Saturday 24 November 2012

நாக்கில் நாகரீகம்............!

வனாந்தரவாசிகளான ஆப்பிரிக்க மக்கள் அதிக செலவுகளில்லாமல் தங்களின் முகங்களில் கோடுகளாய்க் கீறியும், உதடுகளில் இரும்பு வளையங்கள் வைத்தும் விநோதமாய் காட்சியளிக்கின்றனர்.  

 

காது மற்றும் மூக்கு குத்தி தங்கமாய் அணியும் வழக்கம் நம் பெண்களிடையே!  
நவீன சந்ததியினர் இப்படி ஆரம்பித்திருக்கின்றனர்.


நாக்கில் நாகரீகம்............!

கைப்பைக்கு சிப் வைத்துத் தைப்பார்கள். கால் சட்டையில் சிப் வைத்துத் தைப்பார்கள். பிரயாணப் பகளிற்கு சிப் வைத்துத் தைப்பார்கள். ஆனால் நாக்கை இரண்டாக நறுக்கி அதில் சிப் வைத்துத் தைப்பதை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? மேலே உள்ள படத்தை மீண்டுமொருமுறை நன்றாகப் பார்துக்கொள்ளுங்கள்.


தற்போது நாகரீகம் நாக்குக்கும் தாவியுள்ளது,இறைவன் அழகாகத் தந்துள்ள இந்த நாக்கை இவர்கள் நெடுக்கு முகமாக வெட்டி அதில் சிப்வைத்துத் தைத்துக்கொண்டு பெருமையோடு வீதியெங்கும் உலா வருகின்றனர்.

இப்படி நாக்கை வெட்டி சிப்வைத்துத் தைப்பதற்கென்றே மேலைநாடுகளில் சில மருத்துவமனைகள் இருக்கின்றன.நாக்கை வெட்டிக்கொள்ள வருகின்ற பெண்கள் மிகவும் தைரியசாலிகள்.

இவர்களிற்கு மருத்துவர்கள் மயக்க ஊசி போடுவதுமில்லை. இரண்டுபேர் இருபுறமிருந்து பிடித்துக்கொள்வர்.மருத்துவர் நாக்கைப் பிடித்து வெளியே இழுத்தேடுப்பார்.பின்பு ஒரு கூர்மையான கத்தியால் நாக்கின் நடுப்பகுதியை கரகரவென்று அறுத்துவிட இரத்தம் பொங்கி வழியும்.

ஆனாலும் அப்பெண்கள் வலியைத் தாங்கிக்கொண்டு தைரியமாக அசையாமல் நிற்பார்.பிறகு வெட்டிப் பிரிக்க்கப்பட்ட நாக்கில் சிப் வைத்துத் தைத்துவிடுவார் மருத்துவர்.சில நாட்களுக்குப் பின்னர் நாக்கில் ஏற்பட்ட காயம் ஆறிவிடும்.சிப்பும்பிரச்சனையின்றி நாக்கோடு ஒத்துப்போகும். 

அப்பெண்ணும் பெருமையோடு நாயைப் போன்று நாக்கைத் தொங்கப்போட்டபடி வளைய வருவார். இதுதான் இவர்களுடைய அசிங்கமான நாகரிகமாகும்.நாக்கு நமது உடலின் உள்ள எலும்பு இல்லாத உறுப்பாகும்.நாக்கு நன்றாக இருந்தால்தான் அழகாகவும், மென்மையாகவும் பேசமுடியும்.

நாம் உண்ணும உணவை மென்று அரைப்பதற்கும் நாக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.சுவை நரம்புகளும் நாக்கில்தான் இருக்கின்றன.நாக்கு இல்லையென்றாலோ அல்லது இதுபோன்று நாக்கைச் செதப்படுத்திக் கொண்டாலோ இனிப்போ, கசப்போ ஒன்றும் விளங்காது.

இப்படிப் பலவகையிலும் பயனளிக்கும் நாவை மனிதன் இவ்வாறெல்லாம் நாசம் செய்துகொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.இதற்கு நாகரீகம் என்றும் பெயராம்.
நாக்கில் சிப் வைத்துத் தைப்பதற்குப் பதிலாக இரண்டு உதடுகளிற்கும் சிப் வைத்துத் தைத்தாலாவது ஓயாமல் பேசி உயிரை வாங்குபவர்களிடமிருந்து தப்பிக்கொள்ளலாம்.
நன்றிகள்.

தங்கம் விலை... 
இன்னும் கூடும்.

No comments:

Post a Comment