Sunday 15 July 2012

இந்தியாவில் புற்றுநோய்


1. நீங்கள் முயற்சிக்காமலேயே எடை குறைகிறதா? எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் மருத்துவரிடம் கூறி உடலின் எல்லா பாகங்களையும் சி.டி ஸ்கான் செய்து கொள்ளுங்கள்.

2. உடல் பெருமன் கூடுவது ஓவேரியன் கான்ஸருக்கு அடையாள்ம். அடி வயிற்றில் வலி, அதிகம் சாப்பிடாமலேயே வயிறு நிரம்புதல், அடிக்கடி சிறு நீர் கழித்தல் ஆகியவையும் ஓவேரியன் கான்ஸருக்கு அடையாளங்கள்.

3. மார்பகத்தின் தோல் தடித்து சிவப்பாக மாறுகிறதா? அது மார்பக புற்று நோயின் அறிகுறி.

4. மாதவிடாய்களுக்கான காலங்களை தவிர்த்து இடைப்பட்ட காலங்களில் ரத்தக் கசிவு ஏற்பட்டால் அதை புறக்கணிக்காதீர்கள், அது கர்ப்பபை புற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

5. தோலின் நிறம் மாறுவது தோல் சம்பந்தப்பட்ட புற்று நோயின் அறிகுறி.

6. உணவை முழுங்குவதில் சிரமம் இருக்கிறதா? அது தொண்டை இருக்கும் பகுதியான இசோபாகஸ் என்ற இடத்தில் இருக்கும் புற்று நோயின் அறிகுறி.

7. உங்களுடைய சிறு நீரிலோ அல்லது மலத்திலோ ரத்தம் இருந்தால் அது உணவுக்குழாய் (கலோன்) புற்று நோயின் அறிகுறி.  இருமலுடன் ரத்தம் வெளிப்பட்டால் உடனே செக்அப் செய்து கொள்ளுங்கள்.

8. அடி வயிற்றில் வலியும் மன்ச்சோர்வும் ஏற்படுகிறதா? அது பான்க்ரியாஸ் என்ற சுரப்பியில் வரும் புற்று நோயின் அறிகுறி.

9. கர்ப்பமாக இருக்கும் போது அஜீரணம் ஏற்படுவது இயற்கை. மற்ற நேரங்களில் காரணமின்றி அஜீரணம் ஏற்பட்டால் அது தொண்டை, வயிறு இவற்றில் ஏற்படும் புற்று நோயின் அறிகுறி.

10. புகை பிடிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அவர்களின் வாயிலோ அல்லது நாக்கிலோ வெள்ளை புள்ளிகள் தோன்றினால் அது Oral புற்று நோயின் அறிகுறி.

11. திடீரென்று காரணமின்றி வலி ஏற்பட்டால் உடன் பரிசோதித்துக் கொள்ளுங்கள். அது புற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

12. உங்களுடைய கக்கத்திலோ அல்லது கழுத்தின் கீழ் பகுதியிலோ கட்டி ஒன்று உருவானால் அது ஒரு புற்று நோயின் அறிகுறி,

13. இன்ப்ளுன்சா அல்லது வைரஸ் இவற்றால் ஏற்படும் காய்ச்சலை தவிர வேறு வைகையான காய்ச்சல் ஏற்பட்டால் அது புற்று நோயின் அறிகுறி.

14. அடிக்கடி மயக்கம் வருதலும் புற்று நோயின் அறிகுறி.

15. மூன்று நான்கு வாரங்களுக்கு மேலாக இடைவிடாத இருமல் புற்று நோயின் அறிகுறி.

மேற்கண்ட அறிகுறிகளை படித்து விட்டு பயப்பட வேண்டாம். புற்று நோயை முதலிலேயே கண்டு பிடித்து விட்டால் அவற்றை குணப்படுத்துதல் எளிது. ஆகவே இந்த அறிகுறிகளை தயவு செய்து புறக்கணிக்காதீர்கள்.

No comments:

Post a Comment