Sunday 11 September 2011

அத்வானி ரத யாத்திரைக்கு எதிராக அன்னா ஹஸாரே குழு!


அத்வானி ரத யாத்திரைக்கு எதிராக அன்னா ஹஸாரே குழு!

E-mailஅச்செடுக்க
ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் ரத யாத்திரை நடத்தப்போவதாக அறிவித்துள்ள பாஜக மூத்தத் தலைவர் அத்வானிக்கு எதிராக அன்னா ஹஸாரே குழுவிலுள்ள கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் ரத யாத்திரை நடத்தப்போவதாக பாஜக மூத்தத் தலைவர் அத்வானி அறிவித்திருந்தார். அவரின் இந்த யாத்திரை குறித்து ஊழலுக்கு எதிராக கடுமையான லோக்பால் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையுடைய அன்னா ஹஸாரே குழுவிலுள்ள கிரண்பேடியிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்,

"தற்போது லோக்பால் சட்டம்தான் வேண்டும்; ரத யாத்திரைகள் அல்ல. எங்களுக்கு மறைமுக திட்டங்கள் ஏதும் கிடையாது." என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியினைச் சேர்ந்த முன்னாள் சட்டத்துறை அமைச்சரான வீரப்ப மொய்லி இதுகுறித்துக் கூறும்போது, "அத்வானி மேற்கொண்ட முதல் ரத யாத்திரக்கே இன்னும் இந்த நாடு அதற்கான விலையைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அவருடைய கடந்த யாத்திரைகள் எல்லாம் மத ரீதியான பதற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. அதன் மூலம் பலர் மரணமடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்னொரு யாத்திரை தேவையா?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களின் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ஊழலுக்கு எதிராக பாஜக தலைவர் அத்வானி மேற்கொள்ள இருக்கும் ரத யாத்திரை பற்றி குறிப்பிட்டு, "இந்த அரசியல் சவாலை முறியடிக்க அனைவரும் தயாராகுங்கள்" என காங்கிரசாருக்கு அழைப்பு விடுத்தார்.

ஊழலுக்கு எதிராக அத்வானி மேற்கொள்ள இருக்கின்ற ரத யாத்திரைக்கு எதிராக பல்வேறு மட்டங்களில் எதிர்ப்புக்குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.

அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை இடித்தது அமெரிக்காவே


அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை இடித்தது அமெரிக்காவே


இரட்டை கோபுரத்தை இடித்தது யார் என்று கேட்டால் அனைவரும் சொல்வது ஒசாமா பின்லேடன். ஒரு வீட்டை இடிப்பதற்க்கே 20லிருந்து 30 நபர்கள் தேவைப்படும்போது, உலகத்திலேயே மிக உயர்ந்த கட்டிடம் என்று பெயர் பெற்ற ஒரு கட்டிடத்தை ஒரு தனி மனிதனால் இடித்து தரை மட்டமாக்க முடியுமா? முடியாது என்பதே பலரின் பதில். இரட்டை கோபுரத்தை இடித்ததில் தனி ஒரு மனிதனின் பெயரை குறிப்பிடுவதை விட அதை செய்தது ஒரு கூட்டம் என்று சொல்வதே சரியானது.

அப்படியானால் இரட்டை கோபுரத்தை இடித்தது எந்த கூட்டம்? அலசுவோம் வாருங்கள்...

இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட நிகழ்விற்க்குப் பிறகு நடந்த சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தோமேயானால், இடித்தது எந்த கூட்டம் என்ற முடிவுக்கு வரலாம்: இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதில் பலருக்கும் பல சந்தேகம் உள்ளது.

அமெரிக்காவில் உள்ள 75 பேராசிரியர்கள் (PROFESSOR) இந்த சம்பவம் அமெரிக்காவின் உள்வேளை(PROFESSOR) என்றார்கள். ஸ்டீவ் ஜோன் என்ற (PROFESSOR) கூறுகிறார்: 19 நபர்கள் சேர்ந்து இவ்வளவு பெரிய காரியத்தை செய்ய சாத்தியம் இல்லை. இரட்டை கோபுரத்தில் உள்ள இரும்பு தூணானது ஜெட் பெட்ரோலினால் எதுவும் ஆகாது. அதுவும் இரட்டை கோபுரம் சரிந்ததை பார்த்தோமேயானால், அங்கே வெடிகுண்டு உபயோகப்படுத்தப்பட்டுள்ளதை அறியலாம். அவ்வாறு சொன்னதால் அவர் வேளை நீக்கம் செய்யப்பட்டார்.

இரட்டை கோபுரத்தின் தூண்கள் அதிக வலிமையுடன் கட்டப்பட்டது. அதனை விமானத்தின் பெட்ரோலால் எரிக்க முடியுமா என்றால், அது முடியாது என்பதுதான் பதில். விமானத்தின் பெட்ரோல் 1000 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உள்ளது. இரட்டை கோபுரத்தின் தூண்களை 2000 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தால் கூட எரிக்க முடியாது என்று அமெரிக்க நாட்டின் இரட்டை கோபுரத்தை கட்டிய கம்பெனி கூறியது. 10 நாட்கள் பிறகு, விமானத்தின் பெட்ரோல் இரட்டை கோபுரத்தின் தூண்களை எறிக்கும் என்றது. இவர்கள் யாரை ஏமாற்றுகிறார்கள்?

விமானம் வளைந்த விதத்தை பற்றி விமான ஓட்டுனர் பலரிடும் கேட்டால், பயணிகள் விமானத்தை அவ்வாறு வளைப்பது சாத்தியமற்றது. ராணுவ விமானத்தை மட்டும் அவ்வாறு வளைக்க முடியும் என்கிறார்கள், என்பார்கள். (இதை யூத விமானியிடம் கேட்க கூடாது)

அடுத்து அவர்கள் சொல்லகூடிய முக்கிய தடையம் போன். பயணிகள் சிலர் தாங்கள் கடத்தப்பட்டுள்ளதை(!) வீட்டிற்கு தெரியப்படுத்துகிறார்கள். ஒரு போன், அம்மா! நான்தான் மார்க் பீகம். அம்மா! நான் பேசுவது கேட்கிறதா? அம்மா!.. அம்மா!.. (mom I am mark beegham. Can you hear me. Mao! Mom!.) மொபைல் துறையில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களிடம் சென்று கேளுங்கள், 32000 அடி உயரத்தில் மொபைலில் எத்தனை % நெட்வர்க் கிடைக்கும் என்று. நன்றாக தெரிந்துக்கொள்ளுங்கள்: 4000 அடியில் .04 % நெட்வர்க்தான் கிடைக்கும். 8000 அடியில் .01% நெட்வர்க்தான் கிடைக்கும். 32000 அடியில் .006% நெட்வர்க்தான் கிடைக்கும். நன்றாக சிந்தியுங்கள் சகோதரர்களே! 0% என்றால் நெட்வர்க்கே கிடைக்காது, .006% என்றால்?

விமானம் விபத்துக்குன்டானால் முக்கிய தடையமாக கருதுவது அதன் கருப்புப்பெட்டி. ஒவ்வொரு விமானத்திலும் 2 கருப்புப்பெட்டி இருக்கும். கருப்புப்பெட்டியானது 3000 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்திலும் எதுவும் ஆகாது. அவ்வாறு இருக்க 1000 டிகிரி சென்டிகிரேட்-ல் கருப்புப்பெட்டி அழிந்து விட்டது என்று கூறுவது எவ்வளவு பெரிய பொய்.

இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு 2 நாட்களுக்குப் பிறகு வும்ம என்ற பத்திரிக்கைக்கு ஒசாமா பின்லேடன் அழித்த பேட்டியில் குழந்தைகளையும், பெண்களையும், அப்பாவிகளையும் கொள்வது இஸ்லாம் தடை செய்துள்ளது என்றார். இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு ஒசாமா பின்லேடன்தான் காரணம் என்று காட்டிய ஊடகங்கள், அவர் அழித்த பேட்டியை காண்பித்ததா?. அல்-ஜஸிரா ஊடகத்தை தவிர.

ஒசாமா பின்லேடன் மீது அநியாயமாக பழியைப்போட்டது, ஆப்கானிஸ்தானில் உள்ள பெட்ரோல் வளத்தை கைப்பற்றவே அன்றி வேறு காரணமில்லை.

இப்பொழுது சொல்லுங்கள்! இரட்டை கோபுரத்தை இடித்தது யார்?

Source from: www.ibujdesign.com

கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு


கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு


கோலா குளிர்பானங்களை பருகுவோர் எண்ணிக்கை உலகளவில் அதிகம். கோடிக் கணக்கான லிட்டர் கோலா பானங்கள் ஆண்டுதோறும் பருகப்படுகின்றன. இது போன்ற பானங்கள் இன்றி, உயிர் வாழ முடியாது என்றே கூட பலர் நினைக்கின்றனர். கோககோலா, பெப்சி, லிம்கா போன்றவை, பட்டி தொட்டிகளில் கூட கிடைக்கின்றன. சூப்பர் மார்க்கெட்டுகளில், கோலா பானங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை பருக, சினிமா நட்சத்திரங்களும் ஊக்குவிக் கின்றனர். கோலா பானங்களில் உள்ள ஆபத்தை உணராமல், கர்ப்பிணிகள், குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளோர் கூட, இவற்றை பருகுகின்றனர்.
இந்த பானங்களில் அப்படி என்ன உள்ளது? என்ன ஆபத்து?
பாஸ்பாரிக் அமிலம், சர்க்கரை, காபீன், நிறமி மற்றும் வாசனை ஊட்டி ஆகியவை இதில் உள்ளன. துருவை கரைத்தல், ஆணியை கரைத்தல், சுண்ணாம்பை கரைத்தல் ஆகிய பணிகளைத் திறம்பட செய்யும், பாஸ்பாரிக் அமிலம், இதில், 55 சதவீதம் உள்ளது. இதனால், கோலாவில் அமிலத்தன்மை, 2.6 பி.எச்., அளவு எகிறுகிறது. உணவை பதப்படுத்த பயன்படும் வினிகரும், இதே அளவு அமிலத்தன்மை கொண்டது. கோலாவில் சர்க்கரையும், வாசனை ஊட்டியும் சேர்க்கப் படுவதால், வினிகரை விட சுவையாக உள்ளது.
வினிகரை குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?
கோலாவை குடித்தால் பற்கள் பாதிப்படையும்; பல்லில் குழி விழும். நம் பல்லை, இது போன்ற பானங்களில் இரண்டு நாட்கள் போட்டு வைத்தால், பல் மிருதுவாகி விடும். 250 மி.லி., பானத்தில், 150 கலோரிச் சத்து உள்ளது. உடலுக்குத் தேவை யான சத்துக் களோ, வைட்டமினோ, தாதுப் பொருட்களோ இதில் இல்லை. இதில் உள்ள சர்க்கரை, உடனடியாக ரத்தத்தில் கலந்து, கொழுப்பாக மாறுகிறது. தொடர்ந்து பருகினால், உடல் எடை அதிகரிப்பு ஏற்படுகிறது. குழந்தைகள் இந்த பானத்திற்கு வெகு சீக்கிரம் அடிமையாகி விடுகின்றனர். சர்க்கரையும், காபீனும் இதில் இருப்பதால், இந்த நிலை ஏற்படுகிறது. ஒரு கப் காபியில் 70 – 125, டீயில் 15 – 75, கோகோவில் 10 – 17 மற்றும் ஒரு சாக்லேட் கட்டியில், 60 – 70 மி.கி., அளவுள்ள காபீன், 360 மி.லி., கோலா பானத்தில், 50 – 65 அளவு உள் ளது. இதில் உள்ள அமிலமும், காபீனும், வயிற்றில் அல்சரை அதிகரிக்கின்றன. உடலி லிருந்து சுண்ணாம்புச் சத்து வெளியேற, காபீன் காரணமாக அமைகிறது. காபீனுடன், குளிர் பானங்களில் உள்ள பாஸ்பரசும் சேர்ந்து, எலும்பு தேய் மானத்தை உருவாக்கி விடுகின்றன. இதனால், எலும்பு முறிவு ஏற் பட்டு விடுகிறது. காபீன், இதய செயல்பாட்டையும், மத்திய நரம்பு மண்டலத்தையும் ஊக்குவிக்கிறது. இதனால், அதிக இதயத் துடிப்பு மற்றும் தூக்கமின்மை ஆகியவை ஏற்படு கின்றன. குழந்தைகள் அதிகத் துடிப்புடன், தூக்கம் வராமல் அவதிப்படுவர். தூங்கினாலும், அடிக்கடி விழித்துக் கொள்வர். இதனால், பெற்றோர் திண்டாடும் நிலை ஏற்படும். காபீன், ரத்த அழுத்தத் தையும் அதிகரிக்கச் செய்யும்.
எனவே, எப்போதும் படபடப்பாய் இருப்பவர்கள், காபீன் அடங்கிய பானங்களை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள், நாள் ஒன்றுக்கு, 300 மி.கி., அளவு காபீன் பருகலாம்; அதற்கு மேல் பருகக் கூடாது. இந்த பானங்களை குடிப்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு எந்த பலனும் ஏற்படாது; பணம் செலவழிவது மட்டுமே மிஞ்சும்.

காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 12)


காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 12) 


 தொடர் ..... 12

தொடர்ந்து பூங்காவில் மேலும் பலரை சந்தித்தோம். அங்கு பயாஸ் (21) என்ற இளைஞரை சந்தித்தோம். சோபுர் (Sopure) என்ற ஊரிலிருந்து வந்திருப்பதாக கூறினார். அங்குள்ள கல்லூரியில் B.A. மூன்றாமாண்டு படிப்பதாகவும் கூறினார்.

காஷ்மீரின் நிலவரம் குறித்து சகஜமாக பேசினார். இந்திய ராணுவம் எங்களை மிகவும் தொந்தரவு செய்கிறது. இந்திய ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும் என்றவர் எங்களுக்கு சுதந்திரம் கூட இரண்டாவதுதான். முதலில் எங்களுக்கு நிம்மதிதான் தேவை என்றார்.

பிறகு ஜான் முஸ்தாக் (21) என்பவரை சந்தித்தோம். அவரோடு ஏழெட்டு நண்பர்கள் ஒன்றாக இருந்தனர். குப்வாரா (KUPWARA) என்ற ஊரிலிருந்து சுற்றுலா வந்திருப்பதாக சொன்னார்கள். எங்கள் ஊர் காஷ்மீரின் அன்பையும், அழகையும் தன்னகத்தே கொண்டது என்று தங்கள் ஊர் பெருமையையும் கூறினார்கள். அங்குள்ள கல்லூரியில் அனைவரும் மூன்றாமாண்டு படிப்பதாகவும் கூறினார்கள்.

எங்களை நாங்கள் அறிமுகம் செய்து கொண்டோம். மிக தைரியமாகவும், சுற்றிலும் யாராவது கண்காணிப்பார்களோ என்ற அச்சமும் துளி கூட இல்லாமல் பேசினார்கள்.

எங்களது போராட்டத்தை தீவிரவாதம் என்று கூறுகிறார்கள். சுதந்திரத்திற்காக போராடுவது எப்படி தீவிரவாதமாகும்! என்றவர்கள், காஷ்மீருக்கு இந்தியா சுதந்திரமளிப்பது தவிர்க்க முடியாததாகும் என்றார்கள். எங்கள் மண்ணை நாங்களே ஆள வேண்டும் என்று விரும்புகிறோம். இது தவறா? என்று எங்களிடம் கேள்வியெழுப்பினார்கள். அந்த நண்பர்கள் குழாம் சராமாரியாக எங்களை நோக்கி தங்களின் நியாயங்களை கேட்டனர்.

காஷ்மீரில் செல்வாக்குள்ள தலைவர்கள் யார் என்று கேட்டதுதான் தாமதம், அனைவரும் ஒரே குரலில் சொன்னது ஜீலானியின் பெயரைத்தான்.

இங்கே ஒரு விஷயத்தை நினைவூட்ட விரும்புகிறோம். காஷ்மீரில் அரசியல் களத்தில் அப்துல்லா குடும்பத்தினரின் தேசிய மாநாட்டு கட்சியும், முப்தி மெஹபூபா ஷரிபின் மக்கள் ஜனநாயக கட்சியும் செயல்படுகின்றன. லடாக் மற்றும் ஜம்மு பகுதியில் காங்ரஸ், பாஜக, சீக்கியர்களின் சிறுத்தைகள் கட்சி ஆகியன வலுவாக உள்ளது.

ஆனால் தனி நாடும் கேட்கும் போராட்ட தலைவர்களுக்குதான் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வரவேற்பு இருக்கிறது. அரசியல் ரீதியாக உமர் அப்துல்லாவையும், அவர் குடும்பத்தையும் காஷ்மீரிகள் வெறுக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிய முடிந்தது. சேக் அப்துல்லா, அவர் மகன் ஃபருக் அப்துல்லா, பேரன் உமர் அப்துல்லா ஆகியோரை துரோகிகள் என இளைஞர்கள் விமர்சித்தார்கள்.

அதே நேரம் மெஹபூபா முஃப்தி மீது பலருக்கு நல்ல மரியாதை இருந்ததையும் அறிந்தோம்.
இதனிடையே மக்கள் செல்வாக்கு என்ற வகையில் ஹுரியத் அமைப்பின் தலைவர் ஜீலானி, மற்றொரு ஹுரியத் அமைப்பின் தலைவர் மீர்வாய்ஸ் உமர் பாரூக், ஜனநாயக விடுதலை கட்சி தலைவர் சபீர், ஜம்மு&காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் ஆகியோருக்கிடையே தான் காஷ்மீர் பள்ளத்தாக்கில் செல்வாக்கு இருக்கிறது.
இதில் 90 சதவீத ஆதரவு ஜீலானிக்குதான் இருக்கிறது என்பது எங்களது பேட்டிகளின்போதும், சந்திப்புகளின் போதும் அறிய முடிந்தது.

அவரை ஆதரித்தவர்களிடம் ஏன் அவரை ஆதரிக்கிறீர்கள்? என்றதற்கு, அவர்தான் எங்களின் உணர்வுகளை புரிந்து செயல்படுகிறார் என்றார்கள்.

அவருக்கு இப்போது வயது 83 ஆகிறது. ஜமாதி&இ&இஸ்லாமிதான் அவரது பள்ளிக்கூடம். அதே நேரம் அவரது இஸ்லாமிய அறிவுரைகளிலிருந்து மாறுபடும் மற்றவர்களும் கூட அவரை சமரசமில்லாத உறுதியான தலைவர் என்று பாராட்டுகிறார்கள்.

நாங்கள் முகல் பூங்காவிலிருந்து சாலிமார் தோட்டம் போனாம். அங்கு மொஹ்சின் என்பவரை, சந்தித்தோம். அவர் பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் பல்கலைக் கழகத்தில் படிப்பதாக சொன்னார்.

காஷ்மீரில் வேலை இல்லா திண்டாட்டம் நிலவுவதாக வருத்தப்பட்டவர், அரசுப் படைகளின் நடவடிக்கைகள் குறித்து குற்றம் சாட்டினார். இங்கு யாரை கேட்டாலும், எங்களுக்கு முதலில் சுதந்திரம் தாருங்கள் என்பதையே கூறுவார்கள் என்றார்.

அங்கு பல கல்லூரி மாணவ & மாணவிகள் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் நாங்கள் பேட்டி என்றதும் மறுத்துவிட்டார்கள்.

(இன்ஷா அல்லாஹ் பணயங்கள் தொடரும்...)


பூங்காவிலும் சுதந்திரம் கோரும் வாசகங்கள்...
சாலிமார் தோட்டத்தின் எழில்மிகு மண்டபம்...
பயாஸ் மற்றும் அவரது நண்பர்கள்...

காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 13)


காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 13) 



தொடர் ..... 13

அடுத்து NISHAT எனப்படும் பகுதிக்கு சென்றோம். இதுதான் முகலியர் கட்டிய பூங்காக்களிலேயே மிகவும் பெரியது.

ஸ்ரீநகரின் அனைத்து பூங்காக்களுமே நகரின் கிழக்கு எல்லையான அந்த மலைத் தொடருக்கும், டால் ஏரிக்கும் இடையே அமைந்திருப்பவைதான் என்பதை அறிந்து கொண்டோம்.
இப்பூங்காவில் இருந்து எட்டிப் பார்த்தால் டால் ஏரியின் மறுமுனையில் உள்ள ஹஸ்ரத்பால் தெரியும்.

1634ல் முகலாய மன்னர் ஷாஜஹானின் ஆட்சியில் அவரது மருமகன் உருவாக்கியது என அங்கிருந்த கல்வெட்டு தகவல்கள் தெரிவிக்கிறது.

அங்கிருந்து பார்த்தால் மலை உச்சியில் தெற்கிலும், வடக்கிலும் இரண்டு முகலாயர் கோட்டைகள் தெரிந்தது. அவை இப்போது ராணுவ முகாம்களில் செயல்படுகிறது.

நாங்கள் அங்கு லுஹர் மற்றும் அஸர் தொழுகைகளை நிறைவேற்றினோம். இப்போது அங்கு வெயில் காலம். நாங்கள் மலையிலிருந்து ஓடிவரும் அந்த தண்ணீரில் ஒளு செய்தபோது மிகவும் இதமாக இருந்தது.

இங்கிருந்து வெளியேறும் நீர் டால் ஏரிக்கு சென்று, பிறகு விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. பேட்டி எடுப்பதற்கான உகந்த சூழல் இல்லை. காரணம் இதே பகுதியை 1/2 மணி நேரம் கடந்து மீண்டும் நாங்கள் வந்தபோது அரசுப்படைகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாங்கள் அருகில் இருந்த ஒரு உணவகத்தில் சாப்பிட்டோம். காஷ்மீரில் சுவையான சாப்பாடு மிகவும் அரிது என்பதை நாங்கள் அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொண்டோம்.

பிறகு நாங்கள் ராஜ்பவன் கடந்து Chesma Shahi   என்ற பூங்காவுக்கு போனாம். ராணுவ கெடுபிடிகள் நிறைந்திருந்தது.

பொதுவாக காஷ்மீரில் இரவு நேரத்தில் பயணிக்கும்போது வாகனங்களில் விளக்குகள் எரிய வேண்டும். கறுப்பு வண்ண கூலிங் ஸ்டிக்கர்கள் அங்கு கார் கண்ணாடிகளில் ஒட்டக் கூடாது.
அதாவது வெளியிலிருந்து பார்த்தாலே, உள்ளே இருப்பவர்கள் தெரிய வேண்டும்.
இதற்கு இடையிலேயே துலிப் தோட்டமும், நேரு பூங்காவும் இருக்கிறது. இவையெல்லாம் சமீப காலத்தில் உருவாக்கப்பட்டவை.

நாங்கள் இதையெல்லாம் சுற்றி வந்தபோது ஒரு விஷயத்தை புரிந்துக் கொள்ள முடிந்தது. அங்கு தீவிரவாத பயம் துளியும் இல்லை என்பதையும், வெளிமாநில மக்களும், வெளிநாட்டு மக்களும் இயல்பாக சுற்றிதிரிவதையும் இந்துக்களும், சீக்கியர்களும், மற்றவர்களும் பயமின்றி அங்கு வாழ்கிறார்கள் என்பதையும், அவரவர் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் செயல்படுகின்றன என்பதையும் அறிந்தோம்.

ஆனால், இந்திய அரசும், சில ஊடகங்களும் மிகைப்படுத்திய செய்திகளை பரப்பி மக்கள் நடமாடவே முடியாத தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பது போல தோற்றம் உருவாக்கப்பட்டடிருப்பதையும் புரிய முடிந்தது.

காஷ்மீரில் நான்கு பேருக்கு ஒரு அரசுப்படை வீரர் நிறுத்தப்பட்டிருப்பது ஏன்? என காஷ்மீரிகள் கேட்கும் கேள்வி நியாயமானதே.

ராணுவத்தையும், துணை ராணுவத்தையும் எல்லையில் நிறுத்தாமல், பீதியும், பயங்கரவாதமும் நிலவுவது போல காரணங்களை உருவாக்கி அதை சாக்காக வைத்து எங்களை அடிமைப்படுத்துவது நியாயம்தானா? என்ற கேள்விக்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம்?

பிறகு நாங்கள் எங்களின் பேட்டிகளை முடித்துவிட்டு புகழ்பெற்ற டால் ஏரிக்கு புறப்பட்டோம். அது 18 கி.மீ. சுற்றளவு கொண்டது. பல கரைகள் உண்டு. ஒவ்வொரு கரையிலும் வாடகை படகுகள் காத்திருக்கின்றன. இதை நம்பியே பல ஆயிரம் பேர் வாழ்கிறார்கள்.

ஒரு படகுக்கு என்ன விலை என்பது அரசு சார்பில் அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு படகில் 4 பேர் செல்லலாம். இதுதான் மிகச்சிறியது. நாங்கள் ஏழு பேர் இரண்டு படகை 900 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்தோம்.

மிகவும் ரம்மியமான இன்பமான பயணம் அது. இதே ஏரியில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் வந்தால் பயணம் செய்ய முடியாதாம். காரணம் தண்ணீர் உறைந்து பனிக்கட்டிகளாக கிடக்கும். அதில் ஏறி குதித்து விளையாடுவார்களாம்.

(இன்ஷா அல்லாஹ்  (05.09.2011) திங்கட்கிழமை பணயங்கள் தொடரும்...)

நிஷாட் பூங்கா....
தொழுகையில்...
நிஷாட் பூங்காவிலிருந்து டால் ஏரியின் அடுத்த முனையில் ஹஜரத்பால் தெரியும்...
டால் ஏரியில் படகில் புறப்படுகிறோம்.

காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 11)


காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 11) 



தொடர் ..... 11

அப்போது நாலைந்து கல்லூரிப் பெண்கள் அங்கு வந்தனர்.

அவர்களிடம் சென்று எங்களை அறிமுகம் செய்துக் கொண்டோம். முதலில் அவர்கள் மெல்ல தயங்கினாலும் பிறகு சகஜமாக பேசினார்கள்.

எங்களுக்கு சுதந்திரம் தேவை. ஆனால் அதற்கு ரத்தத்தையும் தாண்டி நிறைய விலை கொடுக்க வேண்டிவரும் என அஞ்சுகிறோம் என்று முதலில் ஒரு மாணவி கருத்து கூறினார்.

அருகிலிருந்த இன்னொரு மாணவி, நிறைய இளைஞர்களை எங்களின் போராட்டத்தில் இழந்து விட்டோம். இனியும் அப்படி உயிர்களை இழக்க விரும்பவில்லை. இங்கு தீவிரவாதிகள் யாருமில்லை. இந்திய ராணுவம்தான் தீவிரவாதத்தை உருவாக்குகிறது என பொட்டில் அறைந்தது போல கூறினார்கள். இந்திய ராணுவம் காஷ்மீர் பெண்களை கற்பழிக்கிறது. என்ற கோபத்தையும் அம்மாணவிகள் வெளிப்படுத்தினர்.

அந்த மாணவிகள் தங்களது முதலாம் ஆண்டு படிப்பு வீணாகிவிட்டது, பெரும்பாலான நாட்கள் கல்லூரி திறக்கவே இல்லை என்றும் குறைப்பட்டுக் கொண்டார்கள்.

இந்திய மக்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என கேட்டோம். ஒரே குரலில் எங்களை சுதந்திரமாக வாழ விடுங்கள் என்றனர்.

காஷ்மீர் அரசின் செயல்பாடு குறித்து கேட்டோம். அதில் ஒரு மாணவி உமர் அப்துல்லாவை பாராட்டினார். மற்ற மாணவிகள் இது அவருடைய கருத்து என்று கூறி தங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்றனர்.

ஸ்ரீநகர் அரசு கலைக் கல்லூரியில் B.A. இரண்டாமாண்டு படிப்பதாக சொன்ன அவர்கள் தங்கள் பெயரை கூறவும், படம் எடுக்கவும் பயந்தார்கள்.

எங்களுடைய பேட்டி வரும். அப்போது நாங்கள் உயிரோடு இருக்க மாட்டோம் என்று ஒரு மாணவி காஷ்மீரின் பீதி நிலையை எடுத்துரைத்தார்.

அதன் பிறகு Green Park சென்றோம். முந்தைய பூங்காவைப் போலவே அனைத்தையும் கொண்டதாக இருந்தது. இங்கே ஒரு விஷயத்தை குறிப்பிட வேண்டும். ஸ்ரீநகரின் கிழக்கு எல்லையாக இருக்கும் அந்த ஒரே மலைத் தொடரின் வெவ்வேறு பகுதிகளில்தான் சற்று இடைவெளி விட்டு அனைத்து பூங்காக்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

முகலாயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பூங்காக்கள் யாவும் ஒரு சிறிய மண்டபம், அதன் வழியாக மலையிலிருந்து துள்ளி வரும் நதி நீரை அரவணைக்கும் சிறிய கால்வாய் என இவ்விரண்டையும் கொண்டதாக இருக்கிறது.

நாங்கள் Shalimar Mughal Garden சென்றபோது அங்கு பள்ளிக்கூடம் படிக்கும் மாணவர்கள் நீரில் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுள் 4வது படிக்கும் உமர் என்ற மாணவனிடம் பேச்சுக் கொடுத்தோம்.

இங்கு சுவர்களில் எல்லாம் Go India Go  என எழுதியிருக்கிறார்களே... என்றோம். ஆமாம் எங்களுக்கு Freedomவேண்டும் என்றான்.

நாங்கள் மேலும் பேச்சுக் கொடுத்தபோது, அவன் விளையாட்டில் ஆர்வம் காட்டியபடியே ஓடிவிட்டான். சிறுவர்களிடமும் கூட சுதந்திரம் வேண்டும் என்ற அரசியல் உணர்வு தலைதூக்கி இருப்பதை உணர்ந்துகொண்டோம். காஷ்மீரின் வரலாறும், அங்கு நடைபெறும் சமகால நிகழ்வுகளும், சுதந்திரம் பற்றிய செய்திகளும் காஷ்மீரிகளின் குடும்பங்களில் அன்றாட உரையாடல்களாக இருக்கின்றன. அதனுடைய விளைவு தான் சிறுவர்களிடமும் பிரதிபலிக்கிறது. அங்கு பள்ளிகூட ஆசிரியர்களும் இதை போதிக்கிறார்கள். இதை யாராலும் தடுக்க முடியவில்லை. காரணம் உண்மைகளை தடுக்க இது வரை எந்த ஆயுதங்களும் தயாரிக்கபடவில்லை தானே...

(இன்ஷா அல்லாஹ் பணயங்கள் தொடரும்...)


பூங்காவின் அழகிய தோற்றம்...
சுவர்களில், இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள்...
கல்லூரி மாணவிகளுடன் பேட்டி...
பள்ளிகூட மாணவர்களுடன் ...

காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 10)


காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 10) 



தொடர் ..... 10

... ஹஸ்ரத் பால் பள்ளிக்கு புறப்பட்டோம்.

இடையில் ஒரு பெரிய சீக்கிய குருத்வாரா இருந்தது. சீக்கிய மக்கள் சகஜமாக வந்து போய்க் கொண்டிருந்தனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கோயில்கள் குறைவாக இருந்தாலும் மக்கள் பயமின்றி வந்து போகின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சில சர்ச்சுககளையும் நாங்கள் பார்த்தோம். சிறுபான்மை சீக்கியர், இந்துக்கள், கிரித்தவர்களின் வழிபாட்டுரிமைக்கு அங்கே எந்த தடையும் இல்லை.

அதுபோல் தொழில் மற்றும் வணிகத்திலும் அம்மக்கள் சுதந்திரமாக ஈடுபடுகிறார்கள். சமய நல்லிணக்கமாக அங்கு மக்கள் வாழ்கிறார்கள். என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

ஹஸ்ரத்பாலுக்கு செல்லும் வழியில் ஒரு சிறிய ஏரி இருக்கிறது. சற்று தூரத்தில் National College Of Institute என்ற கல்லூரி வருகிறது. அழகான வளாகமாக அது காட்சியளித்தது. பசுமையான புல்வெளி, தகர கூரை வேய்ந்த கட்டிடங்கள் என அது உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதன் வளாக நுழைவாயிலுக்கு மௌலானா ரூமியின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. எங்களின் கார் ஓட்டுனர் இங்கு நிறைய இந்திய மாணவர்கள் படிக்கிறார்கள் என்றார். இந்த ஒற்றை வரி காஷ்மீரிகள் தங்களை இந்தியர்களாக கருதுவதில்லை என்பதையும், தங்களை காஷ்மீரிகள் என கூறிக் கொள்வதையே விரும்புகிறார்கள் என்பதையும் உணர்ந்தோம்.

அடுத்தடுத்த பல சந்திப்புகளிலும் பலரும் எங்களை இந்தியாவிலிருந்து வந்திருக்கிறீர்களா? என்று கேட்டார்கள்.

நாகாலாந்து, மணிப்பூர்  உள்ளிட்ட இந்தியாவில் வடகிழக்கில் வாழும் மக்களும் இதே போன்ற மனநிலையில், டெல்லிக்கு வருவதை இந்தியாவுக்கு போகிறோம் என்று சொல்வார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

சற்று நேரத்தில் ஹஸ்ரத் பால் வந்துவிட்டது.

மார்பிள்ஸ்களால் அழகான வேலைப்பாடுகளை கொண்ட மூன்று தனித்தனி நுழைவாயில்கள் அருகருகே உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன் வலது புறத்தில் பெரிய ஈத்கா மைதானம் உள்ளது.
ஹஸ்ரத் பாலை ஒரு தர்ஹா என்றே நாங்கள் அறிந்திருந்தோம். அதன் ஒரு பெரிய டூம் தாஜ்மஹாலை நினைவூட்டியது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலைமுடி ஒன்று இங்கு பாதுகாக்கப்படுவதாக ஒரு சாரர் நம்புகிறார்கள். உள்ளே சென்றால் அது தர்ஹா இல்லை. பள்ளிவாசல் என்று அறிந்தோம்.
மிஹ்ராபுக்கு மேலே ஒரு மாடம் இருக்கிறது. போலிசார் உள்ளே இயந்திர துப்பாக்கிகளுடன் சுற்றுகிறார்கள்.

அந்த மாடத்தில்தான் நபிகள் நாயகத்தின் தலை முடி பாதுகாக்கப்படுவதாக கூறினார்கள்.
நபிகள் நாயகத்தின் தலைமுடியை யார்? எப்போது? கொண்டு வந்தது என்பது பற்றிய ஆதார தகவல்கள் எதுவுமில்லை. இது நபிகள் நாயகத்தின் முடிதானா? என்பதை இறைவன் அறிவான்.
இப்படி தனது முடியை புனிதமாக கருதி பாதுகாக்க நபிகள் நாயகம் உத்தரவிட்டார்களா?? என்பதற்கான எந்த ஹதீஸ் குறிப்புகளும் இல்லை.

இதை நாங்கள் எங்களுக்குள் விவாதித்துக் கொண்டோம். சில வருடங்களுக்கு முன்பாக அந்த முடி காணமல் போனதும், பிறகு கண்டெடுக்கப்பட்டதாக அரசு அறிவித்ததும் நினைவுக்கு வந்தது.

இங்கு இறைவனுக்காக தொழுகை நடக்கிறதா? புனித முடிக்காக தொழுகை நடக்கிறதா? என புரியாமல் அதிலிருந்து வெளியானோம்.

டல் ஏரியின் அழகிய கரையில்தான் ஹஸ்ரத் பால் இருக்கிறது. முகலாயர் காலத்தில் இது உருவாக்கப்பட்டிருக்கலாம் என ஒரு போலிஸார் கூறினார். சுமார் 45 வருடங்களுக்கு முன்பாக இது புதிதாக கட்டப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

காரணம் முகலாயர்களின் கட்டிடக் கலை போன்ற டூம் வடிவ மஸ்ஜிதுகள் காஷ்மீரில் மிகவும் குறைவு.

பிறகு நாங்கள் புகழ்பெற்ற சார்மினார் கார்டனுக்கு சென்றோம். எல்லாப் பூங்காக்களிலும் நுழைவுக் கட்டணம் உண்டு.

அங்கு நிறைய பள்ளிக்கூட பிள்ளைகளை ஆசிரியர்கள் கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து வந்திருந்தார்கள்.

அப்படி பிள்ளைகளை கூட்டி வந்த ஆசிரியரிடம் மெல்ல பேச்சு கொடுத்தோம். காஷ்மீரில் இப்படி திறந்த வெளியில் பேட்டி எடுப்பதெல்லாம் மிகவும் ஆபத்தானது.

நாங்கள் எங்களை பத்திரிக்கையாளர்களாவோ, உண்மை அறியும் குழுவினராக காட்டிக் கொள்ளவில்லை. சுற்றுலா பயணிகள் போலவே பேச்சுக் கொடுத்தோம்.

காஷ்மீர் இப்போது இருப்பதுபோல் தொடரவேண்டும் என விரும்புகிறீர்களா? அல்லது வேறு அரசியல் தீர்வை விரும்புகிறீர்களா? என்றதும், எங்களுக்கு சுதந்திரம் தேவை. நாங்கள் நிம்மதியாக வாழ அது உதவும் என்றவர், நீண்ட நேரம் பேசவில்லை.

காரணம் பல்வேறு இடங்களை பார்க்க அவருக்கு பின்னால் பள்ளிக்கூட மாணவிகள் நீண்ட வரிசையில் நின்றுக் கொண்டிருந்தனர்.

அந்த பூங்கா சிறிய அளவிளானது. ஆனாலும் நிழல் பரப்பி இதமாக இருந்தது.
அந்த பூங்கா ஒரு சிறிய அணையை ஒட்டியிருந்தது. அருகிலுள்ள பெரிய மலையிலிருந்து சுரக்கும் தண்ணீர் இந்த அணையில் சேமிக்கப்படுகிறது.

அதிலிருந்து ஒரு சிறிய கால்வாய் அமைக்கப்பட்டு சலசலவென தண்ணீர் பூங்காவின் நடுவே ஓடிக் கொண்டிருந்தது. நேராக விவசாய நிலங்களை நோக்கி இத்தண்ணீர் ஓடுகிறது.
நாங்கள் அந்த அணைக்கு சென்று மலையை ரசித்தோம். அப்போது நாலைந்து கல்லூரிப் பெண்கள் அங்கு வந்தனர்.

அவர்களிடம் சென்று எங்களை அறிமுகம் செய்துக் கொண்டோம். முதலில் அவர்கள் மெல்ல தயங்கினாலும் பிறகு சகஜமாக பேசினார்கள்.

(இன்ஷா அல்லாஹ் பயணம் தொடரும்...)

ஹஸ்ரத் பாலுக்கு வெளியே...
கண்ணியமான ஆடைகளுடன் சுற்றி வரும் பொதுமக்கள்...
பள்ளிகூட ஆசிரியருடன் பேட்டி..._

மோடியை மீறி லோகாயுக்தாவை நியமித்தார் குஜராத் ஆளுநர்!


மோடியை மீறி லோகாயுக்தாவை நியமித்தார் குஜராத் ஆளுநர்!

சனி, 27 ஆகஸ்டு 2011 05:43 இந்நேரம் India
E-mailஅச்செடுக்க
குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடியைக் கலந்தாலோசனை செய்யாமல் அம்மாநில ஆளுநர் வெள்ளிக் கிழமையன்று லோகாயுக்தாவை நியமித்து உத்தரவிட்டுள்ளார். ஆளுநரின் இந்த உத்தரவை எதிர்த்து குஜராத் அரசு உடனடியாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

கடந்த ஏழரை ஆண்டுகளாக நியமிக்கப்படாமல் உள்ள லோகாயுக்தாவை நியமிக்குமாறு கோரி குஜராத் ஆளுநர் கமலா பனிவாலை சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சக்திசிங் கோஹில் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் வெள்ளிக் கிழமை மதியம் சந்தித்தனர்.

ஆளுநரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த எதிர்கட்சித் தலைவர் கோஹில், ஓய்வு பெற்ற குஜராத் உயர் நீதரிமன்ற நீதிபதி ஆர்.ஏ. மேத்தாவை லோகாயுக்தாவாக நியமித்து வியாழக் கிழமையன்று அரசாணை பிறப்பித்துள்ளதாக ஆளுநர் கமலா கூறியதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். லோகாயுக்தா நியமனம் குறித்த கோப்பு மாநில அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் கூறியுள்ளார்.

ஆளுநரின் இந்த உத்தரவை எதிர்த்து, முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

75 வயதான மேத்தா குஜராத் உயர் நீதிமன்றத்தில் 1982ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டு வரை நீதிபதியாகப் பணியாற்றியவர். சில முறை அவர் தலைமை நீதிபதி பொறுப்பிலும் இருந்துள்ளார். குஜராத் மாநில லோகாயுக்தாவாக மேத்தாவை நியமிக்க அம்மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி முகோபாத்யாயா பரிந்துரைத்தார். இவரது பரிந்துரையை காங்கிரஸ் கட்சியும் ஏற்றுக் கொண்டது.

மாநில லோகாயுக்தா சட்டத்தின்படி, லோகாயுக்தாவை நியமிப்பதற்கு ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது என்றும் மாநில அரசு இதில் தலையிட முடியாது என்றும் கோஹில் கூறியுள்ளார்.

நீதிபதி மேத்தாவை லோகாயுக்தாவாக நியமிக்கப்பட்டது தொடர்பான அரசாணையை வெளியிடுமாறு பல நாள்களுக்கு முன்னரே ஆளுநர் மாநில அரசைக் கேட்டுக் கொண்டு, பின்னர் இதுகுறித்து பலமுறை நினைவூட்டல் அனுப்பியும் மாநில அரசு செயல்படாததால் ஆளுநரே நேரடியாக லோகாயுக்தாவை நியமிக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார் என்றும் கோஹில் கூறியுள்ளார்.

ஆளுநரின் இச்செயல் சட்டத்துக்குப் புறம்பானது என்று வர்ணித்துள்ள அமைச்சரவைச் செய்தித் தொடர்பாளர் மற்றும் சுகாதார அமைச்சர் ஜெயநாரயன் வியாஸ், அமைச்சரவையின் ஆலோசனைகளுக்கு ஏற்படவே ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும் எந்த ஒரு நியமனத்திலும் அரசை மீறி செயல்படக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

ஆளுநருக்கும் ஆளும் கட்சிக்கும் மோதல் ஏற்படும் இரண்டாவது மாநிலமாக குஜராத் ஆகியுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சிக்கும் ஆளுநருக்கும் இடையே ஏற்படும் உரசல் முடிவுக்கு வந்துள்ள நிலையில் குஜராத்தில் இது தொடங்கியுள்ளது குறிப்பிடத் தக்கது.

காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 9)


காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 9) 


தொடர் ..... 9

பிறகு நாங்கள் காரில் ஏறி புகழ்பெற்ற ஸ்ரீநகரின் ஜாமியா மஸ்ஜிதுக்கு புறப்பட்டோம்.
ஸ்ரீநகரின் கடை வீதிகளையும், நகர அமைப்பையும, மக்களின் வாழ்க்கை முறைகளையும் காரில் இருந்தவாரே பார்த்து சென்றோம்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் 85% முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அதுவும் ஸ்ரீநகரில் மட்டும் 90% முஸ்லிம்களாகவே இருக்கிறார்கள்.

அவர்களது உடைகள் வட இந்திய மற்றும் பாகிஸ்தானிய முஸ்லிம்கள் அணியும் ஆடைகளாகவே உள்ளது.

பெரும்பாலான வீதிகள் சுத்தமாக இருக்கின்றன. கடைகள் பெரும்பாலும் 10 மணிக்கு பிறகே திறக்கப்படுகின்றன. ஆனால், உலக சுற்றுலா நகருக்கேற்ற வகையில் அழகுப்படுத்தப்படாமல் வழக்கமான இந்திய நகர்களைப் போலவே இருக்கிறது. இந்தியாவின் புதுடெல்லி, சண்டிகர், பெங்களூருக்கு அடுத்து சுத்தமான வீதிகள் உள்ள நகர் எனலாம்.

பெரும்பாலான ஆட்டோக்கள் தூய்மையாகவும், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் வாங்கப்பட்டது போலவும் இருக்கின்றன. குளிரை தாங்கும் வகையில் ஆட்டோக்களில் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் பேருந்துகள்தான் படுமோசமாக இருக்கிறது. 20 வருடங்களுக்கு முன்பாக நம் தமிழகத்தில் ஓடிய பேருந்துகளை விட மோசமாக இருக்கிறது. அதைவிட மோசம் என்னவெனில், அதை அலங்கரிப்பு என்ற பெயரில் பல வண்ணங்களை தீட்டி, அருவெறுப்பான தோற்றத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

இது காஷ்மீரில் கோடைக்காலம் என்பதால், மக்கள் இயல்பாக இருந்தார்கள். நாங்கள் எதிர்பார்த்த குளிர் இல்லை.
எங்கள் கார் டிரைவர் காரை, ஜாமியா மஸ்ஜித் அருகே நிறுத்தினார். இது காஷ்மீரிகளுக்கு மிகமிக முக்கியமான பகுதி. பள்ளிவாசலை சுற்றிலும் சிறிய பஜார் இருந்தது.

பிரம்மாண்டமான நுழைவாயிலை கடந்து உள்ளே சென்றோம். பெரிய, பெரிய மரங்களை தூண்களாக கொண்டு இப்பள்ளி அமைக்கப்பட்டிருப்பதுதான் அதன் சிறப்பாகும்.
தேவதாரு மரங்களாலான அந்த மரத்தூண்கள் ஒங்வொன்றும் அழகாக செதுக்கப்பட்ட மஞ்சள் வண்ணத்தில் பளீரென காட்சியளிக்கிறது.

42 அடிகளில் உயரமான தூண்கள் முக்கிய பகுதிகளை தூக்கி பிடித்திருக்கின்றன. மற்ற உள் பகுதிகளில் 32 அடி உயர தூண்கள் தூக்கிப்பிடித்திருக்கின்றன.

ஒரே அளவான சுற்றளவில் தூண்கள் இருக்கிறது. மொத்தம் 346 மரத்தூண்கள் இருப்பது உலகிலேயே இம் மஸ்ஜிதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளே சுற்றி வந்தோம். 1,46,000 சதுர அடியில் அமைக்கப்பட்ட இப்பள்ளியில் நான்கு திசைகளிலும் நான்கு டூம்கள் இருக்கின்றன.

இது டெல்லி ஜாமியா மஸ்ஜிதில் இருப்பதுபோல் குவி மாடமாக இல்லை. மாறாக, சீன கட்டிட அமைப்பை போல உருவாக்கப்பட்டு அதன் உச்சியில் கூர்மையான மினாராக்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மேற்பகுதியில் உட்பக்கங்கள் அழகானவை. மரத்தினால் அலங்கார வேலைகள் மிக நுட்பமாக செய்யப்பட்டிருக்கின்றது. பள்ளியில் உட்பகுதி திறந்த வெளியாக இருக்கிறது. ஒளு செய்ய அகழியும் இருக்கிறது.

பள்ளியின் இடபுறத்தில் பெண்கள் தொழுவதற்கு வசதி செய்யப்பட்டிருக்கின்றது. ஒரே நேரத்தில் 33,333 பேர் தொழும் வகையில் இப்பள்ளி கட்டப்பட்டிருக்கிறது.
ஆனால் ரமளானில் பள்ளிக்கு வெளியேயும் கூட்டம் திரளுமாம். சுமார் 1 லட்சம் பேர் வரை மக்கள் தொழுகைக்கு திரள்வார்களாம்.

சுல்தான் சிக்கந்தர் ஷாவால் கி.பி.1394ல்  இப்பள்ளி கட்டப்பட்டிருக்கிறது. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பாக இவ்வளவு பிரம்மாண்மாக இப்பள்ளியை அவர் கட்டி முடித்திருக்கிறார்.
ஆனால் மூன்று முறை இப்பள்ளி தீப்பற்றி சேதமடைந்திருப்பதாக கல்வெட்டு கூறுகிறது. சுல்தான் அஸ்லன்ஷா 1480ல் ஒரு முறை இப்பள்ளியை புனரமைத்திருக்கிறார்.
பிறகு முகலாய மன்னர் ஜஹாங்கீர் 1620ல் ஒருமுறையும், அவுரங்கஸீப் 1672ல் ஒரு முறையும் புனரமைப்பு செய்திருக்கிறார்கள்.

உலகில் வேறு எங்கும் இல்லாத இப்பள்ளிவாசல் போதிய பராமரிப்பின்றி இருப்பதை, மினாரக்களில் இருக்கும் தகர துண்டுகளும், அழுக்கான கார்பெட்களும் உணர்த்துகின்றன.
ரமளான் மாதம் வருவதால் சில பணியாட்கள் கார்பெட்டுகளை உதறி சுத்தம் செய்து கொண்டிருந்தனர். Wakkam Cleaner ஐ பயன்படுத்தும் வசதி கூட அங்கு இல்லை என்பது வருந்தத்தக்கது.

நாங்கள் இப்பள்ளிக்கு வருகை தந்ததில் முக்கியத்துவம் இருக்கிறது. காரணம், இப்பள்ளிவாசல் காஷ்மீரிகளின் தேசிய அடையாளமாகவும், அவர்களின் போராட்டத்தின் ஒருங்கிணைப்பு மையமாகவும் திகழ்கிறது.

இவ்வாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் இப்பள்ளிவாசல் பிரதான மையமாக இருந்திருக்கிறது.

வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். இதன் விளைவாக கடந்த 600 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, முதன்முறையாக இப்பள்ளியில் வெள்ளிக்கிழமை ஜும்மா நடத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது காஷ்மீரிகளை உணர்வுப்பூர்வமாக பாதித்ததோடு, தங்களின் மத உணர்வுகளிலும் இந்திய அரசு தலையிட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள். இவ்விஷயத்தில் ராணுவத்தின் மீது மட்டுமின்றி, உமர் அப்துல்லா அரசின் மீதும், இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மீதும் அவர்களுக்கு கோபம் இருக்கிறது.

காஷ்மீரிகளை மேலும் அந்நியப்படுத்தும் ஒரு நிகழ்வாக இது அமைந்துவிட்டது. அந்த பள்ளியில் காணிக்கை தொழுகையாக இரண்டு ரக்அத்துகள் தொழுதுவிட்டு ஹஸ்ரத் பால் பள்ளிக்கு புறப்பட்டோம்.

(இன்ஷா அல்லாஹ் பயணம் தொடரும்...)

பூங்காக்களுடன் கூடிய பள்ளியின் உட்பகுதி...
காஷ்மீர் அரசு ஊழியருடன் பள்ளிவாசலின் தொழுகை பகுதியில்...,

Saturday 10 September 2011

காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 8)

காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 8) 


 
முகநூல் தொடர் ..... 8
 
ஜூலை 26 ஸ்ரீ நகரின் காலை பொழுது தொழுகையோடு விடிந்தது. பக்கத்தில் அழகான ஒரு பள்ளிவாசலும் இருந்தது.
 
நாங்கள் ஸ்ரீ நகருக்கு ஒரு சுற்றுலா பயணிகளை போல தான் வந்தோம். காரணம் இங்கு மனித உரிமை அமைப்புகள் என்று சொல்லிக்கொண்டோ, பத்திரிகையாளர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டோ வருவது மிக பெரிய ஆபத்து.
 
அரசும், உளவுத்துறையும், அரசு படைகளும் ஒரு காலத்திலும் காஷ்மீரிகளின் துயரங்களை வெளி உலகுக்கு காட்டி விட கூடாது என்பதில் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர்.
 
நாங்கள் போன சமயம் சீக்கியர்களின் புகழ்பெற்ற தலைவரும், முன்னாள் நடாளுமன்ற வாதியுமான சிம்ரன்ஜித் சின் மான் காஷ்மீர் மக்களை சந்திக்க வந்தார். ஜூலை 22 அன்று மான் அவர்கள் ஜிலானியை சந்தித்து விட்டு தொடர்ந்து பல்வேறு தரப்பினரையும் சந்திக்க விருந்தார். ஆனால் நாங்கள் போன அன்று அவரை காஷ்மீரிலிருந்து வெளியேற்றி ஸ்ரீ நகர் விமான நிலையத்திலிருந்து அவரை மாநில அரசு திருப்பி அனுப்பி வைத்தது.
 
 
இது காஷ்மீர் டைம்ஸ்,  கிரேட்டர் காஷ்மீர் உள்ளிட்ட ஆங்கில பத்திர்க்கைகளில் முக்கிய செய்தியாக வெளியிடப்படிருந்ததை படித்தோம். மேலும் தெற்கு காஷ்மீரில் குல்காம் என்ற பகுதியில் ருக்கையா பானு என்ற காஷ்மீர் பெண்ணை இந்திய ராணுவத்தினர் கற்பழித்ததால் ஆங்காங்கே போராட்டங்களும், கல்வீச்சுகளும் நடைபெற்று கொண்டு இருந்தன.
 
காஷ்மீரின் முக்கிய தலைவர்களான செய்யது அலிஷா ஜிலானி, சபீர் உள்ளிட்டோர் வீட்டு காவலில் முடக்கப்பட்டார்கள் என்பதையும் அறிந்தோம்.
நாங்கள் வந்திருந்த சூழல், மிகவும் பதற்றமாக இருந்ததை உணர்ந்து கொண்டோம்.
 
அதே நேரம் காஷ்மீர்களிடம் நெருங்கி பழகி அவற்றை பேட்டிகளாக எடுத்து மக்கள் உரிமையில் வெளியிட வேண்டும் என்ற எங்கள் முடிவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இறைவன் இருக்கிறான் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையோடு ஸ்ரீநகரில் வலம் வர புறப்பட்டோம்.
 
எமது சந்திப்புகளையும், உரையாடல்களையும் கவனமாக கையாண்டு அவற்றை பேட்டிகளாக பதிவு செய்ய வேண்டுமென்று எங்களுக்குள் முடிவுஎடுத்து கொண்டோம். ஒரு உண்மை அறியும் குழுப்போலவே எங்களது அணுகுமுறைகள் இருந்தது.
 
நாங்கள் சந்தித்த ஸ்ரீநகர் மக்கள் எங்களுக்கு வித்தியாசமாக இருந்தார்கள். அவர்களது தோற்றம், ஆடைகள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆட்களைப்போலவே இருக்கிறார்கள் என வழக்கறிஞர் வாசுதேவன் கூறினார். அது தான் உண்மை. இனம் என்று பார்த்தால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழ்பவர்கள் பிராமணர்களாக இருந்து இஸ்லாத்தை தழுவியவர்கள் என்பது அறிவியல் மற்றும் வரலாற்று உண்மையாகும்.
 
நாங்கள் முதலில் சந்தித்த காஷ்மீரியரின் பெயர் ஆபித் அலி. இவர் ஒரு வணிகர்.
 
காஷ்மீர் பிரச்கனை குறித்து அவரோடு பேசினோம். சட்டென்று பொறுமை இழந்தவராய் பேசத் தொடங்கினார்.
 
1931& லிருந்து இப்பிரச்னை தொடங்கியது. 1948 &ல் பாகிஸ்தான் ஆதரவு பட்டாண்கள் காஷ்மீருக்குள் நுழைந்த போதுதான், மன்னர் கரண்சிங் இந்தியாவின் உதவியை நாடினார்.
 
காஷ்மீரை காப்பாற்றுகிறோம் என்று வந்த இந்திய ராணுவம் அப்படியே தங்கிவிட்டது. அது முதல் இந்தியாவின் ஆக்கிரமிப்பு தொடர்கிறது என்றவர் 1989 லிருந்துதான் ஆயுதம் தாங்கிய முஜாஹிதீன் (போராட்டக்காரர்கள்) குழுக்கள் உருவாகின.
 
அதுமுதல் 22  ஆண்டுகளாய் நாங்கள் சந்தித்துவரும் இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல. இங்கு ராணுவத்தின் ஆட்சிதான் நடக்கிறது எனலாம்.
 
1989லிருந்து இதுவரை 75 ஆயிரம் காஷ்மீரிகளை இந்தியா கொன்றுள்ளது. ஆனால் உண்மையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சம் என நாங்கள் கருதுகிறோம்.
 
இதனால் விதவைகளின் எண்ணிக்கையே 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அவர்களின் வாழ்க்கை மிகவும் பரிதாபமாக உள்ளது. பெற்றோரை இழந்த பிள்ளைகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தொடுகிறது. விசாரணை என்ற பெயரில் அரசுப் படைகள் பலரை இழுத்துச் சென்றிருக்கிறது. அவர்களில் பெரும்பாலோர் பல ஆண்டுகளாக என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இப்படி காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மட்டுமே 10 ஆயிரத்தை தாண்டுகிறது.
 
எத்தனையோ மனைவிகள் தங்கள் கணவர் வருவார் என்ற நம்பிக்கையாலும், பல தாய்மார்கள் தங்களை காப்பாற்ற தங்கள் பிள்ளைகள் வருவார்கள் என்ற நம்பிக்கையிலும், எத்தனையோ பிள்ளைகள் தங்கள் தந்தையை ஒருநாள் காண்போம் என்ற நம்பிக்கையிலும், பல சகோதரிகள் தங்கள் சகோதரர்கள் ஒருநாள் வருவார்கள் என்ற நம்பிக்கையிலும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
ஆபித் அலியின் வாக்குமூலம் எங்கள் அனைவரையும் உலுக்கியது.
 காஷ்மீரில் பிராமண பண்டிட்களும் கொல்லப் பட்டிருக்கிறார்களே என்ற அடுத்த கேள்வியை முன் வைத்தோம்.
 
அதிகபட்சமாக 500 பேர் கொல்லப்பட்டிருக்கக் கூடும். அவர்கள் எங்கள் சகோதரர்கள். அவர்கள் கொல்லப்பட்டிருக்கக் கூடாது. அதற்காக நாங்கள் வருந்துகிறோம்.
500 பண்டிட்டுகளின் மரணங்களை பெரிதுபடுத்தும் இந்திய ஊடகங்கள், 3 லட்சம் காஷ்மீரிகள் சொல்லப்பட்டதை ஏன் பேசுவதில்லை. அது எங்களை மிகவும் வேதனைப்படுத்துகிறது என்றவர், அகதிகளாக வெளியேறிய பண்டிட்டுகள் எப்போது வந்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்றார்.
எங்களுடைய முதல் நேர்காணல் மிகவும் வேதனையுடன் தொடர்ந்தது.
 
ஆபித் அலியை தொடர்ந்து, பிர்தௌஸ் என்பவரை சந்தித்தோம்.
இவர் மளிகை உள்ளிட்ட பல்வேறு வணிகங்களில் ஈடுபட்டு வருகிறார். எடுத்ததுமே வேகமாக பேசினார்.
 
எங்களின் இதயங்களை தொடக்கூடிய எந்த வேலைகளையும் இந்திய அரசு செய்வதில்லை. மாறாக எங்களை அதிகம் காயப்படுத்துகிறது என்றவர், காஷ்மீருக்கு கூடுதலாக வரிகளை விதித்து மக்களை வதைப்பது என்ன நியாயம்? என்றவர் இங்கு பெட்ரோல் 1 லிட்டர் 80 ரூபாய்க்கு விற்பது உங்களுக்கு தெரியுமா? என்றார்.
 
1989  முதல் 99 வரை இருபது வருடங்களில் 1850 நாட்கள் கடை அடைப்பிலும், வேலை நிறுத்தத்திலும் கழிந்து விட்டது. இப்படி இருந்தால் வியாபாரிகள் என்ன செய்ய முடியும்? என்றவர் எங்களை அழைத்து சென்று தனது கடையின் பின் பகுதியை காட்டினார்.
 
அதில் ஓட்டைகள் இருந்தன. இது என்ன தெரியுமா? என்றவர். ராணுவத்தினர் மொத்தமாக வருவார்கள். எங்கள் கடையில் சாமான்களை வாங்குவார்கள். பணம் கேட்டால் துப்பாக்கியால் சுடுவார்கள். அப்படி சுட்டதுதான் இந்த ஓட்டைகள் என்று விளக்கமளித்தார்.
 
எங்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.  பிறகு நாங்கள் காரில் ஏறி புகழ்பெற்ற ஸ்ரீநகரின் ஜாமியா மஸ்ஜிதுக்கு புறப்பட்டோம்.
 
(இன்ஷா அல்லாஹ் பயணம் தொடரும்...)
 
தோட்டக்கள் துளைத்த தடயங்களை காட்டும் பிர்தௌஸ்...
ஆபித் அலியுடன் பேட்டி...

பாபர் மசூதி இடிப்புக்கு “ஹவாலா” பணம் வந்தது: சி.பி.ஐ. விசாரணையில் கண்டுபிடிப்பு


பாபர் மசூதி இடிப்புக்கு “ஹவாலா” பணம் வந்தது: சி.பி.ஐ. விசாரணையில் கண்டுபிடிப்பு






உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்குகள் உத்தரபிரதேசத்தில் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.இதற்கிடையே பாபர் மசூதி இடிப்பு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. கரசேவகர்களை அழைத்து வந்தது யார்? மசூதியை இடிக்க திட்டமிட்டது எப்படி? என்று சி.பி.ஐ. அதிகாரிகள் தகவல்கள் சேகரித்தனர்.


சுமார் 20 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. வரும் 15-ந் தேதி இந்த விசாரணை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அமலாக்கப் பிரிவு மற்றும் வருமான வரித்துறைகளின் ஒத்துழைப்பையும் பெற்றுள்ள சி.பி.ஐ, விரைவில் பாபர் மசூதி இடிப்பு பின்னணியில் உள்ள சில தகவல்களை வெளியிடும் என்று தெரிகிறது.



குறிப்பாக பாபர் மசூதி இடிப்புக்கு ஹவாலா பணம் பயன்படுத்தப்பட்டு இருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளதாக தெரிகிறது. எந்த நாட்டில் இருந்து யார் மூலம் அந்த ஹவாலா பணம் வந்தது? மசூதியை இடித்த கரசேவகர்களுக்கு அந்த பணம் எப்படி பட்டுவாடா செய்யப்பட்டது? என்பன போன்ற தகவல்களை சி.பி.ஐ. கசியவிடும் என்று தெரிகிறது.



சி.பி.ஐ. தன் முதல் தகவல் அறிக்கையில் வாஜ்பாய், அத்வானி, உமாபாரதி, கல்யாண்சிங், உள்பட 48 பேர் பெயரை குறிப்பிட்டுள்ளது. லிபரன் கமிஷன் 68 பேரின் பெயர்களை கூறியுள்ளது. அவர்களை பற்றி மீண்டும் சி.பி.ஐ. தகவல்களை திரட்டுவதாக தெரிகிறது.


சி.பி.ஐ.யின் இந்த நடவடிக்கை பா.ஜ.க. தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு, மக்களின் கவனத்தை திசை திருப்ப இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக பா.ஜ.க. தலைவர்கள் கருதுகிறார்கள்.

போலி என்கவுண்டர் செய்பவர்களுக்கு தூக்குதண்டனை! உச்ச நீதிமன்றம்


போலி என்கவுண்டர் செய்பவர்களுக்கு தூக்குதண்டனை! உச்ச நீதிமன்றம்




 



சென்னை: தப்பியோடும் குற்றவாளிகளை சுட்டுக்கொல்கிறோம் என்ற பெயரில் தற்போது பல அப்பாவிகளை காவல்துறையினர் என்கவுண்டர் என்ற பெயரால் போட்டுத் தள்ளுகின்றனர் இப்படி “போலி என்கவுன்டர் செய்யும் காவல்துறையினர் தூக்குத் தண்டனைக்கு தகுதியானவர்கள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டே கட்ஜூ கூறியுள்ளார்.


சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில், ‘அரசியல் சாசன நடைமுறைகள்’ என்ற தலைப்பில் நேற்று பயிலரங்கம் நடந்தது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டே கட்ஜூ பேசியதாவது: அரசியலமைப்பு என்பது எல்லா சமூகத்துக்கும் பொதுவானது. அரசியலமைப்பின் முதல் நோக்கமே அதிகாரத்தை ஏற்படுத்துவது. இரண்டாவது அதற்கு கட்டுப்பாடு விதிப்பது. இந்திய அரசியலமைப்புதான் உலகத்திலேயே மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது.

இந்தியாவில் பலவகையான மொழி பேசுபவர்கள், கலாச்சாரத்தை பின்பற்றுபவர்கள் என்று ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. எல்லாருக்கும் சம மரியாதை கொடுக்கும் வகையில் இந்திய அரசியலமைப்பு உள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் பிரிவு ஏற்படும்போது இந்து, முஸ்லிம் மக்களிடையே பெரிய கலவரமே வந்தது. ஆனால், அப்போது பிரதமர் நேரு, ‘இந்தியா இந்துக்களின் நாடு அல்ல; மதச்சார்பற்ற நாடு’ என்று கூறினார். சமூக அளவிலான அடித்தளம்தான் இந்தியாவை மிகவும் வேகமாக முன்னேறும் நாடாக மாற்றியுள்ளது. அதனால்தான், இந்தியாவில் எந்தப் பொருள் எங்கு உற்பத்தி செய்யப்பட்டாலும் எல்லா இடங்களிலும் விற்பனை செய்ய முடிகிறது. இருந்தாலும் இந்தியா இன்னும் ஏழை நாடாகவே உள்ளது. இங்கு 77 சதவீத மக்கள் இன்னும் ஏழைகளாகவே உள்ளனர்.

இந்தியாவை நவீன தொழில் முன்னேற்றங்களைக் கொண்டு வந்து உலக அளவில் சக்திவாய்ந்த நாடாக மாற்ற வேண்டும். 6 கோடி மக்கள் தொகை கொண்ட இங்கிலாந்தும், பிரான்சும் ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ளன. ஆனால், 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவுக்கு அந்த கவுன்சிலில் இடம் இல்லை. அதற்கு முக்கிய காரணம் நாம் ஏழைகள் என்பதுதான். பிரான்சில் ஏற்பட்ட தொழில் புரட்சியால் அந்த நாடு முன்னேறிய நாடாகியது. அந்த நிலைக்கு நாமும் சென்றுக் கொண்டிருக்கிறோம்.

இந்தியாவில் நீதித்துறை மிகவும் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. உலக அளவில் இந்தியாவில்தான் நீதிபதிகள் சுதந்திரமாக பணியாற்றி வருகிறார்கள். போலி என்கவுன்டர் என்பது ஏற்க முடியாது. ஒருவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களைக் காட்ட முடியாததால், ஏதாவது ஒரு இடத்துக்கு கூட்டிப்போய் என்கவுன்டர் செய்கிறார்கள். அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது இந்த செயல். தண்டனை பெற்றுத் தர நீதிமன்றம் இருக்கும்போது, இதுபோன்ற செயல்களில் போலீசார் ஈடுபடுகின்றனர்.

மக்களுக்குப் பாதுகாப்பு தருவதுதான் போலீசாரின் கடமை. பொதுமக்களை கொலை செய்வதல்ல. போலி என்கவுன்டர் செய்பவர்கள் தூக்கு தண்டணைக்கு தகுதியானவர்கள். வட மாநிலங்களில் பல இடங்களில் கவுரவக் கொலை நடந்து வருகிறது. கவுரவம் என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனமாக வன்முறையில் ஈடுபடுவது, கொலை செய்வது ஆகியவை மிகவும் கண்டிக்கத்தக்கது.

இந்தியாவில் 30 லட்சம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். வறுமைதான் அவர்களை மாற்றியுள்ளது. அவர்கள் வாழ்க்கைப் பாதையை மாற்ற வேண்டும். இந்தியாவில் சட்டக் கல்லூரியில் ஏட்டளவில் மட்டுமே பாடம் கற்றுத்தரப்படுகிறது. இது, இளைஞர்களுக்கு எதிராக செய்யப்படும் குற்றமாகும். செய்முறை பயிற்சி மிகவும் அவசியம். அவர்களுக்கு உள்ள பாடத்திட்டத்தில் மாற்றம் வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Popular Front of India -Nellai: வல்லரசு ஆகப்போகுதாம் வெட்கம் கெட்ட இந்தியா !!

Popular Front of India -Nellai: வல்லரசு ஆகப்போகுதாம் வெட்கம் கெட்ட இந்தியா !!: என்கவுண்டர் கொலைகளை நிகழ்த்தும் அதிகாரிகளுக்கு மரணத் தண்டனையை விதிக்க வேண்டும் என அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறிய...

தாய்பாலின் அதிசயங்கள்.


தாய்பாலின் அதிசயங்கள்.



தாய்ப்பாலிலுள்ள ஹேம்லெட் என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கண்டறிவதற்காக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது தான், ஹ்யூமன் ஆல்பா லாக்தல்பூமின் மேட் லெதல் டூ ட்யூமர்! இதன் சுருக்கம்தான், ஹேம்லெட்! மனித உடலில், ஹேம்லெட் என்ன பங்காற்றுகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.


சமீபத்தில், ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலை மற்றும் கோத்தென் பெர்க் பல்கலையின் ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், இந்த ஹேம்லெட் மனித உடலிலுள்ள 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் போது, சிறுநீர்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, ஹேம்லெட் கொடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சிறுநீருடன் புற்றுநோய் செல்கள் இறந்த நிலையில் வெளியேறியது கண்டறியப்பட்டது.

இதன் மூலம், புற்றுநோய்க்கான சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படக் கூடும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். ஹேம்லெட் புற்றுநோய் செல்களை மட்டுமே அழிக்கிறது; மற்ற செல்களை பாதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹேம்லெட் எப்படி புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது குறித்து, ஆய்வு நடந்து வருகிறது. குழந்தையின் வயிற்றில் செல்லும் தாய்ப்பாலில் உள்ள, ஹேம்லெட் அங்கு, அமிலத் தன்மையை உருவாக்குகிறது. அதன் மூலமே, கேன்சர் செல்கள் அழிக்கப்படுகின்றன என்று தெரிய வந்துள்ளது.

தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒவ்வாவை நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது. ஒவ்வாமையினால் வரும் ஆஸ்த்மா நோயைத் தடுக்கும் சக்தி தாய்ப்பாலுக்கு இருக்கிறது குழந்தைகளுக்கு தாய்ப்பால் பல வழிகளிலும் ஆரோக்கியத்தைத் தருகின்றது. பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதலில் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கின்றனர் ஆனால் சில வாரங்களிலேயே பல்வேறு காரணங்களைக் காட்டி நிறுத்திவிடுகின்றனர்.. இது மிகவும் தவறானதாகும்.

ஆறுமாதங்கள் முதல் ஒரு வயது வரை தாய்ப்பாலில் குழந்தைகள் வளர்வதே ஆரோக்கியமானது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் மருத்துவமனைகளுக்குச் செல்லும் வாய்ப்பு 80% குறைகிறது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அதிக எடையுடன் வளரும் ஆபத்திலிருந்தும் தப்பிக்கிறது. குழந்தையின் தாடை வளர்ச்சிக்கும் இது பயனளிக்கிறது. குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிப வயதை அடையும் போது கூட குழந்தைகள் சரியான எடையில் வளர சிறு வயதில் குடிக்கும் தாய்ப்பால் உதவுகிறது. தாய்ப்பாலை குறைந்தது முதல் ஆறுமாதங்கள் குடித்து வளரும் குழந்தைகள் நீரிழிவு நோயினின்றும் தப்பி விடுகின்றன.

குறிப்பாக குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைக்கு ஆறுமாதங்கள் வெறும் தாய்ப்பாலை மட்டுமே கொடுத்து வர வேண்டும். அது பரம்பரையாய் நோய் தாக்காமல் தடுக்கும் என்பது ஆனந்தமான செய்தி. தாய்ப்பால் ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை குழந்தைகளின் உடலில் உருவாக்குகிறது. வணிக நிறுவனங்கள் தரும் எந்த சத்துப் பொருளும் தாய்ப்பாலின் குணாதிசயங்களுக்கு வெகு தொலைவிலேயே நின்று விடுகின்றன என்பதே உண்மை. வணிக நிறுவனங்கள் தங்கள் விற்பனைப் பொருட்களை பிரபலப்படுத்த தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு ஊக்கப்படுத்து கிறது.

தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள் வலிகளைத் தாங்கும் வலிமை படைத்ததாகவும் இருக்கின்றன. . தாய்ப்பாலில் இருக்கும் அமிலத் தன்மை எண்டோர்பின் எனப்படும் வலி நிவாரணி அதிகம் சுரக்க வழி செய்வதே இதன் காரணமாம். தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளும் அடங்கியிருக்கின்றன. அது இயற்கையாகவே அமைந்து விட்டதனால் மிக எளிதாக இயல்பாகவே செரிமானமாகி விடுகிறது. வயிறு தொடர்பான நோய்கள் குழந்தைகளுக்கு வருவதைத் தடுக்கிறது. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளெனில் அவர்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிக மிக அவசியம்.

ஆரோக்கியத்தை மீண்டெடுக்கவும், துவக்க கால சிக்கல்களிலிருந்து விடுபடவும், நீடிய ஆயுளுக்கும் அது வழி செய்யும். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவு வளர்ச்சியில் சற்று முன்னே நிற்கின்றன. போதிய மூளை வளர்ச்சியும், சுறுசுறுப்பும் அத்தகைய குழந்தைகளுக்கு இருப்பதே இதன் காரணமாகும். குறிப்பாக கணிதவியல், பொது அறிவு, நினைவாற்றல், துல்லியமான பார்வை போன்றவற்றுக்கு தாய்ப்பால் துணை நிற்கிறது. SIDS (Sudden Infant Death Syndrome) எனப்படும் திடீர் மரணங்களிலிருந்து குழந்தைகளளக் காப்பாற்றும் சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு. பாலூட்டுவது குழந்தைகளுக்கு மட்டுமன்றி தாய்க்கும் பல வகைகளில் பயனளிக்கிறது.

குறிப்பாக பிரசவ காலத்திற்குப் பின் உடலின் எடை குறையவும், தேவையற்ற கலோரிகளை இழக்கவும் பாலூட்டுதல் உதவி செய்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு முறிவு நோய் வரும் வாய்ப்பையும் பாலூட்டுதல் குறைக்கிறது. பெரும்பாலான பெண்கள் தங்கள் மாதவிலக்கு காலம் முடிந்தபின் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்குள் விழுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பிரசவ காலத்தில் நிகழும் உதிரப்போக்கு பாலூட்டும் தாய்மாருக்கு கட்டுக்குள் இருக்கிறது. அத்துடன் கருப்பை தன்னுடைய பழைய நிலைக்கு வருவதற்கு பாலூட்டுதல் பெருமளவு துணை நிற்கிறது. திரும்ப மாதவிலக்கு வரும் காலத்தையும் 20 முதல் 30 வாரங்கள் வரை நீட்டித்து வைக்கும் வல்லமையும் பாலூட்டுதலுக்கு உண்டு.

பாலூட்டும் தாய்க்கு மார்பகப் புற்று நோய், கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்புகள் பெருமளவு குறைகின்றன. தாய்க்கும் குழந்தைக்குமான உன்னதமான உறவை பாலூட்டுதல் ஆழப்படுத்துகின்றது. பிறந்த உடன் குழந்தைகளால் பன்னிரண்டு முதல் பதினைந்து இஞ்ச் தொலைவு மட்டுமே பார்க்க முடியும். அதாவது தாயின் மார்புக்கும் முகத்திற்கும் இடைப்பட்ட தூரம் ! தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தாயின் முகத்தையே பாசத்துடன் பார்த்து பந்தத்தைப் பலப்படுத்திக் கொள்கிறது. முதல் ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளை வைரஸ், பாக்டீரியா தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறது.

மழலைக்காலங்களில் வரும் இத்தகைய தாக்குதல்களினால் ஏராளமான உயிரிழப்புகள் நேரிடுகின்றன என்பது கவலைக்குரிய செய்தியாகும். தாய்ப்பால் இதையனைத்தையும் எதிர்க்கும் கவசமாகச் செயல்படுகிறது. தாய்ப்பால் கொடுக்க முடியாதசூழலில் பசுவின் பால் கொடுக்கும் வழக்கம் பலருக்கும் இருக்கிறது. இது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். பசுவின் பால் எளிதில் செரிமானமாவதில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர். பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்ட தாய்மார்கள் நல்ல தரமான குழந்தைகளுக்குரிய பால் பொருட்களை பயன்படுத்த வேண்டும்தாய்ப்பாலிலுள்ள ஹேம்லெட் என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கண்டறிவதற்காக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது தான், ஹ்யூமன் ஆல்பா லாக்தல்பூமின் மேட் லெதல் டூ ட்யூமர்! இதன் சுருக்கம்தான், ஹேம்லெட்! மனித உடலில், ஹேம்லெட் என்ன பங்காற்றுகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

சமீபத்தில், ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலை மற்றும் கோத்தென் பெர்க் பல்கலையின் ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், இந்த ஹேம்லெட் மனித உடலிலுள்ள 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் போது, சிறுநீர்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, ஹேம்லெட் கொடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சிறுநீருடன் புற்றுநோய் செல்கள் இறந்த நிலையில் வெளியேறியது கண்டறியப்பட்டது.

இதன் மூலம், புற்றுநோய்க்கான சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படக் கூடும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். ஹேம்லெட் புற்றுநோய் செல்களை மட்டுமே அழிக்கிறது; மற்ற செல்களை பாதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹேம்லெட் எப்படி புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது குறித்து, ஆய்வு நடந்து வருகிறது. குழந்தையின் வயிற்றில் செல்லும் தாய்ப்பாலில் உள்ள, ஹேம்லெட் அங்கு, அமிலத் தன்மையை உருவாக்குகிறது. அதன் மூலமே, கேன்சர் செல்கள் அழிக்கப்படுகின்றன என்று தெரிய வந்துள்ளது.

தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒவ்வாவை நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது. ஒவ்வாமையினால் வரும் ஆஸ்த்மா நோயைத் தடுக்கும் சக்தி தாய்ப்பாலுக்கு இருக்கிறது குழந்தைகளுக்கு தாய்ப்பால் பல வழிகளிலும் ஆரோக்கியத்தைத் தருகின்றது. பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதலில் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கின்றனர் ஆனால் சில வாரங்களிலேயே பல்வேறு காரணங்களைக் காட்டி நிறுத்திவிடுகின்றனர்.. இது மிகவும் தவறானதாகும்.

ஆறுமாதங்கள் முதல் ஒரு வயது வரை தாய்ப்பாலில் குழந்தைகள் வளர்வதே ஆரோக்கியமானது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் மருத்துவமனைகளுக்குச் செல்லும் வாய்ப்பு 80% குறைகிறது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அதிக எடையுடன் வளரும் ஆபத்திலிருந்தும் தப்பிக்கிறது. குழந்தையின் தாடை வளர்ச்சிக்கும் இது பயனளிக்கிறது. குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிப வயதை அடையும் போது கூட குழந்தைகள் சரியான எடையில் வளர சிறு வயதில் குடிக்கும் தாய்ப்பால் உதவுகிறது. தாய்ப்பாலை குறைந்தது முதல் ஆறுமாதங்கள் குடித்து வளரும் குழந்தைகள் நீரிழிவு நோயினின்றும் தப்பி விடுகின்றன.

குறிப்பாக குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைக்கு ஆறுமாதங்கள் வெறும் தாய்ப்பாலை மட்டுமே கொடுத்து வர வேண்டும். அது பரம்பரையாய் நோய் தாக்காமல் தடுக்கும் என்பது ஆனந்தமான செய்தி. தாய்ப்பால் ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை குழந்தைகளின் உடலில் உருவாக்குகிறது. வணிக நிறுவனங்கள் தரும் எந்த சத்துப் பொருளும் தாய்ப்பாலின் குணாதிசயங்களுக்கு வெகு தொலைவிலேயே நின்று விடுகின்றன என்பதே உண்மை. வணிக நிறுவனங்கள் தங்கள் விற்பனைப் பொருட்களை பிரபலப்படுத்த தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு ஊக்கப்படுத்து கிறது.

தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள் வலிகளைத் தாங்கும் வலிமை படைத்ததாகவும் இருக்கின்றன. . தாய்ப்பாலில் இருக்கும் அமிலத் தன்மை எண்டோர்பின் எனப்படும் வலி நிவாரணி அதிகம் சுரக்க வழி செய்வதே இதன் காரணமாம். தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளும் அடங்கியிருக்கின்றன. அது இயற்கையாகவே அமைந்து விட்டதனால் மிக எளிதாக இயல்பாகவே செரிமானமாகி விடுகிறது. வயிறு தொடர்பான நோய்கள் குழந்தைகளுக்கு வருவதைத் தடுக்கிறது. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளெனில் அவர்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிக மிக அவசியம்.

ஆரோக்கியத்தை மீண்டெடுக்கவும், துவக்க கால சிக்கல்களிலிருந்து விடுபடவும், நீடிய ஆயுளுக்கும் அது வழி செய்யும். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவு வளர்ச்சியில் சற்று முன்னே நிற்கின்றன. போதிய மூளை வளர்ச்சியும், சுறுசுறுப்பும் அத்தகைய குழந்தைகளுக்கு இருப்பதே இதன் காரணமாகும். குறிப்பாக கணிதவியல், பொது அறிவு, நினைவாற்றல், துல்லியமான பார்வை போன்றவற்றுக்கு தாய்ப்பால் துணை நிற்கிறது. SIDS (Sudden Infant Death Syndrome) எனப்படும் திடீர் மரணங்களிலிருந்து குழந்தைகளளக் காப்பாற்றும் சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு. பாலூட்டுவது குழந்தைகளுக்கு மட்டுமன்றி தாய்க்கும் பல வகைகளில் பயனளிக்கிறது.

குறிப்பாக பிரசவ காலத்திற்குப் பின் உடலின் எடை குறையவும், தேவையற்ற கலோரிகளை இழக்கவும் பாலூட்டுதல் உதவி செய்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு முறிவு நோய் வரும் வாய்ப்பையும் பாலூட்டுதல் குறைக்கிறது. பெரும்பாலான பெண்கள் தங்கள் மாதவிலக்கு காலம் முடிந்தபின் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்குள் விழுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பிரசவ காலத்தில் நிகழும் உதிரப்போக்கு பாலூட்டும் தாய்மாருக்கு கட்டுக்குள் இருக்கிறது. அத்துடன் கருப்பை தன்னுடைய பழைய நிலைக்கு வருவதற்கு பாலூட்டுதல் பெருமளவு துணை நிற்கிறது. திரும்ப மாதவிலக்கு வரும் காலத்தையும் 20 முதல் 30 வாரங்கள் வரை நீட்டித்து வைக்கும் வல்லமையும் பாலூட்டுதலுக்கு உண்டு.

பாலூட்டும் தாய்க்கு மார்பகப் புற்று நோய், கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்புகள் பெருமளவு குறைகின்றன. தாய்க்கும் குழந்தைக்குமான உன்னதமான உறவை பாலூட்டுதல் ஆழப்படுத்துகின்றது. பிறந்த உடன் குழந்தைகளால் பன்னிரண்டு முதல் பதினைந்து இஞ்ச் தொலைவு மட்டுமே பார்க்க முடியும். அதாவது தாயின் மார்புக்கும் முகத்திற்கும் இடைப்பட்ட தூரம் ! தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தாயின் முகத்தையே பாசத்துடன் பார்த்து பந்தத்தைப் பலப்படுத்திக் கொள்கிறது. முதல் ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளை வைரஸ், பாக்டீரியா தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறது.

மழலைக்காலங்களில் வரும் இத்தகைய தாக்குதல்களினால் ஏராளமான உயிரிழப்புகள் நேரிடுகின்றன என்பது கவலைக்குரிய செய்தியாகும். தாய்ப்பால் இதையனைத்தையும் எதிர்க்கும் கவசமாகச் செயல்படுகிறது.

Welcome 2 Islamic Frined's: வல்லரசு ஆகப்போகுதாம் வெட்கம் கெட்ட இந்தியா !!

Welcome 2 Islamic Frined's: வல்லரசு ஆகப்போகுதாம் வெட்கம் கெட்ட இந்தியா !!: வல்லரசு ஆகப்போகுதாம் வெட்கம் கெட்ட இந்தியா !! என்கவுண்டர் கொலைகளை நிகழ்த்தும் அதிகாரிகளுக்கு மரணத் தண்டனையை விதிக்க வேண்டும் என அண்மையில் உ...

வல்லரசு ஆகப்போகுதாம் வெட்கம் கெட்ட இந்தியா !!


வல்லரசு ஆகப்போகுதாம் வெட்கம் கெட்ட இந்தியா !!

என்கவுண்டர் கொலைகளை நிகழ்த்தும் அதிகாரிகளுக்கு மரணத் தண்டனையை விதிக்க வேண்டும் என அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறியிருந்தது.

பாலியல் வன்புணர்வு கொலையை விட கொடிய குற்றம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. கொலை ஒரு மனிதனை ஒருமுறை மட்டுமே கொலைச் செய்யும், ஆனால் பாலியல் வன்புணர்வு பாதிக்கப்பட்டவரை பல முறை கொலைச் செய்கிறது. 

சட்டத்தின் அடிப்படையிலோ, மனித நேயத்தின் அடிப்படையிலோ முற்றிலும் ஒப்புக்கொள்ள வியலாத இத்தகைய கொடூர குற்றங்கள் ஜம்மு-கஷ்மீரில் அரசு சட்ட அந்தஸ்துடன் நடத்திவருகிறது. பல ஆய்வுகளும், விசாரணைகளும் இதனை உறுதிச் செய்துள்ளன. தற்பொழுது ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தின் மனித உரிமை கமிஷனே கூட்டுப் படுகொலைகளுக்கு ஆதாரங்களுடன் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

கஷ்மீர் மாநிலத்தில் 38 கல்லறைகளில் 2156 அடையாளம் காணமுடியாத இறந்த உடல்கள் அடக்க செய்யப்பட்டுள்ளதை மனித உரிமை கமிஷன் கண்டறிந்துள்ளது. இந்திய ராணுவம் கடுமையான மனித உரிமை மீறல்களை புரிந்துவருவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணை அரசு அதிகார வர்க்கத்தின் பயங்கரவாத முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

அநியாயமான படுகொலை, வீணாக கைதுச் செய்வது, எவ்வித காரணமுமின்றி சிறையில் அடைத்தல், சித்திரவதைகள், கொடுமைகள் இவையெல்லாம் கஷ்மீரில் பல வருடங்களாக சர்வ சாதாரணமாக நடந்துவருகிறது. அடையாளம் தெரியாத உடல்களுடன் 2730 பேரை கூட்டமாக புதைத்துள்ளனர் என்பதை மாநில மனித உரிமை கமிஷனின் சிறப்பு புலனாய்வு குழு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பாரமுல்லா, பந்திபூர், குப்வரா ஆகிய மாவட்டங்களிலிருந்து மட்டும் கிடைத்த புள்ளிவிபரங்கள் தாம் இவை. மத்திய-மாநில அரசுகள் கஷ்மீருக்கு செய்யும் மிகப்பெரிய துரோகத்தின் சித்திரம்தான் இவை. தீவிரவாதி, பயங்கரவாதி, ஊடுருவல்காரன் எனக்கூறி எவரையும், எப்பொழுதும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சூழல்தான் கஷ்மீரில் நிலவுகிறது. இது ஒரு பயங்கரமான சூழலாகும்.

இறுதியாக கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி இந்திய ராணுவம் ஒருவரை சுட்டுக் கொன்றது. அவர் பாகிஸ்தானைச் சார்ந்த லஷ்கர் போராளி இயக்கத்தின் பிராந்திய கமாண்டர் அபூ உஸ்மான் என ராணுவம் தெரிவித்திருந்தது. ஆனால், உண்மையில் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டவர் ஒரு கஷ்மீரி ஹிந்து ஆவார்.

1989-ஆம் ஆண்டு முதல் 10 ஆயிரம் கஷ்மீர் மக்கள் காணாமல் போயுள்ளனர். ஆயிரக்கணக்கானோரை கஸ்டடியில் எடுத்து சித்திரவதைக்கு ஆளாக்குகின்றனர். இவ்வாறு கொடுமை இழைக்கப்படுவோர் 20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் ஆவர். மக்களை முழுவதும் பீதியில் ஆழ்த்த தடை உத்தரவு உள்ளிட்ட தந்திரங்களை ராணுவமும், போலீசும் கையாழுகின்றன.

பெண்களுக்கு கொடுமை இழைக்கப்படுவது பல இடங்களிலும் வழக்கமாகிவிட்டது. பாலியல் வன்புணர்வு என்பது மக்களை அடக்கி ஆளுவதற்கான ஆயுதமாக மாறிவிட்டது என ரூர்த்வா பல்கலைக்கழக பேராசிரியரான டாக்டர்.மைதி கூறுகிறார். செஞ்சிலுவை சங்கத்தின் அறிக்கையொன்றும் இதனையே கூறுகிறது.

உலகிலேயே அதிகமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது கஷ்மீரி பெண்கள்தாம் என ’டாக்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்’ என்ற ஆய்வில் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு இரு தினங்களும் மூன்று வீதம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு பலியாவதாக பிரிட்டனில் ஒரு இணையதளம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கலிஃபோர்னியாவில் பேராசிரியராக பணியாற்றும் இந்தியரான அங்கனா சாட்டர்ஜி கஷ்மீரில் அரச பயங்கரவாதத்தைக் குறித்து விரிவாக ஆய்வுச் செய்துள்ளார். மக்களை அடக்கி ஒடுக்க ராணுவத்திற்கு வாய்ப்புகள் கிடைப்பதற்காக கஷ்மீரில் தீவிரவாத-ஊடுருவல்களை குறித்து ஊதிப் பெருக்கிய பொய்கள் பரப்புரைச் செய்யப்படுவதாக அறிக்கை கூறுகிறது.

சுதந்திர இந்தியா அதன் குடிமக்கள் மீது இவ்வளவுதூரம் கொடுமை இழைத்த பிறகும் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதன் காரணம் ‘தீவிரவாதம்’ என்ற லேபலை எதிர்ப்பவர்கள் மீது சுமத்துவதாகும். இதனையும் முறியடித்து விசாரணையை மேற்கொண்ட அங்கனா சாட்டர்ஜி உள்ளிட்ட பலரையும் தொந்தரவு அளித்து ஆய்விலிருந்து பின்வாங்கச் செய்வதற்கான முயற்சிகளை அரசு செய்கிறது.

கடந்த ஆண்டு அமெரிக்காவைச் சார்ந்த பேராசிரியர் ரிச்சார்ட் ஷாப்பிராக்கிற்கு கஷ்மீர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மகளிர் எம்.பிக்களின் குழுவினர்கள் கூட மன்ஸ்காம் போன்ற சில பகுதிகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவ்வளவு நெருக்கடியிலும் ஹியூமன்ரைட்ஸ் வாட்ச், சர்வதேச தீர்ப்பாயம், செஞ்சிலுவை சங்கம், ஆம்னஸ்டி இண்டர்நேசனல் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை அமைப்புகள் பல வேளைகளிலும் கண்டறிந்த உண்மைகள் நம்மை வெட்கமடையச் செய்கின்றன. ஆட்சியாளர்களைப் போலவே தேசிய மனித உரிமை கமிஷன் மற்றும் மகளிர் கமிஷன் ஆகியனவும் கஷ்மீர் விவகாரத்தில் கையாலாத தன்மையை வெளிப்படுத்துகின்றன.

மோதல் படுகொலைகளை ஒரு கட்டத்தில் நியாயப்படுத்த முயன்றார் முன்னாள் தேசிய மனித உரிமை கமிஷனின் தலைவர். குடும்ப பாரம் ஒருபுறம், மன அழுத்தம் மறுபுறம் என காணாமல் போன கணவனை எண்ணி அவதியுறும் கஷ்மீரின் ‘அரை விதவைகளை’ (காணாமல் போன கணவர் உயிரோடு இருக்கின்றாரா? இறந்துவிட்டாரா? என்று தெரியாமல் துன்பத்தில் உழலும் கஷ்மீர் பெண்களுக்கு ‘அரை விதவை’ என பெயரிட்டுள்ளனர்) சந்தித்து ஆறுதல் கூறக்கூட தேசிய மகளிர் கமிஷனால் இயலவில்லை.

கஷ்மீர் இன்று தீவிரவாதத்தின் சின்னமாக சித்தரிக்கப்படுகிறது. ஆனால், உண்மையில் தேசத்திற்கு அவமானத்தை தேடி தரும் ராணுவத்தின் அக்கிரமங்கள் நிறைந்த மாநிலமாகவே காட்சி தருகிறது. ஒரு மாநிலத்தின் மக்களை அவதிக்கும் கொடுமைக்கும் ஆளாக்கிவிட்டு நாம் எவ்வாறு உலகத்தின் முன்னால் தலை உயர்த்தி நிற்க இயலும்? அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் கஷ்மீரின் நிலைமை இன்னும் மோசமாகும். ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களை வாபஸ்பெற வேண்டும் என்ற பல ஆண்டுகளாக முன்வைக்கப்படும் கோரிக்கை இன்னமும் வெறும் வார்த்தையளவிலேயே உள்ளது.

கஷ்மீர் மக்களின் துயரத்தை துடைக்க விரும்பினால் அரசு முதலில் செய்யவேண்டியது ராணுவத்தை அங்கிருந்து வாபஸ் பெறச் செய்வதாகும். கஷ்மீரில் சுமூகமான அரசியல் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள ராணுவம் தடையாக உள்ளது.
ஜனநாயக நாடு என பெருமைக்கொள்ளும் நாம் ஒரு தேசத்தின் கொள்கை முடிவுகளை ராணுவத்திற்கு விட்டுக் கொடுப்பது வெட்ககேடானது. இது பெரும் துயரத்தை ஏற்படுத்தவே வழிவகைச் செய்யும்.

கட்டுப்பாடற்ற அதிகாரங்களை ராணுவத்திற்கு வழங்கியதன் விளைவுதான் மாநில மனித உரிமை கமிஷன் கண்டறிந்த உண்மைகள். இனிமேலும் கஷ்மீரின் கட்டுப்பாட்டை ராணுவத்திடம் ஒப்படைத்து கஷ்மீரை ஆபத்தான பள்ளத்தாக்காக மாற்றிவிடாதீர்கள். தேசத்திற்கு அவமானத்தை ஏற்படுத்திய கொடுங்கோலர்களை கண்டறிந்து தண்டனை அளிக்க அரசு முன்வர வேண்டும். இல்லையெனில் ஜனநாயகம், மனித நேயம் இவற்றிற்கெல்லாம் என்னதான் பொருள்?