Sunday 30 December 2012

தெரிந்து கொள்வோம் வாங்க-பகுதி 24



  • மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்து விடும்.
  • 200 கோடி பேருக்கு ஒருவர்தான் 116 வயதைக் கடந்து வாழ்கிறார்கள்.





  •       நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியது.
  • ராக்கூன் என்ற விலங்கு உணவை நீரில் கழுவிய பிறகே உண்ணும் வழக்கமுடையது.


  • மானின் கொம்புகள் ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து முளைக்கிறது.
  • நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனையோ கோபம் வந்தால்தான் வாலை ஆட்டும்.
  • நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி விடும்.
  • ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும் அது உயிருடன் இருக்குமாம்.
  • வண்ணத்துப் பூச்சிகள் தன் பின்னங்கால்களால்தான் சுவையை அறிகின்றன.
  • மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு.
  • கோழி முட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண் துளைகள் இருக்கின்றன.
  • ஆந்தையால் ஒரே நேரத்தில் இரு கண்களாலும் இருவேறு காட்சிகளைக் காண முடியும்.
  • பெண் சிலந்திப் பூச்சிகள் ஆண் சிலந்தியுடனான உறவுக்குப் பின் அதைக் கொன்று விடுகின்றன.
  • பூனைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்குகின்றன.
  • நண்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டையை (மேல்தோல்) உரிக்கின்றன.
  • ஒரு ஜோடி எலி ஒரே ஆண்டில் 800 குட்டிகள் வரை போட்டு விடும்.
  • ஒரு பட்டுப்புழுவின் கூட்டில் 32 ஆயிரத்து 500 கெஜம் நூல் இருக்கும்.
  • ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் சுமார் 450 அடி நீளம் கொண்ட வலையைப் பின்னுகிறது.
  • புழுவை இரண்டாகத் துண்டித்துப் போட்டாலும் அது சாகாது.
  • காண்டாமிருகத்தின் காலில் மூன்று பாதங்கள் இருக்கின்றன.
  • பூச்சி இனங்களில் அறிவாற்றல் அதிகமுடையது எறும்பு.
  • உலகில் அதிகமாக முட்டையிடும் உயிரினம் கரையான்.
  • கடல் பிராணியான ஆக்டோபஸின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.
  • கொசுவுக்கு 47 பற்கள் இருக்கின்றன.

  • நன்றி-தேனி.எஸ்.மாரியப்பன்

    No comments:

    Post a Comment