Mouth Ulcers
• Mix some coconut milk with honey and massage the gums 3 to 4 times a day.
• Gargle with (or apply) freshly extracted coconut milk from a ripe coconut frequently.
• Mix the pulp of a ripe bel fruit with jaggery (gur) and eat once a day.
• Mix 1 tea cup bel pulp with 1 teaspoon sugar and eat early morning on an empty stomach for 3 days.
• Coriander (dhania) decoction prepared by boiling 1 teaspoon coriander seeds (saboot dhania) in 1 cup water, gargled when lukewarm, frequently.
• Chew one or two tender leaves of fig (anjeer) and leaf buds frequently and wash the mouth with warm water.
• Soak 1 tablespoon crushed liquorice (mulathi) root in 2 cups water for 2 to 3 hours and use it for gargling frequently.
• Boil 2 tablespoon fenugreek (methi) leaves along with ½ cup green gram (moong dal) and 10 small onions. Eat regularly.
• Fenugreek seeds (methi dana) fried and powdered should be added to drinking water. Drink 2-3 times daily for a few days.
• An infusion of fenugreek (methi) leaves gargled 5-6 times daily for a couple of days.
Morning Sickness
• Mix 1 teaspoon each fresh juice of mint (pudina) and lime along with 1 tablespoon honey. Take 3 times a day.
• Mix juice of 15-20 tender curry leaves (curry patta) with 2 teaspoon lime juice and 1 teaspoon sugar. Take in the morning.
• Mix 1/8 teaspoon nutmeg (jaiphal) powder with 1 tablespoon freshly extracted amla juice. Take 3 times a day.
• ½ teaspoon ginger (adrak) juice with 1 teaspoon each fresh lime and mint (pudina) juice mixed with a tablespoon of honey, taken frequently proves very effective. Menstrual Pains
• Boil 1 teaspoon saffron (kesar) in ½ cup water. Let it reduce to become 1 tablespoon. Divide this decoction into three portions and take with equal quantities of water, thrice daily for a couple of days.
• Take ½ teaspoon finely ground cinnamon (dalchini) every night along with 1 cup milk.
• Powder 1 teaspoon dried mint (pudina) leaves and take with 1 teaspoon honey, thrice daily.
• Make a mixture of 6 to 8 almonds, crushed and mixed in 1 cup milk along with 1 egg yolk (white), ½ teaspoon sesame powder (til) and 1 teaspoon honey. Take this once or twice a day.
• Menstruation, excessive bleeding
• Grind some bel leaves into a fine paste. Take 1 teaspoon with warm water and drink some cold water as well.
• Grind 10 fresh lead buds of figs (anjeer) and apply on the lower abdomen below the navel for a few hours. Repeat this frequently.
• Boil 1 teaspoon coriander (dhania) seeds in 2 cups water till it is reduced to 1 cup. Add sugar to taste and drink when lukewarm. Repeat twice or thrice a day.
• Menstruation, painful and irregular • A piece of fresh ginger (adrak), ground and boiled in a cup of water. The infusion should be taken thrice daily after meals along with sugar.Warning: The reader of this article should exercise all precautionary measures while following instructions on the home remedies from this article. Avoid using any of these products if you are allergic to it. The responsibility lies with the reader and not with the site or the writer.This information is solely for informational purposes. IT IS NOT INTENDED TO PROVIDE MEDICAL ADVICE and should not be treated as a substitute for the medical advice of your own doctor.Web sources
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....! அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே! படியுங்கள் பரப்புங்கள்............
Sunday, 10 June 2012
Remedies for minor ailments-part 5
நாசா விஞ்ஞானிகளை வியக்க வைத்த ஜெயஸ்ரீ
நிலவின்
மீது
அப்படியொரு காதல், ஜெயஸ்ரீ ஸ்ரீதருக்கு. நிலவில் தண்ணீர் இருக்கிறது
என்று, சந்திரயான் கண்டுபிடித்தது, மிக முக் கியமான கண்டுபிடிப்பு. நிலவில்
குடியேறும் மனிதனின்
கனவுக்
கும், லட்சியத்துக்கும் இது ஊக்கமளிக்கும் விஷயம். “கவலைப் படாதீங்க, இன்னு ம் ஒரு நாற் பது வருசத்தில நாம, “ஜாம் ஜாம் ‘ன்னு நில வில
வசிப்போம்…’
என்று சிரிக்கிறார், ஜெயஸ்ரீ.
கும், லட்சியத்துக்கும் இது ஊக்கமளிக்கும் விஷயம். “கவலைப் படாதீங்க, இன்னு ம் ஒரு நாற் பது வருசத்தில நாம, “ஜாம் ஜாம் ‘ன்னு நில வில
வசிப்போம்…’
என்று சிரிக்கிறார், ஜெயஸ்ரீ.
சென்னை
இந்துஸ்தான் தொ ழில்நுட்ப கல்லூரியில், விண் வெளிப் பொறியியல் (ஏரோ ஸ்பேஸ்
என்ஜினியரிங்) இர ண்டாமாண்டு பயிலும் ஜெயஸ்ரீ, நில வு, விண்வெளி பற்றி, பல
திட்டப்பணிகளை மேற்கொண்டவர். அமெரிக்காவின், “நாசா’ விஞ்ஞானிகளையே வியக்க வைத்தவர்.
இந்தியாவில்,
இத்துறையில் ஆர்வம் காட்டும் முதல் பெண் என்று ஜெயஸ்ரீயை சொல்லலாம்.
“இந்திய மூன் சொசைட்டி’யின் இளம் வயது தலைவராக இருக்கிறார். ஆனால், அடுத்த வீட்டுப் பெண் ணைப் போல, அலட்டல் இல்லாத தோ ற்றம் காட்டும்
ஜெயஸ்ரீ,
வெகு இயல்பா கப் பேசுகிறார்.
விண்வெளியை நோக்கிய இவரது பய ணம்
தொடங்கியது எப்போது? அவரே சொல்கிறார்: சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம்
பள்ளியில், 7-ம் வகுப்பு படித்தபோது. பள்ளியில் நடைபெற்ற, கிரகங்களின்
அமைப்பு குறித்த முகா மில், என், “அசைன்மென் டு’க்கு முதல் பரிசு
கிடைத்தது. அதுதான் விண்வெளி
குறித்து, எனக்குள் ஆர்வத்தை விதைத் தது. தொடர்ந்து, விண்வெளி தொடர் பான
ஞானத்தை வளர்த்துக்
கொண்டதால், சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும், பல பரிசுகளைப் பெற்றேன்;
நாசா விஞ்ஞானி களின் பாராட்டையும் பெற்றேன்.
இதுவரை, நாசாவுக்கு மூன்று முறை சென்றிருக்கிறேன். “நாசா’ வின் “லூனார்
அண்ட் பிளானட்ரி இன்ஸ்டிட்யூட்’, சர்வதேச ஆய்வு க் கட்டுரை ப் போட்டி ஒன்றை
நடத்தியது. அதற்கான
அறிவிப்பு
வெளியிடப்பட்டபோது, நான் 12-ம் வகுப்பு மாணவி. ஒருவித துணிச்சலில் நான்
அனுப்பிய கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டு, உதவித் தொகையுடன், அமெரிக்காவுக்கு
அழைக்கப்பட்டேன். இந்தி 
யா வில் இருந்து சென்ற ஒரே நபர், மிக இளவயது நபர் நான் தான்.
நான்காவது முறையாக விரைவில், “நாசா’ செல்லவி ருக்கிறேன்.
“ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங்’ படிப்பு முடிந்ததும், அதிலேயே முதுநிலைப்
படிப்பைப் படிக்க வும், ஆராய்ச்சி மேற்கொள்ள வும் அமெரிக்கா போகலாம் என்று
திட்டம். நிலவில் மனிதர்கள் வாழ் வதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவது, அங்குள்ள
பொருட்களைக் கொண்டே இருப்பிடங் களை அமைப்பது, மின்சார உற்பத்தி செய்வது,
நிலவுக்கும்,
பூமிக் கும் இடையில் தெளிவான, “கம்யூனி கேஷன்
அமைப்பை’ உரு வாக்குவது போன்றவை, என் ஆய்வின் அம்சங்கள். என் ஆய்வு
க் குத் தேவையான அடிப்படை வசதிகளும்,
நிபுணத்துவ உதவி களும், “நாசா’வில் கிடைக்கும்.
“நாசா’வில்,
விண்வெளி வீராங் கனை கல்பனா சாவ்லாவை உ ரு வாக்கிய விஞ்ஞானி, டாக்டர்
ஏஞ்சல் அபுட் மாட்ரிட், “நீ தான் அடுத்த கல்பனா சாவ்லா’ என்று கூறி,
பாராட்டி, கல்பனா பயன் படுத்திய, “பேட்ஜை’ எனக்கு பரி சாகக் கொடுத்தார்.
விண்வெளி
தவிர்த்த என்னுடைய பிற ஆர்வங்கள் என்றவென்றா ல், இசை, நடனம், டென்னிஸ்,
க்விஸ் என்று பல ஆர்வங்கள் உண் டு. ஆனால், அதற்கெல்லாம் ஒதுக்குவதற்குத்
தற்போது, நேரம்தா ன் இல்லை! என்று சந்தோஷமாய் அலுத்துக் கொண்டார் ஜெயஸ்ரீ.
நிலவு
போன்ற மாதிரி அமைப்பை இந்தியாவில்
நிறுவி, அது தொடர்பான ஆய்வுக்கு உதவ வேண்டும் என்பது ஜெயஸ்ரீயின் எண்ணம்.
தன் ஆய்வுப் பணிகளுடன், அதற்கான முனைப்பான முயற்சிகளையும் மேற்கொண்டு
வருகிறார், இந்த விண்வெளி ராணி!
காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
சென்னை
மற்றும் புறநகர் பகுதிகளில் காளான், பேல் பூரி, பானி பூரி விற்கும்
தள்ளுவண்டிக் கடைகள் சாலையோரங்களில் ஆயிரக்கணக்கில் முளைத்திருக்கின்றன.
ஒரு பிளேட் ரூ. 10 என்பதால் மாலை நேரத்தில் இக்கடைகளில் வாடிக்கையாளர்
கூட்டம் மொய்க்கிறது. மாணவர்கள், தொழிலாளர்கள் என பல தரப்பினரும் தினமும்
விரும்பி காளான் உட்கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
சிலர், மனைவி, குழந்தைகளுடன் கூட கடைகளின் முன் நின்று ருசிக்கின்றனர். அவற்றை உண்பதால் ஆரோக்கியத்துக்கு கேடு ஏற்படும் என்பதை பற்றி, பலரும் அறியாதவர்களாகவே உள்ளனர். பெரும்பாலான கடைகளில் ‘காளான்’ என்ற பெயரில் விற்கப்படும் ‘அயிட்டம்‘ காளான் இல்லை என்பதே உண்மை. முட்டைக்கோஸ், மைதாமாவுடன் உப்பு சேர்த்து பிசைந்து எண்ணையில் வடை போல பொறித்து வைத்துக்கொள்கின்றனர்.
பின்னர் சிவப்பு நிறமேற்றுவதற்காக ஜிலேபிபவுடர், காரத்துக்கு மிளகாய்த் தூளை தண்ணீரில் கரைத்து, வாணலியில் ஊற்றி, அவற்றுடன் ஏற்கனவே பொறித்த முட்டைக்கோஸ் மைதாமாவு கலவை ‘வடை‘களை போட்டு வேக வைத்து வாடிக்கையாளருக்கு பிளேட்டில் பரிமாறுகின்றனர். இவற்றில் காரமும், உப்பும் அதிகம் சேர்த்திருப்பதால் சுவை கூடி நாவை சுண்டியிழுக்கிறது; இதுவே, காளான் என்ற பெயரில் விற்கப்படுகிறது.
இதையறியாத பலரும் ‘காளான்‘ சுவையை மனதில் நினைத்தபடி, போலி காளான் ‘அயிட்டத்தை‘ விரும்பி சுவைக்கின்றனர். இவ்வகையான காரம், ஜிலேபி பவுடர், அதிக உப்பு கலந்த முட்டைக்கோஸ், மைதாமாவு கலவை தீனியை தொடர்ச்சியாக தினமும் வாங்கி உட்கொள்வது, உடல் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும் என்கின்றனர் சுகாதாரத் துறையினர்.
மேலும், ஒருமுறை உணவை வேகவைக்க பயன்படுத்திய எண்ணையை மீண்டும், மீண்டும் பயன்படுத்துவதால் அவற்றில் நச்சுதன்மை கலந்து, ஆரோக்கியத்துக்கு ஆபத்தை விளைவிக்கிறது. எனினும், வாடிக்கையாளர் மத்தியில் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால், தள்ளு வண்டிக்காரர்களின் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.
உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் இதுபோன்ற போலி ‘காளான்‘ விற்பனை தள்ளுவண்டிக் கடைகள் மற்றும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட இட்லி, தோசை விற்கும் தள்ளுவண்டி கடைகள், சிறு ஒட்டல்களை சுகாதாரத்துறையினர் கண்டுகொள்வதில்லை. இந்த துறையின் அலட்சிய போக்கு, மக்களின் ஆரோக்கியம் மற்றும் பொதுசுகாதாரத்தின் மீது அக்கறை காட்டாததையே காட்டுகிறது.
மாரடைப்பு ஆபத்து
அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது : சுகாதாரமற்ற, அதிக காரத்தன்மையுள்ள உணவுப்பண்டங்களை தவிர்ப்பது நல்லது. வயிற்று வலி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிறு, குடல் சம்பந்தப்பட்ட உபாதைகளுக்காக சிகிச்சை பெற வருவோரிடம், அவர்களது அன்றாட உணவு முறைகள் குறித்து விசாரிப்பது வழக்கம். அப்போது, பலரும் சாலையோரத்தில் விற்கப்படும் அதிக காரத்தன்மையுடைய ‘காளான்’ ‘பானிபூரி’ ‘பேல் பூரி’யை தினமும் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.
இது போன்ற, உடல்நலத்துக்கு எதிரான உணவு வகைகளை தவிர்த்தால், ஆரோக்கியம் மேம்பாடும். இல்லாவிடில் அல்சர், ஜீரணக்கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படும். மாசலா, ஜிலேபி பவுடர் போன்றவற்றை அதிகம் பயன்படுத்தி சமைக்கப்படும் உணவை தொடர்ச்சியாக உட்கொள்வோருக்கு, ‘கேன்சர்‘ பாதிக்கக்கூடிய வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.
ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை மீண்டும், மீண்டும் கொதிநிலைக்கு கொண்டு சென்று அதில் உணவுப்பொருட்களை வேக வைக்கும் போது, ‘ஹைட்ரோ கார்பன்‘ அளவு அதிகமாகிறது. இதில், சமைக்கப்படும் உணவை தொடர்ச்சியாக உட்கொள்வோருக்கு கொழுப்புச் சத்து கூடி ரத்தக்குழாய் அடைப்பு, மாரடைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இவ்வாறு எச்சரிக்கின்றனர்
சிலர், மனைவி, குழந்தைகளுடன் கூட கடைகளின் முன் நின்று ருசிக்கின்றனர். அவற்றை உண்பதால் ஆரோக்கியத்துக்கு கேடு ஏற்படும் என்பதை பற்றி, பலரும் அறியாதவர்களாகவே உள்ளனர். பெரும்பாலான கடைகளில் ‘காளான்’ என்ற பெயரில் விற்கப்படும் ‘அயிட்டம்‘ காளான் இல்லை என்பதே உண்மை. முட்டைக்கோஸ், மைதாமாவுடன் உப்பு சேர்த்து பிசைந்து எண்ணையில் வடை போல பொறித்து வைத்துக்கொள்கின்றனர்.
பின்னர் சிவப்பு நிறமேற்றுவதற்காக ஜிலேபிபவுடர், காரத்துக்கு மிளகாய்த் தூளை தண்ணீரில் கரைத்து, வாணலியில் ஊற்றி, அவற்றுடன் ஏற்கனவே பொறித்த முட்டைக்கோஸ் மைதாமாவு கலவை ‘வடை‘களை போட்டு வேக வைத்து வாடிக்கையாளருக்கு பிளேட்டில் பரிமாறுகின்றனர். இவற்றில் காரமும், உப்பும் அதிகம் சேர்த்திருப்பதால் சுவை கூடி நாவை சுண்டியிழுக்கிறது; இதுவே, காளான் என்ற பெயரில் விற்கப்படுகிறது.
இதையறியாத பலரும் ‘காளான்‘ சுவையை மனதில் நினைத்தபடி, போலி காளான் ‘அயிட்டத்தை‘ விரும்பி சுவைக்கின்றனர். இவ்வகையான காரம், ஜிலேபி பவுடர், அதிக உப்பு கலந்த முட்டைக்கோஸ், மைதாமாவு கலவை தீனியை தொடர்ச்சியாக தினமும் வாங்கி உட்கொள்வது, உடல் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும் என்கின்றனர் சுகாதாரத் துறையினர்.
மேலும், ஒருமுறை உணவை வேகவைக்க பயன்படுத்திய எண்ணையை மீண்டும், மீண்டும் பயன்படுத்துவதால் அவற்றில் நச்சுதன்மை கலந்து, ஆரோக்கியத்துக்கு ஆபத்தை விளைவிக்கிறது. எனினும், வாடிக்கையாளர் மத்தியில் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால், தள்ளு வண்டிக்காரர்களின் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.
உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் இதுபோன்ற போலி ‘காளான்‘ விற்பனை தள்ளுவண்டிக் கடைகள் மற்றும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட இட்லி, தோசை விற்கும் தள்ளுவண்டி கடைகள், சிறு ஒட்டல்களை சுகாதாரத்துறையினர் கண்டுகொள்வதில்லை. இந்த துறையின் அலட்சிய போக்கு, மக்களின் ஆரோக்கியம் மற்றும் பொதுசுகாதாரத்தின் மீது அக்கறை காட்டாததையே காட்டுகிறது.
மாரடைப்பு ஆபத்து
அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது : சுகாதாரமற்ற, அதிக காரத்தன்மையுள்ள உணவுப்பண்டங்களை தவிர்ப்பது நல்லது. வயிற்று வலி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிறு, குடல் சம்பந்தப்பட்ட உபாதைகளுக்காக சிகிச்சை பெற வருவோரிடம், அவர்களது அன்றாட உணவு முறைகள் குறித்து விசாரிப்பது வழக்கம். அப்போது, பலரும் சாலையோரத்தில் விற்கப்படும் அதிக காரத்தன்மையுடைய ‘காளான்’ ‘பானிபூரி’ ‘பேல் பூரி’யை தினமும் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.
இது போன்ற, உடல்நலத்துக்கு எதிரான உணவு வகைகளை தவிர்த்தால், ஆரோக்கியம் மேம்பாடும். இல்லாவிடில் அல்சர், ஜீரணக்கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படும். மாசலா, ஜிலேபி பவுடர் போன்றவற்றை அதிகம் பயன்படுத்தி சமைக்கப்படும் உணவை தொடர்ச்சியாக உட்கொள்வோருக்கு, ‘கேன்சர்‘ பாதிக்கக்கூடிய வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.
ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை மீண்டும், மீண்டும் கொதிநிலைக்கு கொண்டு சென்று அதில் உணவுப்பொருட்களை வேக வைக்கும் போது, ‘ஹைட்ரோ கார்பன்‘ அளவு அதிகமாகிறது. இதில், சமைக்கப்படும் உணவை தொடர்ச்சியாக உட்கொள்வோருக்கு கொழுப்புச் சத்து கூடி ரத்தக்குழாய் அடைப்பு, மாரடைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இவ்வாறு எச்சரிக்கின்றனர்
நன்றி: தினகரன்
Amazing Medical Facts of the Body
| 361. | |
| 362. | |
| 363. | |
| 364. | |
| 365. | |
| 366. | |
| 367. | |
| 368. | |
| 369. | |
| 370. | |
| 371. | |
| 372. | |
| 373. | |
| 374. | |
| 375. | |
| 376. | |
| 377. | |
| 378. | |
| 379. | |
| 380. |
Thursday, 7 June 2012
சுய தொழில்கள்-30 கிரிஸ்டல் நகை தயாரிப்பு
கிரிஸ்டல் நகை தயாரிப்பு
‘சமீப காலமாக செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், தங்க நகை அணிந்து செல்லவே பெண்கள் அஞ்சுகின்றனர். மேலும் ஜெட் வேகத்தில் தங்கம் விலை உயர்வதால் நடுத்தர குடும்பத்து பெண்கள் தங்க நகைகளை நினைத்து கூட பார்க்க முடிவதில்லை. கிரிஸ்டல் நகைகள் விலை குறைவு. அதேவேளையில் பார்ப்பதற்கு ஆடம்பரமாக காட்சியளிக்கும். பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் கிரிஸ்டல் நகைகளை அணியவே விரும்புகின்றனர். பெண்கள் வீட்டில் இருந்தபடி செய்ய ஏற்ற தொழில் கிரிஸ்டல் நகை தயாரிப்பு. இதில் நல்ல லாபமும் சம்பாதிக்கலாம்’ என்கிறார்கள் கோவை மாவட்டம் சோமனூரை சேர்ந்த செல்வி, ரம்யஜோதி. அவர்கள் கூறியதாவது: தையல் பயிற்சி நிலையத்தில் எங்களுக்கு ஒருவர் கிரிஸ்டல் நகை தயாரிப்பு குறித்து இவருடன் சேர்ந்து பயிற்சி அளித்தார். பின்னர் இருவரும் சேர்ந்து கிரிஸ்டல் நகை தயாரிப்பை ரூ.5 ஆயிரம் முதலீட்டில் துவக்கினோம். கோவைக்கு வாரம் ஒருநாள் சென்று, உற்பத்தி பொருட்களை வாங்குவோம். வீட்டு வேலை இல்லாத நேரங்களில் இருவரும் சேர்ந்தோ, தனியாகவோ நகைகளை கோர்ப்போம். இதனால் உற்பத்தி அதிகரித்தது.
ஆரம்பத்தில் பொழுதுபோக்குக்காக செய்யத் தொடங்கிய நாங்கள், தயாரித்த நகைகளை அக்கம்பக்கத்தில் உள்ள பெண்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு விற்றோம். இதில் நல்ல லாபம் கிடைத்தது. வீட்டில் உள்ளவர்கள் ஊக்குவித்தனர். அதிகளவில் உற்பத்தி செய்து அருகில் உள்ள கல்லூரி மாணவிகளுக்கு விற்று விற்பனையை அதிகப்படுத்தினோம். பள்ளி மாணவிகளையும் எங்கள் கிரிஸ்டல் நகை கவர்ந்தது. விலை மிகவும் குறைவாக இருப்பதோடு விரும்பிய மாடலில் கிடைப்பதால், பல பெண்கள் ஆர்வத்தோடு வாங்குகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவிகள் அவரவர் உடைக்கேற்ப மேட்சிங்காக அணிய, பல்வேறு வண்ணங்களில் கிரிஸ்டல் நகைகளுக்கு ஆர்டர் கொடுக்கின்றனர். நாங்கள் கலைநயத்தோடு செய்கிறோம். எங்கள் நகைகளை பார்ப்பவர்கள் உடனே தொடர்பு கொண்டு ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர். அதன் மூலம் உற்பத்தி படிப்படியாக உயர்ந்து வருகிறது. விலை குறைவோடு தரமாகவும் தயாரிப்பதால், எதிர்பார்த்ததை விட வரவேற்பு அதிகமாக உள்ளது. ஒளியை பிரதிபலித்து மின்னுவதால் லைட் கலர் கிரிஸ்டல் நகைகளை இளம்பெண்கள் விரும்பி வாங்குகின்றனர். பெரியவர்கள் அடர் வண்ண கிரிஸ்டல் நகைகளை விரும்புகின்றனர். பொறுமையும், அழகுணர்ச்சியும் உள்ளவர்கள் புதுப்புது டிசைன்களில் கிரிஸ்டல் நகையை உருவாக்கலாம். இதன் மூலம் எளிதில் வாடிக்கையாளர்களை பெருக்க முடியும். பெண்கள் வீட்டில் இருந்தபடியே செய்ய ஏற்ற தொழில் இது. பெரியளவில் பயிற்சி எதுவும் தேவையில்லை.
உற்பத்தி செலவு (ஒரு நாளைக்கு): ஒரு நபர் ஒரு நாளில் 8 மணி நேரத்தில் சிறிய அளவு கிரிஸ்டல் நகை 50 தயாரிக்கலாம். நடுத்தர அளவு என்றால் 15, பெரிய அளவு என்றால் 20 தயாரிக்க முடியும். சிறிய அளவு நகைக்கு ரூ.90 முதல் ரூ.110 வரை செலவாகும். நடுத்த அளவுக்கு ரூ.150 முதல் ரூ.160 வரையும், பெரிய அளவுக்கு ரூ.200ம் செலவாகும். சிறிய அளவிலான 50 கிரிஸ்டல் நகை கள் தயாரிக்க உற்பத்தி செலவு ரூ.5,500. நடுத்தர அளவு 15 நகை தயாரிக்க ரூ.2,600, பெரிய அளவு 20 நகை தயாரிக்க ரூ.4,000 தேவைப்படும். அனை த்து வகைகளையும் கலந்து தயாரிக்க சராசரியாக ரூ.5 ஆயிரம் போதும்.
வருவாய் (ஒரு நாளைக்கு): ஒரு நாள் உற்பத்தியாகும் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான கிரிஸ்டல் நகைகளை குறைந்தபட்சம் 30 சதவீதம் கூடுதல் விலை வைத்து விற்க முடியும். இதன் மூலம் ஒரு நாள் வருவாய் ரூ.6,500 இதில் லாபம் ரூ.1,500. இதை உழைப்பு கூலியாகவும் எடுத்து கொள்ளலாம். கூட்டாக சேர்ந்து தயாரித்தால் லாபம் இரு மடங்காக அதிகரிக்கும். ஒரு நாள் தயாரித்ததை விற்ற பின், அதில் கிடைக்கும் வருவாயை கொண்டு அடுத்த உற்பத்தியை தொடங்கலாம். இது வீட்டில் இருந்தவாறு தொழில் செய்பவர்களுக்கு பொருந்தும். விற்பனை அளவுக்குகேற்ப உற்பத்தியை அதிகரித்தால், வருவாய் கூடும்.
சந்தை வாய்ப்பு: சேலை மட்டுமல்லாமல் சுடிதார், சல்வார் உள்ளிட்ட நவீன ஆடைகளுக்கு ஏற்றபடி அணிய கிரிஸ்டல் நகைகள் தயாரிக்கலாம். இவற்றை இளம்பெண்கள் விரும்பி வாங்குவார்கள். குறைந்தபட்சம் ரூ.150 முதல் அதிகபட்சம் ரூ.300க்குள் கிடைக்கிறது. நீண்ட நாட்களுக்கு பொலிவு குன்றாமல் காட்சியளிக்கும். கலைநயத்தோடு இருப்பதால் வயதானவர்களும் விரும்பி வாங்குவார்கள். தோழிகளுக்கு பரிசளிக்கவும் பெண்கள் இவற்றை விரும்பி வாங்குகின்றனர். கிரிஸ்டல் செயின் மட்டுமல்லாமல், கிரிஸ்டல் தோடு, கிரிஸ்டல் கொலுசு ஆகியவற்றையும் எளிதில் தயாரிக்கலாம். தனிப்பட்ட முறையில் விற்பது மட்டுமல்லாமல் பேன்சி ஸ்டோர்கள், கவரிங் கடைகளுக்கும் சப்ளை செய்யலாம்.
தயாரிப்பது எப்படி?
கிரிஸ்டல் நகை தயாரிப்பு என்பது தங்க, வெள்ளி நகைகளை போல் உருக்கி, தட்டி செய்வதல்ல. ரெடிமேடாக உள்ள பல வண்ண கிரிஸ்டல் மற்றும் இணைப்பு பொருட்களான சக்கரியா, பால் ஆகியவற்றை சேர்த்து கோர்ப்பதுதான். சிறுமிகள், இளம்பெண்கள், வயதானவர்கள் அணிவதற்கேற்ப குறைந்த நீளம் (ஒரு அடி), நடுத்தர நீளம் (ஒன்றரை அடி), அதிக நீளம் (2 அடி) ஆகிய அளவுகளில் கிரிஸ்டல் நகைகள் தயாரிக்கப்படுகின்றன. முதலில் கிரிஸ்டல் வயர் கம்பியை கட் டரை கொண்டு தேவையான அளவுகளில் வெட்டி கொள்ள வேண்டும். 2 பேர் கூட்டாக செய்தால், முதலில் டாலரை கோர்த்து நடுவில் தொங்கவிட்டு, இரு முனைகளில் ஒரு பால், ஒரு சக்கரியா, ஒரு கிரிஸ்டல் கல் ஆகியவற்றை வரிசைப்படி கோர்க்க வேண்டும். அதே பாணியில் தொடர்ந்து கோர்த்து வர வேண்டும். இவ்வாறு இருபுறமும் கோர்த்து முடிக்கும் இடத்தில் கியர் லாக்கை கோர்த்து கட்டிங் பிளேயர் மூலம் முடிச்சு போட வேண்டும். இங்கு ஊக்கு, காந்தம் அல்லது ஸ்க்ரூ பொருத்தினால் கிரிஸ்டல் நகை ரெடி.
தேவையான பொருட்கள்: இளம் மற்றும் அடர்த்தியான பல வண்ண கிரிஸ்டல் சிறியது முதல் பெரியது வரையில் 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 ஆகிய எண்களில் கிடைக்கும். எண் 2 கிரிஸ்டல் 90 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் ரூ.65. எண் 4 ரூ.75, எண் 6 ரூ.95, எண் 8 முதல் 18 வரை ரூ.100. சக்கரியா 100 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் ரூ.52, கோல்டு பால் 100 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் ரூ.19. கியர் வயர், கோல்டு மற்றும் சில்வர் வண்ணங்களில் கிடைக்கும். 100 மீட்டர் கொண்ட ஒரு ரோல் ரூ.65. கியர் லாக் 100 எண்ணிக்கையுள்ள ஒரு பாக்கெட் ரூ.52. ஊக்கு ஒரு செட் ரூ.7, காந்த ஊக்கு ஒன்று ரூ.10, ஸ்க்ரூ செட் ரூ.7 முதல் ரூ.10. கட்டர், பிளேயர் ஆகியவை தலா ரூ.100. நகரங்களில் உள்ள பேன்சி ஸ்டோர்களில் இந்த பொருட்கள் கிடைக்கின்றன.
கிரிஸ்டல் கொலுசு..
தரமான வெள்ளிக்கொலுசு வாங்க குறைந்தது ரூ.2 ஆயிரம் தேவைப்படுகிறது. மார்டன் பெண்களுக்கு பாரம்பரிய வெள்ளி கொலுசுகளில் மனம் அவ்வளவாய் லயிப்பதில்லை. குறைந்த விலையில், புதுப்புது டிசைன்களில், கலர்கலராய் கொலுசுகள் கிடைத்தால் சும்மா விடுவார்களா? வாங்கி குவித்து விடுவார்கள். விலை குறைவாக, அதே நேரத்தில் டிரஸ்சுக்கு மேட்ச்சாக கலர்கலராய் கிடைப்பதால் கிரிஸ்டல் கொலுசுகளுக்கு இளம்பெண்கள் மத்தியில் நல்ல கிராக்கி இருக்கிறது.
கிரிஸ்டல் கற்களால் அலங்கரித்து, ரூ.400 விலையில் வெள்ளிக்கொலுசு தயாரித்து அசத்துகிறார், திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த சாந்தி. பிருந்தா ஜுவல் ஒர்க்ஸ் மற்றும் மெருகுக்கடை நடத்தி வரும் அவர் கூறியதாவது:
நகைத்தொழில் செய்து வரும் பாரம்பரிய நடுத்தர குடும்பம் எங்களுடையது. பெரிய நிறுவன நகைக்கடைகளால், குடிசைத் தொழிலாக இருந்து வந்த நகைத்தொழில் நலிந்ததால் எங்கள் குடும்பத்தில் வறுமை தலை தூக்கியது. இதனால் கணவர் நகைக்கடை வேலைக்கு சென்றார். நான் நகைகளுக்கு பாலிஷ் போடுவது, கொலுசு தயாரிப்பது போன்றவற்றை கற்றுக்கொண்டேன். அதுதான் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
வெள்ளி விலை உயர்ந்து கொண்டே செல்வதால், கொலுசு எடை, தரத்தை குறைக்காமல் குறைந்த விலையில் கொலுசு விற்றால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று நினைத்தேன்.
கொலுசு விலையைக் குறைக்க அதில் சேர்க்கப்படும் வெள்ளியைக் குறைக்க வேண்டும். சராசரியாக 20 கிராமுக்கு குறையாமல் வெள்ளிக் கொலுசு தயாரிக்கும் நிலையில் அதை 2 கிராம், 3 கிராம் வெள்ளியில் சரம், சரமாக பல வண்ணங்களில் டிசைன்களில் கிரிஸ்டல் கற்களை இணைத்து தயாரித்தேன். நான் தயாரித்த கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசுகளை பள்ளி, கல்லூரி மாணவிகள் விரும்பி வாங்கினர். ¢400க்கு கிடைப்பதால் பலரும் வாங்கிச் செல்கிறார்கள். இதன் மூலம் கிடைத்த லாபத்தில் எனது குடும்பமே தலைநிமிர்ந்து நிற்கிறது.
தொழிலை விரிவுபடுத்த சில ஆண்டுகளுக்கு முன்பு நேசக்கரங்கள் தன்னார்வ நிறுவன வழிகாட்டுதலின் பேரில் பிருந்தாவனம் மகளிர் சுய உதவிக்குழுவை உருவாக்கி தலைவியானேன். இத்தொழிலே தெரியாத பெண்களுக்கு கிரிஸ்டல் கொலுசு தயாரிப்பதை ஒரு வாரத்தில் கற்றுக் கொடுத்தேன். இன்று குழுவாக சேர்ந்து கிரிஸ்டல் கொலுசு தயாரித்து லாபம் பார்க்கிறோம்.
முதலீடும் லாபமும்
ஒரு கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசு தயாரிக்க 3 கிராம் வெள்ளி ரூ.150, 20 கிரிஸ்டல் கற்களுக்கு ரூ.100, உருக்க, கம்பியாக்க, கப் செய்ய கூலி ரூ.20, செய்கூலி ரூ.50 என அதிகபட்சமாக ரூ.320 ஆகும். இதை கிரிஸ்டல் கற்களின் விலைக்கேற்ப ரூ.300க்குள்ளும் தயாரிக்க முடியும். ரூ.400க்கு குறையாமல் விலை போகும். ஒரு கொலுசுக்கு லாபமாக ரூ.100 நிச்சயம். ஒருவர் ஒரு நாளைக்கு 5 கொலுசுக்கு குறையாமல் தயாரிக்க முடியும். மாதம் ரூ.15 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். உறவினர்கள், நண்பர்கள், சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள், பள்ளி, கல்லூரி பெண்களை நேரடி வாடிக்கையாளர்களாகக் கொண்டால் குழுவாகச் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பெண்கள் படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசுகளை கண்காட்சியாக வைத்து வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினால் வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். இது தவிர குறைந்த லாபத்தில் நகைக் கடைகளில் மொத்தமாக விற்கலாம்.
கற்றுக் கொள்வது எப்படி ?
மாவட்ட நிர்வாகத்தின் மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழிகாட்டும் தொண்டு நிறுவனங்கள், இத்தொழிலை மேற்கொண்டுள்ள குழுக்கள், குடிசைத்தொழிலாக செய்து வரும் நகைத்தொழிலாளர்களை அணுகினால், ஒரு வாரத்தில் கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசு தயாரிப்பதை கற்றுக் கொள்ளலாம்.
தங்க முலாம் பூச்சு


வீட்டில் 5க்கு 5 அடி இடம் இருந்தால் போதும். சின்ன நகைப்பட்டறை போல் வீட்டளவில் ஒரு மண் தொட்டி, அதில் உமி, கரித்துண்டுகள் போட்டு, நெருப்பு ஊதி, சின்ன மண் செப்புகளில் தங்கத்தை வெள்ளியை உருக்க வேண்டும். பேசினில் 3 டம்ளர் தண்ணீரில் பொட்டாசியம் சயனைடு, அவல் அரக்கு, ரோசனம் ஆகியவற்றை தலா 5 கிராம் கலந்து, அதில் உருக்கிய தங்கம் அல்லது வெள்ளியை ஊற்றி, அதில் முலாம் பூச வேண்டிய ஆபரணத்திற்கு தங்கம், வெள்ளி கோட்டிங் அளவை சேர்க்க, ரேடியேட்டர் மீட்டர் மூலம் இணைத்து பழைய கவரிங், தங்க, வெள்ளி நகைகளுக்கு முலாம் பூசலாம். ஒரு மக்கில் வைக்கப்பட்டுள்ள காஸ்டிக் சோடாவில் ஆபரணத்தை முக்கி எடுத்தால் புதிது போல ஆகிவிடும். ஒரு பேசின், குட்டி கம்ப்ரசர் மோட்டார் வைத்து சுழலும் பிரஷ்சில் நகையைக் கழுவினாலும் புதுசாகும். இதை பாலிஷ் போடுவது, மெருகு போடுவது என்பார்கள். தங்க முலாம் பூசுவது, மெருகு போடுவது கூடுதல் வருமானம் தரும்.
தயாரிக்கும் முறை
வெள்ளியை வாங்கி, அதன் திடத்தன்மைக்கு செம்பு சேர்த்து உருக்க வேண்டும். உருக்கி கொடுக்கவும், அதை மெல்லிய கம்பியாக்கவும், கிரிஸ்டலில் பொருத்தக்கூடிய சின்ன கப்களை தயாரிக்கவும் ஜாப் ஒர்க் கடைகள் உள்ளன. அங்கு செய்து வாங்கிக் கொள்ளலாம். நூலில் பாசி கோர்ப்பதுபோல், வெள்ளிக் கம்பியில் கிரிஸ்டல் கற்கள் கோர்ப்பதுதான் கிரிஸ்டல் வெள்ளிக்கொலுசின் பார்முலா. கிரிஸ்டல் கற்களை துளை போட்டு, அதன் வழியாக வெள்ளிக் கம்பியை நுழைத்து, கிரிஸ்டல் கற்களின் இருபுறமும் குடையைப் போன்ற சிறு கப்களை ஒட்டவைத்து, குடை வழியாக வெளிவரும் கம்பியை வளையமாக்கி, அந்த வளையத்துக்குள் மற்றொரு வளையத்தைப் பொருத்த வேண்டும். கப், கிரிஸ்டல் என்று தொடர்ந்து சரமாக்குவது தான் கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசு. இதைச் செய்ய நகைத்தொழில் தெரிய வேண்டியதில்லை. சிறிய ‘சவனம்Õ (கட்டிங் பிளேயர்), இருந்தால் போதும். கைவேலையில் கொலுசு தயாராகி விடும். நகைக்கடைகளில் அன்றைய விலை நிலவரப்படி வெள்ளியை வாங்கலாம். கிரிஸ்டல் கற்கள் நகைத் தொழிலுக்குரிய பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும்.
டிரஸ்சுக்கு மேட்ச்சா கொலுசு
கிரிஸ்டல் கொலுசுகள் கலர்கலராய் கிடைப்பதால், உடுத்தும் சுடிதார், சேலையின் நிறத்திற்கு மேட்சிங்காக அணிய முடியும். கருக்காத வெள்ளியில் பளீரென மின்னும் வண்ண கிரிஸ்டல் கற்கள் கொலுசுக்கு அழகையும், காலுக்கு கவர்ச்சியையும் கொடுக்கிறது. விலையும் குறைவு. பேஷனாக உள்ளதால் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. சில பெண்கள் இதை கையில் பிரேஸ்லெட்டாக கட்டி புது பேஷனை உருவாக்கி வருகிறார்கள்.
இணையத்திலிருந்து...
சுய தொழில்கள்-29
பிழைப்புக்கு வழி சொன்ன பிளாஸ்டிக் பூக்கள்!

காலேஜ் படிப்பு படிச்சவங்களே வேலைக்கு அலையற இந்தக் காலத்துல, பத்தாவது படிச்ச நமக்கெல்லாம் என்ன பொழப்பு கிடைக்கப் போகுதுனு திக்குத் தெரியாம இருந்தவதான் நானும். இப்போ... இந்த பிளாஸ்டிக் பூ மாலை பிஸினஸால மாசம் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கற வெற்றிகரமான தொழில் முனைவோர் ஆகியிருக்கேன்ங்கிறது, ஆச்சர்யம்... ஆனாலும், உண்மை!
கண்களைப் பறிக்கும் அழகழகான வண்ண பிளாஸ்டிக் பூ மாலைகளைக் கோத்தபடியே நம்மிடம் பேசும் சென்னை, பழவந்தாங்கல், சங்கீதாவுக்கு முகமெல்லாம் பெருமிதம்! பொதுவிதிப்படி, கஷ்டங்கள்தான் சங்கீதாவின் தொழில் முயற்சிகளுக்கும் தூண்டுகோல்.
''எங்கப்பா ஆட்டோ டிரைவர். ரெண்டு பொண்ணு, ஒரு பையன்னு மூணு புள்ளைங்க எங்க வீட்டுல. நான் சின்ன வயசுல நல்லா படிப்பேன், துறுதுறுனு இருப்பேன். ஆனா, குடும்ப வறுமைக்கு நடுவுல என் திறமை எல்லாம் புதைஞ்சு போச்சு. பத்தாவதோட படிப்பும் நின்னு போச்சு. திடீர்னு அப்பா இறந்துட, நாங்க அநாதரவாயிட்டோம். துக்கத்துக்கு வந்திருந்தவங்க எல்லாம், 'மூணு புள்ளைங்கள எப்படிக் கரையேத்தப் போறே?’னு அம்மாவை கேட்க... அவங்க பயந்தே போனாங்க. ஆனாலும், தைரியத்தை இழக்காம... கூலிவேலை செய்து குடும்பத்தைக் காப்பாத்தின அம்மா, மூத்த பொண்ணான எனக்கு 18 வயசுலயே கல்யாணத்தை முடிச்சு... ஒரு கடமையை நிறைவேத்திட்ட நிம்மதியை அடைஞ்சாங்க.
என் கணவர், பெயின்ட்டிங் கான்ட்ராக்டரா இருந்தாரு. ஒரு பொண்ணு, ஒரு பையன்னு ரெண்டு குழந்தைகள் பிறந்தாங்க. வறுமையும் வாழ்க்கையுமா நாட்கள் ஓடிட்டு இருந்துச்சு. 'பிறந்த வீடு, புகுந்த வீடுனு கஷ்டங்களோட போராடியே வாழ்றது பழகிடுச்சு நமக்கு. ஆனா, நம்ம குழந்தைகளும் அந்தப் போராட்டத்தைத் தொடரணுமா?'னு எனக்கு ரொம்ப வேதனையா இருக்கும். 'நாலு பேரை போல நல்லா வந்துட மாட்டோமா?'னு மனசு கெடந்து தவிக்கும். அப்படி வழி தெரியாம உழன்றுட்டு இருந்தப்போதான் என் அம்மாவே எனக்கு திசைகாட்டி ஆனாங்க!''
- தன் வாழ்க்கையில் நிகழ்ந்த அந்த திருப்பத்தைத் தொடர்ந்தார் சங்கீதா...
''எங்கம்மா உறுப்பினரா இருந்த மகளிர் சுயஉதவிக் குழுவுல பிளாஸ்டிக் பூ மாலை செய்றதுக்கான ஒரு நாள் பயிற்சி கொடுத்தாங்களாம். அதைக் கத்துக்கிட்டு வந்த அம்மா, 'எனக்கு இதைத் தொழிலா செய்ற வயசும், ஆர்வமும் இல்லை. ஆனா, உனக்குதான் கை வேலைப் பாடுகள்ல எல்லாம் ஆர்வம் அதிகமாச்சே! நீ இந்த பிளாஸ்டிக் பூமாலையைச் செய்யக் கத்துக்கிட்டா... நிச்சயமா கையில நாலு காசு பார்க்கலாம்’னு அதைச் சொல்லிக் கொடுத்தாங்க. ரெண்டு நாள்லயே லாகவமா கத்துக்கிட்டதோட, அதுல என்னோட கற்பனைத் திறனையும் கலந்து, விதவிதமான மாலைகள் செய்ய ஆரம்பிச்சேன்'' என்ற சங்கீதா, இந்தத் தொழிலின் அடிப்படைகளைப் பகிர்ந்தார்.
''மாலை செய்றதுக்கான பிளாஸ்டிக் பூக்களை... ஃபேன்ஸி ஸ்டோர், பிளாஸ்டிக் பொருட்களுக்கான ஹோல்சேல் கடைகள்னு பல இடத்துலயும் வாங்கலாம். ஒரு கிலோ பிளாஸ்டிக் பூவை, அதன் தரம் மற்றும் டிசைனைப் பொறுத்து, 60 ரூபாயிலிருந்து 350 ரூபாய் வரையிலான விலையில் வாங்கலாம். அதுல 25 சின்ன மாலைகள் அல்லது 10 பெரிய மாலைகள் செஞ்சுடலாம். ஒரு மாலை செய்ய குறைந்தபட்சம் அரை மணி நேரம் ஆகும். சின்ன மாலை ஒண்ணு 100 ரூபாயில இருந்து 500 ரூபாய் வரைக்கும் விலை போகும். அதுவே நிலைக் கதவு, வரவேற்பறைனு தொங்க விடுற பெரிய மாலைனா 2,000 - 2,500 ரூபாய் வரைக்கும் விற்கலாம். இப்போ... லாபத்தை உங்களால கணக்குப் போட முடியுதா?
இதுக்கான மார்க்கெட்டிங்கும் சுலபமானதுதான். தெரு முக்கு ஃபேன்ஸி ஸ்டோர்கள்ல இருந்து... பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் வரை ஆர்டர் வாங்கலாம். ஹோட்டல்கள், ஆபீஸ்கள், திருமண மண்டபங்கள்னு பெரிய கட்டடங்கள் திறப்பு விழாவில் இருந்து கிரகப்பிரவேசங்கள் வரை களத்துல இறங்கியும் ஆர்டர் வாங்கலாம். நவராத்திரி, தீபாவளி, பொங்கல்னு விசேஷ தினங்களுக்கு முக்கியமான இடங்கள்ல நாமளே நேரடியா ஸ்டால் போடலாம். வாடிக்கையாளர்கள் வட்டம் விரிஞ்சதும்... சொந்தமா கடையேகூட திறக்கலாம்'' என்ற சங்கீதா, இதில் தன் அனுபவத்தைத் தொடர்ந்தார்.
''இந்தத் தொழிலை ஆரம்பிச் சப்போ என் குழந்தைக்கு எட்டு மாசம். பச்சைப் புள்ளையப் பார்த்துக் கிற சிரமங்களோடயும் இந்தத் தொழில்ல முதல் மாசமே 5,000 ரூபாய் லாபம் பார்த்தேன். அடுத் தடுத்த மாதங்கள்லேயும் தொழிலை உற்சாகத் தோடும், உத்வேகத்தோடும் தொடர்ந்தேன். என் பேச்சுத் திறமையால வாடிக்கையாளர்கள் வட்டம் சீக்கிரமே விரிஞ்சது. தொழிலை ஆரம்பிச்ச நாலு வருஷத்துல இப்போ மாசம் 20 ஆயிரம் ரூபாய் லாபம் பார்க்கிற இந்தத் தொழிலுக்கு முதலாளி ஆகியிருக்கேன். என் மாமியார் இந்தத் தொழில்ல எனக்கு உதவியா இருக்காங்க. வீட்டுக்கு வாடகைகூட கொடுக்க முடியாம எத்தனையோ முறை புழுங்கித் தவிச்ச நான், இன்னிக்கு சொந்த வீட்டுக்கு வந்தாச்சு. என் கணவர் இப்போ ரியல் எஸ்டேட் பிஸினஸ் பார்த்துட்டு இருக்கார். என் குழந்தைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையைக் கொடுத்திருக்கேன். ஒரு துயரமான நிலையில இருந்து வந்த நானே வாழ்க்கையில ஜெயிச்சுருக்கும்போது, மத்த எல்லாருக்கும் இது சாதாரணம்தானே?!''
இந்தியாவின் பெருமை' ஜாதவ் பயேங் !!
யார் இந்த மாமனிதர் ?!
'இந்தியாவின் பெருமை' ஜாதவ் பயேங் !!
உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!!
கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...!
யார் இவர் ?
அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்...ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார் .
1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை...!
மண்ணை வளப்படுத்த புது யுக்தி - எறும்பு
200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்...ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து 'சிவப்பு எறும்பு'களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். இந்த எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் மனம் தளராமல் இருந்துள்ளார். இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை என்கிறார்...வெகு விரையில் மண் பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்...இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள் !!
இப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.
2008 ஆம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என் வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இது வென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.
குடும்பம்
மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்க்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்து கொள்கிறார்.
டீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். "இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் " என்கிறார் இந்த தன்னலமற்ற மாமனிதர் !!
இவரது தன்னலமற்ற பணி இப்படி இருக்க தற்போது காட்டை பற்றி அறிந்த அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் உரிமை கொண்டாடவும், பாதுகாக்க பட்ட இயற்கை பகுதியாக அறிவிக்கவும் வரிசையில் காத்து இருக்கிறார்கள்.
மரங்கள் மட்டும் அல்ல
தேக்கு , அகில், சந்தனம், கருங்காலி,ஆச்சா போன்ற மரங்களும், 300௦௦ ஹெக்டேர் பரப்பளவில் மூங்கில் காடுகளும் இருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன...!! 100 யானைகளுக்கு மேற்பட்டவை 6 மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கின்றன. பறவைகள் விலங்குகளின் சொர்க்கபுரி தான் இந்த 'முலாய் காடுகள்' !!
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருக்கிறது...இரு ஆண்டுகளுக்கு முன் மிக 'பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட்' இந்த காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச் சென்றுள்ளார். 'ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அதிசயம்' என வியந்திருக்கிறார்.
இப்படி பட்ட ஒரு மனிதர் வெளிநாடுகளில் இருந்தால் இதற்குள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தங்கள் நாட்டின் பெருமை என ஒரு பட்டமே கொடுத்து கௌரவித்து இருப்பார்கள்...ஆனால் இங்கோ பத்திரிகைகளில் கூட அவ்வளவாக செய்தி வெளியிட படவில்லை...இவரது புகைப்படத்தை மிகுந்த தேடுதலுக்கு பின் தற்போதுதான் கூகுளில் பார்க்கவே முடிந்தது.
மரம் நடுவதையே ஒரு விழா அளவுக்கு பெரிது படுத்தி புகைபடத்திற்கு முகத்தை காட்டி பெருமைப்பட்டு கொள்ளும் சராசரி மனிதர் போல் அல்ல முலாய். எதையும் எதிர்பார்க்காமல் இந்த மண்ணிற்கு தான் செய்யும் கடமை என சாதாரணமாக கூறும் அவரை அறிந்துகொண்ட பிறகாவது நம் கடமை தனை உணர்ந்து நாம் வாழும் சமூகத்திற்கு நமது சிறிய பங்களிப்பை கொடுப்போம்.
உலக வெப்பமயமாதல் என அச்சப்பட்டு கொண்டு மட்டும் இருக்காமல் செயலிலும் இறங்க வேண்டிய தருணம் இது. ஒரு தனிமனிதரால் ஒரு காட்டையே உருவாக முடிகிறது என்றால் நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு ஒரு மரமாவது ஏன் நட்டு வளர்க்க கூடாது. நகரங்களில் இருப்பவர்கள் இயன்றவரை மொட்டை மாடியில் தோட்டம் போட்டும், தொட்டிகளில் செடிகளை வளர்த்தும் குளிர்ச்சியாக வைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொள்ளலாம்...சிறிது முயன்றுதான் பாருங்களேன்...!!
'மனிதருள் மாணிக்கம்' இவர்...! இவரது செயல் பலருக்கும் தெரியவேண்டும். மத்திய மாநில அரசுகள் இவருக்கு விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும்...என்பதே இங்கே எனது வேண்டுகோள்.
இவரை அறிவதன் மூலம் எல்லோருக்கும் சுற்றுச்சூழலின் மீதான ஒரு கவனமும், மரங்களை வளர்ப்பதன் மேல் ஒரு ஆர்வமும் வரக்கூடும்...நண்பர்கள் விரும்பினால் தங்கள் தளங்களில் இவரை பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்...
அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-15
*முதன் முதலில் மின்சாரம் தாக்கி இறந்தவர் யார் தெரியுமா?... அமெரிக்காவின் டபிள்யூ. ரிச்மேன் ஆவார். பெஞ்சமின் பிராங்கிளின் 1749-ம் ஆண்டு மின்னலுக்கு மின்சக்தி உண்டு என்ற உண்மையை உலகிற்கு கண்டறிந்து சொன்ன போது அதை உண் மையா, பொய்யா என நிரூபிக்கிறேன் என தைரியமாகக் கூறிய ரிச்மேன் பரிசோதனையில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி உயிரை இழந்தார்.
***
*தென் அமெரிக்க கண்டத்தில் கான்டோர் என்னும் ராட்சத பருந்து காணப்படுகிறது. இதை தென் அமெரிக்க நாடுகளில் வசிக்கும் ஸ்பானிஷ்காரர்கள் தெய்வமாகக் கருதுகிறார்கள். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜுலைமாதம் 29-ந்தேதி கான்டோர் தினம் என்னும் நாளையும் கடைப் பிடிக்கிறார்கள். அன்று இந்த பருந்தை எருதின் முதுகில் கட்டி விடுவார்கள். பருந்து தன்னை விடுவித்துக் கொள்ள எருதைக் குத்திக் குத்திக் காயமாக்கும். முடிவில் எருது இறந்து போகும். எருது சொர்க்கத்திற்குப் போகும் என எண்ணி விழாவை நடத்துவோர் மகிழ்ச்சி அடைவார்கள்.
இப்படி எருதைக் கொல்வதற்கு மிருகவதை சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்ததையொட்டி இப்போது இந்தப் போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
***
*அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள அல்டமெண்ட் கணவாய் பகுதியில் நூற்றுக்கணக்கான காற் றாலைகள் உள்ளன. இதன் மூலம் உற்பத்தியாகும் மின் சாரத்தின் மூலம் கலிபோர்னியா மாகாணத்தின் தேவையில் 10 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டு விடுகிறது.
இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் உலக காற்று சக்தி மின்சாரத்தில் 85 சதவீதத்தை கலிபோர்னியா மாகாணம் பயன்படுத்திக் கொள்கிறது.
***
*மிக வேகமாக ஓடக் கூடிய குதிரையையும் மிஞ்சி சாதனை படைத்து உலக சாதனை புத்தகமான கின்னசிலும் இடம் பிடித்திருக்கிறார், ஆப்பிரிக்கா கண்டத்தைச் சேர்ந்த ஐப்பால் லூம் என்னும் ஓட்டப் பந்தய வீரர்.
குதிரையுடனான 10 ஆயிரம் மீட்டர் தூரப் போட்டியில் அவர் கலந்து கொண்டார். இந்த பந்தயத்தில் அவர் குதிரையை விட 20 செகண்டுகள் முன்னதாக ஓடி வந்து வெற்றிக் கம்பத்தைத் தொட்டு வெற்றி பெற்று சாதனை நிகழ்த்தினார்.
***
*ஒலிம்பிக்கில் ஒரே விளையாட்டில் தொடர்ந்து நான்கு தடவை தனி ஒருவரே தங்கப்பதக்கத்தை வென்றவர் என்ற பெருமை ஒரே ஒரு வருக்கு மட்டுமே உண்டு. அவர் அமெரிக்காவின் ஆல்பிரட் அடால்ப் ஆர்ட்டர். 1956-ம் ஆண்டு முதல் 1968- ம் ஆண்டு வரை நடந்த நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் வட்டு எறியும் போட்டியில் தொடர்ந்து தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
*****
"ஹான்ஃபில்" என்பது அமேசான் காடுகளில் காணப்படும் ஒருவகை சிலந்தி. இவற்றின் முக்கிய உணவு என்ன
தெரியுமா? மீன்கள்தான். இந்த சிலந்திகள், மீன்களைப் பிடித்துத் தின்பதற்காகக் குளம், குட்டைகளில் மூழ்கும். நீரிலும் வாழக்கூடிய தன்மை கொண்டிருந்தாலும் இவ்வகை சிலந்திகள் இரைக்காக மட்டுமே தண்ணீருக்குள் செல்லும். எப்படி தெரியுமா?
கனமான பொருள் ஒன்றைக் கவ்விக் கொண்டு நீரில் மூழ்கும். தண்ணீருக்குள் இரை தின்றதும், கவ்விய கனப்பொருளை விட்டு விடும். உடல் கனம் குறைவதால் தானாக நீரின் மேற்பரப்புக்கு வந்து சேர்ந்து விடுமாம்.
****
*வெனிஸ் நகரில் கோமாளி கல்லூரி அமைந்துள்ளது. கோமாளிகளுக்குப் பயிற்சியளிக்கும் இக்கல்லூரியில் 50 மாணவர்களுக்கு மட்டுமே இடமுண்டு. எட்டு வாரப் பயிற்சியில் கழைக் கூத்தாடுதல், பொய்க்கால் கட்டி ஆடுதல் போன்ற பல வித்தைகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.
* எறும்புகள் பூமிக்கு அடியில் கூடுகள் கட்டிக் கொள்கின்றன. சில வகை எறும்புகள் மட்டும் உயர்ந்த மரங்களில் கூடுகளை உருவாக்கிக் கொள்கின்றன.
* எறும்பு, பூச்சி வகைகளில் ஹைமனாப்டிரா என்ற வகையைச் சேர்ந்தது.
* ஹனி ஆன்ட்ஸ் என்ற அழைக்கப்படும் தேன் எறும்புகள் தங்கள் வயிற்றிலேயே தேன் போன்ற பொருள்களைச் சேகரித்து வைக்கின்றன. இதனால், இவற்றின் வயிறு பருத்து உருண்டு தேன் குடமாகக் காட்சியளிக்கும். தேன் கிடைக்காத காலங்களில் வாய் வழியே தேனைத் துப்பி மற்ற எறும்புகளுக்குக் கொடுக்கின்றன.
* எறும்புகளுக்கு பார்வை தெரியாது. தன்னுடைய உணர்வுத் திறனால் மோப்பம் பிடித்து வழியை அறிந்துக் கொள்கின்றன.
*தொடரும்...
பேரழிவை நினைவுகூரும் தமிழ்-பாலஸ்தீன சகோதரர்கள்

ஈழத் தமிழரும், பாலஸ்தீனர்களும், மே மாத நடுப் பகுதியை, தமது இனத்திற்கு பேரழிவு ஏற்பட்ட மாதமாக நினைவுகூருகின்றனர். தமிழ் இன உணர்வாளர்கள், மே 18 ம் தேதியை நினைவுகூரும் தினமாக அறிவித்துள்ளனர். கடந்த 64 வருடங்களாக, மே 15 ம் தேதியை, “நக்பா (Al Nakba) தினம்” என்று பாலஸ்தீனர்கள் அறிவித்துள்ளனர். யூதர்கள் அதனை இஸ்ரேலிய சுதந்திர தினமாக கொண்டாடுகின்றனர். அதே போன்று, 1967 யுத்தத்தின் வெற்றியையும் யூதர்கள் கொண்டாடினார்கள். இவ்விரண்டு சம்பவங்களின் பின்னணியில், பாலஸ்தீன அரேபிய மக்களை இனப்படுகொலை செய்து, இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட கொடுமைகள் மூடி மறைக்கப் படுகின்றன. 2009 ம் ஆண்டு, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர், யூதர்களைப் போன்று தென்னிலங்கை சிங்களவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடிய நிகழ்வு இங்கே ஒப்பிடத் தக்கது.
1948 ம் ஆண்டு, பிரிட்டிஷ் பாதுகாப்புக்குட்பட்ட பாலஸ்தீன நாடு, யூதர்களிடம் கையளிக்கப் பட்டது. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில், பிரிட்டிஷ் காலனியான இலங்கை, சிங்களவர்களிடம் கையளிக்கப் பட்டது இவ்விடத்தே நினைவு கூறத் தக்கது. சிங்கள ஆட்சியாளர்கள், இஸ்ரேலிய யூத ஆட்சியாளர்களை பின்பற்றி நடந்து வருவதும் குறிப்பிடத் தக்கது. இஸ்ரேலிய யூத அரசின் இன ஒடுக்குமுறை கொள்கை பன்மடங்கு வீச்சைக் கொண்டது. 1948 ம் ஆண்டு, யூதர்களின் மரபு வழி இராணுவம் என்ற ஒன்று இருக்கவில்லை. தனித் தனியான ஆயுதக் குழுக்களாக இயங்கிக் கொண்டிருந்தன. மே 15 , அன்று தாக்குதலை தொடங்கிய யூத ஆயுதக்குழுக்கள் , சுமார் 600 பாலஸ்தீன கிராமங்களை இனச் சுத்திகரிப்பு செய்தனர். வெளியேறிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் காலனிய அரசு வழங்கிய ஆயுத தளபாடங்களும், யூத ஆயுதக் குழுக்களுக்கு பெரிதும் உதவியிருந்தன.
மே 18 நினைவுகூரலை, இலங்கை நாட்டு எல்லைக்குள் எங்கேயும் நடத்த முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அதே போன்று, மே 15 நினைவுகூரலை, இஸ்ரேலிய நாட்டு எல்லைக்குள் எங்கேயும் நடத்த முடியாது. அரபு மொழியில் பேரழிவு என்ற அர்த்தம் தரும், “அல் நக்பா” என்ற சொல், மே 15 நினைவுகூரல் தினத்திற்கு பெயராக வைக்கப் பட்டுள்ளது. ஜனவரி மாதம், இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஒன்று, அல் நக்பா நினைவுகூரலை தடை செய்துள்ளது. எந்தவொரு நிறுவனமாகிலும், இது போன்ற நினைவுகூரலை அனுமதிக்குமானால், அரச நிதியை இழக்க வேண்டியிருக்கும். இத்தகைய தடைகளையும் மீறி, இந்த வருடம் பாலஸ்தீனர்கள் அல் நக்பா தினத்தை நினைவுகூர்ந்துள்ளனர். டெல் அவிவ் நகர பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் பாலஸ்தீன மாணவர்கள், வளாகத்தினுள் சிறிய ஒன்றுகூடலை ஒழுங்கு படுத்தினர். அதில், இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பாலஸ்தீன கிராமங்களின் பெயர்களை வாசித்தார்கள். அதே நேரம், பாலஸ்தீன அதிகார சபைக்குட்பட்ட பிரதேசத்தில், பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
இஸ்ரேலிய பாட நூல்களிலும், சரித்திர நூல்களிலும், 1948 க்கு முன்னர் பாலஸ்தீனர்கள் வாழ்ந்ததாக, எங்கேயும் குறிப்பிடப் படவில்லை. ரோமர் காலத்தில் இருந்து, யூதர்கள் மட்டுமே பாலஸ்தீனப் பிரதேசத்தில் வாழ்ந்து வந்ததாக எழுதப் பட்டுள்ளது. சிங்கள-பௌத்த பேரினவாதிகள், இலங்கை முழுவதும் தமது என்று உரிமை கோருவது, இவ்விடத்தே குறிப்பிடத் தக்கது. இஸ்ரேலிய அரசு பாலஸ்தீனத்திற்கு உரிமை கோருவது மட்டுமல்ல, அப்படி ஒரு நாடு சரித்திரத்தில் இருந்ததை மறுத்து வருகின்றது. சரித்திர சான்றுகளை மறுப்பதற்கு வசதியாக, புதிய காடுகள் உருவாக்கப் படுகின்றன. 1948 ல் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பாலஸ்தீன கிராமங்களில், ஐரோப்பாவில் இருந்து புலம்பெயர்ந்த யூதர்கள் குடியேற்றப் பட்டனர். அந்தக் கிராமங்களின் அரபுப் பெயர்களை அழித்து விட்டு, ஹீபுரு பெயர்களை சூட்டினார்கள். கிழக்கிலங்கையிலும், வவுனியாவிலும், தமிழ்க் கிராமங்களில் வாழ்ந்த தமிழர்களை வெளியேற்றி விட்டு, அங்கெல்லாம் சிங்களவர்களை குடியேற்றியது குறிப்பிடத் தக்கது. இஸ்ரேலில் நடந்ததைப் போன்று, அந்தக் கிராமங்களுக்கு சிங்களப் பெயர்கள் சூட்டப் பட்டன.
இன்று பாலஸ்தீன பிரதேசமாக கருதப்படும் காஸா வில் வாழும் என்பது வீதமானோர், இஸ்ரேலியப் பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்த அகதிகளாவர். 1948 ம் ஆண்டு, காஸாப் பிரதேசம் எகிப்தின் பகுதியாக இருந்தமை, இங்கே குறிப்பிடத் தக்கது. அதே போன்று, அதே காலகட்டத்தில் ஜோர்டானின் கட்டுப்பாட்டில் இருந்த, மேற்குக் கரை பிரதேசத்தில் வாழும் நாற்பது சதவீதமான பாலஸ்தீனர்களின் பூர்வீகமும் இஸ்ரேல் ஆகும். பிற்காலத்தில், காஸா, மேற்குக்கரை மீது போர் தொடுத்த இஸ்ரேலிய படைகள், அந்தப் பிரதேசங்களை ஆக்கிரமித்தன. இன்று வரை, 1948 ம் ஆண்டு, இஸ்ரேலிய தேசத்திற்குள் அகப்பட்ட சில நூறு பாலஸ்தீன குடும்பங்களுக்கு மட்டுமே பிரஜாவுரிமை உள்ளது. காஸா, மேற்குக்கரை பிரதேசங்களில் வாழும் பாலஸ்தீனர்களுக்கு எந்த நாட்டு பிரஜாவுரிமையும் கிடையாது. அதாவது, “நாடற்றவர்கள்”.
இன்று இஸ்ரேல் என்று அறியப்பட்ட தேசத்தில் உள்ள, 418 பாலஸ்தீன கிராமங்கள் பாழடைந்து போயுள்ளன. ஏனென்றால், அங்கே குடியேறுவதற்கு போதுமான அளவு யூதர்கள் கிடைக்கவில்லை. ஆகவே, பாழடைந்த பாலஸ்தீன கிராமங்களை காடுகளாக மாற்றும் திட்டம் ஒன்று நடைமுறைப் படுத்தப் பட்டு வருகின்றது. சைப்ரஸ் மரம் போன்று, வறண்ட பிரதேசத்தில் விரைவாக வளரும் மரச் செடிகள் கொண்டு வந்து நடப் படுகின்றன. சில வருடங்களில் அவை 2 , 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட காடுகளாக மாறி விடும். அந்தக் காடுகளுக்கு இஸ்ரேலிய தலைவர்களின் நாமங்கள் சூட்டப் படுகின்றன. காடு வளர்க்கும் திட்டத்திற்கு, மேற்கத்திய நாடுகளும் உதவி வருவதால், சில காடுகளுக்கு மேற்குலக இஸ்ரேலிய நண்பர்களின் பெயர்களும் சூட்டப் படுகின்றன.
டெல் அவிவிலிருந்து ஜெருசலேம் செல்லும் வழியில், சாரிஸ்(Saris), பெய்த் துல் (Beit Thul) என்ற கிராமங்களில், பெல்ஜிய யூதர்களால் காடுகள் வளர்க்கப்பட்டுள்ளன. அன்றைய கார்டினல் டானியல், காடுகளில் விவிலிய வாசகங்களை பொறித்துள்ளார். நாசரேத் நகருக்கு அருகில், மலூல் (Malul), முஜெய்டில் (Mujeidil) என்ற கிராமங்களும் காடுகளாக மாறியுள்ளன. இதிலே குறிப்பிடத் தக்க விடயம் என்னவென்றால், இவ்விரண்டு கிராமங்களிலும் கிறிஸ்தவ பாலஸ்தீனர்கள் வாழ்ந்து வந்தனர். அங்கே இப்பொழுதும், பாலஸ்தீன கிறிஸ்தவர்களின் தேவாலயங்கள் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றன. அறுபதுகளில் அந்தக் கிராமங்களுக்கு சென்ற, கிறிஸ்தவ மதப் பற்றாளர்களான பெல்ஜிய அரசனும், அரசியும், அங்கே முப்பதாயிரம் மரச் செடிகளை நாட்டினார்கள். மேலேயுள்ள படத்தில், அழிவடைந்த நிலையில் உள்ள பாலஸ்தீன கிறிஸ்தவ தேவாலயமும், அருகில் காடும் இருப்பதை பார்க்கலாம்.
தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடும் புத்திஜீவிகள், தமிழ் மக்களுக்கு பாரிய துரோகம் இழைக்கின்றனர். தமிழ் தேசியம் பேசுவோரில் கணிசமான அளவு கிறிஸ்தவர்கள் உள்ளனர். அவர்கள் பாலஸ்தீன கிறிஸ்தவர்களுடன், தோழமை உணர்வை காண்பிக்க வேண்டும். இஸ்ரேலின் சுதந்திர தினம், பாலஸ்தீனர்களால் அல் நக்பா தினமாக நினைவுகூரப் படும் தகவலை தமிழ் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். பாலஸ்தீன கிறிஸ்தவர்கள், யூத ஆயுதக் குழுக்களால் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட உண்மைகள் தெரிந்தாலும், மேலைத்தேய கிறிஸ்தவ மேட்டுக்குடி இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பது எதற்காக? அவர்களைப் பொறுத்த வரையில், “ஐரோப்பிய வெள்ளை இனத்தவர் மட்டுமே கிறிஸ்தவராக இருக்க முடியும்”, என்ற இனவாத சிந்தனை கொண்டவர்கள். பாலஸ்தீன கிறிஸ்தவ சகோதரர்களுடன், தமிழ் கிறிஸ்தவர்கள் கொண்டுள்ள உணர்வுத் தோழமை, வெள்ளையின மேலாதிக்கத்திற்கு சாவுமணி அடிக்க வேண்டும்.
வெள்ளி கிரகம் எவ்வாறு பூமிக்கும் சூரியனுக்கும் இடையே வருகிறது ? எவ்வாறு நிகழ்கிறது இந்த வெள்ளி கிரகணம் ?

சூரிய கிரகணம் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஏதாவது ஓர் அமாவாசையன்று பூமிக்கும் சூரியனுக்கும் நேர் குறுக்கே சந்திரன் வந்து நிற்கும் போது சூரியன் முற்றிலுமாக அல்லது அரைகுறையாக் மறைக்கப்படுகிறது. இதையே சூரிய கிரகணம் என்கிறோம். பூமிக்கும் சூரியனுக்கும் நேர் குறுக்கே வெள்ளி கிரகமும் வந்து நிற்கலாம். வெள்ளி கிரகம் அப்படி குறுக்கே வந்து நின்றால் சூரியனின் ஒளித் தட்டு மறைக்கப்படுவதில்லை.

மாறாக சூரியனின் ஒளித்தட்டில் சிறிய கருப்புப் பொட்டு தெரியும். அதுவே வெள்ளி கிரகம். நாளை (ஜூன் 6) காலையில் சூரியன் உதிக்கும்போதே இப்படியான கருப்புப் பொட்டுடன் காணப்படும். தொடர்ந்து சூரியனைக் கவனித்துக் கொண்டிருந்தால் இந்தக் கருப்புப் பொட்டு இடது புறத்திலிருந்து வலது புறமாக நகர்ந்து செல்வதும் தெரியும். சுமார் நாலரை மணி நேரம் இது நீடிக்கும். சென்னை நகரை வைத்துச் சொல்வதானால் இது காலை 10 மணி 19 நிமிஷம் வரை நீடிக்கும். அதன் பிறகு வெள்ளி கிரகம் சூரியனின் ஒளித் தட்டிலிருந்து அகன்று விடும் வெறும் கண்ணால் சூரியனைக் காண முற்பட்டால் கண் பார்வை பாதிக்கப்படுகின்ற ஆபத்து உள்ளது.
ஆகவே இதற்கென உள்ள கருப்புக் கண்ணாடியால் மட்டுமே பார்க்க வேண்டும். பூரண சூரிய கிரகணத்தன்று சந்திரன் முற்றிலுமாக சூரியனை மறைப்பதுபோல வெள்ளி கிரகம் ஏன் சூரியனை முற்றிலுமாக மறைப்பதில்லை என்று கேட்கலாம். சந்திரன் பூமியிலிருந்து அதிகபட்சம் சுமார் 4 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வெள்ளி கிரகமோ பூமியிலிருந்து சுமார் 4 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆகவேதான் அது சூரிய ஒளித்தட்டை முற்றிலுமாக மறைப்பதில்லை.

நீங்கள் டிவி பார்க்கும்போது உங்கள் ஆள்காட்டி விரலை புருவம் மீது படியும் வகையில் கண்ணுக்கு அருகே வைத்துக் கொள்ளுங்கள். உங்களது விரல் டிவி திரையை முற்றிலுமாக மறைக்கும். ஆனால், அடுத்து நீங்கள் கையை நன்கு நீட்டி வைத்துக்கொண்டால் உங்கள் ஆள்காட்டி விரல் டிவி திரையை மறைக்காது. டிவி திரையின் பின்னணியில் உங்கள் ஆள்காட்டி விரல் கருப்பாகத் தெரியும். அதேபோன்று தான் சூரியனை வெள்ளி கிரகம் முற்றிலுமாக மறைப்பதில்லை. சொல்லப்போனால் சந்திரனைவிட வெள்ளி கிரகம் மிகப் பெரியது. அது கிட்டத்தட்ட பூமி அளவுக்குப் பெரியது. சந்திரனைவிட மிகத் தொலைவில் இருப்பதால் அது கரும் பொட்டு அளவுக்குத்தான் தெரிகிறது.

சூரிய ஒளித்தட்டில் வெள்ளி கிரகம் நகருவதை வைத்து சூரியன் மீது வெள்ளி கிரகம் ஒட்டிக்கொண்டு வழுக்கிச் செல்வதாகக் கருதி விடக்கூடாது. வெள்ளி கிரகம் சூரிய ஒளித்தட்டில் கருப்பாகத் தெரிகின்ற நேரத்தில் சூரியன் வெள்ளி கிரகத்தின் பின்னால் சுமார் 11 கோடி கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருக்கும். புளூட்டோவையும் சேர்த்துக் கொண்டால் சூரியனை ஒன்பது கிரகங்கள் சுற்றி வருகின்றன. இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனிச் சுற்றுப்பாதை உண்டு. சூரியனுக்கு மிக அருகில் உள்ளது புதன் கிரகம். அதாவது சூரியனைச் சுற்றி அமைந்த முதல் வட்டத்தில் புதன் கிரகம் உள்ளது. இரண்டாவது வட்டத்தில் வெள்ளி கிரகம் (இதற்கு சுக்கிரன் என்ற பெயரும் உண்டு. ஆங்கிலத்தில் வெள்ளி கிரகத்துக்கு வீனஸ் என்று பெயர்).

மூன்றாவது வட்டத்தில் பூமி அமைந்துள்ளது. வேறு விதமாகச் சொன்னால் பூமிக்கும் சூரியனுக்கும் நடுவே புதன், கிரகமும், வெள்ளி கிரகமும் அமைந்துள்ளன. புதன், வெள்ளி ஆகிய இரண்டும் பூமியைப் போலவே சூரியனைச் சுற்றிச் சுற்றி வருகின்றன. ஆனால், இந்த இரண்டின் சுற்றுப்பாதைகளும் சம தளத்தில் இல்லை. ஆகவே, இவை சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே மிக அரிதாக எப்போதாவதுதான் நேர் குறுக்காக வந்து நிற்கும். உதாரணமாக, வெள்ளி கிரகம் 583 நாள்களுக்கு ஒருமுறை சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே வந்து நிற்கிறது. ஆனால், அப்போது அது சூரியனுக்கு மேலே அல்லது கீழே அமைந்ததாகக் கடந்து சென்று விடுகிறது.

சூரிய ஒளித்தட்டில் கருப்புப் பொட்டாகத் தெரிகின்ற அளவுக்கு நேர் குறுக்காக இருப்பதில்லை. எனினும், 105 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியன், வெள்ளி, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைகின்றன. அப்போதுதான் வெள்ளி நேர் குறுக்காக வந்து நின்று சூரிய ஒளித்தட்டில் கரும் பொட்டாகத் தெரிகின்றது. இந்த நிகழ்வை வெள்ளிக் கடப்பு என்று வானவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் இப்போதைப்போல வெள்ளிக் கடப்பு நிகழ்ந்தது. அதற்கு எட்டு ஆண்டுகள் கழித்து இப்போது அது மறுபடி நிகழ்கிறது. இதன் பிறகு 2117 ஆம் ஆண்டிலும் 2125 ஆம் ஆண்டிலும் இது நிகழும். தமிழகத்தில் உள்ளவர்கள் இப்போதைய வெள்ளி கடப்பு நிகழ்வைக் காணத் தவறினால் 243 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

ஏனெனில், அடுத்த தடவை நிகழும் வெள்ளிக் கடப்பு தமிழகத்தில் தெரியாது. 2255 ஆம் ஆண்டில் நிகழும் வெள்ளிக் கடப்புதான் தமிழகத்தில் தெரியும். வெள்ளி கிரகத்தைப் பார்க்காதவர்கள் இருக்க முடியாது. வானில் பளீரென்று ஜொலிப்பதில் வெள்ளி கிரகம் முதலிடம் வகிக்கிறது. சில சமயங்களில் இது சூரிய உதயத்துக்கு முன் கிழக்கு வானில் ஜொலிக்கும். வேறு சமயங்களில் சூரியன் அஸ்தமித்த பின்னர் மேற்கு வானில் கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் தோற்றம் அளிக்கும். ஆகவே வெள்ளி கிரகத்துக்கு அது தெரிகின்ற நேரத்தைப் பொருத்து விடி வெள்ளி, அந்தி வெள்ளி என்ற பெயர் உண்டு. கடந்த பல மாதங்களாக வெள்ளி கிரகம் மேற்கு வானில் தெரிந்து வந்தது.
வெள்ளிக் கடப்பு நிகழ்வு கழிந்து ஜூன் மாத மூன்றாவது வாரத்திலிருந்து வெள்ளி கிரகம் கிழக்கு வானில் விடிவெள்ளியாகத் தெரிய ஆரம்பிக்கும். முன்னர் 1761 ஆம் ஆண்டிலும் பின்னர் 1769 ஆம் ஆண்டிலும் நடந்த வெள்ளிக் கடப்பு நிகழ்ச்சிகளுக்கு வரலாற்று மற்றும் அறிவியல் முக்கியத்துவம் உண்டு. சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் என்ன என்பது அறியப்படாத காலம் அது. ஆகவே, அப்போது இங்கிலாந்தில் வாழ்ந்த பிரபல வானவியல் நிபுணரான எட்மண்ட் ஹாலி ஒரு திட்டத்தைக் கூறினார். 1761 ஆம் ஆண்டு மற்றும் 1769 ஆம் ஆண்டு வெள்ளிக் கடப்பை உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஒரே சமயத்தில் ஆராய வேண்டும். வெள்ளி கிரகம் சூரிய ஒளித்தட்டைத் தொடுகின்ற நேரத்தையும் ஒளித்தட்டிலிருந்து விலகுகின்ற நேரத்தையும் மிகத் துல்லியமாகக் கணக்கிட வேண்டும். இத்தகவல்களைச் சேகரித்து ஆராய்ந்தால் பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தைக் கணக்கிட்டு விடலாம் என்று அவர் கூறினார்.
எட்மண்ட் ஹாலி 1742 இல் காலமாகி விட்டார் என்றாலும் அவர் கூறிய திட்டத்தின்படி 1761 ஆம் ஆண்டில் பல நிபுணர்கள் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று வெள்ளிக் கடப்பை ஆராய்ந்தனர். அந்தத் தடவையில் போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை. இரண்டாம் தடவை அதாவது 1769 ஆம் ஆண்டில் இதேபோல நிபுணர்கள் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று சேகரித்த தகவல்களை வைத்துக் கணக்கிட்டபோது பூமியிலிருந்து சூரியனுக்கு உள்ள தூரம் 93 மிலியன் மைல்களிலிருந்து 97 மிலியன் மைல்களாக இருக்கலாம் என்று உத்தேசமாகத் தெரிய வந்தது. அதுவரை சூரியனுக்குள்ள தூரம் 55 மிலியன் மைல்களாக இருக்கலாம் என்று ஊகிக்கப்பட்டு வந்தது. நவீன காலத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி சூரியன் சுமார் 92.96 மில்லியன் மைல் தொலைவில் (150 மில்லியன் கிலோ மீட்டர்) உள்ளது. எட்மண்ட் ஹாலியின் திட்டப்படி வெள்ளிக் கடப்பை உலகின் பல்வேறு பகுதிகளிருந்து ஆராயச் சென்றவர்களின் அனுபவம் வெவ்வேறாக இருந்தது. கில்லாமே டி ஜெண்டில் என்ற பிரெஞ்சு நிபுணரின் அனுபவம் துயரம் நிறைந்தது.
வெள்ளிக் கடப்பை பாண்டிச்சேரியில் பதிவு செய்ய விரும்பிய அவர் 1760 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரான்சிலிருந்து பாண்டிச்சேரி நோக்கிக் கிளம்பினார். அப்போது இந்தியாவில் காலுன்றுவதில் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே கடும் போட்டா போட்டி இருந்தது. இந்தியாவில் இரு நாடுகளின் படைகளுக்கும் இடையே நடந்த சண்டைகளில் பாண்டிச்சேரி அடிக்கடி கைமாறியது. ஜெண்டில் பிரான்சிலிருந்து கிளம்பியபோது பாண்டிச்சேரி பிரான்ஸ் வசம் இருந்தது. ஆனால், அவர் பல மாத கப்பல் பயணத்துக்குப் பிறகு பாண்டிச்சேரியை நெருங்கியபோது பாண்டிச்சேரி இங்கிலாந்தின் படைகள் வசமாகிவிட்டிருந்தது. ஆகவே, பிரிட்டிஷார் அவரை பாண்டிச்சேரியில் நுழைய அனுமதிக்கவில்லை.
வேறு வழியின்றி அவர் அங்கிருந்து கிளம்பினார். 1761 ஜூன் 6 ஆம் தேதி வெள்ளிக் கடப்பு நிகழ்ந்தபோது கப்பலிலிருந்து அதைக் கவனித்து விவரம் சேகரித்தார். ஆனால், கப்பலின் ஆட்டம் காரணமாகத் துல்லியமாகப் பதிவு செய்ய முடியவில்லை. அடுத்த வெள்ளிக் கடப்புக்கு இன்னும் எட்டு வருடங்கள்தானே இருக்கிறது. எதற்கு இப்போது நாடு திரும்ப வேண்டும் என்று கருதிய ஜெண்டில் ஆப்பிரிக்க கடல் ஓரமாக பிரெஞ்சு அரசுக்குச் சொந்தமான பகுதிக்குச் சென்று அங்கு தங்கிவிட்டு 1768 மார்ச் மாதம் மறுபடி பாண்டிச்சேரிக்கு வந்து சேர்ந்தார். இந்தத் தடவை அது பிரான்ஸ் வசம் இருந்தது. அவர் வானை ஆராய பாண்டிச்சேரியில் சிறிய ஆராய்ச்சிக்கூடம் ஒன்றை நிறுவினார். 1769 ஜூன் 4 ஆம் தேதி வெள்ளிக் கடப்பு நிகழ்ச்சியைப் பதிவு செய்ய அவர் ஆவலாகக் காத்திருந்தார்.
அந்த நாளும் வந்தது. ஆனால், பெருத்த ஏமாற்றம். வானை மேகங்கள் கப்பியிருந்தன. அவரால் சூரியனைக் காண முடியவில்லை. வெள்ளிக் கடப்பையும் பார்க்க முடியவில்லை. கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தவர் போலானார். இறுதியில் 11 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பிரான்ஸ் திரும்பினார். அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லாது போகவே ஜெண்டில் செத்து விட்டார் என அறிவித்திருந்தனர். பிரெஞ்சு ராயல் அகாடமியில் அவர் வகித்த பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். ஜெண்டிலின் மனைவி வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுவிட்டார். சொந்தக்காரர்கள் அனைவரும் அவரது சொத்தைப் பிரித்துக்கொண்டு விட்டனர். ஜெண்டில் மனம் இடிந்தவரானார்.
கடைசியில் பிரெஞ்சு மன்னரிடம் முறையிட்டதில் சொத்துகளை மீட்க முடிந்தது. மீண்டும் பதவி கிடைத்தது. அவர் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு புது வாழ்க்கை நடத்தலானார். நாளை காலை உங்கள் ஊரில் வானம் மேக மூட்டமாக இல்லாமல் இருந்தால்தான் உங்களால் வெள்ளிக் கடப்பைக் காண இயலும். 105 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியன், வெள்ளி, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைகின்றன. அப்போதுதான் வெள்ளி நேர் குறுக்காக வந்து நின்று சூரிய ஒளித்தட்டில் கரும் பொட்டாகத் தெரிகின்றது. இந்த நிகழ்வை வெள்ளிக் கடப்பு என்று வானவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்
Sunday, 27 May 2012
பொன்னான பொன்னாங்கண்ணி
*தினமும் உணவில் கீரைகளை சேர்த்து சாப்பிட்டால் உடலில் எந்த நோய்களும் வராது.கீரை மிக குறைவான விலைகளிலே கிடைகிற
து.கீரைகளை தவிர்த்து மேற்கத்திய உணவுகளை தேடி அலைந்த பலர் இன்று ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் என்று அவதி படுகின்றனர்.*கீரைகளின் பயன்களை சித்தர்கள் பல நூல்களில் எழுதியுள்ளனர். உணவே மருந்து.. மருந்தே உணவு என்ற கோட்பாட்டின் கீழ் தினமும் உணவில் சேர்க்க வேண்டிய கீரைகளைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகின்றோம். இம்மாதம் மேனியைப் பொன்னாக்கும் சிவப்புப் பொன்னாங்கண்ணி பற்றி தெரிந்துகொள்வோம்.
*இதற்கு அகத்தியர் கீரை, பொன்னாங்காணி, சீமை பொன்னாங்கண்ணி என பல பெயர்கள் உண்டு. இந்தியா முழுவதும் காணப்படும் இது படர்பூண்டு வகையைச் சார்ந்தது.சீமை பொன்னாங்கண்ணிதான் சிவப்பு பொன்னாங் கண்ணி என்று அழைக்கப்படுகிறது. வீட்டின் தோட்டத்தில் இதை வளர்க்கலாம். பூந்தொட்டியில் கூட வளர்க்கலாம்.
1.ரத்த சுத்ததிற்கு
ரத்தத்தை சுத்தபடுத்த மிகவும் பயனுள்ளதாக அமைவது பொன்னாங்கண்ணி. பொன்னாங்கண்ணிக் கிரையை நன்றாக அலசி சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.
2.ஞாபக மறதி குணமாக
சிலர் ஞாபக மறதி காரணமாக நிறைய இழப்பை சந்தித்திருப்பார்கள். ஞாபக மறதியை மனிதனை அழிக்கும் கொடிய வியாதிக்கு ஒப்பிடலாம். இவை நீங்கி நினைவாற்றல் அதிகரிக்க பொன்னாங்கண்ணி சூப் சிறந்த மருந்தாகும்.
3.கண்பார்வைக் கோளாறுகள் நீங்க
அதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும். கண்களில் எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும் .
இவர்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
4.பித்தத்தைக் குறைக்க
பித்த மாறுபாட்டால் உடலில் பல நோய்கள் தாக்குகின்றன. தலைவலி மஞ்சள் காமாலை, ஈரல் பாதிப்பு, கண் பார்வைக் கோளாறு உருவாகிறது. இதற்கு சிவப்பு பொன்னாங்கண்ணி சிறந்த மருந்தாகும். இந்த கீரையுடன் பூண்டு, மிளகு, சின்ன வெங்காயம் சேர்த்து சூப் செய்து உணவுக்குப் பின் அருந்தி வந்தால் பித்தம் குறையும்.
5.பொன்னாங்கண்ணி தைலம்
கூந்தல் வளர தினமும் பொன்னாங்கண்ணி தைலம் தேய்த்துக் குளித்து வந்தால் நல்லது. இதை வீட்டிலேயே தயாரிக்கலாம்.
பொன்னாங்கண்ணி இலையை நிழலில் உலர்த்தி காயவைத்தது - 20 கிராம், அருகம்புல் காய்ந்தது - 10 கிராம், செம்பருத்தி பூ காய்ந்தது - 10 கிராம் எடுத்து 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயில் நன்கு காய்ச்சி பாட்டிலில் அடைத்து தினமும் உபயோகிக்கலாம்.பொன்னாங்கண்ணிக் கீரை வாய் துர்நாற்றத்தை நீக்கும். இதயமும் மூளையும் புத்துணர்வாக்கும். மேனியை பளபளக்கச் செய்யும்.
6.தோல் வியாதிகள் குணமாக
சொறி சிரங்கு போன்ற தோல் வியாதிகளுக்கு பொன்னாங்கண்ணி சிறந்த மருந்தாகிறது.இவ்வளவு பயன்கள் உள்ள இந்தக் கீரையை இனிமேலும் ஒதுக்காமல் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.
தெரிந்து கொள்வோம் வாங்க பகுதி-17 நம் உடலைப் பற்றிய உண்மைகள்
குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.
நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.
நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.
நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.
பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.
நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.
நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.
நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.
நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.
முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.
மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.
ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.
இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.
மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.
ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.
நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.
நமது மூளை 80% நீரால் ஆனது.
நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.
நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான்.
மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.
பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.
மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.
மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்,
கண்கள் 31 நிமிடங்கள் | மூளை 10 நிமிடங்கள் | கால்கள் 4 மணி நேரம் | தசைகள் 5 நாட்கள் | இதயம் சில நிமிடங்க
தெரிந்து கொள்வோம் வாங்க பகுதி-18 விண்வெளி ஆச்சர்யங்கள்!!!
நமது அறிவிற்கு அப்பாற்பட்ட பல ஆச்சர்யங்கள் நிறைந்தது தான் விண்வெளி. என்னதான் விஞ்ஞானம் மூலம் ஆராய்ச்சிகள் பல மேற்கொண்டாலும் இன்னும் புதிய புதிய தகவல்கள் கிடை த்துக் கொண்டேதான் இருக்கின்றன. சூரியன், கிரகங்கள், நட்சத்திரங்கள், விண்கற்கள் எனப் பல புதுமைகள் இந்தப் பால்வீதியில் நிறைந்துள்ளன. அவற்றைப் பற்றிய சில தகவல்கள் இங்கே..
1. சூரியனில் ஆண்டுக்கு ஏழு முறை கிரகணம் தோன்றுகிறது.
2. ஒருவரின் எடை பூமியில் 70 கிலோ என்றால், சூரியனில் அவரது எடை 2000 கிலோ.
3. அண்டார்டிகாவில் செப்டம்பர் 21-ஆம் தேதி மட்டும் சூரியன் உதயமாகும்.
4. விண்வெளியில் பயணம் செய்த முதல் மிருகம் லைக்கா (Laika) என்ற நாய்.
5. விண்வெளி வீர்ர்களுக்கு உணவாகப் பயன்படுவது பாசி குளோரெல்லா.
6. சூரியனின் வெப்பக்கதிர்கள் 930 இலட்சம் மைல்கள் பயணித்து, பூமிக்கு வர சுமார் எட்டு நிமிடங்கள் ஆகின்றன. நாம் பார்க்கும் ஒளி, எட்டு நிமிடங்களுக்கு முந்தையது. மிக வேகமான ஒரு ஜெட் விமானம் இந்த தூரத்தைக் கடக்க 18 ஆண்டுகள் ஆகும்.
7. பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள 23 மணி நேரமும் 56 நிமிடங்களும் ஆகின்றன.
8. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் பெயர் நாசா.
9. இரவு வானில் கிட்டத்தட்ட 3000 நட்சத்திரங்களை, வெறும் கண் களாலேயே நம்மால் பார்க்க முடியும்.
10. பூமி விண்வெளியில் சுமார் 1,07,343 கி.மீ வேகத்தில் சுற்றுகிறது.
11. சூரிய கிரகணம் சுமார் 8 நிமிடங்கள் மட்டுமே நிகழும். ஆனால் சந்திர கிரகணம் 10 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கலாம்.
12. நட்சத்திரங்கள் என்பது சொந்த ஒளியைக் கொண்டு மிளிரும். கிரகம் என்பது சூரிய ஒளியை வாங்கிப் பிரதிபலிக்கும்.
13. சூரிய வெளிச்சத்தில் பூமியின் நிழல் சுமார் 8,59,000 மைல்கள் தூரம் விழும்.
14. ஒரு விண்மீன் வெடித்துச் சிதறும் ஒளி, நம் கண்ணுக்குத் தெரிய ஆகும் காலம் 1,70,000 ஆண்டுகள்.
15. 1866-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பவுர்ணமியே தோன்றவில்லை. அதே ஆண்டு ஜனவரி மற்றும் மர்ர்ச் மாதங்களில் இரண்டு பவுர்ணமி கள் தோன்றின. இது போன்று அதிசயம் 25 லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு தான் தோன்றுமாம்.
16. ஒவ்வொரு வருடமும் பூமியிலிருந்து 3.82 செ.மீ தூரம் நிலா விலகிச் செல்கிறது.
17. சூரிய மண்டலத்தைப் பற்றிய படிப்பு ஆஸ்டீரியோலஜி எனப்படும்.
18. உலக அளவில் ஆண்டுதோறும் 800 கோடி டன் கார்பன்-டை- ஆக்ஸைடு தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களால் நாம் இயற்கையை மாசுபடுத்துவதால் வளி மண்டலத்திற்குள் திணிக்கப்படுகிறது.
19. சந்திரனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் 3,64,000 கி.மீ
20. உலகிலேயே முதல் வான்வெளிப் புகைப்படம், அமெரிக்க உள்நாட்டுச் சண்டையின்போது பாராசூட்டிலிருந்து எடுக்கப்பட்டது.
21. யுரேனஸ் கிரகத்தில் கோடைகாலம் 21 ஆண்டுகளும், குளிர் காலம் அதையடுத்த 21 ஆண்டுகளும் நீடிக்கின்றன.
22. மனிதனை விண்வெளிக்கு அனுப்பிய 14வது நாடு இந்தியா.
23. 1970ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி பூமியிலிருந்து இயக்கப்பட்ட லூனா கோடி என்ற ஆளற்ற ஓடமே சந்திரனில் இறங்கிய முதல் ஓடமாகும்.
24. ஒரு மின்னல் 250 கோடி வோல்ட்ஸ் மின்சக்தி கொண்டது.
25. நிலவு ஒளி பூமிக்கு வர எடுக்கும் நேரம் 1.3 நொடி.
26. நிலவை முதலில் டெலஸ்கோப் வழியாகப் பார்த்தவர் கலிலியோ.
27. பூமி சந்திரனுக்கு மிக அருகில் வருவது டிசம்பர் மாதத்தில். பூமி சூரியனுக்கு மிக தொலைவில் போவது ஜூலை மாதத்தில்.
பூமியிலிருந்து சுமார் 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் நிலைநிறுத்தப்பட்ட செயற்கை கோள் மூலம் பூமியின் நடவடிக்கை களை கண்காணிக்கலாம். அதாவது பூமியின் ஏதாவதொரு இடத் தில் நடக்கும் சம்பவங்களை, சிக்னல்கள் அனுப்பியும் பெற்றும் கண்காணிக்க முடியும். சாதாரணமாக ஒரு தெருவில் கீழே கிடக்கும் ஒரு தபால் தலையின் அச்சிடப்பட்ட முகத்தைக் கூட பார்க்க முடி யும் என்பதே இதன் சிறப்பு. இந்த தொழில்நுட்ப உதவியைக் கொண்டு சீற்றங்களை முன் கூட்டியே அறியலாம். இந்தப் புவி ஆய்வு முறையை ஆங்கிலத்தில் Global Positioning System (GPS) என்று அழைக்கிறார்கள்.
பூமி சூரியனைச் சுற்றுவது நமக்குத் தெரியும். அதேபோல் விண் வெளியின் மையத்தைச் சூரியன் சுற்றும். வட்டப் பதையில் இது நொடிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றும். ஒரு முறை மையத்தைச் சுற்றி முடிக்க 250 மில்லியன் வருடங்களாகும். இது ஒரு காஸ் மிக் வருடம் (Cosmic year) எனப்படுகிறது.
இன்னும் நம் கண்களுக்குப் புலப்படாத பல அதிசயங்கள் வான்வெளியில் உள்ளன.
இணையத்திலிருந்து
நினைவு கூறுவோம் இந்த மாவீரனை!!
ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தை திப்புசுல்தான் ....
நினைவு கூறுவோம் இந்த மாவீரனை
இந்திய விடுதலைப் போராட்டத்தில் வீர வரலாறு படைத்தவர் திப்பு சுல்தான். ஆங்கிலேயரை நடுநடுங்க வைத்த அந்த மாவீரன், போர் வியூகத்திலும், படைக்கலத் தயாரிப்பிலும் சிறந்து விளங்கினார். 226 ஆண்டுகளுக்கு முன்பாகவே ராணுவத் தொழில்நுட்பத்திலும், வல்லமையிலும் திப்பு சுல்தான் படை சிறந்து விளங்கி ஆங்கிலேயப் படைகளை திணறடித்தது. மைசூர் சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்பு சுல்தானின்கோட்டையும், படைக்கலத் தயாரிப்பு தொழிற்சாலையும் இருந்த அவல நிலை குறித்து உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.
அந்தக் கடிதத்தை இந்திய பாதுபாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுத்துறை தலைவர் எஸ்.டி. பிள்ளையன் பார்வைக்கு அனுப்பினார் குடியரசுத் தலைவர்.
பிறகென்ன... ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ராணுவ தொழில்நுட்ப வரலாறு ஒரு புதிய செய்தியை வெளிப்படுத்த காத்துக் கொண்டிருந்த தகவல் உலகுக்குத் தெரிய வந்தது. திப்பு சுல்தான் ராக்கெட் தொழில்நுட்பத்தின் தந்தை என்பதும், ஏவுகணைகளைப் பயன்படுத்தியதில் முன்னோடி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஸ்ரீரங்கப்பட்டினத்தில் பழமை வாய்ந்த பகுதிகளில் ராணுவ வரலாற்று ஆராய்ச்சியாளர்களும், இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் ஆய்வுக்காக சுற்றியபோது பல பகுதிகள் இவர்களால் அடையாளம் காணப்பட்டன.
எதிரி முகாம்களை சீர்குலைத்து சின்னாபின்னமாக்கும் வகையில் ஏவுகணை ஏவும் தளங்களை அவர்கள் கண்ணெதிரே கண்டனர். இந்திய அரசு, விஞ்ஞானிகளின்சாதனைகளை ஆவணப்படுத்தி அறிஞர்கள் மற்றும் அவர்களின் விஞ்ஞான பாரம்பரியம், அவர்களின் சேவைகள் குறித்தும் ஆய்ந்து வரும் வேளையில் திப்பு சுல்தான் மற்றும் அவர் தந்தையார் ஹைதர் அலியின் நன்கொடைகள் குறித்து சிலாகித்துப் பேசுகிறார் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மேம்பாட்டு கழகத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரான டாக்டர் ஏ.எஸ். சிவதாணு பிள்ளை.
சக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில் நுட்பத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் திப்புசுல்தான் என்பதை இந்திய விஞ்ஞானிகள் தற்போது அங்கீகரித்துள்ளனர். நவீனகால ராணுவ வரலாற்றில் ராக்கெட் படையினை பயன்படுத்தியவர் மைசூர் புலி திப்புசுல்தான் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். 6000 படை வீரர்களைக் கொண்ட 27 தளபதிகளைக் கொண்ட திப்பு சுல்தானின் முழுமையான ஏவுகணைப் படைப்பிரிவு 1792ல் நிகழ்த்திய சாகசங்கள் பிரிட்டிஷ் படைகளின் பின்னடைவுக்கு காரணமாகிறது. வீரத் திப்புவின் படைகள் பயன்படுத்திய ராக்கெட்டுகள் லண்டன் மாநகரில் உள்ள 'உல் விச்' அருங்காட்சியகத்தில் தற்போது உள்ளது. ஸ்ரீரங்கப்பட்டினம் நவீனகால ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில் நுட்பத்தின் தொட்டில் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி பயன்படுத்திய v2 ராக்கெட்களுக்கு முன்னோடியாக திப்புவின் ராக்கெட் தொழில்நுட்பம் இருந்தது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். திப்புவின் ராக்கெட் 2.2 கிலோ கிராம் முதல் 5.5 கிலோ கிராம் வரை இருந்தது. ராக்கெட்களை போர்க்களத்தில் பயன்படுத்திய முதல் மாவீரன் திப்பு சுல்தான் என்பதும் உலகிற்கு தெரிவிக்க விரும்புவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மாவீரன் திப்பு துரோகத்தால் வீழ்ந்த 1799ஆம் ஆண்டுக்குப் பிறகு 700 ராக்கெட்களும், 900 சிறிய வகை ராக்கெட்களும் லண்டன் ராயல் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது.இரண்டு கிலோ மீட்டர் பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்குகளைத் தாக்கும் திப்புவின
ஏவுகணைகள் இந்திய ஏவுகணை தொழில்நுட்பத்தையும், வீரத் திப்புவின் போர் நிபுணத்துவத்தையும் விளக்குவண்ணம் உள்ளது.
டாக்டர் பிள்ளை, குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் தலைமையின் கீழ் ராக்கெட் விஞ்ஞானியாய் பணிபுரிந்தவர். விலை மதிப்புமிக்க இந்த வரலாற்றுத் தகவல்களை ஆராய தூண்டுகோலாய் விளங்கிய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு நன்றி கூறிய சிவதாணு பிள்ளை, குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து தங்கள் குழுவின் ஆய்வின் விவரங்களை தெரிவிக்கப் போவதாகக் கூறினார்.
இன்னும் இரண்டொரு மாதத்தில் தனது முழு ஆய்வறிக்கையை பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் சமர்ப்பிக்கும் என்றும் அறிவித்துள்ளது.
நாஸாவில் டாக்டர் அப்துல் கலாம் கலாம் கண்ட காட்சி
இந்தியாவின் ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சி அணுஆயுத எழுச்சி, ராணுவத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சி அத்தனை ஏற்றங்களுக்கும் முக்கியக் காரணமாக விளங்கிய அறிவியல் அறிஞரும் இந்தியக் குடியரசுத் தலைவருமான டாக்டர் அப்துல் கலாம், தனது ஆராய்ச்சிக்பணிக்காலத்தில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸாவிற்குச் சென்றபோது தான் கண்ட காட்சியை நாட்டு மக்களுக்கு தனது 'அக்கினிச் சிறகுகள்' நூலில் விவரித்துள்ளார்.
''எனது பயணத்தின் இறுதிக் கட்டமாக வாலப்ஸ் ஃப்ளைட் ஃபெசிலிட்டி மையத்திற்குச் சென்றேன். இந்த மையம வர்ஜீனியா மாகாணத்தில் கிழக்குக் கடற்கரைத் தீவான வாலப் ஸில் அமைந்துள்ளது. நாஸாவின் சவுண்டிங் ராக்கெட் திட்டத்திற்கு இந்த மையம்தான் அடித்தளம். இங்கே, வரவேற்புக் கூடத்தில் ஓர் ஓவியம் பிரதானமாகக் காட்சியளித்தது. ஒரு சில ராக்கெட்டுகள் பறந்து கொண்டிருக்கும் பின்னணியுடன் போர்க்களக் காட்சி ஒன்றை ஓவியமாக அங்கே தீட்டியிருந்தார்கள். இந்தக் காட்சியைக் கருவாகக் கொண்ட ஒரு ஓவியம் இப்படிப்பட்ட இடத்தில் இருப்பது ஒன்றும் வியப்பான விஷயம் அல்ல. ஆனால் என் கவனத்தை ஈர்த்தவர்கள், அதில் சித்தரிக்கப்பட்டிருந்த படை வீரர்கள்! ராக்கெட்டுகளை ஏவும் பகுதியில் காணப்பட்ட அவர்கள் வெள்ளை நிறத்தவர்கள் அல்ல. தெற்காசிய மக்களிடம் காணப்படும் உருவ அமைப்புடன் கருப்பு நிறம் கொண்ட படை வீரர்கள், அவர்கள். ஒரு நாள், எனக்குள் ஊற்றெடுத்த ஆர்வம், அந்த ஓவியத்தின் அருகே என்னை இழுத்துச் சென்றது. திப்பு சுல்தானின் படை வெள்ளையர்களுடன் போரிடும் காட்சியை அதில் கண்டேன். திப்பு சுல்தானின் சொந்த தேசத்தில் மறக்கப்பட்டு விட்ட ஒரு உண்மையை இந்தக் கிரகத்தின் இன்னொரு பகுதியில் நினைவுகூர்ந்து போற்றப்படுவதை அந்தச் சித்திரம் உணர்த்தியது. ராக்கெட் போர்த் தந்திரத்தின் நாயகனாக ஒரு இந்தியனை நாஸா பெருமைப்படுத்தி இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சிகொண்டேன்.''
சர்வதேச ஏவுகணை தொழில்நுட்ப தந்தையான திப்பு சுல்தானைப் பற்றி நவீன இந்திய ராணுவ தொழில்நுட்ப மேதை டாக்டர் அப்துல் கலாம் குறிப்பிடுவதுபொருத்தமானது தானே?
அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!! சலவாத் எனும் கருணையும், சலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!!
எது நேர்வழி? எது சத்தியம்? எதை இறைவன் விரும்புகிறான்? எதை வெறுக்கிறான்? இறைஉவப்பைப் பெற நாம் என்ன செய்யவேண்டும்? இம்மை வாழ்வை நடாத்திச் செல்வது எப்படி? மறுமை வெற்றியை ஈட்டுவது எவ்வாறு? இந்தக் கேள்விகளுக்குப் பதில் பெறுவது நடக்கிற காரியமா? அசாத்தியம்: எனவே, நாம் பொய்யில் புரண்டு, அசத்தியத்தில் மூழ்கி, கடும் இயப்பாடுகளில் சிக்கி, இருளிலேயே தட்டுத் தடுமாறி உழன்று கொண்டு இருந்திருப்போம். மனிதர்களாகவே இருந்திருக்க மாட்டோம்.
ஆனால் இறைவன் நம் மீது மாபெரும் அருட்கொடையை பொலிந்து விட்டான். ஆம்! அந்த மாபெரும் அருட்கொடைதான் நமது நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) ஆவார்கள். " மனிதர்களே! இதோ, அகிலங்களுக்கு ஓர் அருட்கொடையாக, நீங்கள் நேர்வழி பெறுவதற்காக என்னுடைய இறுதித் தூதரை நான் அனுப்பிவிட்டேன். இனி உங்களின் இம்மை வெற்றியும் மறுமை ஈடேற்றமும் இந்த இறைத்தூதரைப் பின்பற்றுவதில் தான் அடங்கியுள்ளது!" என்று வல்ல இறைவன் குர்ஆனில் பல்வேறு இடங்களில் தெளிவாக அறிவித்துவிட்டான்.
இறைத்தூதராக நியமிக்கப்பட்ட அந்த நிமிடம் முதல் - அண்ணலாரின் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு செயலும் - அவர்களின் சிறுசிறு அசைவுகளும் கூட மிகக் கவனமாகப் பதிவு செய்யப்பட்டன. காரணம்: திருநபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் வாழ்க்கை திருகுர்ஆனின் செயல்வடிவாகத் திகழ்ந்தது. அதாவது, நடமாடும் குர்ஆனாக அவர்கள் திகழ்ந்தார்கள். வாழ்வின் ஏதோ ஒன்றிரெண்டு துறைகளுக்கு மட்டுமல்ல அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டினார்கள். அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவுகள், தந்த அறிவுரைகள், ஏவிய செயல்கள், தடுத்த காரியங்கள் ஆகிய அனைத்துமே மனிதனுக்கு வழிக்காட்டும் ஒளி விளக்குகளாய் விளங்குகின்றன.
நபிகளார் மொழிந்தவை:
1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.
2. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.
3.அமானிதத்தை ( அடைக்கலப் பொருளை) பேணிக் காக்காதவனிடம் ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை) வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி) இல்லை.
4. உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது அனாதைகளை அரவணைக்கும் வீடேயாகும்.
5. நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் ஷெய்த்தானின் தன்மையாகும்.
6. உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.
7. எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும்.
8. எந்த மனிதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அவன் அதை அறியாமைக்கால வழக்கப்படி உயிரோடு புதைக்கவில்லையோ, அதனை இழிவாக கருதவில்லையோ, அதைக்காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு முன் உரிமை வழங்கவில்லையோ அத்தகையவனை இறைவன் சுவனத்தில் புகுத்துவான்.
9. இலஞ்சம் வாங்குபவர் மீதும், இலஞ்சம் கொடுப்பவர் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும்.
10. கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள்.
11. பதுக்கல் செய்பவன் பாவியாவான்.
12. தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.
13. பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.
14. தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு
அளித்திடும் நல்ல கல்வியும், நல்லோக்கப் பயிற்சியும் ஆகும்.
15. அனைத்தையும் விடச் சிறந்த சேமிப்பு பொருள்கள் இறைவனை நினைவு கூரும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உணர்வால் நிரம்பிய உள்ளம், இறைவழியில் நடந்திட தன் கணவனுக்கு உதவிடும் இறை நம்பிக்கையுள்ள நல்ல மனைவி ஆகியனவே.
16. நான் உங்களுக்கு மிகச்சிறந்த தர்மம் ஒன்றை கூறட்டுமா? அது, தனக்கு பொருளீட்டி உணவளிக்க வேறு யாருமில்லை என்ற நிலையில் உன் பக்கம் திருப்பி அனுப்பப்பட்ட உன் மகள் தான்.
17. அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள்.
18. ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்.
19. இறைவனின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்.
20. தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது.
21. பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச்சிறந்த தர்மமாகும்.
22. தன் அடிமைகளின் மீதும் பணியாட்களின் மீதும் தன் அதிகாரத்தை தவறாக பிரயோகித்தவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.
23. நோயாளிகளை நலம் விசாரியுங்கள்.
24. உங்களில் ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடியாவார். எனவே, ஒருவர் தன் சகோதரன் துன்பத்தில் சிக்கி இருப்பதை கண்டால் அதனை அவர் நீக்கி விடட்டும்.
25. உனது தந்தையின் அன்பை நீ பாத்துக்காத்து கொள். அதை முறித்து விடாதே அவ்வாறு அதை முறித்து கொண்டால் இறைவன் உனது ஒளியை போக்கி விடுவான்.
26. இறைவனின் உதவி என்னும் கை ஒன்றுப்பட்ட மக்களின் மீதிருக்கிறது.
27. உங்களில் இறந்தவர்களின் நற்செயல் பற்றியே கூறுங்கள்.
28. இறைவனை அஞ்சுங்கள். உங்கள் மக்களிடையே நீதமாக நடந்து கொள்ளுங்கள்.
29. பெருமை அடிப்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.
30. நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை, உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக் கூடாது.
31. இறுதி தீர்ப்பு நாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாக இருக்கும்.
32. குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்.
33. எவரையும் பழித்து காட்டுவதை நான் விரும்பவில்லை.
34. புறம் பேசுவது விபச்சாரத்தை விட கடுமையான பாவமாகும்.
35. கோள் சொல்பவன் சுவனம் நுழைய மாட்டான்.
36. நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடும்.
37. தன் நாவையும், வெட்கத்தலத்தையும் ஒருவர் பாதுகாத்து கொள்வதாக பொறுப்பேற்றால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். 38. நாவை அடக்கு. உன்னால் தீய உணர்வுகளை அடக்க முடியும்.
39. தீமைக்கு பின் அதை அழிக்கவல்ல நன்மையை செய்யுங்கள்.
40. மௌனம் சாதிப்பது அறிவு நிறைந்த செயல்.
41. இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம் தான்.
42. நாணம் நன்மையை மட்டுமே கொணர்கின்றது.
43. ஒரு வினாடி நேர சிந்தனை, ஓராண்டு கால இறை வணக்கத்தை விடச் சிறந்தது.
44. உம்முடைய உறவை துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழு. உமக்கு அநீதம் இழைத்தவனை மன்னித்து விடும்.
45. நற்குணம் என்பது நம்பிக்கைக்குரிய அடையாளமாகும். தீயகுணம் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.
46. உண்மையான வியாபாரி நபிமார்கள், தியாகிகள், நல்லடியார்கள் முதலியோர்களுடன் சுவனத்தில் இருப்பார்.
47. வணக்க வழிப்பாடு உள்ள ஒரு உலோபியை விட வணக்க வழிப்பாடு குறைந்த ஒரு கொடையாளி இறைவனுக்கு மிக சிறந்தவன்.
48. தர்மத்தில் சிறந்தது இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுப்பது தான்.
49. இரசியமாக செய்யும் தர்மம்தான் இறைவனின் கோபத்தை தடுக்கும்.
50. ஒரு மனிதன் பெற்றோரை ஏசுதல் பெரும் பாவமாகும்.
51. தன் பெற்றோரை நிந்திப்பவன் தன் மக்களால் நிந்திக்கப்படுவான்.
52. கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும்.
53. பிள்ளைகள் பேரில் உபகாரமாயிருக்கும் தாய் தந்தையருக்கு இறைவன் அருள் செய்கிறான்.
54. ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு கொப்பாகும்
55. வணக்கங்களில் மிக இலகுவானதை நான் உங்களுக்கு தெரிவிப்பதானால் அது மௌனம் காக்கும் நாவும், மங்களமான நற்குணமும்தான்.
56. மிதமிஞ்சிய உணவு அறிவை கெடுத்து, ஆரோக்கியத்தை குறைக்கும்.
57. செல்வவளம் என்பது அதிகமாக செல்வத்தை பெறுவதல்ல. போதுமென்ற மனதை பெறுவதே உண்மையான செல்வமாகும்.
58. இறைவன் யாருக்கு நலவை நாடுகிறானோ அவனுக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பான்.
59. நம் சிறுவர்களிடம் மரியாதை காட்டாதவனும், பெரியோர்களுக்கு மரியாதை செய்யாதவனும் நம்மை சார்ந்தவனல்ல.
60. உன் சகோதரனின் துன்பத்தை கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே. இறைவன் அவன் மீது கருணை புரிந்து உன்னை துன்பத்தில் ஆழ்த்திடுவான்.
யா அல்லாஹ்! உனது தூதர், எங்களின் சிரேஷ்டர், உலக மக்களின் நேர்வழிகாட்டி, எங்கள் ஆத்மாக்களுக்கு புத்துயிர் தந்த ஞானதீபம், அனாதைகளின் இரட்சகர், ஒப்பற்ற தலைவர் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் இந்த உயர் மணி மொழிகளை எங்கள் வாழ்க்கையில் எடுத்து நடக்க நீ எங்களுக்கு அருள் புரிவாயாக. அவர்களோடு நாளை சுவர்க்கத்தில் இருக்கும் பாக்கியத்தை எனக்கும், என் குடும்பத்துக்கும், என் அன்பான சுன்னத் வல் ஜமாஅத் எனும் சத்திய கொள்கை பாதையில் இருக்கும் நண்பர்களுக்கும் நசீபாக்குவாயாக!! ஆமீன்!!
Saturday, 26 May 2012
பன்றிக் கொழுப்பு.. உஷார்....................
கடந்த மாதத்தில் இணையத்தில் தமிழ் சகோதரர்களுக்கு மத்தியில் உலா வந்த மின்னஞ்சல் செய்தி சற்று அதிர்ச்சியளிக்கு முகமாகவே இருந்தது. அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்த செய்தி:
அதாவது ஷேக் சாஹிப் என்னும் சகோதரர் பிரான்ஸ் நாட்டிலுள்ள பிகால் (Pegal) என்ற நகரத்தில் உணவுப் பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் பணியாற்றும் துறை தரத்தை நிர்ணயம் செய்யும் துறை (Quality Control) என்பதால் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஆய்வு செய்து அதன் தரத்தை பதிவு செய்வதே அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை.
எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அவர்களின் தயாரிப்பை விற்பனைச் சந்தையில் அறிமுகப்படுத்தும் போது உணவுப் பொருளாக இருந்தாலும், மருந்துப் பொருளாக இருந்தாலும் அதை சோதனைக்குட்படுத்திய பின்பே அறிமுகப்படுத்தும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் சோதனையில் விற்பனைக்கு வரவிருக்கும் உணவு மற்றும் மருந்துகளின் கலவையை (ingredients) சோதனை செய்து அதை பிரான்ஸ் நாட்டின் உணவு தரக்கட்டுப்பாடு மையம் அங்கீகாரம் அளித்தபின் மட்டுமே விற்பனைக்காக வெளிவரும். உணவுத் தரக்கட்டுப்பாடு மையத்தில் உணவுப்பொருட்களை பிரித்து அதன் கலவையை (ingredients) ஆய்வு செய்வார்கள். இந்த கலவைகள் சிலவற்றிற்கு அறிவியல் பெயர்களும் இருக்கும், சிலவற்றிற்கு குறியீட்டுப் பெயர்களும் இருக்கும். எடுத்துக்காட்டாக E-904, E-141 என்று.
இவ்வாறு சோதனை செய்து கொண்டிருந்த ஷேக் சாஹிப் சில கலவைகளைக் (ingredients) குறித்து அந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்டபோது "உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்யுங்கள், எந்தவித கேள்விகளும் கேட்கவேண்டாம்" என்ற பதில்தான் வந்தது. இவர்களின் இந்த பதில் ஷேக் சாஹிப்பின் சிந்தையில் மேலும் சந்தேகங்களை எழுப்பியது. அதற்கடுத்து அவர்களின் கோப்புகளை ஆய்ந்து பார்க்கும் போது உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை கிடைக்கப்பெற்றுத் திகைத்தார்.
சற்றேறக்குறைய எல்லா மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பாவிலும் முதலாம் வகை மாமிசமாக உணவுக்குத் தேர்ந்தெடுப்பது பன்றியே ஆகும். எனவேதான் பலவகை பன்றிகளை உற்பத்தி செய்யும் பன்றிப் பண்ணைகள் அதிகமாக அந்நாடுகளில் உள்ளன. பிரான்ஸில் மட்டும் இதுபோன்ற பன்றிப் பண்ணைகள் 42,000 ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. ஏனைய விலங்கினங்களைக் காட்டிலும் பன்றியின் மாமிசத்தில் அதிகமான கொழுப்பு உள்ளது. ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் அதிகப்படியான கொழுப்பைத் தவிர்க்கவே முயற்சி செய்கின்றனர்.
இந்நிலையில் பன்றிகளிலிருந்து நீக்கப்பட்ட கொழுப்பு எங்கே செல்கிறது என்பதுதான் கேள்வி?
உணவுத் தரக்கட்டுப்பாடு மையத்தின் மேற்பார்வையில்தான் எல்லாப் பன்றிகளும் அறுக்கும் கொட்டில்களில் அறுக்கப்படுகின்றன. அறுத்த பன்றிகளிலிருந்து நீக்கிய பெரும்பான்மையான கொழுப்பை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்பதுதான் இவர்களுக்குத் தலைவலி. ஆரம்ப காலத்தில் முறையாக இதை எரித்துவிடுவார்கள்.
இவர்கள் பன்றிக் கொழுப்பை எரிப்பதால் எவ்வித பயன்பாடும் இல்லை. எனவே இதை எவ்வாறு பயன்படுத்தலாம் என எண்ணத்தொடங்கினர். பன்றிகளிலிருந்து நீக்கப்பட்ட கொழுப்புகளைக் கொண்டு முதல்கட்டச் சோதனையாக சோப்புகளைத் தயார் செய்து பார்த்தனர். இவர்களின் இந்த முயற்சி பலன் கொடுத்தது. அதற்கடுத்த கட்டமாக முழுவீச்சில் இந்த பன்றிக் கொழுப்பை பல வேதியியல் நொதிப்பொருட்களைக் கொண்டு அமிலங்களாக மாற்றி விற்பனைக்கு இறக்கி விட்டனர்.
பல்வேறு காரணங்களுக்காக உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பாலும் இதை வாங்கத் துவங்கினர். அவ்வேளையில் ஐரோப்பாவில் உணவுப் பொருட்களுக்கான சட்டம் கொண்டுவரப்பட்டது. எல்லா உற்பத்தி நிறுவனங்களும் அவை உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்கள், காஸ்மெடிக் பொருட்கள் (சோப்பு, ஷாம்பூ, முகக் கிரிம், ஹேர் கிரிம்..) மற்றும் மருந்துப் பொருட்களின் அட்டையில் அவற்றில் கலந்துள்ள கலவைகளை (ingredients) கண்டிப்பாக குறிப்பிடவேண்டும் என்று. இதனால் பன்றிக் கொழுப்பு கலந்துள்ள பொருட்களில் இதை பன்றிக் கொழுப்பு (Pig Fat) என்றே குறிப்பிட்டு வெளியிட்டுக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இஸ்லாமிய நாடுகளில் இதுபோன்ற பன்றிக் கொழுப்பு சேர்க்கப்பட்ட பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இத்தடையின் விளைவாக பன்றிக் கொழுப்பைச் சேர்த்துள்ள பொருட்களின் விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டது.
பன்றிக் கொழுப்பு என்று எழுதியிருந்தாலும் ஐரோப்பியர்களால் அப்பொருட்கள் விரும்பி வாங்கப்பட்டே வந்தன. இஸ்லாமிய நாடுகளிலும், முஸ்லிம்களாலும் இவ்வாறான உற்பத்திப் பொருட்கள் புறக்கணிக்கப்படுவதால் பன்றிக் கொழுப்பு (Pig Fat) என்று எழுதுவதற்கு பதிலாக விலங்குகள் கொழுப்பு (Animals Fat) என்று எழுதினர். அப்போது மீண்டும் ஐரோப்பிய நாடுகள் இஸ்லாமிய நாடுகளில் விலங்குகளின் கொழுப்பு அடங்கிய பொருட்களை விற்பனை செய்ய அங்கீகாரம் கேட்டனர். விலங்குகளின் கொழுப்பு என்று ஐரோப்பிய நிறுவனங்கள் கூறிய போது எந்த வகையான விலங்குகள் என்பதற்கு ஆடுகள் மற்றும் மாடுகளின் கொழுப்பு என்று கூறினர். மீண்டும் ஒரு கேள்வி அப்போது எழுந்தது. ஆடு மற்றும் மாடுகளின் கொழுப்பு எனினும் அது முஸ்லிம்களுக்கு ஹராம்தான். ஏனெனில் ஐரோப்பிய நாடுகளில் ஆடுகள் மற்றும் மாடுகள் இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்படாததால். இக்காரணத்தின் அடிப்படையில் இஸ்லாமிய நாடுகளின் தடையும், முஸ்லிம்களின் புறக்கணிப்பும் இப்பொருட்கள் மீது தொடர்ந்தது. கி.பி.1970-லிருந்து ஐரோப்பிய நாடுகளில் வசித்து வருபவர்களுக்கு இந்த உண்மை தெரியாமலிருக்காது.
இஸ்லாமிய நாடுகளின் தடையால் ஐரோப்பிய பெரும் பெரும் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனையின் மூலம் கிடைக்கும் 75% வருவாயை இழந்தனர். இந்த 75% என்பது பல பில்லியன்ஸ் டாலர்களுக்கும் அதிகமாகும்.
இதன் முடிவாக அவர்கள் விலங்குகளின் கொழுப்பு என்பதை எழுதுவதும் தவிர்த்து குறியீட்டு மொழியைப் (Coding Language) பயன்படுத்தத் துவங்கினர். குறியீட்டு முறையானது உணவு தரக்கட்டுப்பாடுத் துறையின் நிர்வாகத்தினருக்கு மட்டுமே தெரியும். அப்பொருட்களைப்பயன்படுத்தும் பொதுமக்களுக்கு குறியீட்டு கலவைகள் (E-INGREDIENTS) பற்றி சற்றும் அறிய வாய்ப்பில்லை.
E-INGREDIENTS என்ற கலவைகளை பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. பற்பசை, ஷேவிங் கிரீம், சிவிங்கம், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள், பிஸ்கட்ஸ், கார்ன் பிளாக்ஸ் (Corn Flakes), டோஃபி (Toffees), டின் மற்றும் குப்பிகளில் நிரப்பப்பட்ட உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் என்று எல்லா பொருட்களிலும் இந்த வகையான கலவைகளை கலக்கின்றனர். விட்டமின் மாத்திரைகள் மற்றும் பல மருந்துப் பொருட்களிலும் பன்றிக்கொழுப்பின் கலவைகளைக் கலந்து முஸ்லிம் நாடுகளில் விற்பனைக்காகப் பரவச்செய்துள்ளனர்.
பன்றிக் கொழுப்பை உட்கொள்வதாலும், பயன்படுத்துவதாலும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் - வெட்கம் அகன்றுவிடுதல், தீய எண்ணங்களை உருவாகிவிடுதல், வன்முறை எண்ணங்களை வளர்த்துவிடல் போன்ற தன்மைகள் தங்களையறியாமலே மாற்றம் அடையச் செய்யக்கூடிய தன்மை பன்றிக் கொழுப்பு கொண்டுள்ளது என்பது மற்றுமொறு செய்தி. முஸ்லிம்களை இதுபோன்ற தீய தன்மைக்கு ஆளாக்க முயற்சிசெய்யும் அவர்களின் யுக்திகளில் இதுவும் ஒன்று.
இக்கட்டுரையின் நோக்கம் என்னவென்றால் ஒவ்வொரு முஸ்லிமும் தாங்கள் அன்றாடம் பயன்படுத்கூடிய பொருட்களில் கீழ்கண்ட கலவைக் குறியீடுகள (E-INGREDIENTS) இருக்கின்றனவா என ஒப்பிட்டுப்பார்த்து அதை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். ஏனெனில் இவையனைத்தும் பன்றியின் கொழுப்பிலிருந்து செய்யப்பட்டவையாகும்.
E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252,E270, E280, E325,
E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440,
E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493,
E494, E495, E542, E570, E572, E631, E635, E904.
தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக (தடுக்கப்பட்டவையாக) ஆக்கிருக்கிறான். ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன்-2:173)
உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரருக்கும் விரும்பாதவரை, (பரிபூரண) முஃமினாக ஆகமாட்டார் என நபி(ஸல்) கூறினார்கள்.
(புகாரி, முஸ்லிம்: அனஸ்(ரலி))
இதுபோன்ற பன்றிக் கொழுப்பைக் கொண்டுள்ள பொருட்களை நாம் நிராகரிப்போம், மற்றவர்களுக்கும் இச்செய்தியை எடுத்துரைப்போம்!
சற்று காலத்தின் பின்சென்று சில நிகழ்வுகளை இதோடு தொடர்புபடுத்திப் பார்ப்போம். கி.பி 1857-ல் தெற்காசிய நாடுகளில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் கோலோச்சிய காலம், கிழக்கிந்தியக் கம்பெனியில் பல்வேறு இந்தியர்கள் சிப்பாய்களாக பணியாற்றிக்கொண்டிருந்தனர். அப்பொழுது பாதுகாப்புக்குத் தேவையான குண்டுகளும், துப்பாக்கித் தோட்டாக்களும், வெடிபொருட்களும் ஐரோப்பாவில் தயாரித்து ஆசிய நாடுகளுக்கு கடல்வழி மூலம் கொண்டுவந்தனர். ஐரோப்பாவிலிருந்து ஆசிய நாடுகளுக்கு கடல் மூலம் பயணிக்க அப்போது ஒரு மாதத்திற்கும் மேலாகியது. கடற் பயணத்தின்போது வெடிமருந்துப் பொருட்களும், தோட்டாக்களும் ஒன்றோடு ஒன்று உராய்வதாலும் வேறுபட்ட வெட்பநிலையாலும் வெடித்துவிடுவதும் உண்டு, வீணடைந்துவிடுவதும் உண்டு. இத்தகைய நிலையைத் தவிர்க்க தோட்டாக்கள்மீதும், வெடிகுண்டுகள் மீதும் கொழுப்பு பூச்சை மேற்கொண்டனர். அதற்கு பயன்படுத்திய கொழுப்பு பன்றிகளின் கொழுப்பும் மற்றும் மாடுகளின் கொழுப்புமாகும்.
இக்கொழுப்புகள் பூசப்பட்ட குண்டுகள் அனைத்தும் அதன் மூடியைத் திறப்பதற்கு பற்களைப் பயன்படுத்துவது போன்ற அமைப்பைக் கொண்டிருந்தன. பன்றிக் கொழுப்பு மற்றும் மாடுகளின் கொழுப்பு பற்றிய செய்தி சிப்பாய்களிடையே பரவ ஆரம்பித்த்தது. ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியில் இருந்த பெரும்பாலான முஸ்லிம் இராணுவ வீரர்கள் பன்றி இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட பிராணி என்பதாலும், இந்துமதத்தில் பசுவை தெய்வமாக வணங்குவதாலும் அதைப் பயன்படுத்தத் தயங்கினர். மேலும் இத்தகைய செயலை எதிர்த்து இந்திய சிப்பாய்கள் டில்லிக்கு அருகேயுள்ள மீரத் என்ற இடத்தில் 1857, மே 10ம் தேதி பஹதுர் ஷா தலைமையில் போராடினர். இப்போராட்டத்தில் 100 க்கும் மேலான ஐரோப்பியர்கள் கொல்லப்பட்டார்கள். இந்நிகழ்ச்சி "சிப்பாய்க் கலகம்" என்று வரலாற்றில் பதியப்பட்டுள்ளதை வரலாறு படித்தவர்கள் அறிவார்கள்.
சென்ற ஆண்டு நடந்த சில நிகழ்ச்சிகளையும் இதோடு சற்று தொடர்புபடுத்திப் பார்ப்போம். பாலஸ்தீனத்தில் முஸ்ஸிம்களைக் கொன்று குவித்தும் அராஜகம் புரிந்தும் வரும் யூதர்கள் தங்களைப் பாலஸ்தீனப் போராளிகளிடமிருந்து காத்துக்கொள்ள இத்தகைய செயலையே கையாண்டனர். அதாவது முஸ்லிம்கள் பன்றியைத் தொடவும் மாட்டார்கள், அது அவர்களுக்கு விலக்கப்பட்டதாகும் என்பதன் அடிப்படையில் யூத மத போதகரான எலிசர் பிசர் (Eliezer Fisher) பன்றிக் கொழுப்புகளை அடங்கிய பைகள் பேருந்துகளிலும், வியாபார வர்த்தகக் கட்டிடங்களிலும், அவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகளிலும் அதிகமாக கட்டித் தொங்கவிட ஆலோசனையளித்தார்.
தற்கொலைப் படைகள் தாக்குதல் நடத்தினால் அவர்கள் மேல் இந்த பன்றிக்கொழுப்பு படிந்து அசுத்தமான முறையில் இறந்துகிடப்பர். அதை அவர்கள் விரும்பவும் மாட்டார்கள். எனவே தற்கொலைப் படைகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள இந்த அணுகுமுறையை இஸ்ரேலிய பாதுபாப்பு அமைச்சராகிய யாக்கூ எட்ரி (Yaacov Edri)யும் பரிந்துரை செய்தார். இச்செய்தியை பெரும்பாலான ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது.
ஆரம்ப காலம் தொட்டே இஸ்லாத்தின் எதிரிகளான இதுபோன்றவர்கள் தங்களின் காழ்ப்புணர்ச்சிகளால் இவ்வாறான செயல்கள் புரிந்து வருவது புதிதல்ல. முஸ்லிம்களாகிய நாம் விழிப்புடன் இருப்போம் மேலும் அவர்களின் தயாரிப்புகளைப் புறக்கணிப்போம்.
"நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள். நீங்கள் நேர்வழியை அடைவீர்கள்" என்று அவர்கள் கூறுகிறார்கள். "அப்படியல்ல! (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை" என்று (நபியே!) நீர் கூறுவீராக! (அல்-குர்ஆன் - 2:135)
நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்த அல்லாஹ் போதுமானவன்.
http://www.nouralislam.org/tamil/islamkalvi/indextamil.html
إنما الأعمال بالنيات
"The reward of deeds depends upon the intentions"
- ஒரு சகோதரர் மூலம் வந்த மின்னஞ்சல்
தமிழகத்தின் சிறப்புகள்!!!
1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்
2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் – புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் – திருவாரூர் தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை
10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)
12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிர காரம்
14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)
16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/ km2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)
21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்
22. கோயில் நகரம் – மதுரை
23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)….
Subscribe to:
Comments (Atom)

