Sunday 10 June 2012

நாசா விஞ்ஞானிகளை வியக்க வைத்த ஜெயஸ்ரீ



 
நிலவின் மீது அப்படியொரு காதல், ஜெயஸ்ரீ ஸ்ரீதருக்கு. நிலவில் தண்ணீர் இருக்கிறது என்று, சந்திரயான் கண்டுபிடித்தது, மிக முக் கியமான கண்டுபிடிப்பு. நிலவில் குடியேறும் மனிதனின்
 
கனவுக் கும், லட்சியத்துக்கும் இது ஊக்கமளிக்கும் விஷயம். “கவலைப் படாதீங்க, இன்னு ம் ஒரு நாற் பது வருசத்தில நாம, “ஜாம் ஜாம் ‘ன்னு நில வில வசிப்போம்…’ என்று சிரிக்கிறார், ஜெயஸ்ரீ.
சென்னை இந்துஸ்தான் தொ ழில்நுட்ப கல்லூரியில், விண் வெளிப் பொறியியல் (ஏரோ ஸ்பேஸ் என்ஜினியரிங்) இர ண்டாமாண்டு பயிலும் ஜெயஸ்ரீ, நில வு, விண்வெளி பற்றி, பல திட்டப்பணிகளை மேற்கொண்டவர். அமெரிக்காவின், “நாசா’ விஞ்ஞானிகளையே வியக்க வைத்தவர்.
இந்தியாவில், இத்துறையில் ஆர்வம் காட்டும் முதல் பெண் என்று ஜெயஸ்ரீயை சொல்லலாம். “இந்திய மூன் சொசைட்டி’யின் இளம் வயது தலைவராக இருக்கிறார். ஆனால், அடுத்த  வீட்டுப் பெண் ணைப் போல, அலட்டல் இல்லாத தோ ற்றம் காட்டும் ஜெயஸ்ரீ, வெகு இயல்பா கப் பேசுகிறார்.
விண்வெளியை நோக்கிய இவரது பய ணம் தொடங்கியது எப்போது? அவரே சொல்கிறார்: சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில், 7-ம் வகுப்பு படித்தபோது. பள்ளியில் நடைபெற்ற, கிரகங்களின் அமைப்பு குறித்த முகா மில், என், “அசைன்மென் டு’க்கு முதல் பரிசு கிடைத்தது. அதுதான் விண்வெளி குறித்து, எனக்குள் ஆர்வத்தை விதைத் தது. தொடர்ந்து, விண்வெளி தொடர் பான ஞானத்தை வளர்த்துக் கொண்டதால், சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும், பல பரிசுகளைப் பெற்றேன்; நாசா விஞ்ஞானி களின் பாராட்டையும் பெற்றேன்.
இதுவரை, நாசாவுக்கு மூன்று முறை சென்றிருக்கிறேன். “நாசா’ வின் “லூனார் அண்ட் பிளானட்ரி இன்ஸ்டிட்யூட்’, சர்வதேச ஆய்வு க் கட்டுரை ப் போட்டி ஒன்றை நடத்தியது. அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டபோது, நான் 12-ம் வகுப்பு மாணவி. ஒருவித துணிச்சலில் நான் அனுப்பிய கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டு, உதவித் தொகையுடன், அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டேன். இந்தி
யா வில் இருந்து சென்ற ஒரே நபர், மிக இளவயது நபர் நான் தான். நான்காவது முறையாக விரைவில், “நாசா’ செல்லவி ருக்கிறேன்.
“ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங்’ படிப்பு முடிந்ததும், அதிலேயே முதுநிலைப் படிப்பைப் படிக்க வும், ஆராய்ச்சி மேற்கொள்ள வும் அமெரிக்கா போகலாம் என்று திட்டம். நிலவில் மனிதர்கள் வாழ் வதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவது, அங்குள்ள பொருட்களைக் கொண்டே இருப்பிடங் களை அமைப்பது, மின்சார உற்பத்தி செய்வது, நிலவுக்கும், பூமிக் கும் இடையில் தெளிவான, “கம்யூனி கேஷன்
 
அமைப்பை’ உரு வாக்குவது போன்றவை, என் ஆய்வின் அம்சங்கள். என் ஆய்வுக் குத் தேவையான அடிப்படை வசதிகளும், நிபுணத்துவ உதவி களும், “நாசா’வில் கிடைக்கும்.
“நாசா’வில், விண்வெளி வீராங் கனை கல்பனா சாவ்லாவை உ ரு வாக்கிய விஞ்ஞானி, டாக்டர் ஏஞ்சல் அபுட் மாட்ரிட், “நீ தான் அடுத்த கல்பனா சாவ்லா’ என்று கூறி, பாராட்டி, கல்பனா பயன் படுத்திய, “பேட்ஜை’ எனக்கு பரி சாகக் கொடுத்தார்.
விண்வெளி தவிர்த்த என்னுடைய பிற ஆர்வங்கள் என்றவென்றா ல், இசை, நடனம், டென்னிஸ், க்விஸ் என்று பல ஆர்வங்கள் உண் டு. ஆனால், அதற்கெல்லாம் ஒதுக்குவதற்குத் தற்போது, நேரம்தா ன் இல்லை! என்று சந்தோஷமாய் அலுத்துக் கொண்டார் ஜெயஸ்ரீ.
நிலவு போன்ற மாதிரி அமைப்பை இந்தியாவில் நிறுவி, அது தொடர்பான ஆய்வுக்கு உதவ வேண்டும் என்பது ஜெயஸ்ரீயின் எண்ணம். தன் ஆய்வுப் பணிகளுடன், அதற்கான முனைப்பான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார், இந்த விண்வெளி ராணி!

No comments:

Post a Comment