Monday, 2 April 2012

தொடர்-19 உலக அழிவும், மாயா இன மக்களும்'




'2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' தொடர்-19


மாயன்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேபந்து விளையாட்டு ன்றைவிளையாடி இருக்கின்றனர்அதனுடன் அவர்கள் உலக அழிவையும் தொடர்புபடுத்தியிருக்கின்றனர் என்று கடந்த பதிவில் சொல்லியிருந்தேன்இந்தப் பந்துவிளையாட்டு ாயன்களின் மிக முக்கியமான ஒரு டங்காக அப்போதுஇருந்திருக்கின்றது என்பதை அறிந்த ஆராய்ச்சியாளர்கள்அதை ஆராயப்போன சமயத்தில் ஒரு வித்தியாசமான அனுபவம் ஒன்று அவர்களுக்குக்கிடைத்ததுஅதாவதுமாயன்களின் பிரதேசங்களில் மட்டும்தான் இந்தவிளையாட்டுிளையாடப்பட்டது என்று நினைத்து ஆராயச்சென்றவர்களுக்குஅதையும் தாண்டி மத்திய அமெரிக்காதென்னமெரிக்காஎனப் பல நாடுகளில் இந்தப் பந்து விளையாட்டு விளையாடப்பட்டுவந்திருக்கிறது தெரிய வந்ததுமெக்சிக்கோகுவாத்தமாலாபெலிசே,ஹொண்டுராஸ்எல் சல்வடோர் மட்டுமில்லாமல்நிகுரகுவாஅரிஸோனாஆகிய நாடுகளிலும் இது விளையாடப்பட்டு வந்திருக்கிறதுதிகம் ஏன்கரீபியன் தீவுகளிலும் (Caribbean islands), கியூபாவிலும் கூட இந்தப் பந்துவிளையாட்டுவிளையாடப் பட்டிருக்கிறதுஅப்படி விளையாடியதற்கானமைதானங்கள் அந்த நாடுகளில் பரவலாகக் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன.
 அதைத் தொடர்ந்துமேலும் ஆராய்ந்தபோது ஆச்சரியங்களும்மர்மங்களும்மாயன்கள் பிரதேசங்களில் மட்டுமல்லாமல்தென்னமெரிக்கப் பிரதேசங்கள்அனைத்திலும் பரவியிருந்தது தெரிய வந்ததுஆராய்ச்சியாளர்களுக்கு இந்தஇடங்கள்ஒரு பொக்கிசப் புதையலாகவே அதற்கு அப்புறம் அமைந்து விட்டதுஎன்று சொல்லும் அளவிற்கு இருந்தன அந்த ாடுகள்அந்த நாடுகளில் உள்ளமர்மங்கள் எவை என்று நான் இங்கே ஒவ்வொன்றாக உங்களுக்குச் சொல்லப்ோனால்இத்தொடர் 2012 டிசம்பர் மாதத்திலும் முடிந்து விடாமல் ோய்விடும்ஆபத்து உண்டுஎனவே எனக்குப் பிடித்த ஒன்றை மட்டும் ங்களுக்காகத்தருகிறேன்இதற்கும்இப்பொழுது நான் எழுதும் தொடருக்கும் சம்பந்தம்இல்லாவிடினும் கூடதகவல் அடிப்படையில் இதை உங்களுக்குத் தரவிரும்புகிறேன்.
 மாயன்கள்பல இனங்களாக வாழ்ந்திருந்தாலும்அவர்களின் 'இன்காஇனம்தெற்கே பரவலாகப் பிரிந்தே வாழ்ந்திருக்கிறதுநாம் தென்னமெரிக்கா என்னும்பெரிய நிலத்தைஏனோ சரியாகக் கவனத்தில் எடுப்பதில்லைஅமெரிக்காஎன்றாலேஎமக்குக் கண்ணுக்குத் தெரிவது 'யுஎஸ்ஏ' (U.S.A) என்றழைக்கப்படும்ஐக்கிய அமெரிக்க நாடுகளும்கனடாவும் மட்டுமேஇந்த இரு நாடுகளுமேஅமெரிக்கா என்னும் பதத்தில் எமக்குள் அடங்கி விடுகின்றனஆனால் இவதாண்டி அதிக நாடுகளைக் கொண்டது தென்னமெரிக்கா.



இப்போ நான் சொல்லப் போவதுசாதாரண வரலாற்றுச் சம்பவம் அல்ல.பெரும் மர்மத்தை தன்னுள்ளடக்கிய ம்பவம் அதுமாயன்களின்பிரதேசத்துக்குச் சற்றுக் கீழே வாழ்ந்த, 'நாஸ்காஎன்னும் இனத்தவர் பற்றிமுன்னரே உங்களுக்குச் சொல்லியிருந்தேன்அவர்களும்தென்னமெரிக்காவைச் சேர்ந்த பெரு (Peru) ாட்டில் வாழ்ந்தவர்கள்தான்அந்தப்பெரு நாட்டுக்குக் கீழே இருக்கும் நாடுதான் 'சிலி' (Chile). 'சிலிநாடுநீண்டதொருநேர் கோடு போலமேலிருந்து கீழ்நோக்கிப் பரவியிருக்கும் ஒரு நாடுஇந்தநாட்டுக்குச் சொந்தமாகமேற்குப் பகுதிக் கடலில் அமைந்திருக்கும் ஒரு சிறியதீவின் பெயர் 'ஈஸ்டர் தீவு' (Easter Island) என்பதாகும்ஈஸ்டர் தீவுசிலிநாட்டுக்குச் சொந்தமான தீவுதான் என்றாலும்கடல் நடுவே சிலியிலிருந்துவெகு தூரத்தில் மிகத் தனியாக இருக்கிறதுமுக்கோண வடிவத்தில் இருக்கும்அந்தத் தீவில்உலகத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்கும் அதிசயம் ஒன்றுஇருக்கிறதுஅது என்ன என்று ப்போது பார்க்கலாம்.

மனிதர்களே வாழமுடியாத அளவு தூரத்தில்கடலின் நடுவே இருக்கும் இந்தத்தீவைக் கண்டவர்கள் பிரமித்துப் போனார்கள்அத்தீவைச் சுற்றிவரிசையாகமிகப் பெரிய னிதர்கள் கடலைப் பார்த்தபடி நின்றதுதான் பிரமிப்பிற்குக்காரணம்ஒவ்வொரு மனிதரும் இராட்சதர்கள் போலஇரண்டு மீற்றர்கள்உயரத்தில் இருந்துபத்து மீற்றர்கள் உயரம் வரை இருந்தார்கள். என்ன பயந்துவிட்டீர்களா….? உண்மையில் அவர்கள் மனிதர்கள் அல்ல. யாரோ செய்தமனிதச் சிலைகள்அந்தத் தீவைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த இந்தச் சிலைகள்ஒவ்வொன்றும் பல தொன்கள் எடையுள்ளவையாக இருந்தனசில சிலைகள் 80தொன்கள் வரை எடையுள்ளதாகவும் இருக்கின்றனயார் செய்தார்கள் இந்தச்சிலைகளைஏன் செய்தார்கள்யாருக்கும் தெரியவில்லை.


இந்தச் சிலைகள் 'மோவாய்' (Moai) என்று பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்றன.கி.பி.300 ஆண்டுகளில் இவை செய்யப் பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியில்கணித்திருந்தாலும்சரியான கணக்குத் தெரியவில்லைஇந்தச் சிலைகளைஏன் அந்தத் தீவில் வாழ்ந்த மக்கள் உருவாக்கினார்கள்எதற்காகத் தீவைச்சுற்றி அவற்றை அடுக்கி வைத்திருக்கின்றார்கள்என்ற கேள்விகளுக்கு இன்றுவரை எவரிடமும் பதில் இல்லைஇதற்கும் வேற்றுக்கிரகவாசிகளானஏலியன்களுக்கும் சம்பந்தம் உண்டா என்றும் தெரியவில்லை.

 இந்தச் சிலைகளை எப்படிச் செதுக்கினார்கள்செதுக்கிய இந்தச் சிலைகளைஎப்படித் தீவின் மையப் குதியில் இருந்துபதினாறு கி.தூரத்தில் இருக்கும்கரைக்கு நகர்த்தி வந்தார்கள்அப்படி நகர்த்தி வந்ததை எப்படிநிமிர்த்தினார்கள்என்பவை எல்லாமே ஆச்சரியங்களாகவும்,கேள்விகளாகவும் எம்முன்னே நிற்கின்றனஅந்தத் தீவிலுள்ள மரங்களைவெட்டியே இவற்றை ் கடற்கரை வரை நகர்த்தியிருக்க வேண்டும் என்றுஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்ஆனாலும் எந்தக் கருவிகளும் இல்லாமல்இப்படி நகர்த்தி நிமிர்த்தியதும்அவற்றைச் செய்ததும் மனிதனால் முடியாதரு அசாத்தியச் செயல் என்பதையும் அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.
 அந்தத் தீவில்வெட்டப்பட்டுப் பாதியில் விடப்பட்ட சிலை ஒன்றைக்கண்டால் அசந்து விடுவீர்கள். 200 தொன் நிறைக்கு அதிகமாகவும், மிகநீளமாகவும் இருக்கிறது அந்தச் சிலைஒரு வேளை அந்தச் சிலைசெய்யப்பட்டிருந்தால்அதை எப்படி உயரத் தூக்கியிருப்பார்கள்? எப்படிநகர்த்தியிருப்பார்கள்எதற்கும் விடையில்லைஎல்லாமே……எல்லாமே….!ஆச்சரியங்களும் மர்மங்களுமாய் அமைந்து இருக்கின்றன.


'மோவாய்' (Moai) என்று சொல்லப்படும் இந்தச் சிலைகள்தீவைச் சுற்றிநிறுத்தப் பட்டிருப்பதோடு மட்டுமில்லாமல்தீவு முழுக்க நூற்றுக்கணக்கில்பாகங்களாய் சிதறியது போலப் போடப் பட்டிருக்கின்றனதலைகள்,உடல்கள் என எங்கும் மோவாய்கள்தான்அதிகம் ஏன்கடலுக்குள்ளும்மோவாய்கள் கிடக்கின்றன.
 




இந்தச் சிலைகள் யாருக்குஎன்ன செய்திகளைச் சொல்கின்றனஇதைமனிதர்கள் செய்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும்இவ்வளவு சிரமப்பட்டுஇவற்றைச் செய்ய வேண்டி காரணம் என்னஅவசியம் என்னொத்தத்தில்சிந்தித்துப் பார்த்தால், 2012 இல் உலகம் அழிகிறதோ இல்லையோஎமக்குப்பைத்தியம் மட்டும் பிடிக்காமல் இருந்தால் போதும் ன்னும் அளவிற்கு இந்தத்தீவின் ர்மங்கள் இருக்கின்றன.

 இது போலவே இன்னுமொரு ஆச்சரியமா இடம் ஒன்றும்தென்னமெரிக்காவில் உண்டுஅந்த இடத்தை ஏற்கனவே தமிழ்நாட்டில்எல்லோரும் அறிந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். 'மச்சு பிச்சு' (Machu Picchu) என்றழைக்கப்படும் மலை கரம் அதுமிக ஆச்சரியமான நகரம்இந்தமச்சு பிச்சுவை நமக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா? 'சூப்பர் ஸ்டார்'ரஜனிகாந்தும்ஐஸ்வர்யாராயும் எந்திரன் திரைப் படத்தில் வரும் ஒருபாடலைஇந்த இடத்தில்தான் பாடுவார்கள்ந்த மச்சு பிச்சுவும்தென்னமெரிக்காவின் ஆச்சரியங்களில் ஒன்று. ஆனால்இவைபற்றியெல்லாம் விளக்கமாக சொல்லிக் கொண்டு போவதற்கு எமக்குக் காலம்போதாதுநம்மை மாயாவும்டிசம்பர் மாதமும் வருந்தி அழைப்பதால்இவற்றை இங்கேயே விட்டுவிட்டு மாயாவின் பந்து விளையாட்டுக்குப்போகலாம்.
 பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே மாயன்கள் பந்துவிளையாடியிருக்கிறார்கள்அதுவும் நாம் இப்போ விளையாடும்கால்பந்தாட்டத்தில் பாவனைக்கு வைத்திருக்கும் பந்து போலப் பெரிய பந்து.இந்தப் ந்தை வைத்து விளையாடும் விளையாட்டுத்தான்உலக அழிவைஅடையாளப் படுத்துகிறது என்று சொல்லியிருந்தேன். "பந்துவிளையாட்டுக்கும் உலகம் ழிவதற்கும் என்ன சம்பந்தம்?" என்றும்உங்களுக்கு கேள்வி இப்பொழுது எழலாம்ஆனால் மாயன்களைப்பொருத்தவரை இவை இரண்டுக்குமே நிறையச் சம்பந்தம் உண்டுமாயன்கள்வை இரண்டையுமே ஒன்றாகக் கலந்து தங்கள் உலக அழிவு பற்றிச்சொல்லியிருக்கிறார்கள்.
 இன்றைய உலகில் பல விளையாட்டுகளில் பந்து பயன்படுத்தப்படுகிறதுமிகப்பிரபலமாக இருக்கும் ிளையாட்டுகள் அனைத்துமேபந்துிளையாட்டுகளாகத்தான் இருக்கின்றனகுறிப்பாக பாஸ்கெட்பால்பேஸ்பால்,உதைபந்தாட்டம்கிரிக்கெட்டென்னிஸ் என அனைத்துமே பந்துகளால்விளையாடப்படும் விளையாட்டுகள்தான்ஆனால்உலகிலேயே மனி இனவரலாற்றிலேயேவிளையாடப்பட் முதல் பந்து விளையாட்டு என்றால்அதுமாயன்கள் விளையாடிய பந்து விளையாட்டுத்தான்.
 கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தப் பந்து விளையாட்டைாயன்கள்விளையாடியதாகப் பதிவுகள் உண்டுஅதுவும்அவர்கள் விளையாடிய பந்துஇரப்பரினால் (Rubber) செய்யப்பட்டிருந்தது என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.மாயன்கள் அந்தக் காலங்களிலேயே ரப்பர் மரங்களில் பாலெடுத்துதப்படுத்தி,அதன் மூலமாக உருண்டையாக பந்தைத் தயார் செய்திருக்கின்றனர்.மாயன்கள் வாழ்ந்த இடங்களில் நூற்றுக்கணக்கான ரப்பர் ந்துகளைஅகழ்வாராச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்இப்போதும் அவைவிளையாடக் கூடிய தரத்தில் இருக்கின்றனமாயன்களின் பந்து விளையாட்டு,இப்போது விளையாடப்படும் நவீன விளையாட்டுகள் போலச் சட்டிட்டங்களும்விதிகளும் உள்ள ஒர விளையாட்டாகவே விளையாடப்பட்டிருக்கிறதுஅதுமட்டுமில்லாமல்அந்தப் பந்து விளையாட்டு,விளையாடப்படும் மைதானத்தின் அமைப்பும் எம்மை ஆச்சரியப் படுத்துகிறது.மிக நேர்த்தியாகவும்அளவு கணக்குகளோடும் அமைக்கப்பட்டிருந்தனிளையாட்டு மைதானங்கள்ஆங்கிலக் காப்பிட்டல் 'I' என்னும் எழுத்தைப்போல அமைந்த மைதானம்அண்ணளவாக 30 மீற்றர் நீளமும்இரண்டு பக்கம்நீளமான சுவர்களையும் ொண்டது.


மாயன்கள் விளையாடிய பந்து விளையாட்டுதற்போது விளையாடப்படும்உதை பந்தாட்டத்தையும் (Soccer), பாஸ்கெட் பாலையும் (Basket Ball) கலந்ததுபோல ஒரு விளையாட்டு ஆகும் அல்லது இப்படியும் சொல்லலாம்நாம்விளையாடும் உதைபந்தாட்டமும்பாஸ்கெட் பாலும் மாயன்களிடமிருந்துநாம் பெற்றதாக ருக்கலாம்.
  
 பந்து விளையாடும் மைதானத்தின் நடுவேஇரண்டு பக்கச் சுவர்களிலும்இரண்டு வளையங்கள் வடிவிலான அமைப்பு உண்டுவிளையாட்டில்பாவிக்கப்படுவது, 25 செ.மீ .அளவுள்ள இரப்பர் பந்துஇந்தப் பந்தைத் தமக்கெனஇருக்கும் பக்கத்தில் அமைந்திருக்கும் வளையத்தினூடாக அடிப்பதே அந்தப்பந்து விளையாட்டின் வெற்றியைத் தீர்மானிக்கும் விதியாகும்.


தலா ஒவ்வொரு பக்கமும் ஐந்து விளையாட்டு வீரர்கள் விளையாட்டில்பங்கேற்பார்கள்அவர்கள் பந்தை வளையத்தினூடாக அடிக்கும்போதோ அல்லது விளையாட்டின்போதோகால்களையோ கைகளையோதலையையோ பந்தில் டும்படியாகப் பயன்படுத்த முடியாது. "அப்படி என்றால்எப்படிப் பந்தை அடிப்பது?" என்றுதானே கேட்கிறீர்கள்.இடுப்பினாலும்முழங்கால்களினாலும் மட்டுமே பந்தை அடிக்க முடியும்இதுஎவ்வளவு சிரமம் என்பது உங்களுக்குப் புரிகிறதாஆனாலும் மாயன்கள்அப்படித்தான் அந்தப் பந்து விளையாட்டை விளையாடி இருக்கின்றனர்.தற்காலப் பந்து விளையாட்டின்போது பாவிக்கும் தலைக் கவசத்தைப் போல,விதவிதமான தலைக் கவசங்களையும் இந்த விளையாட்டின் போது,மாயன்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

 மாயன்கள் விளையாடிய பந்து விளையாட்டை, 'பிட்ஷி' (Pitzi) என்றுஅழைக்கின்றனர்இந்த விளையாட்டின் போதுஇரு பக்கமும் விளையாடும்ஐந்து விளையாட்டு வீரர்களுக்கு ஒருவர் அணியின் தலைவராக இருக்கின்றார்.இப்போதுள்ள 'கப்டன்' (Captain) போலஎந்த அணி தோற்கின்றதோஅந்தஅணியின் தலைவர் பூசைபுனஸ்காரங்களின் பின்னர் அலங்கரிக்கப்பட்டுமகிழ்ச்சியுடனும், ஆரவாரத்துடனும் தலை வெட்டப்படுகிறார்.
 "என்னடா இதுவிளையாட்டிலும் ொலையாவிளையாட்டு என்பதேபொழுது போக்குவதற்கானதுதானேஇப்படி ிளையாடுவதும் ஒருவிளையாட்டா?" ன்று நினைப்பீர்கள்உண்மைதான். நீங்கள் நினைப்பதுசரியானதுதான்ஆனால் மாயன்களுக்கு இந்தப் பந்து விளையாட்டுஒருபொழுதுபோக்கான விளையாட்டு என்பதோடு நின்றுவிடவில்லை.அதையும் தாண்டிப் புனிதமானது இதுஅந்தப் பந்து விளையாட்டுமொத்தமுமே ஒரு தத்துவத்தை வெளிப்படுத்துகிறது என்பதே வர்கள்நிலைப்பாடு. "அட…! போங்கப்பா….! விளையாட்டில் தத்துவமா?தத்துவத்துடன் கொலையா….?" என்று நீங்கள் சலித்துக் கொள்லலாம்.ஆனால் அந்தத் தத்துவமேஎங்கள் உலகம் அழியும் கோட்பாட்டைஉள்ளடக்கியது என்று சொன்னால் வாயடைத்துத்தான் போவீர்கள்இதைநான் உங்களுக்குப் புரிய ைப்பதற்குமாயன்களின் வேதப் புத்தகமான, 'பொபோல் வூ' (Popol Vuh) சொல்லும் கதையைச் சொல்ல வேண்டும். 'பொபோல் வூஎன்னும் நூல் சொல்லும் கதையில் பூமிசூரியன்சூரியக்குடும்பம்பால்வெளி மண்டலம் என்று அனைத்தைப் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறதுஅத்தோடு பால்வெளி மண்டலத்தில் இருக்கும் கருமையானஇடம் (Dark Rift) பற்றியும் சொல்லியிருக்கிறதுஅந்தக் கருமை இடத்துக்குஅருகே சூரியன் சென்றால்சூரியனும்உலகமும் அழிந்து விடும் என்றும்சொல்லியிருக்கிறதுதாங்கள் விளையாடிய பந்து விளையாட்டுடன்இவற்றை எல்லாம் சம்பந்தப்படுத்தி இருந்தார்கள் மாயன்கள்.
அந்தப் பொபோல் வூ அப்படி என்ன தை சொன்னதுஅது பற்றிப்பார்ப்போமா......? இப்போது பொபோல் வூ சொல்லும் கதைக்கு வரலாம்.......!
 மாயன்களைப் பொறுத்தவரை பால்வெளி மண்டலத்தின் (Milky Way) வாசலாகஅமைந்த ஒரு இடம் உண்டுஅது ஒரு மிகப் பெரிய கருமையான இடம்குழிபோன்றது அதுஅந்தக் கருங் குழியில்தான் மரணத்தின் கடவுள் (God of Death)இருக்கின்றார்மரணத்தின் கடவுள் வாழும் இடத்தின் பெயர் 'ஷிபால்பா' (Xibalba).ஷிபால்பாவைப் 'பாதாள உலகம்' (Under World) என்றும், 'பயங்கரத்தின்இருப்பிடம்' (Place of Fear) என்றும் மாயன்கள் சொல்கின்றனர்.



அது போலமாயன்களுக்கு மூத்தவரா, 'ஆதி தந்தை' (First Father) என்னும்ஒருவரும் இருந்தார்அவருக்கு ஒரு இரட்டைச் சகோதரரும் இருந்தார்.இவர்கள் இருவரும் மிகத் திறமையான பந்து விளையாட்டுக்காரர்கள்.ஒருதரம் இவர்கள் இருவரும் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்அந்தச்சத்தம் ஷிபால்பாவில் வாழும் மரணத்தின் கடவுளுக்குக் கேட்டதுஅந்தச்சத்தம் அவரது அமைதியைக் குலைத்ததுஎனவே ஆதி தந்தையையும்,அவரது ரட்டைச் சகோதரனையும் போட்டிக்குப் பந்து விளையாடஷிபால்பாவுக்கு அழைத்தார் மரணத்தின் கடவுள்ந்து விளையாட்டுக்குஅழைக்கப்பட்டதால்அந்த அழைப்பை அவர்களால் மறுக்க முடியவில்லை.அதனால்அவர்கள் பந்து விளையாடுவதற்குப் பால்வெளி மண்டலத்தின்வாசலில் அமைந்திருக்கும் கரிய இடத்துக்குச் சென்றனர்ஆனால் அங்குஅவர்கள்பந்து விளையாடப் படாமலே ஏமாற்றப்பட்டுதலை வெட்டப்பட்டுக்கொல்லப்பட்டனர்.


இந்த ஆதி தந்தைக்குஇரண்டு மகன்கள் இருந்தனர்அவர்களும்இரட்டையர்கள்தான்இவர்கள் இருவரும் தந்தையையும்தந்தையின்சகோதரரையும் போல பந்து விளையாட்டில் திறமைசாலிகளாக இருந்தனர்.இவர்களின் இருவரின் பெயரும் 'ஹூன் அப்பு' (Hun Ahpu), 'இக்ஸ்பலங்கா' (Xbalanque) ஆகும். "இந்தப் பெயர்களில் என்ன இருக்கிறது?" என்றுதானேநினைக்கிறீர்கள்அதில்தான் எல்லா விசயங்களுமே அடங்கியிருக்கின்றன.அதற்குப் பின்னர் வரலாம்.........! ஆதி தந்தையின் மகன்கள் இருவரும் பந்துவிளையாட்டில் சிறந்து விளங்கியதால்அவர்கள் இருவரும் மரணத்தின்கடவுளால்பந்து விளையாட்டு விளையாட அழைக்கப்பட்டனர்ஆனால்அவர்களின் தந்தை இப்படியே அழைக்கப்பட்டுப் பின்னர் சதியினால் கொலைசெய்யப்பட்டதை அறிந்திருந்தார்கள் இரட்டையர்கள்அதனால் ிலதந்திரங்களைக் கையாண்டுபந்து விளையாடியே தீர வேண்டிய நிர்ப்பந்தத்தைமரணத்தின் கடவுளுக்கு ஏற்படுத்தினர்.
 அதன்படி விளையாடப்பட்ட பந்து ிளையாட்டில் இரட்டையர்கள்,மரணத்தின் கடவுளை வென்றனர்அதனால் வர்கள் கொல்லப்படாமல்தடுக்கப்பட்டனர்ஆனாலும்பல வருடங்களின் பின்னர் மீண்டும் அவர்கள் பந்துவிளையாட்டுக்கு அழைக்கப்படுவார்கள். 'பொபொல் வூசொல்லும் கதைஇதுதான்இவற்றைக் கதையாகப் பார்க்காமல் ஆராய்ந்து பார்த்ததில்இதில்அடங்கியிருக்கும் சம்பவங்கள் எம்மை ஆச்சரியப் படுத்துகின்றன. இனி நான்சொல்லப் போவதைச் சற்று நிதானமாகக் கவனியுங்கள்.
 கதையில் வரும் பெயர்களின் அர்த்தம் என்ன தெரியுமா……? 'ஹூன்' (Hun)என்றால் மாயன் மொழியில் 'ுதல்என்று அர்த்தம். 'அப்பு' (Ahpu) என்றால்'சூரியன்என்று அர்த்தம்அதாவது ஹூன் அப்பு என்றால்முதல் சூரியன் என்றுஅர்த்தம்அதன் இரட்டைச் சகோதரர்தான் 'இக்ஸ்பலங்காஎனப்படும் சந்திரன்.கதையின்படிஒவ்வொரு 2600வருசங்களும் இவர்கள் பந்து விளையாட பால்வெளி மண்டலத்தின் வாசலில் இருக்கும் ஒரு மிகப் பெரி கருமையானஇடத்துக்கு அழைக்கப்படுவார்கள்விளையாட்டில் சூரியன் வென்றால்,சூரியனும்பூமியும் பிழைத்துக் கொள்ளும்சூரியன் தோற்றால் இரண்டுக்குமேஅழிவுதான்நமது நவீன விஞ்ஞானத்தின் மூலம் இந்தக் கறுப்பு இடத்தை நாம்அவதானித்து இருக்கிறோம்ஒவ்வொரு 26000 வருடங்களுக்கும் நமத பூமியும்,சூரியனும்பால்வெளி மண்டலமும் ஒரே நேர் கோட்டில் ரும்போதுஇந்தகருமையான இடத்திற்கு மிக அருகில் சூரியன் வந்து விடுகிறது என்பதும்கணிக்கப்பட்டிருக்கிறது.  
ஒவ்வொரு 26000 வருசத்துக்கு ஒருதரம் மரணத்தின் கடவுள் பந்து விளையாடஅழைப்பார்அதில் சில சமயங்களில் இரட்டைச் சகோதரர்கள் தப்பலாம்.ஆனால் அடுத்த பந்து விளையாட்டுக்குப் பின்னர் அழைக்கப்படுவார்கள்.அதற்கு 26,000 வருசங்கள் தேவைஒவ்வொன்றிலும் தப் வேண்டும். 2012டிசம்பர் 21ம் திகதி தப்பவே முடியாது என்பதுதான் மாயன்களின் கணிப்பு.
 இப்போதுமாயன்கள் எப்படித் தாங்கள் விளையாடும் பந்து விளையாட்டில்இந்தக் கதையைக் கொண்டு வந்து பொருத்துகின்றனர் என்று பாருங்கள்பந்துவிளையாடும் மைதானம்தான் 'பால் வெளி மண்டலம்' (Milky Way). அதன்நடுவே உள்ள வளையங்கள்தான் 'கரும்பள்ளம்' (Dark Rift). விளையாடப்படும்பந்துதான் எங்கள் சூரியன்அந்தப் பந்தை யார் எந்த வளையத்தினுள்போடுகின்றனரோஅதைப் பொறுத்துபோட்டவருக்கு வெற்றி என்றுகருதப்பட்டு ிளையாட்டு முடிவடைகிறதுஅதாவது பால்வெளிமண்டலத்தில் இருக்கும் கரும்பள்ளத்தை நோக்கி நகரும் ூரியன்அதனால்அழிந்துவிடுகிறதுஅத்துடன் எல்லாமே முடிவடைந்து விடுகிறதுஅதன்அடையாளமாக விளையாட்டின் அணித் தலைவரின் தலை வெட்டப்படுகிறது.இந்தக் கதையையும்நான் இந்தத் தொடரில் முன்னர் விவரித்த 26000 வருடக்கணக்குகளினால் எப்படி பூமி அழியலாம் என்று சொன்னவற்றையும்ஒப்பிட்டுப் ாருங்கள்.
 இவ்வளவு திட்டவட்டமாக மாயன்கள் உலகம் அழியும் என்கிறார்களே,உண்மையில் உலகம் அழியுமாஇல்லை இது வெறும் காரணமே இல்லாததேவையற்ற பயம்தானாஒரு வேளை உலகம் அழிவதென்றால் எப்படிஅழியும்இது போன்ற கேள்விகள் மட்டுமே இப்போது எம்மிடம்எஞ்சியிருப்பவைஅத்துடன் கூடக் கொஞ்ச பயமும்.
 உலகம் அழியுமாஅழிந்தால்எப்படி அழியலாம்அல்லது தப்பலாம்?இவற்றை எல்லாம் அடுத்த தொடரில் பார்ப்போமா...?

எச்சரிக்கை: வெஸ்டர்ன் டாய்லட் பயங்கரம் !!!!!!!


அஸ்ஸலாமு அலைக்கும்,

நன்றி: சகோதரர் முஹம்மத் ஆஷிக்

எழுத வேண்டிய ஒன்று,   எழுதிதற்காக எமது நன்றி.................

சில வாரங்களாக என் நிறுவனத்தில் ஒரு மின் உற்பத்தி ஆலையை மட்டும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் overhauling-கிற்காக விட்டுள்ளனர். சுமார், 40-பேர் இந்தியர்கள் வந்துள்ளனர். கம்பெனி டாய்லட்டில் அவர்கள் புரியும் அழிச்சாட்டியத்தின் தாக்கம்தான் இந்த பதிவு..! இந்த பதிவை முதலில் எழுதலாமா... வேண்டாமா... என்றுதான் தோன்றியது. காரணம், இதில் உள்ள விஷயம் சிலருக்கு சற்று அருவருப்பாக இருக்கலாம். சிலருக்கு மிக அவசியமான அறிவுரையாக இருக்கலாம். அத்தவறை செய்யும் சிலருக்கு எச்சரிக்கையாகவும் இருக்கலாம். இன்னும் சிலருக்கு இந்த விஷயம் தொடர்பாக நான் இங்கே பகிரும் படம் பார்க்க பயங்கரமாகவும் கொடூரமாகவும் இருக்கலாம். ஆனாலும், அவசியம் எழுதியாக வேண்டும் என்று இறுதியில் முடிவு எடுத்தேன். பதிவில் ஆங்காங்கே சிகப்பில் உள்ளவற்றை நினைவில் கொள்ளுங்கள் சகோ..!
 .
எனது சிறுவயதில் 'பாம்பே டாய்லட் சிங்க்' என்று தரையோடு பதிக்கப்பட்ட கழிவறை பீங்கான் பேசின் பிரபலமானது. ஆனால், அதில் வயதானவர்கள் குறிப்பாக முழங்கால் வலி உள்ளவர்கள் குத்தவச்சு உட்கார்ந்து எழுவது சிரமமாக இருக்கவே, தொடர்ந்து 'சிட்டிங் டாய்லட்' அல்லது மேற்கத்திய கழிப்பறை பீங்கான் பேசின் பிரபலம் ஆனது. ஏதோ வசதியாக வரவேற்பறை நாற்காலியில் அமர்வது போல அமர்ந்து கொள்ளலாம்..! முழங்கால் வலி பிரச்சினை இல்லை. நீண்ட நேரம் அமர்வதும் அதன் சிரமமும் இனி ஒரு பொருட்டல்ல என்றானது.
.
இப்படி ஒரு சொகுசு (!?) சிட்டிங் டாய்லட் வந்த பிறகுதான்... 'போனோமா-வந்தோமா' என்றில்லாமல்......, வாக்மேன், வாரப்பத்திரிக்கை, தினசரிகள், ஆஃபீஸ்ஃபைல், மியுசிக் கீபோர்ட், லேப்டாப் சகிதம் எல்லாம் டாய்லட்டுக்குள் நேரம் கடத்தவென்றே 'சுற்றுலா' செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்து விட்டது..! காரணம், எந்த தொந்தரவும் எவர் சப்தமும் இல்லாமல் தனியாக அமர்ந்து தன் சிந்தனைக்குதிரையை செவ்வனே செலுத்த முடிகிறதாம்..! கொடுமை..!
.
ஆனால், இந்த கூத்தெல்லாம் அரங்கேறும் இடம் வீட்டில் சுத்தமாக உள்ள அல்லது ஸ்டார் ஹோட்டல் ரூமில் உள்ள சுத்தமான சிட்டிங் டாய்லட்டில் மட்டும்தான். மற்றபடி அலுவலகம், கல்லூரி, இரயில், மற்றும் பொதுக்கழிப்பிடங்களில்  உள்ள சிட்டிங் டாய்லட் என்றால் அதில் உட்கார நமக்கு மனமே வராது எவருக்கும்..!
.
காரணம், அதை பெரும்பான்மையோர் முறையாக உபயோகிப்பது இல்லை. முக்கியமாக, பீங்கான் மீதுள்ள பிளாஸ்டிக் சிட்டிங் கவரை சுத்தமாக வைத்திருப்பது கிடையாது..! சிலர் சிறுநீர் கழிக்க மட்டும் டாய்லட்டை உபயோகிப்பவர்கள், சீட் கவரை மேலே தூக்கி  நீர் தொட்டியுடன் சாய்த்து நிறுத்தி வைத்து விட்டு, அதன்பின்னர் தன் இயற்கை தேவையை நிறைவேற்றும்  பொறுமை அல்லது பழக்கம் கிடையவே கிடையாது. நின்றுகொண்டே... அப்படியே போய்... அந்த சீட் கவரை நாஸ்தி பண்ணிவிடுவர்.

சரி.... இதை, 'அடக்கி வைத்த அவசரம்' என்று எடுத்துக்கொண்டால் கூட, "தன் தவறுதானே..? தான்தானே தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு வரவேண்டும்..? அடுத்தவர் வந்து இதில் எப்படி அமர்வார்..?" என்ற லஜ்ஜையோ, பொதுநலமோ, வீட்டில் உள்ள பொறுப்புணர்வோ ஏதுமே வெளியே மட்டும் சுத்தமாக வராது. அப்படியே விட்டுவிட்டு சென்று விடுவார்..! இதுபோல செல்பவர்கள் இனியாவது திருந்த வேண்டும்..!
.
குர்ஆன் 2:222 ....(நபியே) "திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்" எனக்கூறுவீராக..!

இதனால் என்னாவாகும்..? அடுத்து, 'மலம் கழிக்க வேண்டும்' என்று வருபவர், இந்த பிளாஸ்டிக் சீட்டிங்கின் மேல் இருக்கும் மஞ்சள் சிறுநீரை பார்த்தவுடன் சுத்தமாக அவருக்கு அதில் உட்கார வேண்டும் என்ற எண்ணம் வருமா..? கழுவி விட்டு உட்கார வேண்டும். ஆனால், 'எவனோ செய்த அசிங்கத்தை  எதற்கு தான் கழுவ வேண்டும்' என்ற எண்ணம் மேலோங்கும்.
.
.
இங்கே ஒரு ஐடியா:- இதுபோல பொது கழிப்பிடம் போகும்போது, பிளாஸ்டிக் சீட்டிங் கவர்  (இருந்தால், அதன்) மீது தண்ணீர் ஊற்றிவிட்டு, கையோடு டிஷ்யூ பேப்பர் அல்லது ஏதாவது பழைய தினசரி பேப்பர்கொண்டு சென்று அதை நீளவாக்கில் இரண்டாக கிழித்து, தொடை படும் இடங்களில் பிளாஸ்டிக் சீட்டிங் மீது பேப்பரை ' \ / ' வைத்து அமரலாம்..! இதை பலர் செய்வதில்லை. ஆனால், வயிற்றை கலக்கும் அவசரம். என்ன செய்ய..?
.
இன்னும் சில பொது டாய்லட்டுகளில் அந்த பிளாஸ்டிக் சீட்டிங்கே இருக்காது..!?! (இருந்திருந்தாலும்....) இப்போதுதான் அந்த பயங்கர செயலை செய்வர். அதாவது செருப்பு அல்லது ஷூ காலுடன் ஏறி அந்த பிளாஸ்டிக் சீட் மேலோ அல்லது அதை தள்ளிவிட்டு பீங்கான் மீதோ அமர்ந்து, அந்த சிட்டிங் டாய்லட்டை அந்தக்கால 'பாம்பே டாய்லட் சின்க்' போல பாவித்து உபயோகப்படுத்திவிட்டு சென்று விடுவார்..! இதுதான் முற்றிலும் தவறு மற்றும் ஆபத்து..!
.
 .
"சுத்தம் ஈமானில் பாதியாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ மாலிக் அல் அஷ்அரீ (ரலி)நூல் : சஹீ ஹ் முஸ்லிம் (328)

அந்த அவரை தொடர்ந்து அடுத்து உள்ளே செல்வோர், சீட்டிங்கின் மீது செருப்பு / ஷூ அச்சுடன் சேர்ந்த சகதி மண் என எல்லாம் இருப்பதை கண்டு, முகம் சுளித்து அவரும் அதேபோலவே...! இதுபோல இனி அந்த பிளாஸ்டிக் சீட்டிங் மீது அமர்வதை இனி வருவோர் அனைவருமே தவிர்த்து விடுவர்..!
.
இங்கேதான் ஆபத்து காத்து இருக்கிறது. பதிவின் நோக்கமே இதை சொல்வதுதான்..!
 .
இதுபோன்ற பீங்கான் தொட்டிகள் அடியில் குறுகலாகவும் மேற்புறம் அகன்றும் செய்யப்பட்டுள்ளது. காலை தரையில் வைத்து அமர்வதால் நம் உடல் எடை அதிக லோடை பீங்கானின் மீது தருவதில்லை. எடை கால்வரை பரவி  சென்றுவிடுகிறது. ஆனால், சீட்டிங் மேலே ஏறி அமரும்போது எடை பீங்கானின் மீது மட்டுமே கூடுகிறது. அதுமட்டுமின்றி இரண்டு கால்களும் இரண்டு பக்கம் நோக்கி வெளிப்பக்கமாக விசை கொடுத்து உந்தித்தள்ளுவதால், என்னதான் முதல் தரம் கூடிய பிராண்ட் ஆயினும் நாளடைவில் அந்த பீங்கான் பலம் குன்றி போயிருந்தாலோ அல்லது கரடுமுரடான சுத்தப்படுத்தும் கருவிகளால் எங்கேனும் இடிபட்டு சிறு விரிசல் விட்டு இருந்தாலோ, அதன் மீது உட்கார்ந்து இருப்பவர் எடை அல்லது அன்று அவரின் விதி... காரணமாக எந்நேரமும் அந்த பீங்கான் இருதுண்டாக... அல்லது பலதுண்டாக இப்படி உடையலாம்..!
.
 .
அப்படி உடையும்போது அதன் சில்லுகள் மீது எசகுபிசகாக கால்கள் பரப்பி விழும் நபருக்கு எந்த அளவுக்கு ஆபத்து ஏற்படும் என்று நம்மால் எண்ணிப்பார்க்கவே முடியாது. ஒரு காயம் கூட இன்றியும் தப்பலாம். அல்லது உயிரே போகும் மிகப்பெரிய ஆபத்தில் கொண்டு போயும் விடக்கூடும். அப்படி ஒருவருக்கு நடந்த விபத்தை அடுத்து ஒரு ஃபோட்டோவில் பாருங்கள்..! சிட்டிங் டாய்லட் பீங்கான் மீது ஒருவர் ஏறி நின்றமர்ந்து, வெயிட் தாங்காமல் அது உடைந்து... உடைந்த கூர்மையான பீங்கான் பாகங்கள் உடலை குத்தி கிழித்து...  :-O காணசகிக்கலை..!
.

இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன். பெருமளவில் இஸ்லாமை தழுவும் பிரிட்டன் மக்கள்.


இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன். 

பெருமளவில் இஸ்லாமை தழுவும் 

பிரிட்டன் மக்கள்.


இது, கடந்த சில மாதங்களுக்கு முன் (4th January 2011) பிரிட்டனின் புகழ் பெற்ற நாளிதழான "தி இண்டிபெண்டன்ட்" தனது கட்டுரை ஒன்றிற்கு வைத்த தலைப்பு.   

ரிச்சர்ட் டாகின்ஸ் தளம் தொடங்கி பல்வேறு தளங்களில் பரபரப்பை/விவாதத்தை உண்டாக்கியிருக்கின்றது இந்த கட்டுரை.
கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்கும் பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக குறிப்பிடும் அந்த கட்டுரை கீழ்க்காணும் தகவல்களை தெரிவிக்கின்றது.

----------------------
"பிரிட்டனில் எத்தனை மக்கள் இஸ்லாமை தழுவி இருக்கின்றார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட மிக விரிவான மதிப்பீடு முயற்சி, கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக கூறுகின்றது. 

இஸ்லாம் குறித்த எதிர்மறையான சித்தரிப்புகள் அதிகமிருந்தாலும், ஆயிரக்கணக்கான பிரிட்டன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமை தழுவுகின்றார்கள். 

பழைய மதிப்பீடுகள், இஸ்லாத்தை தழுவிய பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை சுமார் 14,000 திலிருந்து 25,000 வரை இருக்கலாமென சொல்லுகின்றன.  

ஆனால், Faith Matters அமைப்பின் புதிய ஆய்வு, இந்த எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் வரை இருக்கலாமென தெரிவிக்கின்றது. (அது மட்டுமல்லாமல்) ஒவ்வொரு வருடமும் சுமார் 5000 பிரிட்டன் மக்கள் இஸ்லாமை தழுவதாகவும் தெரிய வருகின்றது.  
ஸ்காட்டிஷ் 2001 மக்கள் தொகை கணக்குப்படி, 2001 ஆம் ஆண்டு வாக்கில், இஸ்லாத்தை தழுவிய பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை 60,699 என ஆய்வாளர்கள் மதிப்பிட்டிருக்கின்றனர். அடுத்த ஆண்டு வரை புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எதுவும் திட்டமிடப்படவில்லை. 

ஒவ்வொரு வருடமும் எத்தனை மக்கள் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக தேர்ந்தெடுக்கின்றனர் என்பதை அறிய விரும்பிய ஆய்வாளர்கள், லண்டனில் உள்ள பள்ளிவாசல்களில் கணக்கெடுப்பு நடத்தினர்.  

அப்படி நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் என்ன சொல்கின்றன என்றால், கடந்த பனிரெண்டு மாதங்களில் பிரிட்டனின் தலைநகரில் மட்டும் சுமார் 1,400 பேர் இஸ்லாத்தை தழுவியிருக்கின்றனர். இந்த தொகையை நாடு முழுவதும் கணக்கிட்டு பார்த்தால் சுமார் 5,200 பேர் ஒவ்வொரு வருடமும் தங்களை இஸ்லாமிற்குள் ஐக்கியப்படுத்தி கொள்கின்றனர். இதனை ஜெர்மனி மற்றும் பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வுகளோடு ஒப்பிட்டோமானால், அங்கே சுமார் 4000 மக்கள் ஒவ்வொரு வருடமும் இஸ்லாத்தை தழுவுகின்றனர். 

இஸ்லாமை தழுவியவர்களின் நம்பத்தகுந்த எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடுவது கடினம் என்பதை ஒப்புக்கொண்டுள்ள Faith Matters அமைப்பின் இயக்குனர் பியாஸ் முகல், "மக்கள் தொகை கணக்கெடுப்பு, உள்ளூர் வல்லுனர்களின் தகவல்கள், மசூதிகளில் நடத்தப்பட்ட ஓட்டெடுப்பு போன்றவற்றை அடிப்படையாக வைத்து திரட்டப்பட்ட சிறந்த அறிவார்ந்த யூகம் இந்த அறிக்கை"என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், " எப்படி இருப்பினும், கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை ஏற்றவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்திருப்பதை மிகச் சிலரே சந்தேகம் கொள்வார்கள்".

ஏன் அதிக அளவில் மக்கள் இஸ்லாமை தழுவுகின்றனர் என்று கேட்டதற்கு அவர்,"பொதுவாழ்வில் இஸ்லாமின் முக்கியத்துவத்திற்கும், அதிகரித்து வரும் தழுவல்களுக்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கின்றேன். இஸ்லாம் எதைப்பற்றியது என்பதை அறிய ஆர்வம் காட்டுகினறனர் மக்கள். அவர்கள் அப்படி செய்யும் போது பல்வேறு திசைகளில் சென்று விடுகின்றனர். பலரும் தங்களுடைய சகஜ வாழ்க்கைக்கு திரும்பி விடுகின்றனர். ஆனால் சிலரோ, எது குறித்து அவர்கள் ஆராய ஆரம்பித்தனரோ அதில் தாங்கள் கண்டுபிடித்தவற்றை விரும்ப ஆரம்பித்து அதையே தழுவி விடுகின்றனர்"

இது குறித்து கருத்து தெரிவிக்கும் Muslims4uk தளத்தின் நிறுவனர் இனாயத் பங்லவாலா, "இந்த முடிவுகள் என்ன தெரிவிக்கின்றன என்றால், 600 பிரிட்டன் மக்களில் ஒருவர் இஸ்லாத்தை தழுவுபவராக இருக்கின்றார். இஸ்லாம் ஒரு மிஷனரி மார்க்கம். நிறைய இஸ்லாமிய அமைப்புகள், குறிப்பாக பல்கலைகழக மாணவர் இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாம் குறித்த தவறான கருத்துக்களை களைய தீவிரமாக செயல்பட்டு வருகின்றன" என்று குறிப்பிடுகின்றார். 
இஸ்லாமை தழுவுவதென்பது எளிதான ஒன்று. டெக்னிகலாக, முஸ்லிமாவதற்கு ஒருவர் செய்ய வேண்டியதெல்லாம் ஷஹாதா கூறுவது மட்டும்தான். அதாவது, "இறைவன் ஒருவனே, முஹம்மது (ஸல்) அவர்கள் அவனின் தூதர்" என்று மனப்பூர்வமாக சொல்லுவது மட்டும் முஸ்லிமாவதற்கு போதுமானது. ஆனால் பெரும்பாலானவர்கள் இதனை இரண்டு சாட்சிகளுக்கு மத்தியில் சொல்லுவதையே விரும்புகின்றனர்."
----------------------------

நீங்கள் மேலே பார்த்த தகவல்கள் மட்டுமல்லாமல், இஸ்லாமை தழுவிய சில சகோதர/சகோதரிகளின் (கதிஜா ரீபக், ஸ்டுவர்ட் மீ, பால் மார்டின், தாவுத் மீலே, டெனீஸ் ஹோர்ஸ்லி, ஹானா தஜிமா) கருத்துக்களையும் வெளியிட்டிருக்கின்றது தி இண்டிபெண்டன்ட்.

அழைப்பு பணியில் தீவிரமாக செயல்படும் அப்துர் ரஹீம் கிரீன், யூசுப் சேம்பர்ஸ், ஹம்சா அன்ட்ரியஸ் மற்றும் ஆடம் தீன் போன்றவர்களின் நாடான பிரிட்டன் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை தன்னகத்தே கொண்ட நாடு. தி இண்டிபெண்டன்ட் கூறியிருக்கும் இந்த தகவல்களுக்கு பின்னால், இஸ்லாத்தை பற்றிய தவறான கண்ணோட்டங்களை களைய பாடுபடும் அந்த இயக்கங்களுக்கு நிச்சயம் பங்கிருக்கவேண்டும்.

குறிப்பாக ஒரு அமைப்பை பற்றி சொல்லியாக வேண்டும். IERA (Islamic Education and Research Academy) என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு மகத்தான இஸ்லாமிய அழைப்பு பணியை செய்து வருகின்றது. இவர்களுடைய செயல் திட்டம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவை,
  • Mission Dawah - அழைப்பு பணியில் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ ஈடுபடும் முஸ்லிம்களை கொண்ட ஒரு மாபெரும் இயக்கத்தை உருவாக்குவது தான் இந்த பிரிவின் குறிக்கோள். 
  • Muslim Now - புதிதாய் இஸ்லாமை தழுவியவர்களுக்கு இஸ்லாமிய கல்வி மற்றும் இதர உதவிகளை செய்யும் பிரிவு. 
  • One Reason  - முஸ்லிமல்லாதவர்களுக்கான இஸ்லா ம் குறித்த தகவல்களை தயாரிக்கும் பிரிவு. 
  • The Big Debates - முஸ்லிமல்லாத மக்களிடம் ஆரோக்கியமான முறையில் உரையாடுவதே இந்த பிரிவின் குறிக்கோள். இதுவரை பல விவாதங்களை சந்தித்துள்ளது இந்த பிரிவு. இதில் பிரபல நாத்திகர்களும் அடக்கம். 

மேலே காணும் பிரிவுகளை உற்று நோக்கினால் IERAவின் செயல் திட்டம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பதை காணலாம்.
அழைப்பு பணியில் IERA போன்ற அமைப்புகள் எந்த அளவு தீவிரமாக செயல்படுகின்றனவோ அது போலவே பிரிட்டனின் இஸ்லாமிய இளைஞர் அமைப்புகளும் செயல்படுகின்றன. 

இஸ்லாமிற்கு எதிரான பிரச்சாரங்கள் சிலரால் வரலாறு முழுக்க தீவிரமாக கையாளப்பட்டிருந்தாலும்/கையாளப் பட்டாலும், அந்த பிரச்சாரங்கள் இது வரை வெற்றி பெற்றதில்லை. அதற்கு எதிர்மறையாக, தொடர்ந்து அதிக அளவில் மக்கள் இஸ்லாத்தை தழுவி தான் வருகின்றார்கள். இது வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. இறைவன் நாடினாலன்றி இனி மேலும் அந்த சிலர் வெற்றி பெற போவதில்லை.

இஸ்லாம் தொடர்ந்து முஸ்லிமல்லாத சகோதர/சகோதரிகளின் உள்ளங்களை ஈர்க்கும். சகோதரர் காலித் யாசின் ஒருமுறை குறிப்பிட்டது போல, நாம் தாவாஹ் என்னும் உள்ளங்களை துளைக்கும் குண்டை என்றும் நம்முடன் வைத்திருப்போம். அது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல ஒவ்வொரு முஸ்லிமின் கடமையும் கூட.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர் --- குரான் 3:104 

இறைவன் நம் சமூகத்திற்கு தூய இஸ்லாத்தை எடுத்துரைக்கும் இயக்கங்களையும், அறிஞர்களையும் தொடர்ந்து தந்தருள்வானாக...ஆமீன்.

இஸ்லாமிய இளைஞர்கள் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட வல்ல இறைவன் உதவி புரிவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

Please Note: 
மேலே கொடுக்கப்பட்டுள்ள மொழிபெயர்ப்பு முழுமையானது அல்ல. முழுமையாக படிக்க கீழே கொடுக்கப்படுள்ள சுட்டியை சுட்டவும்.
 
My sincere thanks to:
1. "The Independent" daily.

References:
1. The Islamification of Britain: record numbers embrace Muslim faith - Jerome Taylor and Sarah Morrison, The Independent, dated 4th January 2011. link
2. Islamic Education and Research Academy. link  
3. Federation of Student Islamic Societies. link