Wednesday 21 September 2011

துருக்கியில் இஸ்லாமிய இயக்க வரலாறு


அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்...

துருக்கியில் இஸ்லாமிய இயக்க வரலாறு 

கடுமையான மதச்சார்பற்ற சிந்தனைப் போக்குக் கொண்ட நாட்டில் இஸ்லாமிய எழுச்சியைக் காண்பது மிக ஆச்சிரியமான ஒரு விடயமாகும். துருக்கி மதச்சார்பற்ற ஐரோப்பிய சிந்தனையை விட மோசமானதாகும். ஐரோப்பா மத்த்தினை மாத்திரம் அரசியலிலிருந்து பிரித்தது அதேநேரம் துருக்கி மதத்திற்கு எதிராகப் போராடுதல் என்ற அடிப்படையில் தனது சிந்தனையை கட்டியெழுப்பியுள்ளது.

1924ம் ஆண்டு உஸ்மானிய கிலாபத் வீழ்ச்சி மிகக்கடுமையானதாக அமைந்திருந்தது, முஸ்லிம்களை ஒன்று சேர்த்திருந்த கிலாபத் மாத்திரம் வீழ்ச்சியடையவில்லை, மாறாக முஸ்லிம்களின் பிரச்சினைகளை இஸ்லாமியத்துடன் சேர்த்து அழைப்பு விடுத்தவர்களும் மறைந்து விட்டனர். அங்கே ஒலித்ததெல்லாம் மதச்சார்பற்ற சிந்தனைப் போக்கும், தேசியவாதப் போக்குக் கொண்டவர்களின் குரல்கள்தான். இது துருக்கியில் மாத்திரமல்ல எல்லா இஸ்லாமிய நாடுகளிலும் ஏற்பட்டது.
இந்த வீழ்ச்சி வெறுமனே எதிர்ப்பின்றி நிகழவில்லை, மிகக்கடுமையான அடக்குமுறையும் அணியாயம் காணப்பட்ட காலப்பகுதியில் சில இஸ்லாமிய இயக்கங்களும் தோன்றின.
ஷெய்க் ஸஈத் பீரான் அவர்கள் உருவாக்கிய இயக்கம் மீண்டும்கிலாபத் வரவேண்டுமென அழைப்பு விடுத்தது, மதச்சார்பற்ற சட்டங்களை மிகக்கடுமையாக எதிர்த்தது. இதன் விளைவு அதாதுர்க்கினால் இந்த இயக்கம் நசிக்கப்பட்டது, ஷெய்க் அவர்கள் கொலைசெய்யப்பட்டார்கள், அமைப்பின் அங்கத்தவர்களில் அதிகமானோர் கொல்லப்பட்டனர், ஏனையவர்கள் நாடுகடத்தப்பட்டனர். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஆரம்பத்திலிருந்தே நாஸ்திக சிந்தனையை பாதுகாப்பதற்கான நடவடிக்கையாக அமைந்திருந்தது.
இதில் ஆச்சரியப்படத்தக்க விடயம் ஷெய்க் ஸஈத் பீரான் அவர்கள் துருக்கி சூபித்துவ சிந்தனையைக் கொண்டவர், நக்ஷபந்தியா தரீக்காவை சார்ந்தவர், எனவே இது நாம் சாதரணமாக அறிகின்ற சூபித்துவத்தை விடவும் வித்தியாசமான ஒரு மனப்பதிவினை எமக்குத் தருகிறது. இவர் நடைமுறை உலகினையும் அரசியலையும் விளங்கியருந்தார், அணியாயக்கார ஆட்சியாளர்களை எதிர்த்து நின்றார், சத்தியத்தை எடுத்துக் கூறினார், ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார், தூக்குத் தண்டனைக்கு வீரத்துடன் முன்வந்தார், சமூகப் பிரச்சினைகளை விட்டு தூரமாகவோ ஓரமாகவோ அவர் இருக்கவில்லை. எனவே துருக்கிய சூபித்துவம் பித்அத்துக்கள் நிறைந்ததாக காணப்படவில்லை, அதன் கருத்து அவர்கள் தவறுகள், பித்அத்கள் என்பவற்றிலிருந்து முற்று முழுதாக விடுபட்டிருந்தார்கள் என்பதல்ல. உஸ்மானிய கிலாபத்தின் பெரிய ஆட்சியாளர்களான முஹம்மது பாதிஹ், இரண்டாம் முராத், பாயஸீத் அஸ்ஸாயிகா, முதலாம் ஸலீம் இன்னும் முக்கிய பிரமுகர்களும் சூபித்துவ சிந்தனையையைச் சார்ந்தவர்களாகவே காணப்பட்டனர்.
ஷெய்க் ஸயீத் பீரான் அவர்களின் மரணத்துடன் இஸ்லாமிய இயக்கமும் மரணித்துவிடவில்லை, மாறாக இன்னொரு சூபித்துவ அறிஞருடன் மிகப்பலமாக தோன்றியது. அவர் ஷெய்க் ஸயீத் பீரான் அவர்களைப் பின்பற்றியவரும், மிகப்பெரிய அறிஞரும் சீர்திருத்தவாதியுமான பதீஉஸ்ஸமான் ஸயீத் அல் நூர்ஸியாகும். அவர் கேவலமிக்க மதச்சார்பற்ற அடிப்படைகளை பகிரங்கமாக எதிர்த்தார், இதன் காரணமாக அரசாங்கத்தினால் துருக்கியிலே மிகத்தூரவுள்ள ஒரு நகரத்திற்கு துரத்தப்பட்டார், அது அவ்ரிபா நகரமாகும், மரணிக்கும் வரை அங்கேயே தனது வாழ்நாளை கழித்தார் அது 1925-1960வரையாகும். ஆனாலும் அவரது கடிதங்களும், புத்தகங்களும் இடைவிடாது அவரது அமைப்பின் அங்கத்தவர்களுக்கு தொடர்ந்தும் கிடைத்துக் கொண்டிருந்தன. இது மிகக்கடுமையான அடக்குமுறைக்கு மத்தியிலும் துருக்கியில் இஸ்லாம் பரவுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. இவர் மிக முக்கியமான அறிஞர், அவரது தாக்கம் இன்னும் துருக்கிய மக்களுக்கு மத்தியில் பிரதிபலிக்கிறது.

1930ம் ஆண்டு அதாதுர்க்கின் அரசாங்கத்தின் கீழ் இஸ்லாமிய் கல்விநிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அவனது மரணத்தின் பின் 1938இல் மீண்டும் கிராமங்களில் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. 1947இல் இது இன்னும் சிறியளவு விஸ்தரிக்கப்பட்டது.
1950ம் ஆண்டு துருக்கிய அரசாங்கத்தில ஒரு மாற்றம் நடைபெறுகிறது. அத்னான் மன்தீஸ் என்பவர் பிரதம மந்திரியாக பதவியேற்றதாகும். இவரது ஆட்சி 1960 வரை நீடித்தது. இவர் ஒரு இஸ்லாமியவாதியாக இருக்கவில்லை, மாறாக நாட்டுப்பற்றுமிக்கவராக காணப்பட்டார். எனவே எல்லா தரப்பினருடனும் நல்லமுறையில் நடந்து கொண்டார். இவரது காலப்பகுதியில் இஸ்லாமிய செயற்பாடுகள் கணிசமான அளவு அதிரித்தது. இதனை காண சகிக்காத இராணுவம் புரட்சியொன்றை ஏற்படுத்தி அவரை தூக்கு மேடைக்கு அனுப்பியதுடன் அவரது கட்சியில் அங்கத்துவம் வகித்த முக்கியானவர்களுக்கும் தூக்குத்தணடனை நிறைவேற்றப்பட்டது. அத்துடன் இராணுவத்தினர் இஸ்லாமிய நிலையங்களை கடுமையாக எதிர்த்தனர், அதே வருடத்தில் தான் அல்லாமா ஷெய்க் பதீஉஸ்ஸமான் நூர்ஸி மரணமடைகிறார். அவர் அடக்கம் செய்யப்பட்ட பின்னர் இராணுவத்தினர் அவரது கப்ரை தோண்டி அவரது ஜனாசாவை வேரொரு இடத்தில் அடக்கினர், இன்று வரை அது அறிய்படவில்லை. எனவே இராணுவத்தினர் எவ்வளவு காழ்ப்புணர்வு கொண்டிருந்தார்கள் என்பதனை இது எடுத்துக்காட்டுகிறது.
இந்த நிலைமை துருக்கிய வரலாற்றில் இஸ்லாமிய தளபதி நஜ்முத்தீன் அர்பகான் தோன்றும் வரை நீடித்தது. அவர் 1972ம் ஆண்டுஸலாமா கட்சியை ஆரம்பித்தார், இது தொட்டிலிலேயே சுடுகாடு செல்லக் கூடாது என்பதற்காக தெளிவான இஸ்லாமிய கட்சியாக காணப்படவில்லை, மாறாக தேசிய சீர்திருத்தக் கட்சியாகவே காணப்பட்டது.
இந்தக் கட்சியின் உருவாக்கத்தின் பின் பொருளாதார அரசியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்து ரஜப் தையிப் அர்துகான் அவர்களும் தனது பேராசிரியருடன் இந்தக் கட்சியில் இணைந்து கொள்கிறார், இங்கிருந்துதான் அவரது அரசியல் வாழ்வு ஆரம்பமாகிறது.
அர்பகானின் நடவடிக்கைகள் அனைத்தும் துருக்கிய மதச்சார்பற்ற அரசின் கண்களை விட்டும் தூரமானதாக இருக்கவில்லை. எனவே ஸலாமா கட்சி 1980ம் ஆண்டு கலைக்கப்படுகிறது.
என்றாலும் பேராசிரியர் அர்பகான் அவர்கள் சலிப்படையாமல்1983ம் ஆண்டு ரபாஹ் கட்சியை ஆரம்பித்தார். இது தெளிவான இஸ்லாமிய போக்கு கொண்டதாக மிளிர்ந்தது.

இந்தக்கட்சியில் ரஜப் தையிப் அர்துகான் மிக விரைவாகவே பிரகாசிக்கத் தொடங்கினார். 1985ம் ஆண்டு இந்தக் கட்சியின் இஸ்தான்பூல்கிளைக்கு தலைவராக மாறினார். அப்போது அவரது வயது 31 ஆகும்.
இஸ்லாமிய போக்குக் கொண்ட இந்தக் கட்சியின் செல்வாக்கு மிக வேகமாக முழுத் துருக்கியிலும் பரவியது, 1994ம் ஆண்டு நகரசபை தேர்தலிலும் பெரும் வெற்றியைக் கண்டது. அங்கே அர்துகானும் வெற்றிபெற்றார்.
ஒரு இஸ்லாமியவாதி இஸ்தான்பூல் நகரசபைக்கு தலைவராக மாறியது ஒரு திடீர் எதிரொலியை ஏற்படுத்தியது. வருட காலத்தில்(1994-1998) அந்த நகரை ஒரு செல்வாக்குள்ள நகராக மாற்றியமைத்தார். அவரிடம் இந்த வெற்றிக்கான ரகசியம் பற்றி கேட்கப்பட்ட போது நீங்கள் அறியாத ஒரு ஆயுதம் எம்மிடம் இருக்கிறது, அதுதான் ஈமானாகும். எம்மிடம் இஸ்லாமிய பண்பாடுகள் இருக்கின்றன, நபியவர்களின் முன்மாதிரி இருக்கின்றது” என்று வீரத்துடன் பதிலளித்தார். அவரது பிரமிக்கத்தக்க சாதனைகளும் உயர்ந்த நிலைப்பாடும் மக்கள் செல்வாக்கை மேலும் அதிகப்படுத்தியது.
1995ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 158ஆசனங்களை இந்தக் கட்சி பெற்றது (மொத்தம் 550 ஆசனங்களாகும்), இதனடியாக 1996ம் ஆண்டு அர்பகான் அவர்கள் துருக்கியின் பிரதம மந்தியாக மாறினார். இது கிலாபத் வீழ்சிசயடைந்த பின் ஆட்சிக்கு வந்த முதலாவது இஸ்லாமியவாதியாகும்.
ஆட்சியேற்று ஒருவருட காலத்திற்குள் பல சாதனைகளையும் வெற்றிகளையும் கண்டார். இதனை சகிக்க முடியாத மதச்சார்பற்ற கொள்கையை கொண்ட இராணுவத்தினர் புரட்சியொன்றை ஏற்படுத்தி அவரை பலவந்தமாக பதவி விலகச் செய்தனர். ரபாஹ் கட்சியும் கலைக்கப்பட்டது. அர்பகான் அவர்களுக்கு 5 வருட காலம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவ்வாறே அர்துகான் அவர்களுக்கும் 10 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது, என்றாலும் அவரது நன்நடத்தை காரணமாக 4 மாதங்களில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். என்றாலும் வருடகாலம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.
மீண்டும் அர்பகான் அவர்கள் நம்பிக்கையிழக்காது 2000ம் ஆண்டு பழீலா கட்சியை ஆரம்பித்தார், அவருக்கு அரசியல் தடை இருந்ததால் வேறு ஒருவரின் பெயரில் அது பதியப்பட்டது, இந்தக் கட்சியில் அர்துகானும் அப்துல்லா குல் அவர்களும் இணைந்து கொண்டனர்.

ஏற்கனவே உருவாக்கப்பட்ட கட்சிகளுக்கு ஏற்பட்ட நிலைமைதான் இந்தக் கட்சிக்கும் ஏற்படும் என உணர்ந்த அர்துகானும், அப்துல்லா குல் அவர்களும் கட்சியை விட்டு ஒரமாகி 2001ம் ஆண்டு நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியை நிறுவினர். இந்தக் கட்சி துருக்கிய மக்களுக்கு மத்தியில் பரந்த செல்வாக்கினை பெற்றது. 2002இல் நடைபெற்ற தேர்தலில் 368 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றிபெற்றது, அர்துகான் அரசியல் தடைக்காலத்தில் இருந்த்தால் அமைச்சரவை அப்துல்லா குல்லின் தலைமையில் கூடியது. பின்னர் பாராளுமன்றத்தின் அழுத்தத்தினால் சட்டம் மாற்றப்பட்டு அதேவருடம் அர்துகான் பிரதம மந்திரியாக பதவிப் பிரமாணம் செய்தார்.
2003இல் அர்பகான் மீதான அரசியல் தடையும் நீக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் மீண்டும் ஸஆதா கட்சியை ஆரம்பித்தார் என்றாலும் கண்ணிவைத்து காத்திருந்த இராணுவத்தினர் பல குற்றச்சாட்டுக்களின் பேரில் மீண்டும் அவருக்கு வருட சிறைத்தணடனை விதித்தனர், அப்போது அவரது வயது 72 ஐயும் தாண்டியிருந்தது.
பின்னர் அர்துகான் 2006, 2010 தேர்தல்களிலும் வெற்றியடைந்தார், இராணுவத்தினர் அர்பகானுடன் நடந்து கொண்டது போன்று அர்துகானுடனும் நடந்து கொள்ளாமைக்கு அவருக்குள்ள அதிக மக்கள் செல்வாக்கு, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்குள்ள வேட்கை, இந்தமாதிரியான நடவடிக்கை பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்போகும் பாதிப்பு போன்றவைகளாக இருக்கலாம்.

யா அல்லாஹ் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் கண்ணியப்படுத்துவாயாக .

Tuesday 20 September 2011

கேட் ஸ்டீபன்ஸ் – யூசுப் இஸ்லாம்


கேட் ஸ்டீபன்ஸ் – யூசுப் இஸ்லாம்
--------------------------------------------------------------------------------------பிரபல பாப் இசைப் பாடகரான முன்னாள் கேட் ஸ்டீபன்ஸ், தாம் இஸ்லாத்தை தழுவிய வரலாற்றை இதோ விவரிக்கிறார்:

நான் இஸ்லாத்தை தழுவிய வரலாற்றை நீங்கள் அனைவரும் அறிந்துள்ள செய்தியின் மூலம் துவக்குகின்றேன். அது யாதெனில்.. எல்லாம் வல்ல இறைவன் இந்த பூமியில் நம்மை வழித்தோன்றல்களாக ஆக்கி நமக்கு தூதர்களை அனுப்பியுள்ளான். குறிப்பாக நமக்கு சீரான பாதையைக் காண்பிப்பதற்காக இறுதித்தூதராக முஹம்மத் (ஸல்) அவர்களைத் தெரிவு செய்துள்ளான். எனவே இதற்காக நன்றி செலுத்த வேண்டும் என்பதை மனிதன் கருத்தில் கொள்ள வேண்டும். இனி வரவிருக்கும் நிரந்தர வாழ்க்கைக்காக தம்மைத் தயார்படுத்துவதற்கு முயற்சி செய்யவும் வேண்டும். ஏனென்றால் இன்றைய சந்தர்ப்பத்தை நழுவ விட்டவன் அதை மீண்டும் பெறவே இயலாது. அல்லாஹ் கூறுகிறான்:

இக்குற்றவாளிகள் தம் இறைவன் முன் தலைகுனிந்தவர்களாய், 'எங்கள் இறiவா! நாங்கள் (இப்பொழுது) பார்த்துக் கொண்டோம், கேட்டுக் கொண்டோம். ஆகவே, நீ (உலகுக்கு) எங்களைத் திருப்பி அனுப்பிவை! நாங்கள் நற்கருமங்களையே செய்வோம். நிச்சயமாக நாங்கள் (நம்பிக்கையில்) உறுதியுள்ளவர்களாக ஆகிவிட்டோம்' என்று சொல்லும் போது (நபியே!) நீர் பார்ப்பீராயின் (அவர்களுடைய நிலையை நீர் அறிந்து கொள்வீர்).

மேலும் நாம் நாடியிருந்தால், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம். ஆனால் 'நான் நிச்சயமாக நரகத்தை – ஜின்களையும், (தீய) மனிதர்களையும் – ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன்' என்று என்னிடமிருந்து (முன்னரே) வாக்கு வந்துள்ளது. ஆகவே, உங்களுடைய இந்த நாளின் சந்திப்பை நீங்கள் மறந்திருந்ததன் (பலனை) அனுபவியுங்கள், நிச்சயமாக நாமும் எங்களை மறந்து விட்டோம். மேலும் நீங்கள் செய்த (தீ) வினையின் பயனாக என்றென்றும் நிலையான வேதனையை அனுபவியுங்கள்!' (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்). 32:12-14

இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள் 'எங்கள் இறiவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும், ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்வோம்' என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) 'சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார். ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள்! ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை' (என்று கூறுவான்). 35:37

சிறு பிராயம்:

தொழில் நுட்பத்துறையில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் பகுதியில் நான் பிறந்து வளர்ந்தேன். எனது குடும்பம் கிறிஸ்துவ குடும்பம். குழந்தை பொதுவாக இயல்பான நிலையில்தான் பிறக்கிறது. அதன் குடும்பத்தினர் தாம் அதை நெருப்பு வணங்கியாகவோ யூதனாகவோ கிறிஸ்தவனாகவோ மாற்றுகின்றனர் என நாம் அறிந்திருப்பதைப் போல, எனது தந்தை கிறிஸ்துவர் என்பதால் அவரது பராமரிப்பில் வளர்ந்த நானும் அந்த வழியிலேயே மாறிவிட்டிருந்தேன். அப்போது இறைவன் இருப்பதாகவும் அவனை நாம் ஈஸா (அலை) மூலமாகத்தான் அணுக இயலுமே அல்லாது நேரடியாக தொடர்பு கொள்ளவியலாது. அவர்தாம் கடவுளை அடைவதற்கான வாயில் என்பதாகவும் அறிந்து வைத்திருந்தேன். இந்தக் கருத்தை ஓரளவுக்கு நான் ஏற்றிருந்தாலும் எனது அறிவு முழுமையாக இதை ஏற்றிருக்கவில்லை.

ஈஸா (அலை) அவர்களின் சிலையை நான் உற்று நோக்கினேன். அது ஒரு கல், வாழ்க்கையைப் பற்றி எதுவும் அறியாது. அது போல திரித்துவ கொள்கையும் எனக்குத் திருப்தியளிக்கவில்லை. ஆயினும் இந்தக் கோட்பாடுகள் எனது தந்தையின் மதம் சார்ந்தவையாக இருந்ததால் அவரது மரியாதையைக் கருதி அவற்றைப் பற்றிய தர்க்கத்தில் என்னை நான் ஈடுபடுத்தவில்லை.

பிரபல பாப் இசைப்பாடகராக…

நான் கொஞ்சங் கொஞ்சமாக மதக்கோட்பாட்டிலிருந்து தூரமாகி இசை மற்றும் பாடல் துறைக்குத் தாவினேன். ஒரு பிரபல பாடகனாக ஆக வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் இருந்தது. அந்த வேகமான வாழ்க்கையின் அலங்காரங்களும் ரசனைகளும் என்னை ஈர்த்துக் கொண்டன. அதனால் இசையே எனது கடவுளானது. பொதுவாக பணமே எனது குறிக்கோள் என்றானது. ஏனெனில் எனது மாமா ஒருவர் அதிகமான பொருளாதாரத்திற்குச் சொந்தக்காரராக இருந்தார். அவரைப் போலவே நானும் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். மேலும் எனக்கு இந்தச் சிந்தனையை ஊட்டுவதில் என்னைச் சுற்றியிருந்த சமூக அமைப்புகளுக்கும் அதிகப்பங்கு இருந்தது. காரணம் உலகமே சதம் என்றும் அதுவே எல்லாம், அதுவே கடவுள் என்றும் சமூகம் கருதியிருந்தது.


எனவேதான் காசு மட்டுமே குறிக்கோள் என்ற நிலைப்பாட்டை நான் உறுதியாக தெரிவு செய்தேன். இந்த உலகம் என்னுடைய ஆசைகளை அடைந்து கொள்ள வேண்டிய களம், என்னைப் பொருத்த வரை இத்தோடு நமது ஆட்டங்கள் முடிந்துவிடும் என்றெல்லாம் நான் கருதியிருந்தேன். இத்துறையில் உலக அளவில் பேசப்படும் பாப் இசை வித்துவான்களே எனக்கு முன்மாதிரிகளாகத் தோன்றினர்.

இவ்வாறாக நான் இவ்வுலக வாழ்க்கையில் எனது சக்தியைப் பிரயோகித்து முழுமையாகவே மூழ்கியிருந்தேன். அதிகமான பாடல்களை நான் வழங்கியுள்ளேன். ஆயினும் தேடப்பட்ட பொருளாதாரத்தை நான் ஆராயும் போது எனது அடி மனதில் மனிதாபிமான ஆசையும் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற ஆசையும் உறுத்திக் கொண்டிருந்தன. ஆனாலும் குர்ஆன் கூறுவதைப் போல மனித மனம் வாக்களிப்பதை நிறைவேற்றுவதில்லை. மாறாக அதிகமான பொருளாதாரம் வரும்போதெல்லாம் கூடவே ஆசைகளும் அதிகரித்தே விடுகின்றன.

இவ்வாறாக பத்தொன்பது வயதை நான் கடக்காத கட்டத்திலேயே மாபெரும் வெற்றியை அடைந்தேன். எனது புகைப்படங்களும் என்னைப் பற்றிய செய்திகளும் தகவல் தொடர்புச் சாதனங்களுக்கு வெகுவாகவே தீனி போட்டன. இந்தப் பகட்டான முன்னேற்றம் கால எல்லைகளைக் கடந்து ஆடம்பர வாழக்கைக்கு என்னை இட்டுச் சென்றது. அதன் காரணமாக மதுவிலும் போதையிலும் நான் மூழ்கிப் போயிருந்தேன்.

மருத்துவமனையில் நுழைதல்:

வாழ்க்கையில் முன்னேற்றமும் பொருளாதார வெற்றியும் பிரபலமும் நான் அடைந்து ஏறத்தாழ ஓராண்டு கழிந்திருக்கும் அப்போது என்னைக் காசநோய் பீடித்தது. சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டேன்.

நான் அங்கிருந்த போது எனது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கலானேன். நான் என்ன வெறும் ஜடம் தானா? நான் என்ன செய்தால் இந்த ஜடத்தைச் சிறப்பாக அமைக்கலாம்? என்றெல்லாம் பல வினாக்கள் என்னுள் எழுந்தன. உண்மையில் எனது நிலையைப் பற்றி நான் சிந்திக்க ஆரம்பித்த அந்தக் கட்டம் எனக்கு இறையருளாகவே அமைந்தது. அது எனது கண்களை நான் திறப்பதற்கும் சீரான பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கும் இறைவன் வழங்கிய ஒரு சந்தர்ப்பம் என்றே நான் நினைக்கின்றேன்.

நான் ஏன் இந்தப் படுக்கையில் கிடக்க வேண்டும்? என்பது போன்ற பல கேள்விகள் உருவாயின. இவற்றிற்கான விடைகளை நான் தேட ஆரம்பித்தேன். நான் ஏற்றுக் கொண்டிருந்த கோட்பாடுகள் கிழக்காசிய நாடுகளில் அப்போது கோலோச்சிக் கொண்டிருந்தது. எனவே அந்தக் கொள்கைகளைப் பற்றி சிந்திக்கலானேன்.

முதலில் மரணத்தைப் பற்றிய சிந்தனை ஏற்பட்டது. அப்போது தான் ஆன்மாக்கள் ஒரு வாழ்க்கையிலிருந்து இன்னொரு வாழ்க்கைக்கு மாறுகின்றது. இந்த உலக வாழ்க்கையோடு அவற்றின் சகாப்தம் முடிவடைவதில்லை என்பதை அறிந்தேன். அன்றே நான் சீரான பாதையை நோக்கிப் பயணிக்கத் துவங்கி விட்டதை அறிந்தேன்.

இவ்வாறாக ஆன்மீக சிந்தனை பற்றிய அக்கறை என்னைத் தொற்றிக் கொள்ள படிப்படியாக இதய அமைதி எனக்குள் அதிகரித்தது. அதன் விளைவாக நான் வெறும் வெற்றுடம்பு அல்ல என்ற முடிவுக்கு வந்தேன்.

ஒரு நாள் நான் நடந்து சென்று கொண்டிருந்த போது மழை பெய்தது. உடனே நான் மழையில் நனையாமல் இருப்பதற்காக சற்று ஓடினேன். அப்போது ஒரு தத்துவம் எனது நினைவிற்கு வந்தது. அது யாதெனில், 'உடம்பு என்பது ஒரு கழுதையைப் போன்றது, அதைப் பழக்கப்படுத்தினால் தான் அதை அதன் எஜமானன் தனது விருப்பத்திற்கிணங்க பயன்படுத்த இயலும். இல்லையெனில் கழுதை தனது விருப்பத்திற்கிணங்க எஜமானனைப் பயன்படுத்திக் கொள்ளும்.'

அப்படியாயின் சுயமான விருப்பும் வெறுப்புமுள்ள மனிதனாகிய நான் வெறும் ஜடமல்லவே. கிழக்கத்திய கோட்பாடுகளை ஆராயும்போதும் இந்த முடிவே எனக்குத் தென்பட்டது. ஆயினும் கிறிஸ்தவம் எனக்கு முழுமையாகவே பிடிக்காமல் போயிற்று.

நான் குணமடைந்ததும் மீண்டும் இசைத்துறைக்குத் திரும்பினேன். அது எனது புதிய சிந்தனைகளை மழுங்கடிப்பதைப் போல் தோன்றியது. அது பற்றி நான் பாடிய பாடல் வரிகள் என் நினைவுக்கு வருகின்றன:

சுவனத்தையும் நகரத்தையும் படைத்த (இறை)வனை அறிய வேண்டுமே! இந்த உண்மையை நான் படுக்கையில் கிடந்து அறிய இயலுமா, இல்லை, ஒண்டுக் குடிசையில் ஒதுங்கித்தான் புரிய இயலுமா? மற்றவர்களோ ஆடம்பரமான உணவகங்களின் அறைகளில் உழன்று கிடக்கின்றனர். (கவிதையின் கருத்து)

இந்த சந்தர்ப்பத்தில் தான் நான் சரியான பாதையில் இருப்பதாக உணர்ந்தேன். அந்த நேரத்தில் இன்னொரு பாடலையும் நான் பாடினேன். அது கடவுளை அறிவதற்கான வழியைப் பற்றியது.

இந்நிலையில் இசைவுலகில் எனது பிரபலம் அதிகரித்தது. அப்போது நான் மிகவும் சிரமத்திற்குள்ளாயிருந்தேன். காரணம், எனது பாடல்கள் ஒரு பக்கம் பிரபலமாகிக் கொண்டிருக்கும் வேளையில் நானோ உண்மையைத் தேடும் வேட்கையில் மூழ்கியிருந்தேன். அந்த வேளையில் புத்த மதம் சிறந்ததும் உயர்ந்ததுமாக இருக்கும் என்று நம்பியிருந்தேன். ஆனாலும் அதை ஏற்றுக் கொள்ளவோ இசையுலகத்தைக் கைவிடவோ வழிபாடுகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்ளவோ எனக்குத் தோன்றவில்லை. நானோ உலக வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருந்தேன்.

பிறகு எனது சத்திய வேட்கை, கிரகங்கள் மற்றும் எண்கணித ஆய்வுகளின் வாயிலாக தொடர்ந்தது. அவைகளிலும் எனக்குச் சரியான நம்பிக்கை வரவில்லை. அப்போது இஸ்லாத்தைப் பற்றியும் நான் வெகுவாக அறிந்திருக்கவில்லை.

ஒரு நாள் நான் ஆச்சர்ய மிக்க வகையில் இஸ்லாத்தைப் பற்றி அறிய முடிந்தது. அதாவது எனது சகோதரர் பைத்துல் முகத்தஸ் சென்று விட்டுத் திரும்பினார். அப்போது அவருடைய நடையுடை பாவனைகள் சற்றே வித்தியாசமாக இருந்தன.

குர்ஆனோடு நான்:

பைத்துல் முகத்தஸிலிருந்து எனது சகோதரர் குர்ஆன் மொழிபெயர்ப்பு ஒன்றைக் கொண்டு வந்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவராக இருந்தாலும் அந்த வேதத்தைப் பற்றிய அலாதியான எதிர்பார்ப்பும் அது எனக்கு மகிழ்ச்சியளிக்கும் என்ற நம்பிக்கையும் நான் இழந்து போனதை அதில் கண்டெடுப்பேன் என்ற உறுதியும் அவரிடம் இருந்தன.

அந்த வேதத்தை நான் வாசித்த போது அதில் நேர்வழி உள்ளது என்பதை அறிந்தேன். அது நாம் படைக்கப்பட்டதன் நோக்கத்தையும் எனது வாழ்க்கையின் இலட்சியத்தையும் நான் எங்கிருந்து வந்தேன் என்ற விபரத்தையும் தெளிவுபடுத்தியது. அதே வேளையில் நான் இதுதான் சத்திய மார்க்கம் என்று உணர்ந்தேன். இம் மார்க்கம் மேற்கத்தியவர்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்டது, நடைமுறை சாத்தியமானது, வயதாகிவிட்ட நிலையில் ஆசைகள் அடங்கி விட்ட போது மேற்கொள்ள வேண்டுமெனக் கூறப்படும் மற்ற சித்தாந்தங்களைப் போன்றதல்ல.

ஆன்மீகத்திற்கும் உடலுக்குமிடையே உள்ள தொடர்பைக் கண்டு நான் வியந்தேன். இவ்விரண்டும் பிரியாது, இணைந்திருக்கும் என்பதையும் உணர்ந்தேன். எனவே உலக வாழ்க்கையை வெறுக்காமல் காடு, மலைகளிடையே போய் தங்காமலேயே ஆன்மீகத்தை அனுபவிக்கலாம் என்கிற முடிவுக்கு வந்தேன்.

அத்தோடு நிச்சயமாக நாம் இறைவனின் நாட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டியவர்கள் என்பதற்காகவும் அதுவே வானவர்களின் அந்தஸ்த்திற்கு நம்மை உயர்த்தக்கூடிய ஒரே வழி என்பதாகவும் உறுதி கொண்டேன். அப்போது தான் இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் எனக்குள் வலுப்பெற்றது.

அனைத்துமே அல்லாஹ்வின் படைப்புகளும் அவனது தயாரிப்புகளும் தான். அவனைச் சடைவோ உறக்கமோ பீடிப்பதில்லை என்பதை முதலாவதாக அறிந்தேன். அப்போது தான் நான் எனது தற்பெருமையிலிருந்து இறங்கலானேன். ஏனெனில் நான் என்னைப் படைத்தது யார்? என்பதையும் நான் வாழ்ந்து கொண்டிருப்பதற்கான எதார்த்தமான காரணம் யாது? என்பதையும் அறிந்து கொண்டேன். அது, இறைவனுடைய சட்டங்களை அறிந்து கொண்டு அவற்றிற்கு முழுமையாகக் கட்டுப்படுவதாகும். அதுவே இஸ்லாம் என்று அறிமுகப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் நான் ஒரு முஸ்லிம் என்பதை ஆழமாக உணர்ந்து கொண்டேன்.

இறைவன் பல தூதர்களைப் பலதரப்பட்ட சமூகங்களுக்கு அனுப்பி ஒரே தூதுச் செய்தியைத்தான் அருளியிருக்கிறான் என்பதைத் திருக்குர்ஆனைப் படிக்கும் போது அறிந்து கொண்டேன். ஆனாலும் யூதர்களும் கிறிஸ்தவர்களும் கருத்து வேற்றுமை கொண்டதற்கு என்ன காரணம்? ஆம், யூதர்கள் ஈஸா (அலை) அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் அவர்கள் ஈஸாவின் கூற்றை மாற்றியவர்கள். ஏன், கிறிஸ்தவர்களும் கூட ஈஸா (அலை) அவர்களின் தூதுத்துவத்தைப் புரிந்து கொள்ள வில்லை. எனவே தான் ஈஸாவை இறைவனின் குமாரர் எனக் கருதினர் - என்றெல்லாம் எனக்குத் தெளிவானது.

குர்ஆனைப் புரட்டும் போதெல்லாம் அது கூறக்கூடிய காரணங்களைப் பார்க்கும் போது அவை அறிவுப்பூர்வமானவையாகவும் தர்க்க ரீதியானவையாகவும் உள்ளன என்பதையறியலாம்.

மென்மேலும் நான் குர்ஆனைப் படித்து தொழுகை, ஜகாத், நடைமுறை ஒழுக்கம் ஆகியவற்றைப் பற்றி அதிகமதிகமாக அறிந்து கொண்டேன். அப்போதும் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வில்லை. ஆனாலும் குர்ஆன்தான் நான் தொலைத்த பொக்கிஷம் என்பதை உணர்ந்து கொண்டேன்.

இஸ்லாத்தை தழுவுதல்:

எனது சகோதரனைப் போலவே நானும் பைத்துல் முகத்தஸ் சென்று வர முடிவு செய்தேன். அங்கு சென்று பள்ளியில் அமர்ந்திருக்கும் போது ஒருவர் வந்து என்னிடம் என்ன வேண்டும் எனக் கேட்டார். நான் ஒரு முஸ்லிம் என்றேன். எனது பெயரைக் கேட்டார். நான் ஸ்டீபன்ஸ் எனக் கூறியதும் அவர் திகைத்துப் போனார். பிறகு நான் தொழுகையாளிகளுடன் வரிசையில் நின்று என்னால் இயன்ற வரை சில அசைவுகளை மேற்கொண்டு தொழுதேன்.

நான் லண்டன் திரும்பிய போது நஃபீஸா என்றொரு இஸ்லாமிய சகோதரியைச் சந்தித்த போது நான் இஸ்லாத்தைத் தழுவ விரும்புவதாகக் கூறினேன். அப்போதவர், நியூரீஜன்ட் பள்ளிவாசலுக்குச் செல்லுமாறு வழி காட்டினார்.

இது நான் குர்ஆனைப் படிக்க ஆரம்பித்த ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 1977 ஆம் ஆண்டு நடந்தது. அந்த நேரத்தில் நான் எனது பெருமையையும் ஆணவத்தையும் சாத்தானிய சேட்டைகளையும் விட்டொழித்து விட்டு ஒரேயொரு பாதையை நோக்கி முகம் திருப்ப வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

ஒரு வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு பள்ளியில் உள்ள இமாமை – தலைவரை நெருங்கிப் போய் அவர் முன்னிலையில் எனது முடிவை அறிவித்தேன். ஷஹாதத்தை மொழிந்தேன். பொருளாதாரமும் பிரபலமும் பெற்றுத் தராத நேர்வழியை எனக்குக் குர்ஆன் தான் கற்றுத் தந்தது. இன்று கிறிஸ்துவம் போன்ற பிற மதங்களைப் போலல்லாது அல்லாஹ்வோடு நேரடித் தொடர்பு கொள்ளக்கூடிய அளவுக்கு நான் இருக்கின்றேன்.

ஒரு முறை ஒரு இந்துப் பெண்மணி, 'இந்து மதக்கோட்பாடுகளைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. நாங்கள் ஒரே கடவுளை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் இந்த விக்கிரகங்களை மன ஓர்மைக்காகவே பயன்படுத்துகின்றோம்' என்று கூறினார். அவருடைய கூற்றிலிருந்து, இறைவனை நெருங்குவதற்கு இடைத் தரகர்கள் தேவைப்படுகின்றனர் என்று விளங்க முடிகின்றது. ஆனால் இஸ்லாமோ இவ்வாறான எல்லா தடைகளையும் தகர்த்து எறிந்து விட்டது. விசுவாசிகளையும் மற்றவர்களையும் பிரித்தறியக் கூடிய ஒரே அடையாளம் தொழுகைதான். அதுவே ஆத்ம சுத்திக்கு வழி.

இறுதியாக,

எனது காரியங்கள் யாவும் இறைவனுடைய திருப்திக்காகவே அமைய வேண்டும் என நான் நாடுகின்றேன். நான் இஸ்லாத்தைத் தழுவிய இந்த வரலாற்றுத் தகவல் படிப்போருக்கு படிப்பினையாக அமைய வேண்டும் என அல்லாஹ்வை வேண்டுகிறேன். நான் இஸ்லாத்தை தழுவும் முன்பு எந்த முஸ்லிமையும் சந்தித்ததுமில்லை வேறு யார் மூலமாகவும் நான் பாதிப்பு அடையவுமில்லை.

நான் குர்ஆனை படிக்கும் போது கவனித்தேன். மனிதனில் முழுமையானவர் என்று எவருமிலர். ஆனால் இஸ்லாமிய மார்க்கமோ பரிபூரணமானது. எனவே திருமறை குர்ஆனையும் திருநபி வழியையும் நாம் மேற்கொள்ளும் போது இவ்வுலக வாழ்க்கையில் நாம் வெற்றியடையலாம்.

நபி (ஸல்) அவர்களின் வழிமுறையை நாம் பின்பற்றுவதற்கு அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக
 

அஸ்ஸலாமு அலைக்கும்
 
சுயமரியாதையை இழந்து, முஸ்லிம் இனச்சுத்தகரிப்பு செய்தவனின் காலைத்தொட்டு வணங்குபவர்களை என்னவென்று சொலவதென்றே தெரியவில்லை. இஸ்லாம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்கு, இவர்கள் கொடுத்த தொப்பியை அணியாதது இஸ்லாத்துக்கு அவமானமாம்.

யா அல்லாஹ் எங்களை பெயர்தாங்கி முஸ்லிம்களாக அல்லாமல், இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பின்பற்றுபவர்களாக ஆக்குவாயாக. (இந்த படம் உண்மையானதா அல்லது  மார்பிங் செய்யப்பட்டதா என்பது டைம்ஸ் ஆஃப் இன்டியாவுக்கே வெளிச்சம்.)

Narendra Modi
Narendra Modi began a fast on September 17 to promote 'goodwill' in what was seen as a bid to project himself as a potential candidate for premier. (AFP Photo)
 AHMEDABAD: Gujarat chief minister Narendra Modi refused to put on a 'skull cap' offered by a Muslim cleric during his Sadbhavana' fast in Ahmedabad.

Sayed Imam Shahi Saiyed, a cleric of a small Dargah in Pirana village on the outskirts of the city (he lives in Savali village of Dakor taluka), had on Sunday gone up to stage to greet the chief minister, at Gujarat University Convention hall.

He offered Narendra Modi a 'skull cap', but Modi politely refused to wear it, asking him to offer a shawl instead. The imam did so, and Modi was seen accepting it.

"Narendra Modi's refusal to accept the cap is not my insult but an insult of Islam," Saiyed told reporters.

"I had come to Ahmedabad after hearing about the Sadbhavna Mission fast and went to the stage to felicitate Modi.

"When I offered him the cap he told me that he would not wear it. He might have thought that wearing a skull cap will dent his image...," the cleric said.

The BJP, however, said it was a non-issue. "Narendra Modi has clearly said that his policy is not of appeasement of a section of society unlike other parties, but our approach is development for all and treating everyone as equal," party spokesperson Vijay Rupani said.

"Thousands of members of the minority community have come here, but nobody insisted that Narendra Modi put on a skull cap. This is a non-issue which is being turned into a big one by our opponents," Rupani said.

முஸ்லிம் மாயன்கள்...


முஸ்லிம் மாயன்கள்...


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

========================
Please Note:

இந்த பதிவில் காணப்படும் ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் வார்த்தைகளின் உச்சரிப்புகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தவறு இருப்பின் சுட்டிக்காட்டவும். ஜஸாக்கல்லாஹ்.
========================

மாயன்கள் - இந்த பழங்குடியினத்தவரை சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஹாலிவுட் திரைப்படமான '2012' மிகவும் பிரபலமாக்கியது. மாயன்களின் காலண்டர் Dec, 2012-டுடன் முடிவதாகவும், அதுவே உலகின் அழிவுக்காலம் என்பது போலவுமான புரளிகள் உலகை வலம் வர ஆரம்பித்து, "யார் இந்த மாயன்கள்?" என்று இவர்களைப் பற்றி அறிந்திடும் ஆர்வத்தை தூண்டின.

யார் இவர்கள்?

மத்திய அமெரிக்காவின் பூர்வக்குடிமக்களான இவர்களின் நாகரிகம் மிகவும் பழமையானது. கி.மு 2600-வாக்கில் தோன்றியதாக கணக்கிடப்படும் மாயா நாகரிகம், பல ஆச்சர்ய தகவல்களை தன்னிடத்தே கொண்டதாக அமைந்துள்ளது. (வட, மத்திய மற்றும் தென்) அமெரிக்காவின் பண்டைய நாகரிகங்களிலேயே முழுமையான எழுத்து மொழியை கொண்டிருந்த இவர்கள், கணிதம், கட்டிடக்கலை என்று பல துறைகளில் மேம்பட்டிருந்தாக அறியப்படுகின்றது. 

இன்றைய மத்திய அமெரிக்க நாடுகளான ஹோண்டுரஸ், குவாதமாலா, பெலிஸ், எல் சால்படோர், மெக்ஸிகோ போன்ற நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்திருக்கின்றது மாயா நாகரிகம். 


பல்வேறு மொழிகளை பேசிய இவர்கள் சிறு சிறு குழுக்களாக இருந்திருக்கின்றனர். இந்த நாகரிகம் வீழ்ச்சியடைந்தற்கான காரணங்கள் பல சொல்லப்படுகின்றன. பஞ்சம் போன்ற இயற்கை சீரழிவுகளால் சிதைந்து போயிருந்த இந்த இனத்தவரை மேலும் சீரழித்தார்கள் ஸ்பெயின் ஆக்கிரமிப்பாளர்கள். 

ஆம், பதினைந்தாம் நூற்றாண்டில் கொலம்பஸ் அமெரிக்காவில் காலடி வைத்த பிறகு, ஸ்பெயின் தன்னுடைய காலனி ஆதிக்கத்தை அமெரிக்காவில் நிலைநாட்ட தொடங்கியபோது, பல்வேறு பழங்குடியினர் கொன்றொழிக்கப்பட்டனர். அதற்கு மாயன்களும் விதிவிலக்கல்ல. 

மாயா நாகரிகம் வீழ்ச்சியடைந்தது.  

மாயன் இனத்தவரின் இன்றைய நிலை:

இன்றளவும், சுமார் ஆறு லட்சம் மாயன்கள் மத்திய அமெரிக்கா முழுவதும் பரவியிருக்கின்றனர். 

ஆனால், இவர்கள் மீதான அடக்குமுறை மட்டும் குறைந்ததாக தெரியவில்லை. இனவெறி தலைவிரித்தாடுகின்றது. 

இவர்கள் அதிகம் வாழும் மெக்ஸிகோவின் தென்மாநிலமான ஷீயபாஸ் (Chiapas) போன்ற பகுதிகளில் கூட இவர்கள் இரண்டாம்தர குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர். நடைப்பாதையில் வெள்ளையின மக்கள் எதிரே வந்தால் இவர்கள் நடைபாதையில் இருந்து சாலைக்கு இறங்கி விட வேண்டுமாம். 

சகிக்க முடியாத இந்த இனவெறிதான், சில மாயன்களை போராடத் தூண்டி, மெக்ஸிகோ அரசுக்கு எதிரான புரட்சிப்படையை உருவாக்க வைத்தது. 

1990-க்களின் மத்தியில், ஸபதிஸ்தா தேசிய விடுதலை ராணுவம் (Ejército Zapatista de Liberación Nacional, EZLN) என்ற அரசுக்கு எதிரான அமைப்பை துவங்கி, இனவெறி மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடத் தொடங்கினர் மாயன்களில் ஒரு பகுதியினர். இன்றளவும் போராடிக்கொண்டு இருக்கின்றனர். 

முஸ்லிம் மாயன்கள்:

2005-ஆம் ஆண்டு, ஜெர்மனியின் பிரபல ஊடகமான தே ஷ்பிகேல் (Der Spiegel), பலரது கவனத்தையும் ஈர்க்கும்படியான ஒரு செய்தியை வெளியிட்டது.

மெக்ஸிகோவில் வாழும் பழங்குடியின மாயன் மக்கள் நூற்றுக்கணக்கில் இஸ்லாத்தை தழுவி வருவதாக கூறிய தே ஷ்பிகேல், பல சுவாரசிய தகவல்களை அந்த கட்டுரை முழுக்க அள்ளி தெளித்திருந்தது. அவற்றில் சில,

  • சுமார் 300 மாயன்கள் சமீப காலங்களில் இஸ்லாத்தை தழுவியுள்ளனர். 
  • பள்ளிவாசல், மதரசா, இஸ்லாமிய மையம் போன்றவை இவர்களிடையே இருக்கின்றது. 
  • மாயன்கள் ஹஜ் செய்கின்றனர். 
  • ஷீயபாஸ் மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரான சன் கிறிஸ்டோபாலில், ஹிஜாப் அணிந்த பெண்களை காணுவது இயல்பாகி விட்டது. 

தே ஷ்பிகேல் ஊடகத்தின் இதுப் போன்ற தகவல்கள் உலகளாவிய முஸ்லிம்களுக்கு பெருத்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். சிறிய அளவிலான முஸ்லிம்கள் மெக்ஸிகோவில் வாழ்கின்றனர் என்பது பலரும் அறிந்திருந்த செய்திதான். ஆனால், மாயன் இனத்தவரில் முஸ்லிம்கள் என்பது பலருக்கும் தெரிந்திராத செய்தியாகவே இருந்திருக்க வேண்டும்.  

உலகின் எங்கோ ஒரு மூலையில், தாங்கள் பெரிதும் அறிந்திடாத பழங்குடியினத்தவரில் தங்களின் மார்க்க சகோதரர்களை கண்டுக்கொண்டனர் முஸ்லிம்கள். 

தே ஷ்பிகேலின் 2005-ஆம் ஆண்டு செய்தி, சுமார் முன்னூறு முஸ்லிம் மாயன்கள் மெக்ஸிகோவில் இருப்பதாக தெரிவித்தாலும், மிக சமீபத்திய அல்-ஜசீரா ஊடகத்தின் செய்தி சுமார் ஐநூறு முஸ்லிம் மாயன்கள் அங்கிருப்பதாக தெரிவிக்கின்றது. 

மாயன்களிடையே எப்படி இஸ்லாம்?

1990-க்களின் மத்தியில், ஸ்பானிஷ் பேசும் ஐரோப்பிய முஸ்லிம்கள் இஸ்லாமிய அழைப்பு பணி மேற்கொள்ள ஷீயபாஸ் மாநிலத்திற்கு வந்தனர். அவர்களுக்கு தலைமை தாங்கியவர் ஆவுரெலியனோ பெரெஸ் (Aureliano Perez) என்பவராவார். 

இனவெறிக்கு எதிராக போராடிக்கொண்டிருந்த ஸபதிஸ்தா போராளிகளுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்த பெரெஸ், இஸ்லாமிய போதனைகளுக்கு மாயன் பழங்குடியினத்தவர் ஆர்வம் காட்டுவதை அறிந்துக்கொண்டார். 

ஷீயபாஸ்சில் இவர்களது அழைப்புபணிக்கு, இறைவன் கிருபையால், மகத்தான ஆதரவு கிடைக்க அதிக அளவிலான மாயன்கள் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர். 

...there have been reports of indigenous Mayans and Tzotzils converting to Islam in large numbers - wikipedia. 
பழங்குடியின மாயன்கள் அதிகளவில் இஸ்லாத்தை தழுவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன - (extract from the original quote of ) wikipedia 

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு தகவல் என்னவென்றால், இப்படி இஸ்லாத்தை தழுவியவர்கள், தங்களோடு அதனை நிறுத்திக்கொள்ளாமல் தங்கள் குடும்பத்தாரிடையே இறைச்செய்தியை கொண்டு செல்வதில் தீவிரமாக இருக்கின்றனர். உதாரணத்திற்கு, தே ஷ்பிகேல் ஊடகம், ஆனஸ்டசியோ ரொமெஸ் (Anastasio Gomez) என்ற மாயன் முஸ்லிம் சகோதரரை பேட்டி கண்டிருந்தது. இந்த சகோதரர் தன் குடும்பத்தார் அனைவரையும், இறைவன் கிருபையால், இஸ்லாத்தின்பால் கொண்டுவந்து விட்டார். இதில் அவரது நூறு வயது பாட்டியும் அடக்கம்.  

தற்போது இப்ராஹீம் என்று அறியப்படும் ரொமெஸ் தன் போன்ற பதினைந்து பழங்குடியினருடன் சேர்ந்து ஹஜ் செய்திருக்கின்றார்.  

'இஸ்லாத்தில் இனம்/ஜாதி போன்றவற்றிற்கு இடமில்லை' என்று மகிழ்ச்சியுடன் கூறும் மாயன்களை, மது மற்றும் வட்டி மீதான இஸ்லாத்தின் கடுமையான அணுகுமுறை பெரிதும் கவர்ந்திருப்பதாக RNW (Radio Netherlands Worldwide) தெரிவிக்கின்றது. 

அதிவிரைவான மாற்றங்கள் மாயன்களிடையே நடப்பதைக் கண்ட மெக்ஸிகோ அரசு கலவரமடைந்தது. மாயன் முஸ்லிம்களுக்கும், அல்-குவைதா போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கும் தொடர்பு இருக்கலாமென வெளிப்படையாக குற்றஞ்சாட்டியது. அதுமட்டுமல்லாமல், மாயன்களை தீவிரமாக கண்காணிக்கவும் தொடங்கியது. மெக்ஸிகோ அரசின் இந்த குற்றசாட்டிற்கு எந்தவொரு வலுவான ஆதாரமும் கொடுக்கப்படவில்லை என்கின்றது RNW.

மாயன்களோ இந்த குற்றசாட்டை முற்றிலுமாக மறுக்கின்றனர். மெக்ஸிகோவிற்கு வெளியேயான முஸ்லிம்களுடன் எந்தவொரு தொடர்பும் இல்லாத நிலையில் இது எப்படி சாத்தியம் என்று கேட்கின்றனர் அவர்கள்.    

பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையேயும் இஸ்லாம் தொடர்ந்து மாயன்களை தன்னுள் அரவணைத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

"இந்த பள்ளிவாசலை சார்ந்து தற்போது பதினேழு முஸ்லிம் மாயன் குடும்பங்கள் உள்ளனர். படிப்படியாக நிறைய மக்கள் இஸ்லாத்தை பற்றி அறிவதில் ஆர்வம் காட்டுகின்றனர்" என்று கூறுகின்றார் சன் கிறிஸ்டோபால் நகருக்கு அருகில் உள்ள பள்ளிவாசலின் இமாமான சால்படோர் லோபெஸ் (Salvador Lopez).

"இஸ்லாம் மெதுவாக, அதே நேரம் உறுதியாக இங்கு வளர்ந்து வருகின்றது. Yes, I think we are here to stay" 

இன்ஷா அல்லாஹ், இன்றிலிருந்து நம்முடைய துஆக்களில் இவர்களையும் சேர்த்துக்கொள்வோம்.

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

Topic Initiation:
1. Brother Peer Mohamed.

German and Spanish Pronunciations helped by: 
1. Sister Shameena.

My sincere thanks to:
1. Der Spiegel.
2. Radio Netherlands Worldwide.
3. Br. Peer Mohamed.
4. Sr. Shameena

References:
1. Praying to Allah in Mexico, Islam Is Gaining a Foothold in Chiapas - Spiegel Online, 28th May 2005. link
2. Islam is the new religion in rebellious Mexican state Chiapas - RNW, 17th December 2009. link
3. Inside Mexico's mud-hut mosque - Aljazeera, 30th August 2011. link
4. Islam in Mexico - wikipedia. link
5. Maya Indians - howstuffworks. link
6. El Islam en México - M Semanal. 15th May 2011. link
7. மாயன் நாகரீகம்-நவீன நாகரீகத்தின் திறவுகோல் - உயிர்மை. link
8. மாயன் நாகரீகம் - Ehow, 25th June 2011. link
9. Mayans and Muslims? - ALAMEDA ISLAMICA, 6th May 2008. link
10. Islam spreading in southern Maya Mexico - Catholic Online, 31st Aug 2011. link
11. Muslims In Mexico Under Greater Scrutiny From U.S - Islamophobia today, 23rd May 2011. link
12. Spiegel Online, Der Spiegel, 2012 Phenomenon, RNW, Tzotzil people, Tzotzil Lanugauge, Mayan Languages - wikipedia.

வஸ்ஸலாம்,

Friday 16 September 2011

தோண்ட தோண்ட அறிவியல் புதையல் - அல்குர்ஆன்



தோண்ட தோண்ட அறிவியல் புதையல் - அல்குர்ஆன்

சார்பியல் கொள்கையும் இஸ்லாத்தின் பார்வையும்:

உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் அமைதி உண்டாவதாக.

நமது முந்தைய பதிவான “கடவுளை தெளிவு படுத்தும் காலமும் வெளியும்” பதிவை காண இங்குசொடுக்கவும்.

இறை மறையின் காலம் பற்றிய செய்திகளையும், தவறாக காண்பிக்கப்படும் நபியின் விண்வெளி பயணத்தை பற்றிய அறிய சில செய்திகளையும், சில விசயங்களை மறைத்து பொய் தகவல்களை இணைத்து வெளிப்படுத்திய நாத்திக, கம்முனிஷ பொய்களையும் உடைப்பதற்கே நம்முடைய இந்த பதிவுகள்.

இப்பிரபஞ்சத்தில் அனைத்தும் காரண காரியங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது. அதுதான் விதி. இப்பிரபஞ்சம் நேர்த்தியாக வடிவமைக்கபட்டதுமில்லாமல் பொதுவான இயற்பியல் விதிகளுக்கு கட்டுப்பட்டு அதன் பயணத்தை தொடர்கிறது. ஒரு சிறு பொருள் அசைந்தாலும் கூட ஏதேனும் ஒரு அர்த்தம் இருக்கும், இயற்பியல் விதிகளின் படியே செயல்படும். மனிதன் தான் செயல்படுத்தும் செயல்களில் கூட ஒரு நேர்த்தியை எதிர்பார்க்கிறான், அப்படியிருக்க இறைவனின் அரசாட்சி இப்பிரபஞ்சம் நேர்த்தியாக உள்ளதும், அடிப்படை இயற்பியல் விதிகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதும் இறைவனின் நேர்த்தியை குறிப்பது. தானாக உருவானது என்ற வாதத்தை வைக்கும் நாத்திகர்கள் இயற்பியல் விதிகளை பின்பற்றி அனைத்தையும் சரியான முறையில் இயக்க வேண்டிய அவசியம் இயற்கைக்கு இல்லை என்பதை உணர வேண்டும்.

இப்பிரபஞ்ச இயக்கதிற்காகவே முதலில் விதிகள் உருவாக்கப்பட்டன. விதிகள் இல்லாத பொருள் எப்படி இருக்க, இயங்க முடியும்? விதிகள் இல்லையெனில் பிரபஞ்சமே இல்லை, உயிரினமும் இல்லை, அதற்கு வாய்ப்பும் இல்லை. அப்படியெனில் இயற்பியல் விதிகளை பின்பற்றும் இயற்கையை உருவாக்கியது வேறு ஒரு சக்தியாகத்தானே இருக்க முடியும்.

ஆக இந்த பிரபஞ்சத்தில் எந்த ஒன்றும் இயற்பியல் விதிகளை மீறமுடியாது, அதை உருவாக்கியவனை தவிர. விதியை இயற்றியவன் இறைவன் என்கிற போது அது இறைவனுக்கு இல்லை என்று புரிந்து கொள்ளலாம்.

இஸ்லாத்தையும் அதன் கொள்கைகளை எவ்வளவு அறிவியல் பூர்வமாக விளக்கினாலும் அது அடிப்படை நம்பிக்கை சார்ந்த மார்க்கமாகும். ஆதாரங்களின் அடிப்படையிலான நம்பிக்கையே அது, இஸ்லாத்திற்கு மட்டும் அல்ல, அறிவியலுக்கும் அதே நம்பிக்கை தான் ஆணிவேர். ஆம் ஒரு கண்டுபிடிப்பை ஆதாரங்களுடனான நம்பிக்கை மூலம் அணுகினால் மட்டுமே அதை உருவாக்க முடியும்.

பல நாத்திகர்கள் இறைவனின் ஆற்றல், அதிசயம் சார்ந்த கேள்விகளை எழுப்புவதை காண முடிகிறது. இயற்கையாக நடைமுறையில் உள்ளதை யாராவது அதிசயம் என்று கூறுவார்களா? மனிதனின் சக்திக்கு மீறிய இயற்கைக்கு மாறாக நடைபெறுவது தான் அதிசயம். அது இயற்பியல் விதிகளுக்கு மாறாக கூட இருக்கலாம். இதில் தான் நாத்திகர்களின் கேள்விகள் எழுகின்றன. மற்ற அனைத்தும் சில வரையரைகுட்பட்டவைகள்.

இதை வைத்து பார்க்கும் போது இஸ்லாம் விளக்கிய அனைத்தும் கூட இறைவன் உருவாக்கிய பிரபஞ்ச விதிகளுக்குள் கட்டுப்பட்டுதான் நடக்கும். அந்த விசயங்களை மனிதனால் சுலபமாக விளக்க முடியும். இதுவல்லாமல் இறைவனின் அதிசயங்கள்,ஆற்றலை வெளிப்படுத்த கூடியவைகள் உதாரணமாக சந்திரன் பிளக்கப்பட்டது, இறந்த மனிதனை ஏசுநாதர் எழுப்பியது, மோசேயின் கைத்தடி பாம்பாக மாறியது etc. இது போன்றவைகள் இயற்பியல் விதிகளுக்கு மாறாகத்தான் இருக்கும், அப்படி இருக்கும் பட்சத்தில் தான் அது அதிசயம் என்றும் கூறப்படும், மேலும் இது இறைவனால் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கை சார்ந்தது, இதற்கு அறிவியலில் ஆதாரம் கேட்பது, இப்படி நடக்க வாய்ப்பில்லை என்று வாதிடுவது ஏற்றுகொள்ள முடியாதது. ஏனெனில் இறைவன் உருவாக்கியதை இறைவனால் மீற முடியாதா என்ன? என்ற ஏற்றுகொள்ளதக்க கேள்வி வரும். அந்த அதிசயங்களும் நேரில் கண்டால் மட்டுமே புரியக்கூடியது ஆகும்.

இந்த வரைமுறைகளை வைத்து இறைவனும் விதிகளுக்கு உட்பட்டவன் என்பதாக கருதுகின்றனர். இறைவன் தான் விதிகளுக்கு அப்பாற்பட்டவன் ஆனால் அவனால் உருவாக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் விதிகளுக்குட்பட்டவையே. இதை இறைவனின் சில வசனங்கள் மூலம் விளங்கலாம்,

(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி     (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் குன்‘ –ஆகுக – என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது. (அல்குர்ஆன்2:117)

நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வேஅவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்நப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனநிடம்) பரிந்து பேசபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன்ஆகவே அவனையே வணங்குங்கள்; (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (அல்குர்ஆன்10:03)

மேலே கொடுக்கப்பட்ட இரண்டு  வசனங்களும் ஒன்றுக்கொண்டு மாறுபட்டவையாக தோன்றலாம், அவன் ‘ஆகுக’ என்றால் ஆகிவிடும் அப்படி இருக்க எதற்காக ஆறு நாட்கள் (காலங்கள்). இரண்டுமே உண்மைதான், இந்த ஆறு நாட்கள் என்பது பிரபஞ்சம் உருவாகி ஆறு நாட்களாக, ஆறு பகுதிகளாக கூட இருக்கலாம். இறைவனின் புறத்தில் ஆகுக என்றால் ஆகிவிடுகிறது, ஏனெனில் அவன் காலத்திற்கு அப்பாற்பட்டவன். அவனுடைய பார்வை நாளை என்ன நடக்க போகிறதோ என்று எதிர்பார்க்கும் பார்வை அல்ல. மனிதனுடைய பார்வையில் காலம் என்றொன்று சேர்ந்து விடுகிறது.

இதை இறைவனே இவ்வாறு குறிப்பிடுகின்றான்.

ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரயீலாகிய) அவ்வான்மாவும்அவனிடம் ஏறிச் செல்வார்கள் அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும். எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக. நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர்.ஆனால்நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம்.
(அல் குர்ஆன் 70:4–7)

“இஸ்லாம் கூறும் சார்வியல் கோட்பாடு” என்ற தலைப்பில் onlinepj.com இணைய தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையை சரியாக புரிந்து கொள்ளாமல் பதிலளிக்கிறேன் என்ற பெயரில் செங்கொடி என்பவர் தன்னுடைய பொய்களை இணைத்து “கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா” என்ற தலைப்பில் பதிவாக இட்டது பதிவுலகில் உள்ளவர்கள் அறிந்ததே, இவரின் பதிவில் குர்ஆன் வசனங்களையும் ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கையையும் விளங்கி கொள்ளாமல் தனக்கு தோன்றிய கருத்துக்களை கூறியுள்ளார் என்றால் அது மிகை இல்லை.

சார்பியல் கொள்கைகளை தெள்ள தெளிவாக எடுத்து வைக்கும் மூன்று குர்ஆன் வசனங்களுக்கும் சார்பியலுக்கும் சம்பந்தம் இல்லை என்பதே செங்கொடி போன்ற இறை மறுப்பாளர்களின் வாதம், தங்களுடைய பொய் பிரசாரத்திற்காக அவர்களால் எடுத்து கொள்ளப்பட்ட சில குர்ஆன் வசனங்களும் அதன் விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன, 

22:47. (நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை; மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும். 
22:48. அநியாயங்கள் செய்து கொண்டிருந்த எத்தனையோ ஊர்களுக்கு நான் அவகாசம் கொடுத்தேன்; பின்னர் அவற்றைப் பிடித்துக் கொண்டேன்; மேலும் (யாவும்) என்னிடமே மீண்டும் வரவேண்டும்.

22:47. Yet they ask thee to hasten on the Punishment! But Allah will not fail in His Promise. Verily a Day in the sight of thy Lord is like a thousand years of your reckoning.
22: 48. And to how many populations did I give respite, which were given to wrongdoing? in the end I punished them. To me is the destination [of all].

70:4. ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.

70:4. The angels and the spirit ascend unto him in a Day the measure whereof is [as] fifty thousand years:

32:5. வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.

32:5. He rules [all] affairs from the heavens to the earth: in the end will [all affairs] go up to Him, on a Day, the space whereof will be [as] a thousand years of your reckoning.

எதற்காக இறைவன் ஒரு நாள் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு சமம் என்று கூற வேண்டும், இங்குதான் சார்பியல் கோட்பாடு வருகிறது.

மேலே கொடுக்கப்பட்ட முதல் இரண்டு வசனங்கள் 22:47,48 ஆகியவை இறைவனின் வேதனையை பற்றிய வசனங்கள், அதாவது வேதனை வந்தடைவதர்கான கால அளவை பற்றி குறிப்பிடுகிறது, அதை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள் என்றும், இரண்டாம் பகுதியில் குறிப்பிடும் போது கால அளவையும் குறிப்பிடுகிறான், தண்டனையின் வேகத்தை பற்றி குறிப்பிடும் போது கால அளவை குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன, அப்படியெனில் காலத்தை குறிப்பிட்டாலே அதில் வேகமும் உள்ளது என்று தான் அர்த்தம். கடந்த நூற்றாண்டில் தான் வேகத்தை பொருத்து காலம் மாறுபடும் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது, சார்பியல் கொள்கைக்கு பிறகுதான்.


அதே போன்று 70:4 வசனத்தில் வானவர்களின் பிரயாணம் பற்றி பேசும் குர்ஆன் பிரயாணத்தில் இருக்கும் போது வானவர்களின் ஒரு நாளின் அளவு என்பது பூமியில் இருக்கும் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு சமமாக இருக்கும் என்று கூறுகிறது.

அடுத்த வசனமான 32:5 என்ற வசனமும் கால மாறுதல்களை பற்றி குறிப்பிட்ட போதும் இதற்கு மாறாக ஒவ்வொறு காரியமும் பயணிப்பதாக கூறுகிறது. (அதை பிறகு பார்போம்)

மேலே கூறப்பட்ட மூன்று வசனங்களும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வேகத்தில் பயணிக்கும் வெவ்வேறு பொருள்களை அல்லது செய்திகளை பற்றி விளக்குகிறது.

முதலில் நாம் விளங்கி கொள்ள வேண்டியது, பிரயாணத்தின் போது கால மாறுதல்கள் ஏற்படும் என்ற சென்ற நூற்றாண்டில் கண்டறிந்த உண்மையை முஹம்மது நபி எவ்வாறு கூறி இருக்க முடியும்இதை பற்றி நாத்திக வாதிகள் கூறும்போது அல்லாஹ்வின் நாள் என்பது பெரியது என்று கூறி மக்களை ஏமாற்றவே முஹம்மது நபி அவ்வாறு கூறியதாக கூறுகின்றனர், இதை பார்க்கும் போது வசனங்களையும், சார்பியல் கொள்கை பற்றியும் எதையும் தெரியாமல் உளறுகின்றனர் என்றே கூறலாம்.

ஏனெனில் இதே கருத்து குர்ஆனில் சில வசனங்களில் தெளிவான முறையில் அமைந்துள்ளது. மேலும் எதை வைத்து ஆயிரம், ஐம்பதாயிரம் என்ற அளவுகள் கூறி இருக்க முடியும், இரண்டு அளவுகளும் சரியான எப்படி அமைய முடியும். எப்படி சரியாக அமைகிறது என்று வரும் விளக்கங்களில் பார்க்கலாம்.

சார்பியல் விதிப்படி ஒளியின் வேகமே பிரபஞ்சத்தில் அதிக பட்ச வேகம், எந்த ஒரு பொருளும் ஒளியின் வேகத்திலோ அல்லது அதைவிட வேகமாகவோ செல்ல முடியாது, ஒளியின் வேகத்தில் ஒன்று பயணிப்பதாக இருந்தால் அதற்கு காலம் என்பது நின்று விடும். இன்று வரை எவ்வளவோ முயற்சி செய்தும் ஒளியின் 99.9999.. % அளவிற்கு நுண்ணிய அணுக்களை (Sub Elementary Particles)அனுப்பினாலும் ஒளியின் வேகத்தை தொடமுடியவில்லை. அதற்கு ஒரு தடையும் (Barrier) உள்ளது. அப்படியும் ஒளியை மிஞ்சிய வேகத்தில் ஒன்று பயணித்தால் (ஒரு வாதத்திற்கு மட்டும்) அதற்கு இயற்கை விதிகள் முற்றிலும் மாறுபடும்.

ஆக பயனிக்கவோ, செய்திகளை அனுப்பவோ அதிகபட்ச வேகம் 99.999999……%C (ஒளி வேகம்). குர்ஆன் வசனங்களில் மனிதன் அந்த வேகத்தில் சென்றதாக குறிப்பிடவில்லை, அதற்கு மாறாக செய்திகளும், வானவர்களும் பயணித்ததாக குறிப்பிடுகிறது.

22:47 வசனத்தில் வேதனைகள் வருவதற்கான செய்திகளை பற்றி குறிப்பிடுகிறது, தற்போதைய அறிவியலே அதற்கு நேரிடையாக அதிகபட்ச வாய்ப்பு இருக்கிறது என்ற அறிந்த நிலையில் அதை பற்றிய விளக்கம் தேவை இல்லை. 

அடுத்த வசனமாக 70:4 மலக்குகள் அந்த வேகத்தில் சென்றதாக கூறுகிறது, மலக்குகளுக்கு மட்டும் அந்த வேகத்தில் பயணிப்பது எப்படி சாத்தியம் என்று கேட்கலாம்,வானவர்கள் என்பவர்கள் ஒளியால் படைக்க பட்டவர்கள் என்று     கூறியதால், ஒளியால் உருவான ஒன்று ஒளி வேகத்தில் செல்வது என்பது அதிசயமான ஒன்று அல்ல.

நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளனர். ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டுள்ளனர். ஆதம்(அலை) உங்களுக்கு வர்ணிக்கப்பட்ட மண்ணால் படைக்கப்பட்டார்.  அறிவிப்பவர் : ஆயிஷா(ர­)

நூல் : முஸ்லிம் (5314)

சரி அது என்ன ஒரு நாள் என்பது ஆயிரம், ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு சமம் என்று கூறுகிறது, அதற்குதான் Lorentz transformation வருகிறது. இயற்பியல் விஞ்ஞானிகளான ஐன்ஸ்டீன், ஜோசப் லார்மேர் மற்றும் ஹென்றிக் லாரன்ஸ் ஆகியோர் கால மாறுதல்களுக்கு அளவை அறிய lorentz factor  என்ற ஒரு சூத்திரத்தை வெளியிட்டனர். இயக்கத்தில் உள்ள பொருளுக்கும் நிலையாக உள்ள பொருளுக்கும் இடையே உள்ள கால மாறுதல்களை (Time Dilation) அதன் திசை வேகத்தை வைத்து கணக்கிடகூடிய ஒரு சூத்திரத்தை பயன்படுத்தினர், அது loretz factor என்று அழைக்கப்படுகிறது. இதை கொடுக்கப்பட்ட இறை வசனங்களுக்கு பொருத்தி பாப்போம்.

                   
            Δt’- நாம் கணக்கிட கூடிய கால அளவு (நிலையாக உள்ள பொருள்)
            Δt  - நகரும் பொருளின் காலம்
             V   - திசைவேகம் (நகரும் பொருளின் வேகம்)
             C   - ஒளியின் வேகம் (299,792,458 மீட்டர்/செகண்ட் = 1C) 

உதாரணமாக நகரும் பொருளின் காலம் நாள் என்பதாக வைத்துக்கொள்ளுங்கள், அதன் திசை வேகத்தையும் ஒளியின் வேகத்தையும் வைத்து மேற்கண்ட சமன்பாட்டை செய்தால் பூமியில் நிலையாக உள்ளவரின் காலம் வந்துவிடும்.

                                 Δt’= 1/ (1-(299792457.9988748489258802)2 / (299792458) 2)1/2

சமன்பாடுகள் செய்ய கடினமாக இருப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டிக்கு சென்று Inputகொடுத்தால் உங்களுக்கு விடை கிடைக்கும்.

Time dilation:

பொதுவாக அரை மடங்கு (.5C) ஒளியின் வேகத்தில் செல்லும் பொருளுக்கும் கூட கால மாறுதல்கள் தோராயமாக ஒன்றரை மடங்காக இருக்கும், அதுவே ஒளியின் வேகத்தை நெருங்க நெருங்க அதன் கால மாறுதல்கள் வேகமாக அதிகரித்து, ஒரு பொருள் ஒளியின் வேகத்தை அடைந்து விட்டால், அந்த பொருளுக்கு காலம் என்பதே நின்று விடுகிறது. கீழே உள்ள படத்தில் மாற்றங்களை காணலாம்.

                                                   
ஒரு நாள் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு சமம் என்கிற போது, ஆண்டுகளையும் முதலில் நாட்கணக்கில் கொண்டுவருவோம்.
       
        1000 ஆண்டுகள் = 365000 நாட்கள்
        T என்பதில் 365000 என்பதை இட 

பிரயாணத்தின் போது ஒரு நாள் என்பது,  0.9999999999962469 என்ற ஒளி வேகத்தில் பயணித்தால்பூமியில் கணக்கிடும் ஆயிரம் ஆண்டுகளுக்கு (365000~ நாட்கள்) சமமாக இருக்கும் என்பது உறுதியாகிறது.

ஆயிரம் ஐம்பதாயிரம் என்று இருவேறு மாதிரி வசனங்கள் கூறுவதால், குறிப்பிடப்பட்ட ஐம்பதாயிரம் ஆண்டுகள் என்பது கவனிக்கத்தக்கது,  0.9999999999962469 C என்ற ஒளி வேகத்தில் பயணித்தால் ஆயிரம் ஆண்டுகளுக்கு சமமாகும் என்கிறபோது, அதைவிட ஐம்பது மடங்கு அதிகமாக காலம் மாறுகிறது எனில் ஒளியின் வேகத்தை மிஞ்சிய வேகத்தில் பயணித்தால் மட்டுமே சாத்தியம் என்று நீங்கள் நினைக்கலாம், அதுதான் இல்லை. வெறும் சில மில்லிமீட்டர் அளவு வேகத்தை அதிகபடுத்த அதன் கால மாறுபாடு ஐம்பதாயிரம் என்று ஆகிறது.

        50000 ஆண்டுகள் = 18250000  நாட்கள்
        T என்பதில் 18250000  என்பதை இட 

பிரயாணத்தின் போது ஒரு நாள் என்பது வெறும் சில மில்லிமீட்டர் வேகத்தை அதிகரித்து அதாவது 0.9999999999999984 C  என்கிற வேகத்தில் பயணித்தால் போதும், அது பூமியில் கணக்கிடகூடிய ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு சமமாக இருக்கும் என்பதையும் அறிய முடியும். மேலே குறிப்பிட்ட இணையத்தில் சென்று நாட்களையும் வேகத்தையும் சரியாக அளந்து கொள்ளலாம்.

ஆக தற்போதைய அறிவியலின் படி ஒரு ஒளி அல்லது ஒளியின் ஆன்மா ஒளிக்கு இணையான99.999...% வேகத்தில் செல்வது சாத்தியமே, 99.999… அந்த வேகத்தில் செல்ல முடியும் என்பதை இறை வேதம் பறைசாற்றுகிறது என்பதை ஒப்போகொள்கிரீர்களா என்பதை அறிய ஆவலாக உள்ளோம்.

நாம் கூறாமல் விட்ட மற்றொரு வசனமான 32:5 ல் ஒரு நாள் அனைத்து பொருள்களும் முடிவில் அவனிடத்தில் திரும்ப செல்லும் என்றும் செல்லக்கூடிய (நகரும் பொருளின்) அந்த நாளின் அளவு ஆயிரம் ஆண்டுகளுக்கு இணையாக இருக்கும் என்றும் குறிப்பிடுகின்றான்.

அனைத்து பொருள்களும் என்று இவ்வசனத்தில் குறிப்பிடபட்டுள்ளது, அனைத்து பொருள்களும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இணையான அளவுள்ள வேகத்தில் பயணிக்க போவதாக குறிப்பிடுவது விசித்திரமாக இருக்கிறது என்று சிந்திக்கிறீர்களா... அதை பற்றியும் பார்க்கலாம்.


பிரபஞ்ச உருவாக்கத்தை பற்றி விவரிக்கும் பிக் பாங் கொள்கை, பிரபஞ்சம் உருவாகும் பொது அது விரிவடையும் விகிதம் ஒளியின் வேகத்தை விட அதிகமாகவோ அல்லது அதற்கு இணையான வேகத்திலோதான் விரிவடைந்த தாக கூறுகிறது. சார்பியல் விதிகளுக்கு எதிராக இருக்கிறதே என்று என்ன வேண்டாம், பிரபஞ்சத்தில் உள்ள பொருள்கள் தான் ஒளி வேகத்தில் செல்லாது ஆனால் வெளியோ ஒளி வேகத்தில் விரிவடையும் என்கின்றனர் அறிவியலாளர்கள். வெளி விரிவடைவது உறுதியும் செய்யப்பட்டுள்ளது. இதை எட்வின் ஹப்ல் (Edwin hubble)என்ற விஞ்ஞானி டோப்ளர் எபக்ட் (Doppler Effect) மூலம் விளக்கினார்.

அதே போல விரிவடைந்த பிரபஞ்சம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு  அதன் வேகத்தை குறைத்து விரிவடையும் உச்சத்தை அடையும், பிறகு மீண்டும் அதே அழுத்தத்துடன் சுருங்க ஆரம்பிக்கும், விரிவடைந்த அதே வேகத்தில் தான் சுருங்கும், இதை விவருக்கும் விதமாக உள்ளதே பிக் ரிப், பிக் கிரன்ச் ஆகிய கொள்கைகள், அதாவது குர்ஆன் கூறும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இணை என்கிறபோது அது ஒளியின் 99.999... %C என்ற வேகத்தில் சுருங்கும்.


(Its expansion will slow down until it reaches a maximum size. Then it will recoil, collapsing back on itself. As it does, the universe will become denser and hotter until it ends in an infinitely hot, infinitely dense singularity.

இங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு இணையான அந்த நாள் என்பது வேகத்தையே குறிக்கிறது, அதை பற்றி விவரிக்கும் குர்ஆன் வசனமே இது.

32:5. வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.


                                                          தொடரும்...