Friday 16 September 2011


அஸ்ஸலாமு அலைக்கும்
 
மலேகான் குண்டுவெடிப்பில் கைதான் 9 முஸ்லிம்களும் குற்றமற்றவர்கள் என்று தேசிய புலனாய்வு நிறுவனம் கூறியுள்ளது.  காவி சிந்தனை உடையவர்களின் தவறுகளால், இழந்த 6 வருடங்கள் திரும்ப வருமா?. ஆதாரமில்லாமல், கைது செய்தவர்களுக்கு என்ன தண்டனை? உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்களா?
 

Nine Muslim men in jail for Malegaon blasts are innocent, concludes NIA: Sources

NDTV Correspondent, Updated: September 13, 2011 08:26 IST
 
Mumbai: NDTV has learnt that the National Investigation Agency (NIA) has finally concluded that the nine Muslim men who were arrested and jailed in 2006 in connection with the Malegaon blasts are innocent.

Five years ago, these men were accused of carrying out the twin blasts as part of a plot by the outlawed Students Islamic Movement of India (SIMI). But sources have told NDTV that the investigation agency will now not oppose their bail pleas when they come up in court. Thirty one people were killed and 312 were injured in the 2006 blasts.

NDTV has also found that in a U-turn from its previous stand, the Central Bureau of Investigation (CBI) has submitted an internal report to the NIA saying only the right-wing Hindutva group activists arrested last year should be probed for the blast. In 2009, the CBI toed the Maharashtra ATS line and chargesheeted the nine Muslim men. The agency retracted in 2010, when Swami Aseemanand confessed that the blasts were the handiwork of a Hindutva group.

As a result of this error in the terror probe, these nine innocent men had to spend five years in prison. The Hindutva group, on the other hand, has not even been named in this case.
The revelation is significant as this is the first time an investigation agency has internally confirmed that the initial Malegaon arrests were wrong and is going to act to set the error right and prepare grounds to discharge them.
 

சீனாவில் 7000 அப்பாவி முஸ்லிம்கள் சிறையிலடைப்பு


சீனாவில் 7000 அப்பாவி முஸ்லிம்கள் சிறையிலடைப்பு

Chinese Muslims4
சீனாவில் 7000 அப்பாவி முஸ்லிம்கள் சிறையிலடைப்பு
·         முன்
·         1 of 2
·         அடுத்தது
அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதல்களைக் காரணம் காட்டி சீனா, ஷின்ஜியாங் பகுதியில் ஏழாயிரம் அப்பாவிப் பொதுமக்களை சீன அரசாங்கம் சிறைப்பிடித்துள்ளதாக "உலக உய்குர் காங்கிரஸ்" அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

பெரும்பான்மையாக முஸ்லிம்களைக் கொண்ட ஷின்ஜியாங் எனப்படும் இப்பிரதேசம். சீனாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு உய்குர் முஸ்லிகள் வாழ்கின்றனர்.
பின்னர், சீன அரசாங்கத்தினால் ஹான் சீன இனத்தவர் இங்கு அதிகளவில் குடியேற்றப்பட்டனர். இதனால் உய்குர் முஸ்லிம்களுக்கும் ஹான் சீன இனத்தவருக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டது.
அத்தோடு உய்குர் இன முஸ்லிம்கள் தாம் வாழும் ஷின்ஜியாங் பகுதியை தனி நாடாக பிரிக்க வேண்டும் எனக் கோரி "கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம்" என்ற அமைப்பும் துவக்கப்பட்டது. சீனா இதனை பயங்கரவாத அமைப்பு என தடை செய்துள்ளது.
இந்நிலையில் ஜேர்மனியில் செயல்பட்டு வரும் "உலக உய்குர் காங்கிரஸ்" அமைப்பின் தலைவர் ரெபியா காதீர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: உய்குர் இனத்தவர் அமைதியான முறையில் தமக்குள் நடக்கும் அரசியல்சமூககலாசார நிகழ்வுகளைக் காரணம் காட்டி இரட்டைக் கோபுர தகர்ப்ப்புக்குக் காரணம் எனக் கூறி அடக்கி வருகிறது என்றார்.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று கூறி கடந்த 10 ஆண்டுகளாக உய்குர் இனத்தவரின் கோரிக்கைகளை சீன அரசு ஏற்க மறுத்து வருகிறது. சீனாவில் அரசுக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் உய்குர் போராட்டங்களுக்கு மட்டும் அரசு "பயங்கரவாதம்" என முத்திரை குத்தியுள்ளது.

Sunday 11 September 2011

அமெரிக்காவின் மீதுள்ள எண்ணெய் வெறியே இரட்டை கோபுர தாக்குதல் நாடகம்


அமெரிக்காவின் மீதுள்ள எண்ணெய் வெறியே இரட்டை கோபுர தாக்குதல் நாடகம்

உலகின் தலைசிறந்த செய்தி நிறுவனமான பி.பி.சி., கடந்த 29-1-2001 அன்று ஒரு சிறிய செய்தியினை வெளியிட்டிருந்தது. அந்த செய்தி இந்த உலகின் மிகப் பெரிய அழிவுகளுக்கு கட்டியம் கூறும் செய்தி என்பது தெரியாமலே போனது. சுமார் 5 லட்சம் மக்கள் உயிர் உடமைகளை இழக்கவும், அடிமைப்பட்டுப் போகவும் காரணமாக அச் செய்தி இருக்கப் போகிறது என்பதை யாருமே அறியவில்லை. 2001-ல் அமெரிக்க அதிபர் புஷ் அமைத்த அமைச்சரவை பற்றிய செய்தி அது. அமெரிக்க செனட்டின் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பல கோடிகளுக்கு அதிபதிகள்; பெரும் பணக்காரர்கள்.


அதிபர் புஷ் பெட்ரோலிய கம்பெனிகள் மூலம் பல லட்சம் கோடிகளுக்கு சொந்தக்காரர். துணை அதிபர் டிக் செனாய் ஹாரிபர்ட்டன்�� எண்ணெய் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து சுமார் 5 முதல் 6 கோடி டாலர்கள் ஈட்டியவர். டாம் பிரௌன்�� என்ற எண்ணெய் கம்பெனியில் அதிபராக இருந்த டொனால்ட் இவான்ஸ் - பல கோடிகளின் அதிபதி - வர்த்தகத் துறை அமைச்சர். தேசிய பாதுகாப்பு செயலர் கொண்டலிசாரைஸ் ஹசெவ்ரான்� என்ற புகழ் பெற்ற எண்ணெய் கம்பெனியின் இயக்குநர். இவ்வாறு புஷ் அரசாங்கம் - எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம்�� ஆக உள்ளது என்று அச் செய்தியில் விமர்சிக்கப்பட்டது. 

ஒட்டு மொத்த அமைச்சர்களும் - துணை அதிபர், அதிபர் உட்பட - பெட்ரோலிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டு பல இலட்சம் கோடிகளை சம்பாதித்துக் கொண்டிருந்தவர்கள். இவர்களின் அரசு என்ன செய்யும் என யூகிக்க முடியாதா என்ன? உலகின் எந்த மூலையில் பெட்ரோல் வளம் இருந்தாலும் அங்கே படையெடுப்பதுதானே இவர்களின் குறிக்கோள்! படையெடுப்புக்கு ஏதேனும் ஒரு காரணத்தை இந்த உலகுக்கு சொல்ல வேண்டும். அப்படி சொல்லப்பட்ட வெற்றுக் காரணம்தான் பயங்கரவாதத்துக்கு எதிரான போர்�� - என்பது. 

உலகிலேயே அதிகமான பெட்ரோலிய வளம் கொண்ட நாடுகளில் இராக்கும் ஒன்று. அதேபோல் பல நாடுகளுக்கும் பெட்ரோலியத்தை குழாய்கள் வழியாக கொண்டு செல்லும் முக்கிய கேந்திரமாகவும், பெட்ரோலிய வளம் கொண்ட நாடாகவும் உள்ளது ஆப்கனிஸ்தான். இந்த இரு நாடுகள் மீதான பயங்கரவாதத்துக்கு எதிரான போர்�� செப்டம்பர் 11-ம் தேதி இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்துக்கு முன்னாலேயே திட்டமிடப்பட்டு விட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? முதலில் ஆப்கனிஸ்தான் மீதான ஆக்கிரமிப்பை காண்போம். 

கேஸ்பியன் கடல் எண்ணெக் குழாய் திட்டம் 
ஆப்கன் வழியாக குழாய்கள் பதித்து துர்க்மேனிஸ்தானிலிருந்து இயற்கை எரிவாயுவை பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்துக்கு கொண்டு செல்ல ஹஹகேஸ்பியன் கடல் எண்ணெய்க் குழாய் திட்டம்�� - உருவாக்கப்பட்டது. இத் திட்டத்திலே ஹஹஅமெரிக்க எண்ணெய் நிறுவனங்களும், பாகிஸ்தானும் மிகுந்த ஆர்வம் காட்டியதாக�� 29-12-1997-ல் பி.பி.சி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த குழாய் திட்டத்தை நிர்மாணிக்க ஹஹசென்ட்கேஸ்�� என்ற அமைப்பு 1997-ல் உருவாக்கப்பட்டது. சென்ட்கேஸ் அமைப்பின் முக்கிய பங்குதாரராக சுமார் 46.5 சதவிகிதம் பங்குகளை கொண்ட ஹயூனோகால்� என்ற அமெரிக்க எண்ணெய் கம்பெனி இருந்தது. இந்த கம்பெனியின் இயக்குநராக இருந்தவர் டாக்டர் ரைஸ். இவர் அதிபர் புஷ் நிர்வாகத்தில் வான்படை செயலராக பதவி வகித்தவர். அதற்கு முன்னர் அமெரிக்க ராணுவத்தில் துணை இயக்குநராக பணியாற்றியவர்.. 

அமெரிக்க ஆதரவு அரசு 
இந்த எரிவாயு குழாய் திட்டத்திற்கு எதிர்ப்பு ஏதும் காட்டாமல் துணை நிற்க வேண்டும் என்பதற்காக தாலிபான் அமைப்புக்கு இந்த யூனோகால்� நிறுவனம் வருடம் ஒன்றுக்கு சுமார் நூறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை கொடுக்க முன் வந்துள்ளது. 1998-ல் அமெரிக்கா வெளிப்படையாக தன் எண்ணத்தை வெளியிட ஆரம்பித்தது. ஆப்கனில் அமெரிக்க ஆதரவு அரசு இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. 12-2-1998-ல் நடைபெற்ற அமெரிக்க அரசின் வெளிநாட்டுக் கொள்கைக்கான கமிட்டியின்�� கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளி யிடப்பட்டது. அது- யூனோகால்�� - எரிவாயு குழாய் திட்டம் உட்பட பல்வேறு எண்ணெய் குழாய் திட்டங்களை அமெரிக்க அரசு ஆதரிக்கிறது. ஆனால், குழாய் வரும் வழியில் உள்ள நாடான ஆப்கனிஸ்தானில் தற்போதுள்ள அரசாங்கத்தை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை. ஆனால் குழாய் திட்டத்தை ஆதரிக்கிறோம்��. 

ஹஹஇந்த குழாய் திட்டத்துக்கான சாத்தியப்பட்ட ஒரே வழி ஆப்கனிஸ்தான் வழியாக வருவதுதான். ஆனால், ஆப்கனிஸ்தானில் நமக்கு சவால்கள் காத்திருக்கின்றன��. 

ஹஹசர்வதேச சமூகம் ஒத்துக் கொள்ளும் ஒரு அரசு ஆப்கனில் அமையும் வரை ஹசென்ட்கேஸ்� நிறுவனம் கட்டுமானங்களை துவக்க முடியாது�� - என குறிப்பாக ஆப்கனில் உள்ள அரசை நீக்கிவிட்டு புதிய அமெரிக்க ஆதரவு - பொம்மை அரசை நிறுவ வேண்டிய அவசியத்தை முன் வைக்கிறது. 

1998 நவம்பர் 3-ம் தேதி பி.பி.சி. செய்தி நிறுவனம் ஒரு செய்தியை வெளியிட்டது. அமெரிக்க எண்ணெய் நிறுவனமான ஹயூனோகால்� நிதியுதவிடன் ஆப்கனில் ஒரு பயிற்சித் திட்டம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. 3-11-98 அன்று அமெரிக்காவின் ராணுவம் 80-க்கும் அதிகமான ஏவுகணைகளை ஆப்கனிஸ்தான் மீதும் சூடான் மீதும் ஏவியது. இந்த ஏவுகணைத் தாக்குதல்களால் யூனோகால்�� நடத்தி வந்த பயிற்சி திட்டம் மூடப்பட்டது. இந்த ��யூனோகால்�� நிறுவனம்தான் துர்க்மேனிஸ்தானிலிருந்து, பாகிஸ்தானுக்கு, ஆப்கன் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த இருந்த நிறுவனம்�� . இதுதான் அந்த செய்தி. 

அமெரிக்கா தன் தாக்குதலை 1998லேயே தொடங்கி விட்டது. தொடர்ந்து 2-1-1999 அன்று ஆப்கனில் உசாமா பின்லேடனின் அமைப்பினர் தங்கியுள்ள முகாம்களின் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி குண்டு மழை பொழிந்தது. 15-3-2001-ல் ரஷ்யா, அமெரிக்கா ஈரானுடன் இந்தியாவும் இணைந்து கொண்டது. ஆப்கனின் தாலிபான் அரசை வீழ்த்துவதுதான் இந்த நாடுகளின் உடனடி திட்டம். இந்த நான்கு நாடுகளும் இணைந்து செயல்பட்டதாலேயே ராணுவ நடவடிக்கைகளின் முக்கிய கேந்திரமான பாமியன் நகரை கைப்பற்ற முடிந்தது என டெல்லி ராணுவ வட்டாரங்கள் பெருமிதப்பட்டதாக செய்திகள் வெளியாயின. ஊடகங்கள் வெளிப்படுத்திய உண்மை 

2001 செப்டம்பர் 3-ம் தேதியே பி.பி.சி. செய்தி நிறுவனம் ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் மத்திய கிழக்கு பகுதிக்கு, இங்கிலாந்தின் ராணுவமும், போர்க் கப்பல்களும் விரைவதாக செய்தி சொன்னது. 24 போர்க் கப்பல்கள், இரண்டு அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்கள்�� எச்.எம்.எஸ். இல்லஸ்ரியஸ்�� என்ற விமானம் தாங்கி போர்க் கப்பலின் தலைமையிலே இங்கிலாந்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகக்கு விரைகிறது. கிறிஸ்துமஸ் விழாவிற்கு முன்னதாக மிகப் பெரும் பேரழிவு நடவடிக்கைகளை இந்த ஆபரேஷன் மேற்கொள்ளும். இதனால் சுமார் 100 மில்லியன் பவுண்டுகள் அரசுக்கு செலவாகும்�� என அச் செய்தி கூறியது. சரியாக ஒரு வாரத்தில் (செப்டம்பர் 11) இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது. அமெரிக்கா ஹஹபயங்கரவாதத்துக்கு எதிரான போர்�� - பிரகடனம் செய்தது. உடனடியாக ஆப்கனில் நுழைந்த அமெரிக்க ராணுவம் தாலிபன் அரசை தூக்கி எறிந்தது. ஹஹசர்வதேச சமூகம் ஒப்புக் கொள்ளும் அரசை� நிறுவியது. இடைக்கால அரசு ஹமீத் கார்சாய் தலைமையிலே நிறுவப்பட்டது. இந்த ஹமீத் கர்சாய் ஹஹயூனோகால்�ஹ எண்ணெய் நிறுவனத்தின் ஆலோசகராக இருந்தவர். ஹஹயூனோகால்�� சார்பாக தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர். இந்த ஹஹயூனோகால்�� நிறுவனம்தான் ஆப்கனில் எரிவாயு குழாய் திட்டத்தை நடைமுறைப்படுத்த இருந்தவர்கள். இப்போது அந்த நிறுவனத்தின் ஆலோசகரே ஆப்கனின் அதிபராக அமர்த்தப்பட்டு விட்டார். ஆப்கனில் எரிவாயு மற்றும் எண்ணெய் குழாய்களை பதிக்கும் அமெரிக்கா எண்ணெய் நிறுவனங்களின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்த அரசை தூக்கி எறிந்து விட்டு, அமெரிக்காவின் பொம்மை அரசை நிறுவுவதற்காகவே ஆப்கன் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர் நடந்தது என்பதற்கு இதைவிட சான்று ஏதும் தேவையா? ஆப்கன் ஆக்கிரமிப்பு 12-2-1998லேயே திட்டமிடப்பட்டு, சிறிது சிறிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டே இருந்தது. 11-9-2001 இரட்டை கோபுர தாக்குதலும், பயங்கரவாதத்துக்கு எதிரான போரும்�� வெறும் பம்மாத்துகளே என்பதை உலகமே அறியும். 

முன்னரே திட்டமிடப்பட்டது 
அடுத்ததாக ஈராக் ஆக்கிரமிப்பு. இரட்டை கோபுர தாக்குதலுக்கு 6 மாதங்களுக்கு முன்னரே ஈராக் ஆக்கிரமிப்பு போரை அமெரிக்கா திட்டமிட்டு விட்டது. 2001 ஏப்ரலில் நடந்த அதிபர் புஷ்ஷின் அமைச்சரவை, ஹஹசர்வதேச சந்தையிலே எண்ணெய் வரத்து நிலைகுலைவதற்கு ஈராக் எண்ணெய் சப்ளை காரணமாக இருக்கிறது. இது அமெரிக்காவின் நலன்களுக்கு எதிரானது. எனவே, ராணுவ நடவடிக்கை உடனடித்தேவை�� - என தீர்மானித்தது. இதை சண்டே ஹெரால்டு என்னும் இங்கிலாந்து செய்திப் பத்திரிகை 6-10-2002-ல் அம்பலப்படுத்தியது. 

ஹபயங்கரவாதத்துக்கு எதிரான போர்� பேரழிவு ஆயுதங்கள், இரட்டை கோபுர தாக்குதல், ஐ.நா.வின் பேரழிவு ஆயுத ஆய்வு, இராக்கிய மக்களின் மனித உரிமை மீறல் - இவை எதுவும் ஈராக் மீதான போருக்கு காரணமே அல்ல. புஷ்ஷின் தேர்தல் பிரச்சாரத்தின்போது பல ஆயிரம் கோடிகளை கொட்டிக் கொடுத்த எண்ணெய் கம்பெனிகள் மற்றும் புஷ்ஷின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த எண்ணெய் கம்பெனி அதிபர்கள் விருப்பத்துக்கு இணங்கவே ஈராக் மீதான ஆக்கிரமிப்பு போர் துவங்கியது. 2002 செப்டம்பர் 12-ல் அமெரிக்க அதிபர் புஷ், ஐ.நா.வுக்கு சொன்னது, ஹஹஈராக் தன்னிடமுள்ள பேரழிவு ஆயுதங்களை அழிக்கவோ, அகற்றவோ, வெளிப்படையாக எடுத்துக் காட்டவோ மறுத்தால் அமெரிக்கா தாக்கியே தீரும்��. ஆனால் ஈராக் தன்னிடம் அப்படிப்பட்ட பேரழிவு ஆயுதங்கள் எதுவுமே இல்லை என தொடர்ந்து மறுத்து வந்தது. 

1998-ல் ஐ.நா.வின் ஆயுத ஆய்வுக்குழுவில் பணியாற்றி பின்னர் பதவி விலகிய ஸ்காட் ரிட்டர் 2002 செப்டம்பர் 8-ம் தேதியே ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் எதுவுமே இல்லை என்றும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் குற்றச்சாட்டுகளில் கொஞ்சம்கூட உண்மையே இல்லை என்றும், குறிப்பாக ஈராக் இரட்டை கோபுரங்களை தகர்த்த சக்திகளுக்கு எதிராக நிற்கிறது என்றும், ஈராக்கிய பாராளுமன்றத்திலே உரை நிகழ்த்தினார். 

ஆனாலும், அமெரிக்காவும், இங்கிலாந்தும் கூட்டு சேர்ந்து ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரை தொடர முடிவு செய்து விட்டன. மிகப் பெரிய எண்ணெய் கம்பெனிகளும், ஆயுத தளவாடங்கள் உற்பத்தி செய்யும் கம்பெனிகளும் இதன் பின்புலமாக நின்றனர். காரணம் ஈராக் உலகிலேயே இரண்டாவது பெரிய எண்ணெய் வளம் கொண்ட நாடு என்பதால், அதை முழுக்க முழுக்க தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்பதுதான். மேலும் போர் என ஆரம்பித்து விட்டால், அண்டை நாடுகள் மற்றும் அந்த பிராந்தியம் முழுவதமே போர் பதற்றம் நிலவும். அதனால் பல இலட்சம் கோடிகளில் ஆயுத வியாபாரமும் செழிப்பாக நடக்கும் என்பதுதான் இரண்டாவது காரணம். 

அமெரிக்காவின் எரிசக்தி துறை 1999-ல் ஒரு மதிப்பீட்டை செய்தது. ஹஹஈராக் தன்வசம் 112 பில்லியன் ( 1 பில்லியன் என்பது 100 கோடி) பேரல்கள் பெட்ரோலும், 110 டிரில்லியன் (1 டிரில்லியன் என்பது 1 லட்சம் கோடி) கனஅடி எரிவாயுவும் வைத்துள்ளது. உலக அளவிலே எண்ணெய் வளத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ள ஈராக் சர்வதேச எண்ணெய் மார்க்கெட்டிலே ஒரு தீர்மானகரமான சக்தி�� என அறிக்கை அளித்தது. 

ஹஹஅதிபர் புஷ் ஈராக் சம்பந்தமாக என்ன முடிவு செய்தாலும் சரியே. அது அமெரிக்காவின் எரிசக்தி துறையை பிரகாசமாக மாற்றுவதாகவே இருக்கும்�� என்றார். வௌ;ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ செய்திதொடர்பாளர் ஆரி பிளசர். 

அமெரிக்க இராணுவப் போரின் போது அழிக்கப்படும் ஆபத்து உள்ள எண்ணெய் கிணறுகளை முதலில் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து பாதுகாக்க வேண்டும் என வெளியுறவுக்கான கவுன்சில் அமெரிக்க அரசுக்கு டிசம்பர் 2002-ல் பரிந்துரை செய்தது. 

2001 ஜனவரியில் அதிபர் புஷ் பதவியேற்ற 10 நாட்களுக்குள்ளாகவே ஈராக்கின் சதாம் உசேன் அரசை தூக்கியெறிவதற்கான வழிவகைகளை வகுக்குமாறு தன் சகாக்களுக்கு உத்தரவிட்டார். ஹஹசதாம் வீழ்த்தப்பட்ட பிறகான ஈராக்�� என்று பெயரிடப்பட்ட திட்டம் 2001 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஆலோசிக்கப்பட்டது. அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகனின் ஹஹஈராக் எண்ணெய் வயல்களுக்கான ஒப்பந்ததாரர்கள் பட்டியல்�� ஈராக்கில் வளமான எண்ணெய் வயல்கள் இருக்கும் வரைபடத்தை உள்ளடக்கியதாக 5-3-2001-ல் தயாரிக்கப்பட்டது. 

சண்டே ஹெரால்டு செய்தி 
ஹசண்டே ஹெரால்ட்� என்ற செய்தித்தாள் 6-10-2002-ல் ஹஹமேற்குலகின் எண்ணெய்க்கான போர்�� என்ற தலைப்பில் ஹஹசெப்டம்பர் 11-க்கு முன்னமே ஈராக்கின் எண்ணெய் வளங்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் திட்டத்துடன் ஈராக் மீதான தாக்குதலுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டிருந்தது�� என எழுதியது. 

29-1-2001 பி.பி.சி. செய்தி நிறுவனம் வெளியிட்ட ஹஹஎண்ணெயும் புஷ் நிர்வாகமும்�� என்ற செய்தியில், ஹஹஇதற்கு முன்பிருந்த அரபுகளுக்கும் புஷ் தலைமையிலான அமைச்சரவைக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் இவர்களில் பெரும்பான்மையினர் எண்ணெய் கம்பெனிகளுடன் வியாபார தொடர்புள்ளவர்கள்�� - எனக் கூறியது. அதே பி.பி.சி. 

18-01-2001-ல் ஹஹபுஷ் எண்ணெய் வர்த்தகத்தில் மிக நெருக்கமான நீண்ட கால உறவை வைத்துள்ளனர். அவர் மட்டுமல்ல. அவர் அமைச்சரவையில் பலர் அப்படித்தான் உள்ளனர். இவர்களின் தேர்தல் பிரச்சாரத்தின் போது எண்ணெய் நிறுவனங்கள் மறைமுகமாக பல்லாயிரம் கோடி நிதியுதவி செய்துள்ளன�� என செய்தி வெளியிட்டது. 

இந்த பின்னணியிலேதான் அதிபர் புஷ், ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள், இரசாயன ஆயுதங்கள், உயிர்க்கொல்லி, நச்சுக்கிருமி ஆயுதங்கள் பெருமளவில் குவித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை ஈராக் ஒப்படைக்காவிடில் தாக்குதல் தொடுக்கப்படும் என்றும் அறிவிக்கிறார். அமெரிக்காவும், இங்கிலாந்தும் சர்வதேச சட்டங்கள், விதிகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு ஆக்கிரமிப்புப் போருக்கு தயாராகின. 

அடாவடி நடவடிக்கை 
இங்கிலாந்தின் அட்டர்னி ஜெனரல் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் இருவரும் இந்த தாக்குதல் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேய்ரை எச்சரித்தனர். 

ஈராக்கின் அமைச்சரவையிலேயே தனக்கு உளவு சொல்லும் ஒருவரை அமெரிக்க உளவு நிறுவனம் சி.ஐ.ஏ. வைத்திருந்தது. அவரை தொடர்பு கொண்டு சி.ஐ.ஏ. உளவுத் தகவல் சேகரித்தது. அத்துடன் ஈராக் வந்திறங்கிய சி.ஐ.ஏ. உளவாளிகள் ஈராக்கின் ஹஹபேரழிவு ஆயுதங்கள்�� குறித்த தகவல்களை மும்முரமாக சேகரித்தனர். இறுதியில் சி.ஐ.ஏ. வின் தலைவர் ஜார்ஜ் டெனட் ஈராக்கின் வசம் பேரழிவு ஆயுதங்கள் எதுவுமே இல்லையென அமெரிக்க அரசுக்கு தகவல் அளித்தார். சி.ஐ.ஏ.வும், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனமும் இணைந்து ஈராக் மேற்குலகிற்கு ஒரு பயமுறுத்தல் அல்ல என்றும், அதனிடம் எவ்வித பேரழிவு ஆயுதமும் இல்லை என்றும், அதி காரப் பூர்வமாக அறிவித்தன. மேலும், ஈராக் மீது தாக்குதல் தொடுப்பது அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு கேடாக முடியும் எனவும் சி.ஐ.ஏ. எச்சரித்தது. 

ஆனால், துணை அதிபர் டிக்செனாய் மற்றும் ராணுவ அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் இருவரும் சி.ஐ.ஏ. உளவு நிறுவனத்தை ஓரங்கட்டினர். ராணுவத்தின் துணை அமைச்சர் பால் உல்ப்ஹோவிட்ஸ் மேற்பார்வையில் டக்ளஸ்பைத் தலைமையில் சிறப்பு திட்டக் குழுவை உருவாக்கினர். இந்த குழு உளவுத் தகவல்கள் என்ற பெயரில் தாக்குதலுக்கு சாதகமான விஷயங்களை செனட்டுக்கும், அமைச்சரவைக்கும் அளித்தது. சில தகவல்களை வேண்டுமென்றே ஊடகங்களுக்கு கசிய விட்டது. இதன் மூலம் தாக்குதல் தொடுக்க வேண்டியது நியாயமே என்ற பொதுக் கருத்தை திட்டமிட்டு உருவாக்கியது. 

கடைசியாக 20-03-2003-ல் அமெரிக்க ராணுவம் அதி 
காரப் பூர்வமான ஈராக் மீதான ஆக்கிரமிப்பு தாக்குதலை ஆரம்பித்து விட்டது. 1-5-2003-ல் சதாம் அரசு தூக்கியெறியப்பட்டு ஈராக் முழுவதுமாக கைப்பற்றப்பட்டு விட்டதாக அறிவித்தது. இராக்கின் அதிகாரப்பூர்வ ராணுவமும் கலைக்கப்பட்டது. சதாமின் மகன்கள் உத்தய் மற்றும் குசாய் இருவரும் 22-6-03-ல் படுகொலை செய்யப்பட்டனர். சதாம் உசேன் 14-2-2003-ல் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஒரு வருடம் தேடியும் அமெரிக்கா சொன்ன பேரழிவு ஆயுதங்கள் எதுவுமே ஈராக்கில் இல்லை என்பதால் அவற்றை தேடும் திட்டம் 24-1-2004-ல் நிறுத்தப்பட்டது. 

உலகின் இயற்கை எரிவாயுவில் மொத்தம் 40 சதவீதத்தை தன்னகத்தே வைத்திருக்கும் ஈரான்- அமெரிக்காவின் அடுத்த குறி. ஈரான் பேரழிவு ஆயுதமான அணு ஆயுதம் தயாரிப்பதாக அமெரிக்கா பிலாக்கனம் பாட ஆரம்பித்து விட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா ஏராளமான படைகளையும், ஆயுதங்களையும் ஏற்கனவே குவித்து வைத்துள்ளது. ஈரானின் இருபுற எல்லைகளான ஈராக்கும், ஆப்கனும் தற்போது அமெரிக்காவின் பிடியில். 

இன்னுமொரு ஆக்கிரமிப்பு யுத்தத்துக்கான அடித்தளம் போடப்பட்டு விட்டது. கூடிய விரை வில் ஒரு ஹஹபயங்கர வாத எதிர்ப்பு போர்�� அல்லது ஹஹபேரழிவு அணு ஆயுத எதிர்ப்பு போர்�� என அமெரிக்கா பரணி பாடும். கொலைக்கார கூட்டத்தின் குரல் வளையை நெறிக்கும் வரை அதன் வெறியாட்டம் ஓயாது. என்ன செய்யப் போகிறோம்??? 

எகிப்தில் இஸ்ரேல் தூதரகம் தகர்ப்பு: அவசரநிலை பிரகடனம்!



எகிப்தில் இஸ்ரேல் தூதரகம் தகர்ப்பு: அவசரநிலை பிரகடனம்!

எகிப்து தலைநகர் கெய்ரோவிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தைப் பொதுமக்கள் அடித்துத் தகர்த்தனர். இதனைத் தொடர்ந்து கலவரம் ஏற்பட்டத்தையடுத்து, எகிப்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் இஸ்ரேலின் தூதரக அலுவலகம் உள்ளது. ஹோஸ்னி முபாரக் அதிபராக இருந்தவரை இஸ்ரேலுக்கும், எகிப்துக்கும் இடையே நல்லுறவு இருந்து வந்தது. முபாரக்கிற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இஸ்ரேலுடனான உறவுக்கு எதிராக பொதுமக்கள் அவ்வபோது கிளர்ச்சி செய்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் எகிப்து ஆயுத குழுக்களுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதில் எகிப்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். இது எகிப்து மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது.   நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை முடிந்ததும் ஆயிரக்கணக்கான மக்கள் கெய்ரோவிலுள்ள சுதந்திர மைதானத்தில் திரண்டு அரசியல் சீர்திருத்தம், இஸ்ரேலுடனான உறவு முறித்தல் போன்ற கோரிக்கைகளை விடுத்தனர்.

அவர்களின் போராட்டம் சிறிதுநேரத்திலேயே இஸ்ரேலுக்கு எதிரான கோபத்தைக் கட்டவிழ்த்துவிட்டது. பக்கத்திலிருந்த இஸ்ரேல் தூதரகத்துக்குச் சென்ற பொதுமக்கள், அங்கு புகுந்துத் தாக்குதல் நடத்தினர். தூதரக அலுவலகத்தின் கட்டிடடம் இடிக்கப்பட்டது. தூதரகத்திலிருந்த 6 பணியாளர்களைப் பொதுமக்கள் சிறை வைத்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க முற்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் காவல்துறையினரையும் தாக்கினர். தூதரக அலுவலகத்துக்குத் தீவைக்கப்பட்டது.

கலவரத்தை க்கட்டுப்படுத்த முடியாததால் நூற்றுக் கணக்கான அதிரடி கமாண்டோ ராணுவ வீரர்கள் சுதந்திர மைதானத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் 6 இஸ்ரேலிய பாதுகாவலர்களையும், தூதரக அலுவலர்களையும் மீட்டனர். அதைத் தொடர்ந்து தூதர் யிட்சாக் தனது குடும்பத்தினர் மற்றும் 80-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் ஊழியர்களுடன் வெள்ளிக்கிழமை இரவே விமானம் மூலம் இஸ்ரேல் திரும்பினார். 

இஸ்ரேலுக்கு எதிரான மக்களின் கோபம் நேற்றும் தொடர்ந்தது. நேற்று நடந்த கலவரத்தில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்தக் கலவரம் தொடர்பாக இதுவரை 19 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று இரவு வரை கலவரம் தொடர்ந்து நடந்தது. 

இதனால் கெய்ரோ நகரில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகள் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். "இது மோசமான சம்பவம்" என்று கூறியுள்ளார். இதற்கிடையில் "இஸ்ரேல் தூதரகத்துக்கு எகிப்து பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.

அரபு நாடுகளில் ஜோர்டானுக்கு அடுத்தபடியாக இஸ்ரேலுடன் அரசாங்கரீதியாக நெருக்கமும் நட்புறவும் கொண்டுள்ள நாடு எகிப்து என்பது குறிப்பிடத்தக்கது. எகிப்தில் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக எழுந்த மக்கள் எழுச்சியின் அடிப்படை காரணங்களுள் ஒன்று, இஸ்ரேலுடனான ஹோஸ்னி முபாரக்கின் நெருங்கிய உறவு என்று கூறப்படுகிறது. எகிப்தும் இஸ்ரேலுடனான உறவை முறித்துக்கொண்டால், அது இஸ்ரேலுக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும் எனக்கருதப்படுகிறது.

அத்வானி ரத யாத்திரைக்கு எதிராக அன்னா ஹஸாரே குழு!


அத்வானி ரத யாத்திரைக்கு எதிராக அன்னா ஹஸாரே குழு!

E-mailஅச்செடுக்க
ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் ரத யாத்திரை நடத்தப்போவதாக அறிவித்துள்ள பாஜக மூத்தத் தலைவர் அத்வானிக்கு எதிராக அன்னா ஹஸாரே குழுவிலுள்ள கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் ரத யாத்திரை நடத்தப்போவதாக பாஜக மூத்தத் தலைவர் அத்வானி அறிவித்திருந்தார். அவரின் இந்த யாத்திரை குறித்து ஊழலுக்கு எதிராக கடுமையான லோக்பால் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையுடைய அன்னா ஹஸாரே குழுவிலுள்ள கிரண்பேடியிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்,

"தற்போது லோக்பால் சட்டம்தான் வேண்டும்; ரத யாத்திரைகள் அல்ல. எங்களுக்கு மறைமுக திட்டங்கள் ஏதும் கிடையாது." என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியினைச் சேர்ந்த முன்னாள் சட்டத்துறை அமைச்சரான வீரப்ப மொய்லி இதுகுறித்துக் கூறும்போது, "அத்வானி மேற்கொண்ட முதல் ரத யாத்திரக்கே இன்னும் இந்த நாடு அதற்கான விலையைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அவருடைய கடந்த யாத்திரைகள் எல்லாம் மத ரீதியான பதற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. அதன் மூலம் பலர் மரணமடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்னொரு யாத்திரை தேவையா?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களின் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ஊழலுக்கு எதிராக பாஜக தலைவர் அத்வானி மேற்கொள்ள இருக்கும் ரத யாத்திரை பற்றி குறிப்பிட்டு, "இந்த அரசியல் சவாலை முறியடிக்க அனைவரும் தயாராகுங்கள்" என காங்கிரசாருக்கு அழைப்பு விடுத்தார்.

ஊழலுக்கு எதிராக அத்வானி மேற்கொள்ள இருக்கின்ற ரத யாத்திரைக்கு எதிராக பல்வேறு மட்டங்களில் எதிர்ப்புக்குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.

அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை இடித்தது அமெரிக்காவே


அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை இடித்தது அமெரிக்காவே


இரட்டை கோபுரத்தை இடித்தது யார் என்று கேட்டால் அனைவரும் சொல்வது ஒசாமா பின்லேடன். ஒரு வீட்டை இடிப்பதற்க்கே 20லிருந்து 30 நபர்கள் தேவைப்படும்போது, உலகத்திலேயே மிக உயர்ந்த கட்டிடம் என்று பெயர் பெற்ற ஒரு கட்டிடத்தை ஒரு தனி மனிதனால் இடித்து தரை மட்டமாக்க முடியுமா? முடியாது என்பதே பலரின் பதில். இரட்டை கோபுரத்தை இடித்ததில் தனி ஒரு மனிதனின் பெயரை குறிப்பிடுவதை விட அதை செய்தது ஒரு கூட்டம் என்று சொல்வதே சரியானது.

அப்படியானால் இரட்டை கோபுரத்தை இடித்தது எந்த கூட்டம்? அலசுவோம் வாருங்கள்...

இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட நிகழ்விற்க்குப் பிறகு நடந்த சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தோமேயானால், இடித்தது எந்த கூட்டம் என்ற முடிவுக்கு வரலாம்: இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதில் பலருக்கும் பல சந்தேகம் உள்ளது.

அமெரிக்காவில் உள்ள 75 பேராசிரியர்கள் (PROFESSOR) இந்த சம்பவம் அமெரிக்காவின் உள்வேளை(PROFESSOR) என்றார்கள். ஸ்டீவ் ஜோன் என்ற (PROFESSOR) கூறுகிறார்: 19 நபர்கள் சேர்ந்து இவ்வளவு பெரிய காரியத்தை செய்ய சாத்தியம் இல்லை. இரட்டை கோபுரத்தில் உள்ள இரும்பு தூணானது ஜெட் பெட்ரோலினால் எதுவும் ஆகாது. அதுவும் இரட்டை கோபுரம் சரிந்ததை பார்த்தோமேயானால், அங்கே வெடிகுண்டு உபயோகப்படுத்தப்பட்டுள்ளதை அறியலாம். அவ்வாறு சொன்னதால் அவர் வேளை நீக்கம் செய்யப்பட்டார்.

இரட்டை கோபுரத்தின் தூண்கள் அதிக வலிமையுடன் கட்டப்பட்டது. அதனை விமானத்தின் பெட்ரோலால் எரிக்க முடியுமா என்றால், அது முடியாது என்பதுதான் பதில். விமானத்தின் பெட்ரோல் 1000 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உள்ளது. இரட்டை கோபுரத்தின் தூண்களை 2000 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தால் கூட எரிக்க முடியாது என்று அமெரிக்க நாட்டின் இரட்டை கோபுரத்தை கட்டிய கம்பெனி கூறியது. 10 நாட்கள் பிறகு, விமானத்தின் பெட்ரோல் இரட்டை கோபுரத்தின் தூண்களை எறிக்கும் என்றது. இவர்கள் யாரை ஏமாற்றுகிறார்கள்?

விமானம் வளைந்த விதத்தை பற்றி விமான ஓட்டுனர் பலரிடும் கேட்டால், பயணிகள் விமானத்தை அவ்வாறு வளைப்பது சாத்தியமற்றது. ராணுவ விமானத்தை மட்டும் அவ்வாறு வளைக்க முடியும் என்கிறார்கள், என்பார்கள். (இதை யூத விமானியிடம் கேட்க கூடாது)

அடுத்து அவர்கள் சொல்லகூடிய முக்கிய தடையம் போன். பயணிகள் சிலர் தாங்கள் கடத்தப்பட்டுள்ளதை(!) வீட்டிற்கு தெரியப்படுத்துகிறார்கள். ஒரு போன், அம்மா! நான்தான் மார்க் பீகம். அம்மா! நான் பேசுவது கேட்கிறதா? அம்மா!.. அம்மா!.. (mom I am mark beegham. Can you hear me. Mao! Mom!.) மொபைல் துறையில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களிடம் சென்று கேளுங்கள், 32000 அடி உயரத்தில் மொபைலில் எத்தனை % நெட்வர்க் கிடைக்கும் என்று. நன்றாக தெரிந்துக்கொள்ளுங்கள்: 4000 அடியில் .04 % நெட்வர்க்தான் கிடைக்கும். 8000 அடியில் .01% நெட்வர்க்தான் கிடைக்கும். 32000 அடியில் .006% நெட்வர்க்தான் கிடைக்கும். நன்றாக சிந்தியுங்கள் சகோதரர்களே! 0% என்றால் நெட்வர்க்கே கிடைக்காது, .006% என்றால்?

விமானம் விபத்துக்குன்டானால் முக்கிய தடையமாக கருதுவது அதன் கருப்புப்பெட்டி. ஒவ்வொரு விமானத்திலும் 2 கருப்புப்பெட்டி இருக்கும். கருப்புப்பெட்டியானது 3000 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்திலும் எதுவும் ஆகாது. அவ்வாறு இருக்க 1000 டிகிரி சென்டிகிரேட்-ல் கருப்புப்பெட்டி அழிந்து விட்டது என்று கூறுவது எவ்வளவு பெரிய பொய்.

இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு 2 நாட்களுக்குப் பிறகு வும்ம என்ற பத்திரிக்கைக்கு ஒசாமா பின்லேடன் அழித்த பேட்டியில் குழந்தைகளையும், பெண்களையும், அப்பாவிகளையும் கொள்வது இஸ்லாம் தடை செய்துள்ளது என்றார். இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு ஒசாமா பின்லேடன்தான் காரணம் என்று காட்டிய ஊடகங்கள், அவர் அழித்த பேட்டியை காண்பித்ததா?. அல்-ஜஸிரா ஊடகத்தை தவிர.

ஒசாமா பின்லேடன் மீது அநியாயமாக பழியைப்போட்டது, ஆப்கானிஸ்தானில் உள்ள பெட்ரோல் வளத்தை கைப்பற்றவே அன்றி வேறு காரணமில்லை.

இப்பொழுது சொல்லுங்கள்! இரட்டை கோபுரத்தை இடித்தது யார்?

Source from: www.ibujdesign.com

கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு


கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு


கோலா குளிர்பானங்களை பருகுவோர் எண்ணிக்கை உலகளவில் அதிகம். கோடிக் கணக்கான லிட்டர் கோலா பானங்கள் ஆண்டுதோறும் பருகப்படுகின்றன. இது போன்ற பானங்கள் இன்றி, உயிர் வாழ முடியாது என்றே கூட பலர் நினைக்கின்றனர். கோககோலா, பெப்சி, லிம்கா போன்றவை, பட்டி தொட்டிகளில் கூட கிடைக்கின்றன. சூப்பர் மார்க்கெட்டுகளில், கோலா பானங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை பருக, சினிமா நட்சத்திரங்களும் ஊக்குவிக் கின்றனர். கோலா பானங்களில் உள்ள ஆபத்தை உணராமல், கர்ப்பிணிகள், குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளோர் கூட, இவற்றை பருகுகின்றனர்.
இந்த பானங்களில் அப்படி என்ன உள்ளது? என்ன ஆபத்து?
பாஸ்பாரிக் அமிலம், சர்க்கரை, காபீன், நிறமி மற்றும் வாசனை ஊட்டி ஆகியவை இதில் உள்ளன. துருவை கரைத்தல், ஆணியை கரைத்தல், சுண்ணாம்பை கரைத்தல் ஆகிய பணிகளைத் திறம்பட செய்யும், பாஸ்பாரிக் அமிலம், இதில், 55 சதவீதம் உள்ளது. இதனால், கோலாவில் அமிலத்தன்மை, 2.6 பி.எச்., அளவு எகிறுகிறது. உணவை பதப்படுத்த பயன்படும் வினிகரும், இதே அளவு அமிலத்தன்மை கொண்டது. கோலாவில் சர்க்கரையும், வாசனை ஊட்டியும் சேர்க்கப் படுவதால், வினிகரை விட சுவையாக உள்ளது.
வினிகரை குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?
கோலாவை குடித்தால் பற்கள் பாதிப்படையும்; பல்லில் குழி விழும். நம் பல்லை, இது போன்ற பானங்களில் இரண்டு நாட்கள் போட்டு வைத்தால், பல் மிருதுவாகி விடும். 250 மி.லி., பானத்தில், 150 கலோரிச் சத்து உள்ளது. உடலுக்குத் தேவை யான சத்துக் களோ, வைட்டமினோ, தாதுப் பொருட்களோ இதில் இல்லை. இதில் உள்ள சர்க்கரை, உடனடியாக ரத்தத்தில் கலந்து, கொழுப்பாக மாறுகிறது. தொடர்ந்து பருகினால், உடல் எடை அதிகரிப்பு ஏற்படுகிறது. குழந்தைகள் இந்த பானத்திற்கு வெகு சீக்கிரம் அடிமையாகி விடுகின்றனர். சர்க்கரையும், காபீனும் இதில் இருப்பதால், இந்த நிலை ஏற்படுகிறது. ஒரு கப் காபியில் 70 – 125, டீயில் 15 – 75, கோகோவில் 10 – 17 மற்றும் ஒரு சாக்லேட் கட்டியில், 60 – 70 மி.கி., அளவுள்ள காபீன், 360 மி.லி., கோலா பானத்தில், 50 – 65 அளவு உள் ளது. இதில் உள்ள அமிலமும், காபீனும், வயிற்றில் அல்சரை அதிகரிக்கின்றன. உடலி லிருந்து சுண்ணாம்புச் சத்து வெளியேற, காபீன் காரணமாக அமைகிறது. காபீனுடன், குளிர் பானங்களில் உள்ள பாஸ்பரசும் சேர்ந்து, எலும்பு தேய் மானத்தை உருவாக்கி விடுகின்றன. இதனால், எலும்பு முறிவு ஏற் பட்டு விடுகிறது. காபீன், இதய செயல்பாட்டையும், மத்திய நரம்பு மண்டலத்தையும் ஊக்குவிக்கிறது. இதனால், அதிக இதயத் துடிப்பு மற்றும் தூக்கமின்மை ஆகியவை ஏற்படு கின்றன. குழந்தைகள் அதிகத் துடிப்புடன், தூக்கம் வராமல் அவதிப்படுவர். தூங்கினாலும், அடிக்கடி விழித்துக் கொள்வர். இதனால், பெற்றோர் திண்டாடும் நிலை ஏற்படும். காபீன், ரத்த அழுத்தத் தையும் அதிகரிக்கச் செய்யும்.
எனவே, எப்போதும் படபடப்பாய் இருப்பவர்கள், காபீன் அடங்கிய பானங்களை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள், நாள் ஒன்றுக்கு, 300 மி.கி., அளவு காபீன் பருகலாம்; அதற்கு மேல் பருகக் கூடாது. இந்த பானங்களை குடிப்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு எந்த பலனும் ஏற்படாது; பணம் செலவழிவது மட்டுமே மிஞ்சும்.

காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 12)


காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 12) 


 தொடர் ..... 12

தொடர்ந்து பூங்காவில் மேலும் பலரை சந்தித்தோம். அங்கு பயாஸ் (21) என்ற இளைஞரை சந்தித்தோம். சோபுர் (Sopure) என்ற ஊரிலிருந்து வந்திருப்பதாக கூறினார். அங்குள்ள கல்லூரியில் B.A. மூன்றாமாண்டு படிப்பதாகவும் கூறினார்.

காஷ்மீரின் நிலவரம் குறித்து சகஜமாக பேசினார். இந்திய ராணுவம் எங்களை மிகவும் தொந்தரவு செய்கிறது. இந்திய ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும் என்றவர் எங்களுக்கு சுதந்திரம் கூட இரண்டாவதுதான். முதலில் எங்களுக்கு நிம்மதிதான் தேவை என்றார்.

பிறகு ஜான் முஸ்தாக் (21) என்பவரை சந்தித்தோம். அவரோடு ஏழெட்டு நண்பர்கள் ஒன்றாக இருந்தனர். குப்வாரா (KUPWARA) என்ற ஊரிலிருந்து சுற்றுலா வந்திருப்பதாக சொன்னார்கள். எங்கள் ஊர் காஷ்மீரின் அன்பையும், அழகையும் தன்னகத்தே கொண்டது என்று தங்கள் ஊர் பெருமையையும் கூறினார்கள். அங்குள்ள கல்லூரியில் அனைவரும் மூன்றாமாண்டு படிப்பதாகவும் கூறினார்கள்.

எங்களை நாங்கள் அறிமுகம் செய்து கொண்டோம். மிக தைரியமாகவும், சுற்றிலும் யாராவது கண்காணிப்பார்களோ என்ற அச்சமும் துளி கூட இல்லாமல் பேசினார்கள்.

எங்களது போராட்டத்தை தீவிரவாதம் என்று கூறுகிறார்கள். சுதந்திரத்திற்காக போராடுவது எப்படி தீவிரவாதமாகும்! என்றவர்கள், காஷ்மீருக்கு இந்தியா சுதந்திரமளிப்பது தவிர்க்க முடியாததாகும் என்றார்கள். எங்கள் மண்ணை நாங்களே ஆள வேண்டும் என்று விரும்புகிறோம். இது தவறா? என்று எங்களிடம் கேள்வியெழுப்பினார்கள். அந்த நண்பர்கள் குழாம் சராமாரியாக எங்களை நோக்கி தங்களின் நியாயங்களை கேட்டனர்.

காஷ்மீரில் செல்வாக்குள்ள தலைவர்கள் யார் என்று கேட்டதுதான் தாமதம், அனைவரும் ஒரே குரலில் சொன்னது ஜீலானியின் பெயரைத்தான்.

இங்கே ஒரு விஷயத்தை நினைவூட்ட விரும்புகிறோம். காஷ்மீரில் அரசியல் களத்தில் அப்துல்லா குடும்பத்தினரின் தேசிய மாநாட்டு கட்சியும், முப்தி மெஹபூபா ஷரிபின் மக்கள் ஜனநாயக கட்சியும் செயல்படுகின்றன. லடாக் மற்றும் ஜம்மு பகுதியில் காங்ரஸ், பாஜக, சீக்கியர்களின் சிறுத்தைகள் கட்சி ஆகியன வலுவாக உள்ளது.

ஆனால் தனி நாடும் கேட்கும் போராட்ட தலைவர்களுக்குதான் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வரவேற்பு இருக்கிறது. அரசியல் ரீதியாக உமர் அப்துல்லாவையும், அவர் குடும்பத்தையும் காஷ்மீரிகள் வெறுக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிய முடிந்தது. சேக் அப்துல்லா, அவர் மகன் ஃபருக் அப்துல்லா, பேரன் உமர் அப்துல்லா ஆகியோரை துரோகிகள் என இளைஞர்கள் விமர்சித்தார்கள்.

அதே நேரம் மெஹபூபா முஃப்தி மீது பலருக்கு நல்ல மரியாதை இருந்ததையும் அறிந்தோம்.
இதனிடையே மக்கள் செல்வாக்கு என்ற வகையில் ஹுரியத் அமைப்பின் தலைவர் ஜீலானி, மற்றொரு ஹுரியத் அமைப்பின் தலைவர் மீர்வாய்ஸ் உமர் பாரூக், ஜனநாயக விடுதலை கட்சி தலைவர் சபீர், ஜம்மு&காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் ஆகியோருக்கிடையே தான் காஷ்மீர் பள்ளத்தாக்கில் செல்வாக்கு இருக்கிறது.
இதில் 90 சதவீத ஆதரவு ஜீலானிக்குதான் இருக்கிறது என்பது எங்களது பேட்டிகளின்போதும், சந்திப்புகளின் போதும் அறிய முடிந்தது.

அவரை ஆதரித்தவர்களிடம் ஏன் அவரை ஆதரிக்கிறீர்கள்? என்றதற்கு, அவர்தான் எங்களின் உணர்வுகளை புரிந்து செயல்படுகிறார் என்றார்கள்.

அவருக்கு இப்போது வயது 83 ஆகிறது. ஜமாதி&இ&இஸ்லாமிதான் அவரது பள்ளிக்கூடம். அதே நேரம் அவரது இஸ்லாமிய அறிவுரைகளிலிருந்து மாறுபடும் மற்றவர்களும் கூட அவரை சமரசமில்லாத உறுதியான தலைவர் என்று பாராட்டுகிறார்கள்.

நாங்கள் முகல் பூங்காவிலிருந்து சாலிமார் தோட்டம் போனாம். அங்கு மொஹ்சின் என்பவரை, சந்தித்தோம். அவர் பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் பல்கலைக் கழகத்தில் படிப்பதாக சொன்னார்.

காஷ்மீரில் வேலை இல்லா திண்டாட்டம் நிலவுவதாக வருத்தப்பட்டவர், அரசுப் படைகளின் நடவடிக்கைகள் குறித்து குற்றம் சாட்டினார். இங்கு யாரை கேட்டாலும், எங்களுக்கு முதலில் சுதந்திரம் தாருங்கள் என்பதையே கூறுவார்கள் என்றார்.

அங்கு பல கல்லூரி மாணவ & மாணவிகள் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் நாங்கள் பேட்டி என்றதும் மறுத்துவிட்டார்கள்.

(இன்ஷா அல்லாஹ் பணயங்கள் தொடரும்...)


பூங்காவிலும் சுதந்திரம் கோரும் வாசகங்கள்...
சாலிமார் தோட்டத்தின் எழில்மிகு மண்டபம்...
பயாஸ் மற்றும் அவரது நண்பர்கள்...

காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 13)


காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 13) 



தொடர் ..... 13

அடுத்து NISHAT எனப்படும் பகுதிக்கு சென்றோம். இதுதான் முகலியர் கட்டிய பூங்காக்களிலேயே மிகவும் பெரியது.

ஸ்ரீநகரின் அனைத்து பூங்காக்களுமே நகரின் கிழக்கு எல்லையான அந்த மலைத் தொடருக்கும், டால் ஏரிக்கும் இடையே அமைந்திருப்பவைதான் என்பதை அறிந்து கொண்டோம்.
இப்பூங்காவில் இருந்து எட்டிப் பார்த்தால் டால் ஏரியின் மறுமுனையில் உள்ள ஹஸ்ரத்பால் தெரியும்.

1634ல் முகலாய மன்னர் ஷாஜஹானின் ஆட்சியில் அவரது மருமகன் உருவாக்கியது என அங்கிருந்த கல்வெட்டு தகவல்கள் தெரிவிக்கிறது.

அங்கிருந்து பார்த்தால் மலை உச்சியில் தெற்கிலும், வடக்கிலும் இரண்டு முகலாயர் கோட்டைகள் தெரிந்தது. அவை இப்போது ராணுவ முகாம்களில் செயல்படுகிறது.

நாங்கள் அங்கு லுஹர் மற்றும் அஸர் தொழுகைகளை நிறைவேற்றினோம். இப்போது அங்கு வெயில் காலம். நாங்கள் மலையிலிருந்து ஓடிவரும் அந்த தண்ணீரில் ஒளு செய்தபோது மிகவும் இதமாக இருந்தது.

இங்கிருந்து வெளியேறும் நீர் டால் ஏரிக்கு சென்று, பிறகு விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. பேட்டி எடுப்பதற்கான உகந்த சூழல் இல்லை. காரணம் இதே பகுதியை 1/2 மணி நேரம் கடந்து மீண்டும் நாங்கள் வந்தபோது அரசுப்படைகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாங்கள் அருகில் இருந்த ஒரு உணவகத்தில் சாப்பிட்டோம். காஷ்மீரில் சுவையான சாப்பாடு மிகவும் அரிது என்பதை நாங்கள் அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொண்டோம்.

பிறகு நாங்கள் ராஜ்பவன் கடந்து Chesma Shahi   என்ற பூங்காவுக்கு போனாம். ராணுவ கெடுபிடிகள் நிறைந்திருந்தது.

பொதுவாக காஷ்மீரில் இரவு நேரத்தில் பயணிக்கும்போது வாகனங்களில் விளக்குகள் எரிய வேண்டும். கறுப்பு வண்ண கூலிங் ஸ்டிக்கர்கள் அங்கு கார் கண்ணாடிகளில் ஒட்டக் கூடாது.
அதாவது வெளியிலிருந்து பார்த்தாலே, உள்ளே இருப்பவர்கள் தெரிய வேண்டும்.
இதற்கு இடையிலேயே துலிப் தோட்டமும், நேரு பூங்காவும் இருக்கிறது. இவையெல்லாம் சமீப காலத்தில் உருவாக்கப்பட்டவை.

நாங்கள் இதையெல்லாம் சுற்றி வந்தபோது ஒரு விஷயத்தை புரிந்துக் கொள்ள முடிந்தது. அங்கு தீவிரவாத பயம் துளியும் இல்லை என்பதையும், வெளிமாநில மக்களும், வெளிநாட்டு மக்களும் இயல்பாக சுற்றிதிரிவதையும் இந்துக்களும், சீக்கியர்களும், மற்றவர்களும் பயமின்றி அங்கு வாழ்கிறார்கள் என்பதையும், அவரவர் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் செயல்படுகின்றன என்பதையும் அறிந்தோம்.

ஆனால், இந்திய அரசும், சில ஊடகங்களும் மிகைப்படுத்திய செய்திகளை பரப்பி மக்கள் நடமாடவே முடியாத தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பது போல தோற்றம் உருவாக்கப்பட்டடிருப்பதையும் புரிய முடிந்தது.

காஷ்மீரில் நான்கு பேருக்கு ஒரு அரசுப்படை வீரர் நிறுத்தப்பட்டிருப்பது ஏன்? என காஷ்மீரிகள் கேட்கும் கேள்வி நியாயமானதே.

ராணுவத்தையும், துணை ராணுவத்தையும் எல்லையில் நிறுத்தாமல், பீதியும், பயங்கரவாதமும் நிலவுவது போல காரணங்களை உருவாக்கி அதை சாக்காக வைத்து எங்களை அடிமைப்படுத்துவது நியாயம்தானா? என்ற கேள்விக்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம்?

பிறகு நாங்கள் எங்களின் பேட்டிகளை முடித்துவிட்டு புகழ்பெற்ற டால் ஏரிக்கு புறப்பட்டோம். அது 18 கி.மீ. சுற்றளவு கொண்டது. பல கரைகள் உண்டு. ஒவ்வொரு கரையிலும் வாடகை படகுகள் காத்திருக்கின்றன. இதை நம்பியே பல ஆயிரம் பேர் வாழ்கிறார்கள்.

ஒரு படகுக்கு என்ன விலை என்பது அரசு சார்பில் அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு படகில் 4 பேர் செல்லலாம். இதுதான் மிகச்சிறியது. நாங்கள் ஏழு பேர் இரண்டு படகை 900 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்தோம்.

மிகவும் ரம்மியமான இன்பமான பயணம் அது. இதே ஏரியில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் வந்தால் பயணம் செய்ய முடியாதாம். காரணம் தண்ணீர் உறைந்து பனிக்கட்டிகளாக கிடக்கும். அதில் ஏறி குதித்து விளையாடுவார்களாம்.

(இன்ஷா அல்லாஹ்  (05.09.2011) திங்கட்கிழமை பணயங்கள் தொடரும்...)

நிஷாட் பூங்கா....
தொழுகையில்...
நிஷாட் பூங்காவிலிருந்து டால் ஏரியின் அடுத்த முனையில் ஹஜரத்பால் தெரியும்...
டால் ஏரியில் படகில் புறப்படுகிறோம்.

காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 11)


காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 11) 



தொடர் ..... 11

அப்போது நாலைந்து கல்லூரிப் பெண்கள் அங்கு வந்தனர்.

அவர்களிடம் சென்று எங்களை அறிமுகம் செய்துக் கொண்டோம். முதலில் அவர்கள் மெல்ல தயங்கினாலும் பிறகு சகஜமாக பேசினார்கள்.

எங்களுக்கு சுதந்திரம் தேவை. ஆனால் அதற்கு ரத்தத்தையும் தாண்டி நிறைய விலை கொடுக்க வேண்டிவரும் என அஞ்சுகிறோம் என்று முதலில் ஒரு மாணவி கருத்து கூறினார்.

அருகிலிருந்த இன்னொரு மாணவி, நிறைய இளைஞர்களை எங்களின் போராட்டத்தில் இழந்து விட்டோம். இனியும் அப்படி உயிர்களை இழக்க விரும்பவில்லை. இங்கு தீவிரவாதிகள் யாருமில்லை. இந்திய ராணுவம்தான் தீவிரவாதத்தை உருவாக்குகிறது என பொட்டில் அறைந்தது போல கூறினார்கள். இந்திய ராணுவம் காஷ்மீர் பெண்களை கற்பழிக்கிறது. என்ற கோபத்தையும் அம்மாணவிகள் வெளிப்படுத்தினர்.

அந்த மாணவிகள் தங்களது முதலாம் ஆண்டு படிப்பு வீணாகிவிட்டது, பெரும்பாலான நாட்கள் கல்லூரி திறக்கவே இல்லை என்றும் குறைப்பட்டுக் கொண்டார்கள்.

இந்திய மக்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என கேட்டோம். ஒரே குரலில் எங்களை சுதந்திரமாக வாழ விடுங்கள் என்றனர்.

காஷ்மீர் அரசின் செயல்பாடு குறித்து கேட்டோம். அதில் ஒரு மாணவி உமர் அப்துல்லாவை பாராட்டினார். மற்ற மாணவிகள் இது அவருடைய கருத்து என்று கூறி தங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்றனர்.

ஸ்ரீநகர் அரசு கலைக் கல்லூரியில் B.A. இரண்டாமாண்டு படிப்பதாக சொன்ன அவர்கள் தங்கள் பெயரை கூறவும், படம் எடுக்கவும் பயந்தார்கள்.

எங்களுடைய பேட்டி வரும். அப்போது நாங்கள் உயிரோடு இருக்க மாட்டோம் என்று ஒரு மாணவி காஷ்மீரின் பீதி நிலையை எடுத்துரைத்தார்.

அதன் பிறகு Green Park சென்றோம். முந்தைய பூங்காவைப் போலவே அனைத்தையும் கொண்டதாக இருந்தது. இங்கே ஒரு விஷயத்தை குறிப்பிட வேண்டும். ஸ்ரீநகரின் கிழக்கு எல்லையாக இருக்கும் அந்த ஒரே மலைத் தொடரின் வெவ்வேறு பகுதிகளில்தான் சற்று இடைவெளி விட்டு அனைத்து பூங்காக்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

முகலாயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பூங்காக்கள் யாவும் ஒரு சிறிய மண்டபம், அதன் வழியாக மலையிலிருந்து துள்ளி வரும் நதி நீரை அரவணைக்கும் சிறிய கால்வாய் என இவ்விரண்டையும் கொண்டதாக இருக்கிறது.

நாங்கள் Shalimar Mughal Garden சென்றபோது அங்கு பள்ளிக்கூடம் படிக்கும் மாணவர்கள் நீரில் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுள் 4வது படிக்கும் உமர் என்ற மாணவனிடம் பேச்சுக் கொடுத்தோம்.

இங்கு சுவர்களில் எல்லாம் Go India Go  என எழுதியிருக்கிறார்களே... என்றோம். ஆமாம் எங்களுக்கு Freedomவேண்டும் என்றான்.

நாங்கள் மேலும் பேச்சுக் கொடுத்தபோது, அவன் விளையாட்டில் ஆர்வம் காட்டியபடியே ஓடிவிட்டான். சிறுவர்களிடமும் கூட சுதந்திரம் வேண்டும் என்ற அரசியல் உணர்வு தலைதூக்கி இருப்பதை உணர்ந்துகொண்டோம். காஷ்மீரின் வரலாறும், அங்கு நடைபெறும் சமகால நிகழ்வுகளும், சுதந்திரம் பற்றிய செய்திகளும் காஷ்மீரிகளின் குடும்பங்களில் அன்றாட உரையாடல்களாக இருக்கின்றன. அதனுடைய விளைவு தான் சிறுவர்களிடமும் பிரதிபலிக்கிறது. அங்கு பள்ளிகூட ஆசிரியர்களும் இதை போதிக்கிறார்கள். இதை யாராலும் தடுக்க முடியவில்லை. காரணம் உண்மைகளை தடுக்க இது வரை எந்த ஆயுதங்களும் தயாரிக்கபடவில்லை தானே...

(இன்ஷா அல்லாஹ் பணயங்கள் தொடரும்...)


பூங்காவின் அழகிய தோற்றம்...
சுவர்களில், இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள்...
கல்லூரி மாணவிகளுடன் பேட்டி...
பள்ளிகூட மாணவர்களுடன் ...

காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 10)


காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 10) 



தொடர் ..... 10

... ஹஸ்ரத் பால் பள்ளிக்கு புறப்பட்டோம்.

இடையில் ஒரு பெரிய சீக்கிய குருத்வாரா இருந்தது. சீக்கிய மக்கள் சகஜமாக வந்து போய்க் கொண்டிருந்தனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கோயில்கள் குறைவாக இருந்தாலும் மக்கள் பயமின்றி வந்து போகின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சில சர்ச்சுககளையும் நாங்கள் பார்த்தோம். சிறுபான்மை சீக்கியர், இந்துக்கள், கிரித்தவர்களின் வழிபாட்டுரிமைக்கு அங்கே எந்த தடையும் இல்லை.

அதுபோல் தொழில் மற்றும் வணிகத்திலும் அம்மக்கள் சுதந்திரமாக ஈடுபடுகிறார்கள். சமய நல்லிணக்கமாக அங்கு மக்கள் வாழ்கிறார்கள். என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

ஹஸ்ரத்பாலுக்கு செல்லும் வழியில் ஒரு சிறிய ஏரி இருக்கிறது. சற்று தூரத்தில் National College Of Institute என்ற கல்லூரி வருகிறது. அழகான வளாகமாக அது காட்சியளித்தது. பசுமையான புல்வெளி, தகர கூரை வேய்ந்த கட்டிடங்கள் என அது உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதன் வளாக நுழைவாயிலுக்கு மௌலானா ரூமியின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. எங்களின் கார் ஓட்டுனர் இங்கு நிறைய இந்திய மாணவர்கள் படிக்கிறார்கள் என்றார். இந்த ஒற்றை வரி காஷ்மீரிகள் தங்களை இந்தியர்களாக கருதுவதில்லை என்பதையும், தங்களை காஷ்மீரிகள் என கூறிக் கொள்வதையே விரும்புகிறார்கள் என்பதையும் உணர்ந்தோம்.

அடுத்தடுத்த பல சந்திப்புகளிலும் பலரும் எங்களை இந்தியாவிலிருந்து வந்திருக்கிறீர்களா? என்று கேட்டார்கள்.

நாகாலாந்து, மணிப்பூர்  உள்ளிட்ட இந்தியாவில் வடகிழக்கில் வாழும் மக்களும் இதே போன்ற மனநிலையில், டெல்லிக்கு வருவதை இந்தியாவுக்கு போகிறோம் என்று சொல்வார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

சற்று நேரத்தில் ஹஸ்ரத் பால் வந்துவிட்டது.

மார்பிள்ஸ்களால் அழகான வேலைப்பாடுகளை கொண்ட மூன்று தனித்தனி நுழைவாயில்கள் அருகருகே உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன் வலது புறத்தில் பெரிய ஈத்கா மைதானம் உள்ளது.
ஹஸ்ரத் பாலை ஒரு தர்ஹா என்றே நாங்கள் அறிந்திருந்தோம். அதன் ஒரு பெரிய டூம் தாஜ்மஹாலை நினைவூட்டியது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலைமுடி ஒன்று இங்கு பாதுகாக்கப்படுவதாக ஒரு சாரர் நம்புகிறார்கள். உள்ளே சென்றால் அது தர்ஹா இல்லை. பள்ளிவாசல் என்று அறிந்தோம்.
மிஹ்ராபுக்கு மேலே ஒரு மாடம் இருக்கிறது. போலிசார் உள்ளே இயந்திர துப்பாக்கிகளுடன் சுற்றுகிறார்கள்.

அந்த மாடத்தில்தான் நபிகள் நாயகத்தின் தலை முடி பாதுகாக்கப்படுவதாக கூறினார்கள்.
நபிகள் நாயகத்தின் தலைமுடியை யார்? எப்போது? கொண்டு வந்தது என்பது பற்றிய ஆதார தகவல்கள் எதுவுமில்லை. இது நபிகள் நாயகத்தின் முடிதானா? என்பதை இறைவன் அறிவான்.
இப்படி தனது முடியை புனிதமாக கருதி பாதுகாக்க நபிகள் நாயகம் உத்தரவிட்டார்களா?? என்பதற்கான எந்த ஹதீஸ் குறிப்புகளும் இல்லை.

இதை நாங்கள் எங்களுக்குள் விவாதித்துக் கொண்டோம். சில வருடங்களுக்கு முன்பாக அந்த முடி காணமல் போனதும், பிறகு கண்டெடுக்கப்பட்டதாக அரசு அறிவித்ததும் நினைவுக்கு வந்தது.

இங்கு இறைவனுக்காக தொழுகை நடக்கிறதா? புனித முடிக்காக தொழுகை நடக்கிறதா? என புரியாமல் அதிலிருந்து வெளியானோம்.

டல் ஏரியின் அழகிய கரையில்தான் ஹஸ்ரத் பால் இருக்கிறது. முகலாயர் காலத்தில் இது உருவாக்கப்பட்டிருக்கலாம் என ஒரு போலிஸார் கூறினார். சுமார் 45 வருடங்களுக்கு முன்பாக இது புதிதாக கட்டப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

காரணம் முகலாயர்களின் கட்டிடக் கலை போன்ற டூம் வடிவ மஸ்ஜிதுகள் காஷ்மீரில் மிகவும் குறைவு.

பிறகு நாங்கள் புகழ்பெற்ற சார்மினார் கார்டனுக்கு சென்றோம். எல்லாப் பூங்காக்களிலும் நுழைவுக் கட்டணம் உண்டு.

அங்கு நிறைய பள்ளிக்கூட பிள்ளைகளை ஆசிரியர்கள் கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து வந்திருந்தார்கள்.

அப்படி பிள்ளைகளை கூட்டி வந்த ஆசிரியரிடம் மெல்ல பேச்சு கொடுத்தோம். காஷ்மீரில் இப்படி திறந்த வெளியில் பேட்டி எடுப்பதெல்லாம் மிகவும் ஆபத்தானது.

நாங்கள் எங்களை பத்திரிக்கையாளர்களாவோ, உண்மை அறியும் குழுவினராக காட்டிக் கொள்ளவில்லை. சுற்றுலா பயணிகள் போலவே பேச்சுக் கொடுத்தோம்.

காஷ்மீர் இப்போது இருப்பதுபோல் தொடரவேண்டும் என விரும்புகிறீர்களா? அல்லது வேறு அரசியல் தீர்வை விரும்புகிறீர்களா? என்றதும், எங்களுக்கு சுதந்திரம் தேவை. நாங்கள் நிம்மதியாக வாழ அது உதவும் என்றவர், நீண்ட நேரம் பேசவில்லை.

காரணம் பல்வேறு இடங்களை பார்க்க அவருக்கு பின்னால் பள்ளிக்கூட மாணவிகள் நீண்ட வரிசையில் நின்றுக் கொண்டிருந்தனர்.

அந்த பூங்கா சிறிய அளவிளானது. ஆனாலும் நிழல் பரப்பி இதமாக இருந்தது.
அந்த பூங்கா ஒரு சிறிய அணையை ஒட்டியிருந்தது. அருகிலுள்ள பெரிய மலையிலிருந்து சுரக்கும் தண்ணீர் இந்த அணையில் சேமிக்கப்படுகிறது.

அதிலிருந்து ஒரு சிறிய கால்வாய் அமைக்கப்பட்டு சலசலவென தண்ணீர் பூங்காவின் நடுவே ஓடிக் கொண்டிருந்தது. நேராக விவசாய நிலங்களை நோக்கி இத்தண்ணீர் ஓடுகிறது.
நாங்கள் அந்த அணைக்கு சென்று மலையை ரசித்தோம். அப்போது நாலைந்து கல்லூரிப் பெண்கள் அங்கு வந்தனர்.

அவர்களிடம் சென்று எங்களை அறிமுகம் செய்துக் கொண்டோம். முதலில் அவர்கள் மெல்ல தயங்கினாலும் பிறகு சகஜமாக பேசினார்கள்.

(இன்ஷா அல்லாஹ் பயணம் தொடரும்...)

ஹஸ்ரத் பாலுக்கு வெளியே...
கண்ணியமான ஆடைகளுடன் சுற்றி வரும் பொதுமக்கள்...
பள்ளிகூட ஆசிரியருடன் பேட்டி..._

மோடியை மீறி லோகாயுக்தாவை நியமித்தார் குஜராத் ஆளுநர்!


மோடியை மீறி லோகாயுக்தாவை நியமித்தார் குஜராத் ஆளுநர்!

சனி, 27 ஆகஸ்டு 2011 05:43 இந்நேரம் India
E-mailஅச்செடுக்க
குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடியைக் கலந்தாலோசனை செய்யாமல் அம்மாநில ஆளுநர் வெள்ளிக் கிழமையன்று லோகாயுக்தாவை நியமித்து உத்தரவிட்டுள்ளார். ஆளுநரின் இந்த உத்தரவை எதிர்த்து குஜராத் அரசு உடனடியாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

கடந்த ஏழரை ஆண்டுகளாக நியமிக்கப்படாமல் உள்ள லோகாயுக்தாவை நியமிக்குமாறு கோரி குஜராத் ஆளுநர் கமலா பனிவாலை சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சக்திசிங் கோஹில் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் வெள்ளிக் கிழமை மதியம் சந்தித்தனர்.

ஆளுநரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த எதிர்கட்சித் தலைவர் கோஹில், ஓய்வு பெற்ற குஜராத் உயர் நீதரிமன்ற நீதிபதி ஆர்.ஏ. மேத்தாவை லோகாயுக்தாவாக நியமித்து வியாழக் கிழமையன்று அரசாணை பிறப்பித்துள்ளதாக ஆளுநர் கமலா கூறியதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். லோகாயுக்தா நியமனம் குறித்த கோப்பு மாநில அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் கூறியுள்ளார்.

ஆளுநரின் இந்த உத்தரவை எதிர்த்து, முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

75 வயதான மேத்தா குஜராத் உயர் நீதிமன்றத்தில் 1982ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டு வரை நீதிபதியாகப் பணியாற்றியவர். சில முறை அவர் தலைமை நீதிபதி பொறுப்பிலும் இருந்துள்ளார். குஜராத் மாநில லோகாயுக்தாவாக மேத்தாவை நியமிக்க அம்மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி முகோபாத்யாயா பரிந்துரைத்தார். இவரது பரிந்துரையை காங்கிரஸ் கட்சியும் ஏற்றுக் கொண்டது.

மாநில லோகாயுக்தா சட்டத்தின்படி, லோகாயுக்தாவை நியமிப்பதற்கு ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது என்றும் மாநில அரசு இதில் தலையிட முடியாது என்றும் கோஹில் கூறியுள்ளார்.

நீதிபதி மேத்தாவை லோகாயுக்தாவாக நியமிக்கப்பட்டது தொடர்பான அரசாணையை வெளியிடுமாறு பல நாள்களுக்கு முன்னரே ஆளுநர் மாநில அரசைக் கேட்டுக் கொண்டு, பின்னர் இதுகுறித்து பலமுறை நினைவூட்டல் அனுப்பியும் மாநில அரசு செயல்படாததால் ஆளுநரே நேரடியாக லோகாயுக்தாவை நியமிக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார் என்றும் கோஹில் கூறியுள்ளார்.

ஆளுநரின் இச்செயல் சட்டத்துக்குப் புறம்பானது என்று வர்ணித்துள்ள அமைச்சரவைச் செய்தித் தொடர்பாளர் மற்றும் சுகாதார அமைச்சர் ஜெயநாரயன் வியாஸ், அமைச்சரவையின் ஆலோசனைகளுக்கு ஏற்படவே ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும் எந்த ஒரு நியமனத்திலும் அரசை மீறி செயல்படக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

ஆளுநருக்கும் ஆளும் கட்சிக்கும் மோதல் ஏற்படும் இரண்டாவது மாநிலமாக குஜராத் ஆகியுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சிக்கும் ஆளுநருக்கும் இடையே ஏற்படும் உரசல் முடிவுக்கு வந்துள்ள நிலையில் குஜராத்தில் இது தொடங்கியுள்ளது குறிப்பிடத் தக்கது.

காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 9)


காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 9) 


தொடர் ..... 9

பிறகு நாங்கள் காரில் ஏறி புகழ்பெற்ற ஸ்ரீநகரின் ஜாமியா மஸ்ஜிதுக்கு புறப்பட்டோம்.
ஸ்ரீநகரின் கடை வீதிகளையும், நகர அமைப்பையும, மக்களின் வாழ்க்கை முறைகளையும் காரில் இருந்தவாரே பார்த்து சென்றோம்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் 85% முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அதுவும் ஸ்ரீநகரில் மட்டும் 90% முஸ்லிம்களாகவே இருக்கிறார்கள்.

அவர்களது உடைகள் வட இந்திய மற்றும் பாகிஸ்தானிய முஸ்லிம்கள் அணியும் ஆடைகளாகவே உள்ளது.

பெரும்பாலான வீதிகள் சுத்தமாக இருக்கின்றன. கடைகள் பெரும்பாலும் 10 மணிக்கு பிறகே திறக்கப்படுகின்றன. ஆனால், உலக சுற்றுலா நகருக்கேற்ற வகையில் அழகுப்படுத்தப்படாமல் வழக்கமான இந்திய நகர்களைப் போலவே இருக்கிறது. இந்தியாவின் புதுடெல்லி, சண்டிகர், பெங்களூருக்கு அடுத்து சுத்தமான வீதிகள் உள்ள நகர் எனலாம்.

பெரும்பாலான ஆட்டோக்கள் தூய்மையாகவும், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் வாங்கப்பட்டது போலவும் இருக்கின்றன. குளிரை தாங்கும் வகையில் ஆட்டோக்களில் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் பேருந்துகள்தான் படுமோசமாக இருக்கிறது. 20 வருடங்களுக்கு முன்பாக நம் தமிழகத்தில் ஓடிய பேருந்துகளை விட மோசமாக இருக்கிறது. அதைவிட மோசம் என்னவெனில், அதை அலங்கரிப்பு என்ற பெயரில் பல வண்ணங்களை தீட்டி, அருவெறுப்பான தோற்றத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

இது காஷ்மீரில் கோடைக்காலம் என்பதால், மக்கள் இயல்பாக இருந்தார்கள். நாங்கள் எதிர்பார்த்த குளிர் இல்லை.
எங்கள் கார் டிரைவர் காரை, ஜாமியா மஸ்ஜித் அருகே நிறுத்தினார். இது காஷ்மீரிகளுக்கு மிகமிக முக்கியமான பகுதி. பள்ளிவாசலை சுற்றிலும் சிறிய பஜார் இருந்தது.

பிரம்மாண்டமான நுழைவாயிலை கடந்து உள்ளே சென்றோம். பெரிய, பெரிய மரங்களை தூண்களாக கொண்டு இப்பள்ளி அமைக்கப்பட்டிருப்பதுதான் அதன் சிறப்பாகும்.
தேவதாரு மரங்களாலான அந்த மரத்தூண்கள் ஒங்வொன்றும் அழகாக செதுக்கப்பட்ட மஞ்சள் வண்ணத்தில் பளீரென காட்சியளிக்கிறது.

42 அடிகளில் உயரமான தூண்கள் முக்கிய பகுதிகளை தூக்கி பிடித்திருக்கின்றன. மற்ற உள் பகுதிகளில் 32 அடி உயர தூண்கள் தூக்கிப்பிடித்திருக்கின்றன.

ஒரே அளவான சுற்றளவில் தூண்கள் இருக்கிறது. மொத்தம் 346 மரத்தூண்கள் இருப்பது உலகிலேயே இம் மஸ்ஜிதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளே சுற்றி வந்தோம். 1,46,000 சதுர அடியில் அமைக்கப்பட்ட இப்பள்ளியில் நான்கு திசைகளிலும் நான்கு டூம்கள் இருக்கின்றன.

இது டெல்லி ஜாமியா மஸ்ஜிதில் இருப்பதுபோல் குவி மாடமாக இல்லை. மாறாக, சீன கட்டிட அமைப்பை போல உருவாக்கப்பட்டு அதன் உச்சியில் கூர்மையான மினாராக்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மேற்பகுதியில் உட்பக்கங்கள் அழகானவை. மரத்தினால் அலங்கார வேலைகள் மிக நுட்பமாக செய்யப்பட்டிருக்கின்றது. பள்ளியில் உட்பகுதி திறந்த வெளியாக இருக்கிறது. ஒளு செய்ய அகழியும் இருக்கிறது.

பள்ளியின் இடபுறத்தில் பெண்கள் தொழுவதற்கு வசதி செய்யப்பட்டிருக்கின்றது. ஒரே நேரத்தில் 33,333 பேர் தொழும் வகையில் இப்பள்ளி கட்டப்பட்டிருக்கிறது.
ஆனால் ரமளானில் பள்ளிக்கு வெளியேயும் கூட்டம் திரளுமாம். சுமார் 1 லட்சம் பேர் வரை மக்கள் தொழுகைக்கு திரள்வார்களாம்.

சுல்தான் சிக்கந்தர் ஷாவால் கி.பி.1394ல்  இப்பள்ளி கட்டப்பட்டிருக்கிறது. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பாக இவ்வளவு பிரம்மாண்மாக இப்பள்ளியை அவர் கட்டி முடித்திருக்கிறார்.
ஆனால் மூன்று முறை இப்பள்ளி தீப்பற்றி சேதமடைந்திருப்பதாக கல்வெட்டு கூறுகிறது. சுல்தான் அஸ்லன்ஷா 1480ல் ஒரு முறை இப்பள்ளியை புனரமைத்திருக்கிறார்.
பிறகு முகலாய மன்னர் ஜஹாங்கீர் 1620ல் ஒருமுறையும், அவுரங்கஸீப் 1672ல் ஒரு முறையும் புனரமைப்பு செய்திருக்கிறார்கள்.

உலகில் வேறு எங்கும் இல்லாத இப்பள்ளிவாசல் போதிய பராமரிப்பின்றி இருப்பதை, மினாரக்களில் இருக்கும் தகர துண்டுகளும், அழுக்கான கார்பெட்களும் உணர்த்துகின்றன.
ரமளான் மாதம் வருவதால் சில பணியாட்கள் கார்பெட்டுகளை உதறி சுத்தம் செய்து கொண்டிருந்தனர். Wakkam Cleaner ஐ பயன்படுத்தும் வசதி கூட அங்கு இல்லை என்பது வருந்தத்தக்கது.

நாங்கள் இப்பள்ளிக்கு வருகை தந்ததில் முக்கியத்துவம் இருக்கிறது. காரணம், இப்பள்ளிவாசல் காஷ்மீரிகளின் தேசிய அடையாளமாகவும், அவர்களின் போராட்டத்தின் ஒருங்கிணைப்பு மையமாகவும் திகழ்கிறது.

இவ்வாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் இப்பள்ளிவாசல் பிரதான மையமாக இருந்திருக்கிறது.

வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். இதன் விளைவாக கடந்த 600 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, முதன்முறையாக இப்பள்ளியில் வெள்ளிக்கிழமை ஜும்மா நடத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது காஷ்மீரிகளை உணர்வுப்பூர்வமாக பாதித்ததோடு, தங்களின் மத உணர்வுகளிலும் இந்திய அரசு தலையிட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள். இவ்விஷயத்தில் ராணுவத்தின் மீது மட்டுமின்றி, உமர் அப்துல்லா அரசின் மீதும், இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மீதும் அவர்களுக்கு கோபம் இருக்கிறது.

காஷ்மீரிகளை மேலும் அந்நியப்படுத்தும் ஒரு நிகழ்வாக இது அமைந்துவிட்டது. அந்த பள்ளியில் காணிக்கை தொழுகையாக இரண்டு ரக்அத்துகள் தொழுதுவிட்டு ஹஸ்ரத் பால் பள்ளிக்கு புறப்பட்டோம்.

(இன்ஷா அல்லாஹ் பயணம் தொடரும்...)

பூங்காக்களுடன் கூடிய பள்ளியின் உட்பகுதி...
காஷ்மீர் அரசு ஊழியருடன் பள்ளிவாசலின் தொழுகை பகுதியில்...,

Saturday 10 September 2011

காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 8)

காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 8) 


 
முகநூல் தொடர் ..... 8
 
ஜூலை 26 ஸ்ரீ நகரின் காலை பொழுது தொழுகையோடு விடிந்தது. பக்கத்தில் அழகான ஒரு பள்ளிவாசலும் இருந்தது.
 
நாங்கள் ஸ்ரீ நகருக்கு ஒரு சுற்றுலா பயணிகளை போல தான் வந்தோம். காரணம் இங்கு மனித உரிமை அமைப்புகள் என்று சொல்லிக்கொண்டோ, பத்திரிகையாளர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டோ வருவது மிக பெரிய ஆபத்து.
 
அரசும், உளவுத்துறையும், அரசு படைகளும் ஒரு காலத்திலும் காஷ்மீரிகளின் துயரங்களை வெளி உலகுக்கு காட்டி விட கூடாது என்பதில் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர்.
 
நாங்கள் போன சமயம் சீக்கியர்களின் புகழ்பெற்ற தலைவரும், முன்னாள் நடாளுமன்ற வாதியுமான சிம்ரன்ஜித் சின் மான் காஷ்மீர் மக்களை சந்திக்க வந்தார். ஜூலை 22 அன்று மான் அவர்கள் ஜிலானியை சந்தித்து விட்டு தொடர்ந்து பல்வேறு தரப்பினரையும் சந்திக்க விருந்தார். ஆனால் நாங்கள் போன அன்று அவரை காஷ்மீரிலிருந்து வெளியேற்றி ஸ்ரீ நகர் விமான நிலையத்திலிருந்து அவரை மாநில அரசு திருப்பி அனுப்பி வைத்தது.
 
 
இது காஷ்மீர் டைம்ஸ்,  கிரேட்டர் காஷ்மீர் உள்ளிட்ட ஆங்கில பத்திர்க்கைகளில் முக்கிய செய்தியாக வெளியிடப்படிருந்ததை படித்தோம். மேலும் தெற்கு காஷ்மீரில் குல்காம் என்ற பகுதியில் ருக்கையா பானு என்ற காஷ்மீர் பெண்ணை இந்திய ராணுவத்தினர் கற்பழித்ததால் ஆங்காங்கே போராட்டங்களும், கல்வீச்சுகளும் நடைபெற்று கொண்டு இருந்தன.
 
காஷ்மீரின் முக்கிய தலைவர்களான செய்யது அலிஷா ஜிலானி, சபீர் உள்ளிட்டோர் வீட்டு காவலில் முடக்கப்பட்டார்கள் என்பதையும் அறிந்தோம்.
நாங்கள் வந்திருந்த சூழல், மிகவும் பதற்றமாக இருந்ததை உணர்ந்து கொண்டோம்.
 
அதே நேரம் காஷ்மீர்களிடம் நெருங்கி பழகி அவற்றை பேட்டிகளாக எடுத்து மக்கள் உரிமையில் வெளியிட வேண்டும் என்ற எங்கள் முடிவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இறைவன் இருக்கிறான் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையோடு ஸ்ரீநகரில் வலம் வர புறப்பட்டோம்.
 
எமது சந்திப்புகளையும், உரையாடல்களையும் கவனமாக கையாண்டு அவற்றை பேட்டிகளாக பதிவு செய்ய வேண்டுமென்று எங்களுக்குள் முடிவுஎடுத்து கொண்டோம். ஒரு உண்மை அறியும் குழுப்போலவே எங்களது அணுகுமுறைகள் இருந்தது.
 
நாங்கள் சந்தித்த ஸ்ரீநகர் மக்கள் எங்களுக்கு வித்தியாசமாக இருந்தார்கள். அவர்களது தோற்றம், ஆடைகள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆட்களைப்போலவே இருக்கிறார்கள் என வழக்கறிஞர் வாசுதேவன் கூறினார். அது தான் உண்மை. இனம் என்று பார்த்தால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழ்பவர்கள் பிராமணர்களாக இருந்து இஸ்லாத்தை தழுவியவர்கள் என்பது அறிவியல் மற்றும் வரலாற்று உண்மையாகும்.
 
நாங்கள் முதலில் சந்தித்த காஷ்மீரியரின் பெயர் ஆபித் அலி. இவர் ஒரு வணிகர்.
 
காஷ்மீர் பிரச்கனை குறித்து அவரோடு பேசினோம். சட்டென்று பொறுமை இழந்தவராய் பேசத் தொடங்கினார்.
 
1931& லிருந்து இப்பிரச்னை தொடங்கியது. 1948 &ல் பாகிஸ்தான் ஆதரவு பட்டாண்கள் காஷ்மீருக்குள் நுழைந்த போதுதான், மன்னர் கரண்சிங் இந்தியாவின் உதவியை நாடினார்.
 
காஷ்மீரை காப்பாற்றுகிறோம் என்று வந்த இந்திய ராணுவம் அப்படியே தங்கிவிட்டது. அது முதல் இந்தியாவின் ஆக்கிரமிப்பு தொடர்கிறது என்றவர் 1989 லிருந்துதான் ஆயுதம் தாங்கிய முஜாஹிதீன் (போராட்டக்காரர்கள்) குழுக்கள் உருவாகின.
 
அதுமுதல் 22  ஆண்டுகளாய் நாங்கள் சந்தித்துவரும் இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல. இங்கு ராணுவத்தின் ஆட்சிதான் நடக்கிறது எனலாம்.
 
1989லிருந்து இதுவரை 75 ஆயிரம் காஷ்மீரிகளை இந்தியா கொன்றுள்ளது. ஆனால் உண்மையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சம் என நாங்கள் கருதுகிறோம்.
 
இதனால் விதவைகளின் எண்ணிக்கையே 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அவர்களின் வாழ்க்கை மிகவும் பரிதாபமாக உள்ளது. பெற்றோரை இழந்த பிள்ளைகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தொடுகிறது. விசாரணை என்ற பெயரில் அரசுப் படைகள் பலரை இழுத்துச் சென்றிருக்கிறது. அவர்களில் பெரும்பாலோர் பல ஆண்டுகளாக என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இப்படி காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மட்டுமே 10 ஆயிரத்தை தாண்டுகிறது.
 
எத்தனையோ மனைவிகள் தங்கள் கணவர் வருவார் என்ற நம்பிக்கையாலும், பல தாய்மார்கள் தங்களை காப்பாற்ற தங்கள் பிள்ளைகள் வருவார்கள் என்ற நம்பிக்கையிலும், எத்தனையோ பிள்ளைகள் தங்கள் தந்தையை ஒருநாள் காண்போம் என்ற நம்பிக்கையிலும், பல சகோதரிகள் தங்கள் சகோதரர்கள் ஒருநாள் வருவார்கள் என்ற நம்பிக்கையிலும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
ஆபித் அலியின் வாக்குமூலம் எங்கள் அனைவரையும் உலுக்கியது.
 காஷ்மீரில் பிராமண பண்டிட்களும் கொல்லப் பட்டிருக்கிறார்களே என்ற அடுத்த கேள்வியை முன் வைத்தோம்.
 
அதிகபட்சமாக 500 பேர் கொல்லப்பட்டிருக்கக் கூடும். அவர்கள் எங்கள் சகோதரர்கள். அவர்கள் கொல்லப்பட்டிருக்கக் கூடாது. அதற்காக நாங்கள் வருந்துகிறோம்.
500 பண்டிட்டுகளின் மரணங்களை பெரிதுபடுத்தும் இந்திய ஊடகங்கள், 3 லட்சம் காஷ்மீரிகள் சொல்லப்பட்டதை ஏன் பேசுவதில்லை. அது எங்களை மிகவும் வேதனைப்படுத்துகிறது என்றவர், அகதிகளாக வெளியேறிய பண்டிட்டுகள் எப்போது வந்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்றார்.
எங்களுடைய முதல் நேர்காணல் மிகவும் வேதனையுடன் தொடர்ந்தது.
 
ஆபித் அலியை தொடர்ந்து, பிர்தௌஸ் என்பவரை சந்தித்தோம்.
இவர் மளிகை உள்ளிட்ட பல்வேறு வணிகங்களில் ஈடுபட்டு வருகிறார். எடுத்ததுமே வேகமாக பேசினார்.
 
எங்களின் இதயங்களை தொடக்கூடிய எந்த வேலைகளையும் இந்திய அரசு செய்வதில்லை. மாறாக எங்களை அதிகம் காயப்படுத்துகிறது என்றவர், காஷ்மீருக்கு கூடுதலாக வரிகளை விதித்து மக்களை வதைப்பது என்ன நியாயம்? என்றவர் இங்கு பெட்ரோல் 1 லிட்டர் 80 ரூபாய்க்கு விற்பது உங்களுக்கு தெரியுமா? என்றார்.
 
1989  முதல் 99 வரை இருபது வருடங்களில் 1850 நாட்கள் கடை அடைப்பிலும், வேலை நிறுத்தத்திலும் கழிந்து விட்டது. இப்படி இருந்தால் வியாபாரிகள் என்ன செய்ய முடியும்? என்றவர் எங்களை அழைத்து சென்று தனது கடையின் பின் பகுதியை காட்டினார்.
 
அதில் ஓட்டைகள் இருந்தன. இது என்ன தெரியுமா? என்றவர். ராணுவத்தினர் மொத்தமாக வருவார்கள். எங்கள் கடையில் சாமான்களை வாங்குவார்கள். பணம் கேட்டால் துப்பாக்கியால் சுடுவார்கள். அப்படி சுட்டதுதான் இந்த ஓட்டைகள் என்று விளக்கமளித்தார்.
 
எங்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.  பிறகு நாங்கள் காரில் ஏறி புகழ்பெற்ற ஸ்ரீநகரின் ஜாமியா மஸ்ஜிதுக்கு புறப்பட்டோம்.
 
(இன்ஷா அல்லாஹ் பயணம் தொடரும்...)
 
தோட்டக்கள் துளைத்த தடயங்களை காட்டும் பிர்தௌஸ்...
ஆபித் அலியுடன் பேட்டி...