலது புறமாக நகர்ந்து செல்வதும் தெரியும். சுமார் நாலரை மணி நேரம் இது நீடிக்கும். சென்னை நகரை வைத்துச் சொல்வதானால் இது காலை 10 மணி 19 நிமிஷம் வரை நீடிக்கும். அதன் பிறகு வெள்ளி கிரகம் சூரியனின் ஒளித் தட்டிலிருந்து அகன்று விடும் வெறும் கண்ணால் சூரியனைக் காண முற்பட்டால் கண் பார்வை பாதிக்கப்படுகின்ற ஆபத்து உள்ளது.

ஆகவே இதற்கென உள்ள கருப்புக் கண்ணாடியால் மட்டுமே பார்க்க வேண்டும். பூரண சூரிய கிரகணத்தன்று சந்திரன் முற்றிலுமாக சூரியனை மறைப்பதுபோல வெள்ளி கிரகம் ஏன் சூரியனை முற்றிலுமாக மறைப்பதில்லை என்று கேட்கலாம். சந்திரன் பூமியிலிருந்து அதிகபட்சம் சுமார் 4 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வெள்ளி கிரகமோ பூமியிலிருந்து சுமார் 4 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆகவேதான் அது சூரிய ஒளித்தட்டை முற்றிலுமாக மறைப்பதில்லை.








நீங்கள் டிவி பார்க்கும்போது உங்கள் ஆள்காட்டி விரலை புருவம் மீது படியும் வகையில் கண்ணுக்கு அருகே வைத்துக் கொள்ளுங்கள். உங்களது விரல் டிவி திரையை முற்றிலுமாக மறைக்கும். ஆனால், அடுத்து நீங்கள் கையை நன்கு நீட்டி வைத்துக்கொண்டால் உங்கள் ஆள்காட்டி விரல் டிவி திரையை மறைக்காது. டிவி திரையின் பின்னணியில் உங்கள் ஆள்காட்டி விரல் கருப்பாகத் தெரியும். அதேபோன்று தான் சூரியனை வெள்ளி கிரகம் முற்றிலுமாக மறைப்பதில்லை. சொல்லப்போனால் சந்திரனைவிட வெள்ளி கிரகம் மிகப் பெரியது. அது கிட்டத்தட்ட பூமி அளவுக்குப் பெரியது. சந்திரனைவிட மிகத் தொலைவில் இருப்பதால் அது கரும் பொட்டு அளவுக்குத்தான் தெரிகிறது.


சூரிய ஒளித்தட்டில் வெள்ளி கிரகம் நகருவதை வைத்து சூரியன் மீது வெள்ளி கிரகம் ஒட்டிக்கொண்டு வழுக்கிச் செல்வதாகக் கருதி விடக்கூடாது. வெள்ளி கிரகம் சூரிய ஒளித்தட்டில் கருப்பாகத் தெரிகின்ற நேரத்தில் சூரியன் வெள்ளி கிரகத்தின் பின்னால் சுமார் 11 கோடி கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருக்கும். புளூட்டோவையும் சேர்த்துக் கொண்டால் சூரியனை ஒன்பது கிரகங்கள் சுற்றி வருகின்றன. இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனிச் சுற்றுப்பாதை உண்டு. சூரியனுக்கு மிக அருகில் உள்ளது புதன் கிரகம். அதாவது சூரியனைச் சுற்றி அமைந்த முதல் வட்டத்தில் புதன் கிரகம் உள்ளது. இரண்டாவது வட்டத்தில் வெள்ளி கிரகம் (இதற்கு சுக்கிரன் என்ற பெயரும் உண்டு. ஆங்கிலத்தில் வெள்ளி கிரகத்துக்கு வீனஸ் என்று பெயர்).

மூன்றாவது வட்டத்தில் பூமி அமைந்துள்ளது. வேறு விதமாகச் சொன்னால் பூமிக்கும் சூரியனுக்கும் நடுவே புதன், கிரகமும், வெள்ளி கிரகமும் அமைந்துள்ளன. புதன், வெள்ளி ஆகிய இரண்டும் பூமியைப் போலவே சூரியனைச் சுற்றிச் சுற்றி வருகின்றன. ஆனால், இந்த இரண்டின் சுற்றுப்பாதைகளும் சம தளத்தில் இல்லை. ஆகவே, இவை சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே மிக அரிதாக எப்போதாவதுதான் நேர் குறுக்காக வந்து நிற்கும். உதாரணமாக, வெள்ளி கிரகம் 583 நாள்களுக்கு ஒருமுறை சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே வந்து நிற்கிறது. ஆனால், அப்போது அது சூரியனுக்கு மேலே அல்லது கீழே அமைந்ததாகக் கடந்து சென்று விடுகிறது.


சூரிய ஒளித்தட்டில் கருப்புப் பொட்டாகத் தெரிகின்ற அளவுக்கு நேர் குறுக்காக இருப்பதில்லை. எனினும், 105 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியன், வெள்ளி, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைகின்றன. அப்போதுதான் வெள்ளி நேர் குறுக்காக வந்து நின்று சூரிய ஒளித்தட்டில் கரும் பொட்டாகத் தெரிகின்றது. இந்த நிகழ்வை வெள்ளிக் கடப்பு என்று வானவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் இப்போதைப்போல வெள்ளிக் கடப்பு நிகழ்ந்தது. அதற்கு எட்டு ஆண்டுகள் கழித்து இப்போது அது மறுபடி நிகழ்கிறது. இதன் பிறகு 2117 ஆம் ஆண்டிலும் 2125 ஆம் ஆண்டிலும் இது நிகழும். தமிழகத்தில் உள்ளவர்கள் இப்போதைய வெள்ளி கடப்பு நிகழ்வைக் காணத் தவறினால் 243 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.


ஏனெனில், அடுத்த தடவை நிகழும் வெள்ளிக் கடப்பு தமிழகத்தில் தெரியாது. 2255 ஆம் ஆண்டில் நிகழும் வெள்ளிக் கடப்புதான் தமிழகத்தில் தெரியும். வெள்ளி கிரகத்தைப் பார்க்காதவர்கள் இருக்க முடியாது. வானில் பளீரென்று ஜொலிப்பதில் வெள்ளி கிரகம் முதலிடம் வகிக்கிறது. சில சமயங்களில் இது சூரிய உதயத்துக்கு முன் கிழக்கு வானில் ஜொலிக்கும். வேறு சமயங்களில் சூரியன் அஸ்தமித்த பின்னர் மேற்கு வானில் கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் தோற்றம் அளிக்கும். ஆகவே வெள்ளி கிரகத்துக்கு அது தெரிகின்ற நேரத்தைப் பொருத்து விடி வெள்ளி, அந்தி வெள்ளி என்ற பெயர் உண்டு. கடந்த பல மாதங்களாக வெள்ளி கிரகம் மேற்கு வானில் தெரிந்து வந்தது.


வெள்ளிக் கடப்பு நிகழ்வு கழிந்து ஜூன் மாத மூன்றாவது வாரத்திலிருந்து வெள்ளி கிரகம் கிழக்கு வானில் விடிவெள்ளியாகத் தெரிய ஆரம்பிக்கும். முன்னர் 1761 ஆம் ஆண்டிலும் பின்னர் 1769 ஆம் ஆண்டிலும் நடந்த வெள்ளிக் கடப்பு நிகழ்ச்சிகளுக்கு வரலாற்று மற்றும் அறிவியல் முக்கியத்துவம் உண்டு. சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் என்ன என்பது அறியப்படாத காலம் அது. ஆகவே, அப்போது இங்கிலாந்தில் வாழ்ந்த பிரபல வானவியல் நிபுணரான எட்மண்ட் ஹாலி ஒரு திட்டத்தைக் கூறினார். 1761 ஆம் ஆண்டு மற்றும் 1769 ஆம் ஆண்டு வெள்ளிக் கடப்பை உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஒரே சமயத்தில் ஆராய வேண்டும். வெள்ளி கிரகம் சூரிய ஒளித்தட்டைத் தொடுகின்ற நேரத்தையும் ஒளித்தட்டிலிருந்து விலகுகின்ற நேரத்தையும் மிகத் துல்லியமாகக் கணக்கிட வேண்டும். இத்தகவல்களைச் சேகரித்து ஆராய்ந்தால் பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தைக் கணக்கிட்டு விடலாம் என்று அவர் கூறினார்.

எட்மண்ட் ஹாலி 1742 இல் காலமாகி விட்டார் என்றாலும் அவர் கூறிய திட்டத்தின்படி 1761 ஆம் ஆண்டில் பல நிபுணர்கள் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று வெள்ளிக் கடப்பை ஆராய்ந்தனர். அந்தத் தடவையில் போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை. இரண்டாம் தடவை அதாவது 1769 ஆம் ஆண்டில் இதேபோல நிபுணர்கள் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று சேகரித்த தகவல்களை வைத்துக் கணக்கிட்டபோது பூமியிலிருந்து சூரியனுக்கு உள்ள தூரம் 93 மிலியன் மைல்களிலிருந்து 97 மிலியன் மைல்களாக இருக்கலாம் என்று உத்தேசமாகத் தெரிய வந்தது. அதுவரை சூரியனுக்குள்ள தூரம் 55 மிலியன் மைல்களாக இருக்கலாம் என்று ஊகிக்கப்பட்டு வந்தது. நவீன காலத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி சூரியன் சுமார் 92.96 மில்லியன் மைல் தொலைவில் (150 மில்லியன் கிலோ மீட்டர்) உள்ளது. எட்மண்ட் ஹாலியின் திட்டப்படி வெள்ளிக் கடப்பை உலகின் பல்வேறு பகுதிகளிருந்து ஆராயச் சென்றவர்களின் அனுபவம் வெவ்வேறாக இருந்தது. கில்லாமே டி ஜெண்டில் என்ற பிரெஞ்சு நிபுணரின் அனுபவம் துயரம் நிறைந்தது.

வெள்ளிக் கடப்பை பாண்டிச்சேரியில் பதிவு செய்ய விரும்பிய அவர் 1760 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரான்சிலிருந்து பாண்டிச்சேரி நோக்கிக் கிளம்பினார். அப்போது இந்தியாவில் காலுன்றுவதில் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே கடும் போட்டா போட்டி இருந்தது. இந்தியாவில் இரு நாடுகளின் படைகளுக்கும் இடையே நடந்த சண்டைகளில் பாண்டிச்சேரி அடிக்கடி கைமாறியது. ஜெண்டில் பிரான்சிலிருந்து கிளம்பியபோது பாண்டிச்சேரி பிரான்ஸ் வசம் இருந்தது. ஆனால், அவர் பல மாத கப்பல் பயணத்துக்குப் பிறகு பாண்டிச்சேரியை நெருங்கியபோது பாண்டிச்சேரி இங்கிலாந்தின் படைகள் வசமாகிவிட்டிருந்தது. ஆகவே, பிரிட்டிஷார் அவரை பாண்டிச்சேரியில் நுழைய அனுமதிக்கவில்லை.

வேறு வழியின்றி அவர் அங்கிருந்து கிளம்பினார். 1761 ஜூன் 6 ஆம் தேதி வெள்ளிக் கடப்பு நிகழ்ந்தபோது கப்பலிலிருந்து அதைக் கவனித்து விவரம் சேகரித்தார். ஆனால், கப்பலின் ஆட்டம் காரணமாகத் துல்லியமாகப் பதிவு செய்ய முடியவில்லை. அடுத்த வெள்ளிக் கடப்புக்கு இன்னும் எட்டு வருடங்கள்தானே இருக்கிறது. எதற்கு இப்போது நாடு திரும்ப வேண்டும் என்று கருதிய ஜெண்டில் ஆப்பிரிக்க கடல் ஓரமாக பிரெஞ்சு அரசுக்குச் சொந்தமான பகுதிக்குச் சென்று அங்கு தங்கிவிட்டு 1768 மார்ச் மாதம் மறுபடி பாண்டிச்சேரிக்கு வந்து சேர்ந்தார். இந்தத் தடவை அது பிரான்ஸ் வசம் இருந்தது. அவர் வானை ஆராய பாண்டிச்சேரியில் சிறிய ஆராய்ச்சிக்கூடம் ஒன்றை நிறுவினார். 1769 ஜூன் 4 ஆம் தேதி வெள்ளிக் கடப்பு நிகழ்ச்சியைப் பதிவு செய்ய அவர் ஆவலாகக் காத்திருந்தார்.

அந்த நாளும் வந்தது. ஆனால், பெருத்த ஏமாற்றம். வானை மேகங்கள் கப்பியிருந்தன. அவரால் சூரியனைக் காண முடியவில்லை. வெள்ளிக் கடப்பையும் பார்க்க முடியவில்லை. கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தவர் போலானார். இறுதியில் 11 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பிரான்ஸ் திரும்பினார். அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லாது போகவே ஜெண்டில் செத்து விட்டார் என அறிவித்திருந்தனர். பிரெஞ்சு ராயல் அகாடமியில் அவர் வகித்த பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். ஜெண்டிலின் மனைவி வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுவிட்டார். சொந்தக்காரர்கள் அனைவரும் அவரது சொத்தைப் பிரித்துக்கொண்டு விட்டனர். ஜெண்டில் மனம் இடிந்தவரானார்.

கடைசியில் பிரெஞ்சு மன்னரிடம் முறையிட்டதில் சொத்துகளை மீட்க முடிந்தது. மீண்டும் பதவி கிடைத்தது. அவர் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு புது வாழ்க்கை நடத்தலானார். நாளை காலை உங்கள் ஊரில் வானம் மேக மூட்டமாக இல்லாமல் இருந்தால்தான் உங்களால் வெள்ளிக் கடப்பைக் காண இயலும். 105 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியன், வெள்ளி, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைகின்றன. அப்போதுதான் வெள்ளி நேர் குறுக்காக வந்து நின்று சூரிய ஒளித்தட்டில் கரும் பொட்டாகத் தெரிகின்றது. இந்த நிகழ்வை வெள்ளிக் கடப்பு என்று வானவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்