Thursday 29 March 2012

2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' தொடர்-15




2012 
இல் உலக அழிவும்மாயா இன மக்களும்' தொடர்-15
 

கடந்த வாரத்தில் எழுதியது போலமீண்டும் ஒன்றை நினைவுபடுத்த வேண்டிய அவசியம் எனக்கு இப்போதும் உள்ளதுஇங்கு நான் கொடுக்கும் எந்தத் தகவலும்,எனக்குச் சொந்தமானவை அல்லஇவைகளின் உண்மைத் தன்மை பற்றி என்னிடம் எந்த  ஆதாரங்களும் இல்லைஆனால் பல ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகள்பேட்டிகள்காணொளிகள் என இணையங்களிலும்அச்சு வடிவங்களிலும் ஆதாரங்கள் என்று சொல்லப்படுபவை  கொட்டிக் கிடக்கின்றன'சதித் தத்துவம்' (Conspiracy Theory) என்னும் பெயரில்இவை காணொளிகளாக வெளிவருகின்றனஇவை இப்படி இப்படி இருக்கின்றன என்று உங்களுக்குச் சுட்டிக் காட்டுவது மட்டுமே எனது வேலைஅத்துடன் என் கடமை முடிந்து போய் விடுகிறதுபடித்த பின் சரியான முடிவுகளை எடுப்பது உங்கள் பொறுப்புநான் சொல்லும் ஒவ்வொரு சம்பவத்தைப் பற்றியும் நீங்கள் இணையத்தில் தேடிப் பார்த்தால்நான் சொன்னவை சிறிதளவோ என்று நீங்களே பிரமித்துப் போவீர்கள்.சொல்லாதவை மிக அதிகமாக இருக்கும். இதற்கு மேலும் இது பற்றி நான் விளக்கம் அளிக்க வேண்டியதில்லை என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன்...........!
கடந்த பதிவில்டென்வெர் விமான நிலையம் பற்றியும் நோர்வேயில்அமைக்கப்பட்ட மரங்களின் பாதுகாப்பு மையத்தைப் பற்றியும் நான் எழுதியதுஉங்களைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்திருக்கும் என்றே நம்புகிறேன்அவற்றையார் முன்னின்று நடத்துகிறார்கள் என்ற கேள்வியும் நமக்குள் எழுந்திருந்தது.அவர்கள் யார் என்பதற்கு ஆதாரம் டென்வெர் விமான நிலையத்திலேயே எமக்குக்கிடைத்ததுடென்வெர் விமான நிலையக் கட்டுமானத்தின்போது,அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டு ஒன்றைப் பற்றிக் கடந்த பதிவில் கூறியிருந்தேன்.அதன் முழுமையான வடிவம் மேலே உள்ள படத்தில் காணப்படுகின்றதுஅந்தப் படத்தைச் சரியாகப் பார்த்தீர்களானால்அதில் ஒரு சின்னம் (Symbol) காணப்படுகிறது.அத்துடன் கீழே 'புதிய உலகம்' (New World) என்னும் வார்த்தைகளும் காணப்படுகிறது.இவை இரண்டுமே எல்லா மர்மங்களையும் எமக்கு தீர்க்கப் போதுமானவையாக இருக்கலாம். அவை என்ன என்றுதான் பார்ப்போமே!'புதிய உலக ஒழுங்குஎன்று தமிழில் சொல்லப்படக்கூடிய 'The New World Order' என்னும் அமைப்புஉலகத்தின் கோடீஸ்வரர்களையும்தொழிலதிபர்களையும்அரசியல் பெரு முதலைகளையும்அதிகார மையங்களின் உச்சங்களில் அமர்ந்திருப்பவர்களையும் தன் அங்கத்தவர்களாகக் கொண்டது என்று சொல்கிறார்கள்ஒரு மாயச் சங்கிலி மூலம் இவர்கள் அனைவரையும் இந்த அமைப்பு இணைத்து வைத்திருக்கிறது.அந்தச் சங்கிலியின் எந்த ஒரு வளையத்திலும் சாதாரண பாமர மக்களான நாங்கள் இருக்கவே முடியாதுஇவர்களின் கொள்கை ஒரே ஒரு உலகம்ஒரே ஒரு பணம்,ஒரே ஒரு வங்கி என்பதுதான்அதாவது உலக மக்கள் அனைவரையும் ஒரே ஒரு சக்தி ஆள வேண்டும்அவர்களுக்குப் பணமாக ஒரே ஒரு பணம் இருக்க வேண்டும்.அந்தப் பணத்தை நடை முறைப்படுத்துவதற்கு ஒரே ஒரு வங்கி இருக்க வேண்டும். 
'என்னடா இவன் கதைவிடுகிறானே!என்று நீங்கள் நினைக்கலாம். சம்பந்தம் உண்டோஇல்லையோஇங்கு சொன்னது போலசம்பவம் ஒன்று சமீபத்தில்நடைபெற்று இருக்கின்றதுபதினைந்துக்கும் மேற்பட்டஉலகத்தில் மிகமுக்கியத்துவமும்சக்தியும் வாய்ந்த நாடுகள் ஒன்றாகச் சேர்ந்து தனி ஒருபணமான 'யூரோ'வை (Euro) உருவாக்கியது எம் கண் முன்னாலேயே நடந்ததுஆசியநாட்டிலுள்ளவர்கள் அனேகருக்கு 'புதிய உலக ஒழுங்குஅமைப்புப் பற்றித்தெரிந்திருக்க வாய்ப்பு இல்லைதன் முகத்தை ஆசிய நாட்டினர்களுக்குப் பெரிதாகக் காட்டாத இந்த அமைப்பைப் பற்றி அமெரிக்கஐரோப்பிய நாட்டு மக்கள் நிறையவே தெரிந்து வைத்திருக்கின்றனர். 
இதில் மறைந்திருக்கும் இன்னுமொரு செய்தி என்னவென்றால், The New World Orderஎன்னும் அமைப்பை, 'Free Mason' என்னும் அமைப்பே கொண்டு நடத்துகிறது என்று சொல்கிறார்கள்இந்த Free Mason அமைப்பு மிகவும் பிரபலம் வாய்ந்ததுஅது மட்டுமில்லாமல் பலரால் மர்மம் நிறைந்தது என்றும் வர்ணிக்கப்படுவதுஇந்த அமைப்பை  'மேசனிக்ஸ்' (Masonics) என்றும் அழைப்பார்கள்இந்த மேசனிக்ஸ் என்பது மதம் சார்ந்தது என்றும்கடவுளுக்கு எதிரானது என்றும் இரண்டு விதமான கருத்துக்கள் இருந்தாலும்நாம் அதற்குள் போகத் தேவையில்லைஆனால் இந்த அமைப்பு மிகவும் ஆளுமையுள்ள அமைப்பு என்பது மட்டும் உண்மை ஆகும். இந்த அமைப்புக்கு எனப் பல சின்னங்கள் இருந்தாலும்கீழே படத்தில்கொடுத்திருப்பதுதான் அதன் முக்கிய சின்னமாகும்.
இந்தப் படத்தில் உள்ள அடையாளத்தையும்டென்வெர் விமான நிலையக்கல்வெட்டில் இருந்த அடையாளத்தையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்அதுமட்டுமல்லாமல் மேசனிக்ஸ் அமைப்பு மேலும் சில சின்னங்களைத் தமக்கெனவைத்திருக்கின்றதுமேலே படத்தில் காட்டப்பட்ட கணித வரை கருவிகள்,ஒற்றைக் கண்ஐந்து நட்சத்திர வடிவம்ஆறு நட்சத்திர வடிவம்கைவிரல்களை மடக்கிக் காட்டும் ஒருவித சைகையான அடையாளம்ஆங்கில 'G' என்னும் எழுத்துஎன்பவற்றுடன் ஆச்சரியகரமாக பிரமிட் சின்னமும் மேசன்களின் சின்னங்களாகும். 
இந்த மேசனிக்ஸ் அமைப்பின் ஆளுமை பற்றிச் சொல்வதானால்நான் ஒரே ஒருசம்பவத்தை மட்டும் சொன்னால் உங்களுக்கு அதன் தீவிரமும்அதிகாரமும் புரியும்.அமெரிக்காவின் ஒரு டாலரை உங்களில் அநேகர் பார்த்திருக்கலாம்அந்த ஒருடாலரில் (One Dollar Note) இருக்கும் படம் இது. 
இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் உள்ள 'NERVUS ORDO SECLORUM' என்னும் லத்தீன் வார்த்தைகள் 'Secular New Order' என ஆங்கிலத்தில் அர்த்தம் தருகிறதுஇதுNew World Order என்று தவறாக அர்த்தப்படுத்தப்படுகின்றது என்று விக்கிப்பீடியா(Wikipedia) தெரிவித்தாலும்இல்லை இது மறைமுகமாக அதையே குறிக்கின்றது எனப் பலர் அடித்துச் சொல்கின்றனர்அவற்றின் விபரங்களை நீங்கள் பல இணையத் தளங்களில் காணலாம். அது தவிர அமெரிக்க டாலரில் ஏன் லத்தீன் வார்த்தைகள் வரவேண்டும் என்ற கேள்வி ஒருபுறம் இருக்கமேசன்களின் அடையாளமான ஒற்றைக் கண்ணும்பிரமிட் அடையாளமும் அங்கு வர வேண்டிய அவசியமே இல்லை எனக் கேள்விகள் வருகின்றது. அத்துடன் அந்தப் பிரமிட்டின் அடுக்குகள் மொத்தமாக 13 ஆகவும் ஏன் இருக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறதுஇந்தப் 13 என்னும் இலக்கம் மேசன்களின் முக்கிய இலக்கங்களில் ஒன்று என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டும்சரிஇந்தப் 13 படிகள் என்பது தற்செயலாக அமைந்தது என்று நாம் எம்மைச் சமாதானப்படுத்தினால்தே டாலரில் இருக்கும் இன்னுமொரு  படம் எம்மை அசர வைக்கிறதுஅந்தப் படத்தில் இருக்கும் அமெரிக்கக் கழுகுதன் இடது காலில் வைத்திருக்கும் இலைகளின் எண்ணிக்கையும்,வலது காலில் வைத்திருக்கும் அம்புகளின் எண்ணிக்கையும் தற்செயலில்லாமல் 13ஆக இருக்கிறதுஅது மட்டுமாஅதில் செங்குத்தாக வரையப்பட்டிருக்கும் கறுப்பு வெள்ளைக் கோடுகளின் எண்ணிக்கை 13. மேலே இருக்கும் லத்தீன் எழுத்துகள் மொத்தம் 13. அதற்கும் மேலே இருக்கும் நட்சத்திரங்கள் 13. இதற்கு மேலும் 13என்பது தற்செயல்தானா என்பதை நீங்களே முடிவு செய்துவிட்டுபடத்தில் எண்ணிப் பாருங்கள்.
"அடப் போங்கப்பாஎதைப் பார்த்தாலும் உங்களுக்குச் சந்தேகம்தான்.எல்லாவற்றிற்கும் ஏதாவது ஒன்று சொல்லிக் கொண்டே இருப்பீர்கள்என்று நீங்கள் சொல்லலாம்இருக்கட்டும்இதையும் பாருங்கள்அந்த டாலரில் இருக்கும் படத்தில் மேசனின் ஆறுகோண அடையாளத்தை வரையும்போது என்ன வருகிறது என்று தெரிகிறதா? MASON.
ஆச்சரியம் இத்துடன் முடிந்து விடவில்லைஅமெரிக்க ஒரு டாலரின் முன் பக்கம் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டனே (George Washington) ஒரு மேசன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 
ஆபிரகாம் லிங்கன்கென்னடி ஆகிய இருவர் தவிர்த்துஅமெரிக்க ஜனாதிபதிகளில் அனைவரும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்,இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்இந்தக் கருத்துகளை முன்னணியில் வைத்து'நிக்கலஸ் கேஜ்' (Nicolas Cage) நடித்து வெளிவந்த National Treasure (The Book of Secrets)என்னும் ஆங்கிலப் படம் இரண்டு பாகங்களாக வெளிவந்திருக்கின்றனமுடிந்தால் அவற்றைப் பாருங்கள். அத்துடன் அந்தப் படத்தின் போஸ்டர்களில் பிரமிட்டுக்குள் இருக்கும் ஒற்றைக் கண்ணையும் கவனிக்கத் தவறிவிடாதீர்கள் 
இந்து மதத்தின் சின்னங்களில் ஒன்றான ஸ்வஸ்திக் சின்னத்தைஹிட்லர்தனக்கென்று ஒரு சின்னமாக மாற்றிவிட்டது சரித்திரத்தில் நடந்ததுஅது போல,இன்னுமொரு சின்னத்தையும் தங்களுக்கென வைத்துக் கொண்டார்கள் மேசன்கள்.அது அவர்கள் கைகளாலேயே காட்டும் ஒரு சின்னம்அதை அமெரிக்காவின் எத்தனை பெருந் தலைகள் பாவித்திருக்கின்றனர் என்று நீங்களே பாருங்கள்.இவையெல்லாம் சில உதாரணங்கள்தான்பல கொடுக்க முடியவில்லை 
இங்கு ஒரு விசயத்தை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும்இவர்களெல்லாம்மேசனாக இருந்தால்அப்படி இருப்பதில் எந்தத் தவறும் கிடையாதுமேசன் என்பது மறைந்து தொழிற்படும் ஒரு அமைப்பல்லவெளிப்படையாகவே இயங்கும் ஒருஅமைப்பு அதுஅதில் அங்கத்தவர்களாக இருப்பது ஒன்றும் தவறானது அல்ல.உலகில் அதி உச்சத்தில் இருப்பவர்கள் பலர் 'நான் ஒரு மேசன்என்று சொல்லத்தயங்கியதே இல்லைஆகையால் இங்கு அமெரிக்க ஜனாதிபதிகளைக் குறிப்பிடும்போதுஅவர்கள் தவறு செய்பவர்கள் என்று சொல்வது என்பதல்ல அர்த்தம்மேசன்கள் பற்றிய ஒரு மர்மமான கருத்து உலகில் பலமாக உலவுகிறது என்பதை இங்கு சொல்லிஅதற்கு மேலும் சொல்வதற்காக இவற்றையும் சொல்ல வேண்டி இருக்கிறது அவ்வளவுதான்அதிகம் ஏன்ஜார்ஜ் வாஷிங்டன் போலஜார்ஜ் புஷ் கூட மேசன்களுடன் இருக்கும் படங்கள் வெளிப்படையாகவே கிடைக்கின்றன.நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது நிச்சயம் புரியும் என்று நினைக்கிறேன். 
இவையெல்லாம் ஒருபுறம் இருக்கஇன்னுமொரு அதிர்ச்சியும் எம்மை வேறொரு புறத்தில் இருந்து தாக்குகிறதுநீங்கள் யாருமே எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சி அது.எதிர்பார்க்காதது என்பது மட்டுமல்லஅது பற்றிச் சொன்னால் நீங்கள் நம்பப் போவதே இல்லை. "நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போது நடப்பதையே இப்படி மாற்றிச் சொல்கிறீர்களேநீங்கள் எதைத்தான் மாற்றிச் சொல்ல மாட்டீர்கள்?" என்று திருப்பி என்னையே கேள்வி கேட்பீர்கள்அந்த அளவுக்கு நீங்கள் நம்பும் ஒன்று இதுஇதை நான் சொன்னால்இதுவரை நான் சொன்னவை எல்லாமேஇப்படிப்பட்ட அபத்தங்கள்தான் என்று முடிவைக் கூட நீங்கள் எடுத்துவிடுவீர்கள். 
"அடஎதற்கு இவ்வளவு பீடிகை?" என்றுதானே கேட்கிறீர்கள்விசயம் அப்படிநான் சொல்லப் போவதை முதலில் நீங்கள் நம்பாவிட்டாலும்சொல்லி முடிக்கும் வரை கொஞ்சம் பொறுமையாக வாசியுங்கள்முடிந்தால் அது பற்றி இணையங்களில் தகவல்களையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்சரிஇப்போ விசயத்துக்கு வருகிறேன்.
உலகம் வெப்ப மயமாதல் (Global Warming) என்பது தற்போதுமிகவும் பரவலாகப் பேசப்படும் ஒரு பாரிய பிரச்சினைஇதற்குக் காரணமாகச் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதைக் குறிப்பிட்டுச் சொல்கின்றனர்அதிலும் குறிப்பாக உலகமெங்கும் பயணித்துக் கொண்டிருக்கும் வாகனங்கள் வெளிவிடும் புகையால்சுற்றுச்சூழல் மாசடைகிறது என்கிறார்கள்வாகனங்கள் வெளிவிடும் காபனீரொக்சைட் (CO2)என்னும் வாயுவும்மீதேன் (Methene - CH4) என்னும் வாயுவும் சுற்றுச்சூழலை நஞ்சாக்குகிறது என்றும் சொல்லப்படுகிறதுஅதாவது எமது பூமி சூரியனின் வெப்பக் கதிர்களிலிருந்து எம்மைப் பாதுகாக்க தன்னைச் சுற்றி 'கிறீன் ஹவுஸ் விளைவு' (Greenhouse effect) எனப்படும் ஒன்றைபூமியைச் சுற்றிப் பல வாயுக்களால் ஏற்படுத்தியிருக்கிறதுஇந்த கிறீன் ஹவுஸ்தான் எம்மை இதுவரை காத்து வருகிறதுஇந்த கிறீன் ஹவுஸை மேற்படி இரண்டு வாயுக்களும் பழுதடைய வைக்கின்றன எனச் சொல்லப்படுகிறது. 
ஆனால் தற்போது விஞ்ஞானிகள் மிகப்பெரிய எழுத்துகளில், 'குளோபல் வார்மிங்என்பதே பொய்என்று அலறுகிறார்கள்ஆமாம்நீங்கள் சரியாகத்தான் வாசித்தீர்கள்.குளோபல் வார்மிங் என்று சொல்லப்படுவதே முழுப் பூசணியை சோற்றுக்குள் மறைக்கும் பொய் என்கிறார்கள்உலகம் வெப்பமாவது என்பது உண்மையிலும் உண்மைதான்அதை எந்த விஞ்ஞானியும் மறுக்கவில்லைஆனால் அதற்குச் சொல்லப்படும் காரணமான மேற்படி வாயுக்களின் மாசுத் தன்மைதான் என்பது மகா பொய் என்கிறார்கள்இதைச் சொல்வது ஒருவர்இரண்டு பேர் கிடையாது.அமெரிக்காவில் மட்டுமே 31457 விஞ்ஞானிகள் இதற்கு எதிராக பெட்டிசன் ஒன்றை உருவாக்கிஅமெரிக்க அரசுக்கு அனுப்பினார்கள்அதில் 9029 பேர் Ph.என்று சொல்லப்படும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள்இவர்கள் அனைவருமே குளோபல் வார்மிங் என்பது பொய் என்கிறார்கள்குளோபல் வார்மிங் என்பது உண்மைதான் என்று சொல்லும் விஞ்ஞானிகள் வெறும் 3100 பேர் மட்டுமே! அரசுக்கு விஞ்ஞானிகள் அனுப்பிய கடிதத்தின் ஒரு உதாரணம் இது. 
விஞ்ஞானிகள் சொல்லும் காரணம்காபனீரொக்சைட்மீதேன், நைட்ரஸ் ஒக்சைட்,நீராவிஓஸோன் ஆகிய ஐந்து வாயுக்களேகிறீன் ஹவுஸ் விளைவுக்குக்காரணமாக இருக்கின்றனஇந்த உலக மாசுபடுதலுக்குக் காரணம் என்று சொல்லப்படும் காபனீரொக்சைட்டும் (CO2), மீதேனும்தான் (CH4) இந்த கிறீன் ஹவுஸ்உருவாவதற்கு முக்கிய காரணியாக இருக்கும் வாயுக்கள்அடிப்படையில் எமக்குஉதவியாக CO2, CH4 ஆகிய இரு வாயுக்களும் இருக்கஅந்த வாயுக்களால் எப்படிஎங்கள் பூமி மாசுபட முடியும் என்று கேட்கிறார்கள்இந்த இரு வாயுக்களும் எமக்கு உதவிதான் செய்ய முடியுமே ஒழியதீமையைச் செய்ய முடியாதவைஅப்படி இந்த வாயுக்களால்தான் பூமி வெப்பமாகின்றது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும்இதுவரை வெளியிடப்பட்ட வாயுக்களால் அதிகபட்சம் ஒரு சதம பாகை வெப்பம்தான் அதிகரித்திருக்கலாம் என்கிறார்கள் 
அப்படி என்றால் உலகம் வெப்பமாதல் இல்லையா என்கிறீர்களாநிச்சயமாகவெப்பமாகிறதுநாங்கள் நினைப்பது போல இல்லாமல்மிகவும் அதிகமாகவேவெப்பமாகிறதுஆனால் அப்படி வெப்பமாவதற்குக் காரணமே வேறுசூரியன் சமீபகாலங்களாக மிகவும் ஆவேசமாகத் தன் சீற்றத்தை வெளிப்படுத்தி வருகிறது.அதன் வெப்பக் கதிர்த் தாக்குதல் முன்னைவிட மிகவும் அதிகரித்துப் போய் உள்ளது. சொல்லப் போனால், 2012 இல் உலகம் அழியாவிட்டாலும் எதிர்வரும் மிகக் குறுகிய காலத்தில் உலகம் அழியும் அளவுக்கு சீற்றத்தைக் கொடுக்கிறது சூரியன்.
ஆனால் இவற்றையெல்லாம் மறைத்துவிட்டுஉலகம் மாசாவதால் பூமிவெப்பமாகின்றது என்று கதைவிட ஆரம்பித்திருக்கிறார்கள் சிலர் என்றுசொல்கிறார்கள் விஞ்ஞானிகள்இப்படிப் பொய் சொல்வதில் "இவர்களுக்கு அப்படிஎன்ன நோக்கம் உண்டு?" என்றுதானே கேட்கிறீர்கள்ஒன்றுமில்லைவெறும் பணமும் அதனால் கிடைக்கும் அதிகாரமும்தான் அவர்கள் நோக்கம்அதுவும் சாதாரணமான பணம் அல்லபில்லியன்ட்ரில்லியன் டாலர் பணம்ஆம்புவி மாசடைதல் என்பதை வைத்து அறவிடப்படும் பெட்ரோலிய வரி என்பது நீங்கள் கற்பனையே பண்ண முடியாததுகுளோபல் வார்மிங் என்று சொல்லி மாசுக் கட்டுப்பாட்டிற்காக உள்ளீடு செய்யப்பட்ட பணம் மிக மிக மிக அதிக அளவிலான பணம். 
இதில் இரண்டு விசயங்கள் உள்ளன1. புவி வெப்பமாதலுக்கான உண்மையானகாரணம் மறைக்கப்படுகிறது2. புவி வெப்பமாதல் தவறாக வழி நடத்தப்பட்டு பணம் சம்பாதிக்கப்படுகிறதுமுதலாவதில் எங்கள் தொடருக்குச் சம்பந்தமான உலக அழிவு உள்ளடக்கப்பட்டிருக்கிறதுஇரண்டாவதாகச் சொல்லியதில்உலகம் அழிந்தால் யார் தப்புவதற்கு முயற்சி செய்வார்களோ அவர்கள்அப்படித் தப்புவதற்குக் காரணமாக இருக்கும் கோடி கோடியான பணம் சம்பாதிப்பதுபின்னர் அதன் மூலம்  அசைக்க முடியாத சக்தியாக மாறுவது உள்ளடங்கி இருக்கிறது. இந்த குளோபல் வார்மிங் சிக்கலில் முக்கியமாகப் பலர் கையைக் காட்டும் நபர்கள் இருவர்அதில் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி போட்டியில்போட்டியிட்ட மாபெரும் கோடீஸ்வரர் ஒருவர்அடுத்தவர் ஐ.நாசபையில் மிக முக்கிய பதவியை வகித்துப் பின்னர் ஒரு சிக்கலில் பதவியைத் துறந்துஉலகின் உச்சியில் இருக்கும் கோடீஸ்வரர்களில் ஒருவர்இதில் நகைச்சுவை என்னவென்றால்அந்த இரண்டாவது நபர்தற்சமயம் தனது நாடான கனடாவை விட்டுவிட்டு சீனாவில் குடியிருக்கிறார்இந்தச் சம்பவம் உங்களுக்கு '2012' என்னும் ஹாலிவுட் படத்தை நினைவுபடுத்தினால் அதற்கு நான் பொறுப்பல்ல. இந்தத் தொடரில் நான் இவர்கள் இருவரின் பெயர்களையும் உங்களுக்குச் சொல்லப் போவது இல்லைஆனால் இணையம் இருக்கும் நிலையில் இதைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சிக்கலான விசயமாக உங்களுக்கு இருக்கப் போவதில்லைஉங்கள் தேடலுக்கு இது ஒரு சவாலாக அமையும்தேடுங்கள்.இதுவரை நான் சொன்னவற்றில் எங்குமே மாயா வரவில்லைமாயா இனம் பற்றிச் சொல்லப் போய் எங்கேயோ சென்று விட்டேனோ என்று கூட நீங்கள் நினைக்கலாம். ஆனால் இவற்றுக்கும் மாயாவுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டுஎப்படி டென்வெர் விமான நிலையத்தில் வரையப்பட்டிருந்த சித்திரத்தில் மாயா இனச் சிறுமி இருந்தாளோ அதுபோலஇவற்றிலும் மாயா கலந்தே இருக்கிறது. அப்படி இங்கு மாயாபற்றி என்ன உள்ளது என்றுதானே கேட்கிறீர்கள். சொல்கிறேன்.அடுத்த தொடரில் சொல்கிறேன்.

கண்களுக்கு ஒளிதரும் பீட்ரூட் கீரைகள்!


கண்களுக்கு ஒளிதரும் பீட்ரூட் கீரைகள்!Beet Leaves

அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் காய்கறியான பீட்ரூட்டில் இருந்து கிடைக்கும் இலைகளான பீட்ரூட் கீரைகள் ஊட்டச்சத்து நிறைந்ததாகும். இது மருத்துவ குணம் கொண்டதாகவும் உள்ளது.

பீட்ரூட்டை உணவில் சேர்த்துக்கொள்கின்ற அளவிற்கு பீட்ரூட் கீரையை நாம் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஐரோப்பியர்கள் இக்கீரையை விரும்பி தங்கள் உணவை சேர்த்துக் கொள்கின்றனர். இது ஐரோப்பா கண்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட போதிலும் சமீபத்தில்தான் உலகம் முழுவதும் பயிரிடப்பட்டு வருகிறது.

ஐரோப்பாவிலும், வடஅமெரிக்காவிலும், கீரைக்காகவே பீட்ரூட்டைப் பயிரிடுகின்றனர்.. சைபீரியாவில் கால்நடைகளின் உணவிற்காகவே முற்காலத்தில் இந்த கீரையும் கிழங்கும் பயிரிடப்பட்டது எனச் சொல்லப்படுகிறது. கோழிகள் இக்கீரையை விரும்பி உண்கின்றன. எனவே இது ஒரு கோழித் தீவனமாகவும் பயன்படுகின்றன

சுவையான கீரை

பீட்ரூட்டுக்கு சுகந்தா என்ற என்ற வேறு பெயரும் உண்டு. இந்தியாவில் கூட கிழங்குக்காக மட்டுமின்றி கீரைக்காகவும் இதனை பயிரிடுகின்றனர். இக்கீரையை பொரியலாகவோ, துவரம் பரும்புடன் சேர்த்து கூட்டாகவோ செய்யலாம். பாசிப்பயறு, தட்டைப்பயிறு, முதலியவற்றுடன் சேர்த்துக் கூட்டுக்கறிகள் ஆக்கலாம். இப்பயிர்களுடன் சேர்க்கப்பட்ட கீரை மிகவும் சுவையாக இருக்கும். சாலட் செய்யவும் இக்கீரை பயன்படுகிறது.

கரோட்டின் உயிர்சத்து

பீட்ரூட் கீரைகளில் நரம்புகள் அதிகம் உள்ளது. இந்நரம்புகள் அதிகம் உள்ளது. இந்நரம்புகளில் கரோட்டின் எண்ணும் உயிர்சத்து அதிகம் உள்ளது. இந்த கரோட்டின் வைட்டமின் ஏ சத்தை அதிகம் சேர்த்து வைக்கின்றன. எனவே இதனை வைட்டமின் ஏயின் சேமிப்புப் பட்டரை என்றே கூறலாம். பச்சையாக உண்பதால் வைட்டமின் ஏ நேரடியாக நம் உடலில் சேருகிறது. இதனை கத்தியைக் கொண்டு பறிக்கக் கூடாது. கையால் திருகி பறிக்கவேண்டும்.

புரதம், தாது உப்புக்கள்

பீட்ரூட் கீரை ஒரு சிறந்த உணவாக அமைவதோடு புரதம் மற்றும் தாது உப்புகள் உயிர்சத்துக்கள் நிறைந்த கீரையாகும். தையாமின், ரிபோஃப்ளோவின், நிக்கோடின் அமிலம், வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளது.

பீட்ரூட் கீரை சிறுநீரைப் பெருக்கி அதனை மிதமாக வெளியேற்றுகிறது. மலத்தை இளக்கி வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. மலச்சிக்கலைத் தவிர்க்கும் இக்கீரை கல்லீரலுக்கு வலிவு கொடுக்கிறது.

கண்நோய்கள் குணமாகும்

உடலில் ஏற்படும் எரிச்சலுக்கு இந்த இலையில் சாற்றினை தடவ எரிச்சல் தணியும். வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் கண் நோய்களை இக்கீரை போக்குகிறது. கண்ணுக்கு தெளிவையும், பார்வையும், கூர்மையும் ஏற்படுகிறது. உடற்சூட்டால் ஏற்படும் கண் வீக்கம், அழற்சி முதலியவற்றுக்கு இக்கீரையின் சாற்றை கண் இமைகளில் பூச குணம் கிடைக்கும். கீரையை உணவாக உட்கொண்டாலும், கண் நோய்கள் குணமடையும் என்றும் உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

சுய தொழில்கள்-4.2 செம்மறி ஆடு வளர்ப்பு





செம்மறி ஆடு வளர்ப்பு


ஆடு வளர்ப்பு நன்மைகள்


ஆடு வளர்ப்பு அனைத்துச் சூழலுக்கும் ஏற்றதாகும். அதிகப் பராமரிப்பு தேவையில்லை. சிறிய இடம் மற்றும் எளிய கொட்டகை போதுமானது.
குறைந்த முதலீடு மற்றும் உடனடி வருவாய்
வெள்ளாட்டிலிருந்து பால் மற்றும் கறி ஆகிய இரண்டிலிருந்தும் வருமானம் கிடைக்கிறது.
ஒரு ஆட்டிலிருந்து சராசரியாக 22-30 கிலோ கறி கிடைக்கின்றது. அனைத்து விதமான மக்களும் உண்ணக் கூடிய இறைச்சி.
அதிகமான குட்டிகளை ஈனும் விகிதம். ஒவ்வொரு முறையும் சராசரியாக 2-3 குட்டிகளை ஈனுகிறது
நல்ல எரு கிடைக்கிறது.
வருடம்முழுவதும்வேலை


செம்மறி
 ஆட்டினங்கள்
ராமநாதபுரம் வெள்ளைகீழக்கரிசல்நீலகிரிதிருச்சி கருங்குரும்பைமேச்சேரிமெரினோ.
உள்ளூர் இனங்கள் - இது வெவ்வேறு இடத்தைப் பொறுத்து மாறும்
· மெரினோ - கம்பளிக்கு உகந்தது
· ராம்பெளலட் - கம்பளி மற்றும் கறிக்கு ஏற்றது.
· சோவியோட் - கறிக்கு ஏற்றது
· செளத் டான் - கறிக்கு ஏற்றது
நல்ல தரமான இன வகைகள்ஆட்டுத் தொழுவம் அமைப்பது,வளமான செம்மறி ஆடுகள் உற்பத்தி போன்றவற்றைப் பற்றி ஏதேனும் விபரம் தேவைப்பட்டால் அருகில் உள்ள கால்நடை பராமரிப்பு மையத்தையோ அல்லது வேளாண்அலுவலகத்தையோ அணுகவும்.



நிலம் அதிகமாக இருக்குமெனில்செம்மறி ஆடுகளை மேயவிட்டும்வீட்டில் தொழுவத்தில் பராமரித்தும் வளர்க்கலாம்.வறட்சியான மற்றும் மானாவாரி நிலம் சார்ந்த பண்ணையத்தில்,செம்மறி ஆடு வளர்ப்பு ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. சிறு மற்றும் குறுநில விவசாயிகள்நிலமற்ற வேளாண் தொழிலாளிகள்குறைந்த முதலீடு செய்து நிறைய லாபம்பெறலாம்.
நன்மைகள்
· அனைத்து சூழலுக்கும் ஏற்றதாகும். அதிகப்படியான பராமரிப்பு அவசியம் இல்லை.
· கறியின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது
· உரோமம் கம்பளி தயாரிக்கவும் மற்றும் கறி இறைச்சிக்காகவும் பயன்படுகிறது.
· சராசரியாக ஒவ்வொரு முறையும் 1-2 குட்டிகள் ஈனுகிறது.
·ஒரு ஆட்டிலிருந்து சராசரியாக 22-30 கிலோ கறி கிடைக்கிறது.
· எருவை சேர்த்து நிலத்தை வளமாக்குகிறது.
செம்மறியாடு வளர்ப்பு
செம்மறியாடுகள் எல்லா தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் வளரும் தன்மை கொண்டவை. அதிகளவு நிலம் கொண்டு பகுதிகளில் திறந்த வெளியில் மேயவிட்டும், இடவசதி குறைவாக உள்ள இடங்களில் பட்டியலில் அடைத்தும் ஆடுகளை வளர்க்கலாம். குறைந்த செலவில் சிறு, குறு நில விவசாயிகள், நிலமற்ற தொழிலாளர்களுக்கு ஆடு வளர்ப்பு இலாபம் தரும் தொழிலாக விளங்குகிறது.
செம்மறி ஆடு வளர்ப்பின் நன்மைகள்
  • செம்மறி ஆட்டிலிருந்து இறைச்சி, கம்பளம், தோல் எரு மற்றும் பால் மூலம் வருவாய் கிடைக்கிறது.
  • ஒரு செம்மறி ஆடு ஒரு ஆண்டிற்று 500 முதல் 700 கிலோ எரு உற்பத்தி செய்கிறது.
  • செம்மறி ஆடுகள் புல்லின் மேற்பகுதி மட்டும் மேய்வதால் மேய்ச்சல் தரைகள் அழிவதில்லை. மரங்களையும் இவை அழிப்பதில்லை.
  • செம்மறியாடுகள் மந்தையாகவே நடமாடுவதால் பராமரிப்பு எளிது. 100 ஆட்டிற்கு 1 நபர் போதுமானது.
  • அதிகச் செலவில் கொட்டகைத் தேவையில்லை. திறந்தவெளிகளிலும் பட்டிகளிலும் வளர்க்கலாம்.
மேலும் செம்மறி ஆடுகள் எல்லா தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் வளரும் தன்மை கொண்டவை. எடுத்துக்காட்டாக.
  • வெப்பப் பிததேசங்களிலும் காணப்படும் ஆடுகள் உடல் வெப்பத்தைத் தணிக்கும் வகையில் கம்பளமில்லாத உரோமத்துடனும், நீண்ட கால்களுடனும், பெரிய வால், காது, கழுத்து அமைப்புக்களுடனும் காணப்படுகின்றன.
  • குளிர்ப் பிரதேசங்களில் உள்ள செம்மறி ஆடுகள் உரோமத்துடன் காணப்படுவதால் மழைத்தண்ணீர் உடலில் பட்டு பாதிக்காதவாறு உள்ளன.
  • தீவனத் தட்டுப்பாடு உள்ள பிரதேசங்களில் வாழும் செம்மறியாடுகள் தங்களுக்கு தீவனம் சரிவரக் கிடைக்காத காலங்களில் உபயோகித்துக் கொள்வதற்காக கொழுப்புச் சத்தை தாங்கள் உடலில் (வால்) சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவை.
  • செம்மறி ஆடுகளில் இறைச்சி அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும்.
  • சாதாரணமாக 1-2 குட்டிகள் ஈனும்.
  • இவை வயல்வெளிகளில் மேயும் போது இதன் புழுக்கைகள் மற்றும் சிறுநீர் வயலுக்குச் சிறந்த எருவாகப் பயன்படுகிறது.
(ஆதாரம்: www.indg.in)

    ஆடு மேய்க்கலாம்

    ஆயிரமாயிரமா சம்பாதிக்கலாம்!



    ``ஆடு வளர்ப்பது லாபகரமான தொழில் என்பதில் யாருக்கும்எள்ளளவு சந்தேகமும்வேண்டாம். நாம் வளர்க்கும் ஆடுகளைமிக மிக எளிதாக மார்க்கெட்டிங் செய்துவிடலாம்என்பதால், இந்தத் தொழிலில் ஆண், பெண் வித்தியாசமின்றி யார்வேண்டுமானாலும்தாராளமாக இறங்கலாம்.
    கொட்டில் முறையில் நீங்கள் ஆடு வளர்க்கப் போகிறீர்கள்என்றால் உங்களுக்குசொந்தமான இடத்திலேயே ஷெட்அமைத்து, ஆடு வளர்க்கலாம். அதற்கு உங்களுக்குஇரண்டுஏக்கர் இடம் இருந்தால் போதும். பகலில் வெளியே ஆட்டைமேயவிட்டு, இரவில்கொட்டிலில் அடைத்துவிடலாம். மழைக்காலங்களில் ஆட்டை வெளியே கொண்டு போய்மேய்க்கமுடியாதபோது, உங்களிடம் உள்ள இரண்டு ஏக்கரில் வளரும்பசுந்தீவனத்தைஆடுகளுக்கு உணவாகக் கொடுக்கலாம்.

    உங்களிடம் நிறைய இடம் இருக்கிறது. மேய்ச்சலுக்காகஆடுகளை வெளியே அனுப்பத்தேவையில்லை என்றால், ஆறு ஏக்கரை முதலில் தனியாக ஒதுக்கிவிடுங்கள். ஆட்டுக்குத்தேவையான பசுந்தீவனத்தை இந்த ஆறு ஏக்கரில்வளர்த்து, சாப்பிடத் தாருங்கள். நீங்கள்ஆடு வளர்க்கும்இடத்தைச் சுற்றி மேய்ச்சல் நிலம் இல்லை என்றால் தனியாகஇடம்ஒதுக்கி, பசுந்தீவனம் வளர்த்து, ஆட்டைப் பராமரிப்பதுதவிர வேறு வழியில்லை.
    கொட்டில் முறையில் வளர்க்கும் போது ஆடுகளுக்கு அடிக்கடிநோய் வர வாய்ப்புண்டு.மேய்ச்சல் முறையில் வளர்த்தால்ஆடுகள் நிறைய அலைய வேண்டியிருக்கும்.இதனால்ஆட்டின் உடல் எடை குறையும். இரண்டையும் சம அளவில்கலந்துவளர்க்கப்படும் ஆடுகள், நல்ல உடல் எடையோடுஆரோக்கியமாக இருக்கும்.

    நம்மூரில் நிறைய வகை ஆடுகள் உண்டு. நாட்டு ஆடுகள்வளர்ப்பதற்குச் சிறந்தவை.திருநெல்வேலி மாவட்டத்தில்உள்ள் செங்கனி, பால்கனி அருமையான ஆடு வகைகள்.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியாடும் நல்லஇறைச்சி தரக்கூடியவை.

    ஆடுகளை வளர்க்க நிலங்கள் தயார் என்றால், சிலவிஷயங்களை அவசியம் தெரிந்துகொள்வது நல்லது. முதலில் ஆடுகளை சந்தையில் வாங்குவதைவிட, பண்ணைக்கு போய்வாங்குவது நல்லது. இரண்டாவது, உங்களுக்கான பசுந்தீவனத்தை நீங்களேவளர்த்தால்தான்செலவு குறையும். கலப்பினத் தீவனத்தை ஆடுகளுக்குநிறைய தந்தால்,நமக்குத்தான் செலவு அதிகமாகும்.

    தொழில் ரீதியில் ஆடு வளர்க்க விரும்புகிறவர்கள், குட்டிஆடுகளை வாங்காமல், ஒன்றரைவயதுள்ள இரண்டுபல்லுள்ள ஆடுகளாகப் பார்த்து வாங்க வேண்டும். அந்தமாதிரிஆடுகள்தான் அடுத்த ஆறு மாதத்தில் குட்டி போடும். பதினைந்து மாதங்களுக்குப்பிறகு நல்ல உடல் எடையோடுஇருக்கும். விற்றாலும் நல்ல விலைக்குப் போகும்.

    ஒரு ஆட்டின் விலை ஆயிரம் ரூபாய் முதல் ஐம்பதாயிரம்ரூபாய் வரை விற்கிறார்கள்.எந்த இனத்து ஆடுகளைவாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து ஆட்டின் விலை மாறும்'' -அடிப்படையான விஷயங்களை சொல்லிக் கொண்டேபோகிறார் தாமோதரன்.

    ஓரளவுக்கு வருவாய் தரக்கூடிய வகையில் எல்லோரும் ஆடுவளர்க்கிற மாதிரி ஒரு புதியமுறையை பல கிராமங்களில்அறிமுகப்படுத்தி இருக்கிறார் தாமோதரன். இரண்டுஏக்கர்நிலமும் மூன்று பேர் வேலை பார்க்க்கூடிய ஒருகுடும்பத்துக்கு அல்லது ஒருகுழுவிற்கு 25 அல்லது 50 ஆடுகளைக் கொடுக்கிறார். இதற்காக அவர்கள் ஒருநயாபைசாகூட கொடுக்க வேண்டியதில்லை. இந்த ஆடுகளைஆரோக்கியமாகப் பராமரித்து,வளர்க்க வேண்டிய வேலைஅவர்களுடையது. ஒரு ஆடு, இரண்டுஆண்டுகளுக்குள்சராசரியாக மூன்று குட்டிகளை ஈணும். ஐம்பது ஆடுகளைநீங்கள்வளர்க்கிறீர்கள் என்றால் ஏறக்குறைய 150 குட்டிகள்உங்களுக்குக் கிடைக்கும். இதில் 75குட்டிகளை நீங்களேவைத்துக் கொள்ளலாம். மீதமுள்ள குட்டிகளைதாமோதரனுக்குக்கொடுத்துவிட வேண்டும் என்பதுதான்அக்ரிமெண்ட்.

    ஆடு வளர்க்கும் போது ஒன்றிரண்டு ஆடுகள் இறந்தாலும்அதற்காக அவர்கள் நஷ்டப்படவேண்டிய அவசியமில்லை. அருகிலுள்ள கால்நடை மருத்துவரிடமிருந்து ஒருசான்றிதழ்வாங்கிக் கொடுத்தாலே போதும். அதற்கான இன்ஷுரன்ஸைவாங்கிவிடுகிறார்தாமோதரன்.

    ``பாரம்பரியமான இந்த முறை நல்ல மேய்ச்சல் நிலம் உள்ளஅனைத்துப் பகுதிகளிலும்அதிவேகமாகப் பரவி வருகிறது. நூறு ஆடுகளை நாம் வளர்க்கும் பட்சத்தில்இரண்டுஆண்டுகளுக்கு ஒருமுறை 2.25 லட்ச ரூபாய் வருமானம்கிடைக்கும். நாங்களேபதிமூன்றுக்கும் மேற்பட்டகிராமங்களில் ஆடுகளைக் கொடுத்து வளர்த்து வருகிறோம்''என்கிறார் தாமோதரன்.

    இன்னும் சில ஆண்டுகளில் கோழி வளர்ப்பு போல, ஆடுவளர்ப்பும் தனிப் பெருந் தொழிலாகவளர்ந்தாலும்ஆச்சரியப்படுவதற்கில்லை.

    தாமேதரனுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறவர்கள்என்கிற எண்ணுடன்தொலைபேசலாம்.

    கொசுறுத் தகவல் : மகாராஷ்டிராவில் SELF என்கிற ஒருதொண்டு நிறுவனத்தை நடத்திவருகிறார் தாமோதரன்என்கிற மராத்திக்காரர். கிராமங்களில் ஆடுவளர்ப்பதைஊக்குவிப்பதுதான் இவரது அமைப்பின் வேலை. இந்தஅமைப்பின் ஒருஆண்டு டேர்ன் - ஓவர் எவ்வளவு தெரியுமா? 650 கோடி ரூபாய்!
     094437-37094 


    அறிவியல் ரீதியான ஆடு வளர்ப்பு ஒரு வெற்றிக்கதை

    என் பெயர் .நாசர்நான் கோவை மாவட்டத்தில் கோட்டைப்பாளையம் கிராமத்தில்கரூர்வாலா ஆட்டுப்பண்ணை என்ற பெயரில் கடந்த இரண்டு வருடங்களாக அறிவியல்ரீதியாக வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளை வளர்த்து வருகின்றேன்முறையாகபயிற்சி பெற்று சிறந்த தொழில் நுட்பங்களைக் கடைபிடித்து பண்ணையைதொடங்குவதற்கு முன்பே பல வகையான பசுந்தீவனங்களைப் பயிரிட்டு அறிவியல்ரீதியாக பராமரித்தால் “ஆடு வளர்ப்பு” ஒரு லாபகரமான தொழில் என்பது நான்அனுபவத்தில் உணர்ந்த உண்மை.
    பசுந்தீவன உற்பத்தி:
    கோட்டைப்பாளையம் கிராமத்தில் மூன்று ஏக்கர் விவசாய பூமியை குத்தகைக்கு எடுத்துகோ 4 கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்கோ.எப்.எஸ்.29 தீவனச் சோளப்பயிர்வேலி மசால்,குதிரைமசால் மற்றும் அகத்தி போன்ற பசுந்தீவனங்களைப் பயிரிட்டேன்ஆடுகளுக்குதேவைப்படும் பசுந்தீவன அளவை கணக்குப்போட்டுசிறிய சிறிய பாத்திகளை அமைத்துபசுந்தீவனங்களை முறையாகப் பயிரிட்டு வளர்ப்பதால் ஆண்டு முழுவதும் பசுந்தீவனப்பற்றாக்குறை ஏற்படுவது இல்லை.
    விற்பனை வழிமுறைகள்:
    நான் வியாபாரிகளுக்கு ஆடுகளை அறுப்பதற்கு விற்பனை செய்வதற்கு முன்பே எனதுஆடுகளை எடைபோட்டுஅதிலிருந்து வெட்டிய உடல் எடை எவ்வளவு கிடைக்கும் என்றுகணக்குப்போட்டு என்னுடைய ஆட்டின் மதிப்பை தெரிந்துகொண்டு விலை நிர்ணயம்செய்துகொள்வேன்பிறகு வியாபாரியிடம் விற்பனை செய்யும்போது நான் நிர்ணயித்தவிலைக்குக் குறைவாக ஆடுகளைக் கொடுக்க மாட்டேன்இவ்வாறு ஆடுகளை விற்பனைசெய்வதால் அதிக லாபம் கிடைக்கிறதுமேலும் உயிருடன் ஆடுகளை விற்பதைவிடஅவற்றை இறைச்சியாக மதிப்பூட்டி விற்பனை செய்யும்போது மேலும் அதிக லாபம்கிடைக்கும் என்பதை உணர்ந்து ஆடுகளை அறுக்க ஒரு இடத்தை ஏற்படுத்திபோதியவசதிகளைச் செய்துதேவைப்படும்போதுஆடுகளை அறுத்து இறைச்சியாகவும்விற்பனை செய்கிறேன்.
    மேலும் ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்க ஆர்வமுள்ள பண்ணையாளர்கள் கீழ்க்காணும் சிலமுக்கிய விபரங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
    • ஆட்டுப்பண்ணை தொடங்கும் பண்ணையாளரே அந்தப் பண்ணையின் முதல்வேலையாளாக இருக்க வேண்டும்.
    • ஆட்டுப்பண்ணை தொடங்க முதலில் முறையான பயிற்சி அவசியம்.
    • பசுந்தீவன உற்பத்தியில் முக்கிய கவனம் செலுத்தி அதிக அளவு பயறுவகைமற்றும் மரவகைப் பசுந்தீவனங்களைப் பயிரிட வேண்டும்.
    • உயர்ந்த இனக்கிடாய்களையும்பண்ணை முறையில் வளர்க்கப்பட்டஆடுகளையும் தேர்வு செய்துவாங்கிபண்ணையை தொடங்க வேண்டும்.
    • நோய் தடுப்புகுடற்புழு மற்றும் ஒட்டுண்ணிகள் நீக்கம் போன்ற பண்ணைநடைமுறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
    • குட்டிகளில் இறப்பைத் தடுக்ககுட்டிகள் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.
    • நாம் வளர்த்த ஆட்டின் மதிப்பைத் தெரிந்துகொண்டு இடைத்தரகர்கள் மற்றும்வியாபாரிகளிடம் ஏமாறாமல் உடல் எடைக்கு ஏற்ப ஆடுகளை விற்பனைசெய்தால் அதிக லாபம் கிடைக்கும்.
    மேற்காணும் வழிமுறைகளை கடைபிடித்து அறிவியல் ரீதியாக ஆடுகளை வளர்த்தால்வெற்றி நிச்சயம்தொடர்புக்கு:
    தகவலுக்கு – .நாசர்கோயம்புத்தூர். 99943 82106.