Wednesday 4 April 2012

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-11



அறியாத சில விசயங்களை 
தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-11
*மின்சார பல்பைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனுக்கு இருட்டைக் கண்டால் பயம். 

*நான்கு அமெரிக்கர்களில் ஒருவர் டெலிவிஷனில் தோன்றிவிடுகிறார்.

*ஒரு மனிதன் வருடத்தில் சராசரியாக 1,460 தடவை கனவு காண்கிறான். 

*மனித உடலில் ஒரு வினாடிக்கு 1 கோடி சிவப்பு ரத்த செல்கள் உருவாகவும் கொல்லவும்படுகின்றன

காட்டு நாய்களிடமிருந்து கம்பளி ஆடுகளை காப்பாற்றுவதற்கு ஆஸ்திரேலியா அரசாங்கம் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 3 ஆயிரத்து 437 மைல் நீளமுள்ள வேலியை அமைத்துள்ளது. இதுதான் உலகின் மிகப் பெரிய வேலியாகும். 

*** 

*பிறந்தது முதல் இறக்கும் வரை தன் வாயைத் திறந்தவாறே வைத்திருக்கும் கடல் மீன் எது தெரியுமா?... விரியன் என்னும் மீன். இதற்குக் காரணம் வாயை மூட முடியாதபடி அதன் பற்கள் மிக நீளமாக இருப்பதுதான். 

*** 

*உலகில் தினமும் 80 லட்சம் மின்னல்கள் பூமியைத் தாக்குகின்றன. இடி மின்னல் ஏற்படுத்தும் மேகங்களோ உலகில் சுமார் 44. ஒரு தடவை மின்னல் தாக்கினால், தோன்றுகிற மின்சாரம் பத்துக் கோடி மின்சார பல்புகளை எரிய வைக்க போதுமானதாக இருக்கும். 

*** 

*இரவில் கூட்டமாக அமைந்திருக்கும் நட்சத்திரங்களை நாம் பார்க்கும்போது அவை அருகருகே இருப்பது போல் தோன்றும். அது உண்மையல்ல. அவற்றுக்கு இடையே காணப்படும் தூரம் பல ஒளியாண்டுகள் ஆகும். ஆனால் நம்முடைய பார்வை கோணத்தில் அவை ஒன்றன் பின் ஒன்றாக இருப்பது போல் காட்சியளிக்கின்றன. 

*** 

*வானம் தெளிவாக இருக்கும் இரவுகளை விட மேகமூட்டமுள்ள இரவுகளில் சற்று வெப்பம் அதிகமாக இருக்கும். இதற்கு என்ன காரணம் தெரியுமா?... பூமி வெளிப்படுத்தும் வானத்தை அடைய முடியாமல் மேக மூட்டம் தடுத்து விடுவது தான். இதன் காரணமாகத் தான் மேக மூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் அதிக வெப்பம் காணப்படுகிறது. 

*** 

*தெகான் பெக் என்றொரு வகைப் பூ மரம். இந்த மரம் பார்ப்பதற்கு கொய்யா மரம் போலவே இருக்கும். இது பூக்கும் பூ காலையில் வெள்ளை நிறமாகவும், நண்பகல் நேரத்தில் சிவப்பாகவும், இரவில் நீல நிறமாகவும் இருக்கும். 

*தொடரும்...

No comments:

Post a Comment