Monday 9 April 2012

மாவீரன் திப்புசுல்த்தான்: ஒரு வரலாற்று பார்வை


 

மாவீரன் திப்புசுல்த்தான்: ஒரு வரலாற்று பார்வை.


கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்‘, திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. “இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. 1782 டிசம்பரில், ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. 

1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம்தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம். மூன்றாவது மைசூர்ப் போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (1790 – 92) ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனால் தூண்டிவிடப்பட்டது. தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான்.

எனவே எதிரிகளைத் தன்னந்தனியாக எதிர்கொண்டார் திப்பு. மைசூருக்கு அருகிலிருக்கும் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. “30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்திலிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது” என்று பின்னர் குறிப்பிட்டான் ஆங்கிலேய அதிகாரி மன்றோ.பல போர் முனைகளில் ஆங்கிலேயரை வெற்றி கொண்டன திப்புவின் படைகள். எனினும் போரின் இறுதிக்கட்டத்தில் மராத்தாக்களின் பெரும் படையும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொள்ளவே, உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் திப்புவுக்கு ஏற்பட்டது..“ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்” என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.

திப்புவின் அமைச்சர் பூர்ணய்யா செய்த ஐந்தாம்படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன. தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு. ஆங்கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத்துக்குத் தடையாகத் தென்னிந்தியாவிலிருந்து எழுந்து நின்ற அந்த மையம் வீழ்ந்தது.திப்புவின் புலி - ஆங்கிலேய சிப்பாயின் குரல்வளையை கவ்விப் பிடிப்பது போல வடிவமைக்கப்பட்ட இசைக்கருவி இவை எல்லாம் இன்றும் ஆங்கில ஆட்சியின் எதிர்ப்பை திப்பு சுல்தான் எப்படி வெளிபடுத்தினார் என்பதற்கு இன்றும் சான்றாக திகழ்கின்றன.
திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல; தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, அவர்கள் கண்டதில்லை.

ஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயர்க்கெதிரான நாடு தழுவிய, உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன.துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிகரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார். “திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்” என்று 1798இல் பதறியிருக்கிறான் வெள்ளை தளபதி வெல்லெஸ்லி.

படையனுப்பக் கோரி பிரெஞ்சுக் குடியரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “அந்தப் படை தன் தலைமையில்தான் போரிட வேண்டுமென்றும், நேச நாடான தன்னைக் கலந்து கொள்ளாமல் இனி ஆங்கிலேயர்களுடன் பிரான்சு எந்த உடன்படிக்கைக்கும் செல்லக் கூடாது” என்றும் கூறுகிறார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான், திப்புவின் இராணுவத்தில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள் பிரெஞ்சுப் புரட்சியாளர்களான ஜாகோபின்கள்.

பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூட, பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்கவில்லை. புரட்சி வெற்றி பெற்றபின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட்சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்று, ‘குடிமகன் திப்பு’ என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.

உலகில் நடக்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்களின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு “உலகின் கடைசி சர்வாதிகாரி இருக்கும் வரையில் நமது போராட்டம் தொடரட்டும்” என்று செய்தியும் அனுப்புகிறார்.ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று வாசகர்கள் வியப்படையலாம். வரலாற்றின் போக்கை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் மிகச் சிலரே. அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் திப்பு ஒருவர். பரம்பரை அரச குடும்பம் எதையும் சாராத திப்புவின் சமூகப் பின்னணியும், ‘பென்சன் ராஜாக்கள்’ என்று வெறுப்புடன் அவர் குறிப்பிட்ட ஆங்கிலேய அடிவருடி மன்னர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பும், பிரெஞ்சுப் புரட்சியின் இலக்கியங்களோடு அவர் கொண்டிருந்த பரிச்சயமும், அவருக்குள் அணையாமல் கனன்று கொண்டிருந்த காலனியாதிக்க எதிர்ப்புணர்வும், மாறிவரும் உலகைப் புரிந்து கொள்ளும் கணணோட்டத்தை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-13


அறியாத சில விசயங்களை 
தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-13

1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். (SCUBA - self Cointained Underwater Breathing Apparatus) 

2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா. 

3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு 

4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது. 

5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. 

6.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது. 

7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை. 

8.அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு. 

9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது. 

10.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது. 

11.உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள். 

12.திரை அரங்குகளே இல்லாத நாடு சவுதி அரேபியா, பூட்டான். 

13.உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம். 

14.உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ஸ்பெயின். 

15.அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய இராஜ்ஜியம். 

16.உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன. 

17. இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ. 

18.உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து. 

19.முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது. 

20.முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா. 

21.ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது. 

22.உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா). 

23.உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா). 

24.விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர். 

25.உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81. 

26.பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது. 

27.ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும். 

28.கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும். 

29.நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும். 

30.மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும். 
 *தொடரும்...

Wednesday 4 April 2012

அறிவியலுக்கு முதுகு தண்டாக இருந்தவர்கள் முஸ்லிம்கள்


அறிவியலுக்கு முதுகு தண்டாக இருந்தவர்கள் முஸ்லிம்கள்


நீங்கள் (முஸ்லிம்கள்) என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு?அறிவியலில் உங்களது பங்களிப்பு என்ன? இப்படிப்பட்ட சில கேள்விகளை நம்மில் பலர், முஸ்லிமல்லாத சகோதரர்கள் சிலரிடமிருந்து கேட்டிருக்கலாம்...

இதனை கேட்கும் போதெல்லாம் நமக்குள் தோன்றக்கூடிய கேள்விகள்...

ஏன் ஐரோப்பியர்கள் முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்தனர்? ஏன் ஏறிவந்த ஏணியை எட்டி உதைத்தனர்? முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லாமல் நவீன அறிவியல் இல்லையே, இதனை ஏன் பள்ளிகளில் நம் சகோதரர்கள் படிக்க விடாமல் செய்தனர்?குர்ஆன் அருளப்பட்ட காலம் தொடங்கி 1600 ஆம் ஆண்டுவரை, சுமார் ஆயிரம் ஆண்டுகள் முஸ்லிம்கள் அறிவியலின் பல பிரிவுகளில் சிறந்து விளங்கினர்.


அப்படிப்பட்ட அறிவியலை முஸ்லிம்கள் கண்டுபிடிக்கவில்லை நவீன கண்டுபிடிப்புகளுக்கு முழுவதும் காரணமாக இருந்தவர்கள் மேலை நாட்டவர் கள் என் தவறாக பிரசாரம் செய்ய பட்டு வருகிறது மேலை நாட்டவர்கள் விஞ்ஞான ஆய்வு செய்திட மதத்தின் பெயரால் தடுக்கப்பட்ட காலத்திலேயே முஸ்லிம்கள் மிகப் பெரும் கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்கினார்கள். 

இஸ்லாம் வளர்ச்சி கண்ட போது முஸ்லிம் உலகும், ஐரோப்பிய உலகும் எப்படி இருந்தன என்பது பற்றி விக்டர் ராபின்ஸன் (victor Rabinson) தனது ‘மருத்துவத்தின் கதை’ (The Story of Medicine) என்ற நூலில் குறிப்பிடும் போது, ‘ஐரோப்பிய நாடுகள் சூரியன் மறைந்தவுடன் இருளில் மூழ்கி விடும். முஸ்லிம் ஸ்பெயினைச் சேர்ந்த குர்துபாவிலோ தெரு விளக்குகள் ஒளி விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கி விடும். ஐரோப்பா அழுக்கடைந்திருந்தது. குர்துபா (கொரடோவா)விலோ 1000 குளியலறைகள் கட்டியிருந்தார்கள்.
ஐரோப்பா துர்நாற்றத்தால் மூடுண்டு கிடந்தது. குர்துபாவில் வாழ்ந்தவர்களோ தமது உள்ளாடைகளை தினமும் மாற்றி வந்தார்கள். ஐரோப்பா சேற்றில் மூழ்கிக் கிடந்த போது, குர்துபாவில் தளம் போடப்பட்ட பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஐரோப்பாவின் அரண்மனைக் கூரைகளிலேயே கரும்புகை படிந்திருந்த போது, குர்துபாவிலிருந்த மாளிகைகள் அரபுக் கலை நுட்பங்களால் அலங்கரிக் கப்பட்டிருந்தன. ஐரோப்பாவின் பிரபுக்களுக்கு கையெழுத்து போடத் தெரியாமலிருந்த காலத்திலேயே குர்துபாவின் சிறுவர்கள் பாடசாலைக்குப் போய்க் கொண்டிருந்தனர். 


ஐரோப்பாவின் மத குருமார்கள் ஞானஸ்நானச் சடங்குகளுக்குரிய சுலோகங்களை வாசிக்கத் தெரியாதிருந்த சமயத்தில் குர்துபாவின் ஆசிரியர்கள் பெரும் நூல் நிலையங்களை நிறுவிக் கொண்டிருந்தார்கள்!” என்று குறிப்பிடுகின்றனர்.இந்தக் கூற்று ஒட்டுமொத்த ஐரோப்பிய உலகின் அறிவு மட்டத்தையும் நாகரிகப் பண்பாட்டு வீழ்ச்சியையும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.அதே வேளை, முஸ்லிம் உலகின் அறிவியல் எழுச்சியை எடுத்துக் காட்டும் கூற்றாகவும் திகழ்கின்றது



இன்றைய கண்டுபிடிப்புகளுக்குப் பெரும்பாலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர்களே முஸ்லிம்கள் தாம். வியக்கத்தக்க சாதனைகள் படைத்த முஸ்லிம் விஞ்ஞானிகளில் சிலர்... (மேற்கத்திய உலகில் இவர்கள் அறியப்படும் பெயர்கள் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது) பெயர் காலக்கட்டம் துறை (கி.பி.) அல்குவாரிஸ்மி 780லி850 கணிதம்லிவானவியல் (அல்காரிஸ்ம்) அல் ராஜி 844லி946 மருத்துவம் (ரேஜஸ்) அல் ஹைதம் 965லி1039 கணிதம்லிஒளியியல் (அல்ஹேஜன்) அல்பிரூணி 973லி1048 கணிதம்லிதத்துவம்லி வரலாறு இப்னு சீனா 980லி1037 மருத்துவம் (அவிசென்னா) அல் இத்ரீஸி 1100 புவியியல் (டிரேஸஸ்) இப்னு ருஸ்து 1126லி1198 மருத்துவம்லிதத்துவம் (அவிர்ரோஸ்) ஜாபிர் இப்னு 803 பௌதீகம் ஹையான் (ஜிபர்) அல் தபரி 838 மருத்துவம் அல் பத்தானி 858 தாவரவியல் (அல்பதக்னியஸ்) அல் மசூதி 957 புவியியல் அல் ஜஹ்ராவி 936 அறுவை சிகிச்சை (அல்புகேஸிஸ்) இப்னு ஹல்தூண் 1332 வரலாறு இப்னு ஜுஹ்ர் அறுவை சிகிச்சை (அவன்ஜோர்) 



இன்றைய சூழ்நிலையில் மேலை நாட்டவரின் பங்களிப்பு அதிகமாக உள்ளது என்று கூறினால் அது சரி தான். இன்றைக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவாக இருப்பதற்கு இஸ்லாம் காரணம் அல்ல. மேலை நாட்டவர் அதிகம் பங்களிப்புச் செய்வதற்கு அவர்களின் மதமும் காரணம் அல்ல. மாறாக பொருளாதார வசதி, ஆள்வோரின் ஊக்குவிப்பு போன்றவை காரணங்களாகவுள்ளன. காலச் சக்கரம் சுழலும் போது மேலை நாடுகள் பின் தங்கும் நிலையை அடையலாம். பொருளாதார வசதிகள் இன்னொரு பக்கம் குவியலாம். அப்போது அவர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். முந்தைய முஸ்லிம் ஆட்சியாளர்கள் அறிவாளிகளையும், ஆராய்ச்சியாளர்களையும் பெரிய அளவில் ஊக்குவித்தனர். இன்றைய முஸ்லிம் ஆட்சியாளர்களோ சுகபோகங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர். எனவே தான் முஸ்லிம்களின் பங்களிப்பைக் காண முடியவில்லை. ஆயினும், கடந்த காலத்தின் மீது பழியைப் போட்டு விட்டு முஸ்லிம்கள் தப்பித்துக் கொள்ளக் கூடாது. மற்ற நண்பர்களின் விமர்சனத்தைச் சவாலாக எடுத்துக் கொண்டு முஸ்லிம் இளைஞர்கள் முயற்சி செய்தாக வேண்டும். நமது நாட்டில் கிறித்தவர்கள் தாம் கல்விக் கூடங்களையும், மருத்துவ மனைகளையும் நிறுவியுள்ளனர் என்று நண்பர் கூறுவது உண்மை தான். இந்த நிலையை மாற்றும் கடமை முஸ்லிம்களுக்கு இருப்பதும் உண்மை தான்.
-
இனி இஸ்லாம் அறிவியலுக்கு ஆற்றியபங்குகளை பாப்போம் :-
இஸ்லாமிய போதனை மக்கா மண்ணில் ஆரம்பிக்கப்பட்ட வேளை அரேபியாமட்டுமன்றி அகில உலகுமே அறியாமை இருளில் மூழ்கியிருந்தது. இஸ்லாம் எனும் அறிவுத் தீபத்தை ஏற்ற வந்த அன்னல் நபி உம்மி (எழுத வாசிக்கத் தெரியாத) தூதராவார்.(1) அவர் இந்தத் தூதை எடுத்துச் சொன்ன சமூகம் (எழுத வாசிக்கத் தெரியாத) உம்மி சமூகமாகும் என்பதைக் குர்ஆன் குறிப்பிடுகிறது. (2) வரலாற்று ஏடுகள் அக்காலத்தை ‘ஜாஹிலிய்யக்காலம்’ என அடையாளப் படுத்துகின்றன. நபி(ஸல்) அவர்களது 23 வருடகால கடின முயற்சியின் பின்னர் அரேபியர்களிடையே கலாசார பண்பாட்டு ரீதீயான முன்னேற்றம் ஏற்பட்டது போல் மிகப் பெரிய அளவில் அறிவியல் பேரெழுச்சியும் ஏற்பட்டது.  


அரேபிய தீபகற்பத்தையும் தாண்டி ஐரோப்பிய உலகுக்கும் அறிவொளிகளை வழங்கும் அளவிற்கு மகத்தானதொரு மாற்றம் நிகழ்ந்தது. இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் காழ்ப்புணர்வு கொண்டவர்களால் கூட புறக்கணித்து விட முடியாத அளவுக்கு அறிவியல் எழுச்சியின் உச்சத்தை அடைய அந்த சாதாரண ஆட்டுமந்தை மேய்த்தவர்களைத் தூண்டியது எது? இந்த திடீர் திருப்பத்திற்கான காரணங்கள் என்ன? அறிவியல் துறையில் முஸ்லிம்கள் நிகழ்த்திய சாதனைகள்? அதற்குச் சாதகமாக இருந்த காரணிகள், இன்றைய காலகட்டத்தில் இத்துறை முஸ்லிம்களுக்கு மத்தியில் வீழ்ச்சி அடைந்தற்கான காரணங்கள் என்பனவற்றை இங்கு நோக்குவோம். 

முஸ்லிம்களின் அறிவியல் எழுச்சி:


கி.பி. 500ம் ஆண்டு முதல் 1500ம் ஆண்டுவரையுள்ள காலம் மத்தியகாலம் என வரலாற்றில் அழைக்கப்படுகிறது. இருண்ட காலம் என்றும் வர்ணிக்கப்படும் இக்காலப் பிரிவில் ஐரோப்பிய நாடுகள் கூட கலை, கல்வி, கலாசார ரீதீயில் பெரிய வீழ்ச்சியைக் கண்டிருந்தன. இதே வேளை கிறிஸ்தவ உலகுஅறிவியல் துறைக்கெதிரான அறிவிக்கப்படாத யுத்தத்தையே தொடங்கியிருந்தது.  
 
இந்த காலக்கட்டத்தில் முஸ்லிம்களின் அறிவியலுக்கான பங்களிப்பு என்பது அளப்பறியது. முஸ்லிம்களில் நூற்றுக்கணக்கான அறிவியல் மேதைகளையும், கணித மேதைகளையும் உருவாக்கிய காலகட்டம். அறிவியலின் பல பிரிவுகளில் தங்களின் தனி முத்திரையை முஸ்லிம்கள் பதித்தனர்.பாக்தாத்தும் (Baghdad), ஸ்பெயின்னும் (Spain) உலகின் தலைச்சிறந்த கல்வி கற்கும் இடங்களாக இருந்தன. பல்வேறு நாட்டு மாணவர்கள் படிப்பதற்காக இந்த இடங்களுக்கு தான் வருவார்கள். அரபி மொழியில் தான் பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டன. 

இந்த காலக்கட்டத்தில் தான், முஸ்லிம்கள் எழுதிய பல ஆராய்ச்சி நூல்கள் லத்தீன் (Latin) மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஐரோப்பிய தேசங்களுக்கு சென்றன. இந்த நூல்கள் தான் ஐரோப்பிய தேசங்களின் நூலகங்களை அலங்கரித்தன. இந்த நூல்களை தான் ஐரோப்பிய அறிவியலாளர்கள் தங்கள் ஆராய்ச்சிகளுக்கு அடிப்படையாக பயன்படுத்தினார்கள். முஸ்லிம்களின் பல ஆராய்ச்சிகளை பயன்படுத்திதான் ஐரோப்பியர்கள் அறிவியலில் முன்னேறினார்கள்.

கி.பி. 283ல் எகிப்திய ஆட்சிப்பீடத்திலேறிய இரண்டாம் தொலமி அலெக்சாந்திரியாவில் நிறுவிய பிரமாண்டமான நூல் நிலையத்தை தியோபிளஸ் எனும் பாதிரியின் தூண்டுதலால் கி.பி. 391ல் கிறிஸ்தவர்கள் தீயிட்டுக் கொழுத்தினர். அறிவியலை மதத்தின் பெயரால் எதிர்த்தவர்கள் அறிஞர்களையும் விட்டுவைக்கவில்லை. ‘இயேசு கிறிஸ்துவுக்குப்பின் எந்த விஞ்ஞானத்துக்கும் இடமில்லை, அவருடைய போதனைகளுக்குப் பின் எந்தவிதமான விஞ்ஞானப் போதனைகளும் தேவையில்லை. (3) என்று போதிக்கப்பட்டதால் விஞ்ஞானிகள் பலர் மதப்பிரிவினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். 

இவ்வாறு அறிவியலுக்கெதிரான போராட்டம் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கையில் முஸ்லிம் உலகு அறிவுத்தாகம் கொண்டு, அறிவியலில் மோகம் கொண்டு பண்டைய அறிவியல் செல்வங்களைத் தேடி வந்து பெற்று அவற்றை மேலும் மெருகூட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தது. 


அழிவின் விளிம்பிலிருந்த அறிவியலை முஸ்லிம்கள் பாதுகாத்திருக்காவிட்டால் பழம் பெரும்அறிவியல் முதுசங்கள் பல இன்றை உலகுக்குக்கிடைக்காது போயிருக்கலாம். அழிவிலிருந்து அறிவியலைப் பாதுகாத்தமை முஸ்லிம்கள் அறிவியல் உலகுக்குச் செய்த மிகப் பெரும் சேவையாகும். இது குறித்து பேராசிரியர் Stanislas Guyand அவர்கள் தனது Encyceopadie des science religieusus என்ற ஜேர்மனிய நூலில்,ஐரோப்பியர்களின் பல ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாய் விளங்கியது முஸ்லிம்களின் ஆராய்ச்சிகள்தான்.

முஸ்லிம்களின் ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாய் விளங்கியது குர்ஆன் தான், அதன் "ஆராய்ந்து செயல்படுங்கள்" என்ற வார்த்தைகள்தான். 
அறிவியலில் இஸ்லாமிய அறிஞர்களின் பங்களிப்பு மட்டும் இல்லையென்றால் இன்றைய ஐரோப்பா அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் முதன்மையாக விளங்கியிருக்க முடியுமா என்பது எனக்கு தெளிவாகவில்லை --- Mathematician Keith Devlin, Executive Director, center for the study of language and Information at Stanley University.

‘மத்தியகால வரலாறுகளிலேயே இஸ்லாத்தின் வரலாறு நாகரிகத்தின் வரலாறாகவே விளங்குகிறது. புறக்கனிக்கப்பட்ட கிரேக்க விஞ்ஞானத்தையும் தத்துவ சாத்திரங்களையும் அழிவிலிருந்து பாதுகாத்து, மேற்குலகை எழுச்சிபெறச் செய்து அறிவியக்க வளர்ச்சிக்குக் காரணகர்த்தாக்களாக இருந்ததற்காக நாம் முஸ்லிம்களுக்கு மிகவும் கடமைப்படடுள்ளோம். ஏழாம் நூற்றாண்டில் பழைய உலகம் மரண வேதனை அனுபவித்துக் கொண்டிருந்தபோது அரேபியர்கள் பெற்ற வெற்றி இந்த உலகில் புதிய குருதியைப் பாச்சியது.’ என்று குறிப்பிடுவது மிகைப்படுத்தப்பட்டதொரு கூற்றல்ல. 

இதே கருத்தை C.E. Storss என்ற அறிஞர் Many Greeds -One cross என்ற நூலில், 

‘இருள் அடைந்திருந்த யுகத்தில் விஞ்ஞானம், தத்துவம் போன்ற ஒளிச்சுடர்களை உயரப்பிடித்திருந்த பெருமை அரேபிய முஸ்லிம்களையே சாரும். 


அன்று அரேபியர் ஏற்படுத்திய அறிவியல் எழுச்சிதான் இன்றைய ஐரோப்பாவின் அறிவியல் தொழிநுட்ப முன்னேற்றத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தது என்பதை மேற்படி கூற்றுக்கள் உறுதி செய்கின்றன. அன்றைய அவர்களது அறிவியல் தாக்கம் இன்றுவரை வியாபித்துள்ளததைக் காணலாம். இதனைப் பின்வரும் கூற்று உறுதிப்படுத்துகின்றது. 

‘ஐரோப்பாவில் லௌகீகத் துறையிலும் ஆன்மீகத் துறையிலும், அறியாமை இருள் சூழ்ந்திருந்தபோது ஸ்பெயின் முஸ்லிம்கள் சிறப்பு வாய்ந்த நாகரிகத்தையும் ஸ்தீரமான பொருளாதார வாழ்க்கையையும் அமைத்திருந்தார்கள். கலை, விஞ்ஞானம், தத்துவம், கவிதை முதலிய துறைகளின் வளர்ச்சியில் முஸ்லிம் ஸ்பெயின் பெரும் பங்கெடுத்தது. அவர்களின் கருத்துக்களின் செல்வாக்கு 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த தோமஸ் அக்யனாஸ், தாந்தே போன்ற தத்துவ ஞானிகளின் சிந்தனைகளையும் தாக்கத் தவறவில்லை. முஸ்லிம் ஸ்பெயின் ஐரோப்பாவின் ஒளிவிளக்கைப் போல விளங்கியது. 
இறுதியாகவும் ஒட்டுமொத்தமாகவும் முஸ்லிம்கள் அறிவியல் துறைக்காற்றிய பங்குபற்றிக் கூறுவதாயின், பேராசிரியர் பிலிப் கே. ஹிட்டி History of Arabs எனும் தனது நூலில் கூறுவது போன்று ‘மத்திய கால ஆரம்பத்தில் மனித இனத்தின் முன்னேற்றத்திற்காகப் பணியாற்றியவர்கள் அரேபியர்களைப் போல வேறு எவரும் இல்லை’ என்று கூறலாம்.

இக்கூற்று அன்றைய அவர்களது அறிவியல் எழுச்சியின் தாக்கம் நீண்ட நெடிய வரலாறுடையது என்பதையும் ஐரோப்பாவின் மறுமலர்ச்சித் தொட்டிலாக திகழ்ந்தது ஸ்பெயினே என்பதையும் தெளிவுபடுத்துகின்றது. 


அறிவியல் துறையில் இவ்வாறு எழுச்சி பெற்ற முஸ்லிம்கள் அத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பு என்ன என்பதையும் ஓரளவு விரிவாக விளங்கிக்கொள்வது மேற்குறித்த கூற்றுக்களின் உன்னதத் தன்மையை உணர்ந்து கொள்ள வழிவகுக்கும். இவ்வகையில் முஸ்லிம்களின் அறிவியல்துறை சாதணைகள் பற்றி இங்கு நோக்கப்படுகிறது. 

குர்ஆன் கூறும் கால்நடைகளும் பால் உற்பத்தியும்


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 
 குர்ஆன் கூறும் கால்நடைகளும் பால் உற்பத்தியும்
 
 நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது, அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும்,இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம். அல்குர்ஆன் 16:66
 
இந்த இறைவசனத்தின் முதல் பகுதியில் கால்நடைகளிடம் தக்க படிப்பினை உள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். இங்கு படிப்பினை என்பதை ஆராச்சி என்ற கோணத்தில் பார்க்க வேண்டும். இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள அல்லாஹ் ஐந்து விஷயங்களை  (குளு) முன்வைக்கிறான் அவைகளாவன.
 
1)      கால்நடைகளின் வயிற்றுப்பகுதி
2)      வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்ததிற்கும் இடையில்
3)      கலப்பற்ற பால்
4)      அருந்துபவர்களுக்கு இனிமை
5)      தாராளமாக புகட்டுகிறோம்
  
மேற்கண்ட ஐந்து ஆராய்ச்சிகளில் முதல் இரண்டை பார்ப்போமா? 
1.  கால்நடைகளின் வயிற்றுப்பகுதி
2.  வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்ததிற்கும் இடையில்
 
பொதுவாக உயிரினங்களுக்கு வயிற்றுப்பகுதி என்ற அமைப்பு இருக்கும் இங்குதான் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகி அந்த செரிமானமாகிய உணவு புரதச்சத்தாக மாறி இரத்தத்தில் கலநது நமக்கு உடல் வலிமையைத் தருகிறது ஆனால் இந்த வயிற்றுப்பகுதி ஒருசில கால்நடைகளுக்கு அதாவது பசுமாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள் மற்றும் மான்கள் ஆகியவற்றிற்கு மட்டும் தனியாக அமைந்து அவை மனிதனுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது. உதாரணமாக பசுமாட்டை இங்கு ஆராய்வோம்.
 
 
பசுமாடும் அதன் வயிற்றுப் பகுதியும்
 பசுமாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள் மற்றும் மான்கள் ஆகிய கால்நடைகளுக்கு அதன் வயிறுப்பகுதி நான்கு தனித்தனி அறைகளாக அமைந்துள்ளன அவைகளாவன
  1. RETICULUM (ரெடிகுழம்)
  2. RUMEN,   (ரூமென்)
  3. OMASUM,  (ஓமசம்)
  4. ABOMASUM (அபோமசம்)
இங்கு குறிபிடத்தக்க அம்சம் என்னவெனில் மேற்கண்ட கால்நடைகளுக்கு மட்டுமே அமைந்துள்ள இந்த 4 அடுக்கு பகுதிகள் பன்றி முதலான மற்ற மிருகங்களுக்கு கிடையாது என்பதே!.
 
 
பசுமாடும் அதன் உணவு உட்கொள்ளும் முறையும்
பசுமாடு புல்வகைகளை உணவாக விழுங்குகிறது அந்த விழுங்கிய உணவு நேரடியாக ரூமென் மற்றும் ரெடிகுழம் பகுதிக்கு சென்று சேமிக்கப்படுகிறது பிறகு பசுமாட்டிற்கு உண்ட கலைப்பு ஏற்பட்டு அமைதியாக அமர்ந்து விடுகிறது.
சேமிக்கப்பட்ட உணவை ரெடிகுழம் என்ற பகுதி அதன் மற்ற இரு பாகங்களானRUMEN, (ரூமென்) OMASUM,  (ஓமசம்) என்ற பகுதிகளுக்குள் தள்ளிவிடுகிறது.
 
அமைதியாக அமர்ந்திருக்கும் பசுமாட்டிற்கு மீண்டும் உணவுப் பசி எடுக்க ஆரம்பிக்கிறது உடனே புல்வெளியை நாடிச் செல்லாமல் தான் வயிற்றில் சேமித்து வைத்த உணவு மீண்டும் வாய்ப் பகுதிக்கு இழுத்து பசுமாடு அசை போட ஆரம்பிக்கிறது. இந்த இயக்கத்திற்கு ரெடிகுழம் பயன்படுகிறது இதன் மூலம் முதல் முறையாக உட்கொண்ட உணவு மீண்டும் பசுமாட்டின் வாய் பகுதிக்கு செலுத்தப்பட்டு நன்றாக மீண்டும் ஒருமுறை அசை போட முடிகிறது.
 
பசுமாடு உட்கொண்ட உணவை சுத்திகரிக்கும் முறை
பசுமாடு மறுசுழற்சி முறையில் அசைபோட்ட உணவை அதன் வயிற்றுப்பகுதியான ரூமென் என்ற அறைக்குள் தள்ளப்படுகிறது இங்கு பல மில்லியன் மைக்ரோப்ஸ்-கள் அடங்கியுள்ளன இந்த மைக்ரோப்ஸ்கள் அசைபோட்டு நான்றாக அரைத்த உணவில் செரிமானம் செய்ய முடியாத கடினமான பகுதியை கூட மிக எளிதாக செரிமானம் செய்ய பயன்படுகிறது.
 
பிறகு செரிமானம் ஆன உணவு ஓமசம் என்ற அறைக்கு சென்றடைகிறது. இந்தஓமசம் பகுதியைப் பற்றி அறிவியல் உலகம் முழுவதுமாக இன்னும் ஆராய்ந்து முடிக்கவில்லை எனினும் தோராயமாக ஆராய்ந்து பார்த்ததில் உட்கொண்ட உணவை சிறு சிறு துகள்களாக ஒரே சீராக மாற்ற இந்த பகுதி பயன்படுகிறது என்று நம்பப்படுகிறது.
 
செரிக்கப்பட்ட உணவு இரத்தித்தில் எவ்வாறு கலக்கிறது!
பசுமாட்டின் வயிற்றிலுள்ள இறுதிப் பகுதியான அபோமசம் என்பது மற்ற பிராணிகளின் வயிறுகளை ஒத்து அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள ஹைட்ரோகுளோரிக் திரவம் ரூமென் பகுதில் செரிமானத்திற்கு பயன்படுகின்ற மைக்ரோப்ஸ்களை அபோமசம் அறைக்குள் நுழையாமல் தடுப்பதற்கும் அவ்வாறு நுழையும்பட்சத்தில் அவைகளை அழிக்கவும் பயன்படுகிறது.
 
மேலும் இந்த அபோமசம் பகுதியில் சேகரிக்கப்பட்ட அசைபோட்ட உணவுகள் சிறுகுடல் பகுதிக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள மைக்ரோபியல் எனப்படும் செல்கட்டமைப்புகளால் முழுவதுமாக ஜீரணமான செய்யப்படுகிறது. புரதச் சத்துக்களான அமினோ ஆசிட் மற்றும் விட்டமின்கள் உருவாக இந்த பகுதியே பயன்படுகிறது. பிறகு முழுவதும் ஜீரணமான உணவு நேரடியாக இரத்தில் கலந்துவிடுகிறது!
 
இரத்தத்திலிருந்து எவ்வாறு பால் உற்பத்தியாகிறது?
பசுமாடுகளின் உடலில் உள்ள செல்கள் இரத்தத்திலிருந்து நீரையும் ஊட்டச் சத்துக்களையும் அகற்றி அகற்றப்பட்ட அந்த நீரையும் ஊட்டச்சத்தையும் பாலாக மாற்றுகிறது. இந்த பால் பசுமாடுகளின் மடிகளின் வாயிலாக வெளியேறுகிறது.  அதைத்தான் நாம் இனிமையாக பருகுகிறோம்.
 
மேற்கண்ட ஐந்து ஆராய்ச்சிகளில் இறுதியான மூன்றை பகுதியை பார்ப்போமா?
 3.    கலப்பற்ற பால்
4.   அருந்துபவர்களுக்கு இனிமை
5.    தாராளமாக புகட்டுகிறோம்
 
 
கலப்பற்ற பால்
  • ஒரு மனிதனுக்கு ஊட்டச்சத்துக்களில் புரோட்டீன், கால்சியம் ஆகியவை இன்றியமையாமையாதவையாக உள்ளன. இவைகள் பசும் பாலில் அதிகமாக காணப்படுகின்றது. கால்சியம் எலும்பு நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.
 
  • பசும்பாலில் விட்டமின் ஏ, பி12, தையாமின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளது.
 
  • பசும்பாலில் தயாரிக்கப்படும் வெண்ணெய், நெய் போன்றவைகளில் கால்சியம் உள்ளதால் இது மனிதனின் தற்காப்பு சிஸ்டம் அதாவது IMMUNE SYSTEM-ஐ மேம்படுத்துகிறது.
 
  • உறங்குவதற்கு முன் 1 கிளாஸ் பால் அருந்திவிட்டால் அழகிய தூக்கம் கூட வருகிறதாம்.
 
அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் கலப்பற்ற பால் என்று கூறுவதன் மூலம் அந்த பாலில் எப்படிப்பட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன என்பதை சிந்திக்க வலியுறுத்துகிறான் ஆனால் மனிதன் அந்த பாலில் தண்ணீரை ஊற்றி கலப்படம் செய்து விற்கிறான். இஸ்லாம் கலப்படத்தை வண்மையாக கண்டிக்கிறது!
பால் பற்றி கூறும்போது அல்லாஹ் அதை அருந்துபவருக்கு இனிமை என்று வர்ணிக்கிறான் மேற்படி ஆய்வுகளை பார்த்தால் பால் எவருக்குத்தான் கசக்கும்.
 

தாராளமாக புகட்டுகிறோம்

இங்கு அல்லாஹ் பால் பற்றி குறிப்பிடும் போது இறுதியாக தாராளமாகபுகட்டுகிறோம் என்று கூறுகிறான் காரணம் அவன் படைத்த ரப்புல் ஆலமீன் அவன் கூறுவது எப்போதும் பொய் ஆகாது என்று இந்த கருத்தின் மூலம் நாம் அறிய வேண்டும். 
 
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று ஒரு பழமொழி உள்ளது அந்த பழமொழியின் அடிப்படையில் இந்த வார்த்தை உண்மை என்பதை நிருபிக்க இந்தியா நாட்டின் பால் உற்பத்தியை அளவுகோளாக பயன்படுத்தி பார்ப்போமா?
இந்தியாவின் பால் உற்பத்தி
ஆண்டுபால் உற்பத்திமக்கள் தொகை
196821 மில்லியன் டன்கள்குறைவு
200181 மில்லியன் டன்கள்அதிகம்
 மக்கள் தொகை பெருக பெருக பாலின் உற்பத்தியும் பெருகி வருகிறது மாறாக பாலின் உற்பத்தி குறைந்தபாடில்லை. இந்தியாவிற்கு அடுத்தபடியாக அமெரிக்க நாடு ஆண்டுக்கு சராசரியாக 71 மில்லியன் டன்கள் பால் உற்பத்தியை மேற்கொள்கிறது.
 
பாலின் உற்பத்தியை 1998ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி உலக நாடுகள் முழுவதையும் கணக்கிட்டுப் பார்த்தால் ஆண்டுக்கு சராசரியாக 557 மில்லியன் டன்கள் குறைவில்லாமல் பால் உற்பத்தியாகிறது.
 
சிந்தித்துப்பாருங்கள்
அல்லாஹ்வின் கருணையினால் பால் என்ற இனிமையான பானத்தை நாம் குடிக்கிறோம் ஆனால் இந்த பாலை குடித்துவிட்டு கருணையாளன் அல்லாஹ்வை இணைவைத்து ஒரு சாராரும், அல்லாஹ்வைத் தவிர்த்து பிற வஸ்துக்களை ஒரு சாராரும் வணங்கி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் அல்லாஹ் கோபப்பட்டு பசுமாடுகள் உட்பட பால் கொடுக்கும் கால்நடைகளின் வயிறுகளில் பால் சுரக்காமல் இருக்க கட்டளையிட்டுவிட்டால் நிலைமை என்னவாகும் என்பதை ஒருகனம் சிந்தித்தப்பாருங்கள்! ஆனால் ரஹ்மத்துல் ஆலமீன் மக்கள் மீது கருணையுள்ளம் கொண்டவனாக இருக்கிறான் அதனால்தான் மனிதனை விட்டுப்பிடிக்கிறான். அவன் பிடியிலிருந்து தப்பிக்க எவருக்கேனும் வலிமை உள்ளதா?
 சிந்திப்பீர்! செல்படுவீர்!
 மறுமை வெற்றிக்காக இணைவைப்பை தவிர்த்திடுங்கள்
அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடும் மூமின்களாக இறை விசுவாசிகளாக மாறிவிடுங்கள்!
 அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!
நன்றி:அல்குரானும் அறிவியலும் Blogspot

சுய தொழில்கள்-21 பேரீச்சை வளர்ப்பு!


லாபம் கொழிக்கும் பேரீச்சை வளர்ப்பு!



பாலைவனத்தில் விளையக்கூடிய பயிரான பேரீச்சையை நமது மண்ணிலும் விளைவிக்கலாம்.  உரிய முறையில் பேரிச்சையை  சாகுபடி செய்து மார்க்கெட்டிங் செய்தால் லாபத்தில் அசத்தலாம் என்கிறார் திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையத்தை சேர்ந்த கே.ஜி.டேட்ஸ் உரிமையாளர் முருகவேல். அவர் கூறியதாவது: ஆரம்பத்தில் ரெடிமேடு ஆடை தயாரிப்பு தொழில் செய்தேன். அதில் பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது. வேறு சில தொழில்களிலும் ஈடுபட்டு அதிலும் நஷ்டம்  ஏற்பட்டு பணம் எல்லாம் இழந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடியை சேர்ந்த அன்பழகன் என்ற விவசாயி புதிய ரக திசு பேரீச்சையை வளர்த்து லாபம்  சம்பாதிப்பது பற்றி தெரிய வந்தது.  அங்கு சென்று விவரங்களை கேட்டேன்.

நிச்சயம் இதில் நல்ல லாபம்  சம்பாதிக்கலாம் என நம்பிக்கை துளிர்த்தது. கையில் காசில்லாத நிலையில்,  இடத்தை விற்று பேரீச்சை சாகுபடியில் ஈடுபட்டேன். இது புது வகையான திசு வளர்ப்பு பேரீச்சை. இந்தியாவில் இந்த கன்று உற்பத்தி கிடையாது. இங்கிலாந்தில் மட்டும் ஆய்வுக்கூடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த திசு கன்றுகள் வளைகுடா நாடுகளில் பராமரிக்கப்பட்டு, பின் இந்தியா கொண்டு வரப்படுகிறது. குஜராத் வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்து  கன்றுகளை பெற்றேன்.

முருகம்பாளையத்தில் 2.5 ஏக்கரில் 200 திசு வளர்ப்பு பேரீச்சை கன்றுகளை, 2009ம் ஆண்டு பிப்ரவரியில் நடவு செய்தேன். பாலைவனத்தில் விளையும் சாதாரண பேரீச்சைக்கு தண்ணீர் தேவையில்லை. ஆனால் திசு பேரீச்சைக்கு தண்ணீர் தேவை. சொட்டு நீர் பாசன முறையில் நீர் பாய்ச்ச வேண்டும். மூன்று ஆண்டுகளில் காய்க்க தொடங்கி விடும். முறையான பராமரிப்பு காரணமாக எங்கள் தோட்டத்தில் 28 மாதங்களிலேயே காய்க்க துவங்கியது. பராமரிப்பு மட்டும் சரியாக இருந்தால் ஒரு ஏக்கரில், மூன்றாம் ஆண்டில்  இருந்து நல்ல வருவாய் கிடைக்கும்.

ரூ.8 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருஷம்தோறும் வருமானம் பார்க்க முடியும். ஆரம்ப கட்ட முதலீட்டை முதல் அறுவடையிலேயே பெற்றுவிடலாம். பிறகு, பராமரிப்பு மட்டும் செய்தால் போதும். வேறு எந்த விவசாயத்திலும் இதுபோன்று லாபம் பார்க்க முடியாது. பேரீச்சையை பொருத்தவரை, டேனின் என்ற வேதிப்பொருள் அதிகம் இருப்பதால் அதை அப்படியே உட்கொள்ள முடிவதில்லை. எனவே பதப்படுத்தப்பட்ட பழங்களே சந்தைக்கு வருகின்றன. இதற்கு முற்றிலும் மாறாக, திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்படும் பர்ரி வகை பேரீச்சைகளை அப்படியே சாப்பிடலாம். 

இவை இரும்பு சத்து மிக்கவை. சிறிய விவசாயிகள் இதை பயிரிட்டு அதிக லாபம் பார்க்கலாம். விவசாயம் தெரியாத இளைஞர்கள்கூட முறைப்படி கற்றுக்கொண்டால், இது சிறந்த தொழில். கோவை மண்டலத்தில் முதலாவதாகவும், தென்னிந்தியாவில் இரண்டாவதாகவும் எங்களது திசு வளர்ப்பு பேரீச்சை பண்ணை உள்ளது. திருப்பூர் கலெக்டர் எங்கள் பண்ணைக்கு வந்து பார்வையிட்டு பாராட்டினார்.

முதலீடு

ஒரு பேரீச்சை கன்றின் விலை ரூ.3,500. ஒரு ஏக்கரில் 70 கன்றுகளுக்கான செலவு ரூ.2 லட்சத்து 45 ஆயிரம். சொட்டு நீர் பாசன குழாய்களுக்கான செலவு ரூ.30 ஆயிரம். ஆரம்ப கட்ட முதலீடு இவைதான். ஆண்டுக்கொருமுறை இயற்கை உரத்துக்கு ஆகும் செலவு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம். தினசரி தண்ணீர் விட்டு, வண்டுகளை விரட்டவும், கனிகளை பறித்து பேக்கிங் செய்யவும் அதிகபட்சம் 2 பேர் போதும். கைக்கு எட்டும் தூரத்தில் பழங்கள் இருப்பதால், பறிக்க நிறைய பேர் தேவையில்லை. இவர்களுக்கு கூலி வருடத்துக்கு ரூ.1 லட்சம் வரை செலவாகிறது.

லாபம்!

பயிர் செய்த மூன்றாவது வருடத்தில் இருந்து காய்க்க துவங்கும். ஜூலை முதல் ஆகஸ்ட் வரை சீசன். ஒரு மரத்துக்கு 5 முதல் 7 குலைகள் வரை தள்ளும். ஒரு குலையில் 10 கிலோ வரை பழங்கள் கிடைக்கும். சராசரியாக ஒரு மரத்துக்கு 60 கிலோ கிடைத்தாலும், ஏக்கருக்கு 4200 கிலோ கிடைக்கும். கிலோ 300 ரூபாய்க்கு விற்றால், ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் கிடைக்கும். உரம், பராமரிப்பு, கூலியாட்கள் செலவு, பேக்கிங் செலவு போக வருடத்துக்கு சுமார் 10 லட்ச ரூபாய் லாபம் பார்க்கலாம். தென்னை மரத்தை விட அதிகமாக 75 வருடங்களுக்கு மேல் விளைச்சல் இருக்கும். ஆண்டுகள் ஆக ஆக பழங்களின் எடையும் அதிகரிக்கும். ஆர்டரின்பேரில் குஜராத்தில் இருந்து நாற்றுகளை வாங்கி கொடுத்து கமிஷன் பெற்றும் வருமானம் ஈட்டலாம்.

சந்தை வாய்ப்பு!

உலக பேரீச்சை உற்பத்தியில் 36 சதவீதம் இந்திய சந்தையில்தான் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் உள்நாட்டு உற்பத்தி இன்னும் ஒரு சதவீத அளவைக்கூட எட்டவில்லை. இதனால் பேரீச்சைக்கு சந்தை வாய்ப்பு இங்கு பிரகாசமாக இருக்கிறது. பழங்களை உள்ளூர் வியாபாரிகளும், நகரங்களில் உள்ள மொத்த வியாபாரிகளும் வாங்கி செல்கின்றனர். ஒருமுறை இதன் சுவை அறிந்தவர்கள் தேடி வந்து வாங்குவார்கள். கால், அரை, ஒரு கிலோ பாக்கெட்களாக விற்கலாம். குறிப்பாக வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் இதை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இதனால் ஏற்றுமதி வாய்ப்பும் அதிகம்.

பயிரிடும் முறை!

ஒரு ஏக்கரில் சுமார் 70 கன்றுகளை நடலாம். ஒரு கன்றுக்கும் மற்றொன்றுக்கும் குறைந்தது 8 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். சுமார் 30 டிகிரி செல்சியஸ் வெப் பம் போதுமானது. சொட்டுநீர் பாசன முறையில் ஆரம்பத்தில் தினசரி ஒரு மரத்துக்கு 50 லிட்டர் தண்ணீர் விடவேண்டும். படிப்படியாக இதை அதிகரித்து, நன்கு வளர்ந்த மரத்துக்கு தினசரி 300 லிட்டர் தண்ணீர் விடவேண்டும். மரத்தின் அடியில் தண்ணீர் தேங்காமல், வடிகால் அமைக்க வேண்டும்.

மருந்து கூடாது!

வண்டுகளால் மரத்துக்கு பாதிப்பு ஏற்படலாம். இதை தடுக்க எவ்வித மருந்தும் தெளிக்க கூடாது. மரத்தில் இருந்து பழங்களை பறித்து அப்படியே சாப்பிடலாம் என்பதால் மருந்து தெளிக்க கூடாது. தோட்டத்துக்கு 2 ஆட்களை நியமித்து, கண்காணிக்க வேண்டும். ஆரம்பத்தில் ஓரிரு வண்டுகள்தான் வரும். இதை அப்போதே கண்டுபிடித்து கொன்று விடுவது முக்கியம். இல்லையென்றால் வண்டுகள் தொல்லை அதிகரித்து விடும். இயற்கை உரமே இட வேண்டும். பேரீச்சை பழுத்ததும் வவ்வால், பறவைகளால் சேதம் ஏற்படாமல் இருக்க குலையை சுற்றி பாலிதீன் கவர்களால் மூட வேண்டும்.

பர்ரியின் சிறப்புகள்!

பிஞ்சு முதல் பழம் வரை 6 நிலைகளாக பர்ரி பேரீச்சை பிரிக்கப்படுகிறது. 19 முதல் 23 வார மஞ்சள் நிற பழம் 3வது நிலை. இது கலால் எனப்படுகிறது. இதை மரத்தில் இருந்து பறித்தவுடன் அப்படியே சாப்பிடலாம். பர்ரி என்றால், அரபு மொழியில் பெரியது என்று அர்த்தம். பெரிய காய்களுடன் கூடிய பேரீச்சை என்பதால், இப்படி அழைக்கப்படுகிறது. இதன் தாயகம் ஈராக். ஜோர்டான் நாட்டில் இந்த பர்ரி ரக பேரீச்சையை ‘கோல்டன் டேட்ஸ்’ என்று அழைக்கிறார்கள். அறுவடை செய்யப்பட்ட பழங்களை 3 மாதம் வரை இருப்பு வைக்கலாம். குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும்.

பேரிட்சை வளர்ப்பு விபரங்கள்

இந்த இணைப்பில் உள்ள கட்டுரை பேரிட்சை வளர்ப்பு  குறித்த  சந்தேகங்களை நிவர்த்தி செய்யும்,. 
    டேட்ஸ்-பேரிச்சை,  
விற்பனை வாய்ப்பு அதிகமுள்ள பர்ரி ரக பேரிச்சை, அவிநாசி அருகே 3 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரக பேரிச்சை மரங்களை தோட்டக்கலைத் துறை மூலம் மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் நடவு செய்ய திருப்பூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இப் பேரிச்சை பழங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
வளைகுடா நாடுகளிலும், இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகளவில் பேரிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. அப் பகுதிகளில் உலர்ந்த பேரிச்சை பழங்களே உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக “பர்ரி’ என்ற புதிய பேரிச்சை ரகங்கள் திருப்பூர் மாவட்டத்தில் நடவு செய்யப்பட்டுள்ளன.
அவிநாசி தாலுகா வஞ்சிபாளையத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டுள்ள இப் பேரிச்சை மரங்கள் மூலம், ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வரை வருமானம் பெற முடியும் என்கிறார் அதன் உரிமையாளர் முருகவேல்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு திசு வளர்ப்பு முறையில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த ரக பேரிச்சை மரங்களை அதிகளவில் நோய் தாக்குவதில்லை. சரியான இடைவெளியுடன் ஒரு ஏக்கரில் சுமார் 70 மரங்கள் நடவு செய்ய முடியும். நடவு செய்த 3 ஆண்டுகளில் அறுவடைக்குத் தயாராகும் இப் பேரிச்சை மரங்கள் மூலம் முதலாண்டில் 25 முதல் 30 கிலோ வரையிலும், அடுத்து வரும் ஆண்டுகளில் 30 முதல் 200 கிலோ வரையிலும் விளைச்சல் கிடைக்கும்.
புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் என மனித உடலுக்குத் தேவையான சத்துகள் நிறைந்துள்ள இப் பேரிச்சைப் பழ மரங்களுக்கு தென்னையை விட அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. இருப்பினும், நுகர்வோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் இந்த ரக பேரிச்சைப் பழங்களால் அதிக லாபம் பெற முடியும் என்றார்.
திருப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், ஆட்சியர் சி.சமயமூர்த்தியிடம் இப் பேரிச்சை பழங்களின் சிறப்புகள் குறித்து அவர் விளக்கினார். மேலும், தோட்டக்கலைத் துறை மூலம் இந்த ரக பேரிச்சை மரங்களை மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் நடவு செய்யவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முருகவேல் வலியுறுத்தினர்.
வஞ்சிபாளையத்தில் பர்ரி ரக பேரிச்சை மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ள பகுதியை தோட்டக்கலைத் துறை சார்பில் ஆய்வு செய்து, மாவட்டத்தின் பிறபகுதி விவசாய நிலங்களிலும் இப் பேரிச்சைகளை நடவு செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார் ஆட்சியர்.

பட்டையைக் கிளப்பும் ‘பர்ரி’ பேரீச்சை…
ஏக்கருக்கு ரூ.10 லட்சம்…ஐந்து ஆண்டுகளில் வகையான வருமானம் ..!
பாசன வசதியிருந்தால்தான்…பழுதில்லாத பலன் !
‘தமிழ்நாட்டுச் சூழ்நிலையில் பேரீட்சைப் பயிர் வளருமா..?’ என்ற சந்தேகம் பல ஆண்டுகளாக விவசாயிகளிடம் நீடித்து வருகிறது. இது தொடர்பாக, நவம்பர் 25, 2007 தேதியிட்ட பசுமை விகடன் இதழில், பேரீட்சை சாகுபடியில் பெருத்த லாபமா..? என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட பல தரப்பினரின் கருத்துக்களையும் அதில் பதிவு செய்திருந்தோம்.
குலைகுலையாய் காய்த்து குலுங்கும் பேரீட்சை
நிறைவாக… ‘இரண்டு, மூன்று ஆண்டுகளாகத்தான் தமிழகத்தில் பரவலாக பேரீட்சை சாகுபடிச் செய்யத் தொடங்கியுள்ளனர். ஐந்து ஆண்டுகள் போனால்தான் நிலைமையை கணிக்க முடியும். அதுவரை காத்திருப்பதுதான் உத்தமம்’ என்று குறிப்பிட்டிருந்தோம்.
இந்நிலையில், நம்மைத் தொடர்பு கொண்ட திண்டுக்கல், முள்ளிப்பாடி பகுதியைச் சேர்ந்த அன்பழகன், ”என்னுடைய தோட்டத்தில் நடவு செய்த மூன்று ஆண்டுகளில், அனைத்து மரங்களிலும் பேரீட்சை காய்த்து குலுங்குகிறது” என்ற தகவலைச் சொன்னார்.
‘எப்படி இருக்கிறது அவருடைய பேரீட்சை விவசாயம்?’ என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அவருடைய தோட்டத்துக்குச் சென்றோம். காய்கள் குலை, குலையாக காய்த்து தொங்கிக் கொண்டிருந்தன, அங்கிருந்த பேரீட்சை மரங்களில். அதையெல்லாம் சுட்டிக்காட்டியபடியே ஆரம்பித்த அன்பழகன், “அமெரிக்காவுல கம்ப்யூட்டர் இன்ஜினீயரா வேலை பார்த்துக்கிட்டிருந்த ஆள் நான். ‘சொந்த ஊருக்கு போய் விவசாயம் செய்யணும்’கிற எண்ணம் உள்ளுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்துச்சு. வேலை விஷயமா அடிக்கடி வளைகுடா நாடுகளுக்குப் போவேன். அவங்க செய்துகிட்டிருக்கற பேரீட்சை விவசாயத்தைப் பார்க்கும்போது, இதை நம்ம ஊருல செய்தா எப்படி இருக்கும்?னு யோசிப்பேன். கடைசியில அதை நிறைவேத்தறதுக்காகவே, வேலையை விட்டுட்டு இந்தியாவுக்கு வந்துட்டேன்” என்று முன்னுரை கொடுத்த அன்பழகன், பேரீட்சைத் தோட்டத்தை உருவாக்கிய கதைக்குள் புகுந்தார்.
நாத்து 3,500!
”நம்ம ஊரு சூழ்நிலைக்கு ஏற்ற ரகம் என்ன..? அதோட நாற்று எங்க கிடைக்கும்னு பல இடங்கள்ல அலைஞ்சி, திரிஞ்சதுல… குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பேரீட்சை விஞ்ஞானி, நவீன்பாய் சௌதாகர் அறிமுகம் கிடைச்சுது. அவரோட ஆலோசனைப்படி ‘பர்ரி’ ரக பேரீட்சையை, குஜராத்துல இருந்து வாங்கிட்டு வந்து, 12 ஏக்கர்ல சாகுபடி செஞ்சேன். இது திசு வளர்ப்பு நாத்துங்கிறதால, ஒரு நாத்தோட விலை 3,500 ரூபாய். மொத்தம் 700 நாத்துகளை, வாங்கிட்டு வந்து நடவு செஞ்சி மூணு வருஷம் ஆச்சு. 12 ஏக்கர்ல 616 மரம் இருக்கு. அதுல 500 மரம் பாளை போட்டு, இந்த வருஷம் காய்ச்சிருக்கு.
இந்த மூணு வருஷத்துல இதுக்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கேன். ஒவ்வொரு விஷயத்தைத் தெரிஞ்சிக்கவும் லட்சக்கணக்குல பணத்தை செலவு செஞ்சிருக்கேன். ஒரு விவசாயியா நான் கஷ்டப்பட்டு, காசு செலவு செஞ்சு தெரிஞ்சுகிட்ட எல்லா விஷயங்களையும், மத்த விவசாயிகளுக்கு இலவசமாவே சொல்லித் தர தயாரா இருக்கேன்” என்று ஆர்வத்தோடு சொன்னார்.
பதப்படுத்த வேண்டாம்..! அப்படியே சாப்பிடலாம்…!
அருகில் நின்றிருந்த தோட்ட மேலாளர் சரவணன், “வழக்கமா, மத்த பழங்கள் மாதிரி பேரீட்சம் பழத்தை மரத்திலிருந்து பறிச்சு அப்படியே சாப்பிட முடியாது. அதை உலர வைச்சு, பதப்படுத்தின பிறகுதான் சாப்பிட முடியும். ஆனா, இந்த பர்ரி வகை பேரீட்சையை மரத்திலிருந்து பறிச்சு அப்படியே சாப்பிடலாம். மத்த விளைபொருள்கள் மாதிரியே அறுவடை செஞ்சி அப்படியே விக்கலாம்” என்று சொல்லிவிட்டு, சாகுபடி முறைகளை ஒவ்வொன்றாக அடுக்கினார்… பள்ளிக்கூட பாடமாக!
நிச்சயம் தேவை நீர்…!
தமிழகத்தில் மலைப் பகுதிகளைத் தவிர, மற்ற அனைத்து பகுதிகளுக்கும் ஏற்றது பர்ரி ரக பேரீட்சை. மணல் கலந்த, ஆறடி ஆழத்துக்கு மண்கண்டம் உள்ள அனைத்து மண்ணிலும் இது நன்கு வளரும். வடிகால் வசதி மிக அவசியம். ‘பேரீட்சை, பாலைவனத்தில் வளரும் மரம்தானே… இதற்கு அதிக தண்ணீர் தேவைப்படாது’ என்ற ஒரு கருத்து இருக்கிறது. ஆனால், அது தவறு. பாலைவனத்திலும் தண்ணீர் தேங்கி இருக்கும் சோலைவனங்கள் இருக்கின்றன. அதாவது, குட்டை போல ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கும். இவற்றின் கரைகளில்தான் பேரீட்சை விளையும். உப்பு தண்ணீரில்கூட நன்றாக வளரும். ஆனால், தண்ணீர் வசதி இல்லாத, மானாவாரி நிலங்களில் பேரீட்சையைக் கட்டாயம் பயிரிடக்கூடாது.
ஏக்கருக்கு 50 மரம்…!
இந்தப் பயிருக்கு அதிக நிழல் இருக்கக்கூடாது. இதன் மட்டைகள் கீழ் நோக்கி தொங்காமல் நேராக இருக்கும். அதனால் 27 அடி அல்லது 30 அடி இடைவெளியில்தான் நாற்றுகளை நடவேண்டும். இப்படி நடும்போது ஏக்கருக்கு அதிகபட்சம் 50 நாற்றுகள் தேவைப்படும். பர்ரி ரகத்தில் திசு வளர்ப்பு நாற்றுகளும் இருக்கின்றன. விதை மூலமாக உற்பத்தி செய்யப்படும் நாற்றுகளும் இருக்கின்றன. விதை மூலமாக உற்பத்தி செய்யப்படும் மரத்தில் கிடைக்கும் பழம், கொஞ்சம் துவர்ப்புத் தன்மையோடு இருப்பதால், அத்தகையப் பழங்களுக்கு குறைவான விலைதான் கிடைக்கும். அதோடு ஆண் மரம், பெண் மரங்களை நாற்றுப் பருவத்தில் கண்டுபிடிப்பதும் கஷ்டம். ஆனால், திசு வளர்ப்பு நாற்றுகளில் ஆண், பெண் நாற்று என்பது ஆரம்பத்திலேயே தெளிவாக தெரிந்துவிடும். அத்தோடு, இப்படி உருவாக்கப்படும் மரங்களில் கிடைக்கும் பழங்கள் சுவையாக இருப்பதால், அதிக விலையும் கிடைக்கும். பொதுவாக 100 பெண் மரங்களுக்கு, ஐந்து ஆண் மரங்கள் இருப்பது போல் பார்த்து கொள்ள வேண்டும்.
நாளன்றுக்கு 300 லிட்டர் நீர்!
நாற்றைத் தேர்வு செய்யும்போது, குறைந்தபட்சம் 5 இலைகள் உள்ள செழிப்பான நாற்றுகளாக பார்த்து தேர்வு செய்ய வேண்டும். தென்னை போல மூன்றடிக்கு மூன்றடி குழி எடுத்து, குழிக்கு 10 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரம் போட்டு, நாற்றை நட்டு மேல்மண்ணைக் கொண்டு குழியை மூடவேண்டும். நடவு செய்த பின் இரண்டு மாதம் வரை நாற்றில் நேரடியாக வெயில் படாதவாறு, நிழல் வலை அல்லது பனை மட்டையை வைத்து நாற்றைச் சுற்றிக் கட்டிவிட வேண்டும்.
முதல் ஒரு வருடம் வரை தினமும் ஒரு செடிக்கு 25 லிட்டர் தண்ணீரும், 2-ம் வருடம் 50 லிட்டர் தண்ணீரும், 3-ம் வருடம் 100 லிட்டர் தண்ணீரும் கொடுக்க வேண்டும். 10 வயதுக்கு பிறகு, ஒரு மரத்துக்கு தினமும் 300 லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும். பேரீட்சையை பொறுத்தவரை சொட்டுநீர்ப் பாசனம்தான் சிறந்தது.
40 டிகிரியிலும் நன்றாக வளரும்…!
தண்ணீர் கொடுக்காவிட்டாலும் இந்த மரம் உயிரோடு இருக்கும். ஆனால், மகசூல் கிடைக்காது. இந்த ரக மரங்கள், அதிகபட்சமாக 54 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் மைனஸ் 7 டிகிரி செல்சியஸ் வரைக்கும் தாங்கும் திறன் உடையவை. குறிப்பாக, 34 முதல் 40 டிகிரி வரை வெப்பநிலை உள்ள இடங்களில் அருமையாக வளரும். நடவு செய்த இரண்டரை ஆண்டுகளில் அல்லது மூன்றாவது ஆண்டு தொடக்கத்தில் பூ எடுக்கும். பேரீட்சையில் ஆண் மரம் ஜனவரி மாதம் தொடங்கி, பிப்ரவரி வரை பூக்கும். பெண் மரம் பிப்ரவரி இறுதியிலிருந்து ஏப்ரல் வரை பூக்கும். இந்தக் கால நிலை மாறுபாட்டால் இயற்கையாக மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதில் சிக்கல்கள் ஏற்படும். இது மகசூலை பாதிக்கும். அதனால், ஆண்பூக்கள் பூக்கும்போது, பாளை வெடித்தவுடன் பூவை வெட்டி, அதிலுள்ள மஞ்சள் நிற மகரந்தத் தூளை உதிர்த்து ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். இது நமது அறை வெப்பநிலையில் நான்கு மாதம் வரை கெடாமல் இருக்கும். குளிர்சாதனப் பெட்டியில் உள்ள ‘ஃப்ரீசரில்’ வைத்தால் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும்.
பெண் மரங்களில் பாளை வெடித்ததிலிருந்து இரண்டு முதல் நான்கு நாட்கள் வரை மகரந்தச் சேர்க்கைக்கு உகந்த நேரம். சேமித்து வைத்திருக்கும் ஆண் மகரந்தத் தூளை இந்த நேரத்தில் பெண் மரங்களின் பாளையில் சேர்க்க வேண்டும். அதாவது, ஒரு மடங்கு ஆண் மகரந்தத் தூள், 20 மடங்கு மைதா மாவு இரண்டையும் கலந்து கொள்ள வேண்டும். இதை நீளமான குழாய் பொருத்தப்பட்ட டப்பாவில் கொட்டி, பெண் பூவில் தெளித்துவிட வேண்டும் (பார்க்க, படம்). இப்படி மகரந்தச் சேர்க்கை செய்தால்தான் அனைத்து பூவும் பிஞ்சாக மாறும். இதன் குலை தென்னை மாதிரி கீழ் நோக்கி வராமல், மேல் நோக்கி போகும். அதனால், பூ எடுத்த ஒரு மாதத்தில் குலையை மட்டையோடு சேர்த்து வளைத்துக் கட்டி விடவேண்டும்.
மரத்துக்கு 100 கிலோ!
குலையின் நுனிப்பகுதியில் உள்ள கிளைகள் மிகவும் மெல்லியதாக இருக்கும். காய் பிடித்தவுடன் பாரம் தாங்காமல் அவை ஒடிந்து விழுந்து விடும். அதனால் முன்னெச்சரிக்கையாக நுனியில் 6 செ.மீ. தூரத்துக்கு வெட்டி விடவேண்டும். அதேபோல குலையில் உள்ள கிளைகள் அதிக நெருக்கத்துடன் இல்லாமல், பரவலாக இருப்பது போல் கலைத்து விட்டால்… காய்கள் பெருத்து, அதிக மகசூல் கிடைக்கும். போதுமான இடைவெளி இருந்தால் ஒவ்வொரு பழமும் 10 முதல் 15 கிராம் வரை எடை இருக்கும். சிறிய மரங்களில் ஒரு மரத்துக்கு அதிகபட்சமாக 10 பாளைகள் கிடைக்கும். காய்கள் ஓரளவு திரட்சியாக வந்தவுடன், பிளாஸ்டிக் பையைக் கொண்டு குலையை மூடி பாதுகாக்க வேண்டும். குலையிலுள்ள அனைத்து காய்களும் மஞ்சள் நிறத்துக்கு மாறி, ஓரிரு காய்கள் கனிந்த நிலைதான் அறுவடை நேரத்துக்கான அறிகுறி. பெரிய மரங்களில் அதிகபட்சம் 30 பாளைகள் வரை வெடிக்கும்.
பூ எடுத்ததிலிருந்து 5 முதல் 6 மாதத்தில் குலையை அறுவடை செய்யலாம். மூன்றாவது வருடத்தில் ஒரு மரத்தில் 25 முதல் 30 கிலோ மகசூல் கிடைக்கும். நான்காவது வருடத்தில் 50 முதல் 60 கிலோவும், ஐந்தாவது வருடத்தில் 80 முதல் 100 கிலோ வரையும் கிடைக்கும். அதற்கடுத்தடுத்த ஆண்டுகளில் மகசூல் அதிகரித்துக் கொண்டே போகும். ஒரு மரத்தின் வயது குறைந்தபட்சம் 65. அதன் 45-ம் வயதில் மகசூல் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்.
முதல் வருடம் ஒவ்வொரு செடிக்கும் 50 கிராம் நைட்ரஜன், 50 கிராம் பாஸ்பரஸ், 50 கிராம் பொட்டாசியம் சத்துக்களை ஆறு மாதத்துக்கு ஒருமுறைக் கொடுக்க வேண்டும். தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இந்த அளவில் 100 கிராமை அதிகரித்துக் கொண்டே போக வேண்டும். 10-ம் வருடம் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு கிலோ அளவில் மேலே உள்ள சத்துக்களைக் கொடுக்க வேண்டும். அதேபோல முதல் வருடத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செடிக்கு 5 கிலோ தொழுவுரமும், 3-ம் வருடம் ஆறு மாதத்துக்கு ஒரு முறை செடிக்கு 10 கிலோ தொழுவுரமும் கொடுக்க வேண்டும். அறுவடை முடிந்த பிறகும் ஒவ்வொரு மரத்துக்கும் 5 கிலோ தொழுவுரம் இட வேண்டும்.
மரத்திலிருந்து பச்சை மட்டைகளை வெட்டக்கூடாது. கடைசி மட்டை நுனிப்பகுதியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா காய்ந்து கொண்டே வரும். அப்படி காய்ந்த மட்டைகளை, மரத்தை ஒட்டி வெட்டாமல், ஒரு அடி தள்ளி வெட்டி எடுக்க வேண்டும். மரத்தில் கூர்மையான ஆணியைப் போன்ற முட்கள் அதிகமா இருக்கும். இதனால் பழங்கள் அதிகம் திருடு போகாது. பர்ரி ரகத்தில் அதன் ஆயுளில் 18-க்கும் மேற்பட்ட பக்கக் கன்றுகள் கிடைக்கும். இந்தக் கன்றுகள் முளைத்ததிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தனியே பிரித்து நடவு செய்துகொள்ளலாம்.
ஒரு ஏக்கரில் ஆண்டுக்கு 10 லட்சம்!
தென்னைக்கு வரும் அனைத்து நோய்களும் பேரீட்சையையும் தாக்கும். காண்டாமிருக வண்டு மற்றும் சிகப்பு கூன்வண்டு தாக்குதல் அதிகம் இருக்கும். காண்டாமிருக வண்டு தாக்கிய மரத்தில் குருத்து வெளியே தள்ளி இருக்கும். அந்த இடத்தில் கம்பியால் குத்தி வண்டை வெளியே எடுத்துப் போடவேண்டும். பின் உள்ளே மருந்தை வைத்து ஓட்டையை சிமெண்ட் வைத்து மூடவேண்டும்.
சிகப்பு கூன்வண்டு தாக்கிய மரத்தின் அருகில் போனாலே ஒருவித வாசனை வரும். அதை வைத்தே வண்டு உள்ளே இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம். மரத்தின் அடியில் மட்டை வெளியே தள்ளி இருக்கும். அந்த மட்டையைக் கையால் இழுத்தாலே கையோடு வந்து விடும். உள்ளே போன வண்டு நூற்றுக்கணக்கான முட்டைகளை வைத்து விடும். இதை வளர விட்டால் மரத்தைக் காப்பாற்ற முடியாது. அதனால் பாதிக்கப்பட்ட இடத்தில் மட்டையை எடுத்துவிட்டு, வண்டு, புழு எல்லாவற்றையும் முடிந்த அளவு வெளியே எடுத்துவிட்டு ஊசி மூலம் மருந்தை உள்ளே செலுத்தலாம். 15 நாட்களுக்கு ஒரு முறை வேரில் மருந்தை செலுத்துவதன் மூலமும் இதைக் கட்டுப்படுத்தலாம். இதையெல்லாம்விட மரத்தைச் சுற்றி வேப்பம் பிண்ணாக்கைப் போட்டு வைத்தும், ஆங்காங்கே கவர்ச்சிப் பொறிகளைத் தொங்க விட்டும் சிவப்பு கூன்வண்டுகளைக் கட்டுப்படுத்தலாம்.
சாகுபடி பாடத்தை சரவணன் நடத்தி முடிக்க, மறுபடியும் நம்மிடம் பேசிய அன்பழகன், “பராமரிப்பு மட்டும் சரியா இருந்தா… ஒரு ஏக்கர்ல, அஞ்சாம் வருஷத்துல இருந்து நல்ல வருவாய் கிடைக்கும். எட்டு முதல் பத்து லட்ச ரூபாய் வரைக்கும் வருஷம்தோறும் வருமானம் பார்க்கலாம்.
பர்ரி பேரீட்சையைப் பொறுத்தவரை ஆரம்ப கட்ட செலவு ஏக்கருக்கு 3 முதல் 5 லட்சம் வரை ஆகும். ஆனா, மூணாவது வருஷத்துல முதல் அறுவடையிலயே இந்தப் பணத்தை எடுத்துடலாம். பிறகு, பராமரிப்பு மட்டும் செஞ்சிட்டு இருந்தாலே போதும். வேறெந்த வெள்ளாமையிலயும் இந்த வருமானத்தைப் பாக்க முடியாது. இந்த ரக நாத்து குஜராத்ல இருக்கற தனியார் ஆய்வுக் கூடங்கள்ல கிடைக்குது” என்றவர்,
”பேரீட்சையைப் பொறுத்தவரைக்கும் பெருசா ரசாயன உரமெல்லாம் தேவையில்ல. இருந்தாலும், முதல் தடவையா இதைப் பயிர் செஞ்சதால 75% இயற்கை, 25% செயற்கைனு கலந்துதான் செஞ்சிருக்கேன். இன்னும் ரெண்டு வருஷத்துல இதை முழுமையான இயற்கை விவசாயப் பண்ணையா மாத்திடுவேன்” என்று இயற்கை ஆராதனையோடு முடித்தார்.

கொட்டிக் கிடக்கும் விற்பனை வாய்ப்பு….!
உலக பேரீட்சை உற்பத்தியில் 36% இந்தியச் சந்தையில்தான் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் உள்நாட்டு உற்பத்தி இன்னும் ஒரு சதவிகித அளவைக்கூட எட்டவில்லை. இதனால் பேரீட்சைக்கான சந்தை இங்கே பிரகாசமாக இருக்கிறது. பிஞ்சு முதல் சாப்பிடும் பழம் வரை ஆறு நிலைகளாக பேரீட்சை பிரிக்கப்படுகிறது. 5 வாரம் உள்ள பிஞ்சு… ஹபாபோக்; 6 முதல் 18 வார வயதுடைய
பச்சைக்காய்… கிம்ரி;
19 முதல் 23 வார மஞ்சள் நிற பழம்… கலால்; 24 முதல் 27 வாரத்தில் கனிந்த பழுப்பு நிற பழம்… ரூட்டாப்; 28-ம் வாரத்தில்… தாமர்; அதற்கு மேல் பதப்படுத்தப்பட்டு சந்தையில் கிடைப்பது சுரா… இப்படி ஆறு நிலைகளாகப் பிரித்து அழைக்கப்படுகிறது.
இதில் நாம் தற்போது பெருமளவில் பயன்படுத்துவது ரூட்டாப் நிலையில் உள்ள பழங்களைத்தான். ஆனால், மூன்றாவது நிலையான கலால் நிலையிலே மரத்திலிருந்து பறித்தவுடன் சாப்பிடலாம் என்பதுதான் பர்ரி ரகத்திலுள்ள தனிச் சிறப்பு. பர்ரி என்றால், அரபு மொழியில் பெரியது என்று அர்த்தமாம். பெரிய காய்களுடன் கூடிய பேரீட்சை என்பதால், இப்படி அழைக்கப்படுகிறது. இதன் தாயகம் ஈராக். ஜோர்டான் நாட்டில் இந்த பர்ரி ரகப் பேரீட்சையை ‘கோல்டன் டேட்ஸ்’ என்று அழைக்கிறார்கள். இதை அறுவடை செய்து 10 நாள் வரை இருப்பு வைக்கலாம். குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும்.

பேரீட்சை நாற்று எங்கே கிடைக்கும்?
குஜராத் மாநிலத்தில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் பேரீட்சை ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இந்தியச் சூழலுக்கு ஏற்ற வகையில் புதிய ரக பேரீட்சை ரகங்கள் உருவாக்கப்படுகின்றன. விவசாயிகளுக்குத் தேவையான பேரீட்சைக் கன்றுகள் இங்கு கிடைக்கும்.
தொடர்புக்கு:
Date palm Research Station of Gujarat Agricultural University, Port road, Mundra-370422, Kachchh(Dist), Gujarat, Phone:02838-22185

இணையத்திலிருந்து

ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌.


ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌.

ரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு 

 நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனதுஅனுவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.

இன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. 

இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.
 அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்து விடும். இரண்டு நாட்கள் முன், சக பதிவர் ” தோழி” என்பவரின் பதிவு படித்தேன். 

அதை படித்ததிலிருந்து, நான் எனக்கு ஏற்பட்ட சிறுநீரகக்கல் பிரச்சினையை எப்படி `10 செலவில் தீர்வு கண்டேன் என்பதை நாலு பேருக்கு தெரிவிக்கலாம் என்பதெ இந்த பதிவுன் நோக்கம்.

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார். 

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

வீடு வந்து கூகுளம்மாவிடம் பிரச்சினையை சொல்லி தீர்வு கேட்டேன், அதில் பலபேர் பல ஆலோசனைகளை இலவசமாகவும், சில பேர் பணம் அனுப்ப சொல்லியும் கேட்டிருந்தார்கள். அதில் ஒரு இணையதலத்தில், ஒருவர், ஒரு பச்சைக் காய்கறி+வழக்கமாக நாம் உபயோகப்படுத்தும் ஒரு திரவம், சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக்கல் உடைந்து, நாம் சிருநீர் போகும்போது வெளிவந்துவிடும் என்றும், அதற்கு கட்டணமாக $30-ஐ ஆன்லைனில் கட்டச் சொல்லியிருந்தார். 

வலியின் கொடுமையில், $30-ஐ கொடுக்கலாம் என்றால், ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே மறுபடியும் கூகுளம்மாவிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, மேலே சொன்ன $30-கட்டி சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார் (ரொம்ப நல்லவர் போலும்).

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிக்கிரதுதான்).

இனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதலத்தில் சொன்னது போல்):

( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம். 

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும், 

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும், 

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

நீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள், மருத்துவச் செலவு ` இருவதாயிரத்திலிருந்து ` முப்பதாயிரம் வரையிலும் சேமிக்கலாம், மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.

சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக , நான் இணையதலத்தில் அலைந்தபோது படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

டிஸ்கி 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருதுவரிடம் சென்றுவிடுவதே நல்லது. 

டிஸ்கி 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.

டிஸ்கி 3 : இந்த ஆலோசனை இலவசம் தான், யாரும் இதற்காக எனக்கு பணம்!!! அனுப்ப வேண்டாமென்று இருகரம் கூப்பிக் கூவிக்கொள்கிறேன், அதற்குபதில் உங்க கருத்துக்களையும், ஒட்டும் இட்டுச்செல்லவும்.