Thursday 20 October 2011

இறைவனுக்கு உருவம் கற்பித்த டிவிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; கண்ணீர்புகை வீச்சு

in

இறைவனுக்கு உருவம் கற்பித்த டிவிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; கண்ணீர்புகை வீச்சு


திரையிட்ட கார்ட்டூன் படம் ஒன்றில் முஸ்லிம்கள் வணங்கும் இறைவனுக்கு உருவம் இருப்பதுபோல் கற்பனையாகக் காண்பித்ததால்
துனிஷிய தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக, ஆயிரக்கணக்கான துனிஷிய முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம், பேரணி கண்டனர். “இஸ்லாமில் இது மதநிந்தனைக் குற்றமாகும்” என்று அவர்கள் கூறினர்.
தனது வீட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கினர், எரிக்க முயன்றனர் என்று சர்ச்சைக்குரிய துனிஷிய தொலைக்காட்சியான நெஸ்மாவின் உரிமையாளர் நபில் கரோயி கூறினார்.
அண்மைக்காலமாக உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சிக்கான ‘முதலெழுத்தை’ துனிஷியாவே துணிந்து எழுதியது என்பது குறிக்கத்தக்கது.
இந்நிலையில், புரட்சிக்குப் பிந்தைய துனிஷியாவின் அரசியலமைப்புப் பேரவைக்கு அடுத்தவாரம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
நெஸ்மா என்ற அந்தத் தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக துனிஷிய முஸ்லிம்களின் இத்தகைய பேரணி இரண்டாவது முறையாகும் என்று கூறப்படுகிறது.
1979ல் ஈரானில் ஏற்பட்ட புரட்சியை விளக்கும் வகையிலமைந்த பெர்செபொலிஸ் (Persepolis) என்ற ஓவியப்படத்தில் இறைவன்  ஒரு இளம்பெண்ணுடன் பேசுவது போன்ற காட்சியமைப்பும், இன்னும் பல கற்பனை காட்சியமைப்புகளும் நெஸ்மா திரையிட்ட கார்ட்டூன் படத்தில் இடம் பெற்றிருந்தது.
இதனை மதகுருமார்களும், மற்ற முஸ்லிம் மக்களும் கடுமையாக எதிர்த்து ஆர்ப்பாட்டத்திற்கும், பேரணிக்கும் அழைப்பு விடுத்தனர்.
கடந்த வெள்ளியன்று மதியத் தொழுகைக்குப் பின்னர் கூடிய கூட்டம் அமைதியான முறையில் பேரணி கண்டதாகவும், ஆயினும், மத்திய தூனிஸ்ஸில் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள இடமருகே, சிலர் அத்துமீற முயன்றனர் என்று காவல்துறை கண்ணீர்புகைக் குண்டுகளைக் கூட்டத்தினர் மீது வீசியது. தொடர்ந்து இருபக்கமும் கல்வீச்சு நடந்துள்ளது.
இதற்கிடையே  தொலைக்காட்சி உரிமையாளர் நபில் கரோயி முழுமனதுடன் மன்னிப்பு கோரியுள்ளார். “ஆர்ப்பாட்டக்காரர்கள் எனது வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர்” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
“இந்த நாட்டில் இறைவனையே இழிவுபடுத்த எண்ணுகிறார்கள். ஆளுவோர் மீது சிறிய விமர்சனம் என்றாலும் அடக்குமுறையைக் கையாளுகிறார்கள்” என்று ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் கூறினார்.
நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு, ஆங்காங்கே ஆர்ப்பாட்டமும் பேரணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கண்களின் அற்புதம்


கண்களின் அற்புதம் .

புலன்களில் முதன்மையானது பார்வை. கண்கள் மூலம் பார்க்கப்படும் காட்சிகள், மின் ரசாயனத் துடிப்புகள் மாற்றப்படுகின்றன. பின் தலையில் உள்ள 'ஸெரிப்ரல் கார்டெக்ஸ்' பகுதியின் மூலம் அறிந்து கொள்ளப்படுகிறது . மூளையின் முதல் ஆச்சரியம் இதுதான்.

கண் என்பது ஒரு கேமராதான். அதற்கும் லென்ஸ் இருக்கிறது. ஒளிக்கதிர்கள் கார்னியா வழியாகக் கண்ணுக்குள் நுழைகின்றன. ப்யுப்பில் என்று அழைக்கப்படும் பாப்பா கேமராவின் அப்பெர்ச்ச்சர் போல செயல்படுகிறது. தானாகவே 'அட்ஜஸ்ட்'செய்து கொள்ளக் கூடியது. குறைந்த வெளிச்சத்தில் பெரியதாகும். அதிக வெளிச்சத்தில் குறுகும்.

கண் லென்ஸ் இந்த ஒளிக்கதிர்களை வளைத்து, உள்ளே உள்ள கண்ணாடி போன்ற திரவத்தின் வழியாக 'ரெட்டினா' என்ற திரையின் மேல் படிய வைக்கிறது. 'ரெட்டினா' என்றால் வலை. நரம்பு செல்களின் வலை. இந்த செல்களுக்கு 'ஒளி வாங்கி செல்கள்' என்ற பெயரும் உண்டு. இந்த ஒளி வாங்கி செல்கள் இரண்டு வகைப்படும். ஒன்று கோன் வடிவம், அதாவது கூம்பு. மற்றொன்று ராடு வடிவம். அதாவது குச்சி. கூம்பு வடிவ செல்கள் 60 லட்சம் உள்ளன. சிறிய கெட்டியான கூம்பு போன்ற வடிவம் கொண்ட இந்த செல்கள்தான் வண்ணங்கள நமக்கு தெளிவாக காட்டுகின்றன. இதனுடன் சேர்ந்து பன்னிரெண்டரை கோடி மெல்லிய குச்சிகள் போன்ற செல்களும் உண்டு. இவை தான் மெல்லிய வெளிச்சத்திலும் நம்மை பார்க்க வைக்கின்றன. இவைகள் வண்ணத்தை உணராது வெறும் கருப்பு, வெள்ளையை மட்டும் தான் உணர வைக்கும்.

இந்த கூம்பு செல்களிலும், குச்சி செல்களிலும் விழுந்த ஒளிக்கதிர்கள், ஒளி உணரும் சில ரசாயனங்கள் மூலம் ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதில் ட்ரான்ஸ்ட்யுசின் என்ற புரதம் ஒளி - செய்தி மாற்றத்தில் பயன்படுகிறது. இதிலிருந்து பார்வை நரம்பு மூலம் செய்தி உள்ளே போகிறது. கண் திரையில் படும் ஒவ்வொரு விவரமும் ஒழுங்காக பார்வை கார்டெக்ஸ் பகுதிக்கு அனுப்பபடுகிறது. அங்கே அந்த பிம்பம் மறுபடி கோர்க்கப்ப்படுகிறது.

கார்ட்டெக்ஸ் பகுதிக்கு செய்திகள் நேராகப் போவதில்லை. பார்வை நரம்புகள் இரண்டும் இடம், வலம் மாறுகின்றன.

கண்ணின் சில ஆச்சரியங்களுக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை. கண்ணின் விழித்திரை பகுதி எதற்க்காக மூளையின் பின்னால் அமைக்கப்பட்டிருக்கிறது? எதற்க்காக இடது வலம் என்று பிம்பங்கள் மாறுகின்றன? கண் திரையில் விழும் பிம்பம் தலிகீழானது. அது எங்கே, எப்படி நேராக நிமிர்த்தப்படுகிறது? என்பது போன்ற கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்காமல் ஆராய்ச்சியாளர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தக்காளி பழத்தின் மகிமை


தக்காளி பழத்தின் மகிமை என்ன?


தக்காளி என்பதும் ஏதோ குழம்பு வைப்பதற்குத் தேவையான ஒன்று என்றே அனைவரும் கருதுகின்றனர். தக்காளியும் பழ வகைகளில் ஒன்றுதான் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
பழங்களைச் சாப்பிடுவதைப் போலவே தக்காளிப் பழத்தையும் அப்படியே சாப்பிட்டால் உடலிற்கு வளத்தையும் நல்ல பலத்தையும் கொடுக்கும்.
தக்காளிப் பழத்தை அப்படியே சாப்பிடுவது என்பது கிட்டத்தட்ட டானிக் குடிப்பதற்கு ஒப்பானது. அதுமட்டுமல்லாமல், தக்காளிப் பழத்தை எந்த வகையில் பக்குவப்படுத்திச் சாப்பிட்டாலும், அதன் சக்தி அப்படியே நமக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தக்காளிப் பழத்தில் அதிகபட்சமாக வைட்டமின் ஏ சத்து 91 மில்லி கிராம் உள்ளது. வைட்டமின் பி1 சத்து 34 மில்லி கிராம், பி2 வைட்டமின் 17 மில்லி கிராமும், சி வைட்டமின் 9 மில்லி கிராமும் உள்ளது. மிகக் குறைவாக சுண்ணாம்புச் சத்து 3 மில்லி கிராமே உள்ளது.
தக்காளிக்கு இரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உண்டு. இரத்தத்தையும் இது உற்பத்திச் செய்யக் கூடியது. நல்ல இரத்தத்திற்கு வழி செய்வதால் இரத்த ஓட்டமும் சீராக இருக்க உதவுகிறது.
பொதுவாக இரத்த ஓட்டம் சீராகவும், சுத்தமாகவும் இருந்தாலே உடலில் நோய்த் தொற்று ஏற்படுவது எளிதான காரியமல்ல.
தக்காளிப் பழத்தை எந்தவிதத்திலாவது தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானது.
தக்காளிப் பழத்தை சூப்பாக வைத்து காலை, மாலையில் சாப்பிட்டு வந்தால் உடல் சருமம் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் சருமம் மென்மையாகவும், ஒருவித பொலிவுடன் திகழும்.
இதுமட்டுமல்லாமல், சரும நோய்கள் வராமலும் பார்த்துக் கொள்ளும்.
தக்காளிப் பழத்தைக் கொண்டு ஜாம் செய்து வைத்துக் கொண்டால், அதனை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என காலை உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளும் விரும்பி உண்பார்கள். அவர்களுக்குத் தேவையான சத்தும் எளிதில் கிடைத்துவிடும்.
விலை உயர்ந்த பழங்களை உட்கொள்ள முடியாத ஏழை, எளிய மக்கள் தக்காளிப் பழத்தை சாப்பிடலாம் என்று சொல்லலாம். ஆனால், தற்போதைய விலைவாசியில் தக்காளிப்பழமும் ஒரு விலை உயர்ந்த பழமாக மாறிவிட்டுள்ளது என்பதே உண்மையாக இருக்கிறது.

இதய நோயை கட்டுப்படுத்தும் தக்காளி!


அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய இது தொடர்பான ஆய்வை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கூறியுள்ளதாவது:
 தக்காளியில் உள்ள ‘லைக்கோபென்’ சத்து பெண்களின் இதய நோயை கட்டுப்படுத்தும். காய்கறிகளில் முக்கிய சத்துகளாக பொட்டாசியம், பீட்டா கரோட்டின், மக்னீசியம், கால்சியம், இரும்பு, போலேட் (பி வைட்டமின்), வைட்டமின் சி, இ, கே, நார்சத்து ஆகியவை உள்ளன.அதிக உடல் எடை ‘டைப் 2’ சர்க்கரை நோய்க்கு அழைத்து செல்லும். இது பின்னர் இதய நோய், கிட்னி செயலிழப்பு, விரைவில் இறப்பு போன்றவற்றுக்கு காரணங்கள் ஆகின்றன. காய்கறிகள் வயிற்றை நிரப்பி, பசியை குறைக்கின்றன. காய்கறிகளில் உள்ள நார்சத்து இதய நோய்க்கு காரணமாகும் கொழுப்பை குறைக்கிறது. மலச்சிக்கலை போக்கும்.
தக்காளியில் உள்ள பொட்டாசியம் மற்றும் காய்ந்த பீன்ஸ், இனிப்பு உருளைக் கிழங்கு, கீரைகளில் உள்ள சத்து உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதய நோய்க்கும், ‘ஸ்ட்ரோக்’ ஏற்படவும் முக்கிய காரணம் உயர் ரத்த அழுத்தம். கீரையில் உள்ள சத்துக்கள் கண் பார்வைக்கு நல்லது.தக்காளியில் உள்ள லைக்கோபென் சுரப்பி புற்று நோய்க்கான வாய்ப்பை குறைக்கும். பெண்களுக்கு இத்துடன் தொடர்புடைய இதய நோயையும் குறைக்கும்
இணையத்திலிருந்து.....உங்களுக்காக

குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும் காவல்துறையும் ஊடகங்களும் : நீதிபதி மார்க்கண்டே கட்ஜு கண்டனம்



புது டெல்லி : "நாட்டில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் உடனே முஸ்லீம்கள் மீது பழி சுமத்தும் போக்கை காவல்துறையும் ஊடகங்களும் கையாள்வது வெட்கக்கேடானது" என்று உச்ச நீதிமன்றத்தில் இருந்து கடந்த மாதம் ஓய்வு பெற்ற நீதிபதியும், தற்போதைய பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவருமான மார்க்கண்டே கட்ஜு கடும் கண்டனம் தெரிவித்தார்.
ஆங்கில தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "முஸ்லீம்களை குண்டுவெடிப்புகளுக்குக் காரணகர்த்தாவாக சித்தரிக்க்கும் ஊடகங்களும் காவல்துறையும் அப்போக்கை கைவிட வேண்டும்" என்று கூறினார். தடய அறிவியல் உள்ளிட்ட விஞ்ஞான முறைகளில் நமது நாட்டின் காவல்துறைக்குத் திறமை இல்லாததாலேயே தீவிரவாத வழக்குகள் தீர்க்கப்படாமல் இருப்பதாக கூறினார்.
குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே மின்னஞ்சல்கள் அல்லது அலைபேசிகளில் அனுப்பப்படும் குறுந்தகவல்கள் மூலம் குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் குறித்து முடிவுக்கு வருவதை வண்மையாக கண்டித்தார். "உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் கையில் கிடைக்கும் முஸ்லீம்களின் மீது காவல்துறை பொய் வழக்கு போடுகிறது" என்றார்.
"அது போல் எவ்வித ஆதாரமும் இல்லாமல் பரபரப்புக்காக பொய் செய்தி வெளியிடும் ஊடகங்கள் கலந்துரையாடல்கள் போன்ற ஜனநாயக வழிமுறைகளின் மூலமாகவோ அல்லது அபாராதம் மூலமாகவோ, அரசின் விளம்பரங்களைக் கொடுக்காமல் தடுப்பதன் மூலமாகவோ தேவைப்பட்டால் ஊடக உரிமங்களை ரத்து செய்வதன் மூலமாகவோ திருத்தப்பட வேண்டும்" என்றும் மார்க்கண்டே கட்ஜ் குறிப்பிட்டார்.
கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் பெங்களூரு, வாரணாசி, புனே, மும்பை மற்றும் டெல்லி என பல இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளின் குற்றவாளிகள் இது வரை கண்டு பிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நவராத்திரி பூஜை செய்யும் முஸ்லீம் பெண்கள்


262893_10150275362453463_646363462_7739219_4259725_n.jpg
அகிலபாரதீய வித்யார்த்தி பரிசத் எனும் பெயரில்செயல் படும் நாசகர பாசிச காவி கூட்டத்தின்  மாணவ அமைப்பின் உழைப்பின் பலனை பாரீர்.இவர்கள் தான் கல்லூரியில் பயிலும் நம் சமுதாய மாணவிகளை வழிகெடுப்பது.ஸ்மார்ட் பிரென்ட் எனும் பெயரில் பாசிச வெறி நாய்களை நண்பர்களாக அறிமுகம் செய்துவைத்து நம் சகோதரிகளிடம் ஆசை வார்த்தைகளை தூண்டி வீட்டை விட்டு வெளியேற செய்து வழி கெடுப்பதுதான் இவர்களின் முக்கிய குறிக்கோள்.எச்சரிக்கை சகோதரர்களே.பெண்களை ரீசாஜ் கார்டு வாங்கி ரீசார்ஜ் செய்ய சொல்லுங்கள்.அல்லது வீட்டில் உள்ள ஆண்கள் ரீசார்ஜ் செய்து கொடுங்கள்.ஈசி ரீசார்ஜ் செய்யும் கடைகளில் இருந்து ஈசி ரீசார்ஜ் செய்யும் நம் சமுதாய பெண்களின் நம்பரை எடுத்து முதலில் மெசேஜும் பின்பு மயக்கும் வார்த்தைகளை பேசியும் வழிகெடுக்கும் யுக்தியை தற்போது கையாளுகின்றனர்.எனவே தயவு செய்து ஈசி ரீசார்ஜ் செய்வதானால் ஆண்கள் சென்று செய்துகொடுங்கள்.

283389_10150273540698463_646363462_7722238_7776186_n.jpg223149_10150273546518463_646363462_7722250_3793269_n.jpg282549_10150273547598463_646363462_7722256_2277598_n.jpg
இப்புகைப்படங்கள் ராமேஸ்வரத்தில் நடந்த கடல்முர்ருகை போராட்டத்தின்போது எடுக்கப்பட்டது.சங்க்பரிவார பாசிஸ்ட்டுகள் சமூக வலைத்தளங்களில் ராமேஸ்வரத்தில் கிடைத்த வெற்றி என தலைப்பிட்டு இதை தங்களுக்குள் பகிர்ந்து வருகின்றனர்.



216597_10150266403548463_646363462_7646594_929198_n.jpg
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே!
நரமாமிச மோடி ஆட்சி செய்யும் குஜராத்தில் தான் இந்த இழிநிலை.இவர்கள் இணை வைத்து விட்டார்கள் இவர்கள் இசுலாமியர் இல்லை என சொல்லுவதை விட்டு விட்டு இவர்களை இந்த நிலைக்கு தள்ளியது யார் ?,இந்த நிலை ஏற்பட்டதற்கான காரணம் எது?இதன்   பின்னணி என்ன?என்பதனை சிந்திக்க வேண்டுகிறேன்.சங்கபரிவார பயங்கரவாதிகளின் நூறாண்டு செயல் திட்டத்தின் விளைவு தான் இது என்கிற உண்மையை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும்.இந்தியா இந்து தேசம்.நீ இங்கே வாழ வேண்டுமெனில் தொப்பி தாடியுடன் நாமும் இட்டுக்கொள்.அல்லாஹு அக்பர் என்பதுடன் ஜெய் ஸ்ரீ ராம் என்றும் சொல்.அப்படியெனில் மட்டுமே நீ இந்த நாட்டில் மூன்றாம் தர குடிமகனாய்  வசிக்க முடியும் என்று பகிரங்கமாக  அறைகூவல் விடுத்து அதை செயல்படுத்தும் வெறியோடு பல பிரிவுகளாய் பிரிந்து ஆனால் ஒரே நோக்கத்திற்கு ஆர்.எஸ்.எஸ்.எனும் ஒரே  தலைமைக்கு கட்டுப்பட்டு அதி தீவிரமாக செயலாற்றி வருகிறார்கள்.அரசு துறை அதிகார வர்க்கம்,ஆளும் வர்க்கம்,மீடியா,இணையதளம் இப்படி எல்லாவகையிலும் செயல்பட்டு வருகின்றனர்.நமக்கோ இயக்க சண்டை போடவும் ,அடுத்தவர்களின் குறைகளை கண்டறிந்து அதை பரப்புவது ,பல பிரிவுகளாய் பிரிந்து செல்லவுமே நேரம் சரியாக இருக்கிறது.ஏதோ இது அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடக்கவில்லை.சமிப காலமாய் இது அதிகரித்து வருகிறது.தமிழகத்திலும் கூட பழனி,சபரி மலைக்கு பாதயாத்திரை செல்வது,விநாயகர் சதுர்த்தி அன்று வரவேற்பு செய்வது ,நம் பெண்கள் ஹிந்து சமூகத்தை சேர்ந்தவருடன் வீட்டை விட்டு வெளியேறுவது
 அதிகரித்து வருகிறது.இந்நிலையில் மோடியை அடுத்த பிரதமராக முன்னிறுத்த  பாஜக தயாராகிவிட்டது. பிரசாரமும்  சமூக வலைத்தளங்கள்  மூலம் மும்முரமாக நடந்து வருகிறது.இந்நிலையில் நமது நிலையோ சொல்லி தெரியவேண்டியதில்லை. நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.போலி ஒற்றுமையோ நிஜ ஒற்றுமையோ தயவு செய்து ஒன்று சேருங்கள்.சமுதாய நலனுக்கு என்று  சொல்லி சொல்லியே பல பிரிவுகளாய் பிரிந்து  இந்த சமுதாயம் பலவீனப்பட்டு போனது தான் மிச்சம்.இயக்கவாதிகளே இயக்க மாயையிலிருந்து மீளுங்கள்.சமுதாய நலன் நாடும் நல்லுள்ளங்களே   இயக்க தலைமைகளிடம் ஒன்று பட வற்புறுத்துங்கள். வலியுறுத்துங்கள்..

Wednesday 19 October 2011

மழை பொழிவு பற்றிய ஒரு ஆய்வு !!!



பூமியில் உள்ள நீரை சூரியன் நீராவியாக மாற்றி மேலே இழுத்துச் சென்று அந்தரத்தில் மேகமாக நிறுத்தி யிருப்பதை இன்று அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம். இம்மேகங்களின் பிரமாண்டத்தைப் பற்றிப் பெரும்பாலான மக்கள் இன்று கூட அறிந்திருக்கவில்லை. மேலே இழுத்துச் செல்லப்படும் நீராவியானது, ஒன்றோடொன்றாக இழுத்து இணைக்கப்பட்டு ஆலங்கட்டி (பனிக் கட்டி) தொகுப்புகளாக மாற்றப்படுகிறது.

இந்தப் பனிக் கட்டிகள், ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு, 1000 அடி முதல் 30,000 அடிகள் வரை உயர்கின்றது. 30,000 அடி என்பது 9 கிலோ மீட்டரை விட அதிகமாகும். இது உலகின் பெரிய மலையான இமய மலையின் உயரத்தை விட அதிகம். இவ்வளவு பெரிய மலையின் அளவுக்கு இந்தப் பனிக் கட்டிகள், செங்குத் தாக அடுக்கப்பட்டு, மின் காந்தத் தூண்டுதல் ஏற்பட்டவுடன், பனிக் கட்டிகள் உருகி தண்ணீரைக் கொட்டுகின்றன. இது மழையின் இரகசியமாகும். மழை எவ்வாறு உருவாகின்றது என்பது பற்றி இன்றைய விஞ்ஞானிகளின் கூற்றைத் தான் மேலே தந்திருக்கிறோம். இதை பற்றி உலக போது மறையான திருகுரானிலே (24:43) என்கிற வசனம் அப்படியே கூறுவதைப் பார்த்து பிரமித்துப் போகிறோம். குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை.
24:43.    (நபியே!) நீர் பார்க்கவில்லையாநிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்துபின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்துஅதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்;அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேக கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் - தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் - அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது.

உலகில் வேகமாகப் பரவிவரும் மார்க்கம்


உலகில் வேகமாகப் பரவிவரும் மார்க்கம்

கான் பாகவி
லக சமயங்கள் மற்றும் பொதுவாழ்வுக்கான ஆய்வு மையம் பியூ’ [PEW] எனும் அமெரிக்க அமைப்பு அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் பரபரப்பான பல தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகில் வேகமாகப் பரவி வரும் மார்க்கம் இஸ்லாம் என்கிறது அந்த ஆய்வு.

உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 150கோடியைத் தாண்டுகிறது. அதாவது உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பாகம் முஸ்லிம்கள் ஆவர். இவர்களில் சன்னி முஸ்லிம்கள் 140 கோடி. அதே நேரத்தில்,உலக கத்தோலிக்க கிறித்தவர்களின் எண்ணிக்கை 130 கோடி ஆகும்.

பியூ மைய ஆய்வாளர்கள் கடந்த மூன்றாண்டுகளாக 232 நாடுகளிலும் பகுதிகளிலும் மேற்கொண்ட ஆய்வில் இந்தப் புள்ளிவிவரம் கிடைத்தது. ஆயினும்,உண்மையில் உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்கிறார் ஆய்வாளர்களில் மூத்தவரான பிரியன் கிரைம். ஏனெனில்இந்த ஆய்வெல்லாம்2009 மக்கட் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது என்கிறார் அவர்.

எடுத்துக்காட்டாகஐரோப்பாவில் பத்தாண்டுகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை என்கிறது இந்த ஆய்வு. 2001ஆம் ஆண்டு பிரிட்டனில் 16 லட்சமாக இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 2011லும் அதே அளவில் உள்ளதாக இந்த ஆய்வு காட்டுகிறது. உண்மையில் பிரிட்டனில்25 லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர்.

அமெரிக்காவில் மட்டும் 80 லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர். ஆனால்பியோவின் ஆய்வில் 46 லட்சம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாரஷியா ஆகிய நாடுகளின் முஸ்லிம்கள் எண்ணிக்கையிலும் இதே நிலை காணப்படுகிறது.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் பத்து பெரிய நாடுகள் ஆசியாவில்தான் உள்ளன. எகிப்துஅல்ஜீரியா,மெராக்கோுருக்கி போன்ற நாடுகளும் இவற்றில் அடங்கும். உலக முஸ்லிம்களில் 20 சதவீதம்பேர் மத்திய கிழக்கு மற்றும் வடஆப்பிரிக்காவில்தான் உள்ளனர். அதாவது உலக முஸ்லிம்களில் ஐவரில் ஒருவர் இந்நாடுகளில் வசிக்கின்றார். 62 விழுக்காடு முஸ்லிம்கள் ஆசிய நாடுகளில் மேற்கே துருக்கி முதல் கிழக்கே இந்தோனேஷியா வரை பரவியுள்ளனர்.

ஆனால்இந்த ஆய்விலிருந்து சில உண்மைகள் வெளிப்பட்டுள்ளனஅவற்றை ஆய்வுக் குழுவால் மறைக்க முடியவில்லை. முஸ்லிம்கள் என்றாலே அரபியர்தான்அரபியர் என்றாலே முஸ்லிம்கள்தான் என்ற வாதம் தவறு என்பதை இந்த ஆய்வு நிரூபித்துள்ளது. ஆம்! உலக முஸ்லிம்களின் எண்ணிக்கையில் ஒரு சிறு விழுக்காடுதான் மத்திய கிழக்கு நாடுகளான அரபுநாடுகளில் இடம்பெறுகிறது.

உலக முஸ்லிம்களில் ஷியா பிரிவினர் வெறும் 10 விழுக்காடு முதல் 13 விழுக்காடுதான். ஷியா முஸ்லிம்களில் 80 விழுக்காட்டினர் உலகில் ஈரான்பாகிஸ்தான்இந்தியாஇராக் ஆகிய நான்கு நாடுகளில் வசிக்கின்றனர்.

ஆகஇஸ்லாம் உலக மதங்களில் இரண்டாவது பெரிய மார்க்கமாகும். கிறித்தவம் -அதன் அனைத்துப் பிரிவுகளையும் சேர்த்து- உலகின் முதலாவது பெரிய மதமாகும். உலகக் கிறித்தவர்களின் எண்ணிக்கை 202 கோடி ஆகும்.

கடந்த 2010ஆம் ஆண்டு வாடிகன் வெளியிட்ட ஓர் அறிக்கை பின்வருமாறு அங்கலாய்க்கிறது: கத்தோலிக்கத்தை இஸ்லாம் முந்திவிட்டது. 1900ஆம் ஆண்டில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முஸ்லிம்கள் உலக மக்கள் தொகையில் 12.3 விழுக்காடு இருந்தனர். அண்மையில் இது இரட்டிப்பாகி உள்ளது. உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 11 சதவீதம் உயர்ந்து 23 சதவீதத்தை எட்டிவிட்டது.

இந்த உயர்வு பழைய முஸ்லிம்களின் பெருக்கம் மட்டுமே என்றும் யாரும் கருதினால் அது உண்மைக்குப் புறம்பானது என்பது தெளிவு. வேறு மதத்தார் இஸ்லாத்தில் அதிக எண்ணிக்கையில் இணைந்துள்ளனர் என்பதையே இந்த உயர்வு காட்டுகிறது.

பியூ அமைப்பின் துணை மேலாளர் அலன் கூப்பர்மன் [Alan Cooperman] குறிப்பிடுகிறார்: ஐரோப்பிய முஸ்லிம்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்றே பலரும் கருதுகின்றனர். இது மேற்கு ஐரோப்பாவிற்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஐரோப்பாவின் மற்றப் பகுதிகளான ரஷியாஅல்பானியாகுசோவா ஆகிய நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் அங்குள்ள பூர்வீகக் குடிகளே. ஆகஐரோப்பிய முஸ்லிம்களில் பாதிக்கும் அதிகமானோர் மண்ணின் மைந்தர்கள்தான். மேற்கு ஐரோப்பாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
கூப்பர்மேன் மற்றொரு விஷயத்தையும் தெளிவுபடுத்துகிறார்: சில நாடுகள் பற்றிமுஸ்லிம் நாடுகள்’ என்ற எண்ணமே யாருக்கும் தோன்றாது. ஆனால்அங்கெல்லாம் முஸ்லிம்கள் பெரிய எண்ணிக்கையில் உள்ளனர். இந்தியாரஷியாசீனா ஆகிய நாடுகள் எடுத்துக்காட்டுகளாகும்.
ஆனால்அவர் குறிப்பிடும் நாடுகளில் இஸ்லாத்தின் அழுத்தமான வேர்கள் பரவியிருப்பதை வரலாறு கூறும். இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவில் 16 கோடியே 61 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். அதாவது இந்தோனேசியாபாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடு இந்தியாதான். பெரிய அரபு நாடாகக் கருதப்படும் எகிப்தில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கையில் இது இரு மடங்காகும்.

அவ்வாறேஜெர்மனில் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கைலெபனானில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கையைவிடப் பெரியது. ஜோர்தான்லிபியா ஆகிய இரு நாடுகளின் முஸ்லிம் எண்ணிக்கையைவிட ரஷிய முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம். ஆப்கானிஸ்தான் முஸ்லிம்களின் எண்ணிக்கையைவிட எத்தியோப்பியா முஸ்லிம்களின் எண்ணிக்கை ஒரு மடங்கு அதிகம். சிரியா முஸ்லிம்களைவிட சீன முஸ்லிம்கள் அதிகம்.

சீனாவில் முஸ்லிம்கள் 2.2. கோடிபேர் உள்ளதாக இந்த ஆய்வறிக்கை தெரிவித்தாலும், 5 கோடிபேர் இருக்கலாம் என்கின்றன கணக்கெடுப்புகள். சீனாவிலுள்ள முஸ்லிம்கள் அமைப்பு ஒன்றுசீனாவில் 10கோடி முஸ்லிம்கள் இருப்பதாகக் குறிப்பிடுகின்றது.

சீனாவுக்கும் இஸ்லாத்திற்கும் நீண்டகாலத் தொடர்பு உண்டு. ஹிஜ்ரீ 29ஆம் ஆண்டிலேயே கலீஃபா உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் சீனாவுக்கு ஒரு குழுவை அனுப்பினார்கள். நபித்தோழர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் தலைமையில் சென்ற அக்குழுவினர்அப்போதைய சீனப்பேரரசர்வீயைச் சந்தித்து இஸ்லாமிய அழைப்பு விடுத்தனர். அவர் இஸ்லாத்தின் கொள்கைகளைக் கேட்டு வியந்துபோனார். அத்துடன் கான்தூனில் ஒரு பள்ளிவாசலை எழுப்புமாறு ஆணையிட்டார். அது 15நூற்றாண்டுகளாக சீனாவில் இஸ்லாத்தை ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறது.

சோவியத் ஒன்றியம் சிதைந்தபிறகு ரஷியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 2 கோடி ஆகும். ஆனால், 1.65 கோடி என்கிறது பியூ அறிக்கை. சுமார் 10 லட்சம் முஸ்லிம்கள் தலைநகர் மாஸ்கோவில் மட்டும் வாழ்கின்றனர். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலேயே ரஷியாவில் இஸ்லாம் அறிமுகமாகிவிட்டது. கி.பி. 642ஆம் ஆண்டில் ஆதர்பீஜானில் முஸ்லிம்களின் ஆதிக்கம் ஏற்பட்டது. 1924 புரட்சிக்குப் பிறகு முஸ்லிம்கள் பகுதிகளில் உரிமைகள் பறிக்கப்பட்டன. வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டது. பல பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டன.

இஸ்லாமிய நாடுகள் அல்லாத நாடுகளிலும் முஸ்லிம்கள் பெரிய எண்ணிக்கையில் உள்ளனர். எத்தியோப்பியா: 2.8 கோடி (மொத்த மக்களில் 34 விழுக்காடு);தான்ஸானியா: 1.3 கோடி (30 விழுக்காடு);ஐவரிகோஸ்ட்: 80 லட்சம் (37 விழுக்காடு)மொஸம்பிக்: 50 லட்சம் (23 விழுக்காடு)பிலிப்பைன்: 40.7லட்சம் (5%) ஜெர்மன்: 40 லட்சம் (5%).

எல்லாம் சரி! இவ்வளவு பெரிய வலுவான சக்தியை உலக அளவில் ஒருங்கிணைக்க யாருமில்லையே! நமது பலத்தை உலகம் அறிந்துள்ளதாநமது குரலுக்கு மரியாதை உள்ளதாஐக்கிய நாடுகள் சபையில் ‘வீட்டோ’ அதிகாரத்துடன் கூடிய நிரந்தர உறுப்பினர் பதவி பாதுகாப்பு மன்றத்தில் முஸ்லிம்களுக்கு உண்டாஅதில் ஐ.நா.வுக்கு அடுத்து பெரிய அரசு அமைப்பாக விளங்கும், 57 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இஸ்லாமிய மாநாட்டு அமைப்புக்கு ஐ.நா.வில் அங்கம் உண்டா?

கண்டங்கள் வாரியாக முஸ்லிம்கள்:


பகுதி
முஸ்லிம் எண்ணிக்கை (மில்லியனில்)
அப்பகுதியில் முஸ்லிம்களின் விழுக்காடு
உலகில் முஸ்லிம் விழுக்காடு
ஆசியா - மத்திய தரை
972.6
24.1%
61.9%
மத்திய கிழக்கு - வட ஆப்பிரிக்கா
315.3
91.2%
20.1%
ஆப்பிரிக்கா (பாலைவனம்)
240.6
30.1%
15.3%
ஐரோப்பா
38.1
5.2%
2.4%
அமெரிக்கா
4.6
0.5%
0.3%
மொத்தம்
1571.2
23%
100%

முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடுகள்:



நாடு
முஸ்லிம்களின் எண்ணிக்கை (மில்லியனில்)
நாட்டில் முஸ்லிம்கள் விழுக்காடு
இந்தோனேசியா
203
88.2%
பாகிஸ்தான்
174
96.3%
இந்தியா
161
13.4%
பங்களாதேஷ்
145
89.6%
எகிப்து
79
94.6%
நைஜீரியா
78
50.4%
ஈரான்
74
99.4%
துருக்கி
74
98%
அல்ஜீரியா
34
98%
மொராக்கோ
32
99%