Tuesday 5 February 2013

தெரிந்து கொள்வோம் வாங்க-32



*காந்தியடிகளை முதன்முதலில் "மகாத்மா' என்று அழைத்தவர் ரவீந்திரநாத் தாகூர்.

*உலகின் 17 பல்கலைக்கழகங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணன்.



*யானையின் நீண்ட மூக்கை தும்பிக்கை என்று அழைக்கிறோம். இதில் ஒரு சிறு எலும்பு கூட கிடையாது. இது 40,000 தசை நார்களால் ஆனது.

*உலகில் பாம்புகளே இல்லாத நாடு அயர்லாந்து. 1,500 ஆண்டுகளாக அங்கு எவரும் பாம்பைப் பார்த்தது இல்லையாம்.

*அஜந்தாவில் உள்ள 27 குகைகளையும் செதுக்கி முடிக்க 700 ஆண்டுகள் ஆயின.

*இஞ்சியின் சமஸ்கிருதப் பெயர் "ஸ்ரீங்கவேரம்'. இதன் பொருள் மான் கொம்பைப் போன்று என்பதாகும்.

*உலகிலேயே நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்தும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. ஒரு கிலோ கிராம் தோலுக்கு 20-22 லிட்டர் தண்ணீரையே பயன்படுத்துகின்றனர். உலக அளவு 40-42 லிட்டர் தண்ணீராகும்.

*சென்னையில் 1876-ம் ஆண்டு கடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போதைய கவர்னர் பக்கிங்காம் மக்களுக்கு வேலை கொடுப்பதற்காக அடையாற்றையும், கூவம் ஆற்றையும் இணைக்கும் கால்வாய் ஒன்றை வெட்டினார். அவர் நினைவாக இது பக்கிங்காம் கால்வாய் எனப்படுகிறது.


*உலகிலேயே முதன்முதலாக பிஷப்பான பெண்மணி பார்பரா சிஹரிஸ். இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்.

*உலகிலேயே மிகப் பெரிய பல்கலைக்கழகம் மாஸ்கோவில் உள்ளது. அறைகளின் எண்ணிக்கை 49,000.

*உலகின் மிகப் பெரிய கதவுகள் அமெரிக்காவிலுள்ள அசெம்பிளி மாளிகையின் கதவுகள். இதன் உயரம் 400 அடிகள்.

*உலகின் கூரை எனப்படுவது பாமீர் பீடபூமி.

*உலகின் பெரிய கண்டம் ஆசியா.

*உலகிலுள்ள 181 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

*உலகின் மிகப் பெரிய தீவு கிரீன்லாந்து.

*உயரமான மிருகம் ஒட்டகச் சிவிங்கி.

*மிகப் பெரிய பறவை நெருப்புக் கோழி.

*மிகப் பெரிய அருங்காட்சியகம் லண்டன் அருங்காட்சியகம்.

*மிக நீளமான நதி மிஸெளரி மிஸிஸிப்பி (4,500 மைல் நீளம்).

*பேகம் ரொக்கயா ஷெகாவத் ஹூசைன், பண்டித ரமாபாய், சுப்புலட்சுமி, ருக்மணி தேவி அருண்டேல் ஆகியோர் கல்விப் பணியில் ஈடுபட்ட பெண்மணிகள்.

*டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி, டாக்டர்.ஜடா சோஃபியா ஸ்கட்டர், அம்புஜம்மாள், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் ஆகியோர் சமூகப் பணியில் ஈடுபட்ட பெண்மணிகள்.

*அமெரிக்க சுதந்திர தேவி சிலை கையின் நீளம் 16 அடிகள்.

*கார் திருட்டு அதிகம் நடப்பது அமெரிக்காவில்.

*அமெரிக்காவில் சிறைக் கைதிகள் "சிறைக் கண்ணாடி' என்ற பத்திரிகையை நடத்துகின்றனர்.

*அமெரிக்காவில் ஹெலிகாப்டர் டாக்ஸிகள் உள்ளன.

*அமெரிக்காவில் தான் முதன்முதலில் குதிரைப் பந்தயம் தோன்றியது.

*அலுமினியத்தை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடு அமெரிக்கா.

*இன்று நாம் வாக்கியங்களுக்கு இடையே பயன்படுத்தும் கமா, செமிகோலன், முற்றுப்புள்ளி போன்ற குறியீடுகளை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் வீரமாமுனிவர்.

*கர்ஸன் பிரபு காலத்தில் தான் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முறை அமலுக்கு வந்தது.

*அகாதெமி என்பது ஒரு கிரேக்க மொழிச் சொல். புகழ் பெற்ற கிரேக்கத் தத்துவஞானி பிளாட்டோ தமது சீடர்களுக்கு பாடம் கற்பித்த கோப்புகளைக் குறித்த சொல் இது. பின்னர் உயர் கல்வி போதிக்கும் கல்விக் கழகங்களை இச் சொல் குறிக்கத் தொடங்கியது.


*பிப்ரவரி மாதத்தை நியூமா எனும் சக்கரவர்த்திதான் முதன் முதலில் கி.மு.713-ல் ரோமன் காலண்டரில் அறிமுகப்படுத்தினார். அப்போது இது வருடத்தின் கடைசி மாதம். பின்னர், கி.மு.450-ல் தான் வருடத்தின் இரண்டாம் மாதமாயிற்று.

* மின்துடிப்புகளை ரேடியோ அலை மூலம் ஒரு மைல் தூரம் அனுப்பக் கூடிய ரேடியோ கருவியைக் கண்டுபிடித்தவர் மார்கோனி. முதன்முதலில் கோன் ஐஸ்கிரீமை தயாரித்த வரும் இவரே.

* புகழ்பெற்ற புன்னகை ஓவியமான மோனலிசா ஓவியத்தை வரைந்த லியானார்டோ டாவின்சியின் கற்பனைத் திறன் அறிவியலுக்கு ஒரு சவாலாக இருந்தது. அது எப்படித் தெரியுமா? முதன்முதலில் இதயத்தின் நிஜ வடிவம் இதுதான் என்பதை தத்ரூபமாக வரைந்து காட்டினார். பூக்களில் ஆண், பெண் உண்டு என கண்டுபிடித்துக் கூறினார். தாவரங்கள் சூரியனை நோக்கி வளர்வது போன்ற இவரது ஓவியங்கள் இயற்கை குறித்த ஆய்விற்கு பேருதவியாக இருந்தன.

*ஜான் டோமினிக் பாபி என்ற எழுத்தாளருக்கு பக்கவாதத்தால் கைகளும், கால்களும் பாதிக்கப்பட்டன. வாயால் பேசவும் முடியவில்லை. தனது நெருங்கிய உதவியாளரிடம் வெறுமனே கண்களை அசைத்து ஒவ்வொரு எழுத்து, வார்த்தை மற்றும் வாக்கியங்களைப் புரிய வைத்தார். இதன் மூலம் "தி டைவிங் பெல் அண்டு தி பட்டர்ஃபிளை' என்ற புத்தகத்தை எழுதினார். அவர் இறப்பதற்கு முன் 1996-ம் ஆண்டு இது வெளிவந்தது. இப்புத்தகம் மிக அதிகமாக விற்பனையான புத்தகங்களில் ஒன்றாக அமைந்தது.


*எந்தக் கருவியின் உதவியும் இல்லாமல் இதுவரை மக்கள் கேட்ட ஒலிகளிலேயே மிகப் பெரிய ஒலி 1833-ம் ஆண்டு ஆகஸ்டு 6-ம் நாள் கேட்டது. கனடா நாட்டில் உள்ள கிராக்டோ எரிமலையின் சீற்றம் தான் அது. அந்த ஒலி 3,000 மைல் தொலைவிற்குக் கேட்டது. அந்த எரிமலையின் கிளர்ச்சி அத்தீவின் தோற்றத்தையே மாற்றியதுடன், அதன் விளைவுகள் ஆங்கிலக் கால்வாயிலும் தாக்கத்தை ஏற்படுத்தின.


* கைரேகை போல் காலில் காணப்படும் ரேகைகளும் மனிதனின் ஆயுள் முழுவதும் மாறுவதில்லை.

* கோபி பாலைவனம் குளுமை நிறைந்த பகுதியாகும்.

* நெருப்புக் கோழி தண்ணீரில் நீந்தும்.

* மீனின் செதில்கள் மூலம் அதன் வயதை அறியலாம்.

* மிக வெப்பமான நட்சத்திரத்தின் நிறம் நீல நிறம்.

* காந்தியடிகள் தன் வாழ்நாளில் ஒரு முறை கூட விமானப் பயணம் மேற்கொண்டது கிடையாது.

* சீன நாட்டின் மீது படையெடுத்த ஒரே இந்திய மன்னர் முகம்மது-பின்-துக்ளக்.

* இந்திய தேசப்படத்தை முதன்முதலாக வரைந்தவர் ஆன்வின் என்ற பிரெஞ்சு நாட்டுக்காரர்.

* இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட உலோகப் பற்றாக்குறையினால் ஆஸ்கர் விருதுகள் மரத்தினால் செய்து வழங்கப்பட்டன.


* டார்வின் மண்புழுக்களைப் பற்றி ஆராய்ந்து 1881-ல் புத்தகம் எழுதினார்.

* மழைக் காலங்களில் திடீரென அதிகமான அளவில் ஈசல்கள் தோன்றுவதுண்டு. இதன் விலங்கியல் பெயர் எஃபமெரோப்டெரா.

* சாதாரணமாக எல்லா இடத்திலும் காணப்படும் 1.25 செ.மீ. நீளமுள்ள மண்புழுவானது 24 மணி நேரத்தில் சுமார் 900 செ.மீ. நீளத்திற்கு மண்ணைக் குடைந்து விடும்.


* சிலவகை நத்தைகள் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் தூங்கும் தன்மை கொண்டவை.

* வீட்டில் காணப்படும் ஈக்கள் சுமார் மணிக்கு 7 முதல் 8 கி.மீ. வேகத்தில் பறக்கும்.

* பிடரியுடன் உள்ள ஆண் சிங்கத்தை வீரமுள்ளது என நாம் நினைத்துக் கொண்டிருந்தாலும், உண்மையில் 90 விழுக்காடு விலங்குகளை வேட்டையாடிக் கொல்வது பெண் சிங்கம் தான்.

* நீண்ட ஆயுள் உடைய உயிரினம் ஆமை.

* முதலை, திமிங்கலம் ஆகியவற்றால் நீரில் மூச்சு விட முடியாது.


* சுபாஷ் சந்திரபோஸ் ஒரிசாவில் உள்ள கட்டாக் நகரில் 1897-ம் ஆண்டு பிறந்தார்.

* உலகில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட செல் போனை உருவாக்கிய நிறுவனத்தின் பெயர் மோட்டோரோலா.

* மனித உடலின் வேதியியல் ஆய்வுக்கூடமாகக் கருதப்படும் உறுப்பு ஈரல் தான்.

* சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுவது வைட்டமின் "சி' ஆகும்.

* தாதா சாகேப் விருது பெற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிருத்விராஜ் கபூர், ராஜ்கபூர்.
_________________

நன்றி: யாழ் இணையம்

No comments:

Post a Comment