Monday 30 January 2012

2012ல் உலக அழியப் போகிறதாம்



2012ல் உலக அழியப் போகிறதாம். இதற்கு ஆதாரமாக ஊடகங்கள் குறிப்பிடுவது் மாயா இனத்தவரின் காலண்டரைத் தான். உலகம் அழியப் போகிறதா? அது எப்போது? எப்படி என்பதில் நமக்கு அக்கறையில்லை. ஏனெனில் சர்வ வல்லமை மிக்கோன் படைத்த இவ்வுலகை பற்றி அவன் ஒருவனே அறிந்த ரகசியம் அது. நாம் அதற்குள் செல்ல விரும்பவில்லை. யார் இந்த மாயா இன சமூகம்? அவர்களுக்கும் உலக அழிவுக்கும் என்ன சம்பந்தம்? இது தான் நம் முன் நிற்கும் கேள்வி. மாயா இன மக்களைப் பற்றிய வியப்பூட்டும் சில அதிச்சியளிக்கும் தகவல்களை நண்பர் ராஜ்சிவா என்பவர் உயிரோசை இணைய இதழில் விளக்கமாக எழுதி்யுள்ள கட்டுரையை இங்கு தொடர்களாக உங்களுக்குத் தருகிறேன். இதில் அவரிடம் இருந்து எடுத்து உங்களுக்குப்  பரிமாறும் வேலை மட்டுமே என்னுடையது. இவ்விசயத்தில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா என்று கேட்காதீர்கள். இந்த விவாதத்திற்குள் நான் வர மாட்டேன். இக் கட்டுரையில் உள்ள அதிர்ச்சியளிக்கும் வியப்பூட்டும் சில தகவல்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இதை இங்குப் பதிவு செய்கிறேன்.
Er..சுல்தான்


2012 இல் உலக அழிவும்மாயா இன மக்களும் -1
சரியாக இன்னும் ஒரு வருடத்தில் உலகம் அழியப் போகிறதா?" என்பதே பலரின் கேள்வியாகவும்பயமாகவும் இருக்கிறது.
இது பற்றி அறிவியலாகவும்அறிவியலற்றதாகவும் பலவித கருத்துக்களும்ஆராய்ச்சிகளும் தினமும் வெளிவந்துகொண்டே இருக்கிறது. அப்படி இந்த அழிவை ஏன் முக்கியப்படுத்த வேண்டும் என்று பார்த்தால்எல்லாரும் சுட்டிக்காட்டுவது ஒன்றைத்தான்.
அது….! 'மாயா'.
மாயா இனத்தவர்களுக்கும், 2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது என்பதற்கும் என்ன சம்பந்தம்? இவர்கள் இந்த அழிவுபற்றி ஏதாவது சொன்னார்களாஅப்படிச் சொல்லியிருந்தால்என்னதான் சொல்லியிருப்பார்கள்அதை ஏன் நாம் நம்பவேண்டும்இப்படிப் பல கேள்விகள் எமக்குத் தோன்றலாம்.
இது போன்ற பல கேள்விகளுக்கு ஒரு விரிவான ஆராய்ச்சித் தொடர் மூலம் உங்களுக்குத் பதில் தரலாம் என்ற நினைத்தேஉங்கள் முன் இந்தத் தொடரைச் சமர்ப்பிக்கிறேன்.
ராஜ்சிவா
 இதோ 2012ம் ஆண்டு பிறந்து விட்டது.. இந்த நேரத்தில்பலர் பயத்துடன்பார்க்கும் ஒன்று உண்டென்றால்அது '2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது'என்ற விந்தையான செய்திக்கு உலக ஊடகங்கள் பல கொடுக்கும்முக்கியத்துவம்தான்.
"சரியாக இன்னும் ஒரு வருடத்தில் உலகம் அழியப் போகிறதா?" என்பதேபலரின் கேள்வியாகவும்பயமாகவும் இருக்கிறது.
இது பற்றி அறிவியலாகவும்அறிவியலற்றதாகவும் பலவித கருத்துக்களும்,ஆராய்ச்சிகளும் தினமும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அப்படி இந்தஅழிவை ஏன் முக்கியப்படுத்த வேண்டும் என்று பார்த்தால்எல்லாரும் சுட்டிக்காட்டுவது ஒன்றைத்தான்.
அது….! 'மாயா'.
மாயா இனத்தவர்களுக்கும், 2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறதுஎன்பதற்கும் என்ன சம்பந்தம்? இவர்கள் இந்த அழிவு பற்றி ஏதாவதுசொன்னார்களாஅப்படிச் சொல்லியிருந்தால்என்னதான்சொல்லியிருப்பார்கள்அதை ஏன் நாம் நம்ப வேண்டும்இப்படிப் பலகேள்விகள் எமக்குத் தோன்றலாம்.
இது போன்ற பல கேள்விகளுக்கு ஒரு விரிவான ஆராய்ச்சித் தொடர் மூலம்உங்களுக்குத் பதில் தரலாம் என்ற நினைத்தே உங்கள் முன் இந்தத் தொடரைச்சமர்ப்பிக்கிறேன்.
என்ன என்பது இது பற்றி விளக்கமாகப் பார்க்கலாமா…..?
உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் வீட்டில் வசித்த அனைவரும்ஒருநாள்திடீரென அந்த வீட்டிலிருந்துஅவர்கள் இருந்த சுவடே இல்லாமல் மறைந்தால்என்ன முடிவுக்கு வருவீர்கள்திகைத்துப் போய்விட மாட்டீர்களா?ஆச்சரியத்துக்கும்மர்மத்துக்கும் உள்ளாகுவீர்கள் அல்லவா?
சரிஅதுவே ஒரு வீடாக இல்லாமல்உங்கள் வீடு இருக்கும் தெருவுக்குப்பக்கத்துத் தெருவே திடீரென ஒரே இரவில் மறைந்தால்….? ஒரு தெருவுக்கேஇப்படி என்றால்ஒரு ஊர் மக்கள் மறைந்தால்….? ஒரு நாட்டு மக்கள்மறைந்தால்….?
ஆம்....! வரலாற்றில் இது நடந்தது. ஒரு நாட்டில் வாழ்ந்தமிக மிக மிகச் சிறியஅளவினரை விடமற்ற அனைத்து மக்களும்திடீரென அந்த நாட்டிலிருந்துஒட்டுமொத்தமாக மறைந்துவிட்டார்கள். சரித்திரத்தில் எந்த ஒருஅடையாளங்களையும்மறைந்ததற்குச் சாட்சிகளாக வைக்காமல் மறைந்துபோனார்கள்.
ஏன் மறைந்தார்கள்எப்படி மறைந்தார்கள்என்னும் கேள்விகளுக்குமழுப்பலான பதில்களை மட்டுமே மிச்சம் வைத்துவிட்டுமாயமாய் மறைந்துபோனார்கள். எங்கே போனார்கள்எப்படிப் போனார்கள்யாருக்கும்தெரியவில்லை. எதுவும் புரியவில்லை.
இந்த மறைவின் மர்மத்தை ஆராயஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் சென்றஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்தது எல்லாமே ஒரு மாபெரும் அதிர்ச்சிகள். மாயாக்கள் விட்டுச் சென்ற சுவடுகளை ஆராய்ந்த அவர்கள் பிரமிப்பின்உச்சிக்கே போனார்கள்.
அறிவியல் வளரத் தொடங்கிய காலகட்டங்களில்இவை உண்மையாகஇருக்கவே முடியாதுஎன்னும் எண்ணம் அவர்களுக்குத் தோன்றும்படியான பலஆச்சரியங்களுக்கான ஆதாரங்கள் கிடைத்தன. அவை அவர்களை மீண்டும்மீண்டும் திக்குமுக்காடச் செய்தது.
இது சாத்தியமே இல்லாத ஒன்று. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது எனஅறிஞர்கள் சிலர் பிரமிக்கபலர் பின்வாங்கத் தொடங்கினார்கள்.
மாயா என்றாலே மர்மம்தானாஎன நினைக்க வைத்தது அவர்கள்கண்டுபிடித்தவை.
சரி, அப்படி என்னதான் நடந்ததுஆராய்ச்சியாளர்கள் அப்படி எதைத்தான்கண்டு கொண்டார்கள்? ஆராய்ந்த சுவடுகளில் அப்படி என்னதான் இருந்தது?
இவற்றையெல்லாம் படிப்படியாக நாம் பார்க்கலாம். ஒன்று விடாமல்பார்க்கலாம். அவற்றை நீங்கள் அறிந்து கொண்டால்இதுவரை பார்த்திராத,கேட்டிராத, ஆச்சரியத்தின் உச்சத்துக்கே போய்விடுவீர்கள்.
அவை என்ன என்பதை அடுத்து நாம் பார்ப்போமா!
தகவல் :ராஜ்சிவா
உயிரோசை இணைய இதழ்.

No comments:

Post a Comment