Wednesday 28 March 2012

2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் தொடர்-12


2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் தொடர்-12
'
ராஜ்சிவா 

உலக அழிவு பற்றிப் பேச ஆரம்பித்த இந்தக் கணத்தில்உலக அழிவு பற்றிய ஒரு முழுமையான விளக்கத்தை நான் உங்களுக்கு கொடுக்க வேண்டும்உலகம் அழியும் என்று நான் சொல்வதாக பலர் நினைக்கின்றனர்சிலர் நான் எழுதுவதில் உள்ள நம்பகத்தன்மையை வைத்துஉலகம் அழியும் என்று தீவிரமாக நம்பி,கொஞ்சம் பயம்கொஞ்சம் பதட்டம் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றனர்சரியாக ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்2012 இல் உலகம் அழியும் அல்லது அழியாது என்னும் இருநிலைகளே தற்போது எங்கள் முன்னால் இருக்கிறதுஉலகமே இரண்டாகப் பிரிந்துஇந்த இரண்டு நிலைகளுக்கும் ஏற்ப அவற்றிற்கான ஆதாரங்களை முன்வைக்கின்றனர்இதில் ஏதாவது ஒரு முடிவைக் கொடுக்கும் நடுவராக நான் இருக்க முடியாதுஆனால் இந்த இரு நிலைகள் பற்றியும் அறிவியல் ஆதாரங்களுடன்  உங்களுடன் பகிர்பவனாக என்னுடைய பொறுப்பை நான் எடுத்துக் கொள்ளலாம்அதன் மூலம் ஒரு முடிவுக்கு வரவேண்டியது உங்கள் கையில்தான் இருக்கிறது. கடந்த தொடரில், 2012 டிசம்பர் 21ம் திகதி சூரியன்பால்வெளி மண்டலத்தின் (Milky way) மத்திய கோட்டை (Equator) அடைகிறது என்றும்கரும் பள்ளம் என்று அழைக்கப்படும் Dark rift ஐ அண்மிக்கிறது என்றும்இந்த நிகழ்வுகள் 26000வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வுகள் என்றும் சொல்லியிருந்தேன்.ஆனால் நான் சொல்லாமல் விட்டது ஒன்றும் உண்டுஅது என்ன தெரியுமா?பால்வெளி மண்டலத்தின் மையப் புள்ளியும்சூரியனும்எங்கள் பூமியும்பால்வெளி மண்டலத்தின் மத்திய கோட்டினூடாகஒரே நேர்கோட்டில்  (Alignment) வரிசையாக வருகின்றனஇந்த ஆச்சரியகரமான நிகழ்வு 21.12.2012 இல் மிகச் சரியாக நடைபெறுகிறது. இது மட்டுமல்ல 26000 வருடங்களின் ஆச்சரியங்கள்இன்னுமொன்றும் உண்டு.அதுபற்றி இப்போது  பார்க்கலாம். சின்ன வயதில் நீங்கள் பம்பரம் சுற்றி விளையாடியிருக்கிறீர்களாஅநேகமாக அந்தப் பாக்கியத்தைத் தவறவிட்டவர்கள் சினிமாவிலாவது பம்பரத்தின் பயன்களைப் பார்த்திருப்பீர்கள்பம்பரம் ஒன்றைச் சுழல விட்டால்அது தன்னைத் தானே மிகவும் வேகமாகச் சுற்றும் அல்லவாஅப்போது பம்பரத்தில் நடைபெறும் வேறு ஒரு செயலையும் நீங்கள் கவனிக்கத் தவறியிருக்க மாட்டீர்கள்அதாவது பம்பரம் சுற்றும் போதுபூமியில் தொட்டுக் கொண்டிருக்கும் கூரான பகுதி ஓரிடத்தில் நிற்கமேற்பகுதி தலையை ஆட்டியபடியே சுற்றும்அப்படித் தலையாட்டும் பம்பரத்தை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள்அதைச் சரியாகக் கவனித்திருப்பீர்கள் என்றால்அந்தத் தலையாட்டல்ஒரு கிடையான வட்டப் பாதையிலேயே இருக்கும்.
நாம் வாழும் பூமியும் 23.5 பாகையில் (degrees) சாய்ந்திருக்கும் விதமாகஒரு அச்சில் பம்பரம் போலச் சுற்றுகிறதுஅப்படிச் சுற்றும் பூமியும் ஒரு தலையாட்டலுடன்தான் சுற்றுகிறதுஇந்தத் தலையாட்டலை  'பிரிசெஸன்' (Precession) என்கிறார்கள்.
எங்கள் பூமிபம்பரம் போல மிக வேகமாகத் தலையாட்டாமல்மிக மிக மெதுவாக அந்தத் தலையாட்டலைச் செய்கிறதுபூமியின் வடபகுதிதனது அச்சில் ஒரு இடத்தில் ஆரம்பித்துவட்டப் பாதையில் இந்தத் தலையாட்டலைச் செய்து,மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கு வருகிறதுஅந்தத் தலையாட்டும் வட்டத்துக்கு எடுக்கும் காலம் எவ்வளவு தெரியுமா? 26000 வருடங்கள்என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?
இந்த 'பிரிசெஸன்' (Precession) பூச்சியப் புள்ளியில் ஆரம்பித்து, 360 பாகையினூடாகச் சுற்றி மீண்டும் பூச்சியப் புள்ளியை அடைய, 26000 வருடங்கள் எடுக்கிறதுஅதாவது ஒரு பாகை நகர, 72 வருடங்கள் எடுக்கிறதுஅவ்வளவு மெதுவான தலையாட்டல். 
 "இந்தப் பிரிசெஸனில் அப்படி என்னதான் முக்கியம் இருக்கிறது?" என்று நீங்கள் கேட்கலாம்மிகச் சரியாக 21.12.2012 அன்றுபூமி தனது பிரிசெஸனின் முழுச் சுற்றை முடித்துப் பூச்சியத்துக்கு வருகிறது என்பதுதான் இங்கு விசேசம்இந்த பூச்சிய நிலையை 'போலாரிஸ்' (Polaris) அல்லது 'போல் ஸ்டார்' (Pole Star)என்கிறார்கள். 

சரியாகக் கவனியுங்கள்......!21.12.2012 அன்றுகாலக்டிக் ஈக்வேட்டர் (Galactic Equvator) என்னும் பால்வெளி மண்டலத்தின் மத்திய ரேகையைச் சூரியன் அடைகிறதுஅதனால்பால்வெளி மண்டலத்தின் மையப் புள்ளியும்சூரியனும் 'மத்தியரேகைஎன்னும் நேர் கோட்டில் வருகின்றனஅத்துடன் எங்கள் பூமியும் அதே நேர் கோட்டில் வருகிறதுஅத்தோடு நிற்காமல்இந்தப் பிரிசெஸன் என்னும் தலையாட்டலின் பூச்சியப் புள்ளியான போலாரிஸையும்பூமி 26000 வருடங்களின் பின்னர் மிகச்சரியாக அடைகின்றது.அத்தோடு டார்க் ரிஃப்டையும் மிக அண்மிக்கிறது26000 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் மிக அற்புதமான ஒரு வானிலை வரிசையாக இதைக் கொள்ளலாம்.இப்படி எல்லாமே சேர்ந்த ஒரு நிகழ்வுஅதுவும் மாயன் சொல்லிய 26000வருடங்களில் நடைபெறுவதுஒரு தற்செயல் நிகழ்ச்சியாக இருக்கவே முடியாது.அப்படி இருக்க முடியாது என்னும் ஆச்சரியம்தான்எல்லோரும் இந்த விசயத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்துக்குக் காரணமாகிறது.இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் போதுஉலகம் அழியும் என்று நாம் ஏன் பயப்பட வேண்டும்அப்படி உலகம் அழியும் அளவிற்கு என்ன விளைவுகள் ஏற்படும்?என்பது போன்ற கேள்விகளுக்குபதில்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவாஅதைத் தெரிந்து கொள்வதற்கு, 'உலகம் அழியும்' 'உலகம் அழியும்என்கிறோமேஅப்படி ஒரு அழிவு ஏற்பட்டால்அது எப்படி ஏற்படும் என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும் அல்லவா
உலகம் அழிவது என்றால் அது இரண்டு விதத்தில்தான் அழிய முடியும்1. சூரியன் அழிவதால் ஒட்டுமொத்தமாக அதனுடன் சேர்ந்து உலகமும் அழிய வேண்டும்.  2.உலகம் மட்டுமே அழிய வேண்டும்இந்த இரண்டு சம்பவங்களுமே உலக அழிவின் அடிப்படையாகின்றதுஇங்கு இன்னுமொரு கேள்வியும் வருகிறதுஉலகம் அழிவது என்றால்மொத்தமாக உலகமே வெடித்துச் சிதறி இல்லாமல் போகுமாஅல்லது உலகம் அப்படியே இருக்கஅதில் வாழும் உயிரினங்கள் அழிந்து போகுமா
மேலே உள்ள கேள்விகளுக்கான பதில்களைபலவிதங்களில் ஆதாரபூர்வத்தோடு விளக்கி எம்மைத் தூங்கவே விடாமல் ஒரு சாரார் செய்து கொண்டிருக்கஇல்லை,இவையெல்லாம் பொய்அப்படி நடப்பதற்கு சாத்தியமே இல்லை என்று இன்னுமொரு சாரார் சொல்லிவருகின்றனர்இதில் உள்ள நகைச்சுவை என்னவென்றால்இதுவரை உலகம் அழியும் என பலமுறைகள்பல விதங்களில் சொல்லப்பட்டு வந்திருக்கின்றதுஅந்த நேரங்களிலும் அழியும்அழியாது என இரு நிலைப்பாடு இருந்ததுஆனால் அப்போதுஅவையெல்லாம் ஏதோ ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதால்நம்பிக்கைவாதிகளுக்கும்,அறிவியலாளர்களுக்குமான விவாதங்களாக அவை அமைந்தனஆனால் 2012 இல் உலகம் அழியும் என்பதில் இரண்டு பகுதிகளாகப் பிரிந்திருக்கும் இருவருமே அறிவியலாளர்கள்தான்அழியும் என்று சொல்வதும் அறிவியலாளர்கள்தான்.அழியாது என்று சொல்வதும் அறிவியலாளர்கள்தான்உண்மை இவர்கள் இருவருக்கும் இடையில் நின்று ஊசலாடிக்கொண்டு இருக்கிறது.
முதலில் மேலே சொன்ன அந்த அற்புதமான நிகழ்வு நடை பெற்றால் எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர் என்று பார்க்கலாம் 
பால்வெளி மண்டல மத்தியும்சூரியனும்பூமியும் இருக்கும் நேர் கோட்டுத் தன்மையினால்சூரியனுக்கு ஏற்படும் 'காஸ்மிக்' (Cosmic) கவர்ச்சி விளைவுகளால் உருவாகும் ஈர்ப்பு விசை மாற்றங்களால்பூமியின் அச்சுத் தடம் மாற வாய்ப்புண்டு.அதாவது இப்போது 23.5 பாகை சாய்வில்வடக்குத் தெற்காக இருக்கும் பூமியின் அச்சுஇடம்மாறி பூமியின் வடதுருவம்தென்துருவம் என வேறு ஒரு இடத்துக்கு மாறிவிடும்அதனால் இப்போது உள்ள துருவங்களின் பனி (Ice) உருகிபூமியே தண்ணீரில் மூழ்கிவிடும்இந்த விளைவுக்கு இந்தப் பிரிசெஸன் சுற்றுப் பூர்த்தியாகி போலாரிஸுக்கு வருவதுதான் காரணமாகவும் அமையலாம்அப்படி பூமியின் அச்சில் மாற்றம் ஏற்படால்சூரியக் குடும்பத்தில் உள்ள மற்றக் கோள்களுக்கோ,அல்லது சூரியனுக்கோ எந்த அழிவும் வராதுபூமியில் உள்ளவை மட்டுமே தங்கள் அழிவுகளைச் சந்திக்கும்.மேலும்பூமியின் அச்சுக்கு எதுவும் நடக்காவிட்டாலும்காஸ்மிக் கதிர்களின் அதிகபட்ச வீச்சுக்களால் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் இறந்துவிடும்.அத்துடன் மின்காந்த விளைவுகள் உடைய கதிர்களின் தாக்கத்தால் பூமியின் உள்ள மின்சாரங்களும்சாதனங்களும் தடைப்பட்டு பூமியில் எதுவுமே இயங்காமல் நின்றுவிடும்இதற்குமேலும் உலகம் எப்படி அழியும் என்று சொன்னால் இன்று நித்திரை கொள்ள முடியாமல் போய்விடும்எனவே வாராவாரம் வரிசையாக அதைப் பார்க்கலாம். எது எப்படி இருப்பினும்ஆச்சரியகரமாக மாயன்கள் சூரியனின் அழிவுபூமியின் அழிவு என இரண்டைப் பற்றியுமே மிகத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்கள்பூமி அழியும் என்னும் நம்பிக்கையை ஊட்டிஉங்களைப் பயமுறுத்துவது என் நோக்கமல்லமாயன்கள் பூமியின் அழிவு பற்றிஎன்ன சொல்லி இருக்கிறார்கள்ஏன் சொல்லி இருக்கிறார்கள்என்பதை மாயன்கள் சார்பாக விளக்குவது மட்டுமே என் நோக்கம்அழிவு வரலாம்வராமலும் போகலாம்ஆனால் மாயன்கள்உலக அழிவு பற்றிச் சொல்லி இருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.ஆனால் இவ்வளவு காலமும் அனைவரும்உலகம் அழியப் போகிறது என்று அலறிக்கொண்டிருக்கதேமே என்று இருந்து கொண்ட நாஸா (NASA) ஏனோ திடீரென விழித்துக் கொண்டதுதனது இணையத் தளம் மூலமாக உலகம் அழியாது என்பதற்கு தன்சார்பாக பல விளக்கங்களையும் அது கொடுத்துக் கொண்டிருக்கிறதுஆனால் நாஸாவின் நம்பகத்தன்மையில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்று பார்க்கும் போதுஅங்கே  தவறாக ஏதோ நெருடுவது போல இருப்பது என்னவோ உண்மை.
சமீபத்தில் மிகப்பிரபலமாகப் பேசப்பட்ட விக்கிலீக்ஸ் (Wikileaks) இன் யூலியன் அஸ்ஸாஞ்சை (Julian Assange) உங்களுக்கு தெரிந்திருக்கும்அவர் பாரதூரமான பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில் சமீபத்தில் முடக்கப்பட்டார்ஆனால் அவர் அப்படி முடக்கப்பட்டதற்கு காரணமே நாம் நினைத்துக் கொண்டிருக்கும் எதுவுமல்லவேறு மிக முக்கியமான ஒன்றுதான் அதற்குக் காரணம் என தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றனஅதற்கும் உலக அழிவுக்கும் சம்மந்தம் இருக்குமோ என இப்போது பலர் நம்புகின்றனர் 
'கேபிள்கேட்' (Cablegate) என்னும் பெயரால், 250000 அமெரிக்காவின் ராஜதந்திர அறிக்கைகளை அஸ்ஸாஞ் கணணி மூலம் கடத்தி வெளியிட்டார்அந்த அறிக்கைகளில் முக்கியமானதாக கருதப்பட்டது என்ன தெரியுமாஅயல் கிரகங்களில் இருந்து பறக்கும் தட்டுகள் (ufo) பூமிக்கு வந்திறங்கியது என்ற செய்திகள்தான்அத்துடன் இதவற்றை நாஸாவின் மூலம் ஆதாரத்துடன் அறிந்து கொண்ட அமெரிக்க அரசாங்கம்திட்டமிட்டு அனைத்தையும் மறைத்திருக்கிறது.கடந்த வருடங்களில் மட்டுமே 400க்கும் அதிகமான சம்பவங்கள் பறக்கும் தட்டுகள் பூமியில் வந்திறங்கியது சம்மந்தமான ஆதாரங்கள் அஸ்ஸாஞ் வெளியிட்ட அறிக்கைகளில் இருக்கின்றதுஅதுவும் குறிப்பாக பிரித்தானியாவில் பறக்கும் தட்டுகள்  வந்திறங்கியது தெரிவிக்கப்பட்டிருக்கிறதுஇந்த சம்பவங்களை அமெரிக்க'கார்டியன்' (The Guardian) பத்திரிக்கைக்கு சாட் (Chat) மூலம் அஸ்ஸாஞ் நேரடியாகவே தெரிவித்திருக்கிறார்இந்தச் செய்திகளை ஐரோப்பாவின் மிகமுக்கிய பத்திரிக்கைகள் எல்லாமே தலைப்புச் செய்திகளாக வெளியிட்டன. 
பறக்கும் தட்டுகள் பற்றி எப்போது அஸ்ஸாஞ் சொல்ல ஆரம்பித்தாரோஅப்போதே அவரை நோக்கி பாலியல் குற்றச்சாட்டுகளும் பறக்கும் தட்டுகள் போல பறந்துவரத் தொடங்கினஅரசுகள் அனைத்தும் அவருக்கு எதிராகினஅரசுகள் அனைத்துக்கும் மக்களுக்கு உண்மையான செய்திகள் சென்று அடைவதில் தயக்கம் இருக்கின்றது. அவற்றிற்கு பல காரணங்கள் இருக்கின்றனமக்களுக்கு அதியுயர் ஸ்தானத்தில் இருப்பவை அரசுகள்தான்அவற்றையும் விட சக்தி வாய்ந்த மனிதர்கள் வேற்று உலகில் இருக்கிறார்கள் என்று மக்களுக்குத் தெரிந்தால்அவர்கள் அரசுகளை மதிக்கமாட்டார்கள்கட்டுப்பட மாட்டார்கள்இதனால் நாடுகளின் சமநிலைகள் குளம்பிவிடலாம்எனவே அரசுகள் இப்படிப்பட்ட செய்திகள் அனைத்தையும் மக்களுக்கு சென்றடையாமல் இரகசியமாகவே பாதுகாக்கின்றனஅப்படிப் பாதுகாப்பதில் மிக முக்கியமாக இந்த இருக்கும் ஸ்தாபனங்களில் ஒன்றுதான் நாஸா. நாஸா மறைத்த மிக முக்கியமான வேறு ஒன்றும் உண்டுஅது பற்றியும் நீங்கள் தெரிந்து கொள வேண்டியது அவசியமாகிறதுஅதுகூட உலக அழிவோடு சம்மந்தப்பட்டதுதான்.அமெரிக்காவில் விண்வெளி ஆராய்ச்சிக்கென்றே அமைக்கப்பட்ட ஸ்தாபனம்தான்'நாஸா' (NASA-The National Aeronautics and Space Administration) என்பதாகும்இந்த நாஸா மூலம்தான் விண்வெளி வரலாற்றுக்குரிய 'மிகை அறிவை', மனித இனம் அதிக பட்சம் பெற்றுக் கொண்டது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.விண்வெளியை ஆராய நாஸா அனுப்பிய தொலைநோக்கிக் கருவியுடன் கூடிய,செயற்கைக் கோள்தான் 'ஹபிள்' (Hubble) ஆகும்இந்த ஹபிள் தொலை நோக்கியால் பிரபஞ்சத்தின் பல உண்மைகளையும்இரகசியங்களையும் மனிதன் அறிந்து கொண்டான்.ஆனாலும்விண்ணில் உள்ள அனைத்தையும் அறிந்து கொண்ட மனிதனுக்குஒரு தவிர்க்க முடியாத சந்தேகம் தோன்றியதுமனிதனின் சாதாரணக் கண்களால் பார்க்கக் கூடிய கோடானு கோடி நட்சத்திரங்களையும்நட்சத்திர மண்டலங்களையும் மனிதன் பார்க்கும் அதே வேளையில்மனிதக் கண்ணால் பார்க்க முடியாத ஏதாவதுவிண்வெளியில் இருக்கலாமோ என்பதுதான் அந்தச் சந்தேகம்.
விண்வெளியில் உள்ள நட்சத்திரங்கள்தமக்கென சுயமான ஒளியைக் கொண்டிருப்பதால்தொலை நோக்கிக் கருவிகள் மூலம் அவற்றைக் காணக் கூடியதாக இருக்கிறதுஆனால் ஒளியே இல்லாத கோள்கள் அப்படி அல்லஅவை இருட்டில் இருப்பதால்மனிதனால் கண்டு பிடிக்கப்படாமலே கோடிக் கணக்கில் விண்வெளியில் சுற்றித் திரிகின்றனஇப்படிப் பட்டவற்றைக் கண்டு பிடிப்பதற்கென்றே மிகுந்த செலவில்நாஸா ஒரு தொளைநோக்கிக் கருவியை கண்டுபிடித்ததுIRAS (Infrared Astronomical Satellite) என்று பெயரிடப்பட்ட அந்தத் தொலைநோக்கிக் கருவியைச் செயற்கைக் கோள் மூலம்,1983 ம் ஆண்டு தை மாதம்25ம் திகதி விண்வெளிக்கு அனுப்பியதுஇந்தத் தொலைநோக்கிக் கருவி 'இன்பிரா ரெட்' (Infra Red) என்னும் கதிர்களைச் செலுத்திவிண்ணில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத அனைத்தையும் படம்பிடித்து பூமிக்கு அனுப்பியதுநமது உடலில் 'எக்ஸ் கதிர்கள்' (X Rays) செலுத்தப்பட்டுஅது உடம்பை ஊடுருவி எலும்புகளைப் படம் பிடிப்பது போலஇந்தத் தொலைநோக்கிக் கருவியும்இன்பிரா சிவப்புக் கதிர்களைச் செலுத்தி விண்வெளியை ஆராய்ந்து படமெடுக்கிறது.
'IRAS' விண்வெளியை ஆராய்ந்த போதுதற்செயலாக கோள் ஒன்றைக் கண்டு பிடித்ததுஎமது சூரியக் குடும்பத்தின் எல்லைக்கு அப்பால்சிவப்பு நிறத்தில் ஒரு வட்ட வடிவமான கோள் போன்ற ஒன்றை அது படம் பிடித்ததுஅந்தக் கோளை மேலும் ஆராய்ந்த போதுதான் நாஸாவுக்கு அந்தப் பயங்கரம் உறைத்ததுஅதாவது அந்தக் கோள்மிகச் சரியாக எமது பூமியை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்பதுதான் அந்தப் பயங்கரம்.
'இது என்ன புதுக் கதைஎன்று அதை மேலும் மேலும் ஆராய்ந்த நாஸாதிடீரென அந்தத் தொலை நோக்கிக் கருவியை விண்ணிலிருந்து கீழே இறக்கியதுதனது ஒட்டு மொத்தத் திட்டத்தையே இடை நிறுத்தி மண்ணுக்கு வந்தது IRAS. காரணம் கேட்டால்அந்தத் தொலை நோக்கிக் கருவி பழுதடைந்து விட்டதாக ஒரு காரணத்தையும் நாஸா சொன்னது. 
இந்த விசயம் பல அறிவியலாளர்களளுக்கும்மக்களுக்கும் நாஸாவின் மேல் சந்தேகம் ஏற்படக் காரணமாக அமைந்ததுநாஸா சொன்ன காரணங்களைப் பலர் ஏற்றுக் கொள்ளவே இல்லைநாஸா எதையோ மறைக்கிறது என்ற முடிவுக்கு அவர்களை இட்டுச் சென்றது அந்தச் சந்தேகம்ஆனால் நாஸாவோ அந்தத் தொலை நோக்கிக் கருவியைப் பாதுகாக்கும் குளிர்பதன வசதி கெட்டு விட்டதாகவும்அதனால்தான் அந்த தொலை நோக்கிக் கருவி மண்ணுக்கு இறக்க வேண்டி வந்தது என்றும் சளைக்காமல் சொன்னது.உண்மையில் 'IRAS' கண்ட அந்தக் கோள்தான் என்னஅந்தக் கோளைக் கண்டவுடன் ஏன் நாஸா தனது ஆராய்ச்சியையே இடை நிறுத்தியதுஅப்படி என்னதான் அந்தக் கோளில் நாஸாவே பயப்படும்படியான பிரச்சனை உண்டுஇப்படிப்பட்ட பல கேள்விகளை பல நாட்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கேட்கத் தொடங்கினர். முடிவில் அவர்களுக்கு அதற்கான விடை கிடைத்ததுஅந்த விடை 'சுமேரியர்' (Sumerian) என்னும் மிகப் பழமை வாய்ந்த ஒரு இனத்தின் கல்வெட்டுகளிலும் கிடைத்ததுவிடை கிடைத்தாலும் அது பயங்கரமானதாகவே இருந்தது.அந்தக் கோள்தான் நவீன விஞ்ஞானிகளால் 'ப்ளானெட் எக்ஸ்' (Planet X) என்று பெயரிடப்பட்டதும்ஆதிகால மனிதர்களால் 'நிபுரு' (Niburu) என்று பெயரிட்டதுமான,பூமியில் வாழும் அனைவருக்கும் எமனாக வந்த கருஞ்சிவப்புக் கோள் ஆகும்.இந்தக் கோள் பூமியை 21.12.2012 அன்று தாக்கும் என்பதுதான் மேலதிகமாக இதில் கிடைக்கப்பட்ட பயங்கரமான செய்தியுயாகும். நிபுரு (Planet X) பற்றி மேலும் அறியஅடுத்த ாரம் வரை பொறுத்திருங்கள்.

No comments:

Post a Comment