Tuesday 24 January 2012

ஈரானை இஸ்ரேல் தாக்கினால்...: பிரான்ஸ் ஜனாதிபதி சார்கோசி எச்சரிக்கை!


ஈரானை இஸ்ரேல் தாக்கினால்...: பிரான்ஸ் ஜனாதிபதி சார்கோசி எச்சரிக்கை!



நிக்கோலஸ் சர்கோசி
நிக்கோலஸ் சர்கோசி
"இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால், மத்திய கிழக்கு நாடுகளில் குழப்பமும் உலகம் முழுவதும் போரும் ஏற்படும்" என்று பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட பிரான்ஸ் நாட்டின் நான்கு இராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில், பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி சர்கோசியை அந்நாட்டின் முக்கிய உயரதிகாரிகள் சந்தித்து பேசினர். அப்போது அவர்களிடையே சர்கோசி பேசும் போது,
"ஆப்கானிஸ்தானில் எங்கள் வீரர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தொடர்ந்தால் ஆப்கானிஸ்தானின் இராணுவத்துக்கு பிரான்ஸ் அளித்துவரும் உதவியும், பயிற்சியும் நிறுத்தப்படும். மேலும் பிரான்ஸ் இராணுவம் முன்கூட்டியே தாய்நாடு திரும்ப நேரிடும்.

மேலும், ஈரான் அணு ஆயுதங்களின் மீது கொண்டுள்ள ஆசையின் காரணமாக போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலிய அரசியல்வாதிகள் அச்சுறுத்தியபடி இஸ்ரேல் ஈரானைத் தாக்கத் தயாராகி வருகிறது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பிரச்னை எதுவும் தீரப்போவதில்லை. மாறாக உலகம் முழுக்க, குறிப்பாக மத்தியக் கிழக்கு நாடுகளில் போரும் குழப்பமும் உருவாகும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-6




அறியாத சில விசயங்களை 
தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-6

அறிந்ததும் அறியாததும்! பொது அறிவுத் தகவல்கள்!

  1. எவரெஸ்ட் சிகரத்தின் பழைய பெயர் சோமோலெங்மா. 1863 முதல் எவரெஸ்ட் என்ற பெயர் வந்தது.
  2. பிரபஞ்சம் 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.
  3. சூரியன் 5 ஆயிரம் மில்லியன் ஆண்டுகளுக்குமுன் தோன்றியது.
  4. இந்தியாவில் 7092 இரயில் நிலையங்கள் உள்ளன.
  5. இந்தியாவிலேயே கல்கத்தாவில்மட்டும் சுரங்க ரயில் இயக்கப் படுகிறது.
  6. சென்னை நகரின் பரப்பளவு 231 ச.கி.மீ.
  7. ஆசியாக் கண்டத்தின் மிகப்பழமையான  பத்திரிக்கை மும்பை சமாச்சார்.
  8. இந்தியாவில் முதல் நினைவு நாணயம் நேருஜிக்கு 1964ல் வெளியிடப்பட்டது.
  9. டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்களை இளவயதில் எடுத்தவர் டெண்டுல்கர்.
  10. ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற கதாப்பாத்திரம் தோன்றி121 ஆண்டுகள் ஆகின்றன.
  11. 155 மில்லிமீட்டர் நீளமுள்ள அதி நவீன பீரங்கியை இந்தியா தயாரித்துள்ளது. இதன் பெயர் பீம் இடம் சென்னை ஆண்டு 1996.
  12. உலகின் முதல் கருத்தடை மாத்திரையின் பெயர் ஈனோவிட்.
  13. உலகிலேயே மிக அதிகமாக சைக்கிள் ஓட்டுபவர்கள் சீனர்கள்.
  14. உலகிலேயே மிகச்சிறிய குரங்கு இனத்தின் பெயர் ‘அலொசிபஸ்டிரிகொடிஸ்’ எண்பது கிராம் எடையுள்ள இந்த குரங்கினம் மடகாஸ்கர் பகுதியில் காணப்படுகிறது.
  15. உலகில் மின்னல் தாக்கி அதிகம் இறக்கும் மக்கள் அமெரிக்கர்கள்.
  16. இறக்கையில்லாத பூச்சிகளுக்கு ஆப்டாஸ் பூச்சிகள் என்று பெயர்.
  17. தமிழ் தேசிய மொழியாக உள்ள நாடுகள் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்.
  18. உலகின் பெரிய கடல் ஏரி காஸ்பியன் கடல்.
  19. ஐ.நா சபையின் முதல் செயலர் டிபிக்யூலி.
  20. இந்து பல்கலைக்கழகத்தை அமைத்தவர் மாண்டவ் சிங் மாளவியா.
சராசரி மனிதனின் தகவல்கள்.... 
சராசரி மனிதனின் குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
மனித உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
சராசரி மனிதன் ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட் 
மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
மனித உடலில் மிகவும் குளிரான பகுதி - மூக்கு 
மனித உடலில் வியர்க்காத உறுப்பு - உதடு 
மனித உடலின் சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள் 
இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள் 
மனித நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம் 
மனித உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
ரோலர் கோஸ்டர் எனப்படும் மிகபெரிய ராட்டினத்தில் பயணம் செய்தால், மூளையில் ரத்தம் கட்டிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம்.

சாதாரணமாக கண்களில் காணப்படும் வெண்மை நிறத்திற்கு பதில், நீல நிறத்தை கொண்டிருக்கும் மனிதனின் கண்களுக்கு இருட்டில் காணும் சக்தி அதிகம்.

எல்லாரும் நினைத்து கொண்டிருப்பதை போல, பணத்தாள்(ருபாய் நோட்டு) காகிதத்தால் செய்யப்பட்டது இல்லை. அது, ஒரு வகை "காட்டன் (cotton) " துணியால் செய்யப்பட்டது.

ஒரு சிறிது துளி சாராயம் அல்லது மதுபானத்தை ஒரு தேளின் மேல் தெளித்தால், அதனால் தாங்க இயலாது. அந்த தேள் தன்னைத்தானே கொட்டிக்கொண்டு இறக்கும்.

வெங்காயம் வெட்டும்போது கண்ணீர் வருகிறதா? ஒரு சூயிங்கம் (Chewing gum) மென்றுகொண்டே, வெங்காயம் வெட்டினால் கண்ணீர் வருவது மற்றும் கண்கள் எரிச்சல் பெருமளவு குறையும்.

உலகின் மிக நீளமான நதி...எகிப்தில் உள்ள நைல் நதி என்பது உங்களுக்கு தெரியும்தானே. ஆனால், அந்த நைல் நதிக்கு அடிப்பரப்பில் இன்னொரு நதி ஒன்று ஓடுகிறது. அதன் தண்ணீரின் அளவு, மேற்பகுதில் ஓடும் நைல் நதியின் தண்ணீரின் அளவை விட ஆறு மடங்கு அதிகம்.

ஒரு மணிநேரம் தொடர்ந்து நீங்கள் ஹெட்போனை(headpohne) தொடர்ந்து பயன்படுத்தினால், அது உங்கள் காதுகளில் உள்ள கிருமிகளை 700 மடங்கு அதிகரிக்கும்.

உலகின் அதிக அளவு மனித உயிர்கள் பலியாக காரணமாக இருக்கும் ஒரே உயிரினம்....கொசு.

ஒரு ஆய்வின்படி, வலது கை பழக்கமுடைய மனிதர்கள், இடது கை பழக்கமுடைய மனிதர்களை விட, சுமார் ஒன்பது வருடங்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.

நமது மூளை, ஒரு சிறந்த கணிப்போறியைவிட நுட்பமானது. அதில், சுமார் 100 மில்லியன் நரம்பு செல்கள் உள்ளன.

ஒரு மனிதன் மரணமடையும்போது, முதலில் செயல் இழக்கும் உறுப்பு..அவனது காதுகள்.

ஒரு மனிதனின் விழித்திரைகள் 45 சதவிதம் அதிகமாக விரிவடைகின்றன...அவன் தனக்கு பிரியமானவற்றை காணும்பொழுது.

தேன், மிக எளிதாக ஜீரணமடையும் ஒரு உணவுப்பொருள். ஏன் தெரியுமா? அது ஏற்கனவே தேனீக்களால் ஜீரணிக்கப்பட்டுவிட்டது.

டைட்டானிக் கப்பலை கட்ட ஆன மொத்த செலவு சுமார் 7 மில்லியன் டாலர்கள். ஆனால், அதை பற்றி ஜேம்ஸ் கேமரூன் படமாக எடுக்க ஆன செலவு சுமார் 200 மில்லியன் டாலர்கள்.

நீங்கள் உங்கள் கைவிரல்களை 'நெட்டி' முறிக்கும்போது ஏற்ப்படும் சத்தத்திற்கு காரணம்...நம் உடம்பில் நைட்ரஜன் வாயுவில் உள்ள குமிழ்கள் உடைவதே.

ரத்த ஓட்டம் இல்லாத மனித உடலில் உள்ள ஒரே பாகம்...கண்விழித்திரை. அது நேரடியாக காற்றில் இருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறது.

அறிவுக்கு ஆரோக்கியம் :

நாம் ஒவ்வொரு முறை மனம்விட்டு சிரிக்கும்போதெல்லாம், சுமார் 30 தசைகளுக்கு சிறந்த பயிற்சி அளிக்கபடுகிறது.

ஆகவே  நண்பர்களே....மனம் விட்டு சிரியுங்கள்.

அறிவுக்கு அதிர்வு :
இந்த உலகின் மொத்த பெட்ரோல் உற்பத்தியில் 29 சதமும்,உலகின் மொத்த மின் உற்பத்தில் 33 சதமும் ஒரேயடியாக பயன்படுத்திக்கொள்ளும் நாடு.. அமெரிக்கா.


கருவிகளும் பயன்களும்

1.    
 ஏரோமீட்டர் (Aerometer)-  காற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.

2.    
 அம்மீட்டர் (Ammeter)-  மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.

3.    
 ஆடியோமீட்டர் (Audiometer)-  மனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.

4.    
 போலோமீட்டர் (Bolometer)-  வெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.

5.    
 கிரையோமீட்டர் (Cryometer)-  குறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.

6.    
 எலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)-  மின்சாரம்வோல்டேஜ்திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.

7.    
 மேனோமீட்டர் (Manometer)-  வாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.

8.    
 டோனோமீட்டர் (Tonometer)ஒலியின் அளவை அளவிடும் கருவி.

9.   
 வெர்னியர் (Vernier)-  சென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.

10. 
 பைரோமீட்டர் (Pyrometer) -  அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.

11.  
 பாத்தோமீட்டர் (Fathometer)-  ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.

12.  
 டைனமோ (Dynamo)-  எந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.

13.  
 வேவ்மீட்டர் (Wavemeter)-  ரேடியோ அலைகளின் அலை நீளத்தை அளவிடும் கருவி.

14.  
 பிளானிமீட்டர் (Planimeter)-  பரப்பை அளவிடும் கருவி.

15.   
 ரெக்டிஃபையர் (Rectifier)-  ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.

16.   
 டென்சிமீட்டர் (Tensimeter)-  ஆவியின் அழுத்தத்தை அளவிடும் கருவி.

எதைப்பற்றியது?

1.
 பேடாலஜி (Pedology)-  மண் அறிவியல் குறித்த படிப்பு.

2.
 பெட்ராலஜி (Petrology)-  பூமியில் பாறை உருவான விதம்அமைப்பு குறித்து படிக்கும் படிப்பு.

3.
 சூஜியோகிராபி (Zoogerogrphy)-  பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.

4.
 சிஸ்மோலஜி (Seismology)-  பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.

5.
 ஹைட்ராலஜி (Hydrology)-  பூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.

6.  
 கிளைமட்டாலஜி (Climatology)-  சுற்றுப்புறத்தில் நிலவும் பருவநிலை மாறுபாடு குறித்து படிக்கும் படிப்பு.

7.
 பயோ ஜியோகிராபி (Biogeography)-  பூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.

எங்கேஅதிக உற்பத்தி?

1.  
 ஆப்பிள் -  இமாச்சலப் பிரதேசம்ஜம்மு-காஷ்மீர்.

2.
 வாழைப்பழம் -  குஜராத்மகாராஷ்டிரம்தமிழ்நாடுகேரளம்.

3.
 இஞ்சி -  கேரளம்மேகாலயா.

4.  
 கோகோ -  கேரளம்கர்நாடகம்தமிழ்நாடு.

5.
 திராட்சை -  மகாராஷ்டிரம்ந்திரம்கர்நாடகம்பஞ்சாப்த்தரப் பிரதேசம்.

6.
 மாம்பழம் -  உத்தரப் பிரதேசம்பீகார்ஆந்திரம்மகாராஷ்டிரம்தமிழ்நாடு.

7.
 ஆரஞ்சு -  மகாராஷ்டிரம்கர்நாடகம்தமிழ்நாடுமேகலாயா.

8.
 மிளகு -  கேரளம்கர்நாடகம், தமிழ்நாடு

9.
 அன்னாசி பழம் -  அஸ்ஸாம்மேகாலயாமேற்கு வங்கம்திரிபுரா.

10 .
ஏலக்காய் கர்நாடகம்சிக்கிம்,கேரளம்தமிழ்நாடு.
 
11. முந்திரி -  கேரளம்ஆந்திரம்.

எந்தத் தொழிற்சாலை எங்கே?

1.   
 ஹிந்துஸ்தான் கேபிள்ஸ் -  ருப்னாராய்பூர் (மேற்கு வங்கம்).

2.   
 ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட் –  பெங்களூருஹைதராபாத்லக்னோ.

3.   
 பாரத் அலுமினியம் நிறுவனம் -  சட்டீஸ்கர்மேற்கு வங்கம்.

4.   
 ஹிந்துஸ்தான் அலுமினியம்  ரேனுகோட் (உத்தரப் பிரதேசம்).

5.   
 இந்தியன் டெலிபோன் இன்டஸ்ட்ரீஸ் –   பெங்களூரு.

6.   
 எச்.எம்.டி. வாட்ச் –  பெங்களூரு.

7.   
 நேஷனல் நியூஸ்பிரிண்ட் அண்ட் பேப்பர் மில்ஸ் –  நேபாநகர்.

8.   
 நேஷனல் பெர்ட்டிலைசர்  லிமிட்டெட் –  ங்கால்பட்டின்டாபானிப்பட்விஜய்பூர்.

9.   
 ஹிந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் லிமிட்டெட் -  மகாராஷ்டிரம் மற்றும் கொச்சி.

10.   
 ஃபெர்ட்டிலைசர் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியா -  சிந்திரிகோரக்பூர்ராமகுண்டம்.

அணைகளும் மாநிலங்களும்

1.   
 நாகர்ஜூன சாகர் நீர்த்தேக்கம் (ஆந்திர மாநிலம் )  -
கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளதுவிவசாயம் மற்றும் நீர்மின்சக்திக்காக இந்த நீர்த்தேக்கத் திட்டம் பயன்படுகிறது.

2. 
 கக்கார்பாரா நீர்த்தேக்கம் (ஆந்திர மாநிலம்)-
தபதி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. விவசாயத்திற்காக கட்டப்பட்டுள்ளது.

3.   
 கோஷி நீர்த்தேக்கம் (பீகார் மாநிலம்)-
கோஷி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் அபாயகரமான வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கும்நீர்மின்சக்தித்  திட்டத்துக்கும்   ந்த நீர்த்தேக்கம் பயன்படுகிறது.

4.   
 சபரிகிரி நீர்த்தேக்கம் (கேரள மாநிலம்)-
பம்பா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.  நீர்மின்சக்தித் திட்டத்துக்காக பயன்படுகிறது.

5.   
 சாராவதி நீர்த்தேக்கம் (கர்நாடக மாநிலம்)-
ஜோக் நீர்வீழ்ச்சியை ஒட்டியுள்ள சாராவதி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. நீர்மின்சக்தி உற்பத்திக்காக இத்திட்டம் பயன்படுகிறது.

6.    
 மகாநதி டெல்டா நீர்த்தேக்கம் (ஒரிசா மாநிலம்)-
மகாநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.விவசாய பயன்பாட்டிற்காக படுகிறது

7.  
 பக்ராநங்கல் நீர்த்தேக்கம் (ஹிமாச்சலப் பிரதேசம்)-
சட்லஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. பஞ்சாப்ஹரியானா மாநிலங்கள் சந்திப்பு எல்லையில் கட்டப்பட்டுள்ளதுவிவசாயம்நீர்மின்சக்தி உற்பத்திக்காக இது பயன்படுகிறது.

8.     
 தாமோதர் பள்ளத்தாக்கு நீர்த்தேக்கம் 
தாமோதர் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளதுஜார்க்கண்ட் மாநிலத்தில் கட்டப்பட்டிருந்தாலும்இந்த அணையின் நீரை மேற்கு வங்களாமும் பகிர்ந்துகொள்கிறது. வெள்ள நீரை தடுப்பதற்காகவும்,விவசாயத்திற்கும் இந்த அணை பயன்படுகிறது.

9.  
 சர்தார் சரோவர் நீர்த்தேக்கம் நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது,  குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள் இந்த நீர்த்தேக்கம் மூலம் பயன்பெறுகின்றன. விவசாயம் மற்றும்  நீர்மின்சக்திக்காக இது பயன்படுகிறது.

10.    
 மேட்டூர் (தமிழ்நாடு)-
காவேரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.  நீர்மின்சக்தி மற்றும் விவசாயத்திற்காக பயன்படுகிறது.

தகவல்:பொது அறிவுக் களஞ்சியம், நண்பர் சுரேஷ்குமார், கடைத்தெரு.blogs

*தொடரும்...

முழு அளவு படத்தைப் பார்
இணைய தள கடலில் மூழ்கி உங்களுக்காக முத்துக்கள் எடுத்து கோர்த்து தருபவன்,

வாகன விபத்தைக் கண்டுபிடிக்க நவீன கெமரா : மதுரை மாணவர் கண்டுபிடிப்பு


வாகன விபத்தைக் கண்டுபிடிக்க நவீன கெமரா : மதுரை மாணவர் கண்டுபிடிப்பு

http://www.manithan.com/photos/thumbs/2012/01/accident-camera.jpg

வாகன விபத்துக்களைத் தடுக்க நவீன ஒளிப்பதிவுக் கெமராவை மதுரையைச் சேர்ந்த பொறியியல்துறை மாணவர் கண்டுபிடித்துள்ளார். மதுரை திருநகர் பகுதியைச் சேர்ந்த முத்தையா என்பவரது புதல்வரான நாகராஜ் என்பவரே இதனைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.பிடிஆர் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பொறியியல் பிரிவில் இவர் இறுதியாண்டு படித்து வருகிறார். இறுதியாண்டில் மாணவர்கள்தங்கள் துறையில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படிபிரத்தியேக சொப்ட்வெயார் துணையுடன் வாகன விபத்துக்களைத் தடுக்கும் கருவியை நாகராஜ் கண்டு பிடித்துள்ளார். 

"
கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் போது இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டது. எனவேவாகனங்களைப் பாதுகாப்பாக இயக்குவது குறித்தும் விபத்தைத் தடுக்கும் கருவி ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என நினைத்து ஆராய்ந்தேன். அதன் விளைவாக இறுதியாண்டில் இக்கருவியைக் கண்டறிந்தேன்" என்கிறார் நாகராஜ். 

"
காரின் இருபக்க கண்ணாடியிலும் ஸூம் லென்சுடன் கூடிய நவீன கெமரா பொருத்தப்பட்டுகாரின் இருபுறமும் 2கிலோ மீட்டர் தூரத்தில் நடக்கும் நிகழ்வுகள் பதிவு செய்யப்படும். அதை காருக்குள் உள்ள எல்இடி டிஸ்ப்ளேயில் பார்த்துக் கொண்டே காரை ஓட்டலாம். இதனால் சிறந்த முறையில் காரை விபத்தில்லாமல் பாதுகாப்பாக ஓட்ட முடியும். மேலும்இதில் உள்ள பிரத்தியேக சொப்ட்வெயார் துணையுடன் தொடர்ந்து 60 நாட்கள் நிகழ்வுகளையும் பதிவு செய்து கொள்ளலாம். 
விபத்தைத் தடுக்க மட்டுமன்றிகொலை மற்றும் கொலை முயற்சி நடந்த பிறகு அந்த நிகழ்வுகளையும் பார்த்துக் கொள்ளலாம். இதற்கென தனி பாஸ்வேர்ட் இருப்பதால் காரின் உரிமையாளர் தவிர மற்றவர்கள் இதனை அறிய முடியாது. அறுபது நாட்களுக்கு பிறகு பென் டிரைவிலோ அல்லது சி.டி.யிலோ அந்த நிகழ்வுகளைப் பதிவு செய்து கொள்ளலாம். 
முக்கிய பிரமுகர்கள்காவல்துறை உட்பட அனைவருக்கும் இந்தக் கருவி பயனுள்ளதாக இருக்கும். தொடர்ந்து 15நாட்கள் கடினமாக உழைத்து, 45 ஆயிரம் ரூபா செலவில் இந்தக் கருவியை கண்டுபிடித்துள்ளேன். விரைவில் இக்கருவிக்கான காப்புரிமை பெற இருக்கிறேன்" என்று மேலும் விளக்கம் தருகிறார் அவர்.

உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட்



உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட்



உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணம். இந்நிலையில் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் வால்நட் எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு நடத்தினர். உடலில் கொழுப்பு அதிகம் இருந்த ஆண், பெண் ஏராளமானோர் வயது வித்தியாசமின்றி தேர்வு செய்யப்பட்டனர். முதல்கட்ட பரிசோதனைகளை தொடர்ந்து ஒரு வார காலம் அக்ரூட் பருப்புகள் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்திருந்தது. இதன்மூலம் கொழுப்பை அக்ரூட் கரைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆய்வு முடிவு குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு: உடலில் கொழுப்புச்சத்து அளவாக இருப்பது அவசியம். உணவு முறைகளே உடலில் கொழுப்பு அதிகரிக்க முக்கிய காரணம்.   அக்ரூட், உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. முந்திரி, பாதாம் உள்ளிட்ட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டிஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பதுதான் இதற்கு காரணம். இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இது நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளித்து ஆரோக்கியத்துக்கு வகை செய்யும். உரிய உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருத்துவ அறிவுரை மற்றும் சிகிச்சைகள் மூலம் உடல் கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.